குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 31, 2022

வாழ்க்கையும் சூறாவளியும்

வாழ்க்கையில் மனதின் இயக்கம் கடல் அலைகள் போன்றவை; இந்த அலைகள் கரையை அடைவதை நோக்கமாகக் கொண்டவை; ஒவ்வொரு அலையாக எழுந்து கரையை அடைய முயற்சி செய்து வெற்றி பெறுகிறது. இப்படி கரையாகிய இலக்கினை நிர்ணயித்த அலைகள் மகிழ்வாகவும், ஆட்டம் பாட்டத்துடனும் கரைகளைத் தழுவி இன்புறுகின்றன. 

இப்படி கரையை - இலக்கினை நோக்கிய பயணத்தில் ஆகாயத்தின் வெப்ப அழுத்தம் உருவாக்கும் சுழலில் அலைகள் கரையை நோக்கிச் செல்லாமல் கடலினுள் செங்குத்தாக சுழியாக பயணிக்க கடலும் கொந்தளிக்க, வானமும் தத்தளிக்க சுழியும், புயலும் உருவாகிறது. 

சிலர் ஆனந்தமாக திருமணம் செய்து பிள்ளைகள், பதவி, தொழில், மகிழ்ச்சி என்று மகிழ்ச்சி அலைகளை தம் வாழ்க்கையில் கொண்டாடத்தொடங்கும் போது உழைப்பின்மை, தொழில் இன்மை, வஞ்சகம், சூது, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழத்தல், இதனால் விரக்தி, அசூயை, பொறாமை, எரிச்சல், பழிவாங்கல் போன்ற கடல் சுழி, புயல் காரணிகளை தமது வாழ்க்கைக்குள் ஆகர்ஷித்து தமது வாழ்க்கையை புயல் நிறைந்த வாழ்க்கையாக தமது மனதினால் ஆக்கிக்கொள்கின்றனர். 

உண்மையில் புயலும், சூறாவளியும் நீண்ட நேரம் இருக்க முடியாதவை; அதேவேளை அவற்றில் மாட்டிக்கொண்டால் தப்பவும் முடியாதவை. இதுபோல் எமது வாழ்க்கையில் பொறாமை, அசூயை, பழிவாங்கள் போன்ற புயல்கள் நடைபெறும்போது, சூறாவளியின்போது எப்படி அமைதியாக பாதுகாப்பான இடத்தில் மறைந்திருந்துவிட்டு பின்னர் வெளிவருகிறோமோ அதுபோல் அமைதியாக இறைவனிடம் சரணடைந்து இருப்பது மிக உயர்ந்த பக்குவம்!

பலர் தமது வாழ்க்கையை கரையை நோக்கிச் செலுத்தாமல் சுழியையும், சூறாவளியையும் உருவாக்குவதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். இது ஒரு அறியாமை!


தலைப்பு இல்லை

ஒவ்வொரு எண்ணம் உருவாகும்போதும் அதைப்பற்றி இன்னுமொரு அபிப்பிராயத்தினை உருவாக்கி அது நல்லதா? கெட்டதா? என்று ஆராயாமல், இந்த எண்ணம் எனது கடந்த காலத்து அனுபவமா? அல்லது எதிர்காலத்திற்கான திட்டமா? அல்லது அனைத்தையும் சேர்த்த எனது கற்பனையா? என்று எம்மை நாமே கேட்கப்பழக வேண்டும். 

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்


தலைப்பு இல்லை

இன்று விநாயகர் சதுர்த்தி.

எளிதாக deal போடக்கூடியவர் கணபதி! ஔவையார் இப்படிச் சொல்லுகிறார்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா

மூலாதாரத்தின் அதிபதியாக கவித்துவம் தரக்கூடியவர். கணபதி தர்ப்பணத்தின் மூலம் திருப்திப்படுத்தக் கூடியவர்; தனியே சதுராவர்த்தி தர்ப்பணம் மூலம் எல்லாவித சித்திகளையும் தரக்கூடியவர். 

எல்லாவித பௌதீக இன்பங்களையும் அடையத் தடையாக இருக்கும் அனைத்து விக்கினங்களையும் நீக்கி ஸர்வ தத்துவங்களையும் வசப்படுத்தி யோக சித்தி தரக்கூடியவர். 

கணபதியின் அருளால் ஸர்வ தத்துவங்களை வசப்படுத்தாமல் பராஸக்தியின் அருளைப் பெறமுடியாது. ஸக்தி பெறுவதற்கு முதல்படி கணபதியின் அருளைப் பெறுவதே! 

தினசரி அதிகாலையில் ஸ்ரீ மகா கணபதி உபாசனை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். 

இம்மாத இதழில் சில குறிப்புகள் 

https://www.tamizhipadhippagam.com/-2022.../p3419596/


Monday, August 29, 2022

தலைப்பு இல்லை

ஒரு பைரவ உபாசகர் தனது மாணவர்களுக்கு தீட்சையின் பின்னர் வழங்குவதற்கு செய்வித்த மூர்த்தங்களில் இரண்டு எஞ்சி, பத்து வருடங்களுக்கு மேல் எனக்காக காத்திருந்து கடந்த அமாவாசை அன்று கைகளில் வந்து சேர்ந்தார்! 

பைரவத்துவம் என்றால் தூய்மையான விழிப்புணர்வு என்று அர்த்தம்! இந்த பைரவத்துவத்தை அடையும் வழியை திருமூலர் நான்காம் தந்திரத்தில் விளக்குகிறார். மெய்யது செம்மை விளங்கு வயிரவன் என்கிறார் திருமூலர்; உடலிற்குள் செம்மையான விழிப்புணர்வாக விளங்குபவர் என்று அர்த்தம். 

பைரவர் காக்கும் கடவுள் என்பதன் அர்த்தம் ஒருவன் தனது விழிப்புணர்வினை எப்போதும் தன்னில் நிலை நிறுத்தி நிற்கும் அவனை எந்த தீமையும் தாக்க முடியாது என்பதாகும். 

எங்கும் இலங்கொளியான அகத்தியரின் சிஷ்ய குலத்தின் விழிப்புணர்வினைத் தரும் அகஸ்திய குல ரக்ஷ பைரவர் இவர்!


Thursday, August 25, 2022

தலைப்பு இல்லை

இன்று மாத்தளை க/கலைமகள் மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவர் தின விழாவிற்கு விஷேட அதிதியாக அழைத்திருந்தார்கள். 

தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்கு நாம் வழிகாட்டியாக, முன்மாதிரியாக இருத்தல் என்பதும் பாடசாலையில் அந்தப் பண்பு ஆரம்பமாகி எமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தலைமைப் பண்பினை ஏற்கவேண்டி வரும் என்பதை இளம் மாணவ உள்ளங்களில் பதிய வைக்க முயற்சித்தேன்.

மேலும் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் நோக்கம், அவர்களுடைய பணி மாத்தளையின் கல்வி வளர்ச்சியில் என்ன பணி செய்ய முடியும் என்பதையும் ஒரு அறிமுகம் செய்து வைத்தேன். 

பாடசாலையின் அதிபர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகச்சிறந்த ஆளுமை என்பதை நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பில் இருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்! மாத்தளை கல்விச் சமூகம் அவரை இனங்கண்டு கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கல்வித்திணைக்கள அதிகாரி திரு. ரில்வான் பிரதம அதிதியாகவும், கலைமகள் மகா வித்தியாலத்தின் பழைய மாணவரும் மாத்தளை பொலிஸ் நிலைய உப பரிசோதகருமான திரு ஆனந்த ராஜா ஆகியோர், திரு, ஜெயப்பிரகாஷ், மற்றும் அனேக மாத்தளைப் பாடசாலை உப அதிபர்கள், ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.


Tuesday, August 23, 2022

சுதந்திரனாய் இரு

நான் சிறுவயது முதல் எனக்கு பிடிக்காத எதையும் செய்ததில்லை! செய்யும் செயலை சிரத்தையுடன் செய்திருக்கிறேன்! பாடங்களை படிக்க அதிக நேரம் செலவழிக்காமல் பாடசாலை - பல்கலைக்கழகக் காலங்களில் பெரும்பகுதியை எனது யோக சாதனைக்கும், குருவுடன் வாழ்வதற்கும் செலவிட்டிருக்கிறேன்! இதனால் எனது உறவினர்களால் வாழ்க்கையில் தோற்றுவிடுவேன் என்று பயமுறுத்தப்பட்டிருக்கிறேன்; இப்படியான பயமுறுத்தலுக்கு எனக்குள் என்றும் பணிந்ததில்லை, அத்தகையவர்களுக்கு என்றும் சவால் விட்டதும் இல்லை! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அங்கீகாரம் வேண்டும் என்ற மனமும் இல்லாமல் செயல் புரியும் மனதுடன் எனக்குப் பிடித்ததை செய்திருக்கிறேன். எனது வாழ்வில் எதையும் இழந்ததில்லை! இதன் சூத்திரம் என்னவென்று எனது குருநாதர் கூறியதை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

________________________________________

எல்லோரும் சுதந்திரமாக இருப்பதற்கு, எல்லையற்ற இன்பத்தினை, செல்வத்தை அடைவதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பு வரும்போது அவற்றை அவர்கள் தழுவிக்கொள்வதில்லை. அவர்களுடைய பழைய ஞாபகங்கள், சமுக அங்கீகாரம், மற்றவர்கள் எம்மை மறுத்துவிடுவார்களோ என்ற பயம் அவர்களை ஊனர்களாக்குகிறது. 

அவர்கள் தங்களுடைய சிந்தனை முறையினாலேயே கைகளும் கால்களும் செயற்படமுடியாமல் கட்டப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமான எண்ணத்தையும், சுதந்திரத்தையும் எழவிடாமல் புதைக்கிறார்கள். அவர்கள் தம்மை நிபந்தனையற்ற அன்பினையும் ஆனந்தினையும் தமக்குள் அனுமதிப்பதில்லை. பழையமாதிரி மீண்டும் வாழ்க்கையை துன்பத்தில் செல்வதையே தொடர்கிறார்கள். 

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர்.

(Dr. N. Prahaladha Sastri - former scientist, TIFR)


Monday, August 22, 2022

தலைப்பு இல்லை

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமிர்தியா சென் தனது நூலில் கூறும் முக்கிய கருத்து அபிவிருத்தி என்பது நிதியுதவி கொடுப்பதோ, ஏழைகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருப்பதோ அபிவிருத்தி அல்ல, அவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தமக்குரிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்குரிய அறிவினைக் கொடுத்து அவை பயன்படக்கூடிய தளத்தினை உருவாக்குதல் அவசியம் என்கிறார். அந்த வகையில் Yarl IT Hub மிக அருமையான திட்டம். 

நாம் இந்த சிந்தனையை Matale IT Hub, Kandy IT Hub, Nuwareliya IT Hub என்று மலையகத்திற்கு கொண்டு வர வேண்டும். 

இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக யாழ்ப்பாணம் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு IT hub; இதற்கு இத்தகைய நிகழ்வுகள்தான் காரணம் என்றால் மிகையில்லை! 

இலங்கையின் மிகப்பெரிய ஒரு IT கம்பனியின் மனித வள இயக்குனர் கூறிய செய்தி - இலங்கை தனது மனித வளத்துறையை high end tech இற்கு தயார்ப்படுத்ததால் பல பில்லியன் டொலர் வருமானத்தை இழக்கிறது என்று! high end IT திட்டங்கள் செய்யக்கூடிய திறனுடைய இளைஞர்களை உருவாக்குவது மிக முக்கியமான பணி! 

மலையகத்தில் வெகுவிரைவில் இப்படியான நிகழ்வுகளை ஆரம்பிக்க மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale முயற்சி செய்யலாம்.


Sunday, August 21, 2022

தலைப்பு இல்லை

திராவிட ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கும், புதிதாக கிளம்பியிருக்கும் யாழ்ப்பாண ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கும் ஒரு நற்செய்தி! 

ஹிந்தி நீங்கள் நினைப்பது போல் ஒரு ஆரியமொழியில்லையாம்! பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு வடிவம் என்கிறது Urdu Hindi: An Artificial Divide (Politics of Language) என்ற நூல். 

ஹிந்தியினது ஆரம்ப வேர் Austric-Munda and Dravidian குடும்ப மொழியாம்! பின்னர் சமஸ்க்ருதம், அரபு, பேர்சிய மொழி கலந்து தற்போதைய உருவம் பெற்றது என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். 

ஒரு மொழியைப் பரப்புவதும், பரவுவதை எதிர்ப்பதும் பரப்ப நினைக்கும் அதிகாரம் தனது ஆளுமையைப் புகுத்தவும், பெறும் சமூகம் மாற்றுச் சமூக அதிகாரம் தமது சமூகக் குழுக்களுக்குள் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் என்ற பயம் சூழ்ந்த அரசியல் காரணத்திற்காகவே! 

தமிழ் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக பல நூறு மொழிகளின் தாக்கத்திலும் தனது தனித்தன்மையை இழக்காத ஒரு இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அன்னியமொழி வந்தால் அதை எதிர்க்காமல் தற்பவம் அல்லது தற்சமம் ஆக்கி தனக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை தமிழிற்கு உண்டு. இது பெரும் வீரனுக்கு இருக்கும் ஆற்றல்; எந்த எதிரி வந்தாலும் அவர்களிடம் தோற்காமல் தனக்கு வேலை செய்ய வைக்கும் ஆற்றல் தமிழிற்கு உண்டு. 

இந்த ஆற்றல் எப்படி வந்தது என்றால் மொழியை விடாது கற்கும் பண்டிதர் மரபு சமூகத்தில் இருந்ததால்; நன்னூலும், தொல்காப்பியமும், தண்டியலங்காரமும், யாப்பருங்கலக்காரிகையும் கற்கும் மரபு இருந்ததால்! 

இப்படி தன்மொழி கற்றுத் தேர்ந்த வீரன் வேறு மொழியிடம் மண்டியிடாத அதேவேளை அந்த மொழியை தனது வலிமையாக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான்.

ஆகவே எந்த ஆதிக்கத்தைப் பார்த்தும் வெருண்டு ஓடாமல், தன்மொழியில் புலமையுடன் இருக்கும்போது மற்ற மொழிகளையும் உள்வாங்கி எமது சமூகத்தின் வலிமையைக் கூட்ட வேண்டும்.

ஹிந்தியை எதிர்க்கும் தமிழ் பெருமகன்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழை ஒரு உலக மொழியாக்க போராடுவார்கள் என்று நினைக்கிறேன்! 

அவுஸ்ரேலியாவிலும், ஜேர்மனியிலும், பிரான்ஸிலும் விரைவில் உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நன்னூல், தொல்காப்பியம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை கற்று உலக அரங்கில் தமிழ் மொழி சிறந்து விளங்கப் பாடுபடவேண்டும். 

அதிக வாசிப்பும், தேடலும், சிந்தனையும், ஆய்வும், தெளிவும் இல்லாமல் பேஸ்புக்கில் மக்களை உசுப்பேத்த எழுதும் நண்பர்கள் இப்படியான நூல்களைப் ஆழமாகப் படித்து சமூகத்திற்கு தெளிவுதரும் சிந்தனைகளை தமிழில் எழுத வேண்டும்.

இப்படிச் செய்யும்போது உலக அரங்கில் தமிழர்கள் பெரும் வலிமையுடனும், பெருமையுடனும் இருப்போம்.


Saturday, August 20, 2022

தலைப்பு இல்லை

இன்றைய நாள் பௌத்த - சிங்கள மொழி, கலாச்சாரம் பற்றிய வாசிப்புடனும், இனிய இரவு விருந்துடன் முடிவுற்றது! 

