குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 29, 2015

காயத்ரி மந்திரமும் நட்சத்திர மண்டல சக்திகளும்



காயத்ரி மந்திரத்தில் மூன்று பதங்கள் காணப்படுகின்றன. முதலாவது பதம் "தத் ஸவிதுர்வரேணியம்" - மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை ஈர்பதாகவும்,

"பர்கோ தேவஸ்ய தீமஹி" பதம் சிம்மம், கன்னி, துலாம், விருட்சிக நட்சத்திர மண்டலங்களின் சக்தியை ஏற்பதாகவும்,

"தியோ யோநஹ ப்ரசோதயாத்" தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளின்  நட்சத்திர  மண்டல சக்திகளை ஈர்ப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆக காயத்ரி மந்திரம் தொடர்ச்சியாக சாதனை செய்துவர பூமிக்கு சக்தி வழங்கும் நட்சத்திர மண்டலங்களின் சக்தி மனிதனின் சூக்ஷ்ம மண்டலங்களில் நிறைந்து  மனிதனை சக்தியுள்ளவனாக்கும். 

Thursday, January 22, 2015

இந்த வலைத்தளத்தினை தொடர்ச்சியாக வாசிக்கும் நண்பர்களுக்கு!

அன்பின் நண்பர்களே,

இந்த வலைத்தளத்தினை வாசிக்கும் நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். 

இதில் உள்ள விடயங்கள்  ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் அதேவேளை நான் கற்ற விடயங்களை மீட்டு ஒழுங்கு படுத்தும் முயற்சியாக செய்து வருகிறேன். 

மேலும் ஆன்மீக உபாசனை மூலம் தமது வாழ்க்கையினை முன்னேற்ற விரும்புபவர்கலுக்காக ஸ்ரீ யந்திர சாதனையும், காயத்ரி சித்த சாதனையும் கொடுத்துள்ளோம். 

இவை பற்றி உங்கள் கருத்துக்களை  தெரிவியுங்கள்!

மேலும் எவ்வகையாக விடயங்களை சேர்த்துக்கொள்ளலாம், விரிவாக எழுதவேண்டும் என்பதனையும் தெரிவியுங்கள். 

இந்த பதிவினை பார்க்கும் நண்பர்கள் மறக்காமல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்!

அன்புடன் 

சுமனன் 

Friday, January 16, 2015

காயத்ரி பிராண சாதனை

மந்திரத்தினை வெறுமனே இயந்திர கதியில் ஜெபிப்பதால் பெரிதாக பயன் எதுவும் கிட்டுவதில்லை. மந்திர சாதனையின் தேவை மனதை ஒருமைப்படுத்த என்று கூறப்பட்டாலும் அடிப்படியில் மந்திர ஜெபம் பிராண சாதனை. அதாவது மந்திரம் சித்தியான நிலையில் மந்திர ஜெபத்தின் போது ஒருவரின் காரண சரீரம் அதீத பிரபஞ்ச பிராணனை ஈர்க்கும். இதனை மந்திரத்தினை மூச்சில் கலப்பதன் மூலம் எளிதாக சாதிக்கலாம்.

இத்தகைய முறைகள் ஒழுங்காக தினசரி காயத்ரி ஜெபம், தியானம், சாதனை செய்யும் மாணவர்களுக்கு குருமாரால் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு சித்தர்களின் இரகசிய சாதனை முறையாகும்.


Thursday, January 15, 2015

காயத்ரி தீக்ஷை

காயத்ரி மந்திரம் ஜெபிப்பதற்கு தீக்ஷை அவசியமா எனப் பலர் கேட்டு வருகிறார்கள். குருவை அண்டி சேவை செய்து தீக்ஷா பெறுவது என்பது இந்தக்காலத்தில் கடினமாக இருப்பதால் சாதகரின் நன்மை கருதி கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மிக உயர்ந்த காயத்ரி சாதகரின் குரலில் காயத்ரி மந்திரத்தினை இணைத்துள்ளோம். இந்த காயத்ரி மந்திர உச்சரிப்பை கேட்பதே ஒருவர் தீக்ஷை பெறுவதற்கு  சமனானது! பண்டிட், ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் இருபத்தி நான்கு காயத்ரி புரச்சரணம் முடித்த தற்காலத்திய ரிஷி!  ஒரு புரச்சரணம் என்பது 24 இலட்ச ஜெபம் கொண்டது. இந்த அரிய  ஓடியோவினை உங்கள் மோபைலில்  தரவிறக்கி கொண்டு தினசரி ஐந்து நிமிடங்கள் கேட்டு வந்தீர்களே ஆனால் உங்களுக்கு  உயர்ந்த காயத்ரி சாதனை செய்யும் பக்குவம் தானாக வரும்! 

