குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 25, 2019

ரிஷி சிந்தனை - 02



இத்தகைய மாற்றம் மனிதகுலத்தில் நிச்சயம் நடைபெறக்கூடிய ஒன்றே!. உலகில் உள்ள புத்திஜீவிகள் அவர்களது நேர்மையான முயற்சியால் உலகில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். ஒரு மனிதன் நம்பும் தத்துவமும், வாழ்வின் மீதான பெறுமதியின் மாற்றமும் அந்த மனிதனின் இயல்பை மாற்றும். இப்படி மனிதனின் இயல்பு மாற்றம் பெற்றால் உலகின் சண்டைகள், சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

இந்த அனுமானம் வெறும் கற்பனையல்ல! ஒரு ஆழமான உண்மை! எதிர்காலத்தில் ஆழமான எண்ணங்களே புதிய உலகை உருவாக்கப்போகின்றன.

எண்ணப்புரட்சியின் புயல் பலமாக வீசும். இந்த எண்ணப்புரட்சி மூலம், சமூகத்தில் காணப்படும் தாழ்மை உணர்ச்சிகள், பிறழ்ச்சிகள் காற்றில் வீசியெறியப்படும் வைக்கோல் போல் எறியப்படும்.
புதிய எண்ணங்கள் புதிய சமுதாயத்தையும் புதிய மனிதர்களையும் கட்டி எழுப்பும். அவை புதிய சம்பிரதாயங்களை உருவாக்கி புதிய செயல்களை வெளிப்படுத்தும்.

‘மக்கள் புதிய வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்க மாட்டார்கள்; பழைய முறைகளில் மாத்திரமே நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள், ஏனெனில் அவர்கள் பழைய முறைகளிலேயே பரீட்சையமானவர்கள்; அதுவே அவர்களுக்கு இலகுவானது; அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு பழைய வாழ்க்கை முறையிலேயே இருக்க விரும்புவார்கள்; மாற்றத்தினை தரும் தத்துவங்களில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள்…..’ என்றெல்லாம் எவராவது எண்ணினால் அது ஞானமற்ற சிந்தனை!

உண்மை இதற்கு மாறானது. தற்போதைய வாழ்க்கைத் தத்துவம் ஒருவனை வறிய, குழப்பமான பிரச்சனைக்குரிய நிலைக்கே தள்ளுகிறது. இவற்றை தாங்குவது மிக மோசமாக அவர்களை தாக்குகிறது.

எவராவது தாம் மிக நன்றாக இருக்கிறோம் என்று கூறினால், அவர்களில் உள்ளத்தினுள் சற்று ஆழமாக உள்ளே சென்று பார்த்தால், அங்கு தாங்க முடியாத துயரமும், விரக்தியும், எரிச்சலுமே எஞ்சிக் இருப்பதைக் காண்கிறோம். எல்லா இடங்களிலும் எல்லோரின் கதையும் இப்படித்தான் இருக்கிறது.

ஒருவரும் தாம் இருக்கும் நிலையில் திருப்தியாகவோ, அவர்கள் இருக்கும் சுழலில், சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அனைவரும் தமது அக புற வாழ்க்கையில் திருப்தி அற்றவர்களாகவே காணப்படுகிறார்கள்.
(தொடரும்…..)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...