நீண்ட காலத்திற்கு பிறகு கண்டி மாநகரிற்கு ஒரு சிறிய சுற்றுலா! 

இன்றைய வாசிப்பில் தெரிந்துகொண்டது சிங்களத்தில் மாத்திரம் 07 வட்டார வழக்கு இருக்கிறது என்று

1) மேற்கு (கொழும்பு) சிங்களம் 

2) ருஹுணு சிங்களம் 

3) கண்டிச் சிங்களம்

4) ஹதர (நாற்) கோரளை சிங்களம்

5) திகாமடுல்ல சிங்களம் 

6) ரஜரட்ட சிங்களம் 

7) ஹத (ஏழு) கோரளைச் சிங்களம்

சிங்களத்தினை பாதித்த மொழிகளாக இந்த நூலாசிரியர் தமிழ், பாலி, சமஸ்க்ருதம், மஹதி, அர்த்த மஹதி, சௌராஷ்ரம், போர்த்துக்கீசு இவற்றுடன் இறுதியாக ஆங்கிலம் என்று குறிப்பிடுகிறார். சிங்கள மொழிக் கலாச்சாரத்தை படிக்க நல்ல நூல் "Encyclopedia of Sinhala Language and culture" by J.B. Disanayaka


யோகசாதனையில் மனதின் பரிணாம உயர்வு

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் மனோ நாசம் - மனதை இல்லாமல் ஆக்குதல் என்ற கோட்பாடு இல்லை; மனதை இல்லாமலாக்கினால் எப்படி மனமுடைய மற்றைய மனிதர்களுக்கு உதவுவது. ஆகவே பதஞ்சலி கூறும் சித்த விருத்தி நிரோதகம் என்ற நிலை மூலம் உயர்ந்த மனதை (higher mind) அடைந்த பின்னர் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். இப்படி உயர்ந்த மனதைப் பெறுவதினால் சாதகன் இன்னும் பலருக்கு ஒளி நிலையைத் தரமுடியும். 

அறியாமை, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, பயம், இந்த ஐந்தின் அடிப்படையில் மாத்திரம் சிந்தனையாக சித்த விருத்திகளுடன் இருக்கும் நிலை மனம் (mind) அல்லது தாழ் மனம் (lower mind) எனப்படுகிறது. இதுவே எம் எல்லோரது நிலையும். இந்த ஐந்தையும் பஞ்சகிலேசங்கள் என்கிறார் பதஞ்சலி. 

இந்த நிலையில் இருந்து விருத்திகளடங்கிய ஏகாக்ர சித்தம் பெறுதல் உயர்ந்த மனதைப் (higher mind) பெறுதல் எனப்படும். இதைப் பதஞ்சலி தாரணா சித்தி என்கிறார். இப்படி தாரணா சித்தி அடைந்தவர்கள் மாத்திரமே நுண்மையான விஷயங்களைப் புரியவேண்டும்; பௌதீக அறிவியலில் புதிய அறிவினைக் கண்டுபிடிப்பவர்கள் இத்தகைய தாரணாஸக்தி உடையவர்கள்; யோகசூத்திரம், புராணங்கள், தந்திரங்கள் இவற்றைப் புரிந்துகொள்ள ஏகாக்ர சித்தம் தேவை; சர்வதர்மோத்ர ஆகமத்தில் ஞானபாதத்தைப் புரிந்துகொள்ள யோகத்தால் பெறப்பட்ட ஏகாக்ர சித்தம் தேவை என்பது முதல் நிபந்தனையாக வைக்கப்படுகிறது. 

உயர்ந்த மனதைப் பெற்றால் அதை புத்தியைத் தூண்டும் பேரொளியினுடன் சேர்த்தால் ஒளிமிகுந்த மனதைப் (illumined mind) பெறலாம். இந்த ஒளிமிகுந்த மனம் வாய்த்தால் எந்த ஒருவிடயத்திலும் தெளிவு (clarity) பிறக்கும்.

ஒளிமிகுந்த மனம் உண்மையான தெய்வ ஞானத்தினை அடையத்தொடங்கும்; இதன் பிறகு தெய்வ ஞானமான மனமாக (intuitive mind) மாறும் இந்த மனம் பிரபஞ்சத்தின் சூஷ்ம தன்மைகளை விளக்கும். இந்த மனதை அடையாமல் ஞானபாதக் கருத்துக்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இன்று சித்தாந்தம், வேதாந்தம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் ஆற்றல் பெற இந்த தெய்வ ஞான மனம் அவசியம். 

தெய்வ ஞான மனம் கிடைத்தால் அது தெய்வ சக்தியுள்ள மனமாக (over mind) மாறத்தொடங்கும். இப்படி மாறிய மனம் தெய்வ ஆற்றல்களை ஈர்த்து செயற்படும் தெய்வ ஆற்றலுள்ள மனமாக செயற்படும். 

இதன் பிறகு இந்த தெய்வ சக்தியுள்ள மனம் முழுமையான ஸத்திய ஒளி, ஆனந்தம், சைதன்யம் நிறைந்த மனமாக சத்திய மனமாக (super mind) மாறினால் பரிப்பூரண தெய்வ நிலை பெறுகிறான் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.


Friday, August 19, 2022

தலைப்பு இல்லை

புராணங்கள் என்பவை ஆழ்மனதிற்கு உண்மையைச் சொல்லும் உத்திகள்! 

பாகவத புராணம் ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமையைச் சொல்லும் புராணம். இதில் வரும் கிருஷ்ணனின் ராஸ லீலை என்பது பற்றி எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறிய தத்துவ விளக்கம் வருமாறு;

கிருஷ்ணன் 16,000 கோபியருடன் ராஸலீலை விளையாடினான் என்பதை ஒரு தர்க்கத்திற்கு உட்படுத்துவோம். ஒரு பெண்ணுடன் ஒரு இரவு என்றால் 16,000/365= ~45 வருடங்கள் தேவைப்படும். கிருஷ்ணன் ராஸ லீலை 15 வயதில் தொடங்கினான் என்று எடுத்துக்கொண்டால் அறுபது வயதில் பூர்த்தி செய்தான் என்று கணக்கு வரும். ஆனால் சிறுவனாக இருக்கும் போதே ராஸ லீலை முடிந்துவிட்டதாக பாகவதம் சொல்லுகிறது. 

இதன் விளக்கம் என்ன?

கழுத்தில் 16 இதழ் தாமரை (விசுத்தி சக்கரம்) இருக்கிறது; தலையுச்சியில் சஹஸ்ராரத்தில் 1000 இதழ் தாமரை இருக்கிறது. விசுத்தியில் உள்ள ஒவ்வொரு இதழும் சஹஸ்ராரத்திலுள்ள ஒவ்வொரு இதழுடன் பிராண ஓட்டத்தினை ஏற்படுத்தினால் மொத்தமாக 16000 நாடிகள் (பிராண ஓட்டப் பாதைகள்) கிடைக்கும். இவை எம்மில் உருவாகக்கூடிய சித்த விருத்திகளின் எண்ணிக்கை. எமக்கு எழும் சித்த விருத்தியிலேயே மனம் இன்பமுறுகிறது. கிருஷ்ணன் இந்த பதினாறாயிரம் விருத்திகளை இன்புற்றார் என்கிறோம். கோபியர் எங்கிருந்து வருகிறார்கள்? பால் உற்பத்தியாகும் இடத்திலிருந்து; உடலில் இது மார்பினை - அனாகதச் சக்கரத்தினைக் குறிக்கிறது. இது மகாலஷ்மியின் ஸ்தானம். மகாலக்ஷ்மியின் ஆற்றல் மார்பில் இருப்பதால் அங்கிருந்து சுரக்கும் தாயின் பால் உடலிற்கு ஆற்றலையும் நோயற்ற தன்மையையும் தருகிறது. அதுபோல் அனாகதச் சக்கரத்துடன் தொடர்புபட்டு (கோபியரிடமிருந்து) விசுத்திக்கூடாக வெளிப்படும் சித்த விருத்திகள் சஹஸ்ராரத்தில் ஒடுங்குவதால் கிருஷ்ணன் பரமானந்த நிலையில் இருக்கிறான் என்பதே ராஸலீலை! 

இந்த நடனம் ஒரு வட்டமாக - சக்கரமாக நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. இதை ஸ்ரீ - மகாலக்ஷ்மியினுடைய சக்கரம் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சக்கரத்தில் 16000 கோபியருக்கு 16000 கிருஷ்ணன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் விளக்கம் என்ன? கிருஷ்ணன் தன்னை க்ளோனிங்க் செய்துகொண்டானா?

கிருஷ்ணா என்பதும் காளி என்பதும் ஒரே பொருளைத் தரும் சொல்; கருமையான அறியப்படாத ஆற்றல் என்பது அதன் அர்த்தம். காளி, கிருஷ்ணன் இரு ஆற்றல்களுமே காலத்தின் ஆற்றல், மௌனமாக சூனியத்தினூடாகச் செல்லும் நதியைப் போன்ற ஆற்றல்கள். சக்கர நடனம் என்பது ஒரு எண்ணம் உருவாகி மற்ற எண்ணம் உருவாகுவதற்கு இடையில் ஒரு சூன்யம் அல்லது மௌனம் அல்லது இடைவெளி இருக்கும். அதேபோல் இரண்டு மௌனங்களுக்கு இடையில் எண்ணம் இருக்கும். இந்த நிலையினை ஒருவன் அனுபவிக்கும் தன்மையே கிருஷ்ணனின் ராஸ லீலை! 

இப்படி அவதானிக்கும்போது எண்ணம் அற்ற சூன்யம் ஆனால் அதுவே கருமை நிறக்கண்ணன்.


தலைப்பு இல்லை

ஸ்ரீ ராதையைத் துதிக்காதவன் கிருஷ்ணரை வழிபட அருகதையற்றவன். ஸ்ரீ ராதை கிருஷ்ணனின் பிராண சக்தி! 

ஸ்ரீ தேவிபாகவதம்    

அறியாமையில் துன்பத்தில் உழலும் ஜீவனை பக்குவப்படுத்தி அவித்தை - இந்த ப்ரக்ருதி உலகத்தின் மீதான பற்றினை - தனது ஆற்றல்களால் நீக்கி கோலோகப் ப்ருந்தாவனத்தில் அந்த ராதா ராணியின் பாதங்களை அடைவிக்கும் பொறுப்பை ஸ்ரீ க்ருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறான். 

தேவியானவள் தனது ஹ்லாதினி சக்தியால் ஒற்றைப் பார்வையால் ஜீவனின் மனதை தெய்வீக உணர்வு பெறச் செய்விக்கிறாள்!


மதன மோகன மோகினி லீலை

இன்று கிருஷ்ண ஜெயந்தி - ராதையை வழிபட்டால் கிருஷ்ணன் அருள் முழுமையாகக் கிடைக்குமாம். 

கிருஷ்ணன் வழிபடுவதால் அவள் ராதையானாள் என்கிறது ராதிகோபநிஷத்.

ஸ்ரீ ராதை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் பிரக்ருதிக்கு மேம்பட்ட ஸக்தியின் ஸ்வரூபம். 

ஸ்ரீ ராதையின் மதன மோகன மோகினி லீலை ராதை என்ன சித்தியைத் தருவாள் என்பதைச் சொல்லும்!

மன்மதனுடைய தொழில் பிரக்ருதிமயமான புலனின்பங்களின் இச்சையைத் தூண்டுதல். மும்மூர்த்திகளும் மகரிஷிகளும் ஸ்ரீ கிருஷ்ணனை காமுகனாக்க மன்மதனைப் பணித்தனர். இந்த நோக்கத்துடன் மன்மதன் கிருஷ்ணனை நெருங்கினான். இதை அறிந்த கிருஷ்ணன் இன்று இரவு இராச லீலை நடனம் இருக்கிறது; அங்கு வந்து உனது ஆற்றலைக் காட்டி என்னில் காம எண்ணத்தை விழிப்பித்தால் நான் உனது அடிமையாகிறேன் என்றான் கிருஷ்ணன். மன்மதன் 16000 பெண்களுக்கு மத்தியில் கிருஷ்ணனை வீழ்த்துவது இலகு என்று எண்ணிக்கொண்டான்.

எந்தத் துன்பம் வந்தாலும் தன் இதயத்தில் இருந்து அன்பைப் பொழியும் ஸ்ரீ ராதையை ஸ்ரீ கிருஷ்ணன் தியானித்தான். அன்னை தோன்ற, ராதையே உனது ஹ்லாதினி சக்தியால் ஒருவன் பூரண சத்துவ குணம் நிறைந்து புலன்கள் அடங்கிய ஜிதேந்திரியனாகவும், காம எண்ணம் அற்ற காமரஹிதனாகவும் மாறுகிறான். மன்மதனிடம் இந்த சவாலில் வெற்றிபெற உதவி செய்வாயாக என்று பணிந்தான். 

மஹாராஸ லீலை தொடங்கியது; மன்மதன் தனது அம்புகளை எய்து அங்கிருந்த ஒவ்வொருவரிலும் பிரக்ருதிமயமான உடலின் காம சக்தியைத் தூண்டினான்! இதை ஸ்ரீ ராதையின் ஹ்லாதினி ஸக்தி உயர்ந்த மகாபாவம் எனும் உடல் கடந்த ஸமாதி நிலைக்குச் செலுத்தி அனைவரையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு சென்றாள். 

ஸ்ரீ ராதை ஒவ்வொரு சாதகரிலும் தனது ஹ்லாதினி சக்தி மூலம் சத்துவகுணத்தை நிறைத்து தியான ஸமாதி நிலைகளைத் துரிதமாகத் தரும் அன்னையின் ஆற்றல்!


Thursday, August 18, 2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை - 05

த்யுமசேனன் - தியுமன் என்றால் ஒளிமிகுந்தவன் என்றும் சேனன் என்றால் சேனைகளை உடையவன் என்றும் அர்த்தம், ஸத்யவானின் தந்தை; கண்களை இழந்த அந்தகன் என்பதால் இராஜ்யத்தை விட்டு விரட்டப்பட்டவனாகிறான். காட்டில் இருளில் வாழ்கிறான். 

ஸ்ரீ அரவிந்தர் த்யுமசேனனை தெய்வீக மனதின் குறியீடாக்குகிறார். ஒளி மிகுந்த தெய்வீக மனம் புலன் வழி சென்று குருடாகியதால் தனது தெய்வத்தன்மையை இழக்கும் நிலையைக் குறிக்கும் குறியீடு. 

உண்மையில் மனம் என்பது ஒரு தெய்வீகத் தன்மையுடைய ஒளியாற்றல் நிறைந்த ஒரு ஆற்றல்; ஆனால் அது உடலிற்குள் வந்து புலன்களில் கலக்கும்போது இந்த உடலை இழப்பதால் அடிக்கடி தனது தெய்வத்தன்மையை இழந்து குருட்டுத் தன்மையை அடைகிறது. மனம் என்பது அதன் உண்மை நிலையில் ஒளிமிகுந்த தெய்வத்தன்மை உடையது; ஆனால் புலன்வழி நடக்கும்போது குருடாகிறது. 

இதுவே த்யுமசேனன் என்ற ஸத்யவானின் தந்தை என்ற பாத்திரத்தின் குறியீட்டு விளக்கம். 

ஸத்யவானும், த்யுமசேனனும் ஒரு யோக ஸாதகனுடைய இரண்டு பிரச்சனைகள். 

ஸாதகன் தனது உடல் வலிமையற்று அற்ப ஆயுளைப் பெற்றிருப்பதால் யோகத்தில் சித்தி பெறமுடியாமல் போகும்! இது ஸத்யவானின் நிலையால் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். 

