குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 24, 2015

பஞ்ச கோசம் என்பது மனிதனில் உள்ள ஐந்து உடல்களா?

இன்று யோகம் கற்பிக்கும் பலரும் பஞ்ச கோசம் என்பது மனிதனை சுற்றி உள்ள நுண்மையான ஐந்து உடல்கள் என்றும் பலவாறு கூறி வருகிறார்கள். முதலில் கோசம் என்பதற்கு உடல் என்பது பொருள் இல்லை. 

இரண்டாவது கோசம் என்றால் உறை என்று பொருள் கூறிவருவது ஓரளவு சரியானது. ஆனால் அது யோகத்தில் ஏன் அவற்றை கோசம் என கூறுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. 

கோசம் என்றால் பொக்கிஷம் அல்லது புதையல் என்று பொருள். மனிதனில் இருக்கும் பிராண சக்தி புதைந்து கிடக்கும் இடம்தான் பஞ்ச கோசங்கள்.

மனிதனது தேவை போக மிகுதியாக உள்ள பிராணன் உடலில் சேர்ந்தால் அது அன்னமய கோசம் .

பிராணனில் சேர்ந்தால் பிராணமய கோசம்

புத்தியில் சேர்ந்தால் விஞ்ஞான மய கோசம்

மனதில் சேர்ந்தால் மனோமயகோசம்

ஆத்மாவில் சேர்ந்தால் ஆனந்தமய கோசம்

இது ஒருமனிதன் எவ்வளவு பிராணனை, எங்கு சேர்க்கிறான் என்பதை குறிக்கும் யோகமொழி.

இது சாதாரண மனிதனிற்கு இயற்கை நிர்ணயித்த வாறும், ஆன்ம மன பரிணாமங்களுக்கு ஏற்றவாறு அவனது கோச நிலை இருக்கும். அதனை யோக, தந்திர  சாதனைகள் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும். 

தாந்திரீக சாதனை கற்க விரும்புபவர்களுக்கான சில அடிப்படை புரிதல்கள்

தாந்திரீகம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக குரு சிஷ்ய பிரம்பரையினூடாக பரிசோதனை உத்திகள் மூலம் கையாளப்பட்ட விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் பிண்டம் எப்படி ஆக்கப்பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பதனை பரிசோதனை மூலம் அறிந்து அதனை எப்படி அண்டத்தில் இணைத்து சக்தி பெற்று ஒளி நிலையை அடைவது என்பதனை உணர்வு மூலம் குருசிஷ்ய பரம்பரையில் பரிமாறப்பட்டு வருகிறது.

தாந்திரீகத்தினை கருத்துக்களை விளங்கிக்கொள்ள கீழ்வரும் சில அடிப்படை புரிதல்கள் அவசியம்.
  1. குருபரம்பரையிநூடக தாந்திரிகசாதனையில் பயணித்து சித்தி பெற்ற குருவிடம் இருந்து சக்தி பரிமாற்றம் – இதனை தீக்ஷை என்பார்கள்  
  2. அதன் பின்னர் தொடர்ச்சியான பயிற்சி – இதனை சாதனை என்பார்கள்
  3. முன் துணிவில்லாமல் (prejudice), எண்ணங்கள் அற்ற மனத்துடன்   குருபரம்பரைக்குரிய மூல நூற்களை கற்றல்,
  4. மேலும் தெய்வம் எனும்போது தாந்திரீகம் எங்கோ வானத்தில் இருக்கும் அனுபவத்திற்கு வராதா கற்பனையான எதையோ தெய்வம் என்று கற்பிப்பதில்லை. அதனால் எமக்கு உபதேசிக்கும், தெய்வ சக்தியை பரிமாறும் குருவே முதல் தெய்வம், அந்த குருவில் தெய்வ சக்தியை அறிந்து, பின்னர் தன்னில் தெய்வ சக்தியை விழிப்பித்து தெய்வமாகும் முறையே தாந்த்ரீகம் ஆகும்.
  5. எண்ணங்கள் அற்ற மனம் என்பது குருவினதும் தெய்வ அனுக்கிரகத்தினால் வருவது. இது அமைந்தால் மட்டுமே தாந்திரீகத்தில் உபதேசிக்கப்படும் விடயங்களை விளங்கி கொள்ள முடியும்.
  6. தாந்திரீகம் சக்தியை உருமாற்றி உயர்ந்த சக்தியாக்கி வாழ்க்கைக்கு தேவையான போகத்தையும், யோகத்தையும் அடைவிக்கும்.
  7. பதஞ்சல யோகம் யோகம் என்பது சித்த விருத்தி நிரோதம் என்று கூறும். சித்தத்தின் விருத்தியை கட்டுப்படுத்த இரண்டு கையிறுகள் உண்டு. ஒன்று மனம், மற்றது பிராணன். இதில்பிராணனே மனதிற்கு சக்தியை கொடுத்து சித்தத்தின் விருத்தியை தூண்டுவது. இதுவே சக்தி மூலம். தாந்திரீகம் பிராணனை கட்டுப்படுத்தும் வழிகளை கூறும்.
  8. தாந்திரீகம் என்றால் தற்போது பலரும் எதோ காம களியாட்டம் நடாத்தும் பயிற்சி என்று நினைத்துக்கொண்டுதான் அனுகிகிரார்கள். தாந்திரீகம் மனிதநிரின் எந்த உணர்ச்சிகளையும் அடக்க, அழிக்க சொல்வதில்லை, மாறாக இயல்பாக ஏற்றுக்கொள்ள சொல்கிறது. இந்த அடிப்படையில் மனிதனது (கோபம், பொறாமை, குரோதம், காமம், மோகம், என) ஒவ்வொரு உணர்ச்சியிலும் ஏற்படும் பிராணனின் செலவை மிச்சப்படுத்தி எப்படி உயர்வாக ஆக்குவது என்ற வழிகளை சொல்லும். இந்த வழிகளில் காமத்தினை தெய்வ சக்தியாக உயர்த்துவதும் ஒரு வழியே அன்றி அது மட்டுமே தாந்திரீகம் இல்லை.
  9. இப்படி பிராண சக்தியை உயர்த்துவதற்குரிய அடிப்படை மனிதனது சக்தி எப்படி செலவாகிறது என்பதனை அறிதல், அதற்குரிய வழி முக்குணங்கள். முக்குணங்களில் சத்துவம் என்பது சக்தி இயல்பான இயற்கை நிலையில் இருப்பது, ராஜசம் என்பது அளவுக்கு மீறி செல்வாகுவது, தாமசம் என்பது அளவற்ற சக்தி பாவிக்காமல் தேங்கி கிடப்பது.
  10. ஆக மாணவனின் நிலை அறிந்து குருவானவர் அவனுக்குரிய வழிகளை உபதேசிப்பார். இயல்பான சத்துவ நிலையினை அடைந்து பிராண சக்தி சமநிலை அடைவதே தாந்திரீகத்தின் இலக்கு. குறித்த ஒரு சாதகனில் காம மையம் வேலை செய்யாமல் பிராண சக்தி அளவுக்கு அதிகமாக தேங்கி இருப்பின் அத்தகையவனுக்கு காம மையத்தை தட்டி எழுப்பும் ராஜச குண சாதனைகளை வழிகாட்டி சக்தியை செலவழித்து சமநிலைக்கு கொண்டுவரும் படி செய்வார். அதுபோல் அளவுக்கு அதிகமாக செலவழிக்கும் ராஜச குணத்தவனிற்கு பிராண செலவை குறைக்கும் வழிகள் போதிக்கப்படும்.
  11. இப்படி செலவாகும் பிராணனை சேமித்தால் அந்த சேமிப்பு பொக்கிஷமாக சேமிக்கப்படும் இடம் கோசங்கள் எனப்படும். இவை ஐந்து உண்டு. இவற்றையே பஞ்ச கோசங்கள் என்று கூறுவார்கள். இவற்றை தற்காலத்தில் யோகம் கற்பிப்பவர்கள் மனிதனுக்கு ஐந்து உடல் உண்டு என்றும், அவை படர்ந்து உள்ளதாகவும் கதைகூறி  கற்பனை செய்ய சொல்கிறார்கள். உண்மையில் கோசம் என்றால் புதையல், பொக்கிஷம் அல்லது செல்வ சேமிப்பு என்றே அர்த்தம். உடல், மனம், பிராணன், புத்தி ஆன்மா ஆகியவற்றில் இயங்கும் பிராண சக்தியை தகுந்த சாதனைகள் மூலம் சேமித்து வைக்கும் நிலையே பஞ்ச கோசம் எனப்படும். இப்படி செமிப்பவர்களுக்கே பஞ்ச கோசம் விருத்தியாகும். 


