குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 31, 2011

சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை விளக்கம் - 01


இந்தக்கட்டுரை வாசகர்களிடையே விழிப்புணர்வு நோக்கம் கொண்டு எழுதப்படுகிறது. ஏனெனில் தற்காலத்தில் சித்தர் பாடல்களை படித்துவிட்டு தமக்கு தெரிந்த பொருளில் விளக்கம் கூறி வருகின்றனர். உண்மையில் பாஷாணங்கள் சித்தர்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பது பற்றிய  விஞ்ஞான விளக்கம் பற்றி இதில் பார்ப்போம். 

சித்தர்கள் பாடலில் வைத்தியத்திற்காக பல உலோகங்களும், உலோக உப்புகளும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இவற்றைத்தான் பாஷாணங்கள் என்று கூறுகிறார்கள். பாஷாணங்கள் என்றால் "விஷம்" என்று பொருள் படும். அதாவது தகுந்த சுத்திகரிப்பு முறையின்றி உட்கொள்ளப்பட்டால் பல்வேறு கொடிய வியாதிகளையும், மரணத்தையும் ஏற்படுத்தவல்லது. இவற்றிற்கு சித்தர் பாடல்களில் சுத்திமுறை கூறப்பட்டுள்ளது. இதனை நேர்பொருளில் பார்க்கும் பல (தற்காலத்து) புரவலர்கள் அதன் படி சுத்தி செய்ததாக கூறி தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். யாராவது எடுத்துக்கூறமுற்பட்டால் அதே சித்தர் பாடல்களில் தமக்கு சாதகமான பாடல்கள் ஒன்றிரெண்டை எடுத்துக் கூறி ஆணவம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சித்தர்கள் ஆணவம் மனதுக்கேறிய மனிதர்கள் இது போன்ற விடயங்களில் மனதினை செலுத்தி தம் மனதினை பக்குவப்படுத்த வேண்டியே சித்துக்களும் இரசவாதமும் செய்தார்களேயன்றி இயற்கைக்கு முரணான விடயங்கள் எதுவும் தமது பெயர் புகழுக்காக செய்தார்களில்லை. மனமயக்கம் கொண்டவர்களுக்கு சித்துக்களும் இரசவாதமும் பெரிய விடயங்களாக தெரியும்.

சரி பாஷாணங்கள் எவையெனப்பார்ப்போம்; குணபாடத்தின் படி தாதுப்பொருட்கள் நாலு வகைப்படும் 
  1. உலோகங்கள் - தங்கம், வெள்ளி, ஈயம் முதலான எட்டு உலோகங்கள் கூறப்பட்டுள்ளது. 
  2. உப்புகள் - இயற்கை உப்பு பத்து, செயற்கை உப்பு பதினைந்து
  3. பாஷாணங்கள் - இயற்கை பாஷாணம் முப்பத்தியிரெண்டு, செயற்கை பாஷாணம் முப்பத்தியிரெண்டு
  4. உபரசங்கள் - நூற்றியிரண்டு


இந்த நாலு வகைகளுமே இரசவாதத்திற்கு முக்கியத்துவமாக கூறப்படுவன. இவற்றுள் முக்கியமான விடயம் என்னவென்றால் இவை சித்தர்களின் பகுப்பு முறை, இவற்றை நமது நவீன பகுப்பு முறை பெயர்களுடன் ஒப்பிட்டால் வீண்குழப்பம் தான் மிஞ்சும். இதிலிருந்து ஒரு விடயத்தினை அறிந்து கொள்ளவேண்டும், இவை குழுக்குறி, அந்த குழுவைச்சார்ந்தவர்களுக்கே உண்மை விளங்கும். இல்லவிட்டால் பெருங்குழப்பம் தான். இதற்கு நல்ல நகைச்சுவை கதையொன்று உளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டினை சுற்றிப்பார்க்க வந்த ஆங்கிலேயர் ஒருவர் வினோதமான குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளார்; "இந்தியாவில் ஆற்றங்கரையோரமுள்ள பாறாங்கற்களை துணிகளால் பிளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டேன்" என்று, உங்களுக்கு விளங்க்கியிருக்கும் என்று நினைக்கிறேன், சலவையாளர் ஒருவர் துணிதோய்ப்பதைதான் இவ்வாறு வியாக்கியானப்படுத்தியிருக்கிறார். 

