குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, March 30, 2016

ஆசீர்வாத மந்திரங்கள்

குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்களும் அனைவருக்கும் மிகுந்த பலனை அளிக்க கூடிய மந்திரங்களாகும். 

அவற்றை உங்களுக்கு பயன் படுமாறு இங்கு தந்துள்ளோம். 

தீர்த்த ஆசீர்வாதம்: செப்பு பாத்திரத்தில் நீரை வைத்து குறித்த மந்திரங்களை உச்சரித்து பின்னர் தெளித்து கொள்ளலாம். 

அக்ஷதை ஆசீர்வாதம்: பூஜையறையில்  அக்ஷதையினை செய்து வைத்து குறித்த மந்திரங்களை உச்சரித்து பின்னர் தலையில் தூவலாம். 

குங்கும ஆசீர்வாதம்: கையில் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு குறித்த மந்திரங்களை உச்சரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.  

தீர்த்த ஆசீர்வாதம்
மந்திர புஷ்பம்

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி ய ஏவம் வேத  (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோஅவன் மலர்களை உடையவனாகமிருகங்களை உடையவனாகசந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாகமிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத  (2)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) 

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (6)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)

யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி  (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோஅவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9) 

அக்ஷதை ஆசீர்வாதம்
·         ஓம் சாந்திரஸ்து
·         ஓம் புஷ்டிரஸ்து
·         ஓம் திருப்திரஸ்து
·         ஓம் அவிக்னமஸ்து
·         ஓம் ஆயுஷ்யமஸ்து
·         ஓம் ஆரோக்கியமஸ்து
·         ஓம் ஸிவகர்மாவஸ்து
·         ஓம் கர்மஸம்ருத்திரஸ்து
·         ஓம் வேதஸம்ருத்திரஸ்து
·         ஓம் சாஸ்திரஸம்ருத்திரஸ்து
·         ஓம் இஷ்டசம்பனமஸ்து
·         ஓம் அரிஷ்டரிஜாஜனமஸ்து
·         ஓம் யத்பாப சனாரூப்ய அசுபம் அகர்மானம் அஸ்து
·         ஓம் யத்ரேயமஸ்து
·         ஓம் உத்தரே கர்மாணி அவிக்னமஸ்து
·         ஓம் ஆரோக்கியம் அரிஹர விஹி விருத்தி ரஸ்து
·         ஓம் ஆரோத்ரா க்ரியாஹா சுதாஹா சோபாஹ சம்பனமஸ்து 

  
குங்கும ஆசீர்வாதம்
·         ஓம் ஆயுஸ்வந்தர் பவ
·         ஓம் ஆரோக்கியவந்தர் பவ
·         ஓம் சுகவந்தர் பவ
·         ஓம் மக வந்தர் பவ
·         ஓம் தான தான்ய வந்தர் பவ
·         ஓம் விஜய வந்தர் பவ
·         ஓம் கீர்த்தி வந்தர் பவ
·         ஓம் பல வந்தர் பவ
·         ஓம் தேஜஸ் வந்தர் பவ
·         ஓம் வித்யா வந்தர் பவ
·         ஓம் புத்தி வந்தார் பவ
·         ஓம் பாக்ய வந்தர் பவ
·         ஓம் பத்ர வந்தர் பவ
·         ஓம் சகல கர்ம சித்திவந்தர் பவ
·         ஓம் தைர்ய வந்தர் பவ
·         ஓம் ஐஸ்வர்ய வந்தர் பவ
·         ஓம் புண்ய வந்தர் பவ
·         ஓம் சிரேஷ்ட மித்ரவந்தர் பவ
·         ஓம் லக்ஷ்மீ வந்தர் பவ
·         ஓம் மனஸ்வந்தர் பவ

·         ஓம் ஆத்ம வந்தர் பவ 

Sunday, March 27, 2016

காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் உபதேசம்

இந்த  பதிவு  நாம்  குருனாதருடன்  இருந்த  காலத்தில் அவர் ஆற்றிய உபதேசத்தை  குறிப்பெடுத்து  வைத்திருந்தோம்.  தற்போது  கண்ணில் பட்டது. ஆர்வம் உள்ள இறை சாதகர்களுக்கு  உபயோகப்படும் என்று பதிவிடுகிறோம். 

