குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 04, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - 04

பலர் தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ காமாந்தமாக மாணிக்கவாசகர் கூறியுள்ளார். அதை இவர் விளக்கப் போகிறார் என்று எண்ணினால் அதற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டோம். எழுதுவதை ஆழ்ந்து பொறுமையாகப்படித்து, சிந்தித்து உரையாடுபவர்கள் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும். 
ஏன் இந்தத் தலைப்பு? புணர்ச்சிப் பத்து என்ற இந்த தொகுதியில் இறைவனுடன் சேருதலினை இலட்சியமாகவும் அதற்கு தடையானவற்றை தனது மனதிற்கு தெளிவிப்பதற்கான ஆய்வினையும் மாணிக்கவாசகர் செய்துள்ளார். 
இறைவன் அல்லது சிவம் எங்குள்ளார் என்றால் மதவாதிகள் கைலாயத்தில் இருக்கிறார் என்று மலையைக் கை காட்டுவார்கள். ஆனால் உணர்ந்த ஞானிகள் சொல்லித் தந்தது உனக்குள்ளே இருக்கிறார், உனக்குள் இருக்கும் இறைவன் மட்டுமே நீ இலகுவாக அறியப்படக்கூடிய வகையில் இருக்கிறார் என்று. 
உனக்குள் இருக்கிறார் என்பதை உணர்ந்து மாணிக்கவாசகரின் புணர்ச்சிப்பத்தைப் படிக்கத் தொடங்கினால் அது முழுமையாக யோக சாதனைக்குரிய ஒரு வழிகாட்டல் என்பது புரியத் தொடங்கும். 
சம்போகமே பெரும் இன்பம் என்று இருந்த மனம் சமாதி இன்பத்தின் அனுபவத்திற்கு அலைபாயத்தொடங்கும். 
ஆக மாணிக்கவாசகர் ஒரு மனிதன் தான் அனுபவிக்கக் கூடிய அற்ப இன்பத்தில் அதிஉயர் இன்பமாகிய சம்போகத்திலிருந்து அதைவிட மிக உயர்ந்த சமாதி இன்பத்திற்கு  இந்த சமாதி அனுபவங்களில் ஒன்று ஒளியைக் காணல், கலத்தல்! 
இதற்கு அவர் புணர்ச்சிப்பத்தில் தேர்ந்தெடுத்த வார்த்தை பொல்லா மணியைப் புணர்ந்தே என்பது!
எல்லாப் பாடல்களும் பொல்லா மணியைப் புணர்ந்தே என்றே முடிவுறும். 
பொல்லா மணி என்ற பெயர் ஏன்? இதற்கு பொருள் பொதுவாக செதுக்கப்படாத மணி என்று கூறப்பட்டுள்ளது. அது பொருந்தாது என்பது என்வாதம்! இதற்கு பொருள் கொள்ள வழக்கில் உள்ள பொல்லா நிலம் என்பதை எடுத்தால் அதன் பொருள் மயானம் என்று வரும். பொல்லா நிலத்தில் வசிப்பவன் சிவன், மயானத்தில் இருக்கிறான் என்றால் அதன் பொருள் சூன்ய நிலை அனுபவத்தில் உணரப்படக் கூடியவன். 
ஆக பொல்லாமணி என்பது எண்ணங்கள் அற்ற சூன்ய நிலையில் பெறும் சமாதி அனுபவத்தைக் குறிக்கும். 
ஆக மாணிக்கவாசகர் தன் சாதனையில் தான் அடையக் கூடிய அதியுயர் சமாதி நிலையினை அடைவதற்கு எப்படியெல்லாம் தடை ஏற்படுமோ அந்த அனுபவத்தைப் பாடியுள்ளார். அடிப்படையில் இந்தப் பாடல்களுக்கு பொருள் கொள்ள முடியும் !
விமர்சனங்கள், கருத்துக்கள், உரையாடல்கள் வரவேற்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...