குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 30, 2021

தலைப்பு இல்லை

 

If I am the Teacher in this cartoon,

I would say! "My dear Student, Most misunderstood concept - so called rational thinkers say Question everything! but it will lead you to pathetic confused mentality!, rather you have to develop your scientific mind!

First observe carefully,

question all your observation to ensure that you observed and understood correctly!

formulate your understanding, Read or listen what others said on the same subject,

Test again and again,

Analyse your observation with less error and bias,

Then conclude!

Now you applied Scientific method!

You will get the knowledge which is scientifically tested!

In short only questioning and curiosity never give your the understanding, you have to complete the scientific thinking process!

தலைப்பு இல்லை

 

முருக இலக்கியங்களில் யோக ஞானக்கருத்துக்களை உரையாடுவதற்குரிய களமாக சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் என்ற நிகழ்வினை zoom வழியாக வளர்பிறை சஷ்டி, பௌர்ணமி, தேய்பிறை சஷ்டி ஆகிய மூன்று நாட்களில் மாதம் தோறும் நிகழ்த்த ஆரம்பித்துள்ளோம்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த வாட்ஸப் குழுவில் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/HLRN1ga72JuH0klXkHPvjv

தைப்பூச நிகழ்வினை இங்கே காணலாம்: https://youtu.be/Hla5nTUwhuw

Wednesday, January 27, 2021

தலைப்பு இல்லை

 

Topic: சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் - 01

Time: Jan 28, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82715139558...

Meeting ID: 827 1513 9558

Passcode: 603262

தலைப்பு இல்லை

 

குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.

Translation:

A sleepless promptitude, knowledge, decision strong:

These three for aye to rulers of the land belong.

*************************************************************

மீள்பதிவு

நிர்வாக அதிகாரி கவனிக்க வேண்டிய ஆறு புறக்காரணிகளை முன்னைய குறள் விளக்கத்தில் கூறினோம். இந்த ஆறு காரணிகளும் சரியாக இருந்தாலும், குறித்த நிர்வாக அதிகாரிக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டிய அகப்பண்புகள், இந்த அகப்பண்புகளை சரியாக கொண்டிருக்காவிட்டாலும் நிர்வாகம் விழுந்து விடும். மேலே கூறிய குறைவில்லாமல் இருக்க வேண்டிய நான்கு அகப்பண்புகளுடன் ஆளும் நிர்வாகிக்கு நீங்காமல் இருக்க வேண்டிய மேலும் மூன்று பண்புகள் பற்றி இந்தக் குறளில் விதந்துரைக்கிறார்.

ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமென்றால் கீழ்வரும் மூன்று பண்புகளை நீங்காமல் பெற்றிருக்க வேண்டும்.

தூங்காமை: இன்றைய நிர்வாக முகாமைத்துவத்தில் இருக்கும் பெரிய பழுது சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்காமை. முடிவெடுப்பதில் தாமதம், இந்த தூங்கும் பண்பு உள்ளவன் எப்போதும் சிறந்த நிர்வாகியாக வர முடியாது. ஆகவே சிறந்த நிர்வாகி என்பவன் துரிதமாக முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். தாமதமான, சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தூங்காமை என்பதை சோர்ந்து போகாமை என்று பொருள் கொள்ள வேண்டும்.

கல்வி: சரியான, துரிதமான முடிவுகள் எடுப்பதற்கு துறைசார்ந்த புரிதல் அவசியம், அந்த புரிதலின் அடிப்படை கற்கும் கல்வியில் இருந்தே வருகிறது. ஆகவே சிறந்த நிர்வாகியாக இருப்பதற்கு அடிப்படை அந்த துறைசார்ந்த விடயங்களில் தனது அறிவினை பெருக்கி, தெளிந்து இருக்க வேண்டும், இதற்கு கல்வி அவசியம். துரிதமாக முடிவெடுக்கலாம். ஆனால் எடுத்த முடிவு சரியாக இருப்பதற்கு அறிவுத் தெளிவு அவசியம். அந்த அறிவுத்தெளிவை தருவது கல்வி. ஆகவே சிறந்த நிர்வாகி அந்தத் துறைசார்ந்த அடிப்படைக் கல்வியினை பெற்றிருத்தல் அவசியம்.

துணிவுடைமை: தூங்காமையுடன் துரிதமாக முடிவு எடுக்கும் திறனுக்கு தேவையான முதல் அகப்பண்பு கல்வி என்றால் இரண்டாவது அத்தியாவசிய பண்பு துணிவுடைமை. முடிவுகள் எடுக்கும்போது அதன் விளைவுகள் சாதகமாக இருந்தால் வெற்றி, இல்லாவிட்டால் அதன் விளைவுகளை தலைமை நிர்வாகியே சந்திக்க வேண்டும். பலரும் முடிவு எடுக்காமல் தேங்குவதற்கான முதற்காரணி முடிவுகளின் விளைவு என்னவாக இருக்குமோ என்ற பயம். அந்த பயம் இருப்பவனால் எதையும் தலைமை தாங்கவோ, குழுவை வழி நடத்தவோ, வெற்றி பெறவோ முடியாதவனாகி விடுவான். ஆகவே கல்வி அடிப்படை புரிதலை தந்தாலும், வெற்றி பெறுபவன் துணிவுடன் சரியான முடிவுகளை எடுப்பவனே.

இந்தக்குறள் என்னைப்பொறுத்தவரையில் அருமையான குறள். முடிவெடுக்கும்போது விரைவாக முடிவெடுக்கவேண்டும், அப்படி விரைவாக முடிவெடுக்கும்போது தவறான முடிவாக இருக்க கூடாது, அதற்கு சிறந்த புரிதல் வேண்டும், அந்தப் புரிதலைத்தரும் கல்வியினை ஒருவன் சரியாக பெற்றிருக்க வேண்டும். அப்படி சரியான கல்வியறிவு பெற்ற அனைவரும் சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக வருவதில்லை, ஏனெனில் பலரும் தாம் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவு வருமோ என்ற பயம், அந்த பயத்தை உதறி துணிவுடன் முடிவு எடுப்பவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆக இந்தக் குறளில் மூன்று பண்புகளையும் கோர்வையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன் கூறியுள்ளார்.