சரி விடயத்திற்கு வருவோம், மேற்குறிப்பிட்ட தாதுக்கள் அனைத்தையும் பற்றியும் இங்கு ஆராயமுடியாது, முக்கியமான பாதரசம் பற்றிம் அதனுடன் தொடர்புடைய பூரம், வீரம் பற்றி மாத்திரம் ஆராய்வோம். 

பாதரசம்:
தூய பாதரசம் (Mercury), இதுதான் இரசவாதத்தின் அடிப்படையாக உள்ளது. இதனை கட்டத்தெரிந்தவன் அனைத்து உலோகங்களையும் உண்டாக்கும் வல்லமை உடையவனாகிறான் என்கிறார்கள் சித்தர்கள். (இது மறை பொருளான வாசகம்) இதன் சிறப்பு எண்ணிலடங்காததாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரி இது பற்றி நவீன விஞ்ஞானம் என்ன கூறுகினறது என்று பார்ப்போம்.  

Mercury is the only metal that is liquid at standard conditions for temperature and pressure; With a freezing point of −38.83 °C and boiling point of 356.73 °C, mercury has one of the narrowest ranges of its liquid state of any metal. Mercury dissolves to form amalgams with gold, zinc and many other metals. Because iron is an exception, iron flasks have been traditionally used to trade mercury. Other metals that do not form amalgams with mercury include tantalum, tungsten and platinum. When heated, mercury also reacts with oxygen in air to form mercury oxide, which then can be decomposed by further heating to higher temperatures. Since it is below hydrogen in the reactivity series of metals, mercury does not react with most acids, such as dilute sulfuric acid, though oxidizing acids such as concentrated sulfuric acid and nitric acid or aqua regia dissolve it to give sulfate, nitrate, and chloride salts. Like silver, mercury reacts with atmospheric hydrogen sulfide. Mercury even reacts with solid sulfur flakes, which are used in mercury spill kits to absorb mercury vapors (spill kits also use activated carbon and powdered zinc)

ஆக இரசம் என்பது தங்கம், ஈயம் என்பவற்றுடன் கலப்படையக்கூடியது. கலப்படையும் விகிதாசாரத்திற்கேற்ப அது தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ தோற்றமளிக்ககூடியது. 

இதனை உட்கொள்வதால்/முகர்வதால், தொடுகையுறுவதால் வரும் உடல் கேடுகள் பின்வருமாறு அறியப்பட்டுள்ளது; 

  • The World Health Organization, OSHA, and NIOSH all treat mercury as an occupational hazard, and have established specific occupational exposure limits.
  • Medical Case control studies have shown effects such as tremors, impaired cognitive skills, and sleep disturbance in workers with chronic exposure to mercury vapor even at low concentrations in the range 0.7–42 μg/m3.
  • A study has shown that acute exposure (4 – 8 hours) to calculated elemental mercury levels of 1.1 to 44 mg/m3 resulted in chest pain, dyspnea, cough, hemoptysis, impairment of pulmonary function, and evidence of interstitial pneumonitis.
  • Acute exposure to mercury vapor has been shown to result in profound central nervous system effects, including psychotic reactions characterized by delirium, hallucinations, and suicidal tendency. Occupational exposure has resulted in broad-ranging functional disturbance, including erethism, irritability, excitability, excessive shyness, and insomnia.
  • With continuing exposure, a fine tremor develops and may escalate to violent muscular spasms. Tremor initially involves the hands and later spreads to the eyelids, lips, and tongue. Long-term, low-level exposure has been associated with more subtle symptoms of erethism, including fatigue, irritability, loss of memory, vivid dreams, and depression.


இவ்வாறான கொடிய விஷமுள்ள இரசத்தினை சுத்தி செய்வதற்கு பயன்படுத்தும் முறை கீழ்வருமாறு குணபாடத்தில் விபரிக்கப்பட்டுள்ளது; 

ஒரு பலம் (35 கிராம்) இரசத்தினை செங்கல் மாத்தூளிலும், மஞ்சள் பொடியிலும் ஒவ்வொருமணி நேரம் ஆட்டி, சுத்த நீரில் கழுவி, ஒரு படி (1.3 லீற்றர்) மேனிச்சாற்றிலிட்டு அடுப்பிலேற்றி சாறு சுண்டும்படி எரித்து எடுத்தால் சுத்தியாகும். 

