குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 20, 2015

சோம்பலின் காரணம் என்ன ? - சில யோக, சித்த மருத்துவ கருத்துக்கள்

நண்பர் ஜெய்கணேஷ் அவர்கள் கீழ்வரும் கேள்விகளின் எனது புரிதலை சித்த மருத்துவம் சார்ந்து பதியும் படி கேட்டிருந்தார். விடைகள் வருமாறு;

மருத்துவர் Thava Sumanenthiran.. சோம்பலைப் பற்றிய சித்த மருத்துவத்தின் கருத்தென்ன..? இது நோயா..? இதற்கு மருந்துகள் எதுவும்..?
1)    சோம்பல் என்பது உண்மையில் என்ன..?
a மூளையின் தூக்கமா.. அல்லது 
b
மனதின் தூக்கமா.. அல்லது 
c
உடலின் மறுப்பா..? இல்லை 
d
சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதை நோயா..? 
e
பேய், பிசாசு, பிரேத துர் தேவதைகளின் தாக்குதலா..? 
f
கிரகங்களின் கோளாறா..? 
g
விட்டேத்தி துறவு மனநிலையா..?
2) சோம்பல் ஒருவனைத் தாக்குவது எப்போதெல்லாம்..?
3) சோம்பல் வருவது எதற்காக..? ஏன்..?
உங்களுடைய ஒன்று தொடக்கம் மூன்று வரையிலான கேள்விகளிற்கு பதில் வருமாறு;
சோம்பல் என்பது உடலிலும், மனதிலும் ஏற்படும் பிராண சக்தி குறைபாடு, பிராணன் மூச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலின் பிராணனின் இழப்பு நோய்கள், உணவு முறை, இருக்கும் சூழல் என்பவற்றால் ஏற்படலாம்.
மனதின் பிராண சக்தி இழப்பு அதீத சிந்தனை, கவலை, கோபம் போன்ற எந்த நல்ல கெட்ட உணர்ச்சிகளினதும் அதீத நிலையால் ஏற்படலாம்.
உடல், மனம், பிராணன் ஆகிய மூன்றில் எந்த ஒன்றினதும் சமநிலை கெட்டால் முதலில் இயலாமை என்ற சோம்பலும், தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு இந்த நிலை ஏற்படும்போது நோயும் ஏற்படும். சரியாக கூறுவதானால் சோம்பல் என்பது ஒருவித உடல் மன பிராண சமநிலை இன்மை!
மேற்குறித்த ஆரம்ப நிலையில் சரியாக கட்டுப்படுத்தப்படாத நிலை நரம்புகளை, சப்த தாதுக்களை பாதிக்கும்போது அது நோய் எனப்படும்.
பேய், பிசாசு என்று கூறுவனவும் ஒருவித உறிஞ்சும் நிலை கொண்ட பிராண சக்தி அதிர்வுகளே! இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள், இவ்வாறானவர்களுடன் உரையாடினாலே எமது மனதிலும், உடலிலும் ஒருவித சோர்வு உண்டாவதை அவதானிக்கலாம், ஆங்கிலத்தில் psychic vampire எனக்குறிப்பிடப்படும் நிலை இதுதான்.
இதுபோல் கிரகங்களும் எமது பிராணனின் அதிர்வினை கட்டுப்படுத்தும், எமது பிறப்பு ஜாதகம் என்பது எமது இயற்கை கிரக பிராண இருப்பை குறிப்பவை, அவை பாதகமாக இருந்தால் குறித்த திசா புத்தி காலத்தில் இத்தகைய சோர்வு நிலை ஏற்படும்.

4) சோம்பலில் இருந்து ஒருவன் விடுபட உழைப்பைத் தவிர வேறு எதேனும் எளிய வழி...?
உழைப்பு என்பது சரி இல்லை, உங்களிடம் அதிக பிராணசக்தி இருந்து நீங்கள் மனதளவில் சோம்பலாக இருந்தால் உழைப்பு நல்ல தெரிவு, ஆனால் உங்களிடம் பிராண சக்தி தகுந்த அளவு இல்லாமல் சோம்பலாக இருக்கும்போது அதிக உழைப்பு நோயினை கொண்டுவரும், ஆகவே சோம்பலின் காரணம் என்ன காரணத்தினால் என்பதனை அறியாமல் உழைப்பு தேவை என்பது பிழையானது, அடிப்படையில் பிராண சக்தி சேமிப்பினை அதிகமாக்க வேண்டும்.