Monday, January 25, 2021

தலைப்பு இல்லை

 

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

என்றார் பாரதியார்! அந்தக் கனவின் ஒருபகுதியாக அனுபவ யோகியின் யோக நூற்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணி - வாரம் 04 இன்று தினகரன் சைவமஞ்சரியில்....

தலைப்பு இல்லை

 

Does power corrupt?

I would say like this; people are tempted by Glory to make country/race/religion great, but if glory doesn't have the wisdom and purity in mind, then gaining power will lead to corruption & destruction;

So power is not corrupting; man's ignorance and impure mind lead to the wrong temptations in his own way rather than true objective of power!

for example power is given to politician to serve the people, however his impure and ignorant mind will lead to corruption & destruction; if we are saying power is corrupting then that is wrong; the mind handling the power without wisdom is the corrupter.

தலைப்பு இல்லை

 

Man of Tai Chi என்ற திரைப்படம் பிராண ஆற்றலினைப் பெறும் ஒருவன் தனது அரைகுறைப் புரிதலால், அவனது தவறான பிரயோகம் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கான விவரணப்படமாக அமைகிறது.

ஆற்றலினை, அதிகாரத்தினைப் பெறுவதில் இருக்கும் ஆர்வம் மனச்சுத்தியுடன், சமநிலையில் இல்லாவிட்டால் எப்படி தவறான அழிவுப்பாதையில் செல்லும் என்பதை கீழைத்தேய தத்துவ ஞானத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வதற்கான ஒரு அறிமுகமாக இதை எழுத்துக்கொள்ளலாம்.

இதை இனவிடுதலை, போராட்டம், அதிகாரம் பெறவேண்டும் என்ற சிந்தனையுள்ள சமூகம் அகப்பக்குவம் இன்மையால் அந்த நோக்கத்தை அடையாமல் ஏன் அழிவுப்பாதையில் செல்கிறது என்பது போன்ற விடயங்களை ஆராய்வதற்குரிய தத்துவ அடிப்படையாகவும் நோக்கலாம்!

Tai Chi என்பது பிரபஞ்ச இருமைகள் (சீன தத்துவத்தில் யிங் யங்) சரியான அளவில் சமநிலையில் இருப்பதைக் குறிக்கும்! இந்தியதத்துவ ஞானத்தில் யோகம் என்பது "யோக சம முச்சயதே" என்று கிருஷ்ணன் கூறுவான்.

யோகம் என்பது சமநிலையில் இருப்பது.

வாசி யோகம் என்பது இடகலை, பிங்கலை ஆகிய இரண்டையும் சமமாக வைத்திருத்தல்.

வள்ளுவர் நோய் என்பது வளிமுதலான மூன்றும் (வாத பித்த கபம்) மிகாமலும், குறையாமலும் இருத்தல் என்று கூறுவார்.

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று"

இந்தச் சமநிலையை தந்திர சாஸ்திரம் சிவஸக்தி சாமரஸ்யம் என்று கூறும்

இந்திய - சீன தத்துவங்கள் சமநிலையைப் பற்றியே பேசுகிறது.

ஆரோக்கியம் என்பது முத்தோஷங்களின் சமநிலை

செல்வம் என்பது வரவினதும் செலவினதும் சமநிலை

சண்டை என்பது எதிரெதிரான இரு துருவங்களின் சமநிலை

யோகம் என்பது மனம், பிராணன், உடல் என்பவற்றின் சமநிலை

தாய் சீ என்ற கலை எதிரியை அவனது பலத்தை உடைத்து வெற்றி காண்பது என்பதை தவிர்க்கிறது. எதிரியிடம் மிகுந்திருக்கும் பிராணனால் - சீ - chi இனால் அவர் ஆக்கிரோசம் கொள்கிறார். ஆகவே அந்தப்பிராணனை சமநிலைக்கு கொண்டுவருவதே தாய் சீயில் சண்டையாக இருக்கிறது. இதன்படி ஒருவன் பயிற்சியால் பிராண வலிமையைப் பெற்று அதிகமாக்கிக்கொண்ட பின்னர் அவற்றை சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும். அப்படிச் சமநிலைக்கு கொண்டுவரும்போது அந்தப்பிராணன் எந்த தீய அழிவுக்காரணங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய பக்குவம் இல்லாமல் இந்த பிராண அடிப்படை போர்க்கலைகளைப் பயில்பவர்கள் கொலைகாரர்களாகக் கூட மாறிவிடுவார்கள் என்பதுதான் இந்த சீனத்திரைப்படத்தின் அடிப்படை.

ஒரு அப்பாவி, திறமையான மாணவன் 600 ஆண்டுகள் பாரம்பரியமுடைய ஆலயத்தில் இந்தக்கலையைப் பயில்கிறான். குருவானவர் தனது பாரம்பரியத்தை, திறமையை எக்காரணம் கொண்டும் பணம் சம்பாதிப்பதோ, தீயகாரியம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துகொண்டு தனது ஒரேயொரு மாணவனுக்கு பயிற்றுவிக்கிறார்.

பயிற்சியின்போது மாணவன் தனது பிராணனை ஒத்திசைவாக தாய்ச் சீயின் சமநிலை விதிகளின்படி சமநிலைக்கு வராமல், உணர்ச்சிவசப்பட்டு தனது பிராணனை, ஈட்டியை உடைத்து விடுகிறான்.

அந்த சந்தர்ப்பத்தில் குரு அவனிடம் கேட்கிறார்; எப்படி உணர்கிறாய் என்று?

அதற்கு அவன் எனது மேலதிக பிராணன் வெளியேறிவிட்டதால் நான் நன்றாக உணர்கிறேன் என்று கூறுகிறான்;

அதற்கு குரு சொல்கிறார்; மாணவனே, இன்றைய இந்தத் தெரிவு பற்றி நீ கவனமாக இருக்க வேண்டும்? உனது ஆற்றலைப் பயன்படுத்தி ஈட்டியை உடைத்திருப்பதையே வெற்றியாகக் கருதுகிறாய்; ஆனால் நீ உனது மேலதிக பிராணனை, ஈட்டியை உடைக்காமல் வெளியேற்றுவதே ஆக்க பூர்வமானது, அதை நீ செய்யவில்லை, தாய் சீ என்பது யிங் யங் இரண்டினதும் சமநிலை என்கிறார்.