இதிலுள்ள ஒவ்வொரு பொருளினது இரசாயனவியற் பண்புகளை பார்ப்போம்;
  •  செங்கல் மாத்தூள் - contain 30-40% aluminium oxide or alumina and 50% silicon dioxide or silica. 
  •  மஞ்சள் (Curcuma longa): Turmeric contains up to 5% essential oils and up to 5% curcumin, a polyphenol. Curcumin is the active substance of turmeric and curcumin is known as C.I. 75300, or Natural Yellow 3. The systematic chemical name is (1E,6E)-1,7-bis(4-hydroxy-3-methoxyphenyl)-1,6-heptadiene-3,5-dione.
  •  குப்பைமேனிச்சாறு (Acalypha indica): Alkaaloids “acalypus” and “acalyphine.


இவற்றை சேர்த்து அரைக்கும் போது எந்தவகையான இரசாயனவியல் மாற்றம் நிகழ்ந்தாலும், உடலுக்குள் உட்கொள்ளும் போது அது இரசத்தினை கொண்டிருக்கும். அது கட்டாயம் உடலினை பாதிக்கும். 

 அடுத்த பதிவில் பூரம் பற்றி பார்ப்போம். 

Saturday, July 30, 2011

சித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்


சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம்  செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்கவாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமனுக்கு சொல்பவர். சுருங்கச்சொன்னால் எமதர்மராஜனின் கணக்குப்பிள்ளை. இவரைப்பற்றிய கதைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 

பார்வதி தேவி வரைந்த சித்திரம் அவராலேயே உயிர் கொடுக்கப்பட்டது, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.

சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். 

இவற்றை விட இவரது பெயர் கூறும் இன்னொரு விடயம் என்ன வெனில் "சித்ரம்" என்றால் வரையப்பட்டது என்று பொருள், குப்தம் என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். 

இனி இவர் பற்றிய மேற்கூறிய புராணக்கதை பற்றிய சூட்சுமத்திற்கு வருவோம்; 

முதலாவது பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டார் என்பது, பார்வதி தேவி உலகினை படைத்த சக்தி, அந்த சக்தியின் ஒருபகுதி தான் மனச்சக்தி, மனச்சக்தி தெய்வமனம் (divine mind), ஆகாய மனம் (Cosmic mind), மனித மனம் (Human mind) என இயங்குகிறது. தெய்வமனத்தின் ஒரு கூறுதான் ஆகாய மனம், ஆகாய மனத்தின் ஒரு கூறுதான் மனித மனம். ஆக மனித மனம் எண்ணும் எண்ணங்கள் ஆகாயமனத்தில் பதியப்பட்டு சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட எண்ணங்கள் பிரபஞ்சமனதிற்கு செல்லும் போது அதன் செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு மூன்று மனங்களும் இணைக்கப்படும் போது ஒருவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் செயல் பெறத்தொடங்குகிறது. ஆக இந்த மூன்று மனங்களை இணைக்கும் சக்தி அல்லது சேமிப்பகம் தான் "சித்ரகுப்தன்" - அதாவது மனித எண்ணங்கள் சேமிக்கபடும் சித்தம் எனப்படும் ஆழ்மனம் (Subconsciousness mind) சித்ரகுப்தரின் ஒரு பகுதி, இது போல் ஆகாய மனத்தில் சேமிக்கப்படும் "ஆகாய சித்தம்" சித்ரகுப்தனின் ஒரு பகுதி. பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து தோன்றினார் என்பது பிரபஞ்ச மனசக்தியிலிருந்து பகுக்கப்பட்ட ஒரு பகுதி என்பதேயாகும். நவீன உளவியல் சற்று தெரிந்தவர்களுக்கு புரியும் மனம் என்பதின் ஒரு கூறுதான் "சித்தம்" எனும் ஆழ்மனம் என்று. அதாவது பகுக்கமுடியாதபடி மனமும் சித்தமும் இரண்டறக்கலந்தவை. ஆக சித்ரகுப்தன் என்பது நம் எல்லாருடைய சித்தம் எனப்படும் ஆழ்மனமேயாகும். 