அத்துடன் நாம் தந்துள்ள குருநாமங்களை  விடாமல் உச்சரித்து வரவும். 

https://sites.google.com/site/mantrajapafiles/



Wednesday, January 07, 2015

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை


திருமணம் என்பது இரு ஆன்மாக்களின் இணைவு, திருமணத்தின் மூலம் இருவேறு விருப்பம், உணர்வு கொண்ட இருவர் தமது சொந்த நோக்கங்களை தியாகம் செய்து புதிய உறுதிமொழியுடன் ஒருவருக்கு ஒருவர் இணையாக தம்மை உருவாக்கி கொண்டு இன்பமுடன் வாழும் வழி! ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த உலகில் தனித்திறமைகளுடன், விருப்பு வெறுப்புகளுடன் அதே வேலை சில குறைகளுடன் பிறந்திருக்கின்றனர். அவர்கள் திருமணம் எனும் இணைவின் மூலம் தமது திறமைகளை இணைத்து, குறைகளை ஒருவர் ஆற்றலில் இருந்து மற்றொருவர் மூலம் நிவர்த்தித்து இன்பமாக வாழும் செயல் முறையே திருமணம். இதன் மூலம் குறித்த ஆணும், பெண்ணும் முழுமையான ஆளுமையினை பெறுகின்றனர். இந்தக் காரணத்திற்காக மனித குலத்திற்கு திருமணம் என்ற ஒரு பொறிமுறை தேவையாக இருக்கிறது. இதன் மூலம் இரண்டு ஆன்மாக்களின் மனம், உடல், உணர்வு இணைந்து தமது வாழ்விலு, தம்மை சூழ உள்ள குடும்ப, சமூகத்திலும் மன, பௌதீக, ஆன்மீக இன்பங்களை உருவாக்குவதே திருமணத்தின் இலக்கு!

இத்தகைய திருமண வாழ்க்கையிற்கு கணவனும், மனைவியும் தம்முடைய எண்ணங்கள், செய்கைகள், நோக்கங்களில் சிறந்த தெளிவுகளை கொண்டிருக்க வேண்டும். இந்த தெளிவிற்கு மனதிற்கு கொடுக்க வேண்டிய உணவினை கீழே தந்திருக்கிறோம்,