அதற்கு அவன் இல்லை ஆற்றலே பிரச்சனைகளைத் தீர்க்கும், நான் இப்போது ஆற்றலுடையவனாக இருக்கிறேன் என்று எதிர்வாதம் புரிய, குரு சிரித்துக்கொண்டு, இன்று நீ எடுத்திருக்கும் முடிவு உனது போர்க்கலையின் வினைத்திறனை முடிவு செய்யப்போகிறது, இது நீ என்னவாக வரப்போகிறாய் என்பதைக் காட்டுகிறது, தவறான முடிவு, விழிப்புணர்வுடன் இரு, இந்த முடிவு உன்னை வேறு ஒரு பாதையில் அழைத்துச் செல்லப்போகிறது, எமது குருபரம்பரையின் ஒரேயொரு மாணவன் என்ற வகையில் இந்த சிந்தனைக்குள் போகாதே, உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள தியானம் செய்து உனது மனதை சுத்தி செய்துகொள் என்று கூறுகிறார்.

மாணவன் அதை உள்வாங்கிக்கொள்ளாமல் மனச்சுத்தியினைப் பெற முயற்சி செய்யாமல் ஆற்றலை அடைவதில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்துகிறான். இறுதியில் நல்லவனாக இருந்த ஒருவன் எப்படி கொலைகாரன் ஆகிறான் என்பதைப் பற்றிய தத்துவமே இந்தப்படம்!

நல்ல நோக்கத்திற்காக போராடத்தொடங்கியவர்கள் ஏன் தீவிரவாதிகள் ஆகிறார்கள்,

யோகம் செய்கிறோம் என்று தொடங்கியவர்கள் ஏன் பணம், பெண், அதிகாரம் என்று அலைகிறார்கள்,

மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம் என்று அரசியல்வாதியானவர்கள் ஏன் ஊழல்வாதியாகிறார்கள் என்பதை பிராண தத்துவ அடிப்படையில் விளக்கும் ஒரு அருமையான படம்!

Saturday, January 23, 2021

தலைப்பு இல்லை

 

Now சிவயோக ஞானத் திறவுகோல் is available world wide via exotic India art website,

தலைப்பு இல்லை

 

Teaching, training, helping to understand, motivating & inspiring others are always satisfactory job for me! However in my early career I selected myself to be as a corporate guy rather than a teacher!

However I am not regret, because I had lot of versatile experience to share many aspect of knowledge to students, seekers who approach me now for advice, as a honey collecting Bee!

However now I feel I am in the correct track which is compatible to my inner nature!

Today spend some time with our final year students to prepare them for their next level to seek the jobs!

Helping them to synthesis their credentials, competency and skills!

CV writing & discussion!

தலைப்பு இல்லை

 

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை;

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை

தமிழ் என்றால் அழகு

அழகு என்றால் முருகு

தமிழில் முருக இலக்கியம் என்பது சங்ககாலம் தொட்டு திருமுருகாற்றுப்படையில் ஆரம்பித்து தற்காலம் வரை நீண்ட பாரம்பரியம் கொண்டது!

இதை ஆன்றோர்கள் அனைவரும் பக்தி இலக்கியமாகத்தான் கூறி வந்திருக்கிறார்கள்.

நாம் தமிழில் யோக இலக்கியம், மருத்துவ இலக்கியம் என்ற மரபுகள் இருக்கிறது என்பதையும், அவற்றை தமிழறிஞர்கள் கவனிக்கிறார்கள் இல்லை என்பதையும் அடிக்கடி கூறிவருகிறோம்!

ஆகவே இந்த யோக ஞான மரபின்படி முருக இலக்கியங்களைப் பற்றிய உரையாடல் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவை இந்த தைப்பூசத்தில் ஆரம்பிக்க திருவருள் கூடியுள்ளது.

எதிர்வரும் தைப்பூசத்திலிருந்து முருக இலக்கியங்களில் உள்ள யோக ஞானப்பாடல்களை ஆர்வமுள்ளவர்களுடன் கூடி zoom வழியே கற்கலாம் என்று அன்பர்கள் ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியை திருப்புகழில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவன், எமது சங்கத்தின் செயலாளர் திரு. விமலாதித்தன் அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்திலும், ஒரு சஷ்டித் திதியிலும் இரண்டு நிகழ்வுகளைத் தொடராக நடத்தலாம் என்று உத்தேசம்!

ஆகவே முருக இலக்கியத்தின் யோக ஞானக் கருத்துக்களை கற்க விரும்பும் அனைவரும் இணைந்துகொள்க!

அழைப்பு கீழே;

Topic: சுப்பிரமணிய யோக ஞானத்திறவுகோல் - 01

Time: Jan 28, 2021 07:45 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82715139558...

Meeting ID: 827 1513 9558

Passcode: 603262

Friday, January 22, 2021

தலைப்பு இல்லை

 

வள்ளளார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்;

ச - உண்மையே சகரமாய்,

ர - விஷயநீக்கமே ரகரமாய்,

வ - நித்திய திருப்தியே வகரமாய்,

ண - நிர்விஷயமே ணகரமாய்,

ப - பாவ நீக்க ஏதுவே பகரமாய்,

வ - ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து.

சரவணபவ (குருமுகமாய் சரஹணபவ என்ற மந்திரபேதம் உண்டு) என்ற சடாட்சர மந்திர சாதனை செய்யும் சாதகன் உண்மை அறிவைக் கொண்டு, புலன்வழி விஷயங்களை நீக்கி, நித்திய திருப்தியுடன், புலன்களைக் கடந்த ஆன்மாவின் இயற்கையான தெய்வகுணத்தில் கவனம் வைத்து சாதனை செய்ய சித்தத்தில் பதிந்திருக்கும் பாவ சம்ஸ்காரங்கள் நீக்கம் பெற்று எல்லாத்தத்துவங்களும் தாண்டி, உண்மணிக்கு அப்பால் மனமற்ற நிலையில் இருக்கும் சாந்தமான ஆன்ம அறிவினைப் பெறுவான் என்பது பெறப்படும்!

வள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்

 வள்ளளார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்; 

ச - உண்மையே சகரமாய், 

ர - விஷயநீக்கமே ரகரமாய், 

வ - நித்திய திருப்தியே வகரமாய், 

ண - நிர்விஷயமே ணகரமாய், 

ப - பாவ நீக்க ஏதுவே பகரமாய், 

வ - ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து.