இரண்டாவது சித்திரை மாதம் தொடர்பான கதை, நாம் எல்லோரும் அறிவோம் சித்திரை மாத பௌர்ணமி சித்ரகுப்தரிற்கு விஷேடம் என்று. சோதிடம் அறிந்தவர்களுக்கு தெரியும் சந்திரன் மனக்காரகன், அதாவது பூமியில் வாழும் மனிதரனைவரது மனமும் சந்திரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பௌர்ணமி அன்று மனச்சக்தி அதிகரிக்கும். அதனால் தான் அதனை தாங்கும் வலிமையற்ற நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. சித்தபிரமை பிடித்தவர்களுக்கு அதிகமாகிறது. அதே நேரம் மனதினை அடக்கி ஆளதெரிந்தவர்களுக்கு சாதனை புரிய ஏற்ற நாள். இதனால் தான் பௌர்ணமி அம்பிகைக்கு விஷேடமாக கருதப்படுகிறது. ஏனேனில் மனச்சக்தி தான் அனைத்திற்கும் அடிப்படை.  ஆக பௌர்ணமி அன்று நாம் மனதில் எண்ணும் எண்ணம் அதிக வலிமையுடையதாக எமது சித்தத்திற்கூடாக ஆகாய மனத்தில் பதியப்பட்டு, பின்பு பிரபஞ்ச மனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு காரியம் நிறைவேறுகிறது. இதனால் தான் பௌர்ணமி அன்று விரத நாளாகவும், புனித நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற வழிமுறையும் இதுதான். இது சித்ராபௌர்ணமி அன்று மட்டும் என்பதில்லை, எந்த பௌர்ணமி தினத்திலும் இதே விளைவுதான். குறைந்தது வருடம் ஒருமுறையாவது இந்த இரகசியத்தினை பயன்படுத்தி மக்கள் பயன்பெறட்டும் என்று சித்தர்கள், ரிஷிகள் இவ்வாறு கதைகளாக கூறியுள்ளார்கள். 

Friday, July 29, 2011

ஏகலைவன் கதையின் சூட்சுமம்


ஏகலைவன் என்பவன் வேடர் இனத்தைச் சேர்ந்தவன். வித்தையில் ஆர்வமுள்ள இவன் துரோணரிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்று மன்னர்களுரிய சகல வித்தைகளையும் கற்றுத் தர வேண்டுகிறான். ""க்ஷத்தியர்களுக்குரிய வித்தையை வேடனான உனக்கு கற்றுத் தரமாட்டேன், என மறுத்து விட்டார் துரோணர். வேடனுக்கு தேவை விலங்குகளை வேட்டையாடும் அம்பெய்யும் கலை தான். மற்றவை எதற்கு என்பது துரோணரின் வாதம். ஏகலைவனுக்கு மிக்க வருத்தம். ஆனாலும், முயற்சியுடையவன் எதிலும் வெற்றி பெற்றே தீருவான். தன்னை துரோணர் ஜாதி துவேஷம் காட்டி ஒதுக்கி விட்டாரே என அவன் அவர் மீது கோபப்படவில்லை.

மரங்களுக்கு தீ வைக்கவில்லை. அவரது ஜாதிக்காரர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவன் துரோணரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்தான். அந்த சிலையை உயிருள்ள துரோணராகக் கருதி, அவரைத் தன் மானசீக குருவாக ஏற்று, துரோணர் அவரது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அத்தனை வித்தையையும் கற்றுத் தேறி விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. ஏகலைவனை மறந்தே போய் விட்டார். துரோணரின் முகமும் இவனுக்கு மறந்து விட்டது. ஒருநாள் நாய் ஒன்று வாயைத் திறக்க முடியாமல் அங்கே வந்து நின்றது. அதன் வாயில் அம்புத்தையல் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அர்ஜூனன் ஆச்சரியப்பட்டு, ""குருவே! தாங்கள் இப்படி ஒரு அற்புத வித்தையை கற்றுத்தரவே இல்லையே. இது நேர்த்தியான ஒன்றாக உள்ளதே, என்றான்.

துரோணருக்கும் ஆச்சரியம். தனக்கு மட்டுமே தெரிந்த இந்தக்கலையை தெரிந்து கொண்டவன் யார்? என்ற ஆச்சரியத்துடன் நாயின் பின்னால் சென்றார். அங்கே ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். "" நீ யார்? இந்த அற்புதமான கலைகளையெல்லாம் உனக்கு சொல்லித் தந்தது யார்?  என்றார். அவன் மெழுகு பொம்மையைச் சுட்டிக்காட்டினான். தன் இளவயது உருவத்தை அப்படியே வடித்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், ""நான் தான் இந்த துரோணர், என்றதும். அவன் காலில் விழுந்தான்.

