குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 30, 2013

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சரியானதா?


அண்மையில் நண்பர் ஒருவர் கீழ்வரும் கேள்வியினை கேட்டிருந்தார்;
சித்தர்கள் தமது நூற்களில் சில காயத்ரி மந்திரங்களை கொடுத்துள்ளார்கள், அவைதான் உண்மையான காயத்ரி மந்திரங்களா? இப்போது உங்கள் பதிவுகளில் கூறும் காயத்ரி மந்திரமான ஓம் பூர் பூவஹ ஸ்வஹ எனத்தொடங்குவது வடமொழியினருக்கு உரியது, தமிழர்கள், சித்தர்கள் இதனைப்பற்றி கூறவில்லை, ஆகவே எது சரியானது? அத்துடன் மற்றைய தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் காயத்ரி மந்திரம் உள்ளனவே, அதற்கு என்ன காரணம்?
இந்தக்கேள்வி மிக அருமையான கேள்வி, அதற்கு எமது அறிவுக்கு எட்டியவரையில் பதிலினைக் கூறுகிறோம்.
இதன் அடிப்படைகளை விளங்கிக்கொள்ள சில மந்திர சாஸ்திர அடிப்படைகளை விளங்கவேண்டும்.
முதலாவதாக காயத்ரி என்பது காரணப்பெயர்; காயம்+த்ரயாதே, காயம் ஆகிய உடலினை காப்பாற்றுவது என்பது பொருள், உடலினை காப்பாற்ற பிராணனினை இரட்சிக்க வேண்டும்.பிராணணின் அசைவு மனதினால், மனதில் எழும் எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனது சப்தத்தினால், ஒலியினால் தொடர்பு கொள்ளக்கூடியது, அப்படியான ஒரு ஊடகம் தான் மந்திரம்.
மந்திரங்கள் உச்சரிக்கும் போது ஒரு மட்டிசைவுடன் ஒலிப்பதை சந்தஸ் என்பர், இப்படி மந்திரங்களுக்கு சந்தஸுகள் உண்டு, அவை காயத்ரி, அனுஷ்டுப், உச்சணிக் என வகைப்படும். ஒவ்வொரு சந்தஸும் ஒவ்வொரு வகையில் மனிதனது மனதுடன், பிராணனுடம் தொடர்பு கொள்ளும் தன்மை உடையது.
காயத்ரி சந்தஸில் அமையும் மந்திரங்கள் பிராணனை இரட்சித்து பிராணனுடன் கலக்கும் தன்மை உடையது. காயத்ரி சந்தஸ் மந்திரங்கள் பிராண சக்தியினை அதிகரிக்கும் தன்மை உடையது. அடிப்படையில் எந்த தெய்வ சக்திக்கும் மனச்சக்தி, பிராண சக்தி என்ற இரு கூறுகள் காணப்படும். மந்திரத்தின் பொருள் மனச்சக்தியினை செயர்படுத்தும், சந்தஸ் பிராண சக்தியினை செயற்படுத்தும். ஆகவே காயத்ரி சந்தஸ் உடைய எந்த தெய்வ மந்திரங்களும் குறித்த தெய்வ சக்தியினை பிராண சக்தியுடன் கலந்து ஜெபிப்பவரது ஸ்தூல சூஷ்ம உடலில் விழிப்பிக்க செய்யும்.
இந்த அடிப்படையிலேயே போகர், அகத்தியர் முதலிய சித்தர்கள் த‌ம‌து நூற்க‌ளில் கூறும் காய‌த்ரி ம‌ந்திர‌ங்க‌ள் எல்லாம்! அவ‌ர்க‌ள‌து ம‌ந்திர‌ங்க‌ள் க‌வ‌னமாக‌ பீஜாட்ச‌ர‌ங்க‌ளை கோர்த்து காய‌த்ரி ச‌ந்த‌ஸில் அமைத்திருப்பார்க‌ள். ஆக‌வே காய‌த்ரி என்ப‌து ச‌ந்த‌ஸினை குறிக்கும் சொல்லேய‌ன்றி குறித்த‌ ஒரு ம‌ந்திர‌த்தினை குறிக்கும் சொல் ம‌ட்டும‌ல்ல‌!
அப்ப‌டியென்றால் த‌ற்போது காய‌த்ரி ம‌ந்திர‌ம் ம‌ந்திர‌ம் என‌ ப‌ர‌வலாக‌ கூற‌ப்ப‌டும் "ஓம் பூர் புவ‌ஹ் ஸ்வ‌ஹ‌, த‌த் ஸ்விதுர்வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி, தியோ யோந‌ஹ‌ ப்ர‌சோத‌யாத்" என‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம் காயத்ரி ம‌ந்திர‌ம் இல்லையா? என‌க் கேட்ப‌து விள‌ங்குகிற‌து.
அதுவும் காய‌த்ரி ச‌ந்த‌ஸில் அமைந்த‌ ச‌விதா ம‌ந்திர‌ம், ம‌ற்றைய‌ காய‌த்ரி ம‌ந்திர‌ங்க‌ள் குறித்த‌ தெய்வ‌ ச‌க்தியினையும், பிராண‌ ச‌க்தியினையும் க‌ல‌ந்த‌ க‌ல‌வை. இதை விள‌ங்கிகொள்ள‌ த‌த்துவ‌ அறிவு ச‌ற்று அவ‌சிய‌ம், பிர‌ப‌ஞ்ச‌ ஆதியில் பிர‌ம்மம், பிரகிருதி அல்ல‌து சிவ‌ம் என்ப‌தில் இருந்து ச‌க்தி தோன்றிய‌து, இந்த‌ ஆதி மூல‌மான‌ பிர‌ம்ம‌ம் , பிரகிருதி அல்ல‌து சிவ‌ம் அடிப்ப‌டை என்றால் ச‌க்தி பிராண‌ன் என‌ப்ப‌டும். இவ்வாறு ப‌ரிணாமித்த‌வையே ம‌ற்றைய‌ தெய்வ‌ ச‌க்திக‌ள்.இந்த‌ அடிப்ப‌டையில் பிரம்ம சக்தியினையும் பூமியிற்கு பிராணசக்தியினை வழங்கும் சூரியனும் இணைந்த அதியுயர் சக்திதான் சவிதா!மனித உடலில் இருந்து அதிகளவு சக்தியினை பெறக்கூடிய அதிர்வினைத்தான் சவிதாவாக விஸ்வாமித்திரர் கண்டறிந்தார். மற்றைய காயத்ரி சந்தஸ் மந்திரங்களை விட சக்தி அதிர்வில் ஓம் பூர் புவ‌ஹ் ஸ்வ‌ஹ‌, த‌த் ஸ்விதுர்வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி, தியோ யோந‌ஹ‌ ப்ர‌சோத‌யாத்" என‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம் அதிக பிராண சக்தியினை கவருவதால் பெரியோர்களால் இந்த மந்திரமே காயத்ரி மந்திரம் என வழங்கப்படலாயிற்று.
எனினும் குருபரம்பரையில் இவற்றை அறியப்பெறுபவர்கள் சித்தர்கள் கூறிய காயத்ரி மந்திரம்தான் சரி, வடமொழி மந்திரம் பிழை என விவாதிடுதில்லை! ஏனெனில் காயத்ரி என்பதன் உண்மைப்பொருள் குரு பரம்பரையாக வருபவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கும். அனைவரும் இந்த உண்மையினை அறிந்து குழப்பமற்று பயன் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் குருநாதரின் ஆசியுடன் இதை இங்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
ஆகவே குழப்பம் வேண்டாம், சித்தர்கள் காயத்ரி எனக்கூறி சொல்லியுள்ள மந்திரங்களும் சரியானது! வடமொழியில் காணப்படும் எல்லாத்தெய்வகாயத்ரி மந்திரங்களும் சரியானவையே! அது எப்போது என்றால் அதனை காயத்ரி சந்தஸில் உச்சரிக்கும் போது.
அதெப்படி காயத்ரி சந்தஸில் உச்சரிப்பது? இதைப்பற்றி நாம் ஏற்கனவே காயத்ரி ஜெபசாதனை என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.
மற்றைய காயத்ரி சந்தஸில் உள்ள மந்திரங்களை ஜெபிப்பது எப்படி என்பதனை சுருக்கமாக விளக்குகிறோம்.
காய‌த்ரி ச‌ந்த‌ஸ் ம‌ந்திர‌ங்க‌ள் ஐந்து இட‌ங்க‌ளில் நிறுத்து உச்ச‌ரிக்க‌வேண்டும். உதார‌ண‌மாக‌ காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.
சித்தர்களின் ருத்திர காயத்ரி மந்திரம் ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய ஸ்வாஹா ஆக இருப்பின்;
முதலாவது நிறுத்தல் "ஓம்"
இரண்டாவது நிறுத்தல் "சிறீங் றீங்" 
மூன்றாவது நிறுத்தல் "மகா மசிமசி நசிமசி"
நான்காவது நிறுத்தல் "ருத்ராய";
ஐந்தாவது நிறுத்தல் "ஸ்வாஹா" என்றவாறு வரும். 

இவற்றை குருமுறையாக அறிந்து செய்வதே சிறப்பு. அடிப்படைகளை விளங்கிக்கொள்ள இங்கு இவற்றை வெளியிடுகிறோம்.

ஸத்குரு பாதம் போற்றி!

Thursday, January 17, 2013

காம ரகசியம் - 05: காம உணர்வினை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

ஓஷோவிடம் எழுபது வயதான வயோதிகர் ஒருவர் வந்து கீழ்வருமாறு முறையிட்டார்,

"அன்பான குருவே, எனக்கு இப்போது எழுபது வயதாகிறது, ஆனால் மனதில் காமஉணர்வுகள் அதிகரித்தவண்ணமே உள்ளது, நான் என்ன செய்யட்டும் என்றார்?

நல்ல கேள்விதானே!

அதற்கு ஒஷோ அளித்த பதிலும் விளக்கமும் பின்வருமாறு;

"அன்பரே அப்படியாயின் அதனை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளூங்கள், அதனை மறுக்காதீர்கள், அதனை பெரிதாக கவலைப்பட்டு அடக்க முற்படாதீர்கள், இந்த நிலமை ஏன் ஏற்படுகிறது என்றால் இளமைக்காலத்தில் அதீதமாக காமத்தினை அடக்கியதால் இப்போது வயோதிகத்தில் அவை வலிமை பெற்று உங்களை ஆட்டிப்படைக்கிறது,

இதேபோல் முன்னொரு சம்பவம் ஏற்பட்டது, நான் டெல்லியில் இருக்கும் போது என்னைக்காண‌ முப்பத்திஐந்து வயது மதிக்கத்தக்க இளவயது துறவி ஒருவர் வந்திருந்தார்.அவர் பூரணமான பிரம்மச்சரியத்தினை ஏற்றிருந்தார். அவர் என்னிடம் கேட்க விரும்பியது, " என்னுடைய ஒரே பிரச்சனை கடந்த சில வருடங்களாக நான் எனது மனதில் எழும் காம எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், இது ஏன் என உங்களால் கூற முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்தில் காம எண்ணம் அடங்கும்? இப்போது நான் 35 வயதுகளில் உள்ளேன். இப்படியான மனப்போராட்டத்தில் ஈடுபட்டு சோர்வடைவதை தவிர வேறு எதுவும் எனக்கு ஏற்படவில்லை, இன்று வரை நான் வெற்றியடையவில்லை. இன்னும் எவ்வளவு வருடம் உள்ளது?

அதற்கு ஓஷோ அமமைதியாக " இதனை என்னிடம் கேட்காமல் இருப்பது மிக நல்லது, ஏனெனில் இன்னும் உண்மையான பிரச்சனை கட்டத்திற்கு நீங்கள் வரவில்லை, உங்களுடைய உண்மையான பிரச்சனை இன்னும் ஆரம்பமாகவில்லை, அது 42 வயதளவில் ஆரம்பமாகும்" என்றார்.

