குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 26, 2019

ஆவியுலகமும் மறுபிறவிகளும்

பல வருடங்களுக்கு முன்னர் முற்பிறவி பற்றிய ஆர்வம் கொண்டிருந்த போது படித்த நூல்களில் ஒன்று வழக்கறிஞர் தங்கவேல் எழுதிய ஆவியுலகத் தொடர்புகளும் ஆறுமுகக் கடவுளும் என்ற நூல், இன்னொரு நூலும் அவர் எழுதியிருக்கிறார். 

இதில் அவர் ஆவியுலகின் தொடர்பு மூலம் தன்னை நாடி வருபவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு, அல்லது பிரச்சனைக்கான முற்பிறவி காரணம் என்ன என்பதை விளக்குவார். அதில் அனேக காரணங்கள் இப் பிறவிக்கான காரணம் முற் பிறவியில் அவர்கள் Extreme ஆக வெறுத்து ஒதுக்கிய விஷயத்தை இப் பிறவியில் அடைந்திருப்பதாக இருக்கும்.

இஸ்லாமியர்களை தனது கோயில் திருவிழாவிற்கு வரக் கூடாது என்று துன்புறுத்திய இந்து ஒருவன் அடுத்தப் பிறவியில் இஸ்லாமியனாகப் பிறந்து ஒவ்வொரு முறை கோயிலைக் கடக்கும் போதும் கோயிலிற்குள் போக வேண்டும் மன ஏக்கம் உடையவனாக,  

தனது உடல் அழகால் தனது மாமன் மகளை வெறுத்து ஒதுக்கியவன் அடுத்த பிறவில் அழகற்றவனாக என்று எல்லா சம்பவங்களினதும் செய்தி எதை extreme ஆக செய்தார்களோ அதைச் சமப்படுத்துவது தான் இந்தப்பிறவி என்ற வகையில் இருக்கும். 

நண்பர் Arvind Swaminathan ஆவியுலகம் பற்றி ஆராய்பவர். எழுத்தாளர். அடிக்கடி Dr. Walter Semkiw, பற்றிக் குறிப்பிடுவார். நேற்று டாக்டர் வால்டரின் தளத்தைப் பார்த்த போது பல பிரபலங்களின் மறுபிறவி பற்றி ஆய்வு அறிக்கைகள் காணக்கிடைத்தது. 

அதில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் முற்பிறப்பு மிக ஆச்சரியமானதும், எவராலும் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாதது ஆக இருக்கும். முற் பிறவியில் அவர் ஒரு மிகப்பெரிய செய்யது அகமட் கான் என்ற முஸ்லீம் அறிஞராக இருந்திருக்கிறார் என்பது. முழுவிபரமும் இங்கே பாருங்கள். 

http://www.iisis.net/index.php...

எமது பிறப்பு என்பது நாம் எதை எதிர்த்தோமோ, வெறுத்தோமோ அதை அனுபவிப்பதாக அமைகிறது என்பது ஆச்சரியமான கர்ம விதி!

கடவுளை எதிர்ப்பவர்கள் பக்தர்களாக மாறலாம்!

கடவுள் கடவுள் என்று பைத்தியக் காரத்தனமாக பக்தி செலுத்தியவர்கள் அதி நாத்திகராக மாறலாம்!

இது பற்றி ஓஷோவின் சிஷ்யை ஒருத்தியின் அனுபவமும் பொருந்தி வருகிறது. அவர் ஒரு முறை முற் பிறவியை அறியும் தியானம் பற்றி உரையாடிய போது அதைக் கற்றுத் தரும்படி அவரது பேராசிரியையான மாணவி ஒருத்தி கேட்க ஓஷோ அதனால் வீண் விளைவுகள் ஏற்படும் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஆனால் அவர் வற்புறுத்தி கேட்டு அந்த தியானத்தைப் பயிற்சித்து தனது முற் பிறவியை அறிந்த பின்னர் கதி கலங்கிப் போனார். அவர் இந்தப் பிறவியில் மிக ஒழுக்கமான, கல்வியறிவு பெற்ற ஆன்மீக வாழ்வு வாழும் பெண்மணி, முற் பிறவியில் ஒரு விலைமாதுவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப் பிறவி அதற்கு நேர் எதிரான extreme ஆக இருந்திருக்கிறது. 

ஆக, அதி விருப்பாலும், அதி வெறுப்பாலும் நாம் பிறவிச் சுழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...