திருமணத்தில் கணவனின் உறுதி மொழி!
  1. இக்கணம் முதல் எனது தர்மபத்தினியை எனதொரு பாகமாக, எனது மனதையும் உணர்வையும் மனைவியின் மனம், உணர்வுடன் இணைத்து புதியதொரு உயிர்ப்புள்ள ஆன்மாவாக மாறுகிறேன்! எனது சொந்த உடலை பாதுகாப்பது போல் எனது மனைவியினை பாதுகாப்பேன்!
  2. மனமகிழ்ச்சியுடன் குடும்பத்தின் நிதி முகாமைத்துவத்துவ பொறுப்பை எனது மனைவியிடன் ஒப்படைத்து, குடும்பத்தின் எந்த ஒரு முக்கியமான  முடிவிலும் அவரது அபிப்பிராயத்தினை மதித்து நடப்பேன் என உறுதி கூறிகிறேன்!
  3. எக்காலத்திலும் மனைவிக்கு எதிராக வெறுப்பையோ, எதிர்ப்பையோ எனது மனதில் உண்டாக்க மாட்டேன், அவளது தோற்றம் சார்ந்து, உடல் நலம், அழகு, சுபாவம், நோய், அறியாமல் செய்த தவறு தொடர்பில் அதிருப்தியை தெரிவிக்க மாட்டேன்! எப்போது அன்புடன் பாசத்துடன் நல்லுறவுடன் அவளது குறைகளில் இருந்து மீண்டு வர உதவி செய்வேன்!
  4. எனது மனைவிக்கு மிக நெருங்கிய நண்பனாக எப்போதும் இருப்பேன்! எவ்வளவு அதிகமாக நேசிக்கலாமோ அவ்வளது அதிகம் நேசிப்பேன்! இந்த உறுதியை வார்த்தையிலும் ஆத்மார்த்தமாகவும் நடைமுறைப்படுத்துவேன்!
  5. எனது மனைவி எப்படி நடக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ அப்படி நானும் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். மனைவியை குடும்பத்தை பாதிக்கும் எந்த தவறான ஒழுக்கத்திலும் நான் ஈடுபடமாட்டேன்.
  6. குடும்ப முடிவுகளில் எனது மனைவியின் கருத்துக்களை முதன்மையாக  நடப்பேன், எனது மனைவியுடன் கலந்து ஆலோசிக்கும் குடும்ப நிதி திட்டத்தின் மூலம் எனது குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை உருவாக்குவேன்!
  7. எனது வலிமையினையும், செல்வத்தையும் கொண்டும் இன்பமாகவும், அமைதியாகவும், ஆனந்தமாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும் எனது மனைவி வாழ்வதற்கு வழி ஏற்படுத்துவேன்!
  8. எனது சொந்த நடத்தை, மனப்பாங்குகளுடன்  மனைவியின் பிரச்சனைகள், தவறுகளை அணுகாமல் அவசரப்படாமல், நிதானத்துடன் அமைதியாக அணுகி தீர்வு காண்பேன். எப்போதும் எனது மனைவியை பிறர் முன்னிலையில் அவமதிக்கவோ, வெறுப்பு காட்டவோ, குற்றம் சொல்லவோமாட்டேன்.
  9. எனது மனைவி ஏதாவது ஒரு காரணத்தினால் தனது கடமைகளில் இருந்து விலகி, உறுதியற்று  எனது விருப்பத்திற்குமாறாகவோ நடக்கும்போதும் நான் ஒருபோதும் எனது பொறுப்புகளில் இருந்து விலகாமல் எனது மனைவியிற்கு தரக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை தருவேன்!
  10. மனைவி பூவுலகில் என்னை கவனிக்கும் இறைவனின் சக்தி வடிவம். எனது மனைவியுடன் பேசும்போது எப்போதும் இனிமையாகவும், அன்புடனும் பேசுவேன். எனது நடத்தைகள் கருணை, அன்புடன் கூடியதாக இருக்கும், எப்போதும் எனது உறவு அவளுடன் அதிக நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கும்!  


திருமணத்தில் மனைவியின் உறுதிமொழி
  1. கணவனின் வாழ்க்கைமுறையுடன் எனது வாழ்க்கையினை ஒன்றாக இணைக்கிறேன், மனித குலத்தின் புதிய உயிரை உருவாக்கும் தாய்மை ஆற்றலுடைய நான் கணவரின் சரிபாதியாக நான் விளங்குவேன்.
  2. எனது கணவரின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அவரை நாடி வருபவர்கள் அனைவரையும் அன்புடன் ஆதரிபேன். அவர்களுடன் இனிமையாகவும் திறந்த மனதுடனும் நடந்து கொள்வேன்!
  3. எப்போதும் சோம்பலுடன் இருக்கமாட்டேன், உற்சாகமாய் குடும்ப காரியங்களில் ஈடுபடுவேன். இந்தவகையில் எனது கணவரின் வேளைகளில் ஒத்துழைப்புடன் நடந்து அவரது முன்னேற்றத்திலும் குடும்ப முன்னேற்றத்திலும் பங்களிப்பேன்.
  4. எனது கணவருக்கு நம்பிக்கையானவளாக எப்போதும் இருப்பேன். மரியாதையுடன் எப்போதும் கணவருக்கு ஆதரவாக இருப்பேன். எப்போதும் கணவருடன் ஆணவமாக நடந்து கொள்ளமாட்டேன். எந்த விடயங்களிலும் அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அமைதியுடன் செவிமடுப்பேன். இதை எனது வார்த்தையிலும், ஆத்மார்த்தமாகவும் கடைப்பிடிப்பேன்.
  5. எனது பண்புகளை தன்னலமற்றதாகவும், தூய்மையானதாகவும், அமைதியானதாகவும், இனிமையானதாகவும் வளர்த்துக்கொள்வேன். தீய குணங்களான பொறாமை, ஒருவரை துன்பப்படும்படி பேசுதல், குறைகூறுதல் போன்றவை என்னும் வளர ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இந்த வகையில் நான் எப்போதும் இன்பமுடையவளாக இருப்பேன்!
  6. குடும்ப செலவுகளை எப்போதும் வரவினை விட குறைவானதாக வைத்துக்கொள்வேன். ஊதாரித்தன செலவுகளை தவிர்த்துக்கொள்வேன். கணவரது வருமானம் குறையும் நேரங்களில், உடலளவில் ஆரோக்கிய குறைவு ஏற்படுப்போதும் இந்த சேமிப்பினை கொண்டு குடும்ப வாழ்க்கை பாதிக்காமல் பாதுக்காப்பேன்.
  7. எனது கணவரை கடவுளாக மதிப்பேன். எனது வாழ்நாள் துணையாக இருப்பவர், அவரை மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் வைத்திருப்பதற்கு என்னால் இயன்ற அளவு உதவியாக இருப்பேன். எனது கணவரை ஒருபோதும் பிறர் முன்னிலையில் வெறுக்கவோ, அவமானப்படுத்தவோ மாட்டேன்.
  8. எனது கணவரின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களை எப்போது அன்புடன் நடத்துவேன். அவர்கள் அனைவரும் எனது அன்புக்கும் பாத்திரமானவர்கள்.
  9. வாழ்வில் எல்லாத்தருணங்களிலும் குடும்பத்திற்கும், கணவருக்குமான எனது கடமைகளில் எதுவித குறைவும் இன்று நடப்பேன் என உறுதி கூறுகிறேன்.  

