குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 15, 2013

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் 

பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 04
பகுதி - 05
பகுதி - 06
பகுதி - 07

*******************************************************************************************************************************
இந்தப்பகுதியில் ஆயுர்வேதம் சுக்கிலம் எனப்படும் விந்தினைப்பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

சுக்கில தாதின் உற்பத்தி:
கோடிக்கணக்கான எலும்பு மஞ்ஞை/மற்றும் நரம்புக் கலங்கள் சேர்ந்து சுக்கிலம் உருவாகிறது. ஆயுர்வேத சித்த உடல் தத்துவங்களின் படி உண்ணும் உணவிலிருந்து ஏழுவித உடலில் அடிப்படை தாதுக்கள் உருவாகின்றன. இந்த ஏழும் ரச,ரக்த,மாம்ச,மேதா, அஸ்தி, சுக்ல என்பனவாகும். நாம் உண்ணும் அன்னத்திலிருந்து இந்த தாதுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாக்கமடைகின்றன. இவற்றில் ஏழாவது தாது சுக்ல தாது எனப்படுவது. இது மற்றைய ஆறுதாதுக்களினதும் சுருக்கி, வலிமைப்படுத்தப்பட்ட தாது. இதனாலேயே இதன் பெறுமதி அதிகம்!

ஆயுர்வேத நூலாரின் படி சுக்கிலம் உடல் பூராகவும் பரவியுள்ளது. (சர்வ சரீர கதஹ)சுக்கிலமானது பாலில் நெய் கலந்திருப்பதுபோலும், கரும்பில் சக்கரைகலந்திருப்பதுபோலும் சுக்கிலம் உடலிற் கலந்திருக்கிறது. ஆகவே சித்தர்கள் கூறும் விந்தின் பொருளை இதனுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். உடல் பூராகவும் சுக்கிலம் உள்ளது எனக் கூறப்படுகிறது.

அடுத்து ஆணில் சுக்கிலமானது உடல்பூராகவும் நுண்மையாக படர்ந்திருந்து உடலுறவில் விந்துடன் வெளியேறுகிறது. இதன் மூலம் ஒரு சில விடயங்களை புரிந்துகொள்வோம்.

எமது உடல் உண்ணும் உணவுடன், பிரபஞ்ச பிராணசக்தியினையும் ஈர்த்து சப்த தாதுக்களாக வளர்ச்சியடைகிறது. இந்த தாதுக்கள் ஒவ்வொன்றும் செறிவாக்கப்பட்டு உடலினை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்பரிணாமத்தினை நோக்கி செலுத்தும் பணியினை செய்கிறது.

இப்படி செறிவு படுத்தப்பட்ட (Concentrated)  தாதுவான சுக்கிலம் அல்லது விந்து உடல் பூராகவும் நுண்மையாக பரவியுள்ளது. இந்த நுண்மையான பரவல் சாதாரண உடலுறவின் மூலம் வெளியாகிறது. இது மேலே கூறப்பட்ட உதாரணத்தில் பாலில் நெய் கலந்திருத்தல் என்றால் பால் உடல், நெய் சுக்கிலம், சாதாரண உடலுறவில் பாலை கடைந்து நெய் எடுக்காமல் பழுதாக்குவது போலவே மனிதன் வாழ்கின்றான். ஆனால் தாந்திரீகம், பரியங்க யோகம் பயின்றவன் இந்த உடலெங்கும் பரவியுள்ள சுக்கிலத்தினை சரியான பொறிமுறையான கடைதல் (யோகசாதனை) மூலம் உயர்ந்த மனோ ஆன்ம சக்தியான நெய்யினை பெற்றுக்கொள்ளவேண்டும்.