5) சோம்பல் மறுபடியும் தாக்காமலிருக்க தற்காப்பு வழிமுறைகள் ஏதேனும்..?
ஆம், நிச்சயமாக, சோம்பலில்லாத சிரஞ்சீவி ஹனுமான், ஹனுமனின் குணம் தேவையில்லாமல் தனது பிராணனை செலவழிக்காத்தவர், அதனால்தான் அவரது பெயர் பிராணேஷ், எனது குருநாதர் ஹனுமானின் உப்பிய வாய் அவரது பிராண சித்தி ரகசியம் என்று கூறுவார், அதனை சக்தி பிரணாயாமம் என்று சொல்லுவோம், மூக்கினால் மூச்சினை இயலுமான அளவு எடுத்து, பின்னர் ஹனுமானது கன்னத்தினை போல் உப்பி வாயினை குவித்து (சீழ்க்கை அடிப்பது போல்) மூச்சினை இயலுமான அளவு வேகமாக வெளிவிடவேண்டும். அளவுக்கு மீறி முயற்சிக்க கூடாது. இப்படி ஐந்து சுற்று செய்தால் எப்படிப்பட்ட சோம்பலாக இருந்தாலும் போய்விடும்.
இதேவேளை சக்தி இழப்பு ஏற்பட வைக்கும் அதீத உழைப்பும், சிந்தனை, பயம், கோபம், காமம் போன்ற உணர்சிகளில் அதீதமாக இருக்க கூடாது. உணவு, வாழ்க்கை முறையில் ஒரு ஒழுங்கினையும் சமநினையினையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.  
6) ஒன்னும் செய்யாமல் சும்மா இருக்கும் துறவு நிலைக்கும் சோம்பலுக்கும் என்ன வித்தியாசம்..? இரண்டும் ஒன்றா..?
துறவில் அகத்தில் உடல்,மன, பிராண சமநிலையுடன் ஆன்மா இவற்றை விட்டு பிரிந்து இருக்கவேண்டும். சோம்பல் இவை குழம்பிய நிலை

7) உழைத்தும் அதற்கான பணம், பலன் கிட்டாமல் இருக்கும் போது தாக்கும் சோம்பல் நியாயமானதா..?

நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற தாக்கம் (shock) மனதில் ஏற்படும் போது பிராண ஓட்டத்தை குழப்பி சோம்பலை ஏற்படுத்தும், இதனை ஏற்றுக்கொள்ள கூடியவர்களுக்கு இந்த நிலையிலும் சோம்பல் வருவதில்லை, இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த சமநிலை குழம்ப கூடாது என்றுதான் ஸ்ரீ கிருஷ்ணன் “கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்றான். இத்தகைய நிலையில் சோம்பல் – பிராண சக்தி இழப்பு ஏற்படுவது அவரவர் பார்வையினை பொறுத்தது. 

Wednesday, May 13, 2015

பெருங்குழப்ப விதியும் அதன் பயன்பாடும் - CHAOS THEORY AND ITS APPLICATION

(chaos – பெருங்குழப்பம், nonlinear – அநேர்கோடு)

குழப்பம் என்பது பலருக்கும் பிரச்சனையான ஒன்று. இதைப்பற்றிய விஞ்ஞான புரிதல் chaos theory என்று அழைக்கப்படுகிறது. எனது சூழலியல் ஆய்வில் இந்த விதியை பயன்படுத்தி இருந்தேன் என்று கூறியிருந்தேன், இதன் அடிப்படையினை தமிழ் வாசகர்களுக்காக தமிழில் தர முயற்சிக்கிறேன். இது குழப்பத்தினை புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

chaos என்பதனை குழப்ப நிலை என்று வரையறை செய்யலாம். இந்த குழப்ப நிலை இரண்டு தளங்களில் நடைபெறமுடியும் ஒன்று காலம் மற்றது இடம். இதனை கொண்டு குழப்ப நிலையில் காலம் சார்ந்த குழப்பம் (''temporal chaos"), இடம் சார்ந்த குழப்பம் ("spatial chaos.")என்று வரையறை செய்யலாம். எப்போதும் ஒரு குழப்பம் நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே குழப்பம் நிகழ்வதற்கான நிபந்தனைகள் மூன்றினை குறித்த தொகுதி கொண்டிருக்க வேண்டும்.

அந்த தொகுதி
  1. Dynamical system: தொகுதி இயங்கும் தன்மை உடையதாய் இருத்தல் வேண்டும்
  2. Deterministicகுறித்த தொகுதியின் எல்லைகள் வரையறுக்க கூடியதாக இருக்க வேண்டும், அதாவது இந்த தொகுதிக்குள் செலுத்தப்படும் எந்த காரணியும் எந்த எல்லை வரை இயங்கும் என்பதனை தெளிவாக காணக்கூடிய வகையில் தொகுதியின் எல்லைகள் காணப்படவேண்டும்.
  3. Nonlinearதொகுதி அநேர்கோட்டு தன்மை உடையதாக இருக்க வேண்டும். அநேர்கோட்டு தன்மை என்பது குறித்த உள்ளீட்டை செலுத்தினால் வெளியீடு நேர் விகித சமனாக வரக்கூடாத தொகுதி.  