அதற்கு அவர் "நீங்கள் என்ன சொல்லவருகிரீர்கள்?" என்றார்.

ஒஷோ, "இப்போது நீங்கள் இளமையாக உள்ளீர்கள், முழுமையாக சக்தி உடையவராக இருக்கிறீர்கள், உங்களால் உங்கள் காம உணர்வினை வலிந்து அடக்க முடியும், ஆனால் 42 வயதளவில் உங்கள் உடல் பலம் குறையத்தொடங்கும், மெது மெதுவாக வலிமையினை இழப்பீர்கள், பலமற்றுப் போவீர்கள். ஆனால் உங்கள் அடக்கப்பட்ட காமஉணர்வு மெது மெதுவாக சேர்ந்து வலிமை பெற ஆரம்பிக்கும், அந்த நிலையிலேயே உங்களது உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும்" என்றேன்.

அதற்கு அவர்" இப்படி யாரும் எனக்கு கூறவில்லை, அனேகர் நாற்பத்து ஐந்து வயதை அடையும் போது காமஉணர்வினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வந்து விடும் என்றல்லவா கூறுகின்றனர், அப்போது இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும்" என்றார்.

அதற்கு ஓஷோ " அவர்களுக்கு சக்தி செயற்படும் விதம் தெரியவில்லை, ஒரு சக்தியினை அழுத்த அழுத்த அது அந்த அழுத்தங்களை சேர்த்து வலிமையாகிறது, இப்படி நடக்கும் போது அழுத்துபவர் சக்தியினை இழக்கின்றார், அழுத்தப்படுவது சக்தியினை பெற்று வலிமையடைகிறது, பின்னர் அழுத்தியவர் வலிமையினை இழக்கும் போது அது தன் முழு வலிமையுடன் தாக்க ஆரம்பிக்கும், இந்த விதத்திலேயே காம உணர்வு செயற்படும்"

அதன்பின்னர் அவர் சென்று விட்டார், பத்து வருடங்களின் பின்னர் நான் வேறொரு இடத்தில் இருக்கும்போது என்னைக்காண வந்தார், வந்தவர் என்னுடைய பாதங்களை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க கூறினார்;

 " நீங்கள் அன்று கூறியது மிகச்சரி! இப்போது நான் எனது உடல் வலிமை குறைந்து விட்டது, ஆனால் மனதில் அதிக காமஉணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. இப்போது முன்னரைப்போல் என்னால் சண்டை பிடிக்கமுடியவில்லை. நான் வலிமை இழந்து விட்டேன், அன்று நான் உங்களுடைய கருத்தினை கேட்கவில்லை, எல்லோரும் சொன்னார்கள் நாற்பத்து வயதிற்கு மேல் காம எண்ணம் முற்றாக குறைந்து விடும் என்று அவர்கள் எவ்வளவு அறிவிலிகள், காம உணர்வு எப்படி செயற்படுகிறது என்பதனைப்பற்றி தெரியவில்லை! என்று வருத்தப்பட்டார்.

ஆகவே அன்பரே, உங்களுடைய காம உணர்வும் பலமாக அடக்கப்பட்டுள்ளது, ஆதலால்தான் இந்த பிரச்சனை வருகிறது, இவ்வாறுதான் மதங்கள் போதிக்கின்றன. மதத்தினை பின்பற்றவேண்டுமானால் நீங்கள் உங்கள் இயற்கையான இச்சைகள் எல்லாவற்றையும் அடக்க வேண்டும். பாருங்கள் இந்த எழுபது வயதில் எப்படியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசை உங்களில் எழுகின்றது என்று! அடக்கப்பட்ட உணர்வுகள் வயது கூட கூட அதிகமாக வர ஆர்ம்பிக்கும். இந்த நிலை அதிகரித்தால் 24 மணிநேரமும் உங்களை காம உணர்வு ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதைத்தான் தற்போதைய சமூகம் உங்களுக்கு செய்துள்ளது. சமூகம் உங்களுடைய இயல்பான உணர்ச்சிகளில் இருந்து உங்களை பிரித்து இயல்புக்குமாறாக்கி உள்ளது.

இந்த வயதிற் கூட இந்த நிலையில் இருந்து மீள்வது கடினமானதல்ல! அதற்கான முதற்படி அதனைப்பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதும், அதனைப்பற்றி வெட்கப்படுவதனை தவிர்ப்பதுமே!ஏன் காமம் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒன்று, நீங்களாக உருவாக்கிகொண்ட உணர்ச்சியல்ல! ஆகவே அது முற்றிலும் சரியானது!ஆகவே அதனைப்பற்றி ஏன் வெட்கப்படுகிரீர்கள், அது உங்களின் இயல்பான ஒரு பகுதியே!

நீங்கள் வெட்கப்படவேண்டுமானால், உங்களை காமத்தினைப்பற்றி வெட்கப்படவைத்த உங்கள் மதகுருவைப்பற்றியும்,போலியான மதக்கோட்பாடு பற்றியும், அவர்களது அறியாமை பற்றியும், அதனை வைத்து அவர்கள் உங்களை எப்படி ஆளூகின்றார்கள் என்பதனை, இதனை விட்டு வெளிவர இயாலாமையினால் அவர்கள் செய்யும் மூடத்தனம் பற்றியும் நினைத்து வெட்கப்படுங்கள், ஆனால் உங்களில் காம உணர்வு இருக்கிறது என்பதனை நினைத்து வெட்கப்படாதீர்கள், அது இயற்கைதன்மை உடையது, ஆனால் நீங்கள் ஒரு மதத்துடன் இணைத்துக்கொண்டு இப்படி சிந்திப்பது இயற்கைக்கு மாறானாது. இப்படி மதத்தின் காரணமாக எழுபது வருடங்களாக உங்களது இயல்புக்கு மாறாக நடக்கும் தன்மையினை எண்ணி வெட்கப்படுங்கள்!

உங்களில் உள்ள காமத்தினை ஆம் என ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அதனை ஆம் என ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரேயொரு சாத்தியமாகும். அதுவே அதனைக்கடக்க எடுக்கும் முதலாவது படிக்கல்லாகும். அந்தக்கல்லில் கால்வைக்காமல் கடந்து அடுத்த கரைக்கு செல்லமுடியாது. காமத்தினை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதனை கடப்பதற்கான படகில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் மதத்தினால் ஏற்படுத்தப்பட்ட பயங்களினை குறையுங்கள், உங்களுடைய வீணாண நம்பிக்கைகளை குறையுங்கள், உண்மைத்தன்மையினை ஏற்றுக்கொள்ளூம் தன்மை உடையவராக மட்டும் இருங்கள்.

உங்கள் உடம்பிற்கு எழுபது வயதானாலும் உங்களுடைய காமம் எழுபது வயது இளமையாக இருக்கிறது. இந்த நிலையில் அது வலிமையாகவும் நீங்கள் வலிமையற்றும் இருக்கிறீர்கள், அவ்வாறு இருக்கும் போது அதனை இயல்புடன் ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரு வழிமுறையாகும். அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு நேரம் கடந்து விட்டது என்று வருத்தப்படவேண்டியதில்லை. இதன் அர்த்தம் கட்டாயம் அந்த இச்சையினை பூர்த்தி செய்ய உடல் ரீதியாக பூர்த்தி செய்யவேண்டும் என்பதல்ல! உங்கள் மனதளவில் முழுமையாக அதனை ஏற்றுக்கொண்டு அதனைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது. இப்படி நீங்கள் ஏற்றுக்கொள்ளூம் போது இதுவரை இப்படி அடக்கப்பட்ட காமத்தினால் ஏற்பட்ட காயங்களும் குணப்படுத்தப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு இந்த இச்சையினை உடல்ரீதியாக பூர்த்தி செய்ய முயலும் போது உங்கள் சிக்கல்களை மேலும் அதிகரிக்குமே அன்றி குறைக்காது, மேலும் ஆபத்து நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்தக்கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், காமத்தினை இயல்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனபதன் அர்த்தம், உங்கள் மனதில் அது எழும்போது அதனை தவறாக, பாவமாக எண்ணாமல் சாட்சிபாவமாக பார்த்து வருதலே அன்றி அதனை உடனடியாக தீர்க்கும் வழியில் இறங்குவதல்ல, அது உங்களை மேலும் மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும், சொல்லவருவதன் சுருக்கம், உங்களில் இயல்பாக ஏற்படும் எண்ணத்தினைப்பற்றி வெட்கம், வெறுப்பு போன்ற எதிர் எண்ணங்களை கொள்ளாமல் மதித்து ஏற்றுக்கொள்ளுதலே!

பொதுவாக இயற்கையின் நியதியில் சக்திகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் எம்மை பலப்படுத்திக்கொள்ளலாம், அப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களுடைய சக்தியில் துரித அதிகரிப்பினை ஏற்படுத்தலாம், காமம் என்பது உங்களிடமே உள்ள இயல்பான அதீத சக்தி, அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதீதமாக பலம் பெறலாம். உங்களுடைய சக்தியினுடனேயே சண்டை பிடிப்பது உங்களை மேலும் பலவீனமாக்கும், இப்படி சண்டை பிடித்தே பல வருடங்கள், பல பிறப்புகள் சென்று விட்டபின்னர் எப்போது இறைவனை அடையப்போகிறீர்கள்!

முதலாவதாக காமத்தினை பாவம், பிழை எனப் புலம்புவதை நிறுத்துங்கள்.அதனுடன் வீணாக சண்டை பிடித்து உங்கள் சக்தியினை விரையப்படுத்துவதை நிறுத்தி அதனை மதிக்கத்தொடங்குங்கள்.

ஒரு ஆணை இயல்பாக இயற்கைக்குமாறாக அன்றி வளரவிட்டால் அவன் தனது பதின்நான்காவது வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகிறான். ஆனால் இன்று இயற்கைக்கு மாறான சமூகம் மனிதனி பிஞ்சில் பழுக்க வைக்கின்றன. இன்று மேலை நாடுகளில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளிலும் ஆண்பிள்ளைகளும், பெண்களும் தமது வயதுக்கு முன்னரே பாலியல் முதிர்ச்சியினை அடைகின்றனர். இந்தக் காரியத்தினை இன்றை திரைப்படங்களும், இன்டர்நெட் என்பன தாராளமாகச் செய்கின்றன.

இந்த தாராளமயமாக்கப்பட்ட பாலியல் படங்கள், ஊடகங்களினால் இன்றைய இளைய சமூகம் இயற்கைக்கு மாறான பாலியல் வளர்ச்சியினை பெறுகிறார்கள். இயற்கை உடலினை பதின்நான்கு வயதில் தயார்படுத்து முன்னர் இந்த செயற்கை ஊடகங்கள் மனதில் பாலியல் எண்ணங்களை விதைக்கின்றன, இதனால் உடலிற்கும் மனதிற்குமான போராட்டம் ஆரம்பமாகிறது. இதனால் தனது சக்தி முழுவதையும் வெகுவாக இழந்து எதற்கு பயன்படமுடியாத உடலினையும் மனதினையும் பெற்றவர்களாக ஆகின்றனர்.

சற்று பழமைவாத போக்குடைய மதவாதிகள் இதற்கு நேர்மாறான மதத்தின் பெயரால் பாலியல் முதிர்ச்சியினை அடைந்த இளைஞர்களையும் காமத்தினையும் அதன் செயற்பாட்டினையும் பாவம் என பயமுறுத்தி அவர்கள் உடல் மனப்போராட்டத்தினை ஏற்படுத்து விடுகின்றனர். அதனால் இருவித மனப்போராட்டத்தில் சக்தியினை இழந்து தம்மை அறியும் தகமையினை அடையாது போகின்றனர்.