Thursday, January 01, 2015

சித்தர்களின் வைகுண்ட ஏகாதசி விளக்கம்

 இன்று வைகுண்ட ஏகாதசி! 




ஏகாதசி என்பது தீமை என்ற உணர்வு எமக்குள் வராமல் இருக்கும் படி எமது ஆத்ம சக்தியினை வளர்த்துக்கொள்வது, விஷ்ணு என்பது எமது உயிராகிய ஆத்மா பெற்ற காக்கும் சக்தி, விஷ்ணுவை வணக்குவது உயிர் தீமைகளில் இருந்து தன்னை காக்கும் சக்தியினை பெறுவது, விரதம் என்பது எம்முள் உள்ள தீய உணர்வுகளிற்கு மேலும் சாப்பாடு கொடுக்காமல் உயிரினை ஒளியாக்குவது! இப்படி செய்து தெளிவான நிலை பெறுதலே ஏகாதசி விரதம்! 

அப்படியானால் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கும் என்பது என்ன? 

உடலில் உள்ளதுதான் சொர்க்க வாசல்! உயிருக்கு ஆதாரம் சுவாசம், சுவாசம் செல்லும் வழி மூக்கு, கண்களால் பார்க்கு எதுவும் உணர்வுடன் கலந்து உயிரில் பதியும் தன்மை உடையது, நாம் எந்த குணத்தை எண்ணுகிறோமோ அது உடலில் விளைந்து சுவாசத்தில் கலந்து உயிரில் பதிகிறது. இதுவே எமது நாளந்த வாழ்க்கையில் நடைபெறுகிறது. 

தீமையை காக்கும் சக்தி பெற சொர்க்க வாசல் திறக்க வேண்டும் என்பது எமது எண்ணங்களை நிறுத்தி தூய்மையானவற்றை மட்டும் எடுக்க கண்களுக்கு மத்தியில் மூக்கு முடியும் இடமாகிய "புருவமத்தியை" திறக்க வேண்டும், இதுவே சொர்க்க வாசல் திறப்பு!

இப்படி புருவமத்தி பூட்டு திறந்தால் எம்மை துன்பம் தாக்காத இன்ப வாழ்வு கிட்டும் என்பதனையே சொர்க்க வாசல் என்று கூறிவைத்தார்கள்!

இந்த உண்மை அறியாமல் விடிய விடிய கண்முழித்து, உடலை வாட்டி கோயிலில் சென்று வழிபடுவதால் சொர்க்க வாசல் திறக்காதுப்பா! 

குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரபட்ட மகரிஷி அருளிய படி! 

அனைவருக்கும் இனிய 2015 புதிய வருடம்!

அனைவருக்கும் இனிய 2015 புதிய வருடம்!
நண்பர்கள், உலகில் உள்ள அனைவரும்
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும், பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திட செய்வாயம்மா!
ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அசைந்திடா பக்தியன்பு, வீரம் தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
அன்புடன்
சுமனன்


பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...