இங்கு Nonlinear எனப்படும் அநேர்கோட்டு தன்மையினை விளங்கி கொள்வது மிக முக்கியமான ஒருபாகமாகும். நேர்கோட்டு தன்மை என்பது நாம் இலகுவாக விளங்கி கொள்ளகூடிய ஒன்றாகும். இந்த வார்த்தைகள் இரண்டு காரணிகளை எடுத்துகொண்டால் அவை இயங்கும் இயங்கியலின் ஒழுங்கை குறிக்கும். இதை உதாரணம் மூலம் பார்ப்போம்.

கணவனையும் மனைவியையும்  இரண்டு காரணிகளாக எடுத்துக்கொண்டு, அவர்களுக்கிடையே காணப்படும் அன்னியோன்யத்தை இயங்கியலாக எடுத்துக்கொண்டால் கணவன் சேலை வாங்கி கொடுக்கும்போதெல்லாம் மனைவி சந்தோஷப்படுகிறாள், இது எப்போதும் நடக்கும் சந்தர்ப்பத்தில் தொகுதி நேர்கோட்டு இயக்கத்தில் இருக்கிறது. அதே போல் குடித்து விட்டு வந்தால் எப்போதும் அடி கொடுப்பாள் என்ற நிலையிலும் தொகுதி நேர்கோட்டில் இயங்குகிறது. இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தால் அவர்களுடைய அன்னியோன்யம் எனும் தொகுதி நேர்கோட்டில் இயங்குகிறது என்று பொருள். இப்படி இருக்கும்போது இருவரும் ஒருவித தெளிவில் இருப்பார்கள். குடித்து விட்டு போனாலும் சேலை வாங்கி கொடுத்தால் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை கணவனுக்கு இருக்கும். இது நேர்கோட்டு இயக்கம்.

ஆனால் அநேர்கோட்டு இயக்கத்ததில் ஒரு நாள் சேலை வாங்கி கொடுத்தால் மகிழ்வாகவும், அடுத்த நாள் வாங்கி கொடுத்தால் ஏன் வாங்கினாய் வீணாக செலவு செய்கிறாய் என்றும், அடுத்த நாள் நீ சேலை எனக்கு வாங்கி தருவதே இல்லை என்றும் நிலை இருக்குமானால் அந்த நிலை அநேர்கோட்டு இயக்கமாகும்.

பொதுவாக சமூகம், மனித வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டு இயக்கத்தில் ஒத்திசைவாக இருக்கத்தான் விரும்புகின்றன. அநேர்கோட்டு நிலையினை குழப்பம், பைத்தியம், குழப்பகாரன் என்று கூறுகின்றன.

இந்த நேர்கோட்டு நிலைக்கும் அநேர்கோட்டு நிலைக்கும் உள்ள வேறுபாட்டை பிரதானமாக மூன்றாக வகைப்படுத்தலாம்.

  1. நேர்கோட்டு இயக்கியலில் குறித்த கால ஓட்டத்தில் அதன் இயங்கியல் எப்போதும் அமைதியுடனும் ஒருவித ஒழுங்கில் காணப்படும். அநேர்கொட்டு இயக்கத்தில் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்குடன் காணப்பட்டு பின்னர் நேரத்துடனும் காலத்துடனும் எப்படி இயங்கும் என்று விளங்க முடியாதபடி தொகுதி இருக்கும். நாம் முன்னர் கூறிய உதாரணத்தில் நேர்கோடு காதலிக்கும் போது (சிலருக்கு காதலிக்கும் போதும் அநேர்கொடுதான்!) அநேர்கொட்டு இயங்கியல் கலியாணத்தின் பின்னர்!
  2. சிறு தூண்டலுக்கான விளைவு: நேர்கோட்டு தொகுதியில் சிறு தூண்டலுக்கு சிறு விளைவு மட்டுமே காணப்படும். அநேர்கொட்டு தொகுதியில் சிறு தூண்டலுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பாரிய விளைவு ஏற்படும். உதாரணம்: சாராயம் குடிக்காமல் சோடா குடித்தேன் என்று கூறியதற்காக விவாகரத்து! – இதில் எந்த நியாயமும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா! அதுதான் அநேர்கொட்டு இயக்கம்! J
  3. சிறு தூண்டலின் இயக்க காலம். நேர்கோட்டு தொகுதியில் சிறு தூண்டலை கொடுத்தால் நேரத்துடன் அதற்கான விளைவு படிப்படியாக குறைந்து சற்று காலத்தின் பின்னர் ஒழுங்கிற்கு வரும். அநேர்கொட்டு தொகுதியில் சிறு துலங்கலை கொடுத்தால் பெரிதாகி காலத்துடன் இன்னும் பெரிதாகி கொண்டு போகும். இதற்கு உதாரணம் சொல்லவே வேண்டாம், உங்கள் அனுமானத்திற்கு விட்டுவிடுகிறேன்!