சரவணபவ (குருமுகமாய் சரஹணபவ என்ற மந்திரபேதம் உண்டு) என்ற சடாட்சர மந்திர சாதனை செய்யும் சாதகன் உண்மை அறிவைக் கொண்டு, புலன் வழி விஷயங்களை நீக்கி, நித்திய திருப்தியுடன், புலன்களைக் கடந்த ஆன்மாவின் இயற்கையான தெய்வகுணத்தில் கவனம் வைத்து சாதனை செய்ய சித்தத்தில் பதிந்திருக்கும் பாவ சம்ஸ்காரங்கள் நீக்கம் பெற்று எல்லாத்தத்துவங்களும் தாண்டி, உண்மணிக்குக்கு அப்பால் மனமற்ற நிலையில் இருக்கும் சாந்தமான ஆன்ம அறிவினைப் பெறுவான் என்பது பெறப்படும்! 

தலைப்பு இல்லை

 

சுப்பிரமணியன் என்பது யார் என்பதற்கு வள்ளலார் கீழ்வருமாறு விளக்குகிறார்:

1. யோகசாதனையின் உயர்வில் புருவமத்தியில் தோன்றும் ஒளி ஆறுபட்டைகள் (முகங்கள்) கொண்ட உருண்ட ஒளி நிறைந்த மணியாக தோன்றும். இதை சண்முகம் என்பார்கள்.

2. மூலாதாரத்திலிருந்து மூன்று இடம் தாண்டி இருதயத்திற்கு இடதுபுறத்தில் ஆறுகிளைகள் உள்ள ஒரு நாடி இருக்கிறது. இதை சுப்பிரமணியம் என்பார்கள்.

3. ஆறு அறிவுகளும் ஒன்று சேர்ந்து உருவாகும் சுத்த விவேக நிலையை சண்முகம் என்பார்கள்.

4. ஆறு ஆதாரங்களிலும் உள்ள பிரகாசங்கள் ஒன்று சேர்ந்த நிலையை ஷண்முகம் என்பார்கள்

5. மேலேயுள்ள எல்லாம் விளக்கமாக இருந்தாலும் எல்லாத்தத்துவங்களும் முடிவுற்று, மனமற்ற நிலை எனும் உன்மணிக்கு அப்பால், சாந்தமான அறிவு நிறைந்த ஆன்ம அறிவே சுப்பிரமணியம்.

இதற்கும் முன்னர் சுப்பிரமணிய தத்துவம் என்ன என்பதை ஒவ்வொன்றாகக் கூறி கடைசியில் தனது அனுபவமாக சுப்பிரமணிய தத்துவம் என்பது எல்லாத்தத்துவங்களும் தாண்டி, உண்மணிக்கு அப்பால் மனமற்ற நிலையில் இருக்கும் சாந்தமான ஆன்ம அறிவு என்ற தனது அனுபவ வாக்கினைப் பெருமானார் கொடுத்திருக்கிறார்.

வள்ளலார் கூறும் சுப்பிரமணிய தத்துவம் - 01

 சுப்பிரமணியன் என்பது யார் என்பதற்கு வள்ளலார் கீழ்வருமாறு விளக்குகிறார்:



  1. யோகசாதனையின் உயர்வில் புருவமத்தியில் தோன்றும் ஒளி ஆறுபட்டைகள் (முகங்கள்) கொண்ட உருண்ட ஒளி நிறைந்த மணியாக தோன்றும். இதை சண்முகம் என்பார்கள்.
  2. மூலதாரத்திலிருந்து மூன்று இடம் தாண்டி இருதயத்திற்கு இடதுபுறத்தில் ஆறுகிளைகள் உள்ள ஒரு நாடி இருக்கிறது. இதை சுப்பிரமணியம் என்பார்கள்.
  3. ஆறு அறிவுகளும் ஒன்று சேர்ந்து உருவாகும் சுத்த விவேக நிலையை சண்முகம் என்பார்கள். 
  4. ஆறு ஆதாரங்களிலும் உள்ள பிரகாசங்கள் ஒன்று சேர்ந்த நிலையை ஷண்முகம் என்பார்கள் 
  5. மேலேயுள்ள எல்லாம் விளக்கமாக இருந்தாலும் எல்லாத்தத்துவங்களும் முடிவுற்று, மனமற்ற நிலை எனும் உன்மணிக்கு அப்பால், சாந்தமான அறிவு நிறைந்த ஆன்ம அறிவே சுப்பிரமணியம்.  
இதற்கும் முன்னர் சுப்பிரமணிய தத்துவம் என்ன என்பதை ஒவ்வொன்றாகக் கூறி கடைசியில் தனது அனுபவமாக சுப்பிரமணிய தத்துவம் என்பது எல்லாத்தத்துவங்களும் தாண்டி, உண்மணிக்குக்கு அப்பால் மனமற்ற நிலையில் இருக்கும் சாந்தமான ஆன்ம அறிவு என்ற தனது அனுபவ வாக்கினைப் பெருமானார் கொடுத்திருக்கிறார். 

Wednesday, January 20, 2021

தலைப்பு இல்லை

 

உலகில் அறிவியல் என்பது எவ்வளவு நன்மை தருகிறதோ அது அறிவைப் பெறும் நோக்கத்திற்கு வெளியே வந்து வியாபாரம் ஆகும் போது எப்படி தரம் கெடுகிறது என்பதை உலகின் தலைசிறந்த ஒரு மருத்துவ அறிவியலாளர் சொல்கிறார்!

இது மனித குலத்தின் அனைத்துத் தத்துவங்களுக்கும் பொருந்தும். சமயம் சமூகத்தை முன்னேற்றுவது, அகத்தை முன்னேற்றுவது தவிர்ந்து குழுக்களின் அதிகாரச் சின்னமாவது!

சோஷலிசம், மார்கிஸிசம் வர்க்கத்திற்கான போராட்டத்திலிருந்து தமக்கான அதிகார அங்கீகாரமாக மாறுவது,

விவசாயம் அதிக நுகர்விற்கான அதிகவிளைச்சல் பணம் கொழிக்கும் துறை என்பது,

என்று மனிதன் ஒவ்வொரு தத்துவத்தையும் தனது பேராசையால் அதன் மைய நோக்கத்திலிருந்து விலகி பேராசையும், அறியாமையாலும் இயக்கும் போது இப்படியான நிலைக்குச் செல்கிறான்!