ஸ்ரீ ஸக்தி சுமனன். 
********************************************************************
எனது குருநாதர் ஸ்ரீ காயத்ரி  சித்தர் முருகேசு சுவாமிகள் 



















Wednesday, March 16, 2016

அகத்தியர் குருமந்திர தீட்சையும் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலும்.

சித்தர் மார்க்கத்தில் முன்னேற விரும்பும் மாணவன் பெறவேண்டியது முப்பத்தியிரண்டு என்று குருநாதர் கூறியுள்ளார். தீக்ஷை என்பது என்ன என்று இந்த பதிவில் கூறியுள்ளோம். 

சித்தர் மார்க்க முப்பத்தியிரண்டு தீட்சைகளின் விபரம் வருமாறு: 
  1. அகத்தியர் குருமந்திர தீக்ஷை 
  2. சாபநிவர்த்தி தீக்ஷை 
  3. சுப்பிரமணியர் குருமந்திர தீக்ஷை 
  4. வைரவர் தீக்ஷை 
  5. மூலாதார தீக்ஷை 
  6. சுவாதிட்டான தீக்ஷை 
  7. மணிப்பூரக  தீக்ஷை 
  8. அனாகத தீக்ஷை 
  9. விசுத்தி தீக்ஷை 
  10. ஆக்ஞா தீக்ஷை 
  11. சிவ தீக்ஷை பதினொன்று 
  12. சக்தி தீக்ஷை பதினொன்று 
எல்லா தீட்சைகளுக்கும் முதல் தீட்சை அகத்தியர் குருமந்திர தீக்ஷை, இந்த தீக்ஷையே மற்றைய எல்லா தீட்சைகளையும் தரும் குரு தீக்ஷையாகும். இந்த தீக்ஷை மந்திரம் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் அனைவரும் ஜெபிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது. 

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி விரிவாக அறிந்துகொள்வதற்கு  இந்த  Facebook பக்கத்தை பார்வையிடவும். 

Monday, March 14, 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியாகிவிட்டது

அன்பர்களே,



இரண்டாண்டு கால உழைப்பின் பின்னர் அகத்தியர் ஞானம் முப்பது நூலிற்கு எழுதிய சித்தவித்யா விளக்கவுரையான  அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சென்னையில் ப்ரணவ் ஸ்வஸ்த ஸ்தான வெளியீடாக வெளியாகிறது.



இதனை நல்ல முறையில் அழகுற நூலாக வெளிப்படுத்துவதில் Dr. B. P. ப்ரணவ் (http://www.pranavsevas.com) அவர்களில்  அயராத உழைப்பும், Vector Vibe நிறுவன இயக்குனர் திரு. ச. கார்த்திகேயன் அவர்களதும் அவருடைய குழு உறுப்பினர்களும் முக்கிய பங்கு உள்ளது!

மேலும் நூல் உருவாக்கத்தில் சேர்மன்ராஜ், விமாலாதித்தன் ஆகியோரது உதவி பெரும் பங்காற்றியுள்ளது. 

இந்த நூலின் அட்டைப்படம், உள்ளே ஒவ்வொரு பாடலுக்கும் வரையப்பட்டுள்ள  படங்களும் நூலை வாசித்து முடித்தவுடன்  சித்த ரகசியங்களை மனதில் பதிவிக்கும் வகையில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. 

நூலை எழுதி முடித்து வெளியாகும் ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் எனது குருஜி ஸ்ரீ அம்ருதானந்த நாதர் தனது ஸ்தூல உடலை உகுத்து விட்டார். அனேகமாக  அவர் உடலுடன் இருந்து இறுதியாக  ஆசீர்வதித்தது எமது நூலாக இருக்கும் சிறப்பு இந்த  நூலுக்கு உண்டு. அவரது சக்தி ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா  அம்மையார் ஆசி கூறியுள்ளார். இந்த நூல் வெளியாகும் 13ம் திகதி மார்ச் மாதம் அவரின் பிறந்த நாள் என்பது சிறப்பு ஆசீர்வாதம். 

