குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 29, 2019

ரிஷி சிந்தனை - 06


தெய்வ உபாசனையின் அடையாளமாக புறப் பூஜையில் பல சடங்குமுறைகள் வழக்கத்தில் உள்ளன. தீர்த்த யாத்திரை, கோயில் தரிசனம், தோத்திர பாராயணம், சோடச உபசாரம், விரதம், பிரதட்சணம், அபிஷேகம், திருவிழா , இரவு கண்விழித்தல், விரதம் என இந்துமதத்தை சார்ந்த ஒவ்வொரு சமூகமும் தமது வழக்கத்திற்கு ஏற்ற வகையில் கடைப்பிடித்து வருகின்றனர். இவை அடிப்படையில் மனிதர்களுக்கு பண்பையும், நல்ல குணத்தை கூட்டு சமூகமாக வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இதைத்தாண்டி உணர்வு, மனம் என்பவற்றை பயன்படுத்தி சாதனை செய்யும் உயர்மட்ட சாதனைகளும் இருக்கச் செய்கின்றன.

உயர் மட்ட சாதனையில் இரண்டு முக்கிய சாதனைகள் 1) ஜபம் 2) தியானம். இந்திய பாரம்பரியத்தில் மட்டும் இல்லாமல் உலகின் எந்த ஒரு ஆன்மீக பயிற்சிகளிலும் இந்த இரண்டு அமிசங்கள் இல்லாமல் இருக்க முடியாது. மற்ற எந்தப் பயிற்சிகளும் இந்த இரண்டினது ஏதோ ஒரு அங்கமாகத்தான் இருக்க முடியும்.

ஜபத்தின் மூலமாகத்தான் இறை சக்தியை எம்முள் ஈர்க்க முடியும். ரத்தினம் இல்லாத நாகம் தனது சக்தியை இழந்து விரக்தி அடைவதுபோல் நாம் தெய்வ சக்தியுடனான தொடர்பினை இழந்து அறியாமையிலும் பயத்திலும் காலத்தை வீணாக்குகிறோம். இறை ஞானம் ஜெபத்தின் மூலம் ஒருவனில் செயற்படும். தனது பெயரைச் சொல்வதால் மகிழ்ந்து இறைவன் நன்மை செய்கிறான் என்று நாம் அறியாமையில் எண்ணக்கூடாது. அந்தளவிற்கு கீழ்த்தரமானவன் அல்ல இறைவன். அதே வேளை எம்மைப் படைத்துவிட்டதால் எல்லாப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் வேலைக்காரனும் அல்ல. எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் அந்தப்பரம்பொருளின் ஒளி எல்லாவற்றிலும் உறைந்திருந்தாலும் மனதின் சலனத்தால் தன்னை அறியமுடியாமல் இருக்கின்றது. இந்த சலனத்தை அடக்கி இறையின் ஒளியை அனுபவத்தில் அடையும் செயல்தான் ஜபசாதனை.

இறைவன் மனிதனிடமிருந்து ஒழுங்கு, மற்றும் தனக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைத்தான் எதிர்பார்க்கிறான். ஓருவர் ஜெப சாதனையை செய்து கொண்டு தனது கடமையை, வாழ்க்கை ஒழுங்கை கடைப்பிடிக்காமல் எந்தப்பலனும் பெறமுடியாது.

மின்சக்தியை சரியான ஒழுங்குடன் பயன்படுத்தினால் ஒளி, வெப்பம், காற்று என பலன்களைப்பெறலாம். நமக்கு ஒளிதரும் மின்சாரம்தானே என்று கைகளை வைத்து விளையாடப்பார்த்தால் மரணத்தையே தரும். இதைப்போல் இறையும் ஓர் உயர்ந்த சக்தி, இதை ஒழுங்குடன் சாதனை செய்பவன் வாழ்க்கையில் எல்லாவித பேறுகளும் பெற்று இன்பமயமான வாழ்க்கை பெறுவான்.
இப்படி ஒளிமயமான புத்தியை பெறுவதற்கு வழிகாட்டுவதே காயத்ரி மகா மந்திரமாகும். இதை குரு மந்திரம் என்று சொல்லுவது சாலப்பொருந்து. அக ஞானத்தை சீராக்குவதில் காயத்ரி ஜெபம் பெரும் உதவி செய்யும்.
(தொடரும்…..)


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...