மருத்துவம், உண்மை, ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் அனைவரும் கேட்க வேண்டிய உரைகள் பேராசிரியர் ஹெக்டேயினுடையவை!

Monday, January 18, 2021

தலைப்பு இல்லை

 

இன்றைய தினகரன் சைவ மஞ்சரியில் ஹம்ஸ யோகம் - 03

Sunday, January 17, 2021

தலைப்பு இல்லை

 

ஸ்ரீ ஸக்தி சுமனன்

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்| பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம்

புன்முறுவல் தவழ்பவளும், பொன் கோட்டையில் உறைபவளும், கருணை நிறைந்தவளும், ஒளி பொருந்தியவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும், மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ அந்த திருமகளை இங்கே எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறேன்!

பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடல் - 03 யோக விளக்கம்

 

ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

இது திரு ஞான சம்பந்தப் பெருமானாரின் பஞ்சாக்கர திருப்பதிகத்தின் மூன்றாவது பாடல்!

அஞ்செழுத்து - பஞ்சாட்சரம் எப்படி யோக சாதனைக்கு உதவும் என்பதை விளக்கியுள்ளார்;

1) ஊனில் உயிர்ப்பை ஒடுக்கும் - ஸ்தூல பஞ்சாட்சர ஜெபம் உடலில் உள்ள பிராணனின் ஓட்டத்தை சீராக்கும். ஊன் என்றால் உடல், உயிர்ப்பு என்றால் இயக்கும் பிராணன். இவை இரண்டும் சீராக இயங்கினால் உடல் ஆரோக்கியம், வீணாகினால் நோய், துன்பம்! ஒடுங்கினால் யோகம். ஆக அஞ்செழுத்து மந்திரம் ஊன்வழி பிராணனை வீணாக்காமல் ஒடுக்கி வாசியாக்கி, சிவத்தை நோக்கிச் செலுத்தும் வல்லமை உள்ளது.

மேலே பிராணன் உடலில் ஒடுங்கத் தொடங்கினால் என்ன நிகழும் என்பது இரண்டாவது வரி

2) ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி - ஒண் என்றால் மிகுதியான என்று பொருள், பிராணனை ஒடுக்கும் யோகி கண்களை மூடினால் அவன் அகக்கண்களால் ஒளிவெள்ளம் காண்பான், இதை சிவயோகத்தில் சிவஜோதி என்று கூறுவர். ஆக சாதகன் திருவைந்தெழுத்தால் பிராணன் வீணாகுவதை ஒடுக்கினால் அவன் தனது புருவமத்தியில் மிகுந்த ஒளியுடன் கூடிய விளக்கினை ஏற்றுவான்! இது திருவைந்தெழுத்துத் தரும் இரண்டாவது சித்தி; புருவமத்தியில் ஒளி காணுதல்.

இப்படி புருவமத்தியில் ஒளி கண்டால்

3) நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார் - நன் புலத்து என்னை வழி திறந்து ஏத்துவார் என்று கொண்டால், புலன்கள் வழி செல்லாமல் சிவத்தை நோக்கிச் செல்லும் வழியை திறந்து மேலே ஏற்றுவார்ககளுக்கு இடர் எதுவும் வராமல் காப்பது திருவைந்தெழுத்து என் கிறார்.

இதன் யோக விளக்கம் திருவைந்தெழுத்தை சாதகம் செய்யும் ஒருவன் முதலில் பிராணன் வீணாகும் நிலையிலிருந்து மீண்டு உடலில் பிராணன் ஒடுங்கி ஆதாரங்கள் சுத்தியாகி, புருவமத்தியில் ஒளிகாணும் நிலையைப் பெறுவான். இப்படி சாதனை செய்யும் போது புலன் வழி செல்லாமல் சிவத்தில் சிந்தை இருத்தி யோகம் செய்வது அவசியம், புலன் வழி சென்றால் யோகம் கெட்டு இடர் வரும், அத்தகைய புலன் அடக்கத்தையும் தந்து ஒருவனின் யோக சாதனையைக் காப்பது திருவைந்தெழுத்து ஜெபமே!

பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடல் - 03 யோக விளக்கம்

 

ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்

ஞான விளக்கினை யேற்றி நன்புலத்

தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்

ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

இது திருஞானசம்பந்தப் பெருமானாரின் பஞ்சாக்கர திருப்பதிகத்தின் மூன்றாவது பாடல்!

அஞ்செழுத்து - பஞ்சாட்சரம் எப்படி யோக சாதனைக்கு உதவும் என்பதை விளக்கியுள்ளார்;

1) ஊனில் உயிர்ப்பை ஒடுக்கும் - ஸ்தூல பஞ்சாட்சர ஜெபம் உடலில் உள்ள பிராணனின் ஓட்டத்தை சீராக்கும். ஊன் என்றால் உடல், உயிர்ப்பு என்றால் இயக்கும் பிராணன். இவை இரண்டும் சீராக இயங்கினால் உடல் ஆரோக்கியம், வீணாகினால் நோய், துன்பம்! ஒடுங்கினால் யோகம். ஆக அஞ்செழுத்து மந்திரம் ஊன்வழி பிராணனை வீணாக்காமல் ஒடுக்கி வாசியாக்கி, சிவத்தை நோக்கிச் செலுத்தும் வல்லமை உள்ளது.

மேலே பிராணன் உடலில் ஒடுங்கத் தொடங்கினால் என்ன நிகழும் என்பது இரண்டாவது வரி.

2) ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி - ஒண் என்றால் மிகுதியான என்று பொருள், பிராணனை ஒடுக்கும் யோகி கண்களை மூடினால் அவன் அகக்கண்களால் ஒளிவெள்ளம் காண்பான், இதை சிவயோகத்தில் சிவஜோதி என்று கூறுவர். ஆக சாதகன் திருவைந்தெழுத்தால் பிராணன் வீணாகுவதை ஒடுக்கினால் அவன் தனது புருவமத்தியில் மிகுந்த ஒளியுடன் கூடிய விளக்கினை ஏற்றுவான்! இது திருவைந்தெழுத்துத் தரும் இரண்டாவது சித்தி; புருவமத்தியில் ஒளி காணுதல்.