இரண்டாவது சாதகனின் மனம் புலன்கள் வழி சென்று குருடாவதால் தனது தெய்வீக ஆற்றலை இழந்து பராஸக்தியை நேரடியாக அழைக்க முடியாத நிலை! 

உடலும் பலமில்லை, மனமும் தனது தெய்வ நிலையை இழந்து விட்டது; எப்படி யோக சாதனை செய்வது என்றால் அதற்குரிய உதாரணம் அஸ்வபதி - இவர் புலன்களை அடக்கியவர், பிராணனாகிய குதிரையை வசப்படுத்தி ஆள்பவர்; நீண்ட தபஸினை செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். 

ஸ்ரீ அரவிந்தர் இந்த யோக காவியத்தில் சொல்லும் செய்தி அடிப்படையில் ஒரு யோக சாதகன் ஸத்யவான், த்யுமசேனன் போன்ற வலிமையற்ற நிலையில் இருக்கிறான். அவன் தனது தபஸினூடாக அஸ்வபதியாக மாறினால் மாத்திரமே பராஸக்தியைத் தரிசிக்க முடியும் என்பது! அவள் அஸ்வபதியின் - பிராணனூடாக - மகளாக வந்து உடலினது அற்ப ஆயுளை நீக்கி யோகம் புரியும் வல்லமையும், மனதை மீண்டும் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஒளியை நோக்கிச் செல்லும் வல்லமையும் தருவாள் என்று புரிய வைக்கிறார். 

ஸ்ரீ ஸக்தி சுமனன்

18-ஆகஸ்ட்-2022

மாத்தளை


ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை - 05

 த்யுமசேனன் - தியுமன் என்றால் ஒளிமிகுந்தவன் என்றும் சேனன் என்றால் சேனைகளை உடையவன் என்றும் அர்த்தம், ஸத்யவானின் தந்தை; கண்களை இழந்த அந்தகன் என்பதால் இராஜ்யத்தை விட்டு விரட்டப்பட்டவனாகிறான். காட்டில் இருளில் வாழ்கிறான். 


ஸ்ரீ அரவிந்தர் த்யுமசேனனை தெய்வீக மனதின் குறியீடாக்குகிறார். ஒளி மிகுந்த தெய்வீக மனம் புலன் வழி சென்று குருடாகியதால் தனது தெய்வத்தன்மையை இழக்கும் நிலையைக் குறிக்கும் குறியீடு. 


உண்மையில் மனம் என்பது ஒரு தெய்வீகத் தன்மையுடைய ஒளியாற்றல் நிறைந்த ஒரு ஆற்றல்; ஆனால் அது உடலிற்குள் வந்து புலன்களில் கலக்கும் போது இந்த உடலை இழப்பதால் அடிக்கடி தனது தெய்வத்தன்மையை இழந்து குருட்டுத் தன்மையை அடைகிறது. மனம் என்பது அதன் உண்மை நிலையில் ஒளிமிகுந்த தெய்வத்தன்மை உடையது; ஆனால் புலன் வழி நடக்கும் போது குருடாகிறது. 


இதுவே த்யுமசேனன் என்ற ஸத்தியவானின் தந்தை என்ற பாத்திரத்தின் குறியீட்டு விளக்கம். 


ஸத்யவானும், த்யுமசேனனும் ஒரு யோக ஸாதகனுடைய இரண்டு பிரச்சனைகள். 


ஸாதகன் தனது உடல் வலிமையற்று அற்ப ஆயுளைப் பெற்றிருப்பதால் யோகத்தில் சித்தி பெறமுடியாமல் போகும்! இது ஸத்தியவானின் நிலையால் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். 


இரண்டாவது சாதகனின் மனம் புலன்கள் வழி சென்று குருடாவதால் தனது தெய்வீக ஆற்றலை இழந்து பராஸக்தியை நேரடியாக அழைக்க முடியாத நிலை! 


உடலும் பலமில்லை, மனமும் தனது தெய்வ நிலையை இழந்து விட்டது; எப்படி யோக சாதனை செய்வது என்றால் அதற்குரிய உதாரணம் அஸ்வபதி - இவர் புலன் களை அடக்கியவர், பிராணனாகிய குதிரையை வசப்படுத்தி ஆள்பவர்; நீண்ட தபஸினை செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். 


ஸ்ரீ அரவிந்தர் இந்த யோக காவியத்தில் சொல்லும் செய்தி அடிப்படையில் ஒரு யோக சாதகன் ஸத்யவான், த்யுமசேனன் போன்ற வலிமையற்ற நிலையில் இருக்கிறான். அவன் தனது தபஸினூடாக அஸ்வபதியாக மாறினால் மாத்திரமே பராஸக்தியைத் தரிசிக்க முடியும் என்பது!  அவள் அஸ்வபதியின் - பிராணனூடாக  - மகளாக வந்து உடலினது அற்ப ஆயுளை நீக்கி யோகம் புரியும் வல்லமையும். மனதை மீண்டும் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஒளியை நோக்கிச் செல்லும் வல்லமையும் தருவாள் என்று புரிய வைக்கிறார். 


Wednesday, August 17, 2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை - 04

 அஸ்வபதி எனும் தபஸ்வியின் மகளாக பராஸக்தி ஸாவித்ரி மனித உடல் தாங்க வருகிறாள்.


த்யுமசேனன் எனும் அந்தக அரசனின் மகனாகப் பிறக்கிறான் ஸத்தியவான். 


தவமும் பிராணனும் புலன் களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் பராஸக்தியின் பரிபூரண கடாட்சம் பெறுகிறான். 


அவித்தையும், அஞ் ஞானமும் நிறைந்த த்யுமசேனனிற்கு அற்ப ஆயுளும், வலிமையற்ற் சத்யவான் பிறக்கிறான். 


ஸத்யவானிடன் சத்திய ஒளி புதைந்திருக்கிறது; அற்ப ஆயுளாலும், அறியாமையாலும் வெளிப்பட முடியவில்லை! 


இத்தகைய ஒருவன் மீது பராஸக்தியின் சொருபம் ஸாவித்ரி அன்பைச் செலுத்துவதால் அவன் மரணத்திலிருந்து மீள்கிறான்.


ஸாவித்ரி காவியம் பராஸக்தியின் கருணை எப்படி ஒருவனில் செயற்படுகிறது என்பதன் குறியீட்டு விளக்கம். 


யோக சாதகன் ஒருவன் படிக்கும் போது தானே த்யுமசேனன், தானே ஸத்தியவான், தானே அஸ்வபதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 


இது யோகத்தில் தான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை எமக்குக் காட்டும்! 

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை 04

அஸ்வபதி எனும் தபஸ்வியின் மகளாக பராஸக்தி ஸாவித்ரி மனித உடல் தாங்க வருகிறாள்.

த்யுமசேனன் எனும் அந்தக அரசனின் மகனாகப் பிறக்கிறான் ஸத்யவான். 

தவமும் பிராணனும் புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் பராஸக்தியின் பரிபூரண கடாட்சம் பெறுகிறான். 

அவித்தையும், அஞ்ஞானமும் நிறைந்த த்யுமசேனனிற்கு அற்ப ஆயுளும், வலிமையுமற்ற ஸ்த்யவான் பிறக்கிறான். 

ஸத்யவானிடம் சத்திய ஒளி புதைந்திருக்கிறது; அற்ப ஆயுளாலும், அறியாமையாலும் வெளிப்பட முடியவில்லை! 

இத்தகைய ஒருவன் மீது பராஸக்தியின் சொரூபம் ஸாவித்ரி அன்பைச் செலுத்துவதால் அவன் மரணத்திலிருந்து மீள்கிறான்.

ஸாவித்ரி காவியம் பராஸக்தியின் கருணை எப்படி ஒருவனில் செயற்படுகிறது என்பதன் குறியீட்டு விளக்கம். ஸ்ரீ அரவிந்தரின் தனிப்பட்ட யோக அனுபவத்தின் சாரம்! 

யோக சாதகன் ஒருவன் ஸாவித்ரி படிக்கும்போது தானே த்யுமசேனன், தானே ஸத்யவான், தானே அஸ்வபதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

இது யோகத்தில், தான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை எமக்குக் காட்டும்!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

17-ஆகஸ்ட்-2022

மாத்தளை


கடனின் தத்துவம் - Philosophy of debt

இன்று கடன் வாங்குவது தப்பு என்று பலரும் சொல்லிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். நானும் ஒருகாலத்தில் கடன் வாங்குவது தப்பு என்றே எண்ணினேன்! ஒரு கட்டத்தில் கடன் வாங்குவது என்பது மனதினை ஒழுங்குபடுத்துவதற்கான உத்தி என்பதையும் இந்தக்கோட்பாடு இல்லாவிட்டால் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி சமூக ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் புரிந்துகொண்டேன். 

எமது சாத்திரங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் பித்ரு கடன், ரிஷி கடன், தேவ கடன் இருப்பதாகச் சொல்லுகின்றன. 

இன்று பலரும் பித்ரு கடன் என்று பலவித சடங்குகளைச் செய்வதையும் பார்க்கிறோம். 

பித்ரு கடன் என்பது நான் எனது தாய் தந்தையிடமும், எனது முன்னோர்களிடமிருந்தும் இந்த உடல், வாழ்க்கையைப் பெற்றிருக்கிறேன்; அவர்களிடம் இருந்து பெற்ற இந்தக் கடனை நான் என்னை முன்னேற்றி, அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்து அவர்களிடமிருந்து கடன் வாங்கிய உடலில் இருந்து வரும் எனது பிள்ளைகளை சரியாக வளர்ப்பேன் என்பதே அதன் அர்த்தம்!

அடுத்தது ரிஷி கடன்; ரிஷி என்றால் அறிவினைத் தரிசித்தவர்கள் என்று அர்த்தம்; இன்று எம்மிடம் இருக்கும் பௌதீக, ஆன்மீக அறிவுகள் எல்லாம் எமக்கு முன்னிருந்த ரிஷிகளின் கடின உழைப்பால் உருவாகியவை; ஆகவே நாம் அறிவைப் பெற்றால் அந்த அறிவு வளர்ந்து பெருக, நாம் பெற்ற அறிவை விட பெருமளவு அறிவினை உருவாக்கி விட்டு இந்த பூமியை விட்டுப் போக வேண்டும்; நல்ல ஆய்வுகள் செய்து அறிவினை வளர்க்க வேண்டும்; எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு அறிவினைத் தரவேண்டும்; அறிவு பெருக பாடுபட்டால் ரிஷி கடன் தீரும். 

மூன்றாவது கடன் தேவ கடன்; இந்த பூமியில் நாம் வாழ அனைத்தையும் இறைவனே உருவாக்கி வைத்திருக்கிறான்; நாம் எதையும் உருவாக்க முடியாது; ஆகவே இந்த இயற்கை சக்திகளை மனித குலம் நன்றாக வாழ பயன்படுத்துவதுடன், தர்மத்திற்கமைய பாவிக்கும் ஒழுக்கம் தேவ கடன். 

இந்த மூன்று கடனையும் வாங்கிய பொறுப்பு எமக்கு இருந்தால் மனம் வாழ்க்கையை கடமையாகச் செய்யும்! இந்தப் பண்பு உள்ளத்தில் இல்லையென்றால் குடும்பத்திற்கோ, அறிவிற்கோ, பூமியிற்கோ பலன் இல்லாத ஒரு ஜென்மமாக வாழ்க்கையை மனிதன் வாழத் தொடங்குவான், இப்படி வாழ ஆரம்பித்தால் மனித குலம் சிதைந்து போகும்! 

இதேபோல் தான் உழைப்பு அதிகம் உள்ள சலிக்காத ஒருவன் வங்கியில் கடனை வாங்கி குறுகிய காலத்தில் பல சாதனைகளைச் செய்யலாம்! உழைக்கத் தெரியாத சோம்பேறி கடன் வாங்கினால் வங்குரோத்து அடையலாம்! இலங்கை அரசாங்கத்தைப் போல!

கடன் பெறுவது தப்பல்ல! ஆனால் கடனின் தத்துவம் சரியாக அறிந்து உழைக்கக்கூடிய மனதுடன் கடன் பெறுபவன் அறிவையும், செல்வத்தையும், வளத்தையும் பெருக்க வல்லவன்! 

இன்று பலர் உதவி என்று செய்யும்போது பெறுபவர் மனதில் இவர் பெரிய பணக்காரர், இவரிடம் நிறையச் செல்வம் இருக்கிறது, நாம் வேண்டியளவு எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தினைத் தூண்டுகிறார்கள்! அதேபோல் உதவி பெறுபவர் மனதில் தான் வலிமை குறைந்தவர்; எனக்கு எப்போதும் எவராவது உதவிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறார்கள். இது தவறானது! ஒவ்வொருவரும் முன்னேற எம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது அவர்களிடமிருந்து நாம் மீண்டும் எதையும் பெறவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் இருக்கக்கூடாது; ஆனால் பெறுபவர் பொறுப்புடன் பெற்ற உதவியைச் சரியாக பாவித்து தன்னை உயர்த்திக்கொண்டு பலருக்கும் அதைப்போன்ற உதவிகளைச் செய்யும் ஆற்றலுடையவர்களாக மாற வேண்டும். 

இந்த நோக்கத் தெளிவில்லாமல் நாம் சமூகப்பணி எவற்றையும் பகட்டிற்கு செய்யக்கூடாது. 

இதுவே கடனின் தத்துவம்.


ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள்மழை - 03

அசுவபதி பிராண ஆற்றலின் நாயகன் 

புலன்களை அடக்கி, மனதினை வென்ற மகா தபஸ்வி!

இதனால் உணர்வினை உயர்த்தி உயர் உணர்வுத் தளத்திற்கு செல்லும் வல்லமை பெற்றவர். 

காவியத்தில் தனது தபோ பலத்தினால் அன்னை பராசக்தி இருக்கும் தளம் வரை செல்லும் வல்லமை உண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் அறிவிக்கிறார். 

அஸ்வபதியின் வல்லமை கண்டே அன்னை ஸாவித்ரியாக, அவரின் புத்ரியாக பூமிக்கு, மனித உடலிற்குள் வருகை கொள்ள இசைகிறாள்! 

அஸ்வபதி என்பது அன்னையின் ஆற்றலைப் பெற சாதகன் பெறவேண்டிய தகுதியின் குறியீடு!

சத்தியவான் உண்மைப் பொருள் உள்ளிருந்தாலும் தனது உணர்வை உயர்த்த வல்லமை அற்று துன்புறும் பாமரனின் குறியீடு!


ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள்மழை - 03

 அசுவபதி பிராண ஆற்றலின் நாயகன்

புலன் களை அடக்கி, மனதினை வென்ற

மகா தபஸ்வி!

இதனால் உணர்வினை உயர்த்தி உயர் உணர்வுத் 

தளத்திற்கு செல்லும் வல்லமை பெற்றவர். 

காவியத்தில் தனது தபோ பலத்தினால் அன்னை

பராசக்தி இருக்கும் தளம் வரை செல்லும் வல்லமை உண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் அறிவிக்கிறார். 

அஸ்வபதியின் வல்லமை கண்டே அன்னை ஸாவித்ரியாக 

அவரின் புத்ரியாக பூமிக்கு, மனித உடலிற்குள் வருகை கொள்ள இசைகிறாள்! 

அஸ்வபதி என்பது அன்னையின் ஆற்றலைப் பெற சாதகன் பெறவேண்டிய தகுதியின் குறியீடு!

சத்தியவான் உண்மைப் பொருள் உள்ளிருந்தாலும் தனது உணர்வை உயர்த்த வல்லமை அற்று துன்புறும் பாமரனின் குறியீடு!


தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale எப்போதும் எமது சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்ய கவனத்துடன் செயற்பட்டு வருகிறது. 

இந்த அடிப்படையில் மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் மாணவி ஒருவர் உயிரியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு தெரிவாகி இருக்கிறார்; குடும்பச் சூழலால் கல்வியை விடும் நிலையில் இருந்த அவர் கற்பதற்கு அவருடைய பாடசாலை ஆசிரியர்களும், அதிபரும் சேர்ந்து செய்த உதவியால் இன்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். 

தொழில்நுட்ப பாடங்களுக்கு கணனி இல்லாமல் கற்க முடியாது. இதை உணர்ந்து ஒன்றியத்தின் செயலாளர் Dr. Nishānthan Ganeshan தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் Ravi Shankar ஆகிய இருவரும் "ஐயம் இட்டு உண்" அறக்கட்டளையின் ஸ்தாபகரும், முன்னாள் ஈ-கல்வி தொண்டு நிறுவன தலைவருமான Muralee Muraledaran அண்ணா அவர்களின் நிதி உதவியுடன் மடிக்கணணி ஒன்றினை ஏற்பாடு செய்து அவரது கற்கைக்காக ஒன்றியத்தினூடாக வழங்கியுள்ளனர்.

இந்த மடிக்கணனி அவரது கற்கைக்கு கடனாக வழங்கப்படுகிறது என்பதையும், இந்தக் கடன் படித்து உயர்ந்த தொழிலிற்கு வந்தபின்னர் இதைப்போல் 10 பிள்ளைகளுக்கு நீங்கள் திருப்பி வழங்குவதன் மூலம் மீள் செலுத்த வேண்டும் என்று கூறினேன். உறுதியுடன் ஏற்றுக்கொண்டார். {இது ஒரு உத்வேகத்திற்கும், எதிர்காலச் சந்ததிமேல் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் சொல்லபட்ட வார்த்தை! அவர் அதை பக்குவமாக பாவித்துவிட்டு கல்வி முடிந்தவுடனோ, புதுக்கணனி வாங்கினாலோ இன்னொருவர் பாவிக்கும் வகையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது மாத்திரமே அவர் மீது சுமத்தப்பட்ட உத்தியோகப்பூர்வ நிபந்தனை!}

இந்த நிகழ்வில் ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற அடிப்படையில் பங்குபற்றினேன்! நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர், ஒன்றியத்தின் ஆலோசகர் Jayaprakash Sithambaram, அதிபர் அவர்களும் பங்குபற்றினர்.


Tuesday, August 16, 2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை - 02

புராண ஸத்தியவான் ஸாவித்ரியை மனதிற்கு உளவியல் குறியீட்டு மொழியாக்கினார் ஸ்ரீ அரவிந்தர்!

திருமணத்தால் ஸத்தியவான் மீது எல்லையற்ற அன்பைப் பொழிந்து காதலானாள் ஸாவித்ரி! 

இதை பாமர மனம் கட்டிய கணவனிற்காக தன்னை அர்ப்பணித்த பெண் என்று கதை கட்டி மகிழ்ந்தது! 

ஸ்ரீ அரவிந்தரின் யோக அனுபவம் ஸாவித்ரி என்பது மனிதனிற்கு ஆற்றல் தரும் ஸக்தியின் செயற்பாட்டு இரகசியம் என்ற குறியீட்டு மொழி புரிந்தது! 

சத்தியத்தை வாங்கித் தாங்கியதால் ஸத்தியவான் ஆனான்; ஆனால் ஸத்தியத்தை வாங்கினாலும் பலமற்ற அற்ப ஆயுள்தாரி அவன்! மரணதேவனிடமும், அறியாமையிடமும் மாட்டிக்கொண்ட பலவீனன்! 

இதுவே ஒவ்வொரு மனித ஆன்மாவின் நிலையும்! ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி மிகுந்த ஸத்தியத்தன்மை உடையது! அதேவேளை மரணமும், அறியாமையிடம் சிக்கிக்கொண்டும் இருக்கிறது. 

நான் ஸத், சித், ஆனந்தன் என்ற உண்மையை உள்ளே தாங்கினாலும் மரணம், அறியாமை என்ற பலவீனத்தால் சூழ்ந்த ஸத்தியவான் என்பதை ஒவ்வொரு யோக ஸாதகனும் அறிதல், புரிதல் வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தரின் நோக்கம்! 

இந்த பலவீனத்திலிருந்து எப்படி மீள்வது?

கருணை கொண்டு பேரொளியான பரம்பொருளின் கீழிறங்கி வரும் ஸத்தியத்தைக் காக்கும் கருணை மிகு ஆற்றல் ஸாவித்ரி!

புராணத்தில் பிரம்மா தனது படைப்பினை செயற்படுத்தும் ஆற்றல்கள் இரண்டு! 

ஸாவித்ரி 

காயத்ரி 

ஸாவித்ரி என்பது பேரொளியான இறைவனின் கீழிறங்கி பூமியில் மனித உடலில் செயல் கொள்ளும் ஆற்றலின் பெயர் என்றும், காயத்ரி என்பது நவகோள்களிற்கு ஆற்றல் மூலமாக இருந்து சூரியன் வழி இறங்கி வந்து நவகோள் மண்டலம் செயல் கொள்ளும் நிலை என்று விளக்கினார் ஸ்ரீ அரவிந்தர்! 

மனிதனுக்குள் இருந்து செயற்படும் பேராற்றலின் வடிவம் ஸாவித்ரி

சூரியன் வழி எமது மண்டலத்தை இயக்கும் பேராற்றலின் வடிவம் காயத்ரி!

ஸாவித்ரி உதிக்க முன்னிருக்கும் அதிகாலை நேரத்து சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல்! இதனால் இவள் சூர்ய புத்திரி என்றார் ஸ்ரீ அரவிந்தர்! 

ஸாவித்ரி பரம ஸத்தியத்தின் பூரண வடிவம்; மனித உடல் தாங்கி பூவுலகு வந்து பேரறிவினைத் தரக்கூடிய ஆற்றல்; இவையெல்லாம் சேர்ந்த பேராற்றலுடைய மனித உடல் தாங்கிய பராசக்தியின் குறியீடே ஸ்ரீ அரவிந்தரின் காவிய நாயகி! 

இந்த பேரருள் ஏன் பூமிக்கு இறங்கி வரவேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அஸ்வபதி! அஸ்வம் என்றால் குதிரை என்று பொருள்! யோகத்தில் குதிரை என்றால் பிராணசக்தி என்று அர்த்தம்! தமிழ்ச் சித்தர்கள் பரி என்று இதைக் கூறுவர்! ஸாவித்ரி காவியத்தில் அஸ்வபதி ஒரு மகாதபஸ்வி! அவரின் தவத்தால் ஸாவித்ரி எனும் பேராற்றல் பூவுலகிற்கு இறங்கி வருகிறது! இதனால் அவர் பிராணனை அடக்கி ஆளும் அஸ்வபதியாக காவியத்தில் வருகிறார்!

ஆக பராஸக்தி இறங்கி செயல் கொள்ள சாதகன் பிராணனை அடக்கி தபஸு புரியும் அஸ்வபதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை சாதகனுக்குப் புரியவேண்டும்!

தமிழ் சித்தர்கள் தமது வாசி, சிவயோக சாதனையில் மூன்றுவயதுப் பெண்ணாக வாலைப் பெண் பிறப்பாள் என்று கூறுவதும் இதைத்தான்! 

எந்த யோக சாதகனுக்கு தன் புலன்கள், பிராணன், மனம் மேல் கட்டுப்படுத்தும் பதியாகிய ஆற்றல் வாய்க்கிறதோ - அஸ்வபதியாக இருக்க முடிகிறதோ அவனிற்கு மகளாக அந்த பராசக்தி இறங்கி வந்து மனித உடலில் செயல்புரிவாள் என்பது ஸாவித்ரி காவியம் கூறும் இரகசியம்!

அன்னையின் அருளால் ஸ்ரீ அரவிந்தரின் மொழிபுரிந்து இந்த இரகசியம் தமிழில் விளக்கும் ஆற்றல் பெற்றான் ஸோமன்!


ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை 02

 


புராண ஸத்தியவான் ஸாவித்ரியை மனதிற்கு உளவியல் குறியீட்டு மொழியாக்கினார் ஸ்ரீ அரவிந்தர்!


திருமணத்தால் ஸத்யவான் மீது எல்லையற்ற அன்பைப் பொழிந்து காதலானாள் ஸாவித்ரி! 


இதை பாமர மனம்  கட்டிய கணவனிற்காக தன்னை அர்ப்பணித்த பெண் என்று கதை கட்டி மகிழ்ந்தது! 


ஸ்ரீ அரவிந்தரின் யோக அனுபவம் ஸாவித்ரி என்பது மனிதனிற்கு ஆற்றல் தரும் ஸக்தியின் செயற்பாட்டு இரகசியம் என்ற குறியீட்டு மொழி புரிந்தது!  


சத்தியத்தை வாங்கித் தாங்கியதால் ஸத்தியவான் ஆனான்; ஆனால் ஸத்தியத்தை வாங்கினாலும் பலமற்ற அற்ப ஆயுள்தாரி அவன்! மரணதேவனிடமும், அறியாமையிடமும் மாட்டிக்கொண்ட பலவீனன்! 


இதுவே ஒவ்வொரு மனித ஆன்மாவின் நிலையும்! ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி மிகுந்த ஸத்தியத்தன்மை உடையது! அதேவேளை மரணமும், அறியாமையிடம் சிக்கிக்கொண்டும் இருக்கிறது. 


நான் ஸத், சித், ஆனந்தன் என்ற உண்மையை உள்ளே தாங்கினாலும் மரணம், அறியாமை என்ற பலவீனத்தால் சூழந்த சத்தியவான் என்பதை ஒவ்வொரு யோக ஸாதகனும் அறிதல், புரிதல் வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தரின் நோக்கம்! 


இந்த பலவீனத்திலிருந்து எப்படி மீள்வது?


கருணை கொண்டு பேரொளியான பரம்பொருளின் கீழிறங்கி வரும் ஸத்தியத்தைக் காக்கும் கருணை மிகு ஆற்றல் ஸாவித்ரி!


புராணத்தில் பிரம்மா தனது படைப்பினை செயற்படுத்தும் ஆற்றல்கள் இரண்டு! 


ஸாவித்ரி 

காயத்ரி 


ஸாவித்ரி என்பது பேரோளியான இறைவனின் கீழிறங்கி பூமியில் செயல் கொள்ளும் ஆற்றலின் பெயர் என்று, காயத்ரி என்பது நவகோள்களிற்கு ஆற்றல் மூலமாக இருந்து சூரியன் வழி இறங்கி வந்து செயல் கொள்ளும் நிலை என்று விளக்கினார் ஸ்ரீ அரவிந்தர்! 


மனிதனுக்குள் இருந்து செயற்படும் பேராற்றலின் வடிவம் ஸாவித்ரி


சூரியன் வழி எமது மண்டலத்தை இயக்கும் பேராற்றலின் வடிவம் காயத்ரி!


ஸாவித்ரி உதிக்க முன்னிருக்கும் அதிகாலை நேரத்து சூரியனின் இருந்து வெளிப்படும் ஆற்றல்! இதனால் இவள் சூர்ய புத்திரி என்றார் ஸ்ரீ அரவிந்தர்! 


ஸாவித்ரி பரம ஸத்தியத்தின் பூரண வடிவம்; மனித உடல் தாங்கி பூவுலகு வந்து பேரறிவினைத் தரக்கூடிய ஆற்றல்; இவையெல்லாம் சேர்ந்த பேராற்றலுடைய மனித உடல் தாங்கிய பராசக்தியின் குறியீடே ஸ்ரீ அரவிந்தரின் காவிய நாயகி! 


இந்த பேரருள் ஏன் பூமிக்கு இறங்கி வரவேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அஸ்வபதி! அஸ்வம் என்றால் குதிரை என்று பொருள்! யோகத்தில் குதிரை என்றால் பிராணசக்தி என்று அர்த்தம்! தமிழ்ச் சித்தர்கள் பரி என்று இதைக் கூறுவர்! ஸாவித்ரி காவியத்தில் அஸ்வபதி ஒரு மகாதபஸ்வி! அவரின் தவத்தால் ஸாவித்ரி எனும் பேராற்றல் பூவுலகிற்கு இறங்கி வருகிறது! இதனால் அவர் பிராணனை அடக்கி ஆளும் அஸ்வபதியாக காவியத்தில் வருகிறார்!


ஆக பராஸக்தி இறங்கி செயல் கொள்ள சாதகன் பிராணனை அடக்கி தபஸு புரியும் அஸ்வபதியாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை புரியவேண்டும்!


தமிழ் சித்தர்கள் தமது வாசி, சிவயோக சாதனையில் மூன்றுவயதுப் பெண்ணாக வாலைப் பெண் பிறப்பாள் என்று கூறுவதும் இதைத்தான்! 


எந்த யோக சாதகனுக்கு தன் புலன் கள், பிராணன், மனம் மேல் கட்டுப்படுத்தும் பதியாகிய ஆற்றல் வாய்க்கிறதோ - அஸ்வபதியாக இருக்க முடிகிறதோ அவனிற்கு மகளாக அந்த பராசக்தி இறங்கி வந்து மனித உடலில் செயல்புரிவாள் என்பது ஸாவித்ரி காவியம் கூறும் இரகசியம்!

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை

 ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை

************************************

உன் ஆன்மாவைத் திறக்க
உணர்வினை வளர்க்க
ஆங்கிலத்தில் புலமைபெற
ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி காவியம்
தினசரி இருபக்கம் படித்தல் நல்ல பயிற்சி
என்றார் ஸ்ரீ அன்னை!

இம்மூன்றும் அவசியம் என்று உணர்ந்து ஸாவித்ரியை கற்றான் ஸோமன்! கற்றவற்றைப் பகிர்ந்தான் அமுதத் தமிழில்!

ஸாவித்ரி 24000 அடி ஆங்கில காவியம்
ஆங்கிலத்திலிருக்கும் மிகப்பெரிய காவியம்
பேருணர்விற்கு வழி சொல்லும் காவியம்
புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார் ஸ்ரீ அரவிந்தர்

மகாபாரதத்தில் முன்னூறு பாடல் சத்தியவான் சாவித்ரி புராணக் கதை ஸ்ரீ அரவிந்தரின் ஆன்ம முன்னேற்றப் பாதையினை விளக்கும் குறீயீடு என்பதால் இதற்கு ஸ்ரீ அரவிந்தர் புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார்!

ஏன் இந்தக் கதையை ஸ்ரீ அரவிந்தர் தேர்ந்தெடுத்தார்?
மகாபாரதத்தில் மார்க்கண்டேயர் பாணவர்களுக்குச் சொல்லும் கதை இது!
மார்கண்டேயர் மரணத்தை வென்ற ரிஷி!
அவர் சொன்ன கதைக்குள் அமரத்துவம் குறியீட்டு மொழியில் இருந்ததை விரித்து தன் அனுபவமும் சேர்த்துச் சொன்னார் ஸ்ரீ அரவிந்தர்!
ஸாவித்ரி ஸத்தியவானை அறியா பாரதீயர்கள் இல்லை! ஆகவே அமரத்துவத்தின் யோக இரகசியங்களை அறிந்த கதையில் பிணைத்துக் கொடுத்தால் யோக இரகசியங்கள் அறியாமல் சித்தத்தில் பதியும் என்பதால் இந்த உத்தி!

