குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 03, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - புணர்ச்சிப்பத்து - 03

புணருதல் என்றால் சேருதல் என்று அர்த்தம். யோகம் என்றாலும் இணைதல் என்றே அர்த்தம். ஒரு யோகி தனக்குள் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து வளர்த்தால் அதுவே யோகம். 

தருவது ஆண்

பெறுவது பெண்

தருவது சிவம் என்றால்

பெறுவது சக்தி

இனி மூன்றாவது பாடல், இந்தப் பாடலில் சுருக்கப் பொருள், மாணிக்க வாசகர் பொல்லா மணி என்ற அக்கினி மயமான சிவ ஜோதியை புருவமத்தியில் அறிந்து அதில் கலந்து அமுதத்தைப் பெற்று இன்புறாமல் மாலும் அயனும் எனது மனதைத் தூண்டி மணிப்பூரக, சுவாதிஷ்டான சக்கரங்களால் ஏற்படுத்தும் தூண்டலில் சிக்கிவிடுவேனோ என்று பயந்து, இந்த அடியவர்கள் போல புலம்பி பூத்தூவி ஏன் வழிபட்டுக் கொண்டு இருக்கிறேனோ என்கிறார்? 

நீண்ட மாலும் அயனும் வெருவ

நீண்ட நெருப்பை விருப்பி லேனை

ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை

அள்ளூ றுள்ளத் தடியார்முன்

வேண்டுந் தனையும் வாய்விட் டலறி

விரையார் மலர்தூவிப்

பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன்

பொல்லா மணியைப் புணர்ந்தே

பொல்லா மணி என்ற புருவமத்தியில் ஒளி காணுதலே யோகியின் இலட்சியம், அந்த ஒளியைக் கண்டு அதுனுடன் கலந்தால் அது சமாதி! பொல்லா மணியை புணர்தலை இலட்சியமாகக் கொண்டு பாடியவை தான் புணர்ச்சிப்பத்து! 

உன்னை புருவ மத்தியில் ஒளியாக கண்டு அந்த ஒளியில் கலப்பதைத் தவிர வேறு விருப்பம் இல்லாத என்னை சுவாதிஷ்டானத்து பிரம்மன் உயிரைப் படைக்க காமத்தில் செலுத்தி விடுவானோ, மணிப் பூரக்கத்தில் உறையும் விஷ்ணுவும் உன்னை அடையவிடாமல் தடுத்து விடுவார்களோ என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். இது சாதகன் யோகத்தில் சுவாதிஷ்டானத்தையும் மணிப் பூரகத்தையும் கடக்க முடியாமல் கீழ்பரிணாமத்தில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தை மாணிக்க வாசகர் வெளிப்படுத்தும் வரிகள்!

புருவமத்தியில் ஒளியை அடையும் பாதை முழுவதும் சிவம் அக்கினியாக அடிமுடி காணாத படி உடலில் சுழுமுனை நாடியில் முள்ளந் தண்டியோ பரவி மிகசூக்ஷமமாக நிற்க என்பது நீண்ட நெருப்பை என்ற வரி குறிக்கிறது, 

இந்தப் பாதை வழி சென்று பொல்லாமணி என்ற சிவ ஜோதியில் கலந்தால் புணர்ந்தால் அமுதம் சுரக்கும், 

நேரடியாக பொருள் கூறுவது என்றால் பொல்லா மணியாகிய சிவ ஜோதியைப் புணர்ந்து கலந்து அள்ள அள்ளக் குறையாத அமுதத்தைப் பருகி இன்பம் உற்று இருக்காமல் ஏன் சுவாதிஷ்டானத்து பிரம்மன் உயிரைப் படைக்க காமத்தில் செலுத்தி விடுவானோ, மணிப் பூரகத்தில் உறையும் விஷ்ணுவும் சிவத்தை அடையவிடாமல் தடுத்துவிடுவார்களோ என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன்? இந்த உயர் நிலைக்கு முயலாமல் ஏன் உன் அடியார்களுக்கு முன்னால் வாய்விட்டு அலறிக் கொண்டு, நறுமணம் வீசும் மலர்களை ஏன் தூவிக் கொண்டு கிடக்கின்றேனோ? என்கிறார்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...