Friday, April 17, 2015

கோரக்க நாதரின் நாத விந்து இரகசியம்




கோரக்க சித்தர் சமஸ்கிருதத்தில் பல தாந்திரீக நூற்களை இயற்றியுள்ளார். அவற்றுள் முக்கியமானது கோரக்க உபநிடதமாகும். இது முக்கியமான ஒரு தாந்திரீக உபநிடதமாகும். இதிலுள்ள ஒரு ஸ்லோகத்தையும் அதன் விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

ஈஸ்வர சந்தான் சந்தான்தோப்ரகார்கோ
நாத ரூப பிந்து பிந்து ரூப நாத
சிஷ்யா பிந்துரூப புத்ரா நாத ரூப
நாத சக்தி ரூப பிந்து நாத ரூப கரி பஹயே

பொருள்:
“பிரம்மத்திற்கு நாதமும் விந்துவும் இருபிள்ளைகள், (மனித உடலில்) நாதத்தில் விந்து உண்டு, விந்துவில் நாதம் உண்டு, (மனித உடலில்) சிஷ்யன் விந்து ரூபமான புத்திரன், நாதம் சக்தி ரூபமாக உள்ளது”.

இந்த ஸ்லோகம் நாத சம்பிரதாய யோகிகள் கோரக்க நாதரிடம் தாம் நாத விந்துவை உயர்த்தி ஊர்த்துவ ரேதஸ் யோகிகளாக மாறவேண்டும் என பிரார்த்திக்கும் ஸ்லோகமாகும். இது கோரக்கரால் அவரது மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிராத்தனையாகும். இந்த பிரார்த்தனையில் ஒருவன் தனது விந்தினை ஊர்த்துவமுகமாக்குவதற்குரிய இரகசியமும் கூறப்பட்டுள்ளது.
.

முதலாவது வரியில் பிரம்மத்திற்கு இரண்டு பிள்ளைகளான விந்துவும் நாதமும் உடலில் உள்ளது என்பது கூறப்பட்டுள்ளது. பிந்துவில் நாதம் உண்டு என்பது விந்து உடலில் எங்கு சக்தியாக சேர்க்கவேண்டும் என்பதன் குறியீடு, இது அனாகத சக்கரத்தை குறிக்கும். அனாகத சக்கரம் சூக்ஷ்முமான சப்தவடிவாக விந்து சக்தி மாறி சேர்க்க கூடிய இடமாகும். நாதத்தில் விந்து உண்டு என்பது ஆணின் உடலில் இருக்கு விந்து சக்தியாகும். இந்த விந்து எப்போதும் உயிர்ப்புடன் அலையும் நாதத்தின் தன்மையும் கொண்டிருக்கும். இத்தகைய சிஷ்யனதும் அனைத்து மனிதரின் விந்துவிலும் சிவமாகிய ஆதிநாதர் உறைகின்றார். இந்த ஆதிநாதரை நாதம் எனும் சப்தத்தால் எழுப்பி அனாகதத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ளது. 