 பெருங்குழப்பம் உருவாக்குவதற்குரிய அடுத்த நிபந்தனை தொகுதி இயங்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். இயங்காத தொகுதியில் குழப்பம் உருவாக வாய்ப்பில்லை. தொகுதியின் இயக்கவியலை அதன் சக்தி இழப்பினை கொண்டு இரண்டு வகையாக பிரிக்கலாம். சக்தி இழப்பற்ற இயக்க தொகுதி, இந்த தொகுதியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு, அப்படி குழப்பம் ஏற்படுத்தினால் அந்த குழப்பத்தை வலுவாக எதிர்த்து மீண்டும் சமநிலையிற்கு வந்துவிடும்.

அடுத்தது சக்தி விரைய தொகுதி, இந்த தொகுதியில் குழப்பம் எப்போதும் இருக்கும் ஒன்றாகும். ஆக குழப்பம் ஏற்படுவதற்கான காரணிகளில் தொகுதியின் சக்தி சமநிலை முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

Chaos theory சித்தர்இலக்கியங்களை புரிந்து கொள்வதில் பயன்படக்கூடியது, மேலே கூறியபடி மதங்கள் எல்லாம் அநேர்கோட்டு நிலையினை தொகுதியை அமைத்து கட்டுப்படுத்தமுனைகின்றன. இதனால் மீண்டும் பெருங்குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. அநேர்கொட்டு இயக்கத்தினை கட்டுப்படுத்தினால் காலமும் இடமும் இல்லாமல் போய்விடும். பெருங்குழப்பமும் இல்லாமல் போய்விடும். அநேர்கொட்டு இயக்கத்தை சலனம் என்கிறோம். மனிதனில் பிராணனும் மனமும் சலனிப்பதால் chaos உண்டாகிறது. இந்த சலனத்தை இல்லாதாக்குவதே வாசி, சலனம் அற்றால் சிவா, சைவசித்தாந்தத்தின், சித்தர் தத்துவம் எல்லாம் சிவம்சலனமற்ற நிலை, சக்தி சலனத்தை உண்டு பண்ணுகிறது, என்பதெல்லாம் இந்த chaos theoryஇன் மிகவிரிவான வடிவங்கள்!

இன்று இந்த அளவு போதும்.... வேறொரு சந்தர்ப்பத்தில் மேலதிக தகவல்களை பகிர்கிறேன்! 

Friday, May 08, 2015

நவீன சூழல் காயா கோட்பாடு/விதியும் (Gaia Theory) பண்டைய இந்திய, சீன தத்துவ மரபும்

இந்த கோட்பாடு அல்லது விதி என்பது பூமியை ஒரு கல், மண், நீர், வாயு  ஆகாயமாகவோ என்ற பௌதீக தன்மையுடையதாக மட்டுமாகவோ அல்லது உயிர்கள் மட்டும் உள்ள கோளமாகவோ பார்க்காமல் இரண்டும் இணைந்த நிலையில் உள்ள ஒரு உயிரினமாக காண்பதற்குரிய ஒரு கோட்பாடாகும்.

இதன்படி ஒரு உயிரினத்தின் அடிப்படை அலகான உயிர்க்கலம் (cell) போன்று முழு பூமியும் ஒரு உயிர் கலமாக (living cell) செயற்படுகிறது
இது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட ஒரு விஞ்ஞான கோட்பாடாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

இதில் வியப்பு என்னவென்றால் தமிழ் சித்தர்களின் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிணடத்தில் உண்டு, இந்திய தத்துவம் மரபின் "யதா பிண்டே ததா பிரம்மாண்டே", சீன தாவோ தத்துவத்தின் "சுவர்க்கமும் பூமியியும்" போன்ற தத்துத்தின் சுருக்கிய வடிவம் என்பதே. மேற்குறித்த தத்துவங்கள் அனைத்தும் பூமியினை கடந்து பிரபஞ்ச வெளியில் மனிதனும் தொடர்பும் எப்படி இருக்கிறது என்பதனை நிறுவும்போது, காயா கோட்பாடும் பூமியும் மனிதனும் என்ற நிலையில் உள்ளது மேலும் ஆய்வுக்குரியது.


மேலும் இந்த கோட்பாடு மெய்யியலுக்கும் பௌதீக விஞ்ஞானத்திற்கும் உள்ள ஒரு இணைப்பு பாலமாகும்.  

Thursday, May 07, 2015

நோக்கமும் தெளிவும்: ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்

நாம் அறிவித்த ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை  கற்கைநெறி வகுப்புகள் வெகு வரவேற்பு பெற்றுள்ளது என்பதனை பதிவு செய்த அன்பர்களின் எண்ணிக்கை காட்டுகிறது.  

