குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 21, 2025

தந்திர சார வகுப்பு பாடங்கள்

 1) தந்திராச்சாரம் என்றால் தந்திர சாஸ்திரத்தை எமது வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்வியல் முறை எனப்படும். இது ஒவ்வொரு ஆன்மாவின் பரிணாமத்திற்கு தக்க ஏழு அல்லது ஒன்பது படிகள் இருப்பதாக மஹா நிர்வாண தந்திரம் கூறுகிறது.

2) வேதாச்சாரம் - இது கிரியைகள் மூலம் ஒரு சாதகன் தனது வாழ்வில் ஒரு சீரான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கும் வழி. இது புறச்சுத்தம், ஒழுங்கு, வர்ணம் இவற்றை முதன்மையாகக் கொண்டு ஆன்மா தன்னை ஒழுக்கத்திற்கு உட்படுத்திக்கொள்வது. அனைத்து ஆன்மாக்களும் வேதாச்சாரம் கடைப்பிடிப்பதன் மூலம் பரிணாமத்தில் தெய்வீகத்தன்மையை அடைவதற்குரிய அடிப்படைத் தகுதியை அடைகிறது. இதுவே அத்திவாரம். இது சரியான கடமைகளைச் செய்து தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆன்மா ப்ரவிருத்தி மார்க்கமாக நன்மைகளை அடையும் வழியைக் காட்டுகிறது.

3) வைஷ்ணவாச்சாரம் அல்லது பக்தி மார்க்கம்: ஒழுங்கினை, ஒழுக்கத்தினை வேதாச்சாரம் மூலம் பெற்றாலும் உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்தி இறை ஆற்றலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் உணர்ச்சித் தூய்மையை இதன் மூலம் ஆன்மா இரண்டாவது நிலையில் பெறுகிறது. உணர்ச்சித் தூய்மை பெறாமல் எவரும் ஆன்மீகத்தில், சாதனையில் முன்னேற முடியாது.


3) சைவாச்சாரம் அல்லது ஞான மார்க்கம்: சைவம் அறிவே சிவம் என்று சொல்கிறது. வைஷ்ணவாச்சாரம் அல்லது பக்தி மார்க்கத்தில் இரஜோ, தமோ குணத்தாக்கத்தால் பக்தி தவறான உணர்ச்சி வசப்படும் ஒரு பலவீனமாக அறிவுத்தெளிவின்மையால் ஏற்படலாம். இதனால் சைவாச்சாரம் அறிவினைப் பலப்படுத்தும் ஞானத்தினை முன்னிறுத்துகிறது. சைவசித்தாந்தம் ஞான மார்க்கம்.

இவை மூன்றையும் சுவாமி விவேகானந்தம் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் வேதாச்சாரத்தை கர்ம யோகமாகவும், வைஷ்ணவாச்சாரத்தை பக்தி யோகமாகவும், சைவாச்சாரத்தை ஞான யோகமாகவும் விளக்கியுள்ளார்.

5) கர்மத்தில் சுத்தி, உணர்ச்சியில் பக்தி, அறிவில் தெளிவு அடைந்த ஆன்மா தன்னூள் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க அகமுகமான சாதனையிற்கு தந்திர சாஸ்திரம் தக்ஷிணாச்சாரம் அல்லது சமயாச்சாரத்தைப் பரிந்துரைக்கிறது. இப்போது சாதகன் வெளிமுகமாக இருந்து உள்முகமாக திரும்புகிறான். மந்திர ஜெபம், தியானம், ஆறாதார தியானம் இவை எல்லாம் சமயாச்சாரத்திற்குள் வரும்.


6) மேலேயுள்ள ஆச்சாரங்களைக் கடைப்பிடிப்பதால் சாதகன் தனது ஒழுக்கத்தினால், அறிவினால் அகங்காரத்தையும் சமூகத்தினால் கட்டுப்பட்ட பசுத்தன்மையினையும் அடைக்கிறான். ஆகவே அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவருவதற்கு தந்திர சாஸ்திரம் வாமாச்சர தந்திர முறையைப் பயிற்சிக்கச் சொல்கிறது. இதில் மது, மாம்ஸம், மச்சம், மைதுனம், சம்ஸான சாதனை இவைகள் அடங்கும். இதன் நோக்கம் அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவருவதாகும்.


7) அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவந்த ஒருவன் தன்னை அறியும் ஆற்றலும், சித்திகளைப் பெறும் தகுதியையும் பெறுகிறான். இந்தப் பண்பு உள்ளவன் சித்தாச்சாரத்தில் சாதனை பயிலச் சொல்கிறது. தமிழ் சித்தர்களுடைய சாதனை மார்க்கம் எல்லாம் சித்தாச்சார முறைகளே. இங்கு 96 தத்துவங்களையும் சித்தி (mastery) சித்தி செய்யும் சாதனை பயிற்றுவிக்கப்படுகிறது.


8) கௌலாச்சாரம் - The Supreme and Universal Path - எல்லா ஆச்சாரங்களும் அடங்கிய உயர் நிலை. இது பாகுபாடு, மதம், இனம், குலம் எல்லாவற்றையும் தாண்டிய ஒருங்கிணைந்த நிலை.


எமது குருபரம்பரை எல்லா ஆச்சார முறைகளையும் கற்பிக்கும் அதிகாரமும், அனைத்துவித சாதனைகளையும் குருமுகமாகப் பயின்ற சிறப்புடையது. இங்கு பயிலும் எவரும் தமது சாதனையை ஒழுங்காகச் செய்வார்களேயானால் வேறு எங்கும் அலையத்தேவையில்லை.


ஆனால் buffer lunch போல் நீங்கள் விரும்புபவற்றைப் பயில முடியாது, உங்கள் பரிணாமத்திற்குத் தக்க சாதனை கற்பிக்கப்படும்.


ஒரு சாதகன் வேதாச்சாரம் தொடங்கி தக்ஷிணாச்சாரம் வரை தனது வெளிமுகமான வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி, வாமாச்சாரம் தொடக்கம் கௌலாச்சாரம் வரை அகமுகமாக ஆன்ம பரிணாமத்தில் பயணிக்கிறான்.


எந்தவொரு ஆன்மாவும் அனைத்து ஆச்சாரங்களையும் ஒரே பிறப்பில் கடைப்பிடித்து சித்தியுறுவதில்லை. சிலபிறப்புகள் சில ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து ஆன்மா தன்னைப் பக்குவப்படுத்தி முன்னேறுகிறது.


தனக்கு வழங்கப்பட்ட சாதனையை ஆச்சாரத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதன் பலனாக அது அடுத்த நிலையைப் பெறுகிறது. ஆகவே வீண் ஆராய்ச்சிகளையும், கற்பனைகளையும், அதியாசைகளையும் விட்டுவிட்டு கிடைத்த சாதனையை ஒழுங்காகச் செய்வது அவசியமானது.


ஆச்சாரம் என்பது ஒரு பிரிவினை அடையாளம் அல்ல, மாறாக ஆன்மீக வெளிப்பாடாகும்.


இந்தப் பாதை வெளிப்புற சடங்கிலிருந்து உள் சுய உணர்தலுக்கு செல்கிறது.


வாமாச்சாரமும் கௌலாச்சாரமும் அகங்காரத்திலிருந்து விடுதலைக்கு உணர்வுபூர்வமாகத் திரும்புவதைக் குறிக்கின்றன.


வேத, சைவ, வைணவ ஆச்சாரங்களில் வெளிப்புற வேடங்களில் தெரியும், தக்ஷிண, வாம, சித்த, கௌலாச்சாரங்கள் வெளிவேடங்கள் அற்ற அகமுகச் சாதனைகள்

Friday, June 20, 2025

Srishti's yoga classes

 



Srishti's yoga classes start tomorrow;

Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam as the promise of Agathi Maamakarishi who gave seed - Prayers and Sankalbam for all students

  · 




 

