குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 10, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - 05

இனி மூன்றாவது பாடல், 

அல்லிக் கமலத் தயனும் மாலும்

அல்லா தவரும் அமரர் கோனுஞ்

சொல்லிப் பரவும் நாமத் தானைச்

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக் கனியைத் தேனைப் பாலை

நிறைஇன் னமுதை அமுதின் சுவையைப்

புல்லிப் புணர்வ தென்று கொல்லோ

என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

முதல் வரியிலுள்ள அல்லி என்ற வார்த்தை பூக்களில் உள்ளே இருக்கும் அகவிதழ்களைக் குறிக்கும், அதை அடுத்து கமலம் என்ற சொல் தாமரை என்று பொருள்படும். இதை உரையாசிரியர்கள் இப்படிப் பொருள் கொள்கிறார்கள். 

அக இதழ்களையுடைய தாமரை மலரிலுள்ள, அயனும் - பிரமனும், மாலும் - திருமாலும், அமரர் கோனும் - தேவர் தலைவனாகிய இந்திரனும், அல்லாதவரும் - மற்றைத் தேவரும்,  இது சாதாரணமாக மாணிக்கவாசகரை ஒரு பக்தர் என்று எண்ணிப் பொருள் கொள்ள இதுவும் சரியாகத் தான் இருக்கும். 

ஆனால் எமது கருத்தோ மாணிக்கவாசகர் சிவயோகத்தில் தேர்ந்த சிவராஜ யோகி, தனது யோக அனுப்பவத்தையே இந்தப் பாடல்களில் கூறுகிறார் என்பது. 

ஆகவே அல்லிக்கமலம் என்பதை அகத்தில் இருக்கும் தாமரை என்று பொருள் கொண்டால் இவை உடலில் இருக்கும் குண்டலினி யோகம் குறிக்கும் ஆதாரச் சக்கரங்களையே சுட்டுகிறார் என்று வரும். 

இந்தப் பாடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் என்று முதல் மூன்று சக்கரங்களின் செயலால் ஒரு யோகி தனது யோகப் பாதையில் ஏற்படும் தடையை எப்படி மீள்வது என்பது பற்றிக்கூறுகிறார். 

மூலாதாரத்தில் உறைபவன் இந்திரன்

சுவாதிட்டானத்தில் உறைபவன் பிரம்மன்

மணிப்பூரகத்தில் உறைபவன் விஷ்ணு

முப்பது முக்கோடி தேவர்கள் முள்ளந்தண்டு எலும்புகளில்,

இந்த முதல் மூன்று ஆதாரங்களும் உயிரைக் கீழ்ப்பரிணாமங்களில் செலுத்தி பொல்லா மணியாகிய சிவத்தை அடைய விடாமல் செய்பவை, இவற்றின் பிடியில் இருந்து முள்ளந்தண்டு வழி இருக்கும் சுழுமுனை நாடி வழி ஏறி புருவ மத்தியில் பொல்லா மணியைப் புணரவேண்டும். 

இந்திரன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று சக்திகளும் உயிர் பூவுலகில் இயங்க அவசியமான சக்திகள், 

இந்திரன் என்று குறிப்பிடப்படுவது சூக்ஷ்ம உடலிற்கும், ஸ்தூல உடலிலும் அனுபவிக்கும் இன்ப உணர்வுகள்.

பிரம்மா என்பது படைப்புத் திறன், creativity என்று சொல்வது எல்லாம் பிரம்மா

விஷ்ணு என்பது காக்கும் திறன், மனிதனிடம் இருக்கும் காக்கும் பண்புகள் எல்லாம் விஷ்ணுவின் அமிசம். 

உயிர் இன்பத்தை அனுபவித்து, படைத்து, தன்னைக் காக்கும் போது தன்னுள் இருக்கும் தனது தலைவனாகிய சிவத்தை மறந்து போய் விடுகிறது. 

இந்த மூன்று ஆற்றல்களும் சிவத்தின் கூறு தான் என்பதையும் மறந்து விடுகிறது. 

இப்படி மறந்து இவற்றின் ஆளுகையில் மாட்டிவிடக் கூடாது என்பதாலேயே மணிவாசகப்பெருமான் அல்லிக் கமலத் தயனும் மாலும், அல்லா தவரும் அமரர் கோனுஞ்

சொல்லிப் பரவும் நாமத் தானை" என்கிறார். 

இந்த சிவம் ஒளியான சுடராகவும், சொல்லிற்கும் , பொருளுக்கும் அப்பாற்பட்டது என்பதையும் அடுத்த வரிகளில் கூறுகிறார். 

மிகுதி அடுத்த பதிவில்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...