இந்த வேளையில் இதில் இணைந்து கொள்பவர்களும், விமர்சிப்பவர்களும், எம்மீது கருத்து தாக்குதல் நடாத்துபவர்களுக்கும் ஓர் சில தெளிவுகளையும், நோக்கங்களையும் தருவது எமது கடமையாகிறது. 
  1. கடந்த பலவருடங்களாக நாம் ஆத்ம, யோக, ஞான கருத்துக்களை  எழுதி வருவதன் நோக்கம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி நாம் பெற்ற அறிவினை பகிர்ந்து கொள்வது என்ற ஒரு நோக்கம் மட்டுமே. இதுதவிர இதனை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம், கூட்டம் சேர்க்கலாம் என்பது இல்லை. ஏனெனில் இதற்கான தேவை இல்லாதபடி குருநாதரும் தேவியும் எம்மை நல்ல நிலையில் வைத்துள்ளார்கள். 
  2. இந்த அறிவு பகிர்வில் எதுவித எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என்பது எமது குருநாதரின் விருப்பம், எனினும் ஒரு சில நிலைகளில் யாராவது கருத்து தெரிவிக்க மாட்டார்களா என எண்ணி கேட்டிருக்கிறோம். எனினும் அந்த எண்ணங்களும் குருநாதரால் நீக்கப்படிருக்கிறது. 
  3. காயத்ரி பற்றி அதிகம் எழுதுவதை பல சாராரும் பலவிதமாக விமர்சித்திருக்கிறார்கள்.  ஒரு சிலர் பிராமணர் மட்டும்தான் சொல்லவேண்டும், பெண்கள் சொல்லக்கூடாது, போன்ற பல்வேறு பிற்போக்கான கருத்துக்கள முன்வைக்கப்பட்டன. எனினும் இவை வெறும் மனக்குழப்பமே அன்றி உண்மை இல்லை என்பதை அனுபவ பூர்வமாகவும், தெளிவாகவும் பதிவித்திருக்கிறோம். 
  4. இது இவ்வாறு இருக்க இன்னும் பலர் ஆரிய திராவிட சண்டையாக சித்தர்களுக்கும் காயத்ரியிற்கும் தொடர்பு  இல்லை, காயத்ரி தமிழில் இல்லை அது எப்படி எமக்கு உகந்த மந்திரமாக இருக்க முடியும் என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 
  5. இப்படியான கருத்துக்களை இவ்வாறு விவாதித்து எம்மை நிலை நிறுத்தி இவற்றை பரப்ப வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இல்லை. நாம் அனுபவமாக அறிந்த. கற்ற பயிற்சி செய்து பயன்பெற்ற விடயங்களை அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பகிர்கிறோம். அவற்றை வாசித்து, உங்கள் அறிவால் துணிந்து பின்பற்றுவதா  வேண்டாமா என்பது உங்களுடைய முடிவு. 
  6. ஏனெனில் நாம் இறைவன் தந்த ஆன்ம சுதந்திரத்தை நீங்கள் முழுமையாக் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.   
  7. மேலும் எவரையும் எமது கருத்துக்களால், அறிவால், சக்தியால் அடிமைப்படுத்தி அவர்கள் வளர்ச்சியை தடை செய்யாமல் அவர்களது இயல்பான பரிணாம வளர்ச்சிக்கு துணையாக எம்மால் எப்படி உதவ முடியும் என்பதே எமது குறிக்கோள். 
  8. இதன்படி இங்கு நாம் அறிவித்த   "ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்"  யார் உங்கள் அறிவால் தெளிந்த முடிபு செய்து காயத்ரி மந்திரத்தை புரிந்து கொண்டு, பயனை பெற விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் இணைந்து கொண்டு கற்கலாம். 
  9. இந்த கற்கை நெறியினை உங்களுக்கு ஒழுங்கு படுத்த எமது மிகுந்த வேலைபளுவிற்கு மத்தியில் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது, எனினும் எமது நேரத்தை உங்களுக்காக எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தருகிறோம். அதனால்தான் இந்த கற்கை நெறிக்கு எதுவித கட்டணம் என அறிவிக்க படவில்லை. 
  10. வித்தையினை கற்பதற்கு சிரத்தை, மனப்பண்புதான் அவசியமே அன்றி பணத்தால் வாங்க முடியாது.  ஆகவே நீங்கள் அந்த பண்பினை பின்பற்றாமல் இந்த கற்கையினை தொடரமுடியாதபடி வடிவமைத்துள்ளோம். 
  11. மேலும் காயத்ரி சாதனை என்பது தெய்வீக பண்புகளை பெறுவதற்குரிய சாதனை, குறித்த அடிப்படை தெய்வ பண்புகளை பெறாமல் இரசவாதம், மருத்துவம், மாந்திரீகம் என்பவற்றில் மனதை பற்றி அலைந்தால் எத்தனை காலமானாலும் ரிஷிகள் கூறிய உயர்ந்த நிலையினை பெறமுடியாது. 
  12. பெரும்பாலானவர்கள் தமது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு, அதீத சித்திகளை பெறுவது, போன்ற பலவித இலக்குகளை மனதில் உருவாக்கி கொண்டு ஒருவித அகங்காரத்துடன் தெய்வ சாதனைகளை தொடங்கிறார்கள்.  நான் அந்த சித்தியை அடைந்துவிட்டேன், இந்த சித்தியை அடைந்து விட்டேன், எனக்கு அந்த வித்தை தெரியும், இந்த வித்தை தெரியும் என்று ஒருவித மனதின் அகங்கார விளையாட்டில் சிக்கி விடுகிறார்கள். இதனாலேயே பக்தியும், சரணாகதியும், பலனை எதிர்பாராமல் கர்மம் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும் தேவைப்படுகிறது. 
  13. ஏனென்னில் எம்மை விட இந்த பிரபஞ்ச சக்தி மிகப்பெரியது, அதனுடன் இயைந்து சென்றால் அதனை நாம் பயன்படுத்தி கொள்ளலாம், இல்லாமல் மேற்கூறியது போல் அகங்காரமடைய ஆரம்பித்தால் தெய்வ சக்தி எம்மில் செயற்படுவது தடைபட ஆரம்பிக்கும். 
  14. இப்படி குருபக்தி, சரணாகதி என்றவுடன் பலரும் குருதேவா, நீங்கள் எல்லாம் அறிந்தவர், வல்லவர் என கற்பிப்பவரை புகழ்பாட ஆரம்பித்து மீண்டும் இன்னொரு வழியில் இந்த வலையில் சிக்கிக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். 
  15. ஆக இந்த கற்கையில் மிக தெளிவான புரிதல் நீங்கள் அறிய வேண்டியது, நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு உங்களுக்கு மோட்சம் தரவந்த கடவுள் இல்லை என்பது. நாம் அறிந்தவற்றை உங்களுக்கு ஓர் ஒழுங்குமுறையில் நெறிப்படுத்தி தருகிறோம், அதன் படி உங்கள் முயற்சியினை செய்து நீங்கள் நிலையினை அடைவது உங்கள் பொறுப்பு. 
  16. சுருக்கமாக ரிஷிகளின் வழிநின்று அன்பினை, தெய்வ குணத்தினை மனித மனத்தில் விதைப்பது நோக்கம்! 
அன்புடன் 