ஆயுள் - ஆயுர்வேதம் - 03

 உடன் மனம் உயிரினை ஒத்திசைவாய் ஒருங்கிணைத்தால் அது ஆயுள் என்றும், இதைச் சாதிக்கும் ஞானம், அறிவு ஆயுர்வேதம் என்றும், ஏன் எமக்கு ஆயுள் வேண்டும் என்றால் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்புருடார்த்தங்களை அனுபவிப்பதற்காகவும் என்று பார்த்தோம். ஆயுள் வேதத்தினைக் கற்பதன் பலன் உடலை ஆக்கும் தாதுக்களின் சம நிலை உடலில் எப்படிச் செயற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலமே உடலை, உடலுக்கு ஆதாரமான மனதை, மனதிற்கு ஆதாரமான உயிரை ஒருங்கிணைக்க முடியும்,

ஆகவே உடலின் தாதுக்களை சம நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் மனதை சம நிலைப் படுத்தலாம். மனம் சம நிலையில் இருப்பதன் மூலம் உயிருடன் தொடர்பினை ஒருங்கிணைக்கலாம். 

நோய்கள் என்பவை தாதுக்களின் சம நிலையின்மையினை ஏற்படுத்தி இந்த உடல் மன உயிர் ஒருங்கிணைப்பினைக் குழப்புபவை. ஆகவே உடல் பாதிக்கப்பட்டால் அகவலிமை குன்றும். உடலில் நோய் இருந்தால் நாம் எமது வாழ்வில் சாதிக்க வேண்டியவை சாதிக்கப்படமால் உடல் அழிவை நோக்கிச் செல்லும். 

ஆகவே மனிதனின் முதல் இலட்சியம் தனது மனதையும், உடலையும் நோயற்று சம நிலையில் வைத்திருத்தல்.  இதைச் சாதிக்கும் போதே அவன் உயிரை அறியும் பக்குவம் பெறுகிறான். 

மனம் உயிரின் ஆற்றலை அறிய வேண்டும் என்றால் அதன் விருத்திகளைக் குறைக்க வேண்டும். சித்த விருத்திகள் அற்ற மனமே தூய்மையான ஆரோக்கியமான மனம்.  மனதின் விருத்திகளைக் குறைக்க தியானம் அவசியம். 

ஆகவே ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியம் என்பது தாதுக்கள் சம நிலையான ஸ்தூல உடலும், விருத்திகள் குறைந்த/விருத்திகள் அற்ற சித்தமும் ஆகும். 




Thursday, June 19, 2025

பஞ்சாக்ஷர மந்திர ஸாதனை மகிமை

 


சிவரஹஸ்யத்தில், ஈஸ்வரர் கௌரிக்கு பஞ்சாக்ஷர மந்திரத்தின் உச்சபட்ச செயல்திறனை வெளிப்படுத்துகிறார், இது "ஓம் நமசிவாய", இது மிகவும் தூய்மைப்படுத்தும் மற்றும் ருத்ரத்வத்தை - தெய்வீக அச்சமின்மை மற்றும் ஆன்மீக இறையாண்மையை - வழங்கும் திறன் கொண்டது என்று விவரிக்கிறது.

 

இந்த புனிதமான ஐந்து எழுத்துக்களைக் கொண்ட ஒலி, 26 ஆம் சுலோகத்தின் படி, இந்த மந்திரத்தைத் சாதனை செய்யும் சாதகனை அனைத்து அசுத்தங்களிலிருந்தும் (விரஜ – ரஜோ குணத்திலிருந்து) விடுவிக்கிறது. 27 ஆம் சுலோகத்தில், வேத சடங்குகள், யக்ஞங்கள், விரதங்கள் மற்றும் புனித சங்கங்களின் ஒருங்கிணைந்த தகுதி கூட இந்த மந்திரத்தில் தொடர்ந்து சாதனை செய்யாமல் முழுமையடையாது, இது அதன் மறுபரிசீலனை மிக உயர்ந்த வழிபாட்டுச் செயலாக அமைகிறது என்று சிவபெருமான் அறிவிக்கிறார்.

 

பசுபதியை தியானித்து, இதயத்தில் ஆழமாக மந்திரத்தை உள்வாங்கிக்கொள்பவர்கள், உள் மற்றும் வெளிப்புறமாக, புனித இடங்களில் நிரந்தரமாக வசிக்கும் அமைதியான முனிவர்களாக மாறுகிறார்கள் என்று 30 ஆம் சுலோகம் மேலும் கூறுகிறது.

