குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 23, 2012

பிராண சக்தி விழிப்பு இரகசியம்



பிராணாயாமம் என்பது யோகம் பழகுபவர்களிற்கு முக்கியமான ஒரு பயிற்சியாகும். இன்றைய நோக்கில் யோக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் வரும். பிராணாயாமம் பழகினால் உடல் ஆரோக்கியம் வரும் என்று யோகா நிலையங்கள் போதித்து வருகின்றன. இது உண்மையானாலும் இதை விட ஒரு அரிய விடயம் இதில் பொதிந்துள்ளது என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

முதலாவது பிராணன் என்பது மூச்சு அல்ல, மூச்சு பிராணனை உடலிலிருந்து கட்டுப்படுத்த உபயோகிக்கும் ஒருசாதனம் என்பதனை யோகம் பழக விரும்புபவர்கள் மனதில் இருத்த வேண்டும். மனிதன் பஞ்ச கோசங்களால் ஆனவன் என்பது யோக தத்துவம், சித்தர் தத்துவங்கள் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பஞ்ச கோசங்களில் அன்னமய கோசம் என்பது எமது ஸ்தூல உடல், மனோமய கோசம் என்பது மனம் இவற்றை இரண்டையும் இணைக்கும், செயற்படுத்தும் சக்திதான் பிராணன், இந்த பிராணன் மேற்குறிப்பிட்ட அன்னமய, மனோமய கோசங்களில் பயணிப்பதற்கு உள்ள அமைப்புகள் தான் உடலில் உள்ள ஆதார சக்கரங்களும், 72000 நாடிகளும், ஆதாரங்கள் என்பன மொலாதாரம, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்சை, ஆறும் சகஸ்ரதளம் என்பது இந்த ஆறு ஆதாரங்களினது சேர்க்கையும் ஆகும். இவை ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்கு ஏற்ப மாறுபடும் (கோரக்கரின் வகைப்படுத்தல் பிரகாரம் எட்டு ), இவை உண்மையில் ஸ்துல உடலில் இருப்பவையல்ல, மனோமய கோசத்தில் பிராணனின் ஓட்ட ஒழுங்கிற்காக  சித்தர்களால் உருவாக்கப்பட்டவை, மன இயக்கத்தின் படி மூச்சு மாறும், மூச்சின் மாற்றத்தின் படி பிராணனின் ஓட்டம் மாறுபடும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடலில் உள்ள சக்கரங்கள், இவை தற்போது போதிக்கப்படுவதுபோல் குறித்த இடத்தில் மாத்திரம் இருப்பவை அல்ல, இன்னும் பல சக்கரங்கள் உள்ளன, சித்தர்களால் வழங்கப்பட்டுள்ள சக்கர வரைபடம் ஒருவருடைய பிராணனை ஒழுங்கு படுத்தி பரிணாமத்தில் மேலே கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது முக்தி பாதையில் செல்வதற்கான வரைபடமாகும். 

