குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 25, 2014

நவராத்திரி அனுஷ்டானம்


அண்டத்தினை இயக்கும் ஆதி சக்தியினை எம்முள் ஈர்க்கும் நன்னாட்கள்! பிரபஞ்ச இயக்கவியலை அறிந்த சித்தர்களும் மகரிஷிகளும் ஏற்படுத்தி வைத்த இந்த நாட்கள்  மனிதனாக பிறந்து தெய்வ சக்தி பெற்று இன்பமுடன் வாழ்ந்து இறையினை அறியந்து உணர  விரும்பும் அனைவருக்கும் பிரபஞ்ச தானாக சக்தி உதவும் நாட்கள் இந்த நவராத்திரி தினங்கள்.

பொதுவாக பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் சூரிய சந்திரனூடாக பிரதானமாகவும் மற்றைய கோள்களினூடாகவும் பூமியை அடைகின்றது.
இதன் அளவும் தன்மையும் சூரியன் நட்சத்திர மண்டலங்களில் இருந்து ஈர்த்து பூமிக்கு தரும் நிலைகளையே சூரிய மாதம் என்கிறோம்,

அதுபோல் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் திதி எனப்படும், இந்த தூர வேறுபாட்டால் பிரபஞ்ச சக்திகளின் சலனம் நடைப்பெற்று பூமி சக்தி பெறுகிறது. அமாவாசையில் அருகில் வரும் சூரிய சந்திரர் மீண்டும் பிரியத்தோடங்கும் நாட்கள் வளர்பிறை திதிகள் எனப்படுகிறது. இந்த வளர்பிறை திதிகளில் சந்திரனின் மூலம் பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக வருவதால் வளர்பிறையில் நல்ல விடயங்கள் செய்யலாம் என்று வைத்தனர்.

இயல்பிலேயே பூமியில் இந்த நாட்களில் அதிக பிரபஞ்ச சக்திகள் அலைக்கழிந்தாலும் மனிதன் அதனை பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் மட்டுமே அதீதமாக பெறலாம், அதனால் நவராத்திரி என்று விழாவாக ஏற்படுத்தி சக்திகளை ஈர்க்கும் முறைகளை மறைமுகமாக தெய்வ உருவங்களாகவும், தானாக பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து பூமியில் படரவிடும் தாவரங்களை நவதானியமாகவும் வகுத்து வைத்தனர்.

இது ஒவ்வொரு சந்திர மாதமும் நடைபெற்றாலும் மக்கள் காலப்போக்கில் மனமாயையினால் அறியாமல் பயன் பெறாமல் போய்விடுவார்கள் என்பதால் மக்களை ஈர்க்கும்  பலவித புராணக்கதைகளை தொடர்பு படுத்தி, அவற்றுடன் சக்தியை ஈர்க்கும் வகைகளை பூஜை முறைகளாக புகுத்தி வைத்தார்கள்.
கொலுவைத்து, படையலிட்டு மனமகிழ்வாக கொண்டாடும் அதேவேளை உயர்ந்த சக்திகளையும் ஈர்க்கும் முறைகளை அறிந்து கொண்டால் பலன் இருமடங்காகும் அல்லவா!
ஆகவே நவராத்திரி கொண்டாடும் அதேவேளை பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் முறைகள் என்ன என்பதனை அனைவரும் தெரிந்து பயன்பெற சில உதவிக்குறிப்புகள்.
1.       பூரண கும்பம்
2.       நவதானியம்
3.       தினசரி இஷ்ட மந்திர ஜெபம்
4.       அக்னி ஹோத்திரம் 