 

மந்திரத்தின் உருமாற்ற சக்தி 31வது சுலோகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, இது பாவங்களைக் கரைக்கிறது, ஆன்மாவை அழியக்கூடியவற்றிலிருந்து அழியாதவற்றுக்கு (க்ஷரத்திலிருந்து அக்ஷரத்திற்கு) இட்டுச் செல்கிறது, மேலும் த்ரயக்ஷத்தின் (மூன்று கண்களைக் கொண்ட சிவனின்) அருளால் அசுர அல்லது நுட்பமான துன்பங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது, அழியாத பலன்களை வழங்குகிறது என்பதை விளக்குகிறது.

 

32வது சுலோகம் மந்திரத்தின் முழு வடிவத்தையும் வலியுறுத்துகிறது - பிரணவத்தில் () தொடங்கி சிவாயத்தில் முடிகிறது - அதன் வேத அதிகாரத்தையும் ஜபத்தின் போது சக்தியை (உமாவின் பீஜம்) தியானிப்பதன் அவசியத்தையும் உறுதிப்படுத்துகிறது.

 

இறுதியாக, வழக்கமான, நிலையான ஜபம் தகுதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கர்ம சுமைகளைக் கரைப்பது மட்டுமல்லாமல், அவிமுக்தத்தின் வசிப்பிடத்திற்கும் வழிவகுக்கிறது - இது உணர்வு முக்தி நிலையைக் குறிக்கிறது - மேலும் சிவனால் வழங்கப்பட்ட உச்ச விடுதலை நிலையான பரம முக்தி பாதத்தை வழங்குவதில் முடிவடைகிறது. காசியை நாம் அவிமுக்தி தலம் என்று கூறுகிறோம். பஞ்சாக்ஷர சாதனை செய்பவனது அகம் காசி க்ஷேத்திரமாகிறது.

 

இந்தப் போதனைகள் சிவராஹஸ்யரின் ஈஸ்வரப் பிரிவின் 38 ஆம் அத்தியாயத்தை முடிக்கின்றன, இது பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஆழ்ந்த ஆன்மீக, பாதுகாப்பு மற்றும் முக்தி சக்தியை சிவனின் அருளின் மையமாகக் கொண்டுள்ளது.

ஆயுள் - ஆயுர்வேதம்-02

 உடல் -  மனம் - உயிர் இவற்றின் ஒன்றிணைவு ஒத்திசைவு ஆயுளைத் தரும் என்று முன்னைய உபதேசத்தில் பார்த்தோம். இதை எப்படிச் சாதிப்பது என்ற அறிவு ஆயுள்வேதம் என்று பார்த்தோம். 

இதனால் என்ன பிரயோசனம் - பலன்? 

ஆயுள்வேதத்தின் பலன்/பிரயோசனம்தான் என்ன? 

இந்த அறிவை/ஞானத்தைப் பெறுவதன் மூலம் ஒருவன் தனது உடல் ஆக்கப்பட்டிருக்கும் பஞ்சபூதங்கள் அவற்றிலிருந்து உருவான சப்த தாதுக்களினதும் சம நிலையைப் பேணமுடியும். இதுவே ஆயுள் வேதம் எனும் ஞானத்தைக் கற்பதால் நாம் பெறும் பிரயோசனம்.  இந்த சம நிலையைப் பேணுவதே ஆரோக்கியம். 

ஏன் நாம் உடல் தாதுக்களின் சம நிலையைச் சரியாகப் பேணவேண்டும்? 

நாம் எமது வாழ்வின் இலட்சியங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் நாம் எமது வாழ்வில் அடைவதற்கு நீண்ட ஆயுள் அவசியமாகும்.  ஆகவே ஒருவன் தனது தாதுக்களின் சம நிலையைப் பேணி ஆரோக்கியத்தையும், அதன் மூலம் உடல், மனம், உயிரினை இணைத்து நீண்ட ஆயுளையும் பெற்று தனது வாழ்க்கையின் இலட்சியமான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் அனுபவித்து பரிபூரணனாக வேண்டு, 

இதுவே நீண்ட ஆயுளைப் பெறவேண்டிய ஆயுள்வேதத்தை நாம் கற்பதன் நோக்கமாகும்! 

