குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 15, 2023

கல்வி

கற்பது எப்படி என்பது ஒரு தனிக் கல்வி! 
மனம் எப்படி இயங்குகிறது? மூளை எப்படி இயங்குகிறது? இவையெல்லாம் தொடர்ச்சியான பழக்கத்தினாலே இயங்குகிறது. மனதை, மூளையை ஒரு தொடர்ச்சியான பழக்கத்திற்குள் உட்படுத்தினால் கற்றல் என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றே! 
பரிட்சைக்கு கற்றல் என்பது பயிற்சியுடன் தொடர்புடையது. 
இவற்றை எமது பிள்ளைகளுக்கு முறைப்படி பயிற்றுவிக்க வேண்டும். உயர்தரம் கணித விஞ் ஞான பாடங்கள் பயிலும் பிள்ளைகளுக்கு 
பரிட்சைக்கு எப்படி பயமில்லாமல் எம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது; சுய கற்றல் முறைகள்; ஞாபசக்தி விருத்தி, தொடர்ச்சியான பயிற்சிக்கு எப்படி அட்டவணை தயார் படுத்திக் கொள்வது பற்றி உயர்தரம்கணித விஞ் ஞான துறை மாணவர்களுடன் உரையாடியுள்ளேன். 
இன்னும் பல நூறு மாணவர்களுக்கு இதைக் கற்பிக்க எண்ணம் கொண்டுள்ளேன். 
பட உதவி: நன்றி மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale

Thursday, July 13, 2023

Sri Agasthya Maharishi and Devi Agasthiyamayi

At the feet of Sri Agasthya Maharishi and Devi Agasthiyamayi  
He/Her may bless us to spread the great Tamil Siddha wisdom to the world  
First print copies reached to hands from Chennai

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வகுப்பு

இன்றைய ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வகுப்பில் சற்று சீண்டுவதற்காக மேற்கத்தேய மாணவர்களைப் போல் அவதானித்து குறிப்பெடுக்கும் பழக்கம் தமிழ் வகுப்பில் இல்லை! வெறுமனே என்னைப் பார்த்துத் தலையாட்டிக் கொண்டிருப்பதும், பலர் வீடியோவை off செய்துவிட்டு வகுப்பில் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாமல் இருப்பது தான் வழக்கம் என்று சொன்னேன்! 
இல்லை குருவே, இங்கே பாருங்கள் நீங்கள் ஆற்றிய உரையை 15 நோட்டுப் புத்தகங்களில் சிரத்தையாக தொகுத்து வைத்திருக்கிறேன் என்று அனுப்பியிருக்கிறார் ஒரு மாணவர். 
அவர் ஒரு சிரத்தையான மாணவர்; சாதகரும் கூட! அவரும் இன்னும் சிலராலேயே பல அரிய விஷயங்கள் உரையாடலுக்கு வரும்!

Wednesday, July 12, 2023

Sri Agasthiya Maharishi’s Yogic Wisdom From Siddha Lineage Book - 1

தயாராகிறது.................. மெய்ப்பு வாசித்தலுக்கான பிரதி.. சென்னையிலிருந்து வருகிறது!

மூலாதார கணபதி தியானம்

தினசரி அதிகாலை 04:30 இற்கு Zoom வழியாக மூலாதார கணபதி தியானம் நடைபெறுகிறது. 
யோக தந்திர சாஸ்திரப் பிரகாரம் எமது உடலில் குறித்த புள்ளிகளில் எமது மனதின் வடுக்கள், உணர்ச்சிகள் கர்மங்கள் பதிந்துகொள்வதால் எமது பிராண ஓட்டம் தடை பட்டு வாழ்வில் சிக்கல்கள் உருவாகிறது. 
மனதையும், உடலையும், பிராண சக்தியையும் இணைத்துப் பயிற்சிப்பதன் மூலம் எம்மை நாம் உருமாற்றல் செய்துகொள்ள முடியும். 
இவை அனைத்திற்குமான வழிமுறைகள் அகத்திய மகரிஷி தனது நூல்களில் அருளியுள்ளார்; இந்த வழிகாட்டலின் படி ஒவ்வொரு நாளும் தியான சாதனை நடைபெறுகிறது. 
அகத்தியர் சௌமிய சாகர நூலை குருமுகமாக பிரதி சனிக்கிழமைகளும் அதிகாலை 0530 இற்கு வகுப்புகள் நடைபெறுகிறது. 
ஆர்வமுள்ளோர் கீழ்வரும் வாட்ஸப் இலக்கத்திற்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி +94742837401 பங்குபற்றி பயன் பெறுங்கள். 
-----------------------------------------------------------
மூலாதார சங்கல்பம், 
என்னை பிருதிவி தத்துவத்துடன் பிணைக்கும் அனைத்து தளைகளையும் நீக்க வேண்டி வல்லபை கணபதியை மூலாதாரத்தில் எழுந்தருளச் செய்கிறேன். 
பயம் சார்ந்த சகல எண்ணங்களும்
சந்தேகங்கள் சார்ந்த சகல எண்ணங்களும்
தகுதியற்ற எண்ணங்கள்
குற்ற உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள் 
வெட்க உணர்வு சார்ந்த எண்ணங்கள்
அனைத்தும் எனது சித்தத்திலிருந்து இப்பொழுதே கரைந்துவிடுகிறது. 
இந்த உணர்வுகள் அனைத்தும் வல்லபை கணபதியின் அருளால் தெய்வீக அன்பாக மாறி தெய்வ உருமாற்றம் பெறுகிறேன். 
நான் எல்லாத்தளைகளிலிருந்தும் விடுபட்டு இப்போது சுதந்திரனாகவும், இறைவனின் அன்பையும் ஆற்றலையும் உள்வாங்கக் கூடிய திறந்த மனதுடையவனாகவும் ஆகிறேன். 
என்னுடைய வாழ்க்கை முழுவது தெய்வ சக்தியால் வழி நடாத்தப்படும் நிலையை நான் அடைகிறேன்! 
இந்த சாதனையால் எனது மூலாதாரம் பலமடைந்து, சுத்தியடைகிறது.

