குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 10, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - 07

இனி நான்காவது பாடல்

திகழத் திகழும் அடியும் முடியும்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்

அகழப் பறந்துங் காண மாட்டா

அம்மான் இம்மா நிலமுழுதும்

நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்

டாவா என்ற நீர்மை யெல்லாம்

புகழப் பெறுவ தென்று கொல்லோ

என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

இந்தப் பாடலில் பொதுப் பொருள் அயனும் மாலும் அடியும் முடியும் காணாத பேரொளி வடிவான சிவம் என்று தொடங்குகிறது. 

அடியும் முடியும் காணும் கதை எல்லோருக்கும் தெரிந்தது, ஆனால் இந்தக் கதையில் ஒரு மறை பொருள் இருக்கிறது. 

மனிதனின் ஆன்மா அல்லது உயிர் என்ற இறையின் கூறு மனம் என்ற கவசத்தால் சூழ்ந்து இந்த உடல் இயக்கத்தில் ஈடுபடுகிறது. 

இந்த மனம் இரண்டு பண்புகள் உடையது.  தனது கற்பனா சக்தியால் படைப்புத் திறன் உடையதாக இருக்கிறது. இதுவே பிரம்மாவின் ஆற்றல். 

அதேவேளை அறிவு செயற்பட்டு உடலையும் உயிரையும் காக்கும் சக்தியையும் கொண்டிருக்கிறது. இதுவே விஷ்ணுவுன் ஆற்றல். 

ஆனால் இந்த இரண்டு பண்புகளும் உயர்ந்த நோக்கத்திற்கு சிவமாகிய விழிப்புணர்வினை அடைவதற்கு பயன்படாமல் போகும் போது அது உயிரை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். அதேவேளை இந்த இரண்டாலும் மனிதனை தன்னை மாயாசக்திக்குள் உட்படுத்திக் கொள்கிறனும் கூட, 

இந்த இரண்டின் பிடியில் இருந்து மனம் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே சிவத்தை அடையமுடியும். ஆனால் இந்த இரண்டு ஆற்றலும் ஒருவனை எப்போதும் தான் இறைவனை அறிந்து விட்டோம் என்று ஒரு மமதையில் வைத்திருக்கும். இப்படி படைப்பாற்றலினதும், காக்கும் அறிவு ஆற்றலினதும் மமதையில் சிக்காமல் விழிப்புணர்வு பெறுவதே அடி முடி தேடிய கதை! 

இந்த இரண்டு ஆற்றலும் மனிதனின் கீழ்சக்கரங்கள் என்று சொல்லப்படும் சுவாதிஷ்டானம், மணிப்பூரகத்தில் செயற்படுகின்றது.

மாணிக்கவாசகரின் புணர்ச்சிப்பத்தில் அனேகமாக விஷ்ணுவும், பிரம்மனும் பற்றியே கூறுகிறார். யோகத்தில் இந்த இரண்டு சக்கரங்களின் பிடியில் இருந்து வெளி வருவதே முதல் சித்தி!

இந்தப் பாடலில் மாணிக்க வாசகர் கற்பனை எனும் படைப்புத் திறனிடமும், அறிவு எனும் காக்கும் சக்தியினதும் மாயையில் விழுந்து ஆன்மா விழிப்புணர்வினை இழந்து விடக் கூடாது என்பதை மறைப் பொருளில் பாடியுள்ளார். 

இன்று பலர் இறைவனைப் பற்றி பல நூற்களில் கூறப்பட்டதை கூறுவதும், அறிவால் ஆராய்ந்து கூறுவது இத்தகைய ஒரு மாயை தான்! இவை எல்லாம் தாண்டி யோகத்தின் மூலம் பொல்லா மணி என்ற சிவ ஜோதியில் கலப்பதுவே உண்மையான இறை நிலை அடைதல் என்பதையே இந்தப் பாடல் கூறுகிறது. 

அறிவாலும், கற்பனையாலும் காண முடியாதவன் என்பதே மாலும் அயனும் காண முடியாதவன் என்பதன் சூக்ஷ்ம பொருள். 

இப்படி அறிவாலும், கற்பனையாலும் இறைவனை அறிய முயலாமல் அனுபவமாக பொல்லா மணியை புருவமத்தியில் யோகத்தால் அறிந்து புணர வேண்டும் என்பதே இந்தப் பாடலில் பொருள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...