பிரபஞ்ச சக்தியிடமிருந்து கற்றுக்கொள்வது எப்படி? – பக்தி மார்க்கம்




இந்த பிரபஞ்ச மகாசக்தி எப்போதும் மனிதனிற்கு உதவுவதற்கும் கற்பிப்பதற்கும் தயாராகவும், கற்பித்துக்கொண்டுமே உள்ளது. ஆனால் மனிதன் தன்னிடம் உள்ள மனதை கொண்டு எண்ணங்களை உருவாக்கி கொள்ளும் ஆற்றலால் பிரபஞ்ச சக்தி தரும் பாடங்களை கற்றுக்கொள்வதில்லை. எப்போதும் நடக்கும் செயல்களை பிரபஞ்சத்தின் இயக்கத்தில் இருந்து தனது எண்ணத்திற்கு ஏற்றவாறு நடப்பது இல்லை என்று தனக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே இடைவெளியினை ஏற்படுத்திக்கொண்டு இயங்க முற்படுகிறான். ஆனால் யதார்த்தத்தில் பிரபஞ்சம் மனிதனை விட ஆற்றலில் வெல்லமுடியாத வல்லமை உள்ளது. மனிதன் ஒருக்காலும் பிரபஞ்சத்தை எதிர்த்து வெல்ல முடியாது என்று அறிந்த பெரியோர்கள் அதனுடன் ஒத்திசைந்து நன்மையினை பெறுவது எப்படி என்பதற்கான வழியே “பக்தி மார்க்கம்” என்பது. இன்று பக்தி என்பது பகட்டிற்காக செய்யப்படும் வெறும் சடங்காகி விட்டபோதும் பக்தியின் உண்மை இரகசியம் பிரபஞ்ச சக்தியிடம் தன்னை ஒப்படைத்து அதன் இயக்கத்தில் இணைந்து தன்னை வழிப்படுத்தும் செயலாகும்.


இதனையே பக்தி மார்க்கத்தில் சரணாகதி என்று கூறுவார்கள். இதனை பெறுவதற்கான முதலாவது அடிப்படை பண்பு; எனக்கு கிடைக்கும் அனைத்து அனுபவங்களும், நன்மைகளும், தீமைகளும் பிரபஞ்ச சக்தி எனக்கு அளித்த வரமாகும், இந்த வரத்திலிருந்து பிரபஞ்சம் என்ன கூறவருகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஞானத்தை பெறுகிறேன்” என்ற பண்பாகும். இப்படி எண்ணி எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு காரியத்திலும் பிரபஞ்சம் என்ன கற்பிக்க முனைகிறது என்பதனை அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவன் படிப்படியாக உலக ஞானம் பெற ஆரம்பிக்கிறான். இப்படி உலக ஞானம் பெற்றால் இன்னொரு உலகையே படைக்கலாம் என்று குருநாதர் ஈஸ்வர பட்ட மகரிஷி கூறுவார்.

அகத்தியர் கூறும் மத அரசியல் அதிகார மையங்களின் செயல்கள்

மதங்களும் அரசியல் அதிகார மையங்களும் மனிதன் தனது உண்மை தன்மையான விழிப்புணர்வினை அடைவதை தடுக்கின்றன. தனது உண்மை ஸ்வரூபத்தை தெரிந்த மனிதன் எதற்குபின்னாலும் ஓடாமல் தனது சுயத்தில் திருப்தி அடைபவனாக இருக்க ஆரம்பிப்பான். இப்படிப்பட்ட மனிதர்களை வைத்துகொண்டு அடிமைத்தனத்தை ஏற்படுத்த முடியாது.  இத்தகைய சமூகம் வன்முறை அற்ற அமைதியான ஆனந்தமான சமூகமாக இருக்கும். இத்தகைய மனித சமூகத்தை கட்டி எழுப்ப விரும்பியவர்களே கீழைத்தேய (இந்திய - சீன) ஞானிகள். இப்படிப்பட்ட ஞான நிலை விடயங்களை மக்கள் புரியாதவகையில், இலகுவாக பயன்படுத்தாத வகையில் உருவாக்கப்பட நிர்வாக கட்டமைப்புகளே ஆதீனங்கள், மடங்கள் என்பன. இவை மனிதனை தமது அதிகார இலக்கிற்குள் இயங்க வைக்கும் வகையில் சட்ட திட்டங்களையும், பயமுறுத்தல்களையும் உருவாக்கி மக்களை எப்போதும் பயம் சார்ந்த, பாவம் செய்த ஒருவனாக தன்னை கற்பித்துக்கொண்டு இருப்பான். இப்படியான நிலையில் இருந்து மீண்டு மக்கள் அனைவரும் ஞான நிலை பெறவேண்டும் என்று எண்ணிய சித்தர்களில் அகத்தியர் முதன்மையானவர் அவர் தனது ஞானப்பாடல்களில் கூறும் விடயங்களை கீழே பார்ப்போம். 

இதில் வினோதம் என்னவென்றால் கடவுள் இல்லை என்பவர்களும் பழைய கள்ளு புதியபானையில் என்பதுபோல் அதே மத, அரசியல் மையங்களை ஏற்படுத்திக்கொண்டு தாமும் தமது குடும்பமும் பிழைக்கவே வழிவகை செய்துவருகிறார்கள் என்பதுதான்! 

இந்தப்பாடல்கள் தற்காலத்தில் ஞானம், யோகம், கோயில், குளம் என்று அலைபவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய பாடல்களாகும். 

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு 
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா! 
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார் 
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்; 
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு 
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்; 
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா 
யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே; 2

தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம் 
சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே; 
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் 
கூடி மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும் 
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும் 
இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்; 
வயலான பயன்பெறவே வியாசர் 
தாமும் மாட்டினார் சிவனாருத் தரவினாலே. 3

உத்தார மிப்படியே புராணங் காட்டி 
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்; 
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக் 
கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச் 
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ் 
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் 
பெய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே. 4

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு 
பாரதபு ராணமென்ற சோதி யப்பா! 
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும் 
நிலையான தசரதன்கை வெல்ல வென்றும் 
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும் 
நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும் 
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும் 
பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே. 5

கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும் 
கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள் 
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை 
அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி 
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும் 
உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள் 
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும் 
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே! 6



Thursday, April 16, 2015

கடவுளரின் வாகனங்களும் அதன் அர்த்தமும்.

கடவுள் என்று குறிப்பிடப்படும் உருவங்கள் அனைத்தும் யோகசாதனையில் சாதகன் அடையும் ஒவ்வொரு ஆதாரத்தில் அடையும் சித்திகள், அவர்களின் வாகனம் எனக்குறிப்பிடப்படுபவை அனைத்தும் வாசி எனப்படும் பிராணனுடன் விந்து சக்தி கலந்த குண்டலி ஒவ்வொரு ஆதாரத்தில் இருக்கும் நிலை. இவற்றை கீழ்வரும் பாடல்கள் விளக்கும். பாடல்கள் மறைப்பு இன்றி இருப்பதால் பொருள் விரித்து கூறவில்லை. .

