குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 31, 2017

நவீன வானியலும் ஜோதிடமும்


நவீன வானியலில் ஒளியை தானாக வெளியிடும் ஆற்றல் உள்ளது நட்சத்திரம்,உள்வாங்குவது கிரகம் ஆனால் ஜோதிடத்தில் ஒளியை வெளியிடும் நட்சத்திரமான சூரியனை கிரகம் என்றே கூறப்பட்டுள்ளது மற்றும் துணைக்கோளாகிய சந்திரனையும் கிரகம் என்று கூறப்பட்டுள்ளது.

நண்பர் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் அவர்களுடனான உரையாடலில் பகிர்ந்த எமது கருத்து.

எப்போதும் வரைவிலக்கணம் என்பது அந்த சொல்லை பாவிக்கும் அறிஞர்களின் குழுவைச் சார்ந்தது, ஜோதிடத்தில் நட்சத்திரம் உண்மையில் நக்ஷத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் இருக்கும் இடம் எனப்பொருள்படும். இந்த இடத்தில் இருந்து சக்தியை கௌவ்வும் (ஈர்க்கும்) வானியல் பொருட்கள் கிரகம் எனப்படும். ஜோதிடம் என்பது மனிதன் வாழும் பூமியை மையமாக கோண்ட கணிதம். ஆகவே பூமிக்கும் ஆகாயத்தில் இருக்கும் சக்தி மையங்களான நக்ஷத்திரங்களில் இருந்து சக்தியை கௌவ்வி வழங்கும் பொருட்கள் எல்லாம் கிரகங்கள். ஆகவே எமது வானியல் அறிவியல் விளக்கப்படி சூரியன், சந்திரன், சூரியனும் சந்திரமும் தமது ஓட்டப்பாதையில் வெட்டும் புள்ளிகளன ராகு கேது இவையெல்லாம் பூமிக்கு சக்தியை வழங்குவதால் கிரகங்கள் என எமது ரிஷிகளால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது. எனவே எம்மைப் பொறுத்த வரையில் நவீன வானியலின் வரைவிலக்கணங்களையும் எமது ரிஷிகளின் வானியல் விளக்கங்களையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.

சித்தர்களின் யோக இரசவாதம்

இரும்பைப் பொன்னாக்குவது, திரவமாக ஓடும் இரசத்தை கட்டுவது இரசவாதம் எனப்படுகிறது. 

எனினும் உண்மை இரசவாதம் என்பது மனிதன் தனது அந்தக்கரணம் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்க்காரம் என்ற நான்கு சூக்ஷ்ம தேக புலன் களிலும் இருக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்ற தீய உணர்வினை அன்பு, கருணை, பக்தி போன்ற தூய தெய்வ உணர்வாக மாற்றி, பின்னர் ஸ்தூல உடலில் வாதம், பித்தம், கபம் என தோஷ்மாக பிரகோபித்து உடலில் நோயை உண்டாக்கி தாதுக்களை க்ஷீணிக்கும் குற்றங்களை நீக்கி வலுப்படுத்தி தெய்வ சக்தியை ஈர்த்து அழியும் இந்த ஸ்தூல உடலின் துணையுடன் அழியா ஒளி சரீரம் பெறும் வித்தையே உண்மையான இரசவாதம். 

தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுதல் போல் அழியும் ஸ்தூல சரீரத்தில் இருந்து அழியா ஒளிசரீரமான மகாகாரண சரீரம் பெறுதல் இரசவாதம் என சித்தர்களின் யோகசாதனையில் கூறப்படும்.

மனிதனின் உடலில் இருந்து பிராணன் வீணாகும் சந்தர்ப்பங்கள்

மனிதனின் உடலில் இருந்து பிராணன் வீணாகும் சந்தர்ப்பங்கள்
1) இனப்பெருக்க உறுப்புகளின் மூலம்
2) மனதில் தீய உணர்ச்சிகளான காமம், குரோதம், பயம், பொறாமை போன்றவற்றை கொண்டிருத்தல்.
3) மனதை தொடர்ச்சியாக உலக விடயங்களில் செலுத்துதல்.
4) உடலின் சப்த தாதுக்களை வளர்க்கும் உணவினை கொள்ளாதிருத்தல்.
5) ஆழமான, சீரான மூச்சு இழுக்காதிருத்தல்,

ஆகிய ஐந்தும் பிராண செலவிற்கான காரணங்கள். இவற்றை கட்டுப்படுத்தத் தெரிந்தவன் சேமிக்கிறான், சேமிக்கத்தெரிந்தவன் யோகத்தில் முதலீடு செய்து அறுவடை செய்யலாம்.

சப்த தாதுக்களும் சுக்கிலமும்



சப்த தாதுக்கள் என்பவை ரச, ரக்த, மாமிசம், மேதா, அஸ்தி, சுக்கிலம் என்ற ஏழாகும். இந்த ஏழுமே சித்த ஆயுர்வேத தத்துவத்தின் படி உடலில் அடிப்படை கட்டமைப்பு அலகாகும். 

சித்த ஆயுர்வேத தத்துவங்களின் படி நாம் உண்ணும் உணவு பிராணனின் உதவியுடன் முதலில் ரச தாது வாகிறது, இது உணவு உடலுக்குள் அகத்துறிஞ்சப்படும் நிலை, இப்படி உறிஞ்சப்பட்டு உருவாகிய தாது இரத்தமாக மாறுகிறது, பின் இரத்தம் சுத்தியாக வலிமையாக இருக்க அது மாமிசம் எனும் சதைத்தொகுதியாக மாறுகிற, இப்படி வலிமைப்படுத்தப்பட்ட சதைத்தொகுதி மேதா எனும் ஹர்மோன் தொகுதியைனை வலுப்படுத்துகீறது, அதன் பின்னர் அது எலும்பாக மாறி இறுதியாக இவை எல்லாம் சரிசெய்யப்பட்ட பின்னர் மிகுதியே சுக்கிலம் எனும் விந்தாக மாறுகிறது. சுக்கிலம் என்பது உடல் பரிபூரண ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மேற்குறித்த ஒழுங்கினூடாக உணவும் பிராணனும் பிரயாணித்து சாரமாக இறுதியில் உருவாகும். இதனாலேயே ஆணிற்கு உடல் பரிபூரண வளர்ச்சி ஏற்படும் வரை, பருவம் அடைதல் என நாம் கூறும் வயது வரும் வரை சுக்கில சுரப்பு ஏற்படுவ்தில்லை. பால்ய வயதில் உடலின் மற்ற ஆறு தாதுக்களை பூர்த்தி செய்வதிலேயே உடலின் ஆற்றல் செயற்படுத்தப்படுகிறது. இது பூர்த்தியாகும் போது அடுத்த உயிரை உருவாக்கும் ஆற்றல் மனித உடலுக்கு தரப்படுகிறது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...