Tuesday, July 11, 2023

எமது கலைஞர்கள் வளர முதலிடுவீர்களா?

இளையராஜா ஒரு ஞானி என்பதை ஏற்றுக்கொள்கிறேன்! 
இலங்கையில் உங்கள் இளைஞர்கள் ஒரு முழு நீளத் திரைப்படத்தினை எடுக்க செலவழிக்கும் ஒட்டுமொத்த பஜட்டினை மூன்று மணி நேர நிகழ்ச்சிக்கு எனக்கு கொடுக்கும் முட்டாள் பெருந்தகைகளை ஏனடா இப்படி வீண் வேலை பார்க்கிறீர்கள், உங்கள் ஊரில் உள்ள பிள்ளைகள் உருப்பட செலவு செய்யலாமே என்பதைத் தான் பிழைக்க வந்துவிட்டு இப்படி வீண்வேலை செய்கிறீர்கள் என்று திட்டியிருக்கிறார். 
இனியாவது இங்குள்ள எமது கலைஞர்கள் வளர முதலிடுவீர்களா?
    
குறிப்பு: இந்தப் பதிவு ஒரு அணியிலக்கண சிலேடைப் பதிவு; யாரும் தலை சூடாக வேண்டாம். இதில் உள்ள உண்மையை மாத்திரம் சிந்திக்கவும்.

சர்வதேச யோகா தின சிறப்பு நேர்காணல்

சர்வதேச யோகா தின சிறப்பு நேர்காணல் - சக்தி டிவி Good morning Sri Lanka நிகழ்ச்சியில்! 
அருமையான உரையாடலுக்கு நன்றி ராஜ்குமார் 
பார்த்துவிட்டு கீழே உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! 
காணொளி முதல் கொமெண்டில்

Monday, July 10, 2023

அமானுஷ்ய அமெரிக்கா - மிகச் சுவாரசியமான புத்தகம்!

அமானுஷ்ய அமெரிக்கா - மிகச் சுவாரசியமான புத்தகம்! 
இந்தப் புத்தகத்திற்கும் இலங்கைக்கும் - சென்னைக்கும் தொடர்பு இருக்கிறது. 
அமானுஷ்ய அமெரிக்காவின் பிதாமகர்களான ஹென்றி ஆல்கட்டே இலங்கையின் நவீன பௌத்த மறுமலர்ச்சியின் பிதாமகர். 
இவரே பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தமான தாமஸ் எடிசனின் வழிகாட்டியும் கூட. 
ஹென்றி ஆல்கட்டும் - மேடம் பிளாவஸ்கியிம் சேர்ந்து சென்னை அடையாறில் தியோசபிக்கல் சொசைட்டி அமைத்தனர். 
உலகம் அறியப்படாதவர்களால் ஆளப்படுகிறது!

ஒரு வழிகாட்டியாக இருப்பது பெரும் பொறுப்பு!

குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்! அதேவேளை அவர்களுடைய Ego வினை கிளப்பிவிட்டு கோபத்தைத் தூண்டக்கூடாது. காயப்படுத்தி தாழ்வு மனப்பான்மை உண்டாக்கக்கூடாது! ஆர்வத்துடன் செயல் புரியும் உத்வேகத்தை உருவாக்க வேண்டும்; அதற்கு நிதானமும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உரையாட வேண்டும்! எனது மாணவர் ஒருவர் ஒரு முறை கூறினார் “ஐயா உங்களிடம் கேள்வியைக் கொண்டுவந்தால் பதிலை நாம் தேடி உணரும் வகையில் அழகாக எமக்குள்ளே திருப்பி விடுவீர்கள்” என்று! 
ஆம் கற்பித்தலின் முதல் நியதி “எவருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, அவர்கள் ஏற்பு நிலையில் இல்லாமல்” என்பதே!
ஒரு மாணவர் பல வருடங்களுக்கு நொந்து நொடிந்து வந்தபோது ஆலோசனை கூறி உளத்தை மீளமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் சண்டை பிடிக்க வீரனாக்கினால் சிலமாதங்களில் தனது பழைய பழக்க வழங்கள், சிந்தனை முறைகளுக்குள் போய் ஒளிந்து கொண்டு அண்ணா பயமாக இருக்கிறது என்று வெருண்டு கொண்டு வருவார்! 
இப்போது அவருக்கு நிதிப்பிரச்சனையாம்! அதற்கு அனுப்பிய வழிகாட்டல் இங்கும் சிலருக்கு பொருந்தும்! உபயோகமாக இருக்கலாம். 
*******************************************
அன்பின் மாணவரே, 
உங்களுடைய நிதிப்பிரச்சனைக்கு உங்களுடைய பேராசைகள், நிதி ஒழுக்கமே காரணம். 
இங்கு பேராசை என்பது உயர்ந்ததை அடையவேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடாது என்பதல்ல! உயர்ந்த விஷயத்தை குறுக்கு வழியில் அதற்குரிய உழைப்பை, விலையைக் கொடுக்காமல் ஏமாற்றி இலாபம் பெற நினைக்கும் எண்ணம்! 
நீங்கள் உழைக்கும் பணத்தைக் கணக்குச் செய்தால் சாதாரணமாக ஒரு பட்டதாரி உழைப்பதை விட அதிகமாக உழைக்கிறீர்கள்.
நீங்கள் செலவு செய்வதை ஆராய்ந்து பாருங்கள்; அவற்றில் போலிப்பகட்டு இருப்பின் திருத்திக்கொள்ளுங்கள். 
தர்ம காரியங்களுக்கு பணம் செலவழிக்கும் போது உங்களிடம் பணம் இல்லை என்று மனதில் சூழ் நிலையை உருவாக்கி அகத்தில் தரித்திரம் உருவாக்குவது பின்னர் எதிர்வினையாக பேராசைப்பட்டு ஏமாறுவது என்ற நிலை உங்களில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். 
நான் எல்லோராலும் விரும்பப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற உளத்தாழ்வு நிலை இருந்தால் அதை ஈடுகட்ட எனது நிதி வலிமையை விட பகட்டாக மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று சென்று மாட்டிக்கொள்கிறீர்களா என்பதை கவனியுங்கள்.
தினசரி உங்கள் தொழிலில் உழைப்பைச் செலுத்தாமல் பணம் கிடைத்தவுடன் ஓய்வாக இருப்பது, உல்லாச மன நிலை வருவது, பிறகு பணம் முடிந்தவுடன் பயம், கவலை கொள்வது போன்ற தவறுகளைச் செய்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்! 
இப்படி தகுந்த ஒழுக்கத்தினைப் உங்களில் உருவாக்காமல் உங்களைச் சுற்றி உலகமே சூழ்ச்சியால் இயங்குவது போல கற்பனைப் பயத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். 
மீண்டும் மீண்டும் இதைப் படித்து உங்களில் இந்த அகக்காரணி இருக்கிறதா என்பதை கவனித்து திருத்திக்கொள்ளுங்கள்! 
திருத்த வேண்டும் என்றால் விழிப்புணர்வுடன் சுய பச்சாதாபம் காட்டாமல் உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்!