இப்படி புருவமத்தியில் ஒளி கண்டால்,

3) நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார் - நன் புலத்து என்னை வழி திறந்து ஏத்துவார் என்று கொண்டால், புலன்கள் வழி செல்லாமல் சிவத்தை நோக்கிச் செல்லும் வழியை திறந்து மேலே ஏற்றுவார்களுக்கு இடர் எதுவும் வராமல் காப்பது திருவைந்தெழுத்து என்கிறார்.

இதன் யோக விளக்கம் திருவைந்தெழுத்தை சாதகம் செய்யும் ஒருவன் முதலில் பிராணன் வீணாகும் நிலையிலிருந்து மீண்டு உடலில் பிராணன் ஒடுங்கி ஆதாரங்கள் சுத்தியாகி, புருவமத்தியில் ஒளிகாணும் நிலையைப் பெறுவான். இப்படி சாதனை செய்யும் போது புலன் வழி செல்லாமல் சிவத்தில் சிந்தை  இருத்தி யோகம் செய்வது அவசியம், புலன் வழி சென்றால் யோகம் கெட்டு இடர் வரும், அத்தகைய புலன் அடக்கத்தையும் தந்து ஒருவனின் யோக சாதனையைக் காப்பது திருவைந்தெழுத்து ஜெபமே!

சிவயோகத்தின் படிகள் - தசகாரியம்


இன்று யோகம் என்று பலரும் ஆசனங்களையும் பிரணாயாமங்களையும் நம்பிக்கொண்டிருக்கையில் சர்வ ஞான உத்தர ஆகமம் சிவயோகத்தின் படிகளை 25 தொடக்கம் 29 வரையிலான சுலோகங்களில் எடுத்துச் சொல்கிறது.
இது பத்துப்படிகளைக் கொண்ட தசகாரியம் என்று அழைக்கப்படும்.
இவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது வழக்கில் உள்ள யோக முறைகள் முதல் இரண்டு படிகளையும் தாண்டிச் செல்லவில்லை என்பதும் அறிந்துகொள்ளலாம். இந்தப்படிகளில் ஏறிச்செல்ல குருவும் தீக்ஷையும் அவசியம் என்பது புரிதல் அவசியம்!
இவற்றைப் புரிந்துகொள்ளும் போது எப்படி எமது யோக சாஸ்திரங்கள், ஆகமங்கள் systemic ஆக வகுக்கப்பட்டிருக்கிறது என்ற புரிதலும் கிடைக்கிறது.






சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்

 சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்

Posted in FB : https://www.facebook.com/tsumanenthiran/posts/10158138005541589

**************************************************
சிவபெருமான் முருகனிற்கு உபதேசிக்கும் படியான இந்த ஆகமத்தின் யோக பாதம் யோக சாதகன் எப்படி யோக சாதனையைத் தொடங்க வேண்டும் என்ற வழிமுறையைச் சொல்கிறது!
இது துல்லியமான மொழிபெயர்ப்பு அல்ல, சுருக்கமாக விஷயத்தைப் புரிய பகிரப்படுகிறது.
சிவயோகத்தினை சாதிக்க விரும்பும் சாதகன் தனது மனதை புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும் சம நிலையாக வைத்திருக்கும் ஆற்றலும், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மனம் சம நிலை இழக்காத தன்மையும், அதிக மகிழ்ச்சியோ, பயமோ, அவ நம்பிக்கையான மன நிலையைத் தோற்றுவிக்கும் சந்தர்ப்ப சூழலிற்குள் செல்லாமல் சாதகன் தொடர்ச்சியாக தனது சாதனையைத் தொடர வேண்டும்.
சாதகன் தனிமையான வீடு, புனிதம் நிறைந்த தேவாலயம், மக்கள் அதிகம் நடமாடாத நதிக்கரை, எவரும்நெருங்கமுடியாத மரங்கள் நிறைந்த காடுகள், நிசப்தமான இடம், விலங்குகள், பூச்சிகள், மனிதர்களால் தொல்லை ஏற்படாத அமைதியான இடம், அல்லது தனது சொந்த வீடு ஆகிய இடங்களில் சாதனையைத் தொடங்கலாம்!
சாதகன் தனக்குச் சொந்தமில்லாத வேறு ஒரு தனி நபரின் இடத்தில் சாதனை செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் சூரியன், வெப்பம், ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடாத இடமாகவும் இருக்க வேண்டும்.
சாதகன் தனது ஸ்னானத்தின் மூலம் உடலைச் சுத்தி செய்துகொண்டு மனச்சுத்தியுடன் விபூதி தரித்துக்கொண்டு சிவபெருமான் முன்னும் தனக்கு யோக தீக்ஷை தந்த குருவிற்கும் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டு தனது சாதனையை தினசரி தொடங்க வேண்டும்.
யோக சாதனையில் அமர்வதற்கு அனேக ஆசனங்கள் உள்ளன; இவற்றுள் சாதகன் தனக்கு வசதியான பத்மாசனம், சுவஸ்திகாசனம், அர்த்த பீட, அர்த்த சந்திர, சர்வதோபத்ர ஆசனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடலை நிமிர்த்தி, தலை முதுகெலும்பு நேராக வைத்து, மனதில் எந்த எதிர்மறை எண்ணங்களும் இன்றி சாதனையில் அமர வேண்டும்!
குகனே (இந்த ஆகமம் முருகனிற்கு உபதேசிக்கப்பட்டது) சாதகன் தனக்குள்ளே மனதைச் செலுத்தி சாதனையை ஆரம்பிக்க வேண்டும்!

இலங்கையின் சித்த மருத்துவப் பாரம்பரியம்

 அவுஸ்ரேலிய தாயகம் வானொலியில் பால விக்னேஸ்வரன் ஐயாவுடன் ஒரு உரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது!