பூரண யோகத்தின் சாரமெல்லாம் சத்தியவான் ஸாவித்ரியைக் குறியீடாக்கி புராணமும் குறியீட்டு மொழியுமாக ஸாவித்ரி காவியம் தந்தார் ஸ்ரீ அரவிந்தர்!

ஸ்ரீ அரவிந்தரின் அதி உன்னத வெளிப்பாடு ஸாவித்ரி என்றார் அன்னை!

ஸ்ரீ ஸக்தி சுமனன்
16-ஆகஸ்ட்-2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை

உன் ஆன்மாவைத் திறக்க

உணர்வினை வளர்க்க

ஆங்கிலத்தில் புலமைபெற 

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி காவியம் 

தினசரி இருபக்கம் படித்தல் நல்ல பயிற்சி

என்றார் ஸ்ரீ அன்னை! 

இம்மூன்றும் அவசியம் என்று உணர்ந்து ஸாவித்ரியை கற்றான் ஸோமன்! கற்றவற்றைப் பகிர்ந்தான் அமுதத் தமிழில்! 

ஸாவித்ரி 24000 அடி ஆங்கில காவியம்

ஆங்கிலத்திலிருக்கும் மிகப்பெரிய காவியம்

பேருணர்விற்கு வழி சொல்லும் காவியம்

புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார் ஸ்ரீ அரவிந்தர்

மகாபாரதத்தில் முன்னூறு பாடல் சத்தியவான் சாவித்ரி புராணக் கதை ஸ்ரீ அரவிந்தரின் ஆன்ம முன்னேற்றப் பாதையினை விளக்கும் குறீயீடு என்பதால் இதற்கு ஸ்ரீ அரவிந்தர் புராணமும் குறியீடும் என்று பெயரிட்டார்!

ஏன் இந்தக் கதையை ஸ்ரீ அரவிந்தர் தேர்ந்தெடுத்தார்?

மகாபாரதத்தில் மார்க்கண்டேயர் பாண்டவர்களுக்குச் சொல்லும் கதை இது!

மார்க்கண்டேயர் மரணத்தை வென்ற ரிஷி! 

அவர் சொன்ன கதைக்குள் அமரத்துவம் குறியீட்டு மொழியில் இருந்ததை விரித்து தன் அனுபவமும் சேர்த்துச் சொன்னார் ஸ்ரீ அரவிந்தர்! 

ஸாவித்ரி ஸத்தியவானை அறியா பாரதீயர்கள் இல்லை! ஆகவே அமரத்துவத்தின் யோக இரகசியங்களை அறிந்த கதையில் பிணைத்துக் கொடுத்தால் யோக இரகசியங்கள் முயற்சி இன்றி சித்தத்தில் பதியும் என்பதால் இந்த உத்தி!

பூரண யோகத்தின் சாரமெல்லாம் சத்தியவான் ஸாவித்ரியைக் குறியீடாக்கி புராணமும் குறியீட்டு மொழியுமாக ஸாவித்ரி காவியம் தந்தார் ஸ்ரீ அரவிந்தர்! 

ஸ்ரீ அரவிந்தரின் அதி உன்னத வெளிப்பாடு ஸாவித்ரி என்றார் அன்னை!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

16-ஆகஸ்ட்-2022


Monday, August 15, 2022

தலைப்பு இல்லை

இன்று இந்திய சுதந்திர தினம். அத்துடன் இந்திய சுதந்திரப்போராட்டத்தை ஆரம்பித்த மூலவர்களில் ஒருவரான ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும் கூட.

தேசத்தை பராசக்தியின் ஆற்றலாக உருவகித்து அந்த ஆற்றல் மூலம் உலகிற்கு நன்மை தரும் தேசமாக இந்தியா மிளிரவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியம்!

15th of August 1947 அன்று All India Radio, Tiruchirapalli இற்கு தந்த சுதந்திர தினச் செய்தியில் இப்படிக் கூறுகிறார்; 

ஆகஸ்ட் 15ம் தேதி எனது பிறந்த நாள், அது இந்திய சுதந்திர தினத்தால் பரந்த முக்கியத்துவத்தை பெறுகிறது என்பது இயல்பாகவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தற்செயல் நிகழ்வை ஒரு தற்செயலான விபத்தாகக் கருதாமல், தெய்வீக சக்தியின் ஒப்புதல் மற்றும் முத்திரையாக நான் எடுத்துக்கொள்கிறேன், அந்த தெய்வ ஆற்றல் நான் வாழ்க்கையைத் தொடங்கிய பணியின் முழுப்பலனின் தொடக்கமாக என் காலடிகளை வழிநடத்துகிறது.

இந்தியா தனது ஆன்மீக ஆற்றலை உலகிற்கு ஏற்கனவே கொடுக்கத் தொடங்கிவிட்டது; அது ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய தேசங்களில் வளர்ந்து வருகிறது. இது இன்னும் வளரும். இன்னும் பலர் பாரதத்தாயினை நோக்கி வருவார்கள்; அவளிடம் கற்க மாத்திரமல்ல; அவளுடைய ஆன்மாவையும், அவள் தரும் ஆன்ம முன்னேற்றப் பயிற்சியையும் தேடி...

பலமான ஆன்ம சக்தியுள்ள பாரதமாதா வளமான தெற்காசியாவின் மூலம்!


ஸ்ரீ அன்னை அரவிந்த அனுபவம்

அன்று பாரதமாதா தளை நீங்கிய நன்நாள்

பூரண யோகம் தந்த மகாயோகீஸ்வரர் 

ஸ்ரீ அரவிந்தர் பூவுலகில் உதித்த நாள்!

அதிகாலையில் ஸோமனின் தியானத்தில்

தங்க நிற தேகத்தில் ஸ்ரீ அன்னையும் 

ஸ்ரீ அரவிந்தரும் காட்சி தந்தனர்

உலகம் உய்ய உன் அகப்பயங்களை வீசி 

பணிபுரி என்று ஆணையிட்டனர்! 

கடன் உண்டு, குடும்பம் உண்டு என்று தாழ்மன கிலேசத்தால் புலம்பினன் ஸோமன்! 

ஊர்த்துவம் ஏறி குருவருள் பெற்ற 

உனக்கேன் கவலை என்றாள் அன்புடன் ஸ்ரீ அன்னை! 

மனதை உயர்த்த உணர்வை உயர்த்து!

பாத்திரமாய் இருக்கப்பழகு 

அருள் நிரம்பும் சக்திபெருகுமென்றாள்!

இட்ட கட்டளையைச் செய், செல்வம் சேருமென்றாள்!

இந்தப் பணியால் தங்க தேகம் உனக்கு வாய்க்குமென்றாள்! 

அகத்தியரின் மணக்குள வேதபுரிக்கு வாவென்றனர்

தூல மலர் அன்னைக்கு அணிவிக்க விருப்பம் 

என்று நினைக்க 

உன் அகத்தில் இருக்கும் கமலங்களை 

அர்ப்பணி என்றாள்!

அறுகோணம் இட்டு ஏழு பதுமங்களை 

மலர்வித்தாள் அன்னை!

இவ்வுலகில் பலர்வழி காண உனக்கு 

பொன்னுடல் வாய்த்து அன்னையின் ஆற்றல் என்றும் 

உன்னில் இருந்து செயற்படும் என்று ஆசி அருளினாள்!

சாகம்பரி வித்தையை பரப்பு என்றாள்! 

ஸாவித்ரியை காயத்ரியாக 

அனைவருக்கும் அள்ளிக் கொடு என்றாள் அன்னை! 

சிருஷ்டி சிருஷ்டிக்கப்பட்டது!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

15 -ஆகஸ்ட்-2022

மாத்தளை

Picture courtesy: Priti Ghosh


Sunday, August 14, 2022

ஐசேக் நியுட்டன் - இறுதி மந்திரவாதி - 01

 ஐசேக் நியுட்டன் - இறுதி மந்திரவாதி


ஐசேக் நியுட்டனின் இறையியல், மறையியல், இரசவாதம் பற்றிய வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு


எனது குரு நாதர் ஒரு அணு இயற்பியல் விஞ்ஞானி, அவருடன் குவாண்டம் இயற்பியல், string theory அடிப்படையில் ஸ்ரீ வித்தையின் தத்துவங்களை உரையாடியிருக்கிறேன். ஒரு இயற்பியல் விஞ் ஞானி பிரபஞ்சத்தின் நுண்மையைப் புரிந்து கொள்வது இலகு என்பது எனக்கு புரிந்தது; Physical இன் எல்லையில் Meta-Physical வருகிறது. அவரது வாழ்க்கையும் அப்படித்தான்!
இப்படியிருக்கும் போது ஐசேக் நியுட்டனும் இப்படியொரு பாதையில் சென்றிருக்கிறார் என்பதை அறிந்த போது ஆர்வம் தோன்றியது!
தமிழில் பகிர்ந்து கொள்ள உந்தல்! இதில் ஆர்வமுள்ளவர்க்ள் வாசித்தபின்னர் கீழே comment செய்யுங்கள்; Like செய்யும் பலர் வாசிப்பதில்லை! இது இன்னும் எழுத ஆர்வமாக இருக்கும்.
இதில் எனது சொந்தக்கருத்துகள் எதுவும் இல்லை; Michael White என்பவர் எழுதியதன் தமிழ் வடிவத்தை ஆக்குகிறேன்.


அறிமுகம்: உண்மை வெளிப்பட்டது


இந்த விசித்திரமான ஆன்மா, கடவுள் மற்றும் இயற்கையின் அனைத்து ரகசியங்களையும் மனதின் தூய சக்தியால் அடைய முடியும் என்று நம்புவதற்கு பிசாசால் தூண்டப்பட்டது - கோப்பர்நிக்கஸ் மற்றும் ஃபாஸ்டஸ் இருவரின் கலவை இவர்.


ஐசேக நியுட்டன் பற்றி மேனார்ட் கெய்ன்ஸ் ( author of ‘Newton the Man’, in Royal Society, Newton Tercentenary Celebrations (Cambridge: Cambridge University Press, 1947), pp. 27–34.)


வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலான the 100 என்ற நூலின் படி, ஐசக் நியூட்டன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார் - முஹம்மதுவுக்குப் பிறகு ஆனால் இயேசு கிறிஸ்துவை விட முன்னிலையில் இருக்கிறார்.  இந்த நிலை விஞ்ஞானத்தில் அவரது இணையற்ற பங்களிப்புகளால் நியாயப்படுத்தப்படுகிறது - நவீன உலகத்தை வடிவமைத்த கொள்கைகளின் மூலம் நியூட்டன். ஆனால், நியூட்டன் வரலாறு கூறும் மனிதர் அல்ல. வரலாற்றில் வேறு எந்த விஞ்ஞானிகளையும் விட, நியூட்டனின் உருவம் அவரது மாணவர்களாலும், அவரது வாழ்க்கையைப் பற்றிய தவறான மற்றும் சில நேரங்களில் முற்றிலும் பொய்யான கணக்குகளை உருவாக்கிய வாழ்க்கை வரலாற்றாசிரியர்களின் தலைமுறைகளாலும் பாதுகாக்கப்படுகிறது. 1930கள் வரை உண்மையான ஐசக் நியூட்டன் வரலாற்றின் மூடுபனியிலிருந்து விமர்சனப் பகுப்பாய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வெளிவரத் தொடங்கவில்லை. ஆச்சரியப்படும் விதமாக, மனித இருப்பின் கீழ்த்தரமான இவ்வுலகுகளுக்கு அப்பால், நியூட்டன் ஏதோவொரு வகையில் சர்வ வல்லமை படைத்தவர் என்ற கட்டுக்கதையை நிலைநிறுத்த விரும்பியவர்களின் இறுதி வஞ்சகங்களைத் துடைக்க வேண்டியிருந்தது; அவர் விஞ்ஞான விசாரணையின் தூய்மையான, காய்ச்சிய சாரம் என்று - களங்கமற்ற ஒரு மேதை என்பது நிறுவப்பட்டது.


நியூட்டன் இறந்த ஒரு வருடத்திற்குள் ஹாகியோகிராஃபிக் (hagiographic - ஒருவரை மிகவும் போற்றுதல் மற்றும் அந்த நபரை சரியானவராக அல்லது அவர்கள் உண்மையில் இருப்பதை விட சிறந்தவராக பிரதிநிதித்துவப்படுத்துதல்) கதைகள் தொடங்கின. ட்ரூயிடிசம் மற்றும் பண்டைய புராணங்களின் அறிஞராக இன்று சிறப்பாக நினைவுகூரப்படும் வில்லியம் ஸ்டுக்லி, நியூட்டனின் முதல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆவார். 1720 களில் எழுதப்பட்ட சர் ஐசக் நியூட்டனின் வாழ்க்கையின் ஸ்டுக்லி தனது நினைவுகள், அவரது ஹீரோவாகிய நியுட்டனின் வாழ்க்கையின் பக்தி விவரம், தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது. இது ஒரு முக்கியமான புத்தகம். ஆனால், நியூட்டனின் பிற்கால வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் பலரைப் போலவே, ஸ்டூக்லியும் வணக்கத்தால் கண் சிமிட்டினார்: அவர் நியூட்டனை ஒரு தேவதையாகக் கண்டார், கிட்டத்தட்ட அழியாத மற்றும் முற்றிலும் தவறு இல்லாத பார்வை.


1855 இல் வெளியிடப்பட்ட சர் டேவிட் ப்ரூஸ்டரின் வாழ்க்கை, எழுத்துகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய சர் ஐசக் நியூட்டனின் நினைவுகள், ஸ்டூக்லிக்கு தகுதியான வாரிசு மற்றும் நியூட்டனைப் பற்றிய நமது புரிதலுக்கு பெரிதும் உதவுகின்றன, ஆனால் ஆசிரியரின் புறநிலைத்தன்மையின்மையால் அது மீண்டும் களங்கப்படுத்தப்பட்டது. ப்ரூஸ்டர், மற்றவர்களைப் போலவே, நியூட்டனின் உருவத்திற்கு பொருந்தாத ஆதாரங்களை புறக்கணித்தார்; விஞ்ஞானியின் நீண்ட மற்றும் சிக்கலான வாழ்க்கையில் உள்ள பல முரண்பாடுகளை கேள்விக்குட்படுத்தாமல், நியூட்டன் சந்ததியினருக்காக நிறுவ முயற்சித்த பிம்பத்தை வலுவூட்டும் வகையில் ஒருதலைப்பட்சமான பார்வையை வரைவதற்கு அவர் முடிவு செய்தார்.


நியூட்டனின் பணியின் மகத்துவம் அல்லது அவரது அறிவுத்திறன் பற்றிய கேள்வியே இல்லை. ஆனால், அவரது மிகவும் பிரபலமான படைப்பான Principia Mathematica, எளிமையான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உண்மைகளின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் இயந்திர செயல்பாடுகளின் 

அதிநவீன மற்றும் சிக்கலான விளக்கமாக உள்ளது, அதே போல் அவரது ஆளுமையும் மரபுவழி அறிவியல் வரலாற்றாசிரியர்களைக் காட்டிலும் மிகவும் முறுக்கப்பட்டதாகவும் சுருண்டதாகவும் 


எல்லாவற்றிற்கும் மேலாக, நியூட்டன் ஒரு இரகசிய மனிதராக இருந்தார், ஒரு மனிதர் தன்னைத்தானே சுருட்டிக்கொண்டார், உலகத்திலிருந்து பிரிந்தார், மேலும் அவரது வாழ்நாளின் நீண்ட காலத்திற்கு அவர் அன்றாட விவகாரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரது பணி வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு அவர் தனது கல்லூரி அறைகளிலும் அருகிலுள்ள தனது ஆய்வகத்திலும் தனியாகப் படித்தார் மற்றும் பரிசோதனை செய்தார். பல விஷயங்களில், அவர் சிறுவயதிலிருந்தே இணக்கமற்றவராக இருந்தார், அவரது குடும்பத்தின் எளிய கிராமப்புற வாழ்க்கையைத் தவிர்த்து, பல்கலைக்கழகத்தில் சுயமாகத் தனிமைப்படுத்தப்பட்டவர், புனித உத்தரவுகளை ஏற்க மறுத்தார். அவர் Arianism குழுவில்சேர்ந்தார் - இந்தக்குழு கிருஸ்தவத்தின் புனித திரித்துவத்தின் கொள்கையை மறுத்த ஒரு பிரிவின் கோட்பாடாகும் - இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய பொது விழிப்புணர்வு அவரது வாழ்க்கையை சிதைத்திருக்கும்.. மேலும், மிக முக்கியமாக, அவர் ஒரு ரசவாதி.


வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவரது வாழ்க்கையை பரிசீலிக்க வந்த நேரத்தில், நியூட்டன் இறந்துவிட்டார் மற்றும் அவரது மத சார்புகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றாசிரியர்களின் க்ராவில் சிக்கியது, நியூட்டனின் பரந்த நூலகத்திலும், அவரது மிகப்பெரிய காகிதங்கள் மற்றும் குறிப்பேடுகளின் தொகுப்பிலும் காணப்பட்ட ஒரு பொருள், இது வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் விஞ்ஞானி, விஞ்ஞான முறையின் மாதிரியை மிகவும் தெளிவாக்கியது.தெளிவான நீரைப் போன்ற  தூய அறிவியலைப் பற்றி ஆராய்வதை விட ரசவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது வாழ்நாளில் அதிக நேரத்தைச் செலவிட்டார் என்பது. நியூட்டனின் சில நெருங்கிய நண்பர்கள் இதை அவருடைய வாழ்நாளில் அறிந்திருந்ததையும் இது உறுதிப்படுத்தியது: அவர் பைபிளின் காலவரிசையைப் படிப்பதிலும், தீர்க்கதரிசனங்களை ஆராய்வதிலும், இயற்கை மாயாஜாலத்தை ஆராய்வதிலும், அனைத்திற்கும் மேலாக, அவர் தனது நேரத்தைச் செலவிட்டார். ஹெர்மீடிக் ரகசியங்கள் - எனப்படும் the hermetic secrets – the prisca sapientia பற்றி அதிகம் படித்துக்கொண்டிருந்தார்.


நியூட்டனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மறையியலில் அதிதீவிர ஆர்வம் கொண்டிருந்தார் என்ற இந்த எதிர்நிலைகளை சமரசம் செய்வது சாத்தியமற்றது என்று கண்டறிந்தனர், டேவிட் ப்ரூஸ்டர் என்ற வரலாற்று ஆசிரியர் நியூட்டனின் ரசவாத எழுத்துக்களின் தொகுப்பை இப்படி விபரித்தார்: 'ஒரு முட்டாள் மற்றும் கத்தியின் வெளிப்படையான உற்பத்தி' 



ஐசக் நியூட்டனின் நிஜ வாழ்க்கைக் கதை,  நியூட்டன் ஒரு நரம்பியல் நோயுடைய, வெறித்தனமான, உந்துதல் நிறைந்த ஆன்மீகர் என்ற கருத்து 1936 இல் வெளிவரத் தொடங்கியது, நியூட்டனின் ஆவணங்களின் தொகுப்பு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டபோது 'அறிவியல் மதிப்பு இல்லாதது' என்று கருதப்பட்டது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் நியூட்டன் அறிஞருமான ஜான் மேனார்ட் கெய்ன்ஸால் (John Maynard Keynes) இனால் வாங்கப்பட்டது. (பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தபோது, ​​​​அவர் அதை கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரிக்கு வழங்கினார்.)


நியூட்டனின் இரகசிய ஆவணங்களின் உள்ளடக்கங்களைப் படித்த பிறகு - அந்த ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் குறிப்பேடுகள் ஆகியவை நியூட்டனை அறிவியலின் உச்சம் என்று நம்பிய hagiographic நபர்களால் புறக்கணிக்கப்பட்டன - 1942 இல் கெய்ன்ஸ் ராயல் சொசைட்டி கிளப்பில் ஒரு விரிவுரையை வழங்கினார், அதில் அவர் வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் உயர்ந்த விஞ்ஞானியின் முற்றிலும் மாறுபட்ட மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய படத்தை சித்தரித்தார்:


"பதினெட்டாம் நூற்றாண்டிலும், அதற்குப் பின்னரும், நியூட்டன் நவீன விஞ்ஞானிகளின் முதல் மற்றும் மிகப் பெரியவர், ஒரு பகுத்தறிவுவாதி, குளிர்மையாக மற்றும் கலப்படம் இல்லாமல் காரணத்தின் அடிப்படையில் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை இந்த வெளிச்சத்தில் பார்க்கவில்லை. 1696-ல் கேம்பிரிட்ஜை விட்டு வெளியேறிய போது அவர் பொதி செய்து வைத்திருந்த பெட்டியின் உள்ளடக்கங்களை உற்றுப் பார்த்த எவரும், ஓரளவு சிதறி எங்களிடம் வந்திருந்தாலும், அவரை அப்படிப் பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. பகுத்தறிவு யுகத்தில் நியூட்டன் முதன்மையானவர் அல்ல. அவர் மந்திரவாதிகளில் கடைசியானவர், பாபிலோனியர்கள் மற்றும் சுமேரியர்களில் கடைசிவாரிசு, 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் நமது அறிவுசார் பரம்பரையை கட்டியெழுப்பத் தொடங்கிய அதே கண்களால் புலப்படும் மற்றும் அறிவார்ந்த உலகத்தைப் பார்த்த கடைசி பெரிய மனம். ஐசக் நியூட்டன், 1642 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தந்தையில்லாமல் பிறந்த ஒரு மரணத்திற்குப் பிந்தைய குழந்தை, மந்திரவாதிகள் நேர்மையான மற்றும் பொருத்தமான மரியாதை செய்யக்கூடிய கடைசி அதிசய குழந்தை."



ஐசேக் நியுட்டன் - இறுதி மந்திரவாதி


ஐசேக் நியுட்டனின் இறையியல், மறையியல், இரசவாதம் பற்றிய வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு

பகுதி 02


கெய்ன்ஸ் அவர் கண்டுபிடித்ததைக் கண்டு மகிழ்ந்தார், மேலும் அதிர்ஷ்டவசமாக அவர் அத்தகைய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வயதில் வாழ்ந்தார். அவர் கண்டுபிடித்தது நியூட்டனைப் பற்றி இரண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்புட கேள்விகளை எழுப்பியது. முதலாவதாக, நவீன இயந்திரவியல் கோட்பாட்டை உருவாக்கியவர், தனது பெரும்பாலான நேரத்தை ரசவாதப் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தால், அவரைப் பற்றி வேறு என்ன மறைக்க முடியும்? இரண்டாவதாக, ரசவாதத்தில் நியூட்டனின் பணி அவரது  விஞ்ஞானப் பணியை முற்றிலும் பாதித்ததா?


இந்தப் பிரச்சனைகளில் முதலாவது பதில் ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது. நியூட்டன் ஒரு கடினமான மனிதராகவும், குழந்தை பருவ அதிர்ச்சியால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டவராகவும், பல சமகாலத்தவர்களுடன் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட போர்களில் ஈடுபட்டுள்ள ஒரு உயர்ந்த அகங்காரவாதியாகவும் அறியப்பட்டார். ஆனால், கெய்ன்ஸின் வெளிப்பாட்டிற்கு முன், வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் இந்த உண்மைகளைக் குறிப்பிடவில்லை. 1936 வரை, பெரும்பாலான நியூட்டன் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் வில்லியம் ஸ்டுக்லியின் கருத்துக்களை நம்பி திருப்தி அடைந்தனர். படிப்படியாகத்தான் மற்றவர்கள் பழைய அதிகாரிகளை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், கொஞ்சம் ஆழமாக தோண்டினார்கள்.


தோண்டியெடுக்கப்பட்டவை எப்போதும் அழகான படத்தை வரைவதில்லை. மனித குணத்தின் உண்மை அரிதாகவே செய்கிறது. இருப்பினும், புதிதாக வெளிப்படுத்தப்பட்ட நியூட்டன், பரந்த-கேன்வாஸ் நியூட்டன், ஒரு மனித நியூட்டன் - அவருடைய தனித்துவமான திறன்கள் மற்றும் திறமைகளுக்காக நாம் இருப்பதைப் போலவே அவருடைய தனித்தன்மைகள் மற்றும் தோல்விகளுக்காக நாம் பெருமைப்பட வேண்டிய மனிதர். அவரது சமகாலத்தவரான சர் கிறிஸ்டோபர் ரென் கூறியது போல், ‘அதிசயத்தை விளக்குவதன் மூலம் அதைக் குறைக்க நாம் பயப்பட வேண்டியதில்லை.


தான் கண்ட எல்லாவற்றிலும் அறிவைத் தேடும் ஒரு மேதை, தான் சந்தித்த வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும், அவரைக் குழப்பிய அனைத்தையும் ஆராய உந்தப்பட்ட ஒரு மனிதனின் உருவம் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது. இத்தகைய கொந்தளிப்பானது அவரைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியது, நரம்புத் தளர்ச்சி, ஏறக்குறைய அவர் மனதை இழந்த நிலைக்குத் தள்ளியது, மேலும் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் கறுப்புக் கலைகளுக்கும் கூட. ஆனால் இந்த ஆய்வுகளில் இருந்து வெளிப்பட்ட வேலை உலகை மாற்றியது.


கெய்ன்ஸ் ஆவணங்களால் தூண்டப்பட்ட மற்ற முக்கிய கேள்வி - நியூட்டனின் ரசவாத ஆய்வுகள் மற்றும் அவரது அறிவியல் ஆய்வுகளுக்கு இடையே குறுக்கு-கருத்தரித்தல் இருந்ததா இல்லையா என்பது - தீர்க்க மிகவும் கடினமான பிரச்சனை மற்றும் அது முற்றிலும் தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே உள்ளது.


நியூட்டன் என்ன செய்கிறார் என்பது பற்றிய எந்தவொரு தீவிர ஆராய்ச்சியாளனும் எதிர்கொள்ளும் சிக்கல்களில் மிகப்பெரியது.  அவர் ரசவாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வார்த்தைகளை விட்டுச் சென்றுள்ளார். அதற்கும் அப்பால், குறியீடாகவும், லத்தீன் மொழியிலும், நியூட்டனின் சிறிய கையெழுத்திலும் எழுதப்பட்ட இவ்வளவு பெரிய பொருட்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளது. அறுபது ஆண்டுகளாக அறிஞர்களை ஆக்கிரமித்துள்ள பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மறைந்த அமெரிக்க அறிஞர் பெட்டி ஜோ டாப்ஸ், நியூட்டனின் ரசவாதப் பரிசோதனைகளின் விரிவான பகுப்பாய்வைத் தயாரித்து, இரண்டு கல்விப் படைப்புகளில் ஒன்றாகச் சேகரித்தார், தி ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் நியூட்டனின் அல்கெமி (1975) மற்றும் தி ஜானஸ் ஃபேசஸ் ஆஃப் ஜீனியஸ்: நியூட்டனின் சிந்தனையில் ரசவாதத்தின் பங்கு. (1991) மற்றவர்கள் விவிலிய தீர்க்கதரிசனம் மற்றும் ஜோதிடம் முதல் எண் கணிதம் வரையிலான பல்வேறு பாடங்களில் நியூட்டனின் பரந்த எழுத்துக்களை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனதிற்கு முற்றிலும் அந்நியமான, பல நிலைகளில் உள்ள ஒரு மனநிலையுடன் அனுதாபம் கொள்வது எளிதானது அல்ல.


அடுத்து வரும் அத்தியாயங்களில் நியூட்டனின் விஞ்ஞானப் பணியின் மீதான ரசவாத தாக்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதத்தின் இரு பக்கங்களையும் விவாதிப்பேன். ஆனால், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், எனது முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது: ரசவாதத்தில் நியூட்டனின் ஆராய்ச்சிகளின் தாக்கம் அறிவியலில் அவரது உலகத்தை மாற்றியமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமாகும். அவரது ரசவாத வேலையும் அவரது அறிவியலும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.


நியூட்டன் அவர்களே கூறிய கூற்று, ‘ஒரு மனிதன் பொய்யான விஷயங்களைக் கற்பனை செய்யலாம், ஆனால் உண்மையுள்ள விஷயங்களை மட்டுமே அவனால் புரிந்து கொள்ள முடியும்.’  கற்பனைக்கும் புரிதலுக்கும் இடையில் ஒரு வரலாற்றாசிரியர் இவற்றின் மர்மங்களை நீக்கி உண்மைகளைக் கண்டுபிடிக்கும் போது அவை சிறிதளவே விளங்கப்படுகிறது. இப்படி மறுபக்கங்களை ஆராயும் போது நவீன அறிவியலின் முன்னோடியும் தந்தையுமான நியூட்டனின் உயர்ந்த அறிவுத்திறன் இப்போது நியூட்டன் ஒரு ஆன்மவாதியாகவும், உணர்ச்சிவசப்பட்ட வெறித்தனமான வெறித்தனமும், சுயமாக அறிவிக்கப்பட்ட, ஆனால் குழப்பமான, இரசவாதக் கல்லைக் கண்டுபிடித்தவருமாக நிற்க முடியும்.


இந்தக்கருத்துக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டியவையும், எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாதவையும் ஆகும். 

ஐசேக் நியுட்டன் - இறுதி மந்திரவாதி ஐசேக் நியுட்டனின் இறையியல், மறையியல், இரசவாதம் பற்றிய வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு

பகுதி 02

கெய்ன்ஸ் அவர் கண்டுபிடித்ததைக் கண்டு மகிழ்ந்தார், மேலும் அதிர்ஷ்டவசமாக அவர் அத்தகைய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வயதில் வாழ்ந்தார். அவர் கண்டுபிடித்தது நியூட்டனைப் பற்றி இரண்டு, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கேள்விகளை எழுப்பியது. முதலாவதாக, நவீன இயந்திரவியல் கோட்பாட்டை உருவாக்கியவர், தனது பெரும்பாலான நேரத்தை ரசவாதப் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தால், அவரைப் பற்றி வேறு என்ன மறைக்க முடியும்? இரண்டாவதாக, ரசவாதத்தில் நியூட்டனின் பணி அவரது விஞ்ஞானப் பணியை முற்றிலும் பாதித்ததா?

இந்தப் பிரச்சனைகளில் முதலாவது பதில் ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது. நியூட்டன் ஒரு கடினமான மனிதராகவும், குழந்தைப்பருவ அதிர்ச்சியால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டவராகவும், பல சமகாலத்தவர்களுடன் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட போர்களில் ஈடுபட்டுள்ள ஒரு உயர்ந்த அகங்காரவாதியாகவும் அறியப்பட்டார். ஆனால், கெய்ன்ஸின் வெளிப்பாட்டிற்கு முன், வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் இந்த உண்மைகளைக் குறிப்பிடவில்லை. 1936 வரை, பெரும்பாலான நியூட்டன் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் வில்லியம் ஸ்டுக்லியின் கருத்துக்களை நம்பி திருப்தி அடைந்தனர். படிப்படியாகத்தான் மற்றவர்கள் பழைய அதிகாரிகளை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், கொஞ்சம் ஆழமாக தோண்டினார்கள்.