எனது மகள்

எனது மகள் ஒருமுறை கேட்டாள்; அப்பா நான் டாக்டர் ஆவதா? இஞ்சினியர் ஆவதா? என்று! 
நான் சொன்னேன் இப்படியெல்லாம் உங்களது வாழ்க்கை இலக்கை வைக்க வேண்டாம்! இந்த உலகம் மூன்று வித நியதியால் இயங்குகிறது. 
1. அறிவு - Knowledge
2. ஆற்றல் - Power
3. இவற்றை வழி நடத்தும் செல்வம் அல்லது பணம் - Money
இந்த மூன்று ஆற்றல்களும் பல்வேறு அகப்பிரிவுகளைக் கொண்டுள்ளது; நாம் இதன் வரைபடத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் இந்த மூன்றையும் இயக்கும் துறைகளில் உங்களது மனவிருப்பமும், ஆற்றலும் இயல்பாக எதில் நாட்டமுறுகிறதோ அதில் அடிப்படைக் கல்வியும், (Education) அனுபவமும் (Experience), நிபுணத்துவம் (Mastery) பெறவேண்டும். இப்படி ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற பின்னர் மற்றைய துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும்! இப்படி நாம் இந்த உலகின் இயக்கத்தில் ஒரு பங்காளியாக, மேம்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்!
இது எனது சிந்தனை!

Saturday, July 08, 2023

சமயம்

நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயங்கள் மக்களை ஏமாற்றுவதற்கு மனித இயல்புகளின் அடிப்படைகள் இல்லாத தேவபுருஷர்கள் மனிதர்களிடையே இருப்பதைப் போல் காட்ட வேண்டி நடிக்கும் நாடங்களின் ஒன்று காமம் இல்லாத அதியுத்தம தலைவர்களை தாம் சமயத் தலைவர்களாகக் கொண்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது! 
இயல்பான மனித உளவியலுக்கு மாறான ஒரு விகார சிந்தனை இது! 
வஜ்ரயான திபேத்திய பௌத்தம் இந்த விடயத்தை மிக அழகாகக் கையாளுகிறது. இதற்கு மூலம் எமது தந்திர சாஸ்திரம்; இது பற்றி பிறகு ஆர்வமுடையோருடன் உரையாடுவோம். 
திபேத்திய மதகுருவாக – லாமாவாக தேர்ந்தெடுக்கப்படும் துறவி கர்மமுத்ரா என்ற பயிற்சிக்கூடாக தனது காம உணர்ச்சிகள், எண்ணங்கள், ஆற்றல்களை உயர் உணர்வுகளாக மாற்றவேண்டும். 
கர்மமுத்ரா என்றால் கர்மங்களை முத்திரையிடல் என்று அர்த்தம். இதன் படி குறித்த பயிற்சியாளர் இந்த பயிற்சியில் தேர்ந்த பெண்ணுடன் – இவர் யோகினி என்று தந்திர சாஸ்திரத்தில் அழைக்கப்படுவார்கள் - தனது பயிற்சியினை மேற்கொண்டு கர்மமுத்ரை நிலையில் சித்தி பெறுவார். 
கர்ம முத்ரா என்பது வஜ்யான யோகிக்கு தனது பயிற்சியில் துணைபுரியும் பெண் துணையையும் குறிக்கும். இதன் அர்த்தம் பெண் தகுந்த தந்திர சாதனை மூலம் ஒருவனின் கர்மத்தை நீக்கவும் முடியும் என்கிறது தந்திர சாஸ்திரம். 
தாந்த்ரீக பௌத்தம் ஞானத்தைப் பெற துறவற தனிமையான நுட்பங்களுக்கு மாற்றான முறையாக இதை வழங்கியது, இந்த முறை மூலம் ஒருவர் வாழ்வை வெறுத்தொதுக்காமல் பெண் துணையுடனும் உயர் ஞானத்தைப் பெறலாம் என்கிறது.
எனினும் பல பிறப்புகளால் தமது காமத்தினை முத்திரையிட்டு கட்டுப்படுத்தியவர்களுக்கு மாத்திரமே நேரடித் துறவறம் என்றே சாத்திரங்கள் சொல்கிறது. அத்தகைய அகப்பக்குவம் இல்லாதவர்கள் தகுந்த துணையுடன் காமமுத்திரை நிலை பெற தந்திர சாஸ்திரம் சொல்கிறது. 
திபேத்திய வஜ்ராயன பௌத்த மகாசித்தர்கள் தமது யோகினிகளுடன் கர்ம முத்திரை பயிற்சி செய்யும் புராதன படம் ஒன்று கீழே!