Sunday, May 03, 2015

ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்




இன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உபாசனை சாதனை பாடங்களை கற்பிப்பதற்கு குருமண்டலத்தின்  உத்தரவு கிடைத்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதில் ஆளணி பற்றாக்குறை (நாம் தனியொருவராகவே இவை அனைத்தையும் செய்ய வேண்டி) இருப்பதால் முதலில் பதிவு செய்யும் 50 அன்பர்கள் மட்டுமே இந்த 2015 ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பின்னர் இதில் கற்கும் மாணவர்களது நேர பங்களிப்புடன் பலரை இணைத்துக்கொள்ளப்படும்.  

இதன்படி ஆர்வமும், சிரத்தையும், குருபக்தியும் உள்ள எவரும் இதனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் மனத்தடையை தவிர வேறு எந்த தடைகளும் இல்லை! 

இந்த பாடங்கள் ரிஷி பரம்பரையினரின் பிரம்ம ஞான உபதேசங்கள் எளிய முறையில் அனுபவ பயிற்சிகளாகவும், எளிமையான மொழியில் விளக்கங்களாகவும் தரப்படும். 

இதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலாவதாக கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்

இது தொடர்பான அனைத்து கேள்விகள், தொடர்புகள்  கீழ்வரும் மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்: sumanangs@gmail.com 

இதன்பின்னர் எமது உதவி குழுவிடமிருந்து உங்களுக்கு வசதியான ஒரே நேரத்தில் ஸ்கிப்பினூடாக  பதினைந்து நிமிட நேர்முக உரையாடல்  நடைபெறும். 

இதன்போது கற்கை நிபந்தனைகளுக்கு உறுதி அளித்தால். குருநாதர் அனுமதியின் பின்னர்  முதலாவது பாடமும் வினாத்தாளும் மின்னஞ்சல் உடாக அனுப்பப்படும்.  இதற்கு வாரம் ஒரு நாள் குறித்த நேரம் ஒதுக்கி படித்து விளங்கி கொண்டு பின்னர் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையினை டைப் செய்து திருத்தத்திற்கு எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

உங்களது விடைகள் திருப்தியாக இருந்தால் உங்களுக்கு அடுத்த பாடம் அனுப்பி வைக்கப்படும். 