இயல்பான சமூகம் ஒருவனுடைய பதின்நான்காவது மனதில் அவன் உடல் தயாராகும் போது மனதினையின் தயார்படுத்தும் நிலையில் அமைந்திருக்கவேண்டும். காமத்தினை பயமுறுத்தல் இன்று அதன் செயற்பாடுகள் எப்படி என்பதினை கற்பிக்க வேண்டும். இந்த பயமுறுத்தும் மதவாதிகளின் தலையீடு இன்றியும், காமத்தினை தலையில் ஏற்றி தம்மை காயப்படுத்திக்கொள்ளாமலும் இயல்பாக வாழ்த்தொடங்கும் ஒருவன், வாழ்வில் இன்பத்தினையும் அனுபவித்து, ஆழமான அனுபவத்துடன் தனது உடலின் சக்தி நாற்பத்து ஐந்து வயதுகளில் குறையத்தொடங்கும் போது தியானத்தில் ஆழமாக சென்று சமாதி எனும் பேரானந்த நிலையினை  அடையும் தகுதியினைப்பெறுகிறான். அந்த வயதில் நீங்கள் மிகவும் ஆழமாகவும், முதிர்ச்சி அடைந்தும், மையம் கொண்டவராகவும்,மனக்குழப்பம் அற்றவராகவும் இருப்பீர்கள். 

ஆகவே பயமற்று உங்கள் நிலையினை ஏற்றுக்கொள்ளூங்கள்! இப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களை பயமுறுத்தும் எதுவும் தன் சக்தியினை இழந்து உங்களுக்கு வசமாகும்!

Wednesday, January 16, 2013

காம ரகசியம் - 04: ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் முறை

ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் விதம்

வசந்த காலத்தில் ஆண் குயில் கூவுகிறது. அது எதற்காக என்று நீங்கள் நினத்துப்பார்ட்ததுண்டா? அது தனது காமத்திற்கான இணையினை தேடுகிறது.   குயில் இவ்வாறு செய்வதனை யாரும் தவறு என்று கூறுவதில்லை.  பூக்கள் ஏன்  மலர்கின்றன? வாசத்தினை பரப்புகின்றன? அவை தம்மை விளம்பரபடுத்திக்கொள்கின்றன, " நான் மலர்ந்து விட்டேன், என்னிடம் தேன் உண்டு, வாசம் உண்டு, வண்ணத்தி பூச்சிகளும், தேனீகளும் வரும்படி அழைக்கிறது. ஏன் அது தன்னிடம் உள்ள மகரந்ததினை பரப்பவேண்டும். 

இதைப்போல் மயில் தோகை விரித்தாடுவது எதற்காக? அப்படி வானவில் நிறமுடைய மயில் தோகை விரித்தாடும் மயில் ஆண் மயில் என்பதினை உணர்ந்திருக்கிறீர்களா? அது ஏன் ஆடுகிறது? பெண் மயிலினை கவர்வதற்காகவே! இயற்கையில் ஆண் இனம் எல்லாம் அழகானவையே, இயற்கையில்  ஆண்தான் தன்னை நிரூபித்து பெண்ணை கவர வேண்டி உள்ளது. ஆனால் மனித இனத்தில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. பெண்ணே  ஆணைக் கவர்கின்றாள். உண்மையில் பெண் தன்னை வேறுவிதத்தில் அழகு படுத்த தேவையில்லாதவள். அவள் பெண்ணாக இருக்கும் போதே அழகாகி விடுகிறாள்.  ஆக மனிதகுலத்திலும் இயல்பில் ஆணே அழகாக இருக்கவேண்டியவன், அவனை நோக்கியே பெண் கவரப்படவேண்டியவள்.

உதாரணமாக ஒரு   ஒரு பணக்காரர் தனது மனைவியுடன் வெளியே செல்லும் போது கவனித்தீர்கள் என்றால் தெரியும், மனைவியிற்கு பலவித அலங்காரம் செய்து, ஒப்பனைகள் செய்து அழகாக்கி காண்பவர் காணும் வண்ணம் தன் மனைவி அழகானவள் என விளம்பரப்படுத்தி செல்வார், இதன் உள்ளார்ந்த நோக்கம்தான் என்ன? தன் அழகான மனைவி மூலம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறார். இது ஒரு வியாபார உத்தி! இந்த‌ நிலையில் ஆண் அடிமையாகிறான், அவ‌னுடைய‌ அழ‌கு, அவ‌னுடைய‌ செல்வ‌ம், அவ‌னுடைய‌ திற‌மை ம‌றைக்க‌ப்ப‌டுகிற‌து. எப்போது ம‌னித‌ன் இய‌ற்கை விதிக‌ளை மீறி செய‌ற்ப‌டுகிறானோ அத‌ன் விளைவுக‌ளை அவ‌ன் க‌ட்டாய‌ம் அனுப‌விக்க‌த்தான் வேண்டி இருக்கும், அதில் இய‌ற்கை எதுவித‌ ஏற்ற‌த்தாழ்வினையும் காட்டுவ‌தில்லை.

இப்ப‌டியான‌ அடிமைப்ப‌ட்ட‌ தாழ்ந்த‌ நிலையிலிருந்து மீள்வ‌த‌ற்கு ஆணிற்கான‌ ஒரேவ‌ழி தியான‌ம் ம‌ட்டுமே! தியானித்த‌ல் இல்லையென்றால் ஆண் த‌ன் அழ‌கை இழ‌ந்து பெண்பின்னால் பைத்திய‌ம் ஆக‌த்தொட‌ங்குகிறான். ஆனால் ஆணால் இல‌குவாக‌ தியானிக்க‌ முடிவ‌தில்லை, பெண் இருத்தி தியானிப்ப‌தைவிட‌ ஆண் தியான‌த்தில் அம‌ர்வ‌து மிக‌க்க‌டின‌ம். நான்கு ஐந்து ஆண், பெண் பிள்ளைக‌ள் பெற்ற‌ தாய்மாரைக்கேட்டால் சொல்வார்க‌ள் வ‌யிற்றில் பெண் பிள்ளை இருக்கும் போது மிக‌வும் அமைதியாக‌ இருக்கும், ஆனால் ஆண் பிள்ளை இருக்கும் போது அடிக்க‌டி தாயின் வ‌யிற்றை கண்ட‌ப‌டி உதைத்த‌வ‌ண்ண‌ம் இருப்பான்.

பெண் இல‌குவாக‌ ஆழ‌மான‌ தியான‌த்திற்கு செல்ல‌க்கூடிய‌ த‌ன்மை உடைய‌வ‌ள், அதேவேளை அவ‌ர்க‌ளுடைய‌ காம‌ ச‌க்தி ம‌றைத்த‌ன்மை உடைய‌து. அத‌னால் அவ‌ர்க‌ளை காம‌ம் தூண்டி அதீத‌ ச‌க்தியினை வேறு திசையில் செலுத்துவ‌தில்லை. இது ஒரு பெண் த‌ன் பெண்த‌ன்மையுட‌ன் இருக்கும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கிற‌து. இயற்கையில் அவ‌ர்களில் காம‌ ச‌க்தி அதிக‌ரித்து அவ‌ர்க‌ளை அதீத‌ காம‌த்திற்கு இட்டுச் செல்வ‌தில்லை, அவ்வாறு அதிக‌ரிக்கும் போது உட‌லிய‌ற் தொழிற்பாட்டினூடாக‌ ஒவ்வொரு மாத‌மும் அவ‌ர்க‌ளின் அதிக‌ரிக்கும் காம‌ ச‌க்தி வெளியேற்ற‌ப்ப‌ட்டு உட‌லும் ம‌ன‌மும் அமைதிப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. பொதுவாக‌ ஆண்க‌ள் துற‌வ‌ற‌ம் ஏற்று நீண்ட‌ பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌ம் இருப்ப‌து மிக‌ அரிதான‌ விட‌ய‌ம், ஆனால் பெண் துற‌விக‌ள் இய‌ல்பிலேயே பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌ம் காப்ப‌து இல‌குவான‌ ஒன்றாகும். ஏனெனில் இய‌ற்கையில் பெண் த‌ன‌து உடல் மூலம் காம‌ச‌க்தியினை வெளியேற்றும், தியானம் இன்றியே இல‌குவாக‌ அடையும் த‌ன்மையினை பெற்றுள்ளாள்.

ஆனால் ஆண் ஒருவ‌னால் அப்படி இருக்க‌ முடியாது. அவ‌னுடைய‌ காம‌ச‌க்தியினை உய‌ர்நிலைப்ப‌டுத்துவ‌த‌ற்கு ஆழ‌மான‌ தியான‌ம் க‌ட்டாய‌ம் அவ‌சிய‌மான‌ ஒன்றாகும். இப்ப‌டி  காம‌ச‌க்தியினை ஆழ‌மான‌ தியான‌த்தின் மூல‌ம் உய‌ர்ச‌க்தியாக்காம‌ல் ஆணால் பெண்ணிற்கு பின்னால் பைத்திய‌க்கார‌த்த‌ன‌மாக காம இச்சையுடன் அலையாம‌ல் இருக்க‌ முடியாது.

காமம் என்பது ஆணின் மிகப்பெரிய தளை (கட்டுண்ட நிலை. இந்த நிலையினை அவிழ்க்க தியானத்தின் மூலம் முயலவேண்டும். இப்படி முயற்சிக்கும் போது ஆணின் காமசக்தி கீழ்முகமாக வீணாகமல் மேல் நோக்கிச் செல்லத்தொடங்கும். அழகான பெண்ணிற்காக அலையாமல் தியானத்தின் மூலம் அவன் தன்னுள் அழகாக ஆணினைப்படைக்க வேண்டும். ஆனால் இயல்பின் ஆண் பெண்ணை விட முட்டாள்! தன்னுடைய முட்டாள்தனத்தினை மறைக்க, தனது காம சக்தி கீழ்முகமாய் சென்று உலகத்தினை அழிவு நோக்கி செலுத்த ஆரம்பிக்கிறான். அப்படி உருவான பைத்தியக்காரத்தனத்தில் தான் உலக வரலாறு எழுதப்பட்டுள்ளது. உலக யுத்தங்கள், கற்பழிப்புகள், மற்றவரை அழித்தல் என்பவையெல்லாம் ஆணின் காமசக்தி கீழ் நோக்கி செலுத்தப்பட்டதால் வந்த வினைகளே!

ஆகவே தன்னை அறிந்துகொள்ள விளையும் ஒவ்வொருவரும் தமது காமசக்தி செயற்படும் முறையினை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம்!

இறை சாதனைகள் (தியானம், ஜெபம், பிரார்த்தனை) ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில்தான் கட்டாயம் செய்ய வேண்டுமா?

இறை சாதனைகள் (தியானம், ஜெபம், பிரார்த்தனை) ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில்தான் கட்டாயம் செய்ய வேண்டுமா?

இந்தக் கேள்விக்கான பதிலினை ஒரு உதாரணம் மூலம் விளங்க்கிகொள்வோம்.

உங்களுக்கு நாட்டு ஜனாதிபதியின் நட்பு, அதன் மூலம் உதவி தேவைப்படுகிறது என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அவருக்கு  நெருக்கமான நண்பர் ஒருவர் ஜனாதிபதியின் தனிப்பட்ட அலைபேசி இலக்கத்தினை தருகிறார், இதுவே இறை சாதனையில் தீட்சை எனப்படுகிறது. பெறப்படும் மந்திரம் குறித்த   தெய்வ சக்தியின் தனிப்பட்ட அலைபேசி இலக்கம் போன்றது.  அதனைத்தரும் குரு ஏற்கனவே அந்த தெய்வ சக்தியுடன் பரீட்சயமான நண்பர்.