அதாவது மஹா பிராணன் எனப்படு பிரபஞ்சச பிராணன் மூச்சு உள்ளிழுக்கும் பொது சகஸ்ராரம் உடாக வந்து ஒவ்வொரு ஆதார சக்கரங்களூடாக கிழிறக்கி மூலாதாரத்திற்கு சென்று பின் அங்கிருந்து இடகலை, பிங்கலை நாடிகலூடாகவும் உப நாடிகலூடாகவும் உடலிற்கு செலுத்தப்படுகிறது. இந்த பிராண சக்தியும் அன்னமய கோசம் ஏற்கும் உணவிலுள்ள சத்துகளும் சேர்ந்து உடலினதும், மனத்தினதும் இயக்கத்தினை சரிவர செய்கின்றது. உண்மையில் நோய்வந்து மருந்து உண்ணும் போது மருந்தும் உணவும் நோய்வந்த பகுதியினை மீளமைக்கவும் சரி செய்யவும் தேவையான மூலப்பொருளை வளங்குகின்றணவே தவிர குணப்படுத்துவதில்லை, அதனால் தான் ஆங்கிலத்தில் "Doctor treat; God cures" என்பார்கள், இந்த கடவுள் என்பது பிராண சக்தியே ஆகும். இந்த பிராண சக்தி உடலில் எவ்வளவு இருக்கின்றதோ அந்தளவிற்கு உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இந்த மஹா பிராணசக்தி ஒவ்வொருவருடைய பிராணமய கோசத்திலும் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் மனிதன் கடவுளின் அமிசம், தான் கடவுள் என்பதனை மாயையினால் மறந்துவிட்ட கடவுள், அல்லது இப்படிசொல்லலாம் மஹா பிராண சக்தி எந்த விதத்திலும் கலப்பற்று சுயமாக இயங்கும் நிலை கடவுள் அல்லது பரா சக்தி, கட்டுப்பட்டு சுருண்ட நிலை மனிதன் அல்லது குண்டலினி. அதாவது இரண்டும் ஒன்றுதான் ஆனால் பிராணனின் விழிப்பு நிலை வித்தியாசம், இதுவே கடவிளிற்கும் மனிதனிற்கும் உள்ள வேறுபாடு. 

இதனை அறிந்த சித்தர்கள் பிராணமய கோசத்தில் உறங்கும் மகா பிராண சக்தியினை விழிப்படைய வைத்து ஒவ்வொரு மனிதனும் கடவுளாகும் நிலையினை அடைவதே யோக சாதனையின் குறிக்கோள். 

பிராணயாமத்தின் பயன்பாடு 
பிராணாயாமத்தின் போது உடலின் நாடிகள் மெதுவாக உஷ்ணமடைகின்றது, இது மெதுவாக மூலாதாரத்தில் உறைந்துள்ள மஹா பிரணனான குண்டலினியை உஷ்ணப்படுத்தி விழிப்படைய வைக்கிறது, இந்த வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது மஹா பிராணன் சுழுமுனை  நாடியினுடாக ஆக்ஞ்ச சக்கரத்தினை அடைந்து பின்னர் மூலாதாரத்திற்கு மீண்டு வருகிறது. இதுவே சுருக்கமான விளக்கம். ஆனால் சுழுமுனை விழிப்படையாத நிலையில் பிராணன் வேறு நாடிகளுடாகவும் செல்லும், இதனால் பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளும் ஏற்படலாம். 

எல்லாவித பிராணயாமங்களும் மகா பிராணனை விழிப்படைய செய்வதில்லை, சிலது பிராணன் பயணிக்கும் நாடிகளை சுத்தி செய்பவை, 

எப்படியாயினும் பிரணாயாம பயிற்சி தகுந்த குருவினை அண்டி செய்யவேண்டிய பயிற்சி என்பதனை பழக விரும்புபவர்கள் மனதில் இருத்துதல் அவசியம்.

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

Wednesday, March 14, 2012

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - 01

காயத்ரி மந்திரமானது ரிஷிகளின் மூல மந்திரமாக இருந்து வருகிறது, அதன் அமைப்பு இரு வகைகளில் பயன் படுகிறது, ஒன்று அர்த்தமுள்ள பிரார்த்தனையாக ஆழ்மனதிற்கு ஒரு சுய ஹிப்னாடிச மறை மொழியாக (auto suggesstion) மனதை செம்மைப்படுத்துகிறது, இரண்டாவது அதன் அதிர்வுகள் எல்லா மந்திரங்களது அதிர்வுகளையும் வழங்கி மனிதனில் சூஷ்ம சக்தியினை விழிப்பிற்க கூடியதாக உள்ளது, சாதாரண வைதிகர்கள் பயன்படுத்தும் காயத்ரி முதலாவது வகையினை சார்ந்தது, இரண்டாவது முறை தாந்திரிக அடிப்படையில் தீட்சை மூலம் செயற்படுத்த படுவது. இரண்டாவது முறையில் முறையாக சித்தி பெற்ற குருமுறையாக சாபவிமோசனம் செய்வித்து மந்திர தீட்சை பெறுதல் வேண்டும். இப்படியான தீட்சையினால் பெறப்படும் காயத்ரி மந்திர சித்தியினால் ஒருவன் தனது ஆன்ம பரிணாமத்தினை சாதனையினை பூர்த்தி செய்யும் வழியில் ஞானம் உருவாக்கி அவனை வலி நடாத்தும்.

இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்கலாம் என்பது நிறுவப்பட்டுள்ளது, ஆதலால் இவற்றை பற்றி விவாதித்தல் அவசியமற்றது.

காயத்ரி மந்திரத்தின் பொருள்

"எல்லாம் வல்ல பரம்பொருள் எமது அறிவினை ஒளிர செய்து சரியான வழியில் இட்டு செல்லட்டும்"

இந்த பொருள் மிக எளியதும் மனிதனது அனைத்து தேவைகளையும் தீர்ப்பதற்கான அடிப்படை தகுதியை வழங்க்கிவதாகவும் உள்ளது. ஒருவனுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணம் அறியாமை, அறியாமையினால் துன்பம் வருகிறது, ஆகவே துன்பத்தினை தீர்பதற்கு அறியாமையினை நீக்குதல் வேண்டும், எந்த பிரச்சனையினையும் எதிர்கொள்ளும் மனநிலையும் தீர்க்கும்  பக்குவமும் அறிவு தெளிவானவர்களுக்கு இலகுவாகும். தினசரி இந்த பொருளினை மனதில் சிந்தித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வருபவர்களுக்கு படிப்படியாக புத்தி இறை ஞானத்துடன் தொடர்பு கொள்ளத்தொடங்கும், அவை வலுக்க எந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் தன்மை உண்டாகும்.

இந்த செயல்முறையினை மேலும்  தெளிவாக விளக்குவதானால் ஒருமனிதன் எந்த முடிவுகளையும் எடுக்கும் போதும் அவனுடைய மேல் மனம் ஆழ்மனதினை தொடர்பு கொள்ளும், அந்த வேளையில் ஆழ்மனம் தரும் தகவல்களை வைத்துக்கொண்டு மேல்மனம் அந்த விடயம் தொடர்பாக புத்தியின் துணையுடன் ஆராயும், இதன் படியே ஒருவரும் முடிவுகள் அமையும், இந்த செயல்முறையில் மேல்மனதினை, ஆழ்மனம் செல்வாக்கு செலுத்தும், ஆழ்மனதினை புத்தி செல்வாக்கு செலுத்தும், இவற்றின் தன்மை, தூய்மை, பலம் போன்றவற்றின் தன்மைக்கு அமைய ஒருவருடைய ஆற்றல் செயல் அமைந்திருக்கும். பொதுவாக மேல்மனம் தர்க்க மனம் - ஒருவிடயதினை சரியா, பிழையா என ஆராய்ந்து கொண்டிருப்பது, இவற்றுக்குரிய தகவல்களை எந்த வித ஒழுங்கும் இல்லாமல் வழங்கிக்கொண்டு இருப்பது ஆழ்மனம், இதுதான் சரி , இது பிழை என ஒப்பீடு வழங்குவது புத்தி, ஆக புத்தி சரியாக இருந்தால் மற்றைய இரு பகுதிகளும் சரியாக வேலை செய்யும்.

காயத்ரி மந்திரம் என்பது இந்த பொறிமுறையினை சரி செய்யும் ஒரு உபகரணமே (tool) ஆகும், அதன் பொருள் ஆழ்மனதிற்கும் மேழ்மனதினையும் புத்தியுடன் இணைக்கும் செயலை செய்கிறது, அதன் மந்திர அதிர்வுகள் புத்தியை தெய்வ சக்தியான பரஞானத்துடன்  இணைக்கிறது.  