முதல் இரண்டும் அனைவருக்கும் தெரிவதால் அதுபற்றி விளக்காமல் மிகுதி இரண்டையும் பற்றி சற்று கூறுவோம்.
இஷ்ட மந்திர ஜெபம்: மந்திரம் என்பது பிரபஞ்ச சக்திகளை மனத்தால் ஈர்ப்பதற்குரிய குறித்த ஒலி அலைகள். இந்த நாட்களில் நீங்கள் உபதேசம் பெற்ற மந்திரங்களை காலை மாலை குறித்த அளவு இயலுமான எண்ணிக்கை (108, 1008, 10008) ஜெபித்து வர அந்த மந்திரத்திற்குரிய தெய்வசக்தி உங்களில் அதிகமாக ஈர்க்கப்படும்.
இப்படி மந்திரம் உபதேசமாக பெறாதவர்கள் யாரும் இருப்பின் கவலை வேண்டாம். இங்கு தரப்பட இரண்டு மந்திரங்களில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை எடுத்துக்கொண்டு இணைப்பில் தரப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி கொண்டு ஜெபித்து வரலாம். ஜெபத்தினை தொடங்கும் முன்னரும் இறுதியிலும் தரப்பட்ட குரு நாமங்களை கட்டாயம் சொல்லவேண்டும்.
மந்திரங்கள்:
காயத்ரி மந்திரம்: சாதனை விபரம் இந்த இணைப்பில் பார்க்க: https://docs.google.com/file/d/0B_q1uZTstapZT1JLVnJ2dUt3UUE/edit


ஸ்ரீ வித்யா மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஓம், சாதனை விபரம் இந்த இணைப்பில் பார்க்க: https://docs.google.com/file/d/0B_q1uZTstapZSXpEaU9lUzRLbk0/edit

அக்னி ஹோத்திரம்: ஒரு சிறிய புது மண்சட்டி, சிறிதளவு நெய், சிறிது பால் உள்ள மரத்தின் சுள்ளிகள் (மா, பலா, ஆல், அரசு, அத்தி விசேஷம்), அல்லது பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் வாங்கி கொள்ளலாம், கற்பூரம், விளக்கில் இருந்து கர்பூரத்தினை கொளுத்தி சட்டியினுள் போட்டு, தீர்த்த கரண்டியால் நீங்கள் ஜெபிக்கும் அளவிற்கு பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கையில் சிறு கரண்டியால் நெய்யினை மந்திரம் சொல்லை இறுதியில் “ஸ்வாஹா” சேர்த்து இட்டு வரவேண்டும். ஒன்பது நாட்கள் இறுதியில் எரிந்து முடிந்த சாம்பலை கவனாமாக சலித்து எடுத்து விபூதியுடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும், இது உங்களது சாதனையின் சக்தியினை சேர்த்து வைத்திருக்கும்.

இறுதியில் இந்த எளிய பிரார்த்தனையினை செய்து கொள்ளலாம்; 

அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைத்திடா பக்தி அன்பு தேயுறாச் செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 


இந்த எளிய முறையில் நவராத்ரியினை அனுஷ்டித்து அனைவரும் தெய்வ சக்தி பெற்றிட குருவை பிரார்த்திக்கிறோம். 