காமத்திலிருந்து தெய்வ உணர்விற்கு என்றார் ஓஷோ

காமத்திலிருந்து தெய்வ உணர்விற்கு என்றார் ஓஷோ
துறவிகளுக்கு காமம் உண்டா என்றால் மனிதர்கள் எல்லோருக்கும் உண்டு! 
இருக்கும் காமத்தை உயர் உணர்வாய் மாற்றி வெற்றி கண்டவரும் உளர்! 
காமத்தை மறைத்து தம்மை அதி உன்னதமானவர்கள் என்று மற்றவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு உருவாக்கி இரகசியமான தமது காம உணர்வைத் தணித்துக்கொண்டவர்களும் உளர்! 
காமம் மனிதனின் அடிப்படை சக்தி; தம்மை உயர்வாக காட்டி மற்றவர்களை விட மேம்பட்டவர்களாக காட்ட காமம் இல்லாதது போல் நடித்தாலும் எல்லோரிலும் காமம் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. 
சக்தியை கையாளும் முறை அதை வெறொன்றாக உருமாற்றல்; அடக்கினால் அழுத்தம் அதிகமாகும்! அழுத்தம் அதிகரித்தால் ஒரு நாள் உடைத்துக்கொண்டு பீறிட்டு உங்களை அழிக்கும்! 
காம இரகசியம் என்று கிட்டத்தட்ட இந்த தலைப்பில் பதினைந்திற்கு மேற்பட்ட பதிவுகள் இருக்கிறது; படித்துப் பாருங்கள். 
இணைப்பு முதல் கொமெண்டில்.............

Thursday, July 06, 2023

மாத்தளையின் கல்வி முன்னேற்றம்

பாடசாலை மாணவர்களுக்கான "கற்பது எப்படி - How to Study" என்ற குறுகிய பாடவிதானத்தை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale இன் வேண்டுகோளிற்கு இணங்க மாத்தளையின் கல்வி முன்னேற்றத்திற்கான தொடங்குகிறேன். 

கற்றல் என்பது கீழ்வரும் ஏழு திறன் களைக் கொண்டது. இந்த ஏழு திறன்களையும் சரியாக வளர்க்காமல் எவரும் எந்தவொரு விடயத்தையும் சிறப்பாக கற்று பயன்படுத்த முடியாது. 

1. வாசிப்பும் கிரகித்தல்

2. ஞாபசக்தி வளர்ச்சி

3. நேர முகாமைத்துவம் 

4. பாடக்குறிப்புகளை தெளிவாகவும் வினைத்திறனாகவும் எழுதுதல்

5. வகுப்பறையில் ஆர்வத்துடன் பங்குபற்றல்

6. கட்டுரைக் கேள்விகளுக்கும் வாய்மொழி பதில் அளிக்கும் திறனை விருத்தி செய்தல்

7. பரீட்சைக்கு தயார்படுத்தல்

இந்தக் கற்கை நெறி இந்த எட்டு அமிசங்களையும் மாணவர்களுக்கு பயிற்றுவித்து கற்றலில் திறமையுடைய கல்விமான்களை உருவாக்க எண்ணம் பூண்டுள்ளது. 

உங்கள் பிள்ளைகளுக்கு இந்தக் கற்கை நெறியை பிரத்தியேகமாக பயிற்றுவிக்க வேண்டின் தொடர்பு கொள்ளுங்கள்.


மூலாதார கணபதி தியானம்

அகத்திய மகரிஷி காட்டிய வழியில் மூலாதாரத்து கணபதியை தியானிக்க
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
என்று ஔவைப் பாட்டி சொல்லுகிறார். 
தினசரி 20 நிமிடம் zoom வழியாக பிரம்ம முகூர்த்தத்தில் காலை 0430 தொடங்கி நடைபெறுகிறது. உலகெங்குமிருந்து பங்கு பெறுகிறார்கள். 
அதிகாலையில் எழுவது வாழ்க்கையில் பல மணி நேரங்களை எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய நேரத்தைப் பெறுவதாகும். 
இந்த நேரம் கடவுளுக்குரிய நேரமாகும். மனம், உடல் தூய்மையடையும். 
எளிய வழிகாட்டல் தியானம் (guided meditation) 
அனைவரும் வருக!
இதில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்வரும் வாட்ஸப் இலக்கத்திற்கு உங்கள் பெயர், இடத்தினைக் குறிப்பிட்டு "மூலாதார கணபதி தியானத்தில் இணைந்துகொள்ள விரும்புகிறேன்" என்ற செய்தியை இந்த வாட்ஸப் +94742837401 இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

Wednesday, July 05, 2023

ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா

“God does not need to be flattered with worship and offerings. Chanting of God’s name is meaningful only when one is engaged in beautifying and developing His Garden, this Universe.”
– Shriram Sharma Acharya
“கடவுள் வழிபாடு மற்றும் காணிக்கைகளால் முகஸ்துதி செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த பிரபஞ்சத்தை அழகுபடுத்தும் மற்றும் மேம்படுத்தும் பணியில் ஒருவர் ஈடுபட்டால் மட்டுமே கடவுளின் பெயரை உச்சரிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
– ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா

Tuesday, July 04, 2023

அரவிந்தரின் குறிப்புகள்

ஸ்ரீ அரவிந்தர் சுவாமி விவேகானந்தரை ஒரு வலிமையான ஆன்மீக சக்தியாகக் கருதினார். மேலும் பாரத அன்னையின் ஆன்மாவிலும் அவரது குழந்தைகளின் ஆன்மாவிலும் "அவரது செல்வாக்கு இன்னும் பிரமாண்டமாக வேலை செய்கிறது" என்பதை உணர்ந்தார். 
உலக மனதை ஆன்மிக திசையில் மாற்றும் மாபெரும் சக்தியாக ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உருவாக்கினார் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 
விவேகானந்தரின் தனது குருவின் ஆணையில் அவர் உடலை விட்டு புறப்பட்டுச் செல்வது’ என்பதை, சூட்சும உடலில் இருந்து கொண்டு உலகுக்குக் காணக்கூடிய முதல் அடையாளமாக, ‘‘பாரதம் தனது உன்னத ரிஷி கலாச்சாரம் உலகில் உயிர் பிழைப்பதற்காக மட்டுமல்ல, வெல்வதற்காகவும் விழித்திருந்தது’’ என்று அரவிந்தர் தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வுகள்