முதன் முறையாக ஜனாதிபதியிற்கு அழைப்பினை ஏற்படுத்தும் போது அவரது ஓய்வு நேரம் அறிந்து அந்த வேளையில் அழைப்பினை ஏற்படுத்தினால் மட்டுமே நாம் ஓய்வாக அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். பின்னர் நன்கு பழக்கமாகி மிக நெருங்கிய நட்பாகிய பின்பு ஏதும் அதிஅவசரம் என்றால் நினைத்த நேரத்தில் உரையாடி உதவி கேட்கலாம், ஆனால் நினைத்தபடி அவரை எந்த நேரமும் தொல்லை செய்யமுடியாதல்லவா?

இதைப்போலவே இறைசாதனைகளும் ஆரம்ப சாதனையில் நேரக்கட்டுப்பாடு, மற்றைய கட்டுப்பாடுகளை கட்டாயம் சரியாக கடைப்பிடுத்து சாதனையில் சித்தி அடைந்த பின்னர் அவற்றை தளர்த்திக்கொள்ளலாம்.

Tuesday, January 15, 2013

காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?

காமத்தின் மீதான வெறுப்பு சரியா?

ஓஷோவிடம் ஒருமுறை ஒரு பெண் " நான் எனது கணவரை மனதார நேசிக்கிறேன், ஆனால் காமத்தினை வெறுக்கிறேன், இதனால் எனக்கும் கணவருக்குமிடையில் முரண்பாடு உண்டாகிறது இது ஏன்?" என வினாவினார், அதற்கு ஓஷோவின் பதில் இவ்வாறு இருந்தது. 

நீங்கள் வார்த்தையினால் விளையாடுகிறீர்கள், அது எப்படி உங்கள் கணவரை விரும்பிக்கொண்டு காமத்தினை வெறுக்கமுடியும். முதலில் இதன் அடிப்படையினை புரிந்து கொள்ள வேண்டுகிறேன், ஒரு ஆணை விரும்பும் போது நீங்கள் அவனது கையினை பிடித்துக்கொண்டு நடக்க விரும்புகிறீர்கள், அவனை அடிக்கடி காண விரும்புகிறீர்கள், அவனை கட்டியணைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள், அவனது குரலை அடிக்கடி கேட்க விரும்புகிறீர்கள், அதுமட்டுமல்ல அவனை பார்க்கத் தவிக்கிறீர்கள், அவன் தூர இடத்திற்கு செல்லும் போது அவனது குரலை மட்டும் கேட்பதில் திருப்தி இல்லாது அவனைக் கண்டவுடன் மட்டுமே மனம் அமைதி பெறுகிறது. 

அவனை தொடுவதன் மூலம், அவன் உங்களை தொடுவதன் மூலம்  உங்களுக்கு இன்பம் உண்டாகிறது, அதைவிட முத்தமிடும்போது இன்னும் இன்பம் உண்டாகிறது. ஆக காமம் என்பது இரு எதிர்துருவங்கள் ஆழமாக தமது சக்திகளை கலக்கும் செயன்முறையே ஆகும். காமம் என்பது தனியே ஒருவரின் கையினை கோர்த்துக்கொண்டு உடல்களை இணைக்கும் செயன்முறை மட்டுமல்ல, அது ஒரு ஆழமான சக்திப்பரிமாற்ற நிகழ்வாகும். இத்தகைய உன்னதமான விடயம் எப்படி தவறானதாக இருக்க முடியும். 

உங்களுடைய பிரச்சனை உங்கள் மனதில் உள்ளது, உங்களது மன திற்கு காமத்தினைப்பற்றி தவறாக பரப்பபட்ட எண்ணங்களினால் அதனை தவறாகவே பார்க்கப் பழகியுள்ளீர்கள். உங்களுடைய மனது உங்கள் மதத்தலைவர்களினால் கட்டமைக்கப்படுகிறது, இந்த மதவாதிகள் முழு மனிதகுலத்தினையும் மதத்தின் பெயரால் நச்சாக்கி உள்ளார்கள். 

அவர்கள் வாழ்வின் வளர்ச்சியின் அடிப்படை உயிர் நாதத்தினை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள். இத்தகைய விஷ எண்ணத்தினை ஏன் நீங்கள் ஏற்றுக்கொண்டு ஏன் காமத்தினை வெறுக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆணை விரும்பினால் அவனுடன் உங்களை முழுமையாக பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் வெறுப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள். காமத்தினை வெறுக்கிறேன், ஆனால் அவனை நேசிக்கிறேன் என்றால் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள், நான் உனது பணத்தினை நேசிக்கிறேன், உன்னுடைய வீட்டினை நேசிக்கிறேன், உன்னுடைய கார் எனக்கு பிடித்திருக்கிறது, இதன் மூலம் அவனை பயன்படுத்திக்கொள்கிறீர்கள், பின்பு அதனை அன்பு காதல் என மூலாம் பூசுகிறீர்கள். 

நீங்கள் அன்பு செலுத்தும் போது எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வீர்கள், அன்பு செலுத்தும்போது ரகசியங்கள் எதுவும் இருப்பதில்லை, அன்பு செலுத்தும் போது உங்கள் இதயம் முழுமையாக திறந்திருக்கும். நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்தும் போது அந்த நபருடன் நரகத்திற்கும் செல்வதற்கு தயாராக இருப்பீர்கள், ஆனால் நாம் வார்த்தைகளை தந்திரமாக உபயோகிப்போம். நாம் அன்பு செலுத்தவில்லை என்று நேராக கூறமாட்டோம், ஏனெனில் உண்மையான அன்பு மேலே கூறிய பண்புகளை உடையது, அதனை ஏற்க தயாரில்லாமல் அன்பின் வரைவிலக்கணத்தை வார்த்தைகளால் மாற்ற முயற்சிப்போம். அதுபோலான வார்த்தை ஜாலமே நீங்கள் கூறும் "நான் நேசிக்கிறேன் ஆனால் காமத்தினை வெறுக்கிறேன்" என்பது.

காமம் என்பது அன்பு இல்லை என்பது உண்மை, அன்பு காமத்தினை விட மேலான ஒன்று, ஆனால் காமம் அன்பின் அடிப்படைகளில் ஒன்று, ஆம் ஒரு நாளைக்கு காமம் முற்றாக மறைந்து அன்பு மட்டுமே இருக்கப்போகிறது, ஆனால அது காமத்தினை வெறுப்பதினால் நடந்து விடாது. 

காமத்தின் மீதான வெறுப்பு என்பது அதனை வலிந்து அடக்கும் ஒரு செயன்முறையாகும். இப்படி அடக்கப்படும் ஒரு விடயம் கட்டாயம் வேறொரு விதத்தில் வெளிப்படவே செய்யும். இந்தப்பயத்தில் துறவினை ஏற்றுக்கொண்டு இறை சேவை செய்கிறேன் என்று பயந்து ஓடாதீர்கள், காமம் என்பது இயல்பானது என்பதினை மனதில் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நிச்சயமாக காமத்தினை கடந்து செல்லமுடியும் ஆனால் அதனை அடக்குவதால் நிச்சயமாக கடக்க முடியாது. இப்படி அடக்கினால் அது வேறொரு வழியில் வெளிப்படக்காத்துக்கொண்டிருக்கும். அப்படி அடக்குவது ஒன்று சமூகத்திற்கு மாறான ஒழுக்க கேட்டினை உருவாக்கும், அல்லது அதன் மீதான் அதீத பைத்தியத்தினை உருவாக்கும். (இது எவ்வளவு பெரிய பேருண்மை இன்று கற்பழிப்புகள் அதிகரிப்பதற்கும், காமம் சார் திரைப்படங்களுக்கான வரவேறுபும் இந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்). நீங்கள் அதனைக்கடந்து செல்ல வேண்டும் என்றால் இயல்பாக அதானை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான முதற் தகுதி!

இதுவே அதற்கான முதற் தகுதி! இங்கு நான் குறிப்பிடும் எதுவும் இயல்புக்குமாறானதல்ல! இதுவே எல்லா தாந்திரிக முறைகளதும் சாராம்சம்! நீங்கள் வானத்திற்கு செல்லவிரும்பினால் முதலில் பூமியில் இயல்பாக இருக்கவேண்டும். அதுபோல் பேரன்பினை அடைய விரும்பினால் முதலில் அதன் அடிப்படையான காமத்தினை சரியான முறையில் அணுகவேண்டும்.

நீங்கள் மரத்தினைப் பார்த்ததில்லையா? அவை வளர்வதற்கு முதலில் நிலத்தில் ஆழமாக வேர்களை செலுத்துகின்றன, அது எவ்வளவு அதிகமாக உயரவேண்டுமோ அவ்வளவு ஆழமாக அது தனது வேர்களை பூமியினுள் செலுத்த வேண்டும். அதுபோல் நீங்கள் இந்த உடலில் உள்ளீர்கள் அதிலிருந்து ஆன்மாவினை உணர முயல்கிறீர்கள், அந்த நிலையில் ஆன்மா அடையக்கூடிய உச்ச நிலை அன்பு, அதனை அடைவதற்கு நீங்கள் ஆழமாக நிலைகொள்ளவேண்டிய வேர் காமம்.  நீங்கள் காமத்தினை அதிகமாக அன்பாக மாற்ற மாற்ற அது மெதுவாக மறையத்தொடங்க்கும். ஆனால் அதனை வெறுப்பதன் மூலம் அதனை செய்ய முடியாது. 

வெறுப்பது என்பதனை எந்தவிதமான உறவிலும் இருக்க கூடாத ஒன்று, வெறுப்பு உண்டாகின்றதென்றால் அதன்மீது அளவுகடந்த விரும்பம் வைத்துள்ளீர்கள் ஆனால் அந்த விடயத்தில் உங்களுக்கு பயம் உள்ளது என்பதே காரணமாகும்.  இப்படியான நிலையில் காமத்தினை வெறுக்கும் போது உங்களிடைய சக்தி அது செல்லவேண்டிய பாதையிலிருந்து விலகி வேறு இடத்திற்கு செல்லத்தொடங்குகிறது (அதாவது காமத்தினை சரியான முறையில் ஏற்று அதனை அன்பாக மாற்றும் செயன்முறையிலிருந்து உங்கள் சக்தி விலகத்தொடங்கும்). அடிப்படையில் காமம் இறைவனால் கொடுக்கப்பட்ட புனிதமான ஒன்று, அதனை நாம் உயர்ந்த சக்தியினாக மாற்றிக்கொள்ளவெண்டியது எமது கடமை. கடவுளால் கொடுக்கப்பட்ட அனைத்தும் புனிதமானவையே, இங்கு கடவுள் எனும் போது அது குறித்த ஒரு நபரிணையோ, மத நம்பிக்கையினையோ குறிப்பதல்ல! இந்த பிரபஞ்சத்தின் முழு இருப்பையும் குறிக்கும். 

காமத்தினை வெல்லவேண்டுமாயின் காமத்தின் மீதான வெறுப்பினை இல்லாதாக்குங்கள்!

காமத்தின் ரகசியம் மேலும் தொடரும்.... 

