குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 24, 2019

வார்த்தைகளும் உணர்ச்சிகளும்

வார்த்தைகள் உணர்ச்சிகளை மறைக்கும் திரைகள்! 
பெரும்பாலும் கற்றறிந்தவர்கள் எல்லோரும் இப்படித் தான் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.
மனிதனின் உணர்ச்சி ஒரு போது பொய் சொல்லுவதில்லை! அது தான் உண்மை மனிதன்!
நான் உங்களை மதிக்கிறேன் என்ற வார்த்தைக்கும் உணர்ச்சிக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது! உணர்ச்சிகளில் உண்மை இருந்தால் அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவையில்லை!
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற வார்த்தைகளை விட உணர்ச்சி உண்மையாக இருந்தால் அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவையற்றவை! 
உண்மையில் வார்த்தைகள் எமது உணர்ச்சிகள் எதிர்ப்புறமாக இருக்கும் போது அந்த உணர்ச்சிகளைப் புனிதப்படுத்த பயன்படுத்தப்படுபவை! எவராவது அடிக்கடி உங்களை மதிக்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தால் ஆழத்தில் அவர் உங்களை வெறுத்துக் கொண்டிருக்கலாம்! உன்னைக் காதலிக்கிறேன் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தால் ஆழத்தில் அந்தக் காதலில் அவருக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்! 
ஒருவரைப் பற்றி அகத்தில் தவறான எண்ணங்களை விருத்தி செய்து கொண்டு வெளி வேடத்தில் அவரது பதவிக்காகவும், நமக்கு மேலே இருக்கிறார்கள் என்ற பயத்திற்காகவும் மரியாதை செய்தால் அது ஒரு தற்காலிகமாக மேக மூட்டம் போல் குறித்த நபரை நம்ப வைக்கும், ஆனால் நீண்ட நாள் நிலைக்காது! 
ஏனெனில் நாம் மனதின் ஆழத்தில் உருவாக்கும் எண்ணங்கள் பலமானவை, அவை நாம் போலியாக மரியாதை செய்யும் நபரின் ஆழ் மனத்திற்கு எமது மனத்தை படம் போட்டுக் காட்டிக் கொண்டு தான் இருக்கும்! 
உங்கள் மேற்பார்வையாளரோ, உறவுகள் எதுவாக இருந்தாலும் போலி மரியாதையை வார்த்தைகளில் காட்டாமல் உள் மன சிந்தனையில் தெளிவாக இருங்கள். அவர்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தால் முதலில் அவர்களுடன் தைரியமாக உரையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி புரிந்துணர்வினைக் கொண்டு வர முயற்சியுங்கள். அப்படி செய்ய முடியாத அளவிற்கு அவர்கள் ஆணவமயமானவர்கள் என்றால் மரியாதையுடன் தைரியமாக விலகி விடுங்கள்! இப்படி முடிவெடுக்கத் தெரியாத நபர்களே தங்கள் வாழ்க்கையில் எப்போது துன்பத்தில் இருப்பவர்கள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...