அம்பாளை உபாசிக்கும் எனக்கு பூரணை மிக முக்கியமான நாள்! அன்று முழுவதும் அனுஷ்டானத்தில் கழியும்! 
நேற்று அம்பாள் எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறாள்! 
அவுஸ்ரேலியாவில் இருந்து Muralee Muraledaran அண்ணா வந்ததால் அவரது ஆலோசனையுடன் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale நேற்று மூன்று முக்கிய நிகழ்வுகளை மாத்தளையில் நடத்தியிருக்கிறது. இதை இவர்கள் நடத்தினார்களா அல்லது திருவருள் நடாத்தியதா என்பது இன்னும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம். 
1. காலையில் சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் digital education center, பாலர் பாடசாலை, கல்வி ஆலோசனை நிலையம் ஆகியவற்றிற்குரிய அடிக்கல் ஆலய தர்ம கர்த்தா பாலா அண்ணாவுடனும் பரிபாலன சபையுடன் நிறுவப்பட்டுள்ளது. இது சிந்தாக்கட்டி கோயிலைச் சுற்றி இருக்கும் 250 குடும்பங்களின் பிள்ளைகளின் ஆரம்ப கல்வி, பாலர் கல்வி, அற நெறிக் கல்வி, பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு பிரம்மகுமாரி இராஜயோக நிலையத்தின் இணைப்பளர் Muthusamy Sivagnanam ஐயா அவர்களும் பங்குபற்றி பாராட்டுகளை வழங்கியிருந்தார். 
2. மதியம் கல்வித் திணைக்கள அதிகாரிகள் Monica Gomez அம்மையார், அதிபர்கள், ஆசிரியர்களுடன் Dr. Nishānthan Ganeshan - Dr. Nava Navaratnarajah ஆகிய பல்கலைக்கழக சமூக அறிஞர்களுடன் நீண்ட கல்வி சமூக கலாச்சார சமூகப் பணியில் அனுபவம், மேற்குறித்த பணிகளுக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் உயர் கௌரவம் பெற்ற அன்புக்குரிய Muralee Muraledaran அண்ணா அவர்களுடைய ஆலோசனையுடன் மாத்தளையில் தமிழ் கல்வி நிலை முன்னேற்றத்திற்கு தேவையான செயற்திட்டங்கள், பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகள், அவறிற்குரிய தீர்வுகள் பற்றி நீண்டதொரு கலந்துரையாடல் நிகழ்வுபெற்றது. 
3. மூன்றாவது நிகழ்வு மாத்தளை காந்தி சபையின் ஏற்பாட்டில் மாத்தளையின் கல்வி, கலாச்சார வளர்ச்சியில் ஆர்வமூள்ள சமூகப் பெரியவர்களுடன் எப்படி கல்விக்குரிய தலைமத்துவம் வழங்குவது என்பது பற்றி உரையாடப்பட்டது. இதில் ஏற்கனவே மாத்தளையின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடும் சுபீட்சம் நிறுவனம், பல்வேறு ஆர்வலர்கள் கலந்துகொண்டு பெரும் ஒத்துழைப்பைத் தந்திருந்தனர். இந்த நிகழ்விற்கு தலைமையேற்ற மகாத்மா காந்திசபையின் தலைவர் திரு சந்திரசேகன் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று இந்தக்கூட்டம் நடைபெற்றது மிகச் சிறப்பான ஒரு நினைவாக இருக்கப்போகிறது. முரளி அண்ணா தனது கல்வி சமயப் பணியின் நீண்ட வெற்றிகர அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். 
எந்தத் தடைகள் வந்தாலும் எப்படி அதைக் கவனிக்காமல் இலக்கை மாத்திரம் கவனித்து முன்னேறிச் செல்வது என்ற வித்தையை தனது அனுபவத்திலிருந்து முரளி அண்ணா எம் எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டது ஒட்டு மொத்த சமூகத்திற்கு அவர் தந்திருக்கும் பெருஞ்செல்வம்! 
அவர் ஒரு யதார்த்தவாதி என்பதையும், எடுத்ததை சாதிக்கும் விடாக்கண்டன் என்பதையும், உதவி என்பது எவருக்குத் தேவையோ அவர்களுக்கு என்ற உயரிய எண்ணம், வளங்களை வீணாக்கமல் உயர்திறனுடன் பாவிப்பது எப்படி, இருப்பதை வைத்து உயர்ந்த பலனைப் பெறுவது எப்படி என்பதையெல்லாம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது. 
எனக்கு மனதிற்குள் ஒரு கவலை பூரணை தினத்தில் இன்னும் கொஞ்சம் அனுஷ்டானத்தினைச் செய்திருக்கலாமே என்ற மனஓட்டத்துடன் வீட்டிற்கு வந்தால் அங்கு குருதேவர் பண்டிட் ஸ்ரீராம்சர்மாச்சார்யாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கண்ணில் பட புத்தகத்தைத் திறந்தால் கீழ்வரும் செய்தி கண்ணில் பட்டது; 
1. உண்மையான உபாசனை - தனது இஷ்ட தெய்வத்தை உபாசித்தல்
2. ஆன்ம சாதனை - அறத்திலிருந்து வழுவாத வாழ்க்கை
3. ஆராதனை (மனித குலத்திற்கு தனது அறிவு ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொண்டு செய்தல்)
இன்றைய நாளை நீ வீணாக்கவில்லை உனது சமூக முன்னேற உனது நேரம், அறிவினைப் பயன்படுத்தி ஆராதனை செய்துவிட்டு வந்திருக்கிறாய் நிம்மதியாக நித்திரை கொள் என்றாள்!
இந்த மூன்றும் அமைந்த வாழ்க்கை ஒருவனை தெய்வீக மனிதனாகவோ, ரிஷியாகவோ, தேவதூதனாகவோ மாற்றிவிடும். இத்தகையவர்கள் எப்போதும் மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், உயர்ந்த செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த செய்தியைப் பார்த்த மகிழ்ச்சியில் மனத்திருப்தியுடன் வேலைகள் எல்லாம் முடித்து உறங்கச் செல்லும் போது இரவு ஒன்றரை மணியாகிவிட்டது.