இதுவே எந்த பிரார்த்தனைக்கும் பொருந்தும் செயல்முறை இரகசியமாகும் - அதாவது எந்த மந்திரதினது அதிர்வு புத்தியை இறை சக்தியுடன் இணைக்கும், அதற்கு பொருள் 
இருப்பின் அது மனம் - புத்திகளை ஒழுங்குபடுத்தும். 

இந்த விளக்கத்தின் மூலம் காயத்ரி மந்திரம் எப்படி செயற்படுகிறது என்பதன் அடிப்படை விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

Wednesday, March 07, 2012

குருவின் அவசியமும் அநாவசியமும்


உண்மையான குரு அகத்திலுள்ள நான் எனும் ஆன்மாவே, மனிதன் தனது உடலினை பார்த்தறிவதற்கு கண்ணாடி எப்படி உபயோகமாகிறதோ அது போல் எமது உண்மையான சொருபத்தினை அறிவதற்கு தன்னை அறிந்த ஒரு புறக்குரு தேவைப்படுகிறார், அவர் ஒரு கருவி மட்டுமே! இதுதான் உனது உண்மையான சொரூபம் என காட்டிவிட்டபின் அந்த அனுபவத்திலிருந்து எமது உண்மையான ஆன்ம சொருபத்தினை அறிவது நான் ஆகிய எமது அகக்குருவின் வேலை, இந்த படிமுறையில் (குருவை மையமாக கொண்ட எந்த ஆன்மவித்தையிலும் தாந்திரீகத்தில்) தன்னை உணர வைக்கும் செயல்முறையான தீட்சை மட்டுமே குருவால் கொடுக்கப்படுகிறது, அதன் பின் மாணவன் தனது சுய முயற்சியாலும், தேவைப்படி ஆன்மாவினை அறியும் நோக்கத்தில் சலனமுறும் போதும் அவரவர் பக்குவத்திற்கமைய அகக்குருவும், புறக்குருவும் வழிகாட்டுகின்றனர். 

இந்திய ஆன்ம மரபில் பொதுவாக சித்த குருக்களும், தாந்திரீக குருக்களும் மாணவன் பக்குவமடைந்த பின் தம்முடைய பாதையினை சுயமாக தேர்ந்தெடுத்து தமது சாதனையினை தொடர்வதற்கு அனுமதிக்கின்றனர். சமூக அலகில் அது நிறுவனமயப்படுத்தப்படும் போதும், ஞானத்தால், சாதனையால் பெறும் சக்திகளை, சித்திகளை தமது அகங்காரத்தினால் துஷ்பிரயோகம் செய்ததாலும், அவற்றை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனங்களாக மடங்களும், பீடங்களும் உருவாகும் போதுதான் நாம் விவாதிக்கும் குரு சிஷ்ய சேவை, பணம், என ஆன்ம ஞானத்திற்கு உபரியான மற்றைய விடயங்கள் வருகின்றன. 

இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் பலவிதமக்கள் தமது மன உருவகங்களுக்கு ஒவ்வொரு விடயங்களிலும் திருப்தி உறுகின்றனர். உணவைப் போல், சினிமாவைப்போல், பொழுதுபோக்குபோல் மனதின் அடிமையான மனிதனிற்கும் ஆன்மீகமும் பலவித சுவைகளில் தேவைப்படுகிறது. இவற்றை திருப்திப்படுத்த முனையும் குரு உண்மையான ஞானத்தினை கொடுப்பதில்லை. அல்லது நோக்கம வழிமாறுகிறது, இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் சிக்கி தமது மனநிம்மதியினையும் பணத்தினையும் இழந்து பின்பும் மனப்போராட்டத்தில் சிக்கி இந்த மார்க்கமே பொய் என்ற மனவிரக்தியில் பலர் புலம்புவதை நாம் காண்கிறோம். 

ஆகவே ஆனம பாதையில் செல்ல விரும்புபவர்கள் குருவின் அவசியத்தினையும் அநாவசியத்தினையும் புரிந்திருப்பது அவசியம்!இல்லாவிடில் வீண் மனக்குழப்பம்தான் எஞ்சும்! 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...