குண்டலியால் மூலசக்தி கணேசனுக்கு
குதித்தேறும் வாகனமே ஆகுவானாள்
மண்ணுடைய பிரமனுக்கு அன்னமானால்
மாயனவ னேறுதற்கு கெருடனானாள்
தென்டிரையி லீசனுக்கு ரிடபமானாள்
ஜெயம் பெற்ற மகேசனுக்கு யானையானாள்
அண்ட சதாசிவத்திற்கு குதிரையானாள்
அம்மைசிவ காமியம்மை விளையாடல்காணே
 சித்தர் தனிப்பாடல் 


கேளடா சரிதையொடு கிரிகை யோகம்
கிருபையுடன் ஞானமெல்லாம் வெளியாய்ப் பாடி
வாழடா வாழ்வதற்கு வகையுங் காட்டி
வாடாத தீபமதை அறிந்தே ஏற்றித்
தேளடா தேட கொடுக்காங் குல தெய்வந்தான்
சீவநிலை சிவ நிலையும் அதுவேயாகிக்
கோளடா வசுரர்களைக் குலைத்துவிட்டேன்
குவலயத்தில் வாசி மயிலேறித்தானே
 சுப்பிரமணியர் ஞானம் - ௦6 

மன்மதனின் காமத்தை பேரின்பமாக்கும் வித்தையின் இரகசியம்

அனைவருக்கும் மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த மன்மத வருடத்தில் மன்மதன் எனப்படும் காமனும் ரதியும் கைக்கொண்ட காமத்தை பேரின்பமாக்கும் வித்தை பற்றிய ஒரு சுருக்க அறிமுகம். இந்த கட்டுரை ஆண் மைய யோக விளக்கம், பெண் மைய யோக விளக்கம் வெகு விரைவில் பகிர்கின்றேன். 