Monday, January 14, 2013

காம ரகசியம் - 02


அடக்கப்பட்ட காமமும் காமத்தின் மீதான வேறுப்பும்

காமம் மிருகத்தனமானது என்ற கருத்து மீதான ஓஷோவின் பார்வை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

மனிதனும் ஒரு மிருக வகையினை சார்ந்தவன் தான், ஆனால் அவனை மிருகம் என்று மட்டும் சொல்லமுடியாது, அவன் ஒரு முடிவான் மிருகம் அல்ல, அவன் மேலும் மிருகமாகவும் முடியும், அல்லது மேல் நோக்கி தெய்வமாகும் வழியிலும் செல்லமுடியும். அவன் எதையும் தேர்வு செய்யும் உரிமையினை பெற்றுள்ளான். நாய் என்பது கடைசிவரை நாய் எனும் மிருகம்தான், ஆனால் மனிதம் புத்தர் என்ற புனிதராகவும் முடியும், ஹிட்லர் என்ற கொடுங்கோலனாகவும் முடியும். அவன் இருபக்க தேர்வு சுதந்திரம் உடையவன். 

இங்கு காமம் மிருகத்தனமானது என்ற கருத்தில் மிருகத்தனம் என்பதனை வரவிலக்கணப்படுத்த வேண்டும், உலக வரலாற்றில் மனிதனைத்தவிர எந்த மிருகங்களூம் அதிகளவு போர் செய்ததில்லை, தமது இனத்தையே கொடுரமாக கொலை செய்ததில்லை, இப்படியிருக்க மிருகத்தனம் என மனிதன் தனது தவறான செய்கைகளுக்கு வரைவிலக்கணப்படுத்துவது மிகவும் தவறானது. மனிதன் தனது தேர்வு செய்யும் உரிமை மூலம் மிருகத்தினை விட அதிகமாகவே முன்னேறிவிட்டான், அதனை சுட்ட மிருகத்தனம் என்கின்றான். இதனை புரிய சிறிய குட்டிக்கதை ஒன்றினை பார்ப்போம், 

ஒரு ஹோட்டலில் ஒருவர் தனது நாயுடன் தங்க்குவதற்கு விரும்பினார், அதற்கான அனுமதியினை முகாமையாளரிடம் கேட்ட போது கீழ்வரும் பதிலினை பெற்றார், அன்புள்ள ஐயா, நான் ஹோட்டல் துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ளேன், இந்த முப்பது ஆண்டு சேவையில் நான் ஒரு நாயினை வெளியேற்றுவதற்காக ஒருபோதும் பொலிஸினை கூப்பிட்டதில்லை, எந்த ஒரு நாயும் எனக்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக செல்லுபடியாகாத காசோலையினை தந்ததில்லை, எந்தஒரு நாயும் கட்டிலில் உள்ள போர்வையினை சிக்கரட் நாற்றத்தால் நாறடித்ததில்லை, எந்த ஒரு நாயும் தந்து சூட்கேஸில் துவாயினை சுருட்டி எடுத்து சென்றதில்லை, ஆகவே உங்களுடைய நாய் தாராளமாக தங்கலாம் என்றான், இதில் உள்ள செய்து நாய் எனும் விலங்கு மிகவும் இயல்பானது, செயற்கைதனம் அற்றது, ஆனால் மனிதன் சூழ்ச்சி நிறைந்தவன், எல்லவற்றிலும் தனது இலாபம் என்ன என்று பார்ப்பவன், 

ஆக மனிதன் எந்த நிலைக்கும் போகும் வாய்ப்பினை உடையவன், தாழ்ந்த நிலைக்கும் செல்லலாம், மேலான நிலைக்கும் செல்லலாம். ஆகவே மனிதனது மிருகத்தனம் என்பது என்னவென்று புரிதல் அவசியம், ஆதலால் காமம் என்பது மிருகத்தனம் அல்ல காமம் மிருகத்தனம் ஆக்கப்படலாம். அதேவேளை அது அன்பாகவும் மாற்றப்படலா, உயர்ந்த பிரார்த்தனை ஆகலாம், அதனை மிருகத்தனம் ஆக்குவதும் தெய்வீகம் ஆக்குவது மனிதனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்லது சுதந்திரமே அன்றி, காமம் மிருகத்தனமோ, பாவமானதோ அல்ல! அதனை அப்படி ஆக்குவது அதனை அணுகியவரின் அணுகுமுறையில் உள்ள தவறே அன்றி காமத்தில் உள்ள தவறு அன்று! 

காமம் என்பது இதுதான் என்று கூறக்கூடிய ஒரு திடப்பொருள் அல்ல! எது நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றப்படக்கூடிய ஒருவாய்ப்பு! அவ்வளவே! அது உங்கள் கையில் உள்ளது, காமத்தினை கொண்டு பேரின்பத்தினையும் அடையலாம், யோகம் கூறும் அதி உன்னத நிலையான சமாதியினையும் அடையலாம்! காமத்தினை கடவுளை அடையும் ஒரு பாலமாகவும் பயன் படுத்தலாம்! இந்த சாராம்சமே தாந்திரீகத்தின் சுருக்கமான விளக்கமாகும்! 


ஆக காமத்தினைப்பற்றிய புரிதலில் மனிதனது வரைவிலக்கணங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்! இப்படிப்புரிந்து கொள்ளும்போது காமத்தின் மீதான தவறான பார்வைகள் விலக்கப்பட்டு காமத்தினை ஆரோக்கியமாக அணுகும் தன்மை இளைஞர்களின் மனதில் கட்டாயம் உருவாகும், இதன் மூலம் நல்லதொரு ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை!

காமத்தின் இரகசியங்கள் மேலும் வளரும்!.........................

Sunday, January 13, 2013

காம ரகசியம் - 01



னிதனால் அதிகமாக விரும்பப்படும், மனதினை ஆட்டிப்படைக்கும் விடயம் "காமம்", இன்றை உலகில் இதுபற்றி பலவித விழிப்புணர்வு இருந்தாலும் இதனை சரியான முறையில் வெளிப்படையாக அணுகும் வழிமுறையினை உலகிற்கு தந்தவர் ஓஷோ, ஏனெனில் காமத்தினைப் பற்றிய ரகசிய விஞ்ஞானம் இந்தியாவில் தாந்திரீகத்தின் ஊடாகவும், சீனாவில் தாவோவியலின் ஊடாகவும், மேற்கத்தைய நாகரீகத்தில் ரொசிகிருஷேஷியன் போன்ற இரகசிய சங்கங்களினாலும் தமது குழுக்களூக்கிடையில் மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர், இதனை மாற்றி அமைத்து வெளிப்படையாக கூறியவர் ஓஷோ மாத்திரமே எனலாம். இந்த தொடரில் ஓஷோவின் காமம் - தாந்திரீகம்-பாலுணர்வு தொடர்பான தகவல்களை தொகுத்து தரலாம் என எண்ணுகிறோம்.

இதனை வாசிப்பவர்கள் ஒரு வெளிப்படையான திறந்த மனதுடன் இவற்றை அணுகும்படி வேண்டப்படுகின்றனர், அல்லாது கீழ்ப்படுத்தப்பட்ட பாலுணர்வு தொடர்பான ஆக்கங்களோ அல்லது அப்படியான உணர்வினை இட்டுச்செல்லும் வகையிலான தகவல்கள் எதுவும் இங்கு இருக்காது. எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் காமத்தினை பற்றிய வெளிப்படையான,ஆழமான புரிதலைப்பெறுதலே இந்த கட்டுரைத்தொடரின் நேக்கமாகும், இதனை ஒத்த மனதுள்ளவர்கள் இதனை வாசிக்கத்தொடரவும், அல்லாதவர்கள் விலகிச்செல்லலாம். 

காமம் என்பது வாழ்வின் மூலாதாரம், நாம் காமத்திலிருந்தே பிறக்கிறோம், ஒவ்வொரு கலத்திலும் காமத்தின் பகுதி கலந்தே இருக்கிறது. காமத்தினை மறுப்பவன் தற்கொலை செய்வதற்கு ஒப்பான நிலையினை அடைகிறான். அவன் தனது வாழ்வின் உயிர்ப்பினை இழக்கிறான். சரி அப்படியானால் ஏன் காமம் தவறானதாக கருதப்படுகிறது, இதனை விரிவாக வேறொரிடத்தில் பார்ப்போம். இங்கு காமத்தினைப்பற்றிய பொதுவான அணுகுமுறை பற்றி பார்ப்போம். 

எம்மெல்லோருக்கும் வாழ்வில் தவிர்க்கமுடியாத, அர்த்தமுள்ள, முக்கியத்துவமான விடயம் எனப்து தெளிவாக தெரிந்திருக்கிறது. ஆனால் அனைவரும் காமத்தினை தனிப்பட அணுகும் போது இரு தவறான அதீத அணுகுமுறையினை கடைப்பிடிக்கிறோம். முதலாவது அதீத அடக்கல், இதன் மூலம் அதன் மீதான இயற்கைக்கு மாறான விருப்பம் அதிகரிக்கிறது. இதற்கு உதாரணமாக ஒஷோ மேலைத்தேய கிருஸ்தவ கலாச்சாரத்தினை கூறுகிறார். கிருஸ்தவத்தின் முதன்மை அணுகுமுறை உலகின் இயல்பான நிலவரத்தினை பாவமாக பார்ப்பதன் மூலமே கட்டமைக்கப்படுகிறது. இப்படி அதீதமாக பாவமாக்கப்பட்ட காமம், பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அடக்கப்பட்டு, அதன் நிரம்பு நிலையினை அடைந்த பின்னர்  வெளிபடும் நிலை இதன் மற்றைய எல்லையான அதீத காமத்தினை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

இப்படி அடக்கப்பட்ட காமம் சந்தர்பம் கிடைக்கும் போது சமூக நியதிகளையும் மீறி அனுபவிக்கும் நிலைக்கு செல்கிறது, இதற்கு அண்மையில் உலகையே குலுக்கிய டெல்லி சம்பவம் ஒரு உதாரணம். இப்படி தவறாக அடக்கப்படும் காமத்தாலும், அது வெளிப்படுவதால் ஏற்படும் பாதிப்பினாலே இன்றைய பெரும்பாலும் பல காமம் சார்ந்த பாலியல் பிரச்சனைகள் உருவாகின்றது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. 

இந்த இரு நிலைகளூம் ஏற்படுவதற்கு காரணம் காமத்தினைப்பற்றி குறித்த மனதில் கட்டியெழுப்பபட்ட தவறான எண்ணங்களே காரணம், காமம் தவறு என்று மனதிற்கு போதிக்கப்படுகிறது, அது வலுவாக சித்தத்தில் இருக்கும் போது சாதாரணமாக மனதில் எழும் காம எண்ணமே மனதினை பலமாக தாக்குகிறது. ஆகவே காமம் தவறானது என்ற எண்ணம் மனதிலிருந்து களையப்படவேண்டும். காமம் எமக்கு தேவையான ஒன்று, இன்பம் பயப்பது, மனித குலம் உலகில் நிலைத்து நிற்க தேவையான அடிப்படை அமிசம் அது என்ற புரிதல் ஏற்படவேண்டும். காமத்தின் அடிப்படை மனிதனின் பேரன்பிற்கான ஊற்று என்பதானை புரிதல் வேண்டும். அன்பு இல்லாத காமம் அழகற்றது, ஆபத்தானது. அன்பின் அடிப்படையில் உருவாகும் காமம் மட்டுமே நம்பிக்கை, நேர்மை மற்றும் ஏற்கக்கூடிய காமமாக இருக்கும். காமத்தின் இந்த அடிப்படையினை சரியாக விளங்கிகொள்ளாது காமம் வேறு அன்பு வேறு, என்று நினைப்பதனால் காமத்தின் முழுமையான அமைப்பினை ஏற்க மறுக்கிறோம். காமம் என்பது எம்மில் அன்பினை முழுமையடையச் செய்ய இருக்கும் அடிப்படை விதையாகும். ஆக காமம் விதை என்றால் அன்பு அதிலிருந்து உருவாகும் விருட்சம் என்பதனை புரிதல் வேண்டும். 

காமத்தின் இரகசியம் இன்னும் தொடரும் ....

