குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 03, 2019

மாணிக்கவாசகரும் இறைவன் மீதான காதலும்!

காமத்தின் மூலம் இறைவனை அடைவது என்பதே சாத்தியமில்லை, தாந்திரீகம் காமத்தின் மூலம் இறைவனை அடையலாம் என்று கூறவில்லை, காமத்தை உயர்ந்த தெய்வ சக்தியாக மாற்றினால் இறையை - சமாதி அனுபவத்தை - விழிப்புணர்வை அடையலாம் என்றே கூறுகிறது. எல்லோரிடமும் ஆழமாக இருக்கும் காமத்தை மறுத்தால் அது இறைவனை அல்லது விழிப்புணர்வினை அடைவதை தடைப்படுத்தும் என்பதால் அதைக் கவனிக்காது அழுத்தி விடவேண்டாம் என்கிறது. 

மாணிக்கவாசகர் காதல் வாக்கியங்களை இறைவனை நோக்கி தனது புலன் வழி செல்லும் உணர்ச்சிகளை மடை மாற்றவே பாடியுள்ளார் என்பதையே எனது பதிவுகளில் கூறியுள்ளேனே தவிர மாணிக்கவாசகர் காமம் சார்ந்து பாடியுள்ளார் என்று கூறவில்லை. 

காமம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஏதோ தவறான ஒன்றைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று மனம் பதறுகிறது, பேசக் கூடாத ஒன்றை, அருவருக்கத்தக்க ஒன்றை உரையாடுகிறோம் என்று மனம் கலங்குகிறது. அதற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. 

வினோதம் என்னவென்றால் அறம், பொருள், இன்பம், வீடு - தர்ம அர்த்த காம மோஷ என்று வாழ்வின் இலட்சியத்தைக் கூறித் தந்த முன்னோர்களின் வழி வந்த எமக்குத் தான் இந்தப் பதட்டம்! 

சிவனை எல்லா உயிர்களையும் தன்னை நோக்கி ஈர்ப்பதால் காமேஸ்வரன்!

ஸக்தி காமேஸ்வரி!

காமனோ ஸக்தியின் மைந்தன்!

உலத்தாருக்கு கிடைக்கக் கூடிய ஸ்ரீ வித்தை காமன் உபாசித்த காதி வித்தை மட்டும்! 

புனிதமானது என்று நாம் நம்பும் எதைப் பற்றி எதுவும் எண்ணக் கூடாது, சிந்திக்கக் கூடாது என்று பழக்குவிக்கப்பட்ட சமூகமே மூடத்தனமும், வன்முறையும், மூட நம்பிக்கையும், தீவிரவாதமும் உருவாக காரணமாகிறது. 

சிந்திக்க வேண்டும்! எம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் பின்பற்றிய தர்மம் இப்போது மாறியிருந்தால் அந்த மாற்றத்திற்கு தகுந்த மாதிரி தர்மத்தை மாற்றி அதன் மூல நோக்கம் மாறாமல் வாழ்க்கைக்கு பிரயோசனமாக்க வேண்டும்! 

மாணிக்கவாசகரின் ஞானத் தாழிசைக்கு உரை விளக்கம் எழுதும்படி பற்றி சில காலத்திற்கு முன்னர் பலர் கேட்ட காலத்தில் நான் நகைச் சுவையாக கூறியது "இங்கு பலர் அவரை உரிமைக்கு குத்தகை எடுத்து வைத்திருக்கிறார்கள், நாம் எழுதினால் வீண் சர்ச்சைகளும் கருத்து மோதல்களும் வரும், நேர விரயம், நான் என் குருநாதரின் (அகத்தியரின்) பாடல்களுக்கே விளக்கவுரை எழுதுகிறேன் என்று!

நான் கருத்துப் பகிர்வது சிந்தனை விரிவிற்காக! எந்தப் பற்றையும் வைத்துக் கொண்டு இல்லை! எனது குருநாதரிடம் அவர் அனுபவங்களைக் கேட்டு பூரிப்படைவதைக் காட்டிலும் அவர் எப்படி அந்த அனுபவத்தை அடைந்தார் என்பதைப் பற்றிய பயிற்சிகளை சாதனையை அறியவே ஆர்வத்தைக் காட்டியுள்ளேன்! 

மணிக்கவாசகர் அடைந்த அனுபவத்தில் எனக்கு எந்த திருப்தியும் பூரிப்பும் இல்லை, அவர் எப்படி அதை அடைந்தார் என்பதை அறிவதும் தெரிவதுமே எல்லோருக்கும் பிரயோசனமானது! பலரை அந்த நிலைக்கு உயர்ந்த வல்லது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...