Monday, September 15, 2014

இல்லறத்தில் இருப்பவர்கள் தெய்வ சக்தி பெற எளிய சாதனை


பொதுவில் ஆன்மீகம் என்பது உலகை விட்டு ஓடும் ஒரு செயலாகத்தான் கற்பிக்கப்பட்டுவந்துள்ளது. அதிலும் பெண்கள் துன்பத்தினை தருபவர்களாகவும், மாயையில் ஆழ்துபவர்களாகவும் கற்பிக்கப்பட்ட மனதுடன்தான் சமூகம் மனிதர்களை வளர்க்கிறது. இப்படிப்பட்ட மனதுடன் பரிணாம உயர்வால் இறையை உணர முயலும்போது உலகமே துன்பமயமாக தோன்ற ஆரம்பிக்கிறது. உலகம் மாயை என்று வாழ்க்கை கடமைகளை முடிக்காமல் சந்நியாசம் நோக்கி ஓட ஆரம்பிக்கின்றனர்.
உலகம் அடிப்படையில் இருமைகளால் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருமை உண்மையான் “ஒன்றில்” இருந்து உருவானவை. பரிணாம பூர்த்தி என்பது மீண்டும் அந்த ஒன்றாக மாறுவதே! ஆன்மாவில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்றாலும் ஆன்மா எடுக்கும் கவசத்திற்கு ஏற்ப ஏற்படும் பேதம் சரியாக புரிந்து செயற்படும் போது உயர்விற்கு வழிவகுக்கிறது, இதனை உதாரணம் மூலம் விளக்குவதானால் அக்கினியினை நன்மைக்கும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம். இது போன்றதே ஆண், பெண் உறவு என்பதும்.
ஆண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு தெய்வ சக்திகளை ஈர்த்து வழங்கும் சக்தி அதிகமாக இருக்கும். பெண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு பெறும் சக்தியினை வளர்க்கும் தன்மை அதிகம். ஒரு ஆண் பலயுகங்கள் தனிமையாக வளர்க்க முயல்வதை தாய்மை சக்தி உடைய பெண்ணிடம் தருவதன் மூலம் ஒருபிறப்பில் பெறலாம். அதுபோல் ஒரு பெண் பல பிறப்புகள் முயற்சித்து பெற வேண்டிய தெய்வ சக்தியை நல்ல சாதனை உடைய ஆணிடமிருந்து உடனடியாக பெறலாம். ஆக இருவரும் சேர்ந்து முயற்சிக்கும் போது பலன் மிக அதிகம்.
இப்படி முயற்சித்து சித்தி பெற்றவர்கள்தான் சித்தர்கள், ரிஷிகள் எல்லோரும். அகஸ்தியர் – லோபாமுத்திரை, வசிஷ்டர் – அருந்ததி, காகபுஜண்டர் – பகளா, சத்தியவான் – சாவித்திரி, சப்த ரிஷிகள்,  பதினெண் சித்தர்கள் எல்லோரும். தனித்த நிலையில் யாருமே சக்தி பெறமுடியாது, அப்படி பெறும் சக்தியால் இந்த பிரபஞ்சத்தில் எதையும் வளர்க்க முடியாது.

இன்றைய கணவன் – மனைவி நிலை
இன்று மனதுடன் ஒன்றி வாழும் தம்பதிகளை காண்பது அரிதாகிவிட்டது. வாழ்க்கை என்பது பொருள்தேடும் ஒரு நோக்கத்துடன் வெளிப்பகட்டிற்காக வாழும் நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ஆண் பெண் உறவு என்பது எலியும் பூனையும் விளையாட்டாகி விட்டது. இதனால் மன முறிவுகளும், மணமுறிவுகளும் சாதாரண விடயங்கள் ஆகிவிட்டன.

ரிஷிகள் உபதேசித்த உயர்ந்த நிலை
எண்ணத்தில் தன்மையே வாழ்க்கை, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தாழ்வாக எண்ணுவதும் பிரச்னைக்கு முதற்காரணம். சில இறைசாதனையில் உள்ள கணவனோ மனைவியோ தமது துணை அந்த வழியில் இல்லை என்றவுடன் அவரை பாவப்பட்டவராகவும், தாம் கிடைத்தற்கரிய பேறு பெற்றவராகவும் எண்ணிக்கொண்டு செய்யும் எந்த இறை சாதனையும் அவருக்கும் சரி வேறு எவருக்கும் பயன் அளிப்பதில்லை. இந்த நிலையினை கூறுவதானால் இருமாடுகள் பூட்டிய வண்டியில் ஒரு மாடு நகரமறுத்தால் மற்ற மாடு அந்த மாட்டை சுற்றி சுற்ற முடியுமன்றி இலக்கில் முன்னேறாது.
ஆகவே இல்லறத்தில் இருக்கும் கணவனோ மனைவியோ மற்றவர் தமது வழியில் இல்லை என்றால் ஒருக்காலும் கனவிலும் தமது துணை இந்த வழியில் இல்லையே என்ற வெறுப்பு எண்ணம் எடுக்க கூடாது. அவருக்குரிய தெய்வ சாதனையினையும் தனது பொறுப்பாக எண்ணி தான் பெறும் தெய்வ சக்தி உயர்ந்த சக்திகள் யாவும் ஒரு குறைவின்றி அவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எப்போதும் குருவை பிரார்த்தித்து எண்ண வேண்டும். இந்த எண்ணம் அவர்களை நிச்சயம் உயர்த்தும்.

மனமொத்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் “நான் பெறும் நல்ல தெய்வ சக்திகள் அனைத்தும் எனது மனைவி/கணவன் பெறவேண்டும்” என்று தமது தினசரி பிரார்த்தனைகள், மனதில் எண்ண வேண்டும்.  

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...