விஷயம் வெகு சுவாரசியம்! ஈழத்து தமிழ் இலக்கியத்தில் பெரிய நூற்கள் பரராசசேகரம் மருத்துவ இலக்கியங்கள்! இவற்றை பல்கலைக்கழகங்களின் தமிழ் துறைகள் எதுவும் பெரிதாக தொட்டதில்லை! அதேபோல் சித்த மருத்துவத்துறையில் ஒரு சில விரிவுரையாளர்களைத் தவிர மற்றவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை!
ஆனால் புராதன காலத்தில் யாழ்ப்பாணம் மிகுந்த புலமைத்துவம் கொண்ட மருத்துவப்பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது1 இதை புலம் பெயர் உறவுகளின் தளத்தில் உரையாடுவது இந்தத்துறை பற்றி, எமது பாரம்பரியம் பற்றிய தகவல்கள் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்ற எண்ணம்!
மேலும் அறிவியல் யுகத்திற்கு ஏற்றவகையில் எப்படி இந்த சித்த மருத்துவத்தை அதன் சாரம் குன்றாமல் அறிவியல் மொழிக்கு எப்படி இதை மொழிபெயர்ப்பது என்பது பற்றியும் உரையாடலாம் என்று எண்ணம்!
அனைவரும் வாருங்கள்!



impatience does not help, intensity of aspiration does

 இன்று பிரச்சனை வந்தவுடன் கொதித்து உணர்ச்சிகளைக் காட்டிவிட்டு அடங்கிவிடுவதுதான் "பலரின்" குணமாகிவிட்டது!

ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார் "impatience does not help, intensity of aspiration does"
பொறுமை இன்மையும், கூச்சல்களும், பழி கூறல்களும் எதையும் சாதிக்க இயலாது! அடைந்துவிடவேண்டும் என்ற தாகமும் அதற்கான செயலும் மாத்திரமே காரியத்தை நடத்துவிக்கும்!
இங்கு பலருக்கு இருப்பது எவரையாவது குறை, பழி கூறும் பண்புதான் தவிர உண்மையில் அந்தச் செயலின் மீதான aspiration - செயல் சித்தி பெறவேண்டும் என்ற தீராத தாகமுடன் கூடிய உத்வேகம் மிகுந்த செயல் அல்ல!
முகநூல் இப்படி பொறுமையின்மையை வெளிப்படுத்தி செயலின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும் ஒரு கருவியாகத்தான் அனேக சந்தர்ப்பங்களில் பயன்படுகிறது!

First posted in FB: https://www.facebook.com/tsumanenthiran/posts/10158141622406589

சைவ சமய நூல்

 First posted in FB: https://www.facebook.com/tsumanenthiran/posts/10158141787391589

***************************************************

சைவர்களது சமய நூல் எது என்று மருத்துவர் திரு லம்போதரன் ஐயா அவர்கள் பதிவிட்டிருந்தார்!

இதைப்படித்த போது எனக்குத் தோன்றிய கருத்தினை இங்கு பதிவிட எண்ணுகிறேன்!
சைவர்கள் அல்லது பாரதீய ரிஷி கலாச்சாரம் - ஞானத்தையும், அக அனுபவத்தையும் முதன்மையாகக் கொண்ட கலாச்சாரம் - எப்போதும் எதையும் பற்றிக்கொண்டிருக்கும் அடிமைப்படுத்தும் மார்க்கத்தைப் போதிக்கவில்லை!
அதனால் எப்போதும் ஒரு நூல்தான் இறுதியான முடிவு என்று தம்மைச் சுருக்கிக்கொள்ளவில்லை!
மேலும் பிரக்ருதி இந்த இயற்கையை பரமசிவத்தை நோக்கி பரிணாமத்தில் உந்திக்கொண்டிருக்கிறது என்பதையும், அந்த உந்தலில் ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு நிலையில் இருக்கீறது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்!
உண்மையை அக உணர்வால் உணர வெளிப்படட திருஷ்டிகள் - பார்வைகள் - வேதங்கள்! வேதங்கள் ரிஷிகளின் நேரடி அக அனுபவம்!
இந்த அனுபவம் மற்றவர்களுக்கு, ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வாய்க்க என்ன வழி? ஆகவேதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வெவ்வேறு உத்திகள் தேவைப்படும் என்பதை அறிந்து அவற்றை ஏற்படுத்தினார்கள்.
இப்படி சிவத்தை நோக்கிப் போகும் வழியைக் கூறுபவை ஆகமங்கள் என்றும்! சிவத்தை நோக்கிச் செல்லுவதற்கான உத்திகள் தந்திரங்கள் - சக்தி மார்க்கம் என்றும் வகுக்கப்பட்டது!
ஆகவே சைவர்கள் - சிவத்தை நோக்கிச் செல்லும் process & techniques ஐப்பற்றியே அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்!
அவரவர் பரிபக்குவத்திற்கேற்ப ஏதோ ஒரு ஆகமமோ, அல்லது ஒரு ஆகமத்தில் சரியா, கிரியா, யோக, ஞான பாதமோ வழிகாட்டும்! இப்போது சைவத்தில் தீக்ஷா மார்க்கமும், யோக மார்க்கமும் மறைந்திவிட்டதால் யதார்த்த சைவம் அனுபவத்தில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கீறது என்பது எனது சிற்றறிவிற்கு தோன்றிய எண்ணங்கள்!
சைவம் பயிற்சிக்குரிய வாழ்வியல் முறையாக வர வேண்டும்! ஒவ்வொரு சாதகனின் அகப்பக்குவம் அறிந்து அதற்குத் தகுந்த சரியை, கிரியை, யோகம், ஞானம் போதிக்கப்பட்டு அதற்குரிய ஆகமங்களை அவனுக்குரிய customised நூலாக வழிகாட்டப்பட வேண்டும்! அப்போது யதார்த்த வழிகாட்டலாக இருக்கும்!
இது தற்போது சர்வ ஞானோத்தர ஆகமம் படிக்கும் போது மனதில் தோன்றிய சிந்தனை! பகிர்வது சிந்தனைக்காக விவாதத்திற்கு அல்ல!

தெளிவு

Frst posted in FB: https://www.facebook.com/tsumanenthiran/posts/10158144874476589 


அடிப்படையில் நான் தெளிவினைக் (clarity) கோரும் ஒரு சிந்தனை முறையைப் பின்பற்றுபவன்.