காமம் என்பது மனிதன் பேரின்பம் பெறுவதற்கான திறவுகோல். இதன் அடிப்படையிலேயே ரதி மன்மதன் சாதனை ஸ்ரீ வித்தையில் உள்ளது. இதன் அடிப்படையினை புரிந்துகொண்ட சாதகன் காமத்தினை விலக்காமல் உயர்ந்த யோக சக்தியாக்கி கொள்ளமுடியும். இதற்கு உடல், மனம், பிராணன் ஆகியவற்றை பற்றிய சூக்ஷ்ம புரிதல் அவசியம். இங்கு இதன் சுருக்க இரகசியங்களை விளக்குகிறேன்! இந்த அடிப்படையிலேயே சித்தர்களது ஸ்ரீ வித்தை இரகசியங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 
  1. சிவத்திலிருந்து பிரிந்து வந்த மூலசக்தி பிரகிருதி எனப்படும். இந்த மூலசக்தி அண்டத்திலும் பிண்டத்திலும் பிராணனாக வியாபித்திருக்கிறது. இந்த பிராணன் இயங்கும் தன்மையுடைய சக்தியாகும். ஆணின் மனித உடலில் மூலசக்தி சிவமான விந்து எனப்படும் ஸப்த தாதில் உறைந்துள்ளது. இந்த விந்துவே அண்டத்தில் சிவம் எனப்படும் பிந்துவின் பிண்ட வடிவமாகும். பிரஞ்சத்தின் மூலவடிவம் மூலப்பிரக்ருதியும் சிவமும் இணைந்த வடிவமாகும். ஆனால் மாயா சக்தியின் ஆற்றலால் சிவமும் சக்தியும் பிரிந்த நிலையிலேயே அண்டமும் பிண்டமும் காணப்படுகிறது. இந்த இணைப்பே யோக சாதனை, ஞான சாதனை, முக்தி, பேரின்பம் என அழைக்கப்படுகிறது. ஆக அண்டத்திற்கு மூலமான சிவம் ஆணின் மனித உடலில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்து ஆகவும், பிராணன் ஆகவும் இருக்கிறது. இதனை ஆன்மா என்ற உணர்வுடன் இணைக்கத்தெரிந்தால் முக்தி கிடைக்கும் என்பதே இதன் அடிப்படை. இதுவே மூல சக்தி நிலை எனப்படுவது.
  2. காமசக்தி பௌதீகமாக மனித இனத்தை விருத்தி செய்வதற்கும், மனததளத்தில் பெண்ணுடன் காதல் எனும் இன்ப உணர்வினை பெறுவதற்கும், அடிப்படை ஆக்க சக்தி – கிரியா சக்தி பெறவும் உதவுகிறது. அண்டத்தில் எல்லா காரியமும் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கும் கிரியா சக்தி பிண்டத்தில் காம சக்தியாக இயங்குகிறது.
  3. காமத்தினை தனது பெண் துணையுடனோ அல்லது தனியாகவோ பிராணனுடன் இணைத்து ஆன்மாவில் சேர்க்கத் தெரிந்தால் அதுவே முக்தி! பேரின்பம்.
  4. ஆணில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்துவே சக்திக்கான மூலமாகும். ஆணின் விந்து என்பது சப்தாதுக்கள் ஒன்றின்பின் ஒன்றாகிய சாரமாகும். இதனை அளவுக்கு அதிகமாக வீணாக்கும்போது அது மனிதனது நோய் எதிர்ப்பு சக்திதொகுதியிலிருந்தும் நாளமில்லா சுரப்பி தொகுதியிலிருந்து தனது செலவீனத்தை ஈடு செய்து கொள்கிறது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
  5. விந்தினை வீணாக்காமல் சேமிப்பதே முதல் படியாகும். தனது சந்ததியினை உருவாக்குவது தவிர்ந்து விந்தினை வீணாக்குவது பெரும் மதிப்புமிக்க செல்வத்தை வீணாக்குவது என்று ஆயுள்வேத சித்த மருத்துவ நூற்கள் கூறுகின்றன. இப்படி நீண்டகாலத்திற்கு வீணாக்கப்படும் விந்து சக்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாதாக்குவதுடன் மனம் உணர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை பொதுவாக காரணமின்றி பெண்களை வெறுப்புணர்வுடன் பார்த்தல், வக்கிரமான மனநிலை, பயம், பதட்டம் என்பவற்றை உருவாக்கும். மேலும் ஆன்மீக சாதனையில் முன்னேறி செல்லும்போது உருவாகும் அமிர்தம் எனப்படும் தெய்வீக கிரணங்களை உடல் ஏற்க முடியாத நிலை ஏற்படும். இதனாலேயே யோக சாதனையில் விந்து கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாக கூறப்பட்டுள்ளது.
  6. இதற்காக விந்தினை பலவந்தமாக இயற்கைக்கு மீறி அடக்குதலும் வீணாக்குவதால் ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது ஆரம்ப நிலையில், விந்தினை உயர்ந்த தெய்வீக சக்தியாக மாற்றும் உத்தி தெரியாமல் அதீதமாக அடக்குவதும், வீணாக்குவது இயற்கைக்கு மாறானா ஒன்று. அதாவது நெல்லினை விதைத்து தக்க பருவத்தில் அறுவடை செய்து, மீண்டும் விதைக்கு நெல்லினை சேமிப்பதுடன், குத்தி அரிசியை சோறாக்கி கறியுடன் சுவையாக உண்பத்னை உதாரணமாக கொள்ளவும்.
  7. காமம் இயற்கையானதும், அனைவருக்கும் தேவையானதும், ஆரோக்கியமான  ஒன்றுமாகும். இதனை வெறுமனே மேலோட்டமாக விந்து நீங்கி உடல் சார்ந்த இன்பமாக அனுபவிப்பதை விட உயர்ந்த பேரின்பமாக விந்தினை நீக்காமல் எப்படி அனுபவிப்பது என்பதனை அறிவதே இந்த யோகத்தின் இலக்காகும்.
  8. சேமித்த விந்தினை பிராணனுடன் இணைத்தல் இரண்டாவது படியாகும். உடலுறவின் உச்சகட்டத்தில், விந்து நீக்கம் நடைபெறுவதற்கு முன்னர் விதைப்பையில் இருக்கும் விந்திலிருந்து பிராண சக்தி விரிவடைந்து உடலின் மேல் சக்தி மையங்களுக்கு, நரம்புகளுக்கு பரவத்தொடங்கும். இதுவே இன்ப உண்டர்ச்சியினை ஏற்படுத்துவது. இந்த சக்தி நிறைவு மேல் சக்கரங்களில் நிறைவதற்கு முன்னர் விந்தானது குறியினூடாக வெளியேறி ஆணிற்கு உயர்ந்த பேரின்ப உணர்ச்சியினை இல்லாமல் செய்துவிடுகிறது. இதனையே வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைத்தல் என்று சித்தர்கள் குறிப்பிட்டார்கள். இந்த நிலையினால் மனிதன் சாதாரண உடல் சார் இன்பத்துடன் தனது காமத்தினை முடித்துக்கொள்கிறான்.
  9. இதுவே மூலப்ரக்ருதி எனப்படும் மாயையின் விளையாட்டு. ஆணின் உடலில் பேரின்பத்தினை பெறகூடிய அமைப்பினையும் வைத்து, அது வீணாகுவதற்குரிய ஓட்டையினையும் வைத்திருக்கிறது. இப்படி வீணாக்காமல் இருக்க அவன் மேலே சக்தி செல்லும் பாதைகளை திறக்கவேண்டும். அத்துடன் இயற்கையாக வீணாகும் பாதையான குறியினூடாக வீணாகாமல் காப்பாற்றுவதற்கு பெண்ணின் துணை தேவைப்படுகிறது. இங்கு வியப்பான விடயம் என்னவென்றால் இயற்கையாக ஆணினின் சக்தியை மாயைக்கு உட்பட்டு வீணாகும் பெண்ணே ஆண் முன்னேறுவதற்கும் காரணமாக இருக்கிறாள் என்பதே. இதுவே ஆவது பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதன் விளக்கம்.