குருதேவர் பண்டிட் ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா

குருதேவர் பண்டிட் ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா தனது வாழ்க்கை வரலாற்றில் உண்மையான ஆன்மீக வாழ்க்கை எது என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்: 
1. உண்மையான உபாசனை - தனது இஷ்ட தெய்வத்தை உபாசித்தல்
2. ஆன்ம சாதனை - அறத்திலிருந்து வழுவாத வாழ்க்கை
3. ஆராதனை (மனித குலத்திற்கு தனது அறிவு ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொண்டு செய்தல்) 
இந்த மூன்றும் அமைந்த வாழ்க்கை ஒருவனை தெய்வீக மனிதனாகவோ, ரிஷியாகவோ, தேவ தூதனாகவோ மாற்றி விடும். இத்தகையவர்கள் எப்போதும் மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், உயர்ந்த செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

Sunday, July 02, 2023

அங்குரார்ப்பண நிகழ்வு

தனி மனித சிந்தனையில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் சமூகத்தில் பெருமாற்றத்தைச் செய்யலாம். 
முரளி அண்ணா Muralee Muraledaran எதை நினைத்தாலும் செய்துமுடிக்க வேண்டும் என்ற செயல் வீரர்! அவரது செயல் முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பவற்றை நோக்கியே இருக்கும்! அவர் தமிழ் கலாச்சாரத்தை அவுஸ்ரேலியாவில் பாதுகாத்து வளர்ச்சிக்கு வித்திட்ட அத்திவாரம் என்பதால் அவுஸ்ரேலியா அரசாங்கம் தனது உயர் கௌரவத்தைத் தந்துள்ளது. அவர் சிந்தனை முழுக்க இலங்கையில் பாடசாலையில் கல்வியினை வளர்ச்சக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது! அவுஸ்ரெலியாவின் பெரிய கோயிலின் தர்மகர்த்தாப் பொறுப்பில் இருந்தவர். கோயில்கள் சமூகத்த்தின் முன்னேற்றத்திற்குரிய மையங்கள் என்ற உறுதியான கோட்பாடு உடையவர். உதவி என்று கேட்டால் எப்படிச் செய்யமுடியும் என்று மாத்திரம் யோசிப்பவர்! 
மாத்தளை இலங்கையின் ஆன்மீகத்திற்கு, மலையகத்தின் பாரம்பரியத்தின் மையம். இங்கு முத்துமாரி, ஏழுமுக காளி, பிள்ளையார், கதிரேசனார், சிந்தாக்கட்டி குமரன் என்று அருள் புரியும் தளம். 
நேற்று காலை அம்மனைத் தரிசிக்கும் போது மனதில் தோன்றியதை அவருடன் வந்திருந்த சிந்தக்கட்டி முருகன் கோயில் தர்மகர்த்தா பாலா அண்ணவிடம் சொல்ல சிந்தாக்கட்டியை சூழ இருக்கும் சமூகத்தின் பிள்ளைகளின் பாலர் கல்விக்கு டிஜிட்டல் கல்வித்தளத்தை உடனே செயலாக்கி விட்டார்கள். 
இது ஒரு வித்து - எமது மாத்தளை நகரில் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் கல்விப் புரட்சியைச் செய்யலாம்; இப்படியான சிறு சிறு யோசனைகளை சிறப்பாகச் செய்யலாம். 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளையில் மின்வழிக் கற்கையை சிறப்புடன் இரண்டு பாடசாலைகளில் நடாத்துகிறது. எமது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்புகளை உருவாக்க விரும்பும் நிதி வழங்கும் ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றியத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொழில் நிபுணத்துவமும் உடைய நிபுணர்களால் இந்தத் திட்டம் சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது. 
நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது; அனைவரும் வருக!

அங்குரார்ப்பண நிகழ்வு

தனி மனித சிந்தனையில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் சமூகத்தில் பெருமாற்றத்தைச் செய்யலாம். 
முரளி அண்ணா Muralee Muraledaran எதை நினைத்தாலும் செய்துமுடிக்க வேண்டும் என்ற செயல் வீரர்! அவரது செயல் முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பவற்றை நோக்கியே இருக்கும்! அவர் தமிழ் கலாச்சாரத்தை அவுஸ்ரேலியாவில் பாதுகாத்து வளர்ச்சிக்கு வித்திட்ட அத்திவாரம் என்பதால் அவுஸ்ரேலியா அரசாங்கம் தனது உயர் கௌரவத்தைத் தந்துள்ளது. அவர் சிந்தனை முழுக்க இலங்கையில் பாடசாலையில் கல்வியினை வளர்ச்சக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது! அவுஸ்ரெலியாவின் பெரிய கோயிலின் தர்மகர்த்தாப் பொறுப்பில் இருந்தவர். கோயில்கள் சமூகத்த்தின் முன்னேற்றத்திற்குரிய மையங்கள் என்ற உறுதியான கோட்பாடு உடையவர். உதவி என்று கேட்டால் எப்படிச் செய்யமுடியும் என்று மாத்திரம் யோசிப்பவர்! 
மாத்தளை இலங்கையின் ஆன்மீகத்திற்கு, மலையகத்தின் பாரம்பரியத்தின் மையம். இங்கு முத்துமாரி, ஏழுமுக காளி, பிள்ளையார், கதிரேசனார், சிந்தாக்கட்டி குமரன் என்று அருள் புரியும் தளம். 
நேற்று காலை அம்மனைத் தரிசிக்கும் போது மனதில் தோன்றியதை அவருடன் வந்திருந்த சிந்தக்கட்டி முருகன் கோயில் தர்மகர்த்தா பாலா அண்ணவிடம் சொல்ல சிந்தாக்கட்டியை சூழ இருக்கும் சமூகத்தின் பிள்ளைகளின் பாலர் கல்விக்கு டிஜிட்டல் கல்வித்தளத்தை உடனே செயலாக்கி விட்டார்கள். 
இது ஒரு வித்து - எமது மாத்தளை நகரில் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் கல்விப் புரட்சியைச் செய்யலாம்; இப்படியான சிறு சிறு யோசனைகளை சிறப்பாகச் செய்யலாம். 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளையில் மின்வழிக் கற்கையை சிறப்புடன் இரண்டு பாடசாலைகளில் நடாத்துகிறது. எமது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்புகளை உருவாக்க விரும்பும் நிதி வழங்கும் ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றியத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொழில் நிபுணத்துவமும் உடைய நிபுணர்களால் இந்தத் திட்டம் சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது. 
நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது; அனைவரும் வருக!