அதேபோல்  எமது  ஆத்ம ஞான யோக சபையின் தலைவர், எமது  குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிற்கு பிறகு  குருஸ்தானத்தில்  இருந்து வழிநடாத்திய  இராஜயோகி  இராஜமோகன் ஐயா அவர்களும் உடலை உகுத்து விட்டார். அவரது மனைவியார்  ஸ்ரீமதி தனலட்சுமி அம்மா அவர்கள் ஐயாவின் ஸ்தானத்தில்  இருந்து இந்த  நூலை வெளியிட்டு வைக்கிறார்கள் . 

குருஜி, இராஜமோகன் ஐயா  இருவரும் இந்த  நூல் பல சாதகர்களுக்கு  உதவும்  என்று அருளாசி  கூறியுள்ளார்கள் . அவர்கள் இருவரது  அருளாசியும்  இந்த நூலில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது நூலாக  வெளிவரவேண்டும் என்பது  குருநாதரின் சங்கல்பம் என்பது இதுவரை  நடைபெற்ற நிகழ்ச்சிகளில்  இருந்து தெளிவாகியுள்ளது. இதனை ஒவ்வொரு  வாரமும் வகுப்பாக  கற்று அதன் பின்னர்  முறையாக தியானத்தில் மனதில் வரும் விளக்கங்களை  எழுதி வைக்கும் போதெல்லாம் இது இவ்வளவு  சிறப்பான  நூலாக வெளிவரும் என்று நினைக்கவும் இல்லை. 

பின்னர் இந்த  நூல் அங்கீகாரம் பெறுவதற்கு  ஏதுவாக தமது உடலை விடுமுன்னர் எமது குருநாதர் சான்றுப்பத்திரம் தந்தமை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி  சிந்திக்கும்போது குருமண்டலத்தின் சங்கல்பம் இருக்கின்றது என்பது உறுதியாகிறது.

எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளது 29ஆவது பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில்  ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஆத்ம யோக ஞான சபை அகத்தியனின் மூல சபை என்று  வாழ்த்தியுள்ளார். அந்த அகத்தியரின் மூல சபையில், கண்ணைய யோகீஸ்வரரிற்கு அடுத்த தலைவரான இராஜயோகி இராஜமோகன் ஐயா அவர்களின் நினைவு தினத்தில் இந்த  நூல் மக்களுக்கு வெளியிடப்படுவது குருநாதரின் ஆணை என்பதில் எதுவித ஐயமும் இல்லை. 

மேலும் சித்தர்களின் விடயங்களை வெளியிடும்போது  மரபு தாண்டாமல் நிபந்தனைகளை  பின்பற்றியே வெளியிட்டுள்ளோம். அதன் படி  அகத்தியர் குருமந்திர  புரச்சரணம், சாப நிவர்த்தி மந்திர ஜெபம் என்பவற்றை குருபரம்பரை  முறைப்படி  பூர்த்தி செய்தே வெளியிடுகிறோம்.

சித்தர்  மார்க்கத்தில் ஆத்ம யோக ஞான விடயங்களில் உண்மை ஆர்வம் கொண்ட சாதகர்கள், இந்தநூலைக் கற்பவர்கள் அனைவரும் நிச்சயம் பயன் பெறுவார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

அன்புடன்













*************************************************

நூலைக் கற்க ஆர்வம் உள்ளவர்கள் வெளியீட்டாளர்களை  தொடர்பு  கொள்ளவும்

contact the publishers: 
Pranav Swasta Stanam 
10/18, G1, Temple View Apartment, West Tank St, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041 India 
Phone 044 4210 2582 ✳ 0091 9600 666 661

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...