தோண்டியெடுக்கப்பட்டவை எப்போதும் அழகான படத்தை வரைவதில்லை. மனித குணத்தின் உண்மை அரிதாகவே செய்கிறது. இருப்பினும், புதிதாக வெளிப்படுத்தப்பட்ட நியூட்டன், பரந்த-கேன்வாஸ் நியூட்டன், ஒரு மனித நியூட்டன் - அவருடைய தனித்துவமான திறன்கள் மற்றும் திறமைகளுக்காக நாம் இருப்பதைப் போலவே அவருடைய தனித்தன்மைகள் மற்றும் தோல்விகளுக்காக நாம் பெருமைப்பட வேண்டிய மனிதர். அவரது சமகாலத்தவரான சர் கிறிஸ்டோபர் ரென் கூறியது போல், ‘அதிசயத்தை விளக்குவதன் மூலம் அதைக் குறைக்க நாம் பயப்பட வேண்டியதில்லை.

தான் கண்ட எல்லாவற்றிலும் அறிவைத் தேடும் ஒரு மேதை, தான் சந்தித்த வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும், அவரைக் குழப்பிய அனைத்தையும் ஆராய உந்தப்பட்ட ஒரு மனிதனின் உருவம் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது. இத்தகைய கொந்தளிப்பானது அவரைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியது, நரம்புத் தளர்ச்சி, ஏறக்குறைய அவர் மனதை இழந்த நிலைக்குத் தள்ளியது, மேலும் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் கறுப்புக் கலைகளுக்கும் கூட. ஆனால் இந்த ஆய்வுகளில் இருந்து வெளிப்பட்ட வேலை உலகை மாற்றியது.

கெய்ன்ஸ் ஆவணங்களால் தூண்டப்பட்ட மற்ற முக்கிய கேள்வி - நியூட்டனின் ரசவாத ஆய்வுகள் மற்றும் அவரது அறிவியல் ஆய்வுகளுக்கு இடையே குறுக்கு-கருத்தரித்தல் இருந்ததா இல்லையா என்பது - தீர்க்க மிகவும் கடினமான பிரச்சனை மற்றும் அது முற்றிலும் தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே உள்ளது.

நியூட்டன் என்ன செய்கிறார் என்பது பற்றிய எந்தவொரு தீவிர ஆராய்ச்சியாளனும் எதிர்கொள்ளும் சிக்கல்களில் மிகப்பெரியது. அவர் ரசவாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வார்த்தைகளை விட்டுச் சென்றுள்ளார். அதற்கும் அப்பால், குறியீடாகவும், லத்தீன் மொழியிலும், நியூட்டனின் சிறிய கையெழுத்திலும் எழுதப்பட்ட இவ்வளவு பெரிய பொருட்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளது. அறுபது ஆண்டுகளாக அறிஞர்களை ஆக்கிரமித்துள்ள பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மறைந்த அமெரிக்க அறிஞர் பெட்டி ஜோ டாப்ஸ், நியூட்டனின் ரசவாதப் பரிசோதனைகளின் விரிவான பகுப்பாய்வைத் தயாரித்து, இரண்டு கல்விப் படைப்புகளில் ஒன்றாகச் சேகரித்தார், தி ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் நியூட்டனின் அல்கெமி (1975) மற்றும் தி ஜானஸ் ஃபேசஸ் ஆஃப் ஜீனியஸ்: நியூட்டனின் சிந்தனையில் ரசவாதத்தின் பங்கு. (1991) மற்றவர்கள் விவிலிய தீர்க்கதரிசனம் மற்றும் ஜோதிடம் முதல் எண் கணிதம் வரையிலான பல்வேறு பாடங்களில் நியூட்டனின் பரந்த எழுத்துக்களை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனதிற்கு முற்றிலும் அந்நியமான, பல நிலைகளில் உள்ள ஒரு மனநிலையுடன் அனுதாபம் கொள்வது எளிதானது அல்ல.

அடுத்து வரும் அத்தியாயங்களில் நியூட்டனின் விஞ்ஞானப் பணியின் மீதான ரசவாத தாக்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதத்தின் இரு பக்கங்களையும் விவாதிப்பேன். ஆனால், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், எனது முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது: ரசவாதத்தில் நியூட்டனின் ஆராய்ச்சிகளின் தாக்கம் அறிவியலில் அவரது உலகத்தை மாற்றியமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமாகும். அவரது ரசவாத வேலையும் அவரது அறிவியலும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

நியூட்டன் அவர்களே கூறிய கூற்று, ‘ஒரு மனிதன் பொய்யான விஷயங்களைக் கற்பனை செய்யலாம், ஆனால் உண்மையுள்ள விஷயங்களை மட்டுமே அவனால் புரிந்து கொள்ள முடியும்.’ கற்பனைக்கும் புரிதலுக்கும் இடையில் ஒரு வரலாற்றாசிரியர் இவற்றின் மர்மங்களை நீக்கி உண்மைகளைக் கண்டுபிடிக்கும்போது அவை சிறிதளவே விளங்கப்படுகிறது. இப்படி மறுபக்கங்களை ஆராயும்போது நவீன அறிவியலின் முன்னோடியும் தந்தையுமான நியூட்டனின் உயர்ந்த அறிவுத்திறன் இப்போது நியூட்டன் ஒரு ஆன்மவாதியாகவும், உணர்ச்சிவசப்பட்ட வெறித்தனமான வெறித்தனமும், சுயமாக அறிவிக்கப்பட்ட, ஆனால் குழப்பமான, இரசவாதக் கல்லைக் கண்டுபிடித்தவருமாக நிற்க முடியும்.

இந்தக்கருத்துக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டியவையும், எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாதவையும் ஆகும். 

தொடரும்...


ஐசேக் நியுட்டன் - இறுதி மந்திரவாதி பகுதி - 01

நவீன அறிவியலின் முதன்மை ஐசேக் நியுட்டனின் இறையியல், மறையியல், இரசவாதம் பற்றிய வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. 

எனது குருநாதர் ஒரு அணு இயற்பியல் விஞ்ஞானி, அவருடன் குவாண்டம் இயற்பியல், string theory அடிப்படையில் ஸ்ரீ வித்தையின் தத்துவங்களை உரையாடியிருக்கிறேன். ஒரு இயற்பியல் விஞ்ஞானி பிரபஞ்சத்தின் நுண்மையைப் புரிந்து கொள்வது இலகு என்பது எனக்கு புரிந்தது; Physical இன் எல்லையில் Meta-Physical வருகிறது. அவரது வாழ்க்கையும் அப்படித்தான்! 

இப்படியிருக்கும்போது ஐசேக் நியுட்டனும் இப்படியொரு பாதையில் சென்றிருக்கிறார் என்பதை அறிந்த போது ஆர்வம் தோன்றியது!

தமிழில் பகிர்ந்துகொள்ள உந்தல்! இதில் ஆர்வமுள்ளவர்கள் வாசித்தபின்னர் கீழே comment செய்யுங்கள்; Like செய்யும் பலர் வாசிப்பதில்லை! இது இன்னும் எழுத ஆர்வமாக இருக்கும். 

இதில் எனது சொந்தக்கருத்துகள் எதுவும் இல்லை; Michael White என்பவர் எழுதியதன் தமிழ் வடிவத்தை ஆக்குகிறேன். 

அறிமுகம்: உண்மை வெளிப்பட்டது.

இந்த விசித்திரமான ஆன்மா, கடவுள் மற்றும் இயற்கையின் அனைத்து ரகசியங்களையும் மனதின் தூய சக்தியால் அடைய முடியும் என்று நம்புவதற்கு பிசாசால் தூண்டப்பட்டது - கோப்பர்நிக்கஸ் மற்றும் ஃபாஸ்டஸ் இருவரின் கலவை இவர்.

ஐசேக் நியுட்டன் பற்றி மேனார்ட் கெய்ன்ஸ் ( author of ‘Newton the Man’, in Royal Society, Newton Tercentenary Celebrations (Cambridge: Cambridge University Press, 1947), pp. 27–34.)

வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலான the 100 என்ற நூலின்படி, ஐசேக் நியூட்டன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார் - முஹம்மதுவுக்குப் பிறகு ஆனால் இயேசு கிறிஸ்துவை விட முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலை விஞ்ஞானத்தில் அவரது இணையற்ற பங்களிப்புகளால் நியாயப்படுத்தப்படுகிறது - நவீன உலகத்தை வடிவமைத்த கொள்கைகளின் மூலம் நியூட்டன். ஆனால், நியூட்டன் வரலாறு கூறும் மனிதர் அல்ல. வரலாற்றில் வேறு எந்த விஞ்ஞானிகளையும் விட, நியூட்டனின் உருவம் அவரது மாணவர்களாலும், அவரது வாழ்க்கையைப் பற்றிய தவறான மற்றும் சில நேரங்களில் முற்றிலும் பொய்யான கணக்குகளை உருவாக்கிய வாழ்க்கை வரலாற்றாசிரியர்களின் தலைமுறைகளாலும் பாதுகாக்கப்படுகிறது. 1930கள் வரை உண்மையான ஐசக் நியூட்டன் வரலாற்றின் மூடுபனியிலிருந்து விமர்சனப் பகுப்பாய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வெளிவரத் தொடங்கவில்லை. ஆச்சரியப்படும் விதமாக, மனித இருப்பின் கீழ்த்தரமான இவ்வுலகுகளுக்கு அப்பால், நியூட்டன் ஏதோவொரு வகையில் சர்வ வல்லமை படைத்தவர் என்ற கட்டுக்கதையை நிலைநிறுத்த விரும்பியவர்களின் இறுதி வஞ்சகங்களைத் துடைக்க வேண்டியிருந்தது; அவர் விஞ்ஞான விசாரணையின் தூய்மையான, காய்ச்சிய சாரம் என்று - களங்கமற்ற ஒரு மேதை என்பது நிறுவப்பட்டது.

நியூட்டன் இறந்த ஒரு வருடத்திற்குள் ஹாகியோகிராஃபிக் (hagiographic - ஒருவரை மிகவும் போற்றுதல் மற்றும் அந்த நபரை சரியானவராக அல்லது அவர்கள் உண்மையில் இருப்பதை விட சிறந்தவராக பிரதிநிதித்துவப்படுத்துதல்) கதைகள் தொடங்கின. ட்ரூயிடிசம் மற்றும் பண்டைய புராணங்களின் அறிஞராக இன்று சிறப்பாக நினைவுகூரப்படும் வில்லியம் ஸ்டுக்லி, நியூட்டனின் முதல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆவார். 1720 களில் எழுதப்பட்ட சர் ஐசேக் நியூட்டனின் வாழ்க்கையின் ஸ்டுக்லி தனது நினைவுகள், அவரது ஹீரோவாகிய நியுட்டனின் வாழ்க்கையின் பக்தி விவரம், தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது. இது ஒரு முக்கியமான புத்தகம். ஆனால், நியூட்டனின் பிற்கால வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் பலரைப் போலவே, ஸ்டூக்லியும் வணக்கத்தால் கண் சிமிட்டினார்: அவர் நியூட்டனை ஒரு தேவதையாகக் கண்டார், கிட்டத்தட்ட அழியாத மற்றும் முற்றிலும் தவறு இல்லாத பார்வை.

1855 இல் வெளியிடப்பட்ட சர் டேவிட் ப்ரூஸ்டரின் வாழ்க்கை, எழுத்துகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய சர் ஐசேக் நியூட்டனின் நினைவுகள், ஸ்டூக்லிக்கு தகுதியான வாரிசு மற்றும் நியூட்டனைப் பற்றிய நமது புரிதலுக்கு பெரிதும் உதவுகின்றன, ஆனால் ஆசிரியரின் புறநிலைத்தன்மையின்மையால் அது மீண்டும் களங்கப்படுத்தப்பட்டது. ப்ரூஸ்டர், மற்றவர்களைப் போலவே, நியூட்டனின் உருவத்திற்கு பொருந்தாத ஆதாரங்களை புறக்கணித்தார்; விஞ்ஞானியின் நீண்ட மற்றும் சிக்கலான வாழ்க்கையில் உள்ள பல முரண்பாடுகளை கேள்விக்குட்படுத்தாமல், நியூட்டன் சந்ததியினருக்காக நிறுவ முயற்சித்த பிம்பத்தை வலுவூட்டும் வகையில் ஒருதலைப்பட்சமான பார்வையை வரைவதற்கு அவர் முடிவு செய்தார்.

நியூட்டனின் பணியின் மகத்துவம் அல்லது அவரது அறிவுத்திறன் பற்றிய கேள்வியே இல்லை. ஆனால், அவரது மிகவும் பிரபலமான படைப்பான Principia Mathematica, எளிமையான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உண்மைகளின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் இயந்திர செயல்பாடுகளின் அதிநவீன மற்றும் சிக்கலான விளக்கமாக உள்ளது, அதே போல் அவரது ஆளுமையும் மரபுவழி அறிவியல் வரலாற்றாசிரியர்களைக் காட்டிலும் மிகவும் முறுக்கப்பட்டதாகவும் சுருண்டதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, நியூட்டன் ஒரு இரகசிய மனிதராக இருந்தார், ஒரு மனிதர் தன்னைத்தானே சுருட்டிக்கொண்டார், உலகத்திலிருந்து பிரிந்தார், மேலும் அவரது வாழ்நாளின் நீண்ட காலத்திற்கு அவர் அன்றாட விவகாரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரது பணி வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு அவர் தனது கல்லூரி அறைகளிலும் அருகிலுள்ள தனது ஆய்வகத்திலும் தனியாகப் படித்தார் மற்றும் பரிசோதனை செய்தார். பல விஷயங்களில், அவர் சிறுவயதிலிருந்தே இணக்கமற்றவராக இருந்தார், அவரது குடும்பத்தின் எளிய கிராமப்புற வாழ்க்கையைத் தவிர்த்து, பல்கலைக்கழகத்தில் சுயமாகத் தனிமைப்படுத்தப்பட்டவர், புனித உத்தரவுகளை ஏற்க மறுத்தார். அவர் Arianism குழுவில்சேர்ந்தார் - இந்தக்குழு கிருஸ்தவத்தின் புனித திரித்துவத்தின் கொள்கையை மறுத்த ஒரு பிரிவின் கோட்பாடாகும் - இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய பொது விழிப்புணர்வு அவரது வாழ்க்கையை சிதைத்திருக்கும். மேலும், மிக முக்கியமாக, அவர் ஒரு ரசவாதி.

வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவரது வாழ்க்கையை பரிசீலிக்க வந்த நேரத்தில், நியூட்டன் இறந்துவிட்டார் மற்றும் அவரது மத சார்புகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த ஆரம்பகால வாழ்க்கை, வரலாற்றாசிரியர்களின் க்ராவில் சிக்கியது, நியூட்டனின் பரந்த நூலகத்திலும், அவரது மிகப்பெரிய காகிதங்கள் மற்றும் குறிப்பேடுகளின் தொகுப்பிலும் காணப்பட்ட ஒரு பொருள், இது வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் விஞ்ஞானி, விஞ்ஞான முறையின் மாதிரியை மிகவும் தெளிவாக்கியது.தெளிவான நீரைப் போன்ற தூய அறிவியலைப் பற்றி ஆராய்வதை விட ரசவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது வாழ்நாளில் அதிக நேரத்தைச் செலவிட்டார் என்பது. நியூட்டனின் சில நெருங்கிய நண்பர்கள் இதை அவருடைய வாழ்நாளில் அறிந்திருந்ததையும் இது உறுதிப்படுத்தியது: அவர் பைபிளின் காலவரிசையைப் படிப்பதிலும், தீர்க்கதரிசனங்களை ஆராய்வதிலும், இயற்கை மாயாஜாலத்தை ஆராய்வதிலும், அனைத்திற்கும் மேலாக, அவர் தனது நேரத்தைச் செலவிட்டார். ஹெர்மீடிக் ரகசியங்கள் - எனப்படும் the hermetic secrets – the prisca sapientia பற்றி அதிகம் படித்துக்கொண்டிருந்தார்.