  10. பெண்ணின் துணை கொண்டு அல்லது தனியாகவோ ஓரு ஆண் விந்துடன் தனது பெண் சக்தியான பிராண சக்தியை இணைத்து தனது நாடிகள் எனப்படும் சூக்ஷ்ம சக்தி ஓட்டப்பாதைகள் மூலம் விந்தினை மேலெழும்பி சக்கரங்கள் எனக்கூறப்படும் ஆறு ஆதாரங்களில் சேமித்து வைக்கலாம். இந்த சக்தி சேமிப்பு முக்தி என்ற இறுதி நிலை அடைவதற்கு முன்னரான உலக,ஆன்மீக, சூக்ஷ்ம உலக வாழ்க்கையில் இன்பமாக வாழ்வதற்குரிய ஆற்றல், இன்பம் ஆகியவற்றை தரும்.
  11. மூன்றாவதாக நிலை; இப்படி சேமிக்கப்படும் விந்து – பிராண சக்திகளில் ஆண் (சிவம்) பெண் (சக்தி) சக்திகளை எப்போதும் சமமாக வைத்திருக்கும் உத்திகளை கற்றல். இதனை தனியே பயிற்சிக்கும் ஆண் தியான சாதனையின் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் பெண் சக்திகளை சுழற்சிப்படுத்துவதன் மூலமும், தம்பதியினர் ஒருவர் ஒருவரிடையே பரிமாற்றி சுழற்சிப்படுத்துவதன் மூலமும் சாதிக்கலாம். இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தமது சக்திகளை பரிமாற்றி வளர்த்தெடுத்தால் அது உடற்கவர்ச்சி சார்ந்த காமமாக இருக்காமல் உயர்ந்த காதலாகவும், அன்பாகவும் மாறி, ஒருவருக்கு ஒருவன் மானசீகமாகவும், ஆன்மார்த்தமாகவும், உதவும்  ஆன்ம விழிப்பினையும் பேரின்பத்தையும் தரும். இதுவே சிவசக்தி ஐக்கிய ரூபிணி என்ற நிலை.  இந்த நிலை அடைந்தால் குடும்பம், அன்பு, வாழ்க்கையின் நோக்கம் என்பன மிக ஆழமான சமநிலையினை அடையும். இந்த ஆண் பெண் காம மையங்களின் சமநிலையே ஆண் பெண்களுக்கிடையிலான உண்மை சமநிலை, ஆண் பெண்ணை போட்டியும் துன்பமும் தருபவளாகவும், தனது வலிமையினை இழக்க செய்பவளாகவும் கருதாமலும், பெண் ஆணை ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தனது உடல் மீது வன்முறை புரிபவனாகவும் இல்லாமல் ஆண் பெண்ணிற்கு பேரின்பம் தருபவனாகவும், பெண் ஆணிற்கு பேரின்பம் தருபவளாகவும் மாறும் நிலையினை இந்த் யோகம் தரும்.
  12. பொதுவாக காமத்துடன் யோகம் சொல்லித்தருகிறோம் என்றவுடன் அனைவரும் ஏதோ மூன்றாம்தர நீலப்படம் பார்க்கப்போகிறோம் என்ற உண்டர்வுடனும், தமது காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் மணிக்கணக்கில் உடலுறவு செய்யலாம் என்ற எண்ணத்துடனும் வருகிறார்கள். ஆனால் இதன் உண்மை அர்த்தம் வேறாக இருக்கிறது.  இயற்கை காமத்தை வெறும் உடல் இன்பத்துடன் பூர்த்தி செய்து உயர்ந்த சூக்ஷ்ம பேரின்பத்தை பெறவிடாமல் தடுக்கிறது. இதிலிருந்து விடுபட்டு சிவமாகிய விந்தினை  பிராணனாகிய சக்தியுடன் இணைத்து மூலசக்தியான சிவசக்தி ஐக்கிய ரூபத்தை அடைவதே இந்த யோகத்தின் குறிக்கோள். இந்த பாதையில் காமத்தினை கையாளுவது என்பது ஒரு சிறு படி மாத்திரமே. இதனை ஒரு பெரிய விடயமாக மன எழுச்சியுடன் பார்த்து அடையவேண்டியத்தை அடையாமல் போய்விடக்கூடாது என்பது ஒளி நிலையடைந்த சித்தர்களின் ரிஷிகளின் விருப்பம்.
  13. அடிப்படையில் ஒருவனுடைய விந்து, பிராணன், ஆன்ம சக்திகள் ஒருங்கிணைந்தால் அவன் ஒருவித சமநிலையில் இருப்பான். இந்த சமநிலை அவனுக்கு இன்பத்தினையும், தான் முழுமையாக இருப்பதான மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
  14. எப்போதும் ஆழமான காதலற்ற உடலுறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஸ்தூல, சூக்ஷ்ம, காரண ஸரீரங்களில் ஒருவித சமநிலை இன்மையினை தோற்றுவித்து அவர்களின் ஆன்ம, உள, பிராண வளர்ச்சிகளை குழப்பி பாதித்துவிடும். பெண் எப்போதும் தனது காதலனிடம் சிறுபிள்ளைத்தனமான அன்பினை எதிர்பார்ப்பவள், ஆனால் பொதுவாக ஆண் ஒருவித இயந்திர தனமாக கையாள்பவனாக இருப்பான். இருவரும் உயர் நிலை அடைவது என்பது பெண்ணின் முழுமையான பங்களிப்பு இன்றி நடைபெறாது. பெண்ணிடம் நாதம் (ஆணின் விந்துவிற்கு நிகரான) சக்தி அதீதமாக காணப்படுகிறது. அதனை அவள் பிராணனுடன் கலந்து உயர்ந்த சக்தியாக்கி தருவானேயானால் மட்டுமே ஆணின் ஆன்ம, மன வளர்ச்சி அதீதமான முன்னேற்றத்தை அடையும். இத்தகைய பெண்ணின் அன்பே ஆண்பெறக்கூடிய உயர்ந்த உறவாகும்.
  15. இப்படி கூறியவுடன் பெண் ஒருத்தி இருந்தால்தான் இதனை செய்யமுடியும் என்று மனது மயங்கி வருத்தப்படாதீர்கள். ஆரம்பகால சாதனைக்கு பெண்ணில்லாமல் தனித்து இருந்து விந்தினை வெளியேறாமல் செய்யும் பயிற்சிகளை செய்வது மிக உசிதமானது. ஏனென்னில் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் பெண்களை பார்க்கும் போதும், நினைக்கும்போதும் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு விந்தினை இழக்கும் படியே மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஆணை விட சக்தி வாய்ந்தவள், உறுதியற்ற ஆணிடம் சக்தியினை உறிஞ்சி எடுத்துவிடுவாள். மேலும் ஆணே தன்னை பயிற்சிப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சக்தியை மேலே செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. மேற்கூறிய முறையில் சக்தியினை மேலேற்ற தெரிந்த ஆணுடன் உறவு கொள்ளும்போது இயல்பாகவே உள்ளுணர்வு மூலம் முயற்சி இன்றி பெண் தனது சக்தியை மேலேற்றும் தன்மையினை பெறுகின்றாள். எனினும் இந்த யோகத்தை பழகும் பெண்ணும் அடிப்படை விதிகளை, சக்தி மேலேற்றும் முறையினை தெரிந்து இருத்தல் வேண்டும். ஆகவே ஆண் பெண்ணாக ஆன்ம உயர்வு பெற முனையும் தம்பதியினர் கருத்தொருமித்து இந்த யோகத்தினை பயில வேண்டும்.  

