குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 02, 2019

மாணிக்கவாசகர் கூறிய சம்போகத்திலிருந்து சமாதிக்கு

இன்று பலரும் காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் வழியை ஓஷோ என்ற பகவான் ரஜனீஷ் தான் கூறினார் உலகிற்கு முதலில் கூறினார் என்று நினைக்கிறார்கள். 

அது உண்மையில்லை! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் இதைப் பற்றி கூறியுள்ளார். திருவாசகம், புணர்ச்சிப் பத்தில்....

அடிப்படையில் காமத்தை நோக்கிய கவர்ச்சி காமத்திற்கான கவர்ச்சி இல்லை என்கிறார் ரஜனீஷ்!

காமத்தை அனுபவிப்பதில் ஏற்படும் சமாதி அனுபவத்தை உணர்ந்த மனம் அந்த இன்பத்திற்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு இல்லாமல் அதை நோக்கி ஓடும் ஓட்டமே சாதாரண காமற்கான ஏக்கம்! 

காமத்தின் போது நான் என்ற ஆணவமற்ற நிலையும், காலமில்லா நிலையும் தோன்றுவதால் பெறும் இன்பமே மனிதனை காமத்தினை நோக்கி ஆழத்தில் ஈர்க்கிறது.

இந்த ஆணவமற்ற நிலையையும், காலமற்ற நிலையை பேறும் வழிகள் தான் தியானமும், சமாதியும், யோகமும்!

இந்த நிலையை பைரவம் என்ற விழிப்பு நிலையாக விஞ்ஞான பைரவ தந்திரம் கூறும், 

இதை மாணக்கவாசகர்,

சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை

வாளா தொழும்புகந்து

கடைபட் டேனை ஆண்டு கொண்ட

கருணா லயனைக் கருமால் பிரமன்

தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்

தன்னைத் தந்த என்னா ரமுதைப்

புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்

பொல்லா மணியைப் புணர்ந்தே 

சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை - ஒளிவிடுகின்ற பொன்மலையைப் போன்றவனும், துளைக்கப்படாத முத்தைப் போன்றவனும், என்ற வரிகள் ஒருவன் தனது தியானத்தின் உச்சத்தில் கிடைக்கக் கூடிய சமாதி நிலை அனுபவங்கள்! 

கருணா லயனைக் கருமால் பிரமன்

தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் - கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் செருக்கில் அகப்பட்டு இன்னும் அடைய முடியாதவன் என்கிறார், ஆணவமழிந்த நிலையில் மட்டும் அறியப்படக் கூடியவன், காமத்தின் உச்சத்தில் ஆணவமழிந்த நிலை உண்டாகிறது. 

அரிய அமுதம் போன்றவனும், செதுக்கப்படாத மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவனை எப்போது புணர்ந்தே என்கிறார். 

மாணிக்க வாசகரின் பாடல்களை ஆய்வு செய்வோர் அவர் இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் பாவித்து படித்துள்ளார் என்று கூறுவார்கள். 

ஆனால் அவர் சாதாரண மனிதன் புணர்ச்சி என்ற காமத்தில் அடையும் சமாதி நிலையைப் பற்றியும் ஆணவமழிந்த நிலையிலும் சாதாரண காமத்திற்கு அப்பாலுள்ள சிவத்தை அடையவே புணர்ச்சி தேவைப்படுகிறது என்பதைக் குறிக்கிறார்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...