ஆயுள் - ஆயுர் வேதம்

இன்று பலரும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி பல உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் என்று ஆயுவேதத்தை நாடி வருகிறார்கள். உண்மையில் ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவம் அறியாமல் மருந்து உண்பதையும், மசாஜ் செய்வதையும், பஞ்ச கர்மசிகிச்சையையும் ஆயுர்வேதம் என்ற பெயரில் நம்புகிறார்கள். 

ஆரோக்கியமாக இருந்த பலர் அற்ப ஆயுளில் இறந்து போகக் காண்கிறோம். அப்படியென்றால் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் என்ன தொடர்பு! 

ஒருவனின் ஆயுள் என்பது 

. ஶரீராத்மமன꞉ ஸம்ʼயோக³ ஆயு꞉ .

சரீரம் - மனம் - ஆத்மா ஆகிய மூன்றினதும் ஸம்யோகம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. 

ஒருவன் நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமென்றால் அவனது உயிரும், மனமும், உடலும் ஒத்திசைந்து இணைந்து செயற்பட வேண்டும். இப்படிச் செயற்பட்டால் மாத்திரமே அவனுக்கு ஆயுள் வாய்க்கும். 


உடல், மனம், உயிர் இந்த மூன்றையும் எப்படி ஒன்றிணைத்து ஒத்திசைத்து செயற்பட வைப்பது என்ற ஞானத்திற்கு, அறிவிற்குப் பெயர்தான் ஆயுர்வேதம். 

ஆகவே அகத்திய குல மாணவர்களே ஆயுர்வேதம் என்பதன் உண்மைப் பொருள் அறிந்து குரு வழி நின்று ஆயுர்வேதம் கற்று மேன்மையடையுங்கள்! ஆயுவேதம் என்பதை மொழி, அரசியலில் பயன்படுத்து அர்த்தங்களைக் கண்டு குழம்பி அறியாமையில் வீழ்ந்து விடாதீர்கள். 

Tuesday, March 26, 2024

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் 

எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் 

சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்துவம் ஏற்றினாள்

ஒவ்வொரு பூரணையாக உத்தர நிறைமதியில் நிறைத்தாள் பூர்த்தி  வித்தையை

துவாதச பஞ்சதசம் பூர்த்திசெய்வித்தாள் ஒவ்வொன்றும் 

இருபட்சமாய் பன்னிரெண்டு மதிமாதத்தில் குருவருளாளே 

அம்ருத ஆநந்தத்தின் பேருளால் பதினாறு வயதுடையவள் அழகு காண 

ஆத்ம ஆநந்தத்தின் பேரருளால் ஏறினேன் பதினாறு படிகளும் 

அம்ருதமும் ஆத்மாவும் இரண்டல்ல அவளேயான ஒன்றென்று 

காட்டினாள் அனுபவத்தில்

Wednesday, March 13, 2024

காலபைரவ தியானம் – 42

 



இந்தப் பாடல் ஒரு பைரவ உபாசகன் பெரும் சுக போக வாழ்க்கையையோ, பெரும் சாதனைகள் செய்யும் வாழ்க்கையையோ அல்லது எவருக்கு கீழாக வேலை செய்யும் வாழ்கையையோ, பெரும் உழைப்புடன் வாழும் எவராக இருந்தாலும் பைரவ உபாசகராக இருந்தால் அவருக்கு புத்தி விழிப்படைந்த விழிப்புணர்வு நிலை வாய்க்கும் என்று இந்தப் பாடலில் தியானிக்கிறார். இந்தப் பாடலில் பைரவரின் தலையில் ஒளி மிகுந்த இளம் சந்திரன் என்பது மனதைக் குறிப்பது; மனதில் பைரவரின் ஒளி நிறைய புத்தி விழிப்படையும் என்பது இதன் அர்த்தம்!

பைரவ உபாஸனை புத்தியை விழிப்படைவித்து விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கையைத் தரும்.