கற்றல் மற்றும் கற்பித்தல்

உளவியலில் locus of control என்ற கோட்பாடு உள்ளது. இதன் அர்த்தம் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் அனுபவங்களின் மீது கட்டுப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக மக்கள் எவ்வளவு உறுதியாக நம்புகிறார்கள் என்பதைக் குறிக்கும் உளவியல் கருத்து. இதன் படி தமக்கு நடக்கும் வாழ்க்கைச் சம்பவங்களுக்கு புறக்காரணிகள் தான் காரணம் என்றோ அல்லது தன்னுடைய சொந்த பலவீனம் தான் காரணம் என்றோ காரணப்படுத்துவதைக் குறிக்கும் உளவியல் கோட்பாடு இது.
உளவியல் ஆரோக்கியம் என்பது ஒரு பிரச்சனைக்குரிய தீர்வினை தான் வெளிக்காரணிகளில் செல்வாக்குச் செலுத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் எப்படியும் கொண்டு வருவேன் என்ற நிலை. 
யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு எத்தகைய வெளிக்காரணிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியும், எத்தகைய வெளிக்காரணிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றால் எனது அகக்காரணியை மேம்படுத்துவதன் மூலம் சூழ்நிலையை மாற்றலாம் என்று சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். 
கற்பித்தலில் மாணவர்களிடையே இந்த locus of control எப்படி இருக்கிறது என்ற புரிதல் அவசியம்! எடுத்ததிற்கெல்லாம் வெளியே குறி காணும் மனப்பாங்கு உடையவர்களை உத்வேகப்படுத்தி கற்றலில் ஈடுபடுத்துவது கடினம்.