Friday, April 10, 2015

காகபுஜண்ட மகரிஷியிற்கு ஜீவ சமாதி உண்டா?

இன்று பலரும் ஜீவ சமாதி செல்கிறோம் என்றும், பரிகாரம் என்றும் சொல்லி வருகிறார்கள்.  சித்தர்கள் சமாதி அடையும் நிலைகள் பல உள்ளன. காகபுஜண்டர், அகத்தியரை மகரிஷிகள் என்றே அழைக்கிறோம். மகரிஷிகள் என்று அழைக்கப்படுபவர்கள் உடலிருந்து ஆன்மாவினை ஒளிநிலைப்படுத்தி  மகாகாரண பஞ்சாட்சரம் என்ற "சி" கார தத்துவத்தினை அடைந்தவர்கள். இவர்கள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பவர்கள். பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருப்பவரும் தனது உணர்வால் - மனதால் அல்ல! தொடர்பு கொள்ளக்கூடியவர்கள். உணர்வு ஜாக்ர, ஸ்வப்ன, சுழுத்தி எனும் சாதாரண நிலையில் இருக்கும்போது இவர்களின் உண்மை தொடர்பு கிடைப்பதில்லை. உணர்வு துரியத்தை அடையும்போது மட்டுமே அவர்கள் தொடர்பு கிடைக்கின்றது. 

மேலும் காகபுஜண்டர் காகமாக இருக்கிறார்கள் என்று காகத்திற்கு சோறு வைத்தால் அது ஜீவகாரண்யமே அன்றி யோக சாதனை ஆகாது. காகம் என்பது பஞ்ச பட்சிகளில் ஒன்று, பஞ்ச பட்சி என்பது பஞ்ச பூதம், 
  • நிலம் - வல்லூறு
  • நீர் - ஆந்தை, 
  • நெருப்பு - காகம், 
  • காற்று - கோழி, 
  • ஆகாயம் - மயில். 

பஞ்ச பூதம்
வித்தெழுத்து
ஆதார தளம்
ஐந்து பூத கலப்பு உறை நிலை
ஓம்
மூலாதாரம்
நிலம் – ப்ருதிவி `
சுவாதிஷ்டானம்
நீர் – அப்பு
மணிப்பூரகம்
தீ – அக்னி
சி
அனாகதம்
வாயு
விசுத்தி
ஆகாயம்
புருவமத்தி – ஆக்ஞா
பஞ்ச பூத ஒடுக்க நிலை
ஓம்
சஹஸ்ராரம்

இனி பஞ்சாட்சரத்தின் தத்துவ ஒடுக்கம் பார்ப்போம் 
  • ந-ம-சி-வ-ய = ஸ்தூல பஞ்சாக்ஷரம். 
  • சி-வ-ய-ந-ம = சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம். 
  • சி-வ-ய-வ-சி = அதி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம். 
  • சி-வ = காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.
  • சி = மகா காரண பஞ்சாக்ஷரம்
காகம் என்பது அக்னி தத்துவம், அத்தத்துவத்தில் தன்னை ஒடுக்கியவர் மகாகாரண சரீரம் அடைந்தவர், இதனையே தனது பெருநூல் காவியத்தில்

கர்த்தனை போல் நான்இருந்து வாழுவேனே
வாழுவேன் திரிலோகம் தெரிந்து கொண்டேன்
மாளாமல் நின்றிடுவேன் திரிலோகத்தும்
காகபுசுண்டர் பெருநூல் காவியம். பாடல் 236..& 237

காகமாய் மரத்தின்மேல் நிற்பேணப்பா
கவலையாய் நீ இருந்தால நா னுள் நிற்பேன்.
காகபுசுண்டர் பெருநூல் காவியம். பாடல் 239

மேலே குறிப்பிட்ட வரியில் காகம் எனபது அக்னி தத்துவம் மரம் என்பது உடல், ஆக எமது உடலில் உள்ள அக்னி தத்துவத்தின் மூலம் எமது உணர்வால் தொடர்பு கொள்ளக்கூடிய மகரிஷிதான் காகபுஜண்டர். அதாவது அண்டத்தில் மகாகாரண சரீரம் என்ற சிகார தத்துவமாய் சிவனாய் நிற்பவரும், பிண்டத்தில் அக்னிதத்துவமாய் இருந்து வழிகாட்டக்கூடியவரே காகபுஜண்ட மகரிஷி!  

சித்த வித்யா என்றால் என்ன?

“சித்த வித்யா” என்றால் என்ன?  பொதுவாக சித்தம் என்பது ஆழ்மனம் என்று தற்கால விஞ்ஞானம் குறிப்பிடும் மனதின் பகுதியினை தெய்வ ஞானத்துடன் ஒடுக்கி பிரபஞ்ச ஞானத்தினை பெறும் முறையாகும். தாரணையால் எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ,தியான சாதனையினால் உணர்வை அறிய வேண்டிய பொருளுடன் ஒடுக்கும்போது உணர்வு அறியப்படும் பொருளாய் மாறி நிற்கும், பின்னர் அப்பொருள் பற்றிய அறிவு சித்தத்தில் பதியும். இதனை மேல்மனத்திற்கு கொண்டுவந்து மொழியில் விளங்கப்படுத்தினால் அந்த அறிவு சித்த வித்யா எனப்படும். இது குருமுகமாய் தியான சாதனையின் பலனாய் வரும் ஒரு சித்தியாகும். 

இதற்காகவேண்டியே அக்காலத்தில் மனதை சப்த ஒலிகளால் ஒழுங்குபடுத்தத் ஒலியமைப்பு கோர்வையாக இசைக்கும் வண்ணம் யாப்பு இலக்கணம் எனப்படும் பாடல் வரைமுறை அமைக்கப்பட்டது. இப்படி பாடலை பாராயணம் செய்யும்போது மனம் படிப்படியாக தாரணை நிலையினை அடையும். தாரணை நிலையடைந்த மனம் எதுவித முயற்சியும் இன்றி தியான நிலையினை அடையும். இந்த யோக இரகசியத்தின் அடிப்படையிலேயே சித்தர் பாடல்கள் பொருள் காணப்படவேண்டியவை. இந்த நிலையில் அறியப்படும் விளக்கம் அந்தப்பாடலை பாடிய ஆசிரியர் எந்த நிலையில் இருந்து பாடினாரோ அந்த நிலையில் விளங்கி கொள்ள முடியும். அல்லாமல் அகராதியின் துணையினை மட்டும் கொண்டு பொருள் காண முற்படும்போது மயக்கங்களையும், மறைப்புகளையும் வேண்டுமென்றே சித்தர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதேவேளை இந்த ஞானம் பாமரனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக எளிய பேச்சு மொழியில் பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ வித்தை, காயத்ரி சாதனை மூலம் சித்த வித்யா என்ற சித்தியினை அடையமுடியும். இதனையே லலிதா சகஸ்ரநாமம் ஸித்தேஸ்வரி ஸித்த வித்யா ஸித்த மாதா" என்று குறிப்பிடுகிறது.  இந்த ஆற்றலால் பல்வேறு நன்மைகளும் உண்டும் 

