குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 27, 2019

ரிஷி சிந்தனை - 04



மனிதனின் துன்பங்களுக்கு காரணமாக இருப்பது மூன்று மூலகாரணங்கள். முதலாவது: பிரச்சனையை தீர்க்கும் திறன் இன்மை, இரண்டாவது: எம்மில் நாமே உண்டாக்கிக் கொண்ட குறைகள், மூன்றாவது: அவ்வப்போது நாம் செய்யும் தவறுகள். 

இவற்றை தீர்ப்பதற்குரிய வழி எம்முடைய ஆன்ம பலத்தை வளர்த்தல். ஆன்ம பலத்தை வளர்ப்பதற்கான எளிய வழி காயத்ரி சாதனை. காயத்ரி சாதனையால் ஆன்ம பலம் வளரும்போது எமது குறைகள், உணவுப்பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறைகள், மனப்பாங்கு, மனித இயல்புகள் எல்லாமே மாறி விடுகின்றன. இப்படி ஒருவனுடைய ஆளுமை காயத்ரி சாதனையால் முழுமையா மாறிவிடுவதால் முன்னர் ஏற்பட்ட துன்பங்கள் அவனில் செயற்படமுடியாமல் வேரோடு அழிந்து விடுகின்றது. வாழ்க்கை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறி விடுகிறது.

பல சமயங்களில் நாம் நமது சக்திக்கு மேலாக ஆசைகளை வளர்த்துக்கொண்டு அவதிப்படுகிறோம். காயத்ரி சாதனையால் மனத்தூய்மை அடைந்தவன் இந்த ஆசைகளையெல்லாம் கடந்து விடுகிறான். அவன் தனது ஆசைகளை நிறைவேற்ற, தவறுகள் செய்வதில்லை. ஆசை நிறைவேறவில்லை என ஏங்குவதும் இல்லை. விதியின் விளைவால் தவிர்க்க முடியாத சில துன்பங்கள் வரும்போது சாதாரண மக்கள் அழுது புலம்புகிறார்கள். காயத்ரி சாதனையால் ஆன்ம பலம்பெற்றவன் இந்த இயற்கை விளைவுகளை அமைதியிழக்காமல் தைரியமாக சந்திக்கிறான். அதனால் மரணம் முதலான தவிர்க்க முடியாத துன்பங்கள் கூட அவனைப் பாதிப்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் தமது மன விருப்பத்தை பூர்த்திச் செய்யவும் கூட விஷேடமாக லகு அனுஷ்டானம், அனுஷ்டானம் போன்ற  விஷேட காயத்ரி சாதனைகள் செய்யப்படுகிறது. அதில் ஆச்சரியப்படும் படி வெற்றி கிடைக்கிறது. வேதமாதாவின் தெய்வீக ஒளியால் நம்பிக்கை வளர்கிறது. அச்சம் நீங்குகிறது. கடின வேலையும் எளிதாக மாறிவிடுகிறது. நெருக்கடி விலகி தேவை பூர்த்தியாகிறது. மனம் அமைதியுறுகிறது.

காயத்ரி சாதனை ஆன்ம பலத்தை வளர்க்க கூடிய மிக உயர்ந்த ஆன்மீகப் பயிற்சி.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...