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவருடைய அலங்காரத்தில் இளம் பிறை இருப்பதும், இன்றைய தியானத்திற்குரிய பாடலும் ஒன்றாக இருப்பது நாம் மகா காலபைரவரின் அருளாசியுடன் தான் எழுதுகிறோம் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதற்கு சான்றாகிறது.

இந்திரன் வாழ்க்கையும் நான் முகன் வாழ்க்கையும் ஈர்ந்துளவோன்

நந்தமில் வாழ்க்கையும் பெற்றாலும் நின்னடியார்களுக்குப்

புந்திசெய் வாழ்க்கையை ஒவ்வாது காண் ஒளி பூண்ட இளஞ்

சந்திர சேகரனேகாழி யாபதுத் தாரணனே.

ஒருவன் இந்திரன் போன்ற போக வாழ்க்கை பெற்றாலும்

நான் முகனைப் போன்று படைக்கும் ஆற்றலுடைய வாழ்க்கை பெற்றாலும்

மற்றவர்களிடம் செல்வத்திற்கு கையேந்தும் வாழ்க்கையைப் பெற்றாலும்

பெரும் உழைப்பு இல்லாத வாழ்க்கையைப் பெற்றாலும்

பைரவ உபாசகருக்கு புந்தி புத்தி விழிப்படைந்த வாழ்க்கையை மறுக்காமல் கொடுக்கும்

ஒளி பூண்ட இளம் சந்திரனைச் சூடிய

சீர்காழிப்பதி உறையும் ஆபத்துத் தாரண பைரவரே

உம்மை நான் தியானிக்கிறேன்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபத்துத்தாரண மாலை பாடல் 30}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!



Tuesday, March 12, 2024

மகாபாரதம்

 



வருகிறது முழு மகாபாரதம் சிருஷ்டியின் ஆய்வு நூலகத்திற்கு!

மகாபாரதம் தான் மனிதகுலத்தின் Programming code - வியாசகர் மூலாதாரத்து கணபதியின் துணையோடு எழுதி இந்த பிரபஞ்ச பேரேட்டில் பதித்து வைத்து விட்டார். இதன் படி எமது மனங்கள், சித்தம் காலத்திற்கு காலம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதில் மனிதனது துர்க்குணங்களின் போராட்டம், சுய நலம், மமதை, அறிவு, ஆற்றல், தெய்வ சக்தி எப்படிப் பரிணாமத்தை நடத்துகிறது என்ற எல்லாக் கதைகளும் உண்டு! இன்று நாம் சொல்லும் எல்லாக் கதைகளும் மகாபாரதத்தின் மிமிக்கிரிதான்!

வியாசர் எழுதிய மூல மகாபாரதத்தை ஒவ்வொருவரும் தமது தகுதிக்கு ஏற்ப கதைகளாக எழுதி வைத்தார்கள்! இவை எல்லாம் வழி நூல்கள்!

வியாசரின் மூல நூல் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிசாரி மோகன் காங்குலி (1848 1908) அவர்களால் செய்யப்பட்டது. 80000 ஸ்லோகங்கள் உடையது! இதை செ.அருட்செல்வப் பேரரசன் அவர்கள் வலைத்தளத்தில் எழுதி வந்தது இன்று தொகுப்பாக மொத்தம் 14 பாகங்களாக வெளிவந்துள்ளது! சிருஷ்டியின் ஆய்வு நூலகத்திற்கு ஒரு பிரதி மாணவர் ஒருவர் வாங்கியனுப்பியிருக்கிறார்.

Zero Degree பதிப்பகம் 23% கழிவுடன் தற்போது தருகிறார்கள், இணைப்பு முதல் கொமெண்டில் இருக்கிறது! ஆர்வமுள்ளவர்கள் உங்கள் நூலகத்திற்கு வாங்கிக்கொள்ளுங்கள்.



 

 

தந்திர சார வகுப்பு பாடங்கள்

 1) தந்திராச்சாரம் என்றால் தந்திர சாஸ்திரத்தை எமது வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்வியல் முறை எனப்படும். இது ஒவ்வொரு ஆன்மாவின் பரிணாமத்திற்கு த...