மந்திர யோகம் (04): மந்திரத்தின் பண்பு


சென்ற பதிவில் மந்திரம் ஒன்றின் அமைப்பு எப்படி இருக்கும் என்று பாத்தோம், இந்தப்பதிவில் மந்திரம் ஒன்றின் பண்பு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மந்திரத்திற்கு ஏழு பண்புகள் இருக்கும். அவையாவன் ரிஷி, சந்தஸ், தேவதை, பீஜம், சக்தி, கீலகம், நியாசம் என்பன. இந்த ஏழைப்பற்றிய தத்துவார்த்த விளக்கம் பற்றி கீழே பார்ப்போம்.

  1. ரிஷி: பிரம்மம் என்ற பேரொளியின் அதிர்வுகளில் இருந்தே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது, ஒவ்வொரு பொருளிற்கும், எண்ணத்திற்கும் பிரபஞ்ச சக்தியின் குறித்த அதிர்வு காணப்படும். அந்த சக்தி அதிர்வினை தமது தியான சக்திமூலம் உணரக்கூடியவர்களையே பழங்காலத்தில் ரிஷிகள் எனப்பட்டனர். அவர்கள் பிரபஞ்சிலுள்ள தெய்வ சக்தியினை முதலில் உணர்வின் மூலம் அறிந்து பின்னர் சப்தத்திற்கு மாற்றி மந்திரங்களை அமைத்தனர். உதாரணமாக வானொலியினை எடுத்துக்கொண்டால் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து சப்த அலைகள் மின்காந்த அலைகளாக வானப்பரப்பில் பரப்பப்படும், இந்த அலைகள் தகுந்த வாங்கிகள் மூலம் வானொலியினை மட்டிசைப்பதன் (Synchronizing)  மூலம் வானத்தில் உள்ள மின்காந்த அலைகள் மீண்டும்  சப்த அலைகளாக மாற்றப்படும், இதைப்போல் பிரம்மம் என்ற பேரொளி தெய்வசக்திகளை பிரபஞ்ச்சத்தில் பரப்பிய வண்ணம் உள்ளன, அவற்றை மனம், உடல் கொண்டு தியானம் மூலம் ஈர்த்து ஒலிவடிவத்திற்கு மாற்றும் செயன்முறையினை முதன்முதலாக செய்தவகளே அந்த மந்திரத்தின் ரிஷிகள் எனப்பட்டனர். அதாவது குறித்த தெய்வ சக்தி செயற்படும் அதிர்வெண்ணை முதலில் கண்டு பிடித்தவர்களே ரிஷிகள். இவர்கள் மந்திர உபாசனையில் முதலில் நினைக்கப்படவேண்டியவர்களாக பாரம்பரியமாக கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் பூவுலகில் அவர்களூடாகவே அந்த மந்திரம் செயற்படும் படி பிரபஞ்ச மனதில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மந்திர உபாசனையில் அந்த மந்திரத்தினை கண்ணறிந்த ரிஷியினை முதலில் நினைப்பது கட்டாயம். இதனால் தான் ரிஷிகளை மந்திர திருஷ்டா என அழைப்பவர், அதாவது மந்திரத்தினை பிரபஞ்சத்தில் இருந்து கண்டறிந்தவர்கள் என்று பொருள். 
  2. சந்தஸ்: எங்களுக்கு வானொலியில் குறித்த அலைவரிசையில் குறித்த வானொலி நிலையம் இயங்கும் என்பாத்து தெரியும், ஆனால் அதனை அடைவதற்கு மீற்றரினை (frequency) எத்தனையில் வைக்கவேண்டும் என்ற ஒழுங்கு இருக்கிறது, இதுவே சந்தஸ் எனப்படும். இது பொதுவாக ஏழு வகைப்படும் காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருகதி, பங்க்தி, திருஷ்டுப், ஜகதி ஆகியவை, இந்த அலைவரிசைகள் ஒரு மந்திரத்தினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற முறையினை கூறும், இந்த ஏழு சந்தஸ்களும் சூரியனின் ஏழு குதிரைகளாக உருவகப் படுத்தப்படுகிறது. சூரியன் மூலமே பூவுலகிற்கு எல்லா தெய்வ சக்திகளும் வருகின்றது என்பதினால் சூரியனே மந்திர சக்திகளின் அதிர்வு உருவாக்கப்படுகிறது.
  3. தேவதா: இது குறித்த தெய்வ சக்தி, அதாவது எந்த தெய்வ சக்தி என்பதினை குறிக்கும், காயத்ரி, கணபதி, துர்கா,ம்ருத்யுஞ் ஜெய இப்படி அந்த மந்திரத்தின் மூலம் கவர வேண்டிய தெய்வ சக்தியினை தேவதை குறிப்பிடும். 
  4. பீஜம் (seed): ஒரு மரத்தில் அதன் மூலம் அதன் விதையில் இருப்பது போல் குறித்த தெய்வ சக்தியின் மூல சக்தி அந்த மந்திரத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இந்த ஒலியே குர்த்த தெய்வ சக்தியினை சூஷ்மமாக பஞ்ச பூதங்க்களினூடாக செயற்படுத்தும் இந்த ஒலியிருந்தால்தான் மந்திரம் சக்தி பெறும். 
  5. சக்தி (Power): விதையிருந்தாலும் அதற்கு நீர் ஊற்றி, சூரிய ஒளி இருந்தால்தான் வளரும் என்பது போல் பீஜ மந்திரத்தினை வளப்படுத்த சக்தி அவசியம் இந்த சொல் சக்தி எனப்படும். 
  6. கீலகம் (Axle): இதற்கு முன்னர் கூறப்பட ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி என்பன புறப்பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளை குறிப்பவை, இவற்றை குறித்த மந்திரத்தின் மூலம் எமது சுஷ்ம உடலாகிய அகப்பிரபஞ்சத்தில் விழிப்படைய வைப்பதே மந்திர சாதனையின் நோக்கம், இதனை செய்வதற்கு ஒரு அச்சு தேவை, வானொலி உதாரணத்தினை எடுத்துக்கொண்டால் வானொலிப்பெட்டி என்பது மனம் முதலிய மனதினில் சூஷ்ம உடலாகும். அதனையும் சப்த அலைகளையும் இணைக்கும் வானொலியின் ஆண்டெனாவே மந்திரத்தில் கீலகம் என்ற பகுதியாகும். இது பிரபஞ்ச தெய்வசக்தியினையும் மந்தித சுஷ்மா உடலினையும் இணைக்கும் பகுதியாகும். இதன் மூலம் மந்திர சக்தி உடலில் ஒருங்கிணைக்கப்படும். 
  7. நியாசம்: மேற்கூறிய ஆறு பகுதிகளையும் உடலில் சரியான பகுதியில் இருத்தும் செய்முறை நியாசம் எனப்படும். இது கிட்டத்தட்ட வானொலிப்பெட்டியினை உள்ளே சீரமப்பதினை ஒத்தது, மேற்கூறிய ஆறுபகுதிகளை ஏற்பதற்குரிய உடலின் பகுதிகளை ஒழுங்கு படுத்தும் செயன்முறைதான் நியாசம் எனப்படும். மனித உடலின் முக்கியமான தெய்வ சக்தியினை ஏற்கும் கேந்திரங்கள் இரண்டு உள்ளன, முதலாவது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் உள்ளங்கைகளும்  , இரண்டாவது இருதயம், உச்சந்தலை, தலை முடி கட்டும்  இடம் (வைணவ பிராமணர்கள் மழித்து விட்டு சிகை முடியும் இடம்), தோள்கள் இரண்டும், மூன்று கண்களும், இருக்கைகளை தட்டும் ஓசை. 

முதலாவது கர நியாசம் எனப்படும் 

இரண்டாவது அங்க நியாசம் எனப்படும். 

மேற்கூறிய ஆறு இடங்களிலும் மனிதரின் தேவைக்கு ஏற்ப குறித்த தெய்வ சக்தி சில சொற்களின் மூலம்  வெவ்வேறு  விதமாக விழிப்பிக்கப்படும். 

அடுத்த பகுதியில் ஒரு மந்திர உதாரணத்தின் மூலம் இவற்றை மேலும் விளங்கி கொள்வோம். 

Friday, January 11, 2013

மந்திர யோகம் (03): மந்திரங்களின் அமைப்பு

சென்ற பதிவில் மந்திரம் என்றால் என்ன? என்று பார்த்தோம்,
 
இந்தப்பதிவில் மந்திரத்தின் பகுதிகள் என்ன என்று பார்ப்போம், இவை எல்லா மந்திரங்களிலும் காணப்படும் பொதுவான அமைப்புகளாகும், சிலவற்றில் சிலது இல்லாமல் இருக்கும்,
 
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு உடல் இருக்கும், அதாவது மந்திரம் என்றால் மனித உடல் போன்று கருதினால் அதன் தலை போன்றது "ஓம்' என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். சில  தாந்திரிக மந்திரங்களில் இவற்றிற்கு விதிவிலக்கு உண்டு, பொதுவான மந்திரத்தின் அமைப்பு கீழ்வருமாறு காணப்படும்.
 
அந்த மந்திரத்திற்குரிய தேவதை, ஓம் ஐ தொடர்ந்து ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக  ஓம் கணபதி.... என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க   பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.  
 
 
அடுத்த பகுதி சாதகரின் மனவிருப்பத்தினை, சங்கல்பத்தினை குறிப்பதாக இருக்கும்.  பொதுவாக ஸர்வ சித்திப்ப்ரதாய, மனோவாஞ்சிதம் போன்ற வார்த்தைகள் இவற்றை குறிக்கும்.
 
கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இது எழு வகையாக உள்ளது,
  •  நமஹ: இது மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குதல் என்று பொருள், நமஹ எனும் போது குறித்த தெய்வ சக்தி எமது அந்தக்கரணங்களில் விழிப்படைந்து அந்த சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது.  ஓம் கணேசாய நமஹ என்றால் கணேசரின் சக்தி அந்தக்கரணங்களில் மெது மெதுவாக பதியத்தொடங்கும்.
  • ஸ்வாஹ: இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது, அதாவது புற பிரபஞ்ச பஞ்ச பூத அக்னி தத்துவத்தில் மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
  • ஸ்வதா: ஸ்வாஹா என்பது பிரபஞ்ச்சத்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.
  • வஷட்: தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம்  மாறி பயன்தரும்.
  • வௌஷட்: இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
  • ஹும்: இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
  • பட்: சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.
 
இந்த பல்லவங்களை சரியான பீஜட்சரங்களுடன் சேர்த்து பல காரிய சாதகங்களுக்கு உபயோகிக்கலாம். (எச்சரிக்கை: இதனை குரு மாத்திரமே சாதகனுக்கு உகந்த  வகையில் எந்த பீஜாட்சரம் பலன் தரும் என்று அறிந்து உபதேசிப்பார், அல்லாமல் மனம் போனபோக்கில் நாமாக செய்து பார்த்தல் வீணான விளைவுகளை தரும்). அதனை தகுந்த குருவிடம் அறிந்து கொள்ளவும். இது மந்திரங்களின் அடிப்டையினை புரிந்து கொள்ள உதவும் ஒரு அடிப்படை தகவல் மாத்திரமே.
 
 பொதுவாக மந்திரங்கள் அனைத்தும் இப்படியான அமைப்புடனேயே காணப்படும்,
 
இந்தப்பதிவி மந்திரம் ஒன்றின் அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்த்தோம், அடுத்த பதிவில் ஒரு மந்திர சாதனையின் அங்கங்கள் எவை  என்பது பற்றி பார்ப்போம்.

Thursday, January 10, 2013

மந்திர யோகம் (02): மந்திரம் என்றால் என்ன?

