குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 30, 2019

ரிஷி சிந்தனை - 07




காயத்ரி மந்திரம் மனிதனை ஆன்மீகப் புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. காயத்ரி சாதனை தொடங்கியவுடனேயே ஒருவன் தன்னுள் ஒரு புதிய மாறுதல் ஏற்படுவதை உணர்கிறான். ஒழுக்க நெறியில் அவன் வளர வளர தீய எண்ணங்களும், செயல்களும், பழக்கங்களும் படிப்படியாக குறையும். அவனிடம் புலனடக்கம், பணிவு, பக்தி, உற்சாகம், சுறுசுறுப்பு, நேர்மை, உண்மை, இன்சொல் பேசுதல் போன்ற உயர்ந்த பழக்கவழக்கங்கள் வளர்கின்றன. அதன் விளைவாக சாதகனுக்கு வாழ்க்கையில் அமைதியும், மன நிறைவும் எற்படுகின்றது. மக்கள் அவனை மதிக்கிறார்கள். போற்றுகிறார்கள்.  தேவையானபோது அவனுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள். அவனிடம் துன்பம் தலைகாட்டுவதே இல்லை.

காயத்ரி சாதகனின் மனதில் ஒரு அசாதாரண மாறுதலும் ஏற்படுகிறது. அவன் உண்மையான அறிவு விளக்கம் பெறுவதால் அறியாமையால் விளையும் துன்பங்கள் அவனை விட்டு விலகுகின்றன. பூர்வ ஜென்ம வினையின் விளைவாக ஒவ்வொருவருக்கும் துன்பங்கள் வரத்தான் செய்யும். சாதாரண மனிதன் அவற்றை நஷ்டம், மரணம், நோய், எதிர்ப்பு, தாக்குதல் அதிர்ச்சி இப்படியான ஒரு தாக்கமாகவே உணராவான். ஆன்மீக வலிமை பெற்ற காயத்ரி சாதகன் உண்மை அறிவு பெற்றிருப்பதால், இவற்றிற்கான காரணங்கள் என்ன என்று தெளிவாக விளங்குவதால், அவற்றை சாதாரண நிகழ்ச்சிகளாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெறுவான். அவன் தைரியம், நம்பிக்கை, பொறுமை, மன அமைதி ஆகியவற்றுடன் தெய்வப்பற்றும் கொண்டவனாய் உலக வாழ்க்கையில் பற்றற்று வாழ்வான்.

காயத்ரி சாதகன் இந்த உலக வாழ்வில் வாழ்வதற்கான எல்லா நலன்களையும் தனது சாதனையால் பெறுகிறான். இவற்றிற்கெல்லாம் மேலாக அவன் அடையும் உன்னதமான பேறு ஆன்மீக வலிமை! இந்த ஆன்ம வலிமையை அடைவதால் நோய், தளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், வாணிபத்தில் நட்டம், குடும்ப சண்டை, வெறுப்புணர்ச்சி, பகைவரின் தாக்குதல், வழக்குகள், உறவால் துன்பம், பிள்ளைகளில் திருமணப் பிரச்சனை, மனத்தளர்ச்சி, எதிர்காலம் பற்றிய பயம், தீய பழக்க வழக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை போன்ற அனைத்து துன்பங்களும் காயத்ரி சாதனையால் நீங்கி விடுகிறது.

ஆகவே அனைவருக்கும் தம்மை சக்தியுடையவராக்க வாழ்வில் காயத்ரி சாதனையை முயல வேண்டும். காயத்ரி சாதனை செய்யும் எளிய முறையை சித்த வித்யா விஞ்ஞான சங்கத்தின் பிரசுரங்களிலும், நேரிலும் கற்றறியலாம்.
(தொடரும்….)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...