இந்த முறையில்  மொத்தம் எண்பது பாடங்கள் மூலம் நீங்கள் காயத்ரி உபாசனையின் அடிப்படைகளை விளங்கி கொள்வீர்கள். 

இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் எவற்றை எல்லாம் கற்று கொள்வீர்கள் என்பதற்கான பாடத்திட்டம் கீழ்வருமாறு; 

பகுதி ஒன்று: காயத்ரி உபாசனை மாணவர் 

குருபரம்பரை வரலாறு, குரு வணக்க முறை, குரு சாதனை 

ஐயமும் தெளிவும், காயத்ரியும் பிராணனும், காயத்ரி சாதனைக்குரிய ஏற்பாடுகள், காயத்ரி பிராண ஆகர்ஷண சாதனை ,காயத்ரி மந்திர அடிப்படை சாதனை,  பாவனை மூலம் தெய்வ சக்தியை சூக்ஷ்ம உடலில் ஏற்கும் பயிற்சி, காயத்ரி பிராண வளர்ச்சி சாதனை, காயத்ரி அடிப்படை பிரணாயாமம், காயத்ரி கும்பக பிரணாயாம சாதனை, காயத்ரியும் முக்குண வளர்ச்சியும், மந்திர இரகசியம்,  காயத்ரியும் பிரபஞ்ச சூக்ஷ்ம சக்திகளும், காயத்ரியும் உடலின் சூக்ஷ்ம கிரந்திகளும்,  எமது துன்பங்களுக்கான காரணம்,  பிரபஞ்ச ஞானத்தை பெறுவதற்கான இரகசிய வழி,  காயத்ரியும் உடல் மனச்சுத்தியும், காயத்ரியும் பாவ விமோசனமும், காயத்ரி உபாசனையின் நியமங்கள், காயத்ரி உபாசனையின் முக்கிய அங்கங்கள், 

பகுதி ஒன்றினை ஒழுங்காக கற்று அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் முறையான காயத்ரி உபாசனை பத்ததி கற்பிக்கப்பட்டு உபாசனைக்குரிய வழிமுறைகள் கற்பிக்கப்படும். இந்த உபாசனையினை தினசரியோ, வாரம் ஒருமுறையோ செய்தவண்ணம் பகுதி இரண்டு கற்கையினை ஆரம்பிக்க வேண்டும், 

பகுதி இரண்டு: காயத்ரி உபாசகர் 
பகுதி இரண்டில் கீழ்வரும் விடயதானங்கள் கற்பிக்கப்படும்.  

உபாசனையின் அங்கங்களான பிராண பிரதிஷ்டை, தீக்ஷை, ரிஷி, அங்க, ஷடங்க  நியாச முறைகளும் அவற்றின் விஞ்ஞான விளக்கங்களும், ஆசமனம், உபாசனையில் தெய்வ சக்தியை ஈர்க்கும் பிரணாயாம முறைகள், ஆவாகனாதி தூப, தீப உபசார முறைகளும் அவற்றிற்கான விளக்கங்கள். அர்ச்சனை, மந்திர ஜபம், மானச ஜெப முறைகள், க்ஷமாபானம், 

பகுதி இரண்டு கற்றல் முடியும்போது நீங்கள் பிரபஞ்ச ஞான சக்தியை உபாசிக்கும் காயத்ரி உபாசகர் என்ற நிலையினை பெறுவீர்கள். இந்த கற்கை மூலம் தெய்வ உபாசனை என்பது வெறுமனே ஒரு கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை இல்லை என்பதயும் எமது முயற்சியாலும் இதற்கு முன்னர் இந்த முயற்சியில் வெற்றி பெற்று சூக்ஷ்ம நிலையில் உள்ள  குருமண்டலத்தின் உதவியாலும் பெறப்படும் ஒரு பேறு என்பதனை நன்கு விளங்கி கொள்வீர்கள்.  
மூன்றாவது காயத்ரி உபாசனை தத்துவ விளக்கம் 

இந்த பகுதியில் காயத்ரி ஸ்ம்ருதி, காயத்ரி உபநிஷதம், காயத்ரி இராமாயணம், காயத்ரியிற்கான மகரிஷிகளது பாஷ்யம் என்பன விளங்கப்படுத்த படும். இதன் மூலம் காயத்ரி பற்றி மகரிஷிகள் என்ன இரகசியங்களை கூறியிருக்கிறார்கள் என்பதனை விளங்கி கொள்ள முடியும். 