மந்திர யோகம் என்பது மந்திர சாதனை மூலம் மனதினை வசப்படுத்தி இறையான பிரம்மத்திடம், சிவத்திடம் ஆன்மா ஒன்ற உள்ள ஒரு எளிமையான  வழியாக எமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.   அதாவது மனதில் மந்திரத்தின் மூலம் சித்த விருத்திகளை குறைத்து படிப்படியாக எண்ணம் ஒடுங்கி மனம் அடங்கி சாதகர் தெய்வத்துடன்/தெய்வ சக்தியுடன் ஒன்றும் நிலையினை ஏற்படுத்துவது தான் மந்திர யோகம் எனப்படும்.

மந்திரங்கள் குறித்த ஒலிகளை உருவாக்க கூடிய சொற்களின் கோர்வைகளால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த ஓவ்வொரு ஒலியும் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியுடன் பரிவுறும் (Resonance) ஆற்றல் உள்ளதாக இருக்கும். மனித வாழ்க்கையினை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தங்களாக எமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்த நான்கினையும்  அடைந்து வாழ்பவனே உண்மையில் பூரண இன்பமுடைய  மனிதனாக பூமியில் வாழ்ந்து இறைவனை அடைகிறான். இந்த நான்கும் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளால் பாதிப்படைகிறது. இந்த அளவினை கூட்டவோ குறைக்கவோ மந்திரங்களை பாவிக்கலாம்.

மந்திரங்கள் என்றால் என்ன என்று மேலும் சில விளக்கங்களை பார்க்கலாம்.
சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் என்ன என்பது பற்றி முன்னைய பதிவிலும் பார்த்தோம். அதற்கு இன்னுமொரு விளக்கமும் கொடுக்கலாம் மன் என்றால் மனம், திர என்றால் பிராணன் மனமும் பிராணனும் கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.

தாந்திரீக அடிப்படையில் உலகத்தின் தோற்றம் நாதத்துவனியில் இருந்தே இந்த பிரபஞ்சம் உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. சப்தம் சித் சக்தியின் சூஷ்ம ரூபம் ஆகையால் சப்தத்தின் முலம் பிரபஞ்ச மகா சக்தியினை கவரலாம் என்பது தந்திரிக்க அடிப்படைகளில் ஒன்று.

அடுத்த பதிவில்  மந்திரங்களின் பகுதிகள் எவை எனப் பார்ப்போம்.  

Wednesday, January 09, 2013

மந்திர யோகம் (01): தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா?


இந்த தொடர்பதிவுகளில் மந்திர யோகம் பற்றிய அடிப்படைகளை விளக்கலாம் என்று எண்ணி உள்ளோம்.

தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா? சமஸ்கிருதம் தெரிய வேண்டுமல்லவா? அது வடமொழி தெரிந்தவர்கள் தானே சொல்லலாம்!

மேற்கூறிய கருத்துக்கள் அண்மையில் ஒரு நண்பர் ஆதங்கத்துடன் எம்மிடம் வினாவினார், அதற்கு விளக்கமாக எமது மனதில் எழுந்த கருத்துகளை தொகுத்த வடிவமே இந்த கட்டுரை தொடர்!

இதற்கு முதலாவது பதில் "அடேயப்பா அப்படியென்றால் தமிழர்கள் தண்ணீர் குடிக்கலாமா? காற்றினை சுவாசிக்கலாமா? என்று கேட்பது போலல்லவா இது இருக்கிறது?" மந்திரம் மனித மனதையும், உணர்வையும்,ஆன்மாவினையும்,உடலினையும் ஒன்றிணைக்கும் சாதனமல்லவா? அவற்றை பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை! அதனை அறியாமையினால் காரணமே தெரியாத ஒன்றால் மறுக்கின்றோம் என்றால் அது எமது மடமை என்பதனை அறிந்து கொள்ளவேண்டும் நண்பா!

அடுத்து எமக்கு ஒருவிடயத்தினை பற்றி தெரியவில்லை என்றால் அதனை குதர்க்க புத்தியுடன் அணுகாமல் அவை பற்றி அறிந்தவர்களிடமோ அல்லது நல்ல நூற்களை கற்றோ தெரிந்து கொள்ள வேண்டும், பொறுமையாக சீர்தூக்கி ஆராய வேண்டும், இப்படி அணூகுவீர்களானால் உண்மை விளங்கும். அதற்கான எமக்கு தெரிந்த விடயங்களை இங்கு பதிவிடுகிறோம், உங்களை போல் சந்தேகம் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இதனால் பலனடைவர் என்று எண்ணி குருதேவரை பணிந்து விடயத்தினுள் புகுவோம்.

முதலாவதாக மந்திரம் என்ற சொல்லின் விளக்கத்தை பார்ப்போம். இதற்கு ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் பொதிந்த சூத்திரத்தினை வரைவிலக்கணமாக தரும். அது "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரம் என்ப” (தொல்காப்பியம், சொல்லதிகாரம், 480). இதற்கு பலவாறாக தமிழறிஞர்களால் பொருள் கொள்ளப்பட்டாலும் இதன் மந்திர சாத்திர பொருள் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் இது மந்திரம் எப்படி உருவாகிறது, யார் உருவாக்குகின்றார்கள் என்ற விளக்கத்தினையும் தருகிறது. இனி இந்த தொல்காப்பிய சூத்திரத்தின் பொருளினை சுருக்கமாக பார்ப்போம்.

நிறை மொழி என்றால் இன்று பொருள் கொள்ளூம் அறிஞர்கள் நன்றாக மொழியினை அறிந்தவர்கள் எனப்பொருள் கொள்கிறார்கள், அது சரியாக இருப்பினும் வெறும் மேலோட்டமான பொருள்தான் அது. அப்படியானால் இன்றைய தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரது வார்த்தைகள் அனைத்துமே மந்திரமாகி விடுமல்லவா? அதன் சூஷ்ம அர்த்தம் வேறு!

தொல்காப்பியம் மந்திரத்தின் உற்பத்தி, அதன் சித்தி, அது பயிற்சி செய்யவேண்டிய முறை ஆகியவற்றை ஒரே சொல்லால் சொல்லிவிடுகிறது, அதுதான் " நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த" வரியில் வரும் நிறைமொழி மாந்தர் எனும் சொல். நிறை மொழி மாந்தர் என்பவர் தனியே மொழி அறிந்தவர மட்டுமல்ல, சொல்லினால் வரும் ஒலி, அண்ட ஒலி சூஷ்ம உடலில் உருவாகும் இடம், உருவாக்கி பிரபஞசத்தில், மனித உடலில் செயல் கொள்ளும் தன்மை அறிந்தவர்கள்தான் நிறை மொழி மாந்தர் எனப்படுவர். அதாவது சைவ சித்தாந்த வார்த்தையில் சொல்வதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள் இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர். இவர்கள் சொல்லும் மொழி எல்லாம் மந்திரங்கள் எனப்படும். இதன் படி வேதங்கள் கூறும் ரிஷிகள், சித்தர்கள், நாயன்மார்கள் கூறிய பாடல்கள், தோத்திரங்கள் எல்லாம் மந்திரம் என்ற வரைவிலக்கணத்திற்குள் வரும்.

இவை மட்டுமல்ல மந்திரங்கள் யார் ஆத்மா சித்தி பெற்றவர்களோ அவர்களது வார்த்தைகளும் மந்திரங்களே! இவ்வாறு கோரக்கர் போன்ற சித்தர்களால் உருவாக்கப்பட்ட சபர் மந்திர பத்ததிகள் பற்றி பின்னொரு தடவை பார்ப்போம்,

மந்திர என்ற வடமொழி சொல்லிற்கு மனனம்+திரயதே என்று பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை உச்சரிப் பவரை காப்பாற்றுவது என்று பொருள்.

இவை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

ஆக உங்கள் மந்திரம் தமிழர்கள் சொல்லலாமா? என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம், மந்திரம் என்ற சொல்லிற்கு முழுமையான பொருளை அறிந்தவர்கள் தமிழர்கள் தாம், சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் நினைப்பவரை காப்பது என்றுதான் பொருள் ஆனால் தமிழில் அதற்கான வரைவிலக்கணம் அதன், உற்பத்தி, செயல்முறை, இருப்பு என முழுமையாக கூறி நிற்கும். ஆகவே தமிழர்கள் தான் மந்திரத்தின் செயற்பாட்டை அறிந்த மெய்ஞாநிகழ என்ற பெருமையுடன் தாராளமாக மந்திரங்களை கூறலாம் என்பதில் உறுதி கூறுகிரோம்.

ஆனால் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறையிருக்கிறது அதன் படி செயல்புரிந்தால் மட்டுமே பலனளிக்கும்,அது மந்திர யோகத்தின் மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கும் நிச்சயம் பொருந்தும். அவற்றை படிப்படியாக மற்றைய பதிவிகளில் பார்ப்போம்.

வளரும்.....

ஸத்குரு பாதம் போற்றி!

Monday, January 07, 2013

காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?


வலைபின்னலினை தொடர்ச்சியாக வாசித்து சாதனை செய்யும் ஆர்வமுள்ள அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலினை இங்கு கூறுகிறோம்.



காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?

ஆம், மனது குறித்த பாவனையில் இருக்க வேண்டும், அப்பொழுதே நீங்கள் ஜெபிக்கும் மந்திர சக்தியின் அலையினை மனது ஏற்று உங்கள் சூஷ்ம உடலும், ஸ்தூல உடலும் பலன் பெறும். இவை பற்றி ஏற்கனவே எமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம், 

எப்படி ஜெபம் செய்யவேண்டும்?
முதலாவது மந்திரத்தினை உச்சரிக்கும் முறையினை தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம், சரியான முறை காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.

மனதில் பாவனைக்கு கீழ்வரும் முறையினை நீங்கள் பின்பற்றலாம்; 

தியானம்: கீழ்வரும் தியான ஸ்லோகத்தினை பக்தியுடன் மெல்லிய குரலில் கூறவும்.

முக்த வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீஷ்ணைர் யுக்தா மிந்து நிபத்த ரத்ன முகுடாம் தத்வார்த வர்ணாத்மிகாம், காய்த்ரீம் வரதா பயாங்குச கஸா பாஸம் கபாலம் குணம் ஸங்கம் சக்ர மதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

இதன் பொருள் சுருக்கமாக வருமாறு: முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை ஆகிய நிறங்களுடைய ஐந்து முகங்களுடனும், முக்கண்கள், சந்திரகலை பொருந்திய கிரீடம், தத்துவார்த்தத்தை விளக்கும் எழுத்துக்களின் வடிவாகவும், வர முத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக் கபாலம் (இது தற்போது வரும் காயத்ரி படங்களில் காணப்படுவதில்லை, அவற்றில் பாத்திரம் ஒன்று இருப்பதாகவே வரைகின்றனர்) பாசக்கையிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைப்பூக்கள் ஆகியவற்றை கைகளில் தாங்குபவளான காயத்ரி தேவியினை வணங்குகிறேன். 

இதன் தத்வார்த்த விளக்கம் உயர்சாதனைகள் செய்ய விரும்புபவர்களுக்குரியது, அவற்றை வேறொரு பதிவில் தேவை வேண்டிவிளக்குவோம். 