Thursday, April 09, 2015

சித்தர் தத்துவ விளக்க வரைபடம்


இன்று யோகம் செய்கிறோம், உபாசனை செய்கிறோம் என்பவர்கள் எல்லோரும் எதற்காக செய்கிறோம் என்று அறிகிலர்.  தமது சாதனையின் இலக்கு தாம் எங்கிருந்து வந்தோம், இந்த வாழ்க்கையின் மர்மம் என்ன, அண்டத்தின் மர்மம் என்ன? பிண்டத்தின் மர்மம் என்ன என்பதனை அறியவேண்டும், அண்டத்தினை  அறிவது ஒரு துகளான மனிதனால் தனது ஆயுட்காலத்தில் செய்யக்கூடிய ஒரு செயலன்று, அதனால் அண்டத்தின் பிரதிபிம்பமான பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தினை அறிந்து, எமது மூல சக்தியை உணர்ந்து தெய்வ நிலை பெறலாம் என்பதால் "அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்; அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போதே”


இப்படி அறிவதற்கு தான் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை தெரியவேண்டும். தமக்கு அடுத்த நிலையில் உள்ள தத்துவங்கள் புரியவேண்டும்.  பொதுவாக ஸ்ரீ வித்தையில் பூர்ண தீக்ஷை பெறும்போதும், காயத்ரி உபாசனை காயத்ரி சாதனையாகும் போதும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் அதிசூக்ஷ்ம/காரண பஞ்சாட்சார உபதேசம் பெறும்போதும்  இவை உபதேசிக்கப்படும். 

இங்கு அனைவரும் புரிந்து கொள்ளகூடியவாறு வரைபடமாக தந்துள்ளோம். இவற்றின் விபரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 06.00 - 07.15 கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் நடைபெறும் சித்தர் பாடல் வகுப்பில் உரையாடப்படும். 






Wednesday, April 01, 2015

பராசெல்சியஸ் என்ற மேற்கைத்தேய இரசவாதியும் தமிழ் சித்தர்களும்

பராசெல்சியஸ் என்ற மேற்கைத்தய இரசவாதியும் தமிழ் சித்தர்களும் 

Paracelsus - western Renaissance physician, botanist, alchemist, astrologer, and general occultist



எனது சூழலியல் விஞ்ஞான ஆய்வுகளின் போது நச்சுத்தன்மை பற்றிய விதிகள் (toxicological principles) Paracelsus என்பவரை இந்த துறையின் தந்தையாக குறிப்பிடுகிறது. அவர்கூறிய விதி "Dosis facit venenum" - The dose makes the poison. அடே இதனை தமிழி மொழிபெயர்த்தால்  எனது அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழியான " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று வருகிறதே என்று விட்டு அவரை பற்றி ஆராயபுகுந்தால் அவர் ஒரு இரசவாதி, வைத்தியர், தாவரவியலாளர், வானியலாளர், ஜோதிடர், மறையியலாளர் என Wikepedia காட்டியது. ஆக இந்த அனைத்துமே சித்தர்களுக்கு பொருந்துமே சஎன்றவாறு அவரது நூற்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை தேடியபோது கிடைத்தவை அனைத்துமே அதனை உறுதிப்படுத்தியது. 

மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றில் அவர் வாழ்க்கையில் குறித்த காலம் இந்தியாவில் தங்கி கற்றிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. 

இரசவாதத்தின் அடிப்படைகளை மிக வெளிப்படையாக ஆனால் மீண்டும் சித்தர்களிபோல் பரிபாஷையாக கொடுத்திருக்கிறார். 

அவரது நூலின் பொருளடக்கத்தை தகவலுக்காக இங்கு த தந்திருக்கிறேன். 

நேரம் வரும்போது இவற்றையும் தமிழில் சித்தர்களுடன் ஒப்பிட்டு எழுதுவோம் என்று நினைத்திருக்கிறேன். 

லிங்க தரிசனமும் காம வேட்கையும் - ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 03

லிங்கம் என்பது ஆண்குறியின் குறியீடு என பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். லிங்கத்தின் உண்மை விளக்கம் அது ஆன்மாவின் குறியீடு இது பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம். இங்கு ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் கூறிய கட்டுப்படுத்த முடியாத காமவேட்கை உடைய ஆண், பெண் இருபாலருக்கும் உரிய ஒரு எளிய சாதனையினை கூறுவோம்.

சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டுப்படுத்த முடியாத காமவேட்கையில் மனம் அலைபாயும். இதனால் அமைதியற்ற மனதும், உடல் வலிமை இன்றி உடல், மன நோயால் தவிப்பார்கள்.இப்படியானவர்கள் அதிலிருந்து முற்றாக விடுபட சிவலிங்க வழிபாடு உதவும்.

கல்லினால், ஐம்பொன்னால், ஸ்படிகத்தால் ஆக்கப்பட்ட ஒரு சிவலிங்கத்தை பூஜை அறை அல்லது உங்களுக்கு வசதியான இடத்தில் கண்மட்டத்தில் வைத்துக்கொள்ளவும். பின்னர் பால், நீரினால் அபிஷிகம் செய்துவிட்டு எதிரில் சுகாசனம், பத்மாசனம் அல்லது வசதியாக உட்கார்ந்து பதினைந்து நிமிடங்கள் முடிந்தவரை கண் இமைக்காமல், (இயலாமல் போகும்போது கண்ணை ஒரு தடவை இமைத்து பின்னர் மீண்டும் முயற்சிக்க வேண்டும்) பார்த்த படி இருக்கவும். வேறந்த எண்ணமோ, பிரார்த்தனையோ செய்யத் தேவையில்லை.. காலை மாலை இருவேளை செய்து வர 21 நாட்களில் இருந்து  90 நாட்களுக்குள் கட்டாயம் காமவேட்கையில் இருந்து விடுபடுவீர்கள்.


பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...