ஒரு செயல் செய்யப்போகிறோம் என்றால்,
அதை என்ன நோக்கத்திற்காகச் செய்யப்போகிறோம்?
அதன் பலன் என்ன?
அந்தப் பலன் தரும் விளைவு நன்மையா? தீமையா?
திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு படியும் (step) தெளிவாகச் சிந்தித்து உறுதிப்படுத்தியிருக்கிறோமா?
அந்த ஒவ்வொரு படியையும் செய்யப்போகிறேன் என்று பொறுப்பேற்று (Responsibility) நடப்பதை உறுதி செய்கிறோமா?
பெறப்படும் தரவுகளை ஒழுங்காகத் தொகுத்து ஆராய்ந்து அதை அர்த்தமுள்ள முடிவுகளைப் பெறுகிறோமா?
இப்படி முறையாகச் சிந்திக்காமல் செயலாற்றுவது ஆற்றைப்பார்த்தவுடன் நீச்சல் தெரியுமா என்று எண்ணாமல் குதிப்பது போன்ற ஆபத்தான செயல்!
கீழேயுள்ள மாதிரி இதை விரிவாகப் பேசுகிறது!



பிரக்ஞை - Consciousness

First posted in FB: https://www.facebook.com/tsumanenthiran/posts/10158154307391589
****************************************************
எனது குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் (Dr. N.P. Śastry) அவர்கள் ஆந்திர பல்கலைக்கழகத்தில் 1988 ம் ஆண்டு ஆற்றிய பிரக்ஞை - Consciousness என்ற உரையின் முதல் பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு! அவர் ஒரு nuclear physicist - இயற்பியல் விஞ்ஞானியும் கூட!
1) Consciousness is the same as Existence – பிரக்ஞை என்பது இருப்பிற்கு சமம்
நிரூபணம்:
பிரக் ஞை என்பது இருப்பைக் குறிக்கிறது, அது சுய இருப்பு என்பதால். இருப்பு பிரக் ஞையைக் குறிக்கிறது; இருப்பானது பிரக்ஞை இல்லாமல் இருக்கின்றது என்றால் அது யாருக்காக இருக்கிறது? அங்கு பார்ப்பதற்கு, பாராட்டுவதற்கு, அறிவதற்கு ஒரு பிரக்ஞை இருக்க வேண்டுமல்லவா? ஆகவே அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளக்கூடிய தளத்தில் இருப்பு என்பது பிரக்ஞையைக் குறிக்கிறது.
ஆகவே பிரக்ஞை என்பது இருப்பினைக் குறிக்கிறது; இருப்பு என்பது பிரக் ஞையைக் குறிக்கிறது. இரண்டும் ஒரே மாதிரியானவை. இரண்டும் ஒன்றே!
ஆகவே மேற்கூறிய நிரூபணத்திலிருந்து

இடம், காலம், பொருள் ஆகிய மூன்று இருப்புகளும் பிரக்ஞையின் இருப்புகள்; அதேபோல் பிரக்ஞையினது கூறுகளுமும் கூட 

அருணகிரி நாதரின் சிவயோக ஞானம்


************************************
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ”ஞானசத்திநிபாதா”
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
பக்தியால் நான் உன்னைப் பலகாலம் இந்த திருப்புகழால் துதித்து, சீவன் முத்தனாக பெருவாழ்வு வாழ்ந்து முக்தி அடைவதற்கு அருள்வாயே!
உத்தமமான குணங்களைக் கொண்ட சற்குண நேயா, இதில் சற்குணம் என்பது ஷட்குணம்; அன்பு, பரிவு, பாசம், கருணை என்ற ஆறுவகை நற்குணங்கள். ரத்னகிரியில் உறைந்த முருகனை அறுகுணத்தை நல்கும் சொரூபமாக அருணகிரிணாதர் பாடுகிறார்.
அடுத்த வரியில் வரும் வித்தகா ஞான சக்தி நிபாதா என்ற வரிகள் முக்கியமானவை! இன்று பலரும் தமக்கு யோக ஞான சித்தி தமது முயற்சியால் வருகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஜடயோகம் செய்பவர்கள் உடலை வளைக்கத்தெரிந்தாலே தாம் யோகிகள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒருவன் யோகத்தில்,ஞானத்தில் சித்தியடைவது அவனில் சக்தி நிபாதம் நடைபெறுவதால். சக்தி நிபாதம் என்றால் சக்தி நன்றாகப் பதிதல் என்று அர்த்தம்! ஒரு சாதகன் தனது முயற்சியால், பயிற்சியால் உடல், மனம் ஆகிய கருவிகளைச் தினமும் சுத்தி செய்துகொள்ள இந்த சுத்தித்த உடல், மனக்கருவிகளில் பரம்பொருளின் சக்தி இறங்கிப் பதிதல் சக்தி நிபாதம் எனப்படும்.
இந்த சக்தி நிபாதம் ஒரு சாதகன் எவ்வளவு சுத்தியாக தனது அந்தகரணங்களை வைத்திருக்கிறானோ அதற்கு ஏற்ற அளவிலேயே நிகழும்.
இதற்கு தேவி காலோத்தர ஆகம உரையில் விளக்கம் தரப்படுகிறது. ஒருவன் சரியையில் நின்று பெறும் சுத்தியால் கால் பங்கும், கிரியையில் நின்று பெறும் சுத்தியால் அரைப்பங்கும், யோகத்தில் நின்று பெறும் சுத்தியால் முக்கால்பங்கும், ஞானத்தால் முழுமை சக்தி நிபாதமும் நிகழும்!
இங்கு முருகனை ஞான சக்தி நிபாதா என்று முருகன் அருளக்கூடிய நிலையைப் பற்றி விளக்குகிறார். முருகன் ஞானம் எனும் முழுமை சக்தி நிபாதத்தினைத் தரக்கூடிய வல்லமை உடையவர் என்பது இதன் பொருள்! இது பெண்பித்தராக அலைந்த அருணகிரி நாதர் எப்படி யோகியாக, ஞானியாக கணத்தில் மாறினார் என்பதற்கான விளக்கம் முருகனின் ஞான சக்தி நிபாதம் என்பதை விளக்கியுள்ளார்.
முருகனின் அருள் யோகத்திலும், ஞானத்திலும் பரிபூரண சக்தி நிபாதத்தினை அருளும்!
ௐ சரஹணபவ ௐ

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...