இப்படி தேவியை மனத்திரையில் பிரத்யட்சமாக உண்மையில் இருப்பதாக பாவித்து அவளது வரம் தரும் கைகளில் இருந்து ஒளிவடிவாக அவளது அருட்கிரகணங்கள் உங்களில் வந்து சேர்வதாக பாவிக்கவும். இப்படி பாவித்தபடி ஜெபமாலையினை கையில் எடுத்து அதே பாவனையில் மந்திர ஜெபத்தினை தொடரவும். ஆரம்பத்தில் 09 முறை ஜெபத்தினை தொடங்கி வாரத்திற்கு ஒன்பது ஒன்பதாக கூட்டி வந்து அதாவது முதல் வாரம் 09. இரண்டாவது வாரம் 18, மூன்றாவது வாரம் 27 என்றவாறு 108 ஆக்கி தினசரி 108 செய்யும் படி பழகிக்கொள்ளுங்கள்

உங்களது கேள்விக்கான மேலதிக விபரங்களூக்கு கீழ்வரும் பதிவுகளையும், வலைப்பின்னலில் உள்ள காயத்ரி சாதனை என்ற பொருளடக்கத்திற்குள் உள்ள அனைத்துப்பதிவுகளையும் பாருங்கள். 

மந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வது எது சிறந்தது?



வலைபின்னலினை தொடர்ச்சியாக வாசித்து சாதனை செய்யும் ஆர்வமுள்ள அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலினை இங்கு கூறுகிறோம். 

இங்கு இரண்டு கேள்விகளை கேட்டுள்ளீர்கள், 
முதலாவது; மந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வது எது சிறந்தது? 

இரண்டாவது காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?


முதலாவது கேள்வியிற்கான பதிலினை இந்த பதிவில் பார்ப்போம்!

முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்று பார்ப்போம், மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு வகை தெய்வ சக்தியிற்கு ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு, உதாரணமாக ரேடியோ வில் எப்.எம் மீற்றரில் சூரியன் எப்.எம் இற்கு ஒரு அதிர்வு, மற்றைய வானொலிகளிற்கு இன்னொரு அதிர்வு இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அதீத ஆற்றல் அல்லது தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. இயல்பாக பிரபஞ்ச அலைகள் மூலமும், நவகோள்கள் (இவை சட்டலைட்) மூலமும் பூமியில் வந்து எமது சுவாசத்தினூடாக சூஷ்ம உடலில் சேர்ந்து பின் ஸ்தூல உடலில் செயல்கொள்கிறது. இவை ஒவ்வோருவரும் செய்யும் நன்மை தீமை கர்மங்களுக்கு ஏற்ப உடலில் கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும் போது வாழ்வின் நல்ல பகுதிகளான ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம் என்பன இருக்கும். இந்த நிலை வானொலியில் தெளிவாக பாட்டினை கேட்பது போன்றது. குறையும் போது துன்பம், குறைபாடுகள் ஏற்படும், வானொலியில் தடங்கல்  ஏற்படுவது போன்றது இது. இந்துமதத்தில் பல தெய்வ வழிபாடு இருப்பதன் காரணம் இதுதான், மனிதனுக்கு தேவையான அமிசங்கள் என்ன என்று ஆராய்ந்து அவை பிரபஞ்ச்சதின் எந்த சக்தி மூலம் பூமிக்கு வருகிறது, அதன் அதிர்வு அளவு (frequency) என்ன? அதனை மனித மனது மூலம் எப்படி ஈர்த்து சேமித்து மனிதன் நன்மை அடைவது? என்று ரிஷிகள் வகுத்து வைத்த வழியே மந்திர சாதனை. 

இயற்பியலில்(Physics) உள்ள பரிவு நிலை (resonance frequency) பற்றி அறிந்திருப்பீர்கள், ஒரு தொகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே கோட்பாடுதான் மந்திர சாதனையில் நிகழ்கிறது, குறித்த மந்திரம் பிரபஞ்ச சக்தியின் இயற்கை அதிவினை ஒத்த அதிர்வுனை மனித மனதில் உருவாக்கி சக்தியினை பெற்றுக்கொள்ளும். 

சக்தி பாய்ச்சலிற்கு குறித்த அதிர்வில் மனம் இருக்க வேண்டும் என்று பார்த்தோம், இதனை குறிப்பதே மந்திரங்களை வாய்விட்டு சொல்வதா? மனதிற்குள் சொல்வதா சிறந்தது என்ற உங்கள் கேள்வியுடன் தொடர்புடையது. நீங்கள் குறிப்பிட்ட இரு முறைகள் தவிர்ந்து மூன்றாவது ஒரு முறையும் உள்ளது, அவற்றின் விளக்கத்தினை சரியான மந்திர சாஸ்திர சொற்பிரயோகத்துடன் பார்ப்போம். இந்த மூன்று முறைகளளும் பரிவுறும் தன்மையில் உள்ள வித்தியாசத்தினை ஏற்படுத்தும் செய்முறைகளாகும், அதாவது இவற்றின் இந்த மூன்று மூறைகளாலும் மந்திரத்தினை சொல்வதால் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளை பரிவுற வைத்து தெய்வ சக்தியினை விழிப்பிக்கலாம். அவற்றைப்பற்றி விரிவாக கீழே  பார்ப்போம். 

முதலாவது வாசிகம் (Vaachik) - இது தெளிவான உச்சரிப்புடன் மற்றையோருக்கு கேட்கும் படி மந்திரத்தினை கூறுவது, இது வளிமண்டலத்தில் குறித்த தெய்வசக்தியினை ஆகர்ஷிக்கும் முறை, ஆனால் எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர் பெறும் சக்தி குறைவு, ஆனால் சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச் செய்யலாம், பொதுவாக கோயிலில் பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த முறையினையே பின்பற்றுகின்றனர். 

இரண்டாவது மானசீகம் - இதுவே நீங்கள் மனதிற்குள் சொல்லும் முறை எனக்கூறுகிறீர்கள், இது உதடு அசையாது, மன எண்ண அலைகள் மட்டுமே மந்திர சப்தமாக உருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில் தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது, ஆனால் மானச உலகில் (இது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறோம் அல்லது மானச யோகம் படித்து விளங்கி கொள்ளவும்) செயற்படுத்தலாம். 

உபாம்சு - இந்த முறையில் உதடுகள் அசையும் ஆனால் அருகிலுள்ளோரும் கேட்க முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில் மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும். இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் செயற்படுவது, இப்படி மந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, இது ஏன் என விளக்கமாக பார்ப்போம். 

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்களின் அடிப்படை தத்துவம், இதன்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளும் மனித (ஸ்தூல - சூஷ்ம) உடல்களில் உள்ளது. இதனை பெறுவதற்கு அவன் அவற்றை சரியான முறையில் மனதின் மூலம் பாவனை செய்யது தியானத்தின் மூலம் அடைய வேண்டும்.  வாசிக ஜெபத்தில் உடலிற்கு வெளியில் உள்ள தெய்வ சக்தியினையே  பரிவின் (resonance) மூலம் விழிப்பிக்க முடியும், மானசீக ஜெபமுறைமூலம் உடலிற்கு உள்ளே உள்ள தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க முடியும். 

ஆனால் உபாம்சு முறை இரண்டுக்கும் இடைப்பட்டது, இது அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும் தன்மை உடையது. ஒரு மந்திரம் சித்தியாவதற்கு புறப்பிரபஞ்சத்திற்கும் (அண்டத்திற்கும்) அகப்பிரபஞ்சத்திற்கும் (பிண்டத்திற்கும்) தொடர்பு ஏற்பட வேண்டும். இதனையும் ஒரு உதாரணம் மூலம் விளங்கிகொள்வோம். உங்கள் வீட்டில் தண்ணீர் தொட்டி (Water tank) இருக்கிறது, இது உங்களது அகப்பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தி போன்றது, இதனை உங்களது உள்வீட்டு தேவைகளுக்கு மட்டும் தான் பயன் படுத்த முடியும், மற்றைய வீட்டிற்கு பயன் படுத்த முடியாது, இதுபோல் மானசீக ஜெபத்தில் விழிப்பிக்கும் தெய்வ சக்தி ஒருவர் தனது ஆன்ம முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தமுடியும், இது முதலாவது விடயம்! தண்ணீரினை பெறுவதற்கு நீங்க்கள் வீட்டிற்கு வெளியே கிணறு வெட்டுகிறீர்கள், இப்போது தண்ணீர் தாராளமாக உள்ளது! ஆனால் உங்கள் வீட்டு தொட்டியிற்கு வரவில்லை! கிணற்றை சுற்ற்றியுள்ள வாளியும் கையிறும் உள்ளவர்கள் தமக்கு தேவையான அளவு அள்ளிக்கொள்வார்கள், இது வாசிக ஜெபத்தின் மூலம் விழிப்பித்த சக்தி போன்றது. இதையே கோயிலில் உள்ள பிராமணர்கள் செய்கிறார்கள், அவர்கள் உரக்க கூறும் மந்திர ஒலிகள் மூலம் கோயில் தெய்வ சக்தி விழிப்படைய அங்கு வரும் பக்த்தர்கள் தமது பிரார்த்தனைமூலம் ஏற்று பயனடைகிறார்கள்! ஆனால் அவற்றை ஜெபித்து விழிப்படைய வைப்பவர்கள் ஏதும் பலன் பெறுவதில்லை. 
இனி உபாம்சு முறைக்கு வருவோம், இதன்படி மந்திரத்தினை ஜெபிப்பவர்கள் கிணற்றையும் தோண்டி, தமது வீட்டு தொட்டிக்கும் குழாய் மூலம் தொடர்பினை ஏற்படுத்தி வைத்துக்கொண்டது போன்ற நிலை, தமது வீட்டு தொட்டியிலும் தண்ணீர் எப்போதும் இருக்கும் அதே வேளை அவர்களை சுற்றியுள்ளவர்களும் தண்ணீரினை பெறுவர், இதுபோல் மந்திர சாதனையிலும் உபாம்சு ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும் தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம் ஏற்படும் அதேவேளை புறப்பிரபஞ்சத்திலும் தெய்வ சக்தி செயற்படும். இதனால் ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர். இது பொதுவாக புறப்பிரபஞ்சத்துடனும் அகப்பிரபஞ்சத்துடன் தொடர்பான பல சித்திகளை கொடுக்கும். உதாரணமாக தொலைவினுணர்தல்,(clairvoyance) டெலிபதி (telepathy) போன்ற சித்திகளை கொடுக்கும். 

இனி உங்கள் கேள்வியிற்கு வருவோம்! எந்த முறை சிறந்தது?

எல்லா முறைகளுமே சிறந்தவைதாம்! 

உங்கள் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் அவற்றை தேர்வு செய்ய வேண்டும், நீங்கள் உலக பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்)முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம் சிறந்தது. 

உங்களை நாடி வருபவர்களூக்கு காரியம் கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும், பொதுப்பூஜை செய்கிறீர்கள் என்றால் வாசிக ஜெப முறை சிறந்தது. 

உலக கடமைகளையும் செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும் நன்மையினை பெற்று  போகத்தினையும் யோகத்தினையும் தடையற பெறவேண்டும் என்றால் உபாம்சு முறை சிறந்தது. 

ஆக நீங்கள் உபாம்சு முறையிலேயே ஜெபம் செய்யவே விரும்புவீர்கள் எனக்கருதி குருநாதர் எமக்கு தந்த ஞானத்தினை எதுவித மறைப்பும் இன்றி நீங்களும்  இவற்றை பார்வையிடும் மற்றைய அன்பர்களுடமும் இந்த மந்திர சாஸ்திர உண்மையினை உணர்ந்து ஜெபசாதனை செய்து சித்திபெற குருதேவரை பிரார்த்திக்கிறோம். 

எமது அறிவுக்கு எட்டியவரை இலகுவாக விளக்க முயற்சித்துள்ளோம், இதனுள் மேலதிக கேள்விகள் இருப்பின் பின்னூட்டமிடவும். இரண்டாவது கேள்விக்கான பதிலினை அடுத்த பதிவில் தருகிறோம். 

ஸத்குருபாதம் போற்றி!

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...