பாடசாலையில் ஆற்றிய உரையின் தொகுப்பு

30-ஜூன்-2023 - வெள்ளிக்கிழமை - மாத்தளை இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்க செம்மை வடிவம். நிகழ்ச்சி கலந்துரையாடல் வடிவில் உற்சாகமாக அமைந்திருந்தது. பதிவு நான் கூறிய முக்கிய கருத்துக்களின் தொகுப்பாகும். 
நிகழ்ச்சி அழைப்பு மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale
ஏற்பாடு பாடசாலை நிர்வாகம்
******************************************
அன்பான மாணவச் செல்வங்களே, 
கற்றல் பற்றி கற்க இங்கு கூடியிருக்கிறோம்; 
கற்றலில் நீங்க பாவிக்கும் உறுப்புகள் என்ன? 
செவி - கண்
செவிகளால் கேட்டு கற்றலை ஆரம்பிக்கிறோம்; ஆசிரியர் வகுப்பில் பாடம் நடாத்தும் போது எமது செவிகள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்;
நாம் எப்போது முறையாகக் கேட்போம்; கவனிக்கும் போது! ஆகவே கவனமாக கேட்டால் மாத்திரமே கற்றல் நிகழும்! 
எனக்கு முன்னர் அதிபர் உரையாற்றினார். அதிபர் கூறிய விடயத்தை கவனமாக கேட்டவர்கள் கையை உயர்த்துங்கள்! பலரும் உயர்த்தினர்! 
யாருக்கு அதிபர் கூறிய விடயத்தைச் மீண்டும் சொல்ல முடியும்! 
உடனே ஒரு மாணவன் எழுந்து அதிபரின் உரையை சுருக்கமாக அழகாகக் கூறினார். 
நல்லது, இப்போது கவனம் எப்படி வரும்?
கவனம் விருப்பம் இருந்தால் வரும்! நாம் விருப்பமுடைய விஷயங்களைக் கவனிக்கிறோம் அல்லவா? இதை நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா? 
ஆகவே கற்றலின் முதல் படி:
ஆசிரியர் கூறுவதைக் கவனமாக கேட்டல்
கவனமாகக் கேட்க வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு பாடத்திலும் விருப்பத்தை உண்டு பண்ண வேண்டும். 
எப்படி ஒவ்வொரு பாடத்திலும் எமக்கு விருப்பத்தை உண்டுபண்ணுவது? 
அதற்கு குறித்த பாடத்தை கற்பதால் எனக்கு என்ன நன்மை என்பதை உணர்ந்துகொள்வதால் எமக்கு விருப்பம் உண்டாகும்;
தமிழ் மொழியைப் படித்தால் அதில் ஆயிரக்கணக்கான பழமையான கலாச்சாரம், பண்பாடு இவற்றை நாம் அறிந்துகொண்டு மனதிற்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் அறிவும் உண்டாகும். 
சிங்கள மொழியைப் படித்தால் எமது நாட்டில் எம்முடன் வாழும் சிங்கள சகோதரகளுடன் அன்னியோன்யமாக பழக முடியும்; இணைந்து வேலை செய்ய முடியும். 
ஆங்கிலம் படித்தால் உலகில் பெரும்பகுதிக்குச் சென்று உயர்கல்வி கற்க முடியும், தொழில் செய்ய முடியும். 
இதைப் போல் ஒவ்வொரு பாடமும் எம்மை குறித்த துறை சார்ந்த அறிவினைத் தந்து எம்மை இந்த உலகில் முழுமையுள்ளவர்களாக ஆக்கும். 
இப்படி காதால் கேட்டு மனதில் விருப்பத்துடன் கவனமாக கற்றதை மீட்க நாம் பயன் படுத்தும் இன்னுமொரு உறுப்பு கண்கள்! 
கண்களால் நாம் வாசித்து அறிவினைப் பெறுகிறோம்; வாசிப்பது நமது மனதில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு முறை இருக்கிறது; 
ஒரு பாடத்தை மூன்று முறை கட்டாயம் வாசிக்க வேண்டும்;
முதலாவது முறை வாசிக்கும் போது அந்தப் பாடம் என்ன சொல்ல வருகிறது என்பதை கவனித்து வாசிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புரிதலை நாம் பெற்றிருக்க வேண்டும்,
இரண்டாவது முறை நான் புரிந்துகொண்டது சரியா என்பதை அவதானித்து வாசிக்க வேண்டும். இரண்டாவது வாசிப்பில் நான் பாடத்தில் எதையும் விடவில்லை என்பதை உறுதிப்படுத்தி வாசிக்க வேண்டும். 
மூன்றாவது முறை ஞாபகத்தில் ஏற்றிக்கொள்ள வாசிக்க வேண்டும். 
இந்த மூன்று வாசிப்புகளும் முடிந்த பின்னர் குறித்த பாடத்திற்குரிய கேள்விகளைச் செய்து எவ்வளவு பாடத்தை என்னால் கிரக்கிக்க முடிந்திருக்கிறது என்பதை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
இப்போது கண்களையும் கற்பதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டோம். 
எத்தனை பேரிடம் கணனி இருக்கீறது? கணனியில் நீங்கள் தகுந்த தேடலைச் செய்வதன் மூலம் எதையும் சுயமாக கற்க முடியும். 
சரி நான் இன்று உங்களுடன் உரையாட வந்திருப்பது விஞ் ஞானக் கல்வியில் உங்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதற்காக? 
அறிவியல் அல்லது விஞ் ஞானம் என்பது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது
உயிரங்கிகளைப் பற்றிய படிப்பு உயிரியல் எனப்படும்
இரசாயனத்தைப் பற்றிய படிப்பு இரசாயனவியல் எனப்படும்
பௌதீக உலகின் சக்திகள், இயக்கம் பற்றிய படிப்பு பௌதீகவியல் எனப்படும். 
இந்த மூன்று துறைகளையும் ஒருங்கே சேர்த்து நாம் விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று சொல்லுவோம். 
இந்த மாணவர் குழுவில் ஆசிரியரை, பெற்றோரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடம்பிடிக்கும் மாணவர்கள் கையை உயர்த்துங்கள்? 
சிலர் கையை உயர்த்தாமல் நல்ல பிள்ளைகள் போல் இருக்கிறார்கள்; உண்மையில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பவர்களுக்கு விஞ் ஞான கல்வி இலகுவாக வரும். 
யாருக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம், ஊக்கம் கேள்வி இருக்கீறதோ அவர்களுக்கு அறிவிய உகந்த துறை. 
அறிவியல் கல்வி கற்றால் பலவிதமான தொழில்கள் இருக்கிறது; எல்லோருக்கும் தெரிந்த மருத்துவன், பொறியியலாளர் தொடங்கி நீங்கள் விரும்பி விளையாடும் கிரிக்கட், விளையாட்டுகளுக்கு கூட அறிவியல் நன் கு தெரிந்திருக்க வேண்டும். 
வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கினை நிர்ணயித்தல் அவசியம்;
கல்விக்கு இலக்கினை நிர்ணயித்துக்கொண்டு இந்த பாடசாலை வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

Saturday, July 01, 2023

விஞ்ஞானப் பாடத்திற்கு மாணவர்களை ஆர்வமுறச் செய்வது தொடர்பான கலந்துரையாடல்

இன்று நான் கற்ற பாடசாலை மாத்தளை இந்துக் கல்லூரியின் விஞ்ஞானப் பாடத்திற்கு மாணவர்களை ஆர்வமுறச் செய்வது தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான அதிபர், ஆசிரியர்களுடனான ஒரு சிறிய கலந்துரையாடல்.
Dr. Nishānthan Ganeshan நீண்ட காலத்திற்கு பிறகு தனது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் மாத்தளை வந்திருந்தார். மாத்தளை தமிழ் பட்டதாரி ஒன்றியத்தின் விஞ்ஞானப் பட்டதாரிகளுடைய பங்களிப்புடன் பாடசாலையில் கல்வி வளர்ச்சியில் எப்படி அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும் உதவமுடியும் என்பதைப் பற்றி உரையாடினார். 
அறிவியல் சிந்தனையுள்ள ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவது என்பது ஒரு தலைமுறை செயற்பாடு! மிகுந்த பொறுமையுடன் நீண்டு உழைக்க வேண்டிய பணி! மாத்தளையைப் பொறுத்த வரையில் விஞ் ஞானப் பட்டதாரிகள் ஆசிரியத் தொழிலிற்கு வருவது மிக மிகக்குறைவு! ஆசிரியப் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்! 
ஆசிரியர்களின் பணிச்சுமையை எப்படி டிஜிட்டல் கல்வி முறை மூலம், பட்டதாரி மாணவர்களின் மீட்டல் பயிற்சி வகுப்புகள் மூலம் உதவி செய்து குறைத்து வினைத்திறனான கற்றல் சூழலை உருவாக்கலாம் என்ற யோசனைகளும் உரையாடப்பட்டது. 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...