நியூட்டனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மறையியலில் அதிதீவிர ஆர்வம் கொண்டிருந்தார் என்ற இந்த எதிர்நிலைகளை சமரசம் செய்வது சாத்தியமற்றது என்று கண்டறிந்தனர், டேவிட் ப்ரூஸ்டர் என்ற வரலாற்று ஆசிரியர் நியூட்டனின் ரசவாத எழுத்துக்களின் தொகுப்பை இப்படி விபரித்தார்: 'ஒரு முட்டாள் மற்றும் கத்தியின் வெளிப்படையான உற்பத்தி' 

ஐசக் நியூட்டனின் நிஜ வாழ்க்கைக் கதை, நியூட்டன் ஒரு நரம்பியல் நோயுடைய, வெறித்தனமான, உந்துதல் நிறைந்த ஆன்மீகர் என்ற கருத்து 1936 இல் வெளிவரத் தொடங்கியது, நியூட்டனின் ஆவணங்களின் தொகுப்பு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டபோது 'அறிவியல் மதிப்பு இல்லாதது' என்று கருதப்பட்டது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் நியூட்டன் அறிஞருமான ஜான் மேனார்ட் கெய்ன்ஸால் (John Maynard Keynes) இனால் வாங்கப்பட்டது. (பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தபோது, அவர் அதை கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரிக்கு வழங்கினார்.)

நியூட்டனின் இரகசிய ஆவணங்களின் உள்ளடக்கங்களைப் படித்தபிறகு - அந்த ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் குறிப்பேடுகள் ஆகியவை நியூட்டனை அறிவியலின் உச்சம் என்று நம்பிய hagiographic நபர்களால் புறக்கணிக்கப்பட்டன - 1942 இல் கெய்ன்ஸ் ராயல் சொசைட்டி கிளப்பில் ஒரு விரிவுரையை வழங்கினார், அதில் அவர் வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் உயர்ந்த விஞ்ஞானியின் முற்றிலும் மாறுபட்ட மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய படத்தை சித்தரித்தார்:

"பதினெட்டாம் நூற்றாண்டிலும், அதற்குப் பின்னரும், நியூட்டன் நவீன விஞ்ஞானிகளின் முதல் மற்றும் மிகப் பெரியவர், ஒரு பகுத்தறிவுவாதி, குளிர்மையாக மற்றும் கலப்படம் இல்லாமல் காரணத்தின் அடிப்படையில் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை இந்த வெளிச்சத்தில் பார்க்கவில்லை. 1696-ல் கேம்பிரிட்ஜை விட்டு வெளியேறியபோது அவர் பொதி செய்து வைத்திருந்த பெட்டியின் உள்ளடக்கங்களை உற்றுப் பார்த்த எவரும், ஓரளவு சிதறி எங்களிடம் வந்திருந்தாலும், அவரை அப்படிப் பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. பகுத்தறிவு யுகத்தில் நியூட்டன் முதன்மையானவர் அல்ல. அவர் மந்திரவாதிகளில் கடைசியானவர், பாபிலோனியர்கள் மற்றும் சுமேரியர்களில் கடைசிவாரிசு, 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் நமது அறிவுசார் பரம்பரையை கட்டியெழுப்பத் தொடங்கிய அதே கண்களால் புலப்படும் மற்றும் அறிவார்ந்த உலகத்தைப் பார்த்த கடைசி பெரிய மனம். ஐசக் நியூட்டன், 1642 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தந்தையில்லாமல் பிறந்த ஒரு மரணத்திற்குப் பிந்தைய குழந்தை, மந்திரவாதிகள் நேர்மையான மற்றும் பொருத்தமான மரியாதை செய்யக்கூடிய கடைசி அதிசய குழந்தை."

தொடரும்….


Saturday, August 13, 2022

தலைப்பு இல்லை

ஒரு தேசம் ஆற்றலுடைய தேசமாக உருப்பெற என்ன செய்ய வேண்டும்! தேசத்தை தாயாகவும், மக்கள் அனைவரும் அந்தத் தாயின் உயர்வான ஆற்றல் வெளிப்பட செயற்படும் அக ஆற்றல் உடைய உன்னத புத்திரர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்! 

இலங்கை இன்று இந்த நிலமையில் இருப்பதற்கு காரணம் அதன் உருப்படாத ஊதாரிப் புத்திரர்களால் என்பது இன்று வெள்ளிடை மலை! 

*************************

தேசம் என்பது எதற்காக? நமது தாய் நாடு எது? 

அது மண்ணின் துண்டோ, பேச்சின் உருவமோ, மனதின் கற்பனையோ அல்ல. பவானி மகிஷமர்தினியின் (எல்லையற்ற பராசக்தியின்) சக்திகளில் இருந்து உருவான பல கோடிக் கடவுள்களின் சக்தியிலிருந்து உருவானது போல, தேசத்தை உருவாக்கும் மில்லியன் கணக்கான அலகுகளின் சக்திகளால் ஆனது, இது ஒரு வலிமையான சக்தியாகும். 

இந்தியா என்று நாம் அழைக்கும் சக்தி, பவானி பாரதி, முந்நூறு மில்லியன் மக்களின் சக்திகளின் வாழும் ஒற்றுமை; ஆனால் தன் மகன்களின் சுயநலமான செயலற்ற தன்மை மற்றும் அறியாமையினால் அவள் இன்று செயலற்றவள், தமஸ் என்ற மாய வட்டத்தில் சிறைப்பட்டாள், தமஸிலிருந்து விடுபட, உள்ளிருக்கும் பிரம்மத்தை எழுப்ப வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தர்


Friday, August 12, 2022

தலைப்பு இல்லை

சிறகுகள் அமையம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க நூல்கள் சேர்க்கிறார்கள்! 

நானும் தம்பியும் சிறுவயதில் சேர்த்த புத்தகங்கள் அனைத்தையும் எமது பாடசாலை நூலகத்திற்கு கொடுத்தோம்! 

இப்போது வாங்கும் நூற்கள் எல்லாம் அனேகமாக புராதன ஞானம் சார்ந்த அரிய நூல்கள்; இவை எனது Sri Shakti Sumanan Institute - Srishti இன் நூலகமாக பரிணமிக்கிறது! எதிர்காலத்தில் புராதன ஞானம் (ancient wisdom) தொடர்பான அனைத்து நூல்களையும் ஆய்வுகளையும் கொண்டிருக்கும் ஒரு நூலகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

சுமார் 11000 ரூபாய் பெறுமதியான (பெறுமதி போடவில்லை என்றால் தமிழி பதிப்பகம் கணக்கு கேட்கும் என்பதால்   ) யோகமும் இயற்கையும் என்ற நூல்கள் 10 பிரதிகள் இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்டது! 

எனக்கு அன்பளிப்புத் தரவிரும்புவர்கள் அறியத்தாருங்கள்! நிறைய நூல்களுக்கான தேவை இருக்கிறது.


Thursday, August 04, 2022

Critical Thinking Explained

விமர்சன சிந்தனையின் விளக்கம் 

இன்று காலை ஒரு மாணவன் தனது தொழில் வாழ்க்கையில் தான் அடிக்கடி சரியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை, இதற்கு என்ன செய்யலாம் என்றார்?

அதற்கு நான் எமது சிந்தனை முறையில் critical thinking (CT) வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல அடுத்த கேள்வி CT என்றால் என்ன?

அதற்குரிய விடை பலருக்கும் பிரயோசனமானது என்பதால் இங்கே பதிவு;

CT என்பதை தமிழில் இப்படிக் கூறலாம், எமக்கு முடிவெடுக்க வேண்டும் என்ற ஒரு சூழலில் இது சரியானதா, பிழையானதா என்பதை தீர்மானிக்க நாம் நியாயமாக எமக்குள் அந்த விடயத்தைப் பற்றி விமர்சிக்கும் மனப்பழக்கம்! 

பொதுவாக ஒரு விடயத்தைச் சிந்திக்கும்போது நாம் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட பழைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைதான் சரியானது என்றே எமது சிந்தனை ஓடும்; அதிலிருந்து சற்று விலகி நாம் சிந்திக்கும் விடயத்துடன் தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் உள்வாங்கி அவை எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சிந்தித்து அறிய முயற்சிப்பதுதான் விமர்சன சிந்தனை அல்லது CT. 

விமர்சன சிந்தனையின் நோக்கம் நான் இதைச் செய்யப்போகிறேன் அது சரியான விளைவினைத் தருவதாக இருக்குமா என்பது;

இதற்கு சாணக்கியர் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று சொல்லுவார்? 

1) நான் ஏன் இந்தக்காரியத்தைச் செய்ய நினைக்கிறேன்?

2) இதைச் செய்து முடித்த பின்னர் இதன் விளைவுகள் என்ன?

3) இந்த விளைவுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியுமா?

இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலும் உறுதியானதாகவும், தெளிவானதாகவும் மாத்திரம் இருந்தால் மட்டுமே அந்தக்காரியத்தைச் செய்ய வேண்டும். அப்படியாக இல்லாவிட்டால் அவற்றைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்கிறார். இந்த மூன்று கேள்விக்கும் திருப்தியான பதில் இருந்தால் அந்தச் செயலில் எமக்கு பூரணமான சுய பொறுப்பு இருக்கிறது என்றும் மன உறுதியோடு செயலை செய்து முடிப்போம் என்றும் அர்த்தம்!

இந்த மூன்று கேள்விக்கும் சரியாக பதில் தெரியவில்லை என்றால் அந்தச் செயல் குழம்பி நாம் புலம்பப் போகிறோம் என்று அர்த்தம்.


பிரித்தாளும் கோட்பாட்டின் விளக்கம்

Divide and conquer theory explained 

ஜனரஞ்சகமாக சமூகத்தை உசுப்பேத்தும் நபர்களை மக்கள் ஏன் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பற்றி சரித்திரம் என்ன சொல்கிறது?

யுவல் நோஹா ஹரியின் பதில்;

இது சரித்திரப் புத்தகங்களில் காணப்படும் ஒரு பழைய உத்தி! ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தை அடைவதற்கான உத்தி மக்களுக்கிடையிலான நம்பிக்கையை சந்தேகத்திற்கு உட்படுத்தி சமூகத்தைப் பிளந்து தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதிகாரத்தை அடையும் வழி! 

ஆனால் ஜனநாயக வழியில் நீங்கள் அதிகாரத்தை அப்பியாசிக்க வேண்டுமானால் மக்கள் அனைவரிடமும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இருக்க வேண்டும். மற்றைய கட்சிகளையும் நம்ப வேண்டும். மாற்றுக்கருத்து உள்ள எதிராளியுடன் நான் எனது கருத்துக்களில் ஒத்துவரவில்லை என்றாலும் நான் அவர்களை முட்டாள் என்று நினைக்கவில்லை; அவர்கள் தீய பிசாசுகள் என்று எண்ணவில்லை! அவர்கள் எமக்கு தீமை செய்வார்கள் என்று எண்ணவில்லை! இப்படியான எண்ணமே, பண்பே ஜனநாயக முறையின் அடிப்படை!

நான் தேர்தலில் தோற்றாலும் நான் பெரும்பாலான மக்களுடைய ஆணையை மதித்து நடக்கிறேன் என்று செயற்படுவது ஜனநாயக செயல்! மற்றைய கட்சியினர் எனது போட்டியாளர்கள் என்பதை ஏற்காமல் எதிரிகளாக கற்பித்து, அவர்கள் எமது வாழ்க்கையை அழித்து விடுவார்கள், எங்களை அடிமையாக்கி விடுவார்கள்; இப்படியான தோற்றத்தை, பயத்தை ஏற்படுத்தி தேர்தலை வெற்றிபெற சட்டரீதியாகவோ, சட்டத்திற்கு மீறியோ எதையாவது செய்து தேர்தலில் தோற்றாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் ஒரு சர்வாதிகாரியின் பண்பு. 

இந்த நிலை, நாடு உள்நாட்டுப் போரிற்குள் செல்லவோ அல்லது சர்வாதிகாரியின் ஆட்சிக்குள் செல்லவோ முடியும்! சர்வாதிகாரி மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க அவசியமில்லை! மக்கள் ஒருவர் ஒருவரை நம்பாமல் சண்டைபிடித்துக்கொண்டிருப்பது சர்வாதிகாரிக்கு மிக நல்ல விஷயம். அப்படியிருந்தால்தான் மக்கள் ஒன்றுபட்டு தனக்கு எதிராகத் திரும்பி தன்னை வெளியேற்றாமல் இருப்பார்கள் என சர்வாதிகாரி நினைப்பார். 

சர்வாதிகாரம் என்பது களைபோன்றது; அது எங்கும் வளரும்; ஆனால் ஜனநாயகம் என்பது மென்மையான மலரைப் போன்றது! அது வளர்ந்து அழகாவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் இருக்கிறது. அதன் முக்கியமான நிபந்தனை, 

" நம்பிக்கை" - பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். 

ஆனால் இந்த ஜனரஞ்சக அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரே உத்தியைத்தான் செய்கிறார்கள்; இதற்கு சமூகங்கள் தமக்குள்ளே முரண்படக்கூடிய, முன்னர் உருவாகிய சமூகத்திலிருக்கும் காயத்தைக் கண்டுபிடித்து, அதைக் குணப்படுத்தாமல் அதற்குள் விரல்களை விட்டுக் குடைந்து பெரிதாக்கி சமூகங்களுக்கு இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப் பிரச்சனைக்கு அனுப்பப்பட்ட தீர்வாளர்களாக தம்மை முன்னிறுத்தும் விளம்பர உத்தியினை பாவித்து தாம்தான் உகந்த தலைவர் என்ற பிம்பத்தைப் பதிப்பிக்கின்றனர். 

இப்படியாகியவுடன் அதற்குப் பிறகு அங்கு சமூகம் இருப்பதில்லை! பிளவுபட்ட மக்கள் கூட்டத்திடம் மற்றைய கூட்டத்திடமிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை வெல்கிறார்கள்.


Wednesday, August 03, 2022

தலைப்பு இல்லை

Programming skill என்பது மனிதன் கணனிக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் தரும் ஒரு மொழித்திறன். இது சிறுபிள்ளைகளுக்கு creativity, problem-solving skills ஆகியவற்றை விருத்தி செய்யக்கூடியது. 

எமது அடுத்த தலைமுறை சிறுவயதிலிருந்து தமிழ், ஆங்கிலம் முதலியவை படிப்பதைப் போல் ஏன் இந்த Programing language கற்கும் திட்டம் ஒன்றினை தமிழில் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கக் கூடாது?

முதலில் சிறுவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் பாட நூல்கள், வீடியோக்களைச் செய்யலாம்! 

இப்படி நாம் சிறுவயதில் விதைத்தால் எதிர்காலத்தில் ஆற்றலுள்ள இளைஞர்கள் எமது சமூகத்தில் இருப்பார்கள். 

என்ன சொல்கிறீர்கள்? 

உங்கள் ஆலோசனைக்கு

Kumaravelu Ganesan

Muralee Muraledaran

Shaseevan Ganeshananthan

Andrew Vethanayagam

Nishānthan Ganeshan

Nagalingam Sivayogan

Kanaga Gnana

Sivakumar Subramaniam

Danny Subramaniam

Nava Navaratnarajah


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...