நான்காவது யாக விஞ்ஞானம் 

காயத்ரியும் யஞமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. ஆகவே காயத்ரி சாதகன் கட்டாயம் அக்னியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை தெரிந்திருக்க வேண்டும். இந்த பகுதியில் யாக விஞ்ஞானம், யக்ஞ சிகிச்சை,  யாக தத்துவம், சாஸ்திரங்கள் கூறும் வேள்வியின் மகிமை, யாக சாதநியினால பெறக்கூடிய நன்மைகள், வேள்வியும் பாபநாசமும், வேள்வியும் விஞ்ஞானமும், யாகமும் குணமாற்றமும், ரோக நிவாரண ஹோமத்திரவியங்கள், சப்த பரிணாமங்கள், யாக பூமி நிர்ணயம், சுபதின நிர்ணயம், ஜபமாலா இலக்கணம், யாக விதானம், தினசரி காயத்ரி ஹோமம், இல்லற வேள்வி. 

ஐந்தாவது காயத்ரி லகு அனுஷ்டான சாதனை 

மேலே கூறிய நான்கு நிலைகளிலும் காயத்ரி பற்றிய உண்மைகளை கற்ற உங்களுக்கு காயத்ரி மந்திரத்தின் மூலம் குறைந்த காலத்தில்  உங்கள் உடல், மன, பிராண சக்திகளை அதிகரித்து எப்படி சக்தி பெறுவது எனும் வழியினை சொல்லித்தரும். 

இப்படி காயத்ரி லகு அனுஷ்டானம் செய்பவர்கள் படிப்படியாக குருமண்டலத்தின் ஈர்ப்பினை பெற்று மிக உயர்ந்த சாதனைகளுக்கு தயாராவார்கள். 

இவற்றை எல்லாம் வாசித்து விட்டு பிரமித்து நாம் குடும்பஸ்தர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள், நேரம் இல்லை என உங்களுக்கு நீங்களே தடைகளை  ஏற்படுத்தி கொண்டு விலகி விடாமல் இப்படியான விடயத்தினை பார்த்து வாசிக்க கிடைத்ததே ரிஷிகளின் அழைப்பு உங்களுக்கு உள்ளது என்ற நேர்மறை மனோபாவத்துடன் (Positive attitude) கற்கையில் இணையுங்கள். 

கற்கைக்கான குரு தட்சணை

மின்னஞ்சல், இணையம் மூலம் கற்பதற்கு எதுவித கட்டணமும் இல்லை. பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப படும் அவற்றை அச்சிட்டு உங்கள் பாவனைக்கு வைத்துக்கொள்வதனை நீங்களே செய்து கொள்ளவேண்டும். 

எமது நேரத்தை எமது குருநாதரின் பணியாக வாழ்கையின் தர்மத்தின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக  தருகிறோம். அதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இவற்றை சிரத்தையுடன் கற்று அதன்மூலம் பெறும் சக்தியையும், ஞானத்தையும் உங்களது வாழ்க்கை அனுபவத்திற்கு கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையினை மகிழ்ச்சியும், இன்பமும் உள்ளதாக்கி இனிய குடும்பத்தை, சமூகத்தை உருவாக்கினால் அதே மிகப்பரிய குருதட்சணை!

மேலும் எதிர்காலத்தில் தெய்வ, யோக சாதனை தொடர்பாக நூற்களாக ஏதும் வெளியிடுவதாக, அல்லது கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக ஏற்பாடுகள் இருந்தால் நீங்களாக முன்வந்து அவற்றின் செலவுகளை பகிர்ந்து செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  

நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் 
  • ஒருபாடத்தை படித்து தகுந்த வினாக்களுக்கு விடையினை நீங்கள் அனுப்பி வைக்காமல் எக்காரணம் கொண்டும் அடுத்த பாடம் அனுப்ப படமாட்டாது. 
  • உங்கள் தொடர்பாடல் மரியாதையான முறையிலும், குரு சிஷ்ய பாவத்திலும் இருக்க வேண்டும். 
  • ஒவ்வொரு சாதனைகள் பயிற்சிகள் தரப்படும் போதும் அவற்றை உங்களது சொந்த வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய முடியுமா என்பதனை நிதானமாக துணிந்து கொண்டு செய்ய தொடங்க வேண்டும். 
  • இவ்வாறு நிபந்தனைகளை கடைப்பிடித்து செய்ய முடியாமல் போகும்போது எம்மால் முடியாது என்று கைவிட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இப்படி முயற்சிக்கும்போது குருவருளாலும் இறையருளாலும் நீங்கள் நம்பவே முடியாத பல நன்மைகள் பெறுவீர்கள். 
இந்த  கற்கையில் உங்கள் சிரத்தையும் முயற்சியும்தான்  மூலதனமே அன்றி வேறு எதுவும் இல்லை. தாகம் உள்ளவர்கள் பெற்று பயனடைவதகாகவே இந்த ஏற்பாடு, 

அன்புடன் 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...