தாங்கள் எனக்கு அனுமதி மறுத்ததால், தங்களை மானசீக குருவாக ஏற்று நானாகவே படித்தேன், என்றான். இவனிடம் இக்கலை இருந்தால் சரிப்பட்டு வராது எனக் கருதினார் துரோணர். ""மாணவனே! அப்படியானால் நீ குரு காணிக்கை தர வேண்டாமா? என்றார். அவன் என்ன வேண்டும் என்றான். ""உன் கட்டை விரலைக் கொடு என்றார். மாணவன் மறுக்கவில்லை. கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். துரோணர் இப்படிச் செய்ததைத் தான் தவறென சிலர் வாதிடுவர். வில்வித்தை பயின்ற இவன் ஒரு நாயையே இந்தப் பாடு படுத்துகிறான் என்றால், மனிதர்களை இந்த விதை கொண்டு என்னபாடு படுத்துவான். அதனால் தான் கட்டை விரலை வாங்கி விட்டார் துரோணாச்சாரியார். ( நன்றி: தினமலர்)

சரி இந்தக்கதையில் பல விடயங்களை நாம் பார்க்கலாம், நாம் ஏகலைவன் துரோணருக்கு மாத்திரம் தெரிந்த இரகசியத்தினை அறிந்து கொண்டான்? என்பதனை ஆராய்வோம். இதற்கு மனித மனத்தின் செயற்பாடு பற்றி சிறிது தெரிதல் வேண்டும். மனம் என்பது ஒருவித சக்தி அலைக்கழிவாக செயற்படுகிறது,  மனிதன் தன் மனதில் நினைக்கும் எதுவும் அழிவதில்லை, அவையனைத்தும் இந்த ஆகாய மண்டலத்தில் எண்ண அலைகளாக அலைக்கழிந்தவண்ணமே இருக்கும். இவற்றை  சரியான வழியில் ஒருங்கிசைக்கத்தெரிந்தவர்கள் அவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படைத்தத்துவத்தில் தான் குறி சொல்பவர், மந்திரவாதி, டெலிபதி என்ற அனைத்தும் செயற்படுகிறது. ஆக ஆகாயத்தில் அலைக்கழியும் எண்ண அலைகளை கவரத்தெரிந்தவர்கள் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம். 

ஆக ஏகலைவன் என்ன செய்தான்; துரோணரது ஊருவை மனதில் எண்ணி அவரது மனதினை ஆகய மனதூடாக தொடர்பு கொண்டான், அதன் பயனாக துரோணரின் வித்தைகள் அனைத்தையும் அறிந்துகொண்டான். ஆனால் குருவின் மனப்பூர்வ ஆசியிலாது பெற்ற வித்தை அவனுக்கு பயன்படாமல் போய்விட்டது. எனினும் சித்தர்களை, ரிஷிகளை வழிபடவிரும்புவபர்கள் இந்த முறையினை பயன்படுத்தலாம். ஆயினும் பரிபூர்ண குருபக்தியுடன் அட்டாங்க யோகத்தில் நான்காவது படியாகிய "பிரத்தியாகாரம்" - மனதினையும் புலன்களினையும் கட்டுப்படுத்திய பின் இம் முறையினை பிரயோகித்து பார்ப்பது ஏகலைவனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படாமல் இருப்பதற்கு உதவும். 

இதில் விளக்கப்பட்டதை சிந்திதறிந்து கொள்வதன் மூலம் மேலும் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம். 



Monday, July 18, 2011

குருவணக்கம்



உடல் தந்து நல்வழிப்படுத்திய என்னை பெற்ற
அன்னையின் திருவடி போற்றி

ஞான குருவாம் அகஸ்திய மாமகரிஷியை சிறுவயது முதல் வழிபட வழிகாட்டிய
தந்தையின் திருவடி போற்றி

ஆதிகுரு
அகத்திய மகரிஷி குருவின் பாதம் போற்றி!

குலகுருவாய் வித்தை அளித்திட்ட
மௌனகுரு சித்தர் பாதம் போற்றி

மானச குருவாய் ஆத்ம யோக ஞான வித்தைகளின் சூட்சுமங்கள் புரிவித்த
ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர தேவரின் பாதம் போற்றி!

சித்த நெறியில் தீட்சை அளித்திட்ட
காயத்ரி சித்த முருகேசுகுருவின்  பாதம் போற்றி!


ஸ்ரீ வித்தையினை பூரண தீட்சை தீட்சை அளித்திட்ட

ஸ்ரீ அன்னப்பூர்ணா அம்பா ஸஹித அமிர்தானந்த நாதர் பாதம் போற்றி

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...