பால் கறந்தபின்பு குறித்த நேரத்திற்குள் காய்ச்சி, உறையவைத்து தயிராக்கி, தயிரை கடைந்து நெய்யாக்கிக் கொள்ளவேண்டும். அல்லாமல் அதனை ஒரே பாத்திரத்தில் இட்டு பல நாட்கள் வைத்திருந்தால் அது கெட்டு நாற்றம் எடுக்கத்தொடங்கி விடும். இதைப்போலவே சுக்கிலத்தின் தன்மையும், உண்ட அன்னமும், பிராணசக்தியும் உடலினுள் சப்த தாதுக்களை உருவாக்கி, ஒன்றில் இருந்து ஒன்று செறிவாக்கி, இறுதியாக மன,பிராண, புத்திகளை வலிமைப்படுத்தி ஆன்மாவினை உயர்ந்த சக்தியாக்கும் சுக்கிலத்தினை உருவாகிறது. இதனை சரியான முறையில் கடைந்து பக்குவப்படித்தி நெய்யாக்கி பயன்படுத்த முடியும் எனில் நல்லது, இல்லாமல் அதனை வலிந்து அடக்காமல் இயல்பான வழியில் விட்டுவிடவேண்டும். அப்படி அடக்கினால் பால் கெட்டு வீணாகி விடுவது போல் உடலிலும் மனத்திலும் நோயினை தோற்றுவித்து விடும். இதனை உடலில் வரும் பதின்நான்கு வேகங்களை அடக்குவதால் தோன்றும் நோய்களைப்பற்றி சித்தர்கள் விவரித்துள்ளதன் மூலம் ஒப்பீட்டு அறியவும்.

அடுத்து ச்ரகர் முதலான ஆயுர்வேத நூலார் பெண்களின் உடலில் உள்ள சுக்கிலத்தினைப்பற்றிய குறிப்பினை தருகிறார்கள். அது "சுக்கிலதாதுவானது உடலுறவின்போது பெண்களில் சுரந்து வெளியாகிறது, ஆனால் அது கர்ப்ப உற்பத்தியில் பயன்படுவதில்லை" என்பதாகும். இதன் மூலம் சுக்கிலம் என்பது உடல் சுரப்பும் அதனுடன் கலந்த பிராண சக்தியே என்பது புலனாகிறது. ஆயுர்வேதத்தில் சித்தர்கள் வலியுறுத்திக்காட்ட வந்த விடயம் "உடலுறவில், விந்து வெளியேற்றத்தில் அதிக பிராணசக்தி உடலில் இருந்து வெளியாகின்றது" என்பதே அன்றி விந்தினை அடக்குவதை அல்ல! இப்படி வெளியாகும் சக்தி சரியான முறையில் ஈடுகட்டப்படாவிட்டால் உடல் நோயினை, வயதாதலை நோக்கி விரைவாகச்செல்லும் என்பதினை புரிந்து கொள்ளவேண்டும்.

சுக்கிலத்தினை கடைந்து நெய்யாக்கும் செயன்முறைதான் "தியானம்", தியானம் என்பதன் பொருளும் பலரும் பலவாறாக விளங்கப்படுத்தி இருக்கிறார்கள், அதுபற்றி வேறொரு பதிவில் தனியாக விளக்குவோம்.

இங்கு நாம் கூறவரும் விடயத்தின் சுருக்கம் இதுதான், நீங்கள் சரியான பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டுமாயின் ,  சரியான தியானத்தினை மட்டும் செய்யுங்கள். அதனைவிடுத்து வேறு எந்த செய்முறையும் செயற்கையான முறையில் உங்கள் உடலின் வேகத்தினை அடக்கும் செய்முறைதான். இப்படி தியானம் செய்யும் போது விந்து நீக்கும் காம எண்ணம் மனதில் எழுந்தால் அதனால் சலனமுற்று தவறு செய்ததாக வருந்தி தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், மீண்டும் மீண்டும் முயற்சிக்கவேண்டும். அப்படி முயற்சிக்கும் போது ஒரு நாள், ஒரு பிறப்பில் அது கைகூடும், அதுவன்றி விவேகானந்தர் பிரம்மச்சாரியாக இருந்தார் என்று நானும் அதுபோல இருப்பேன் என்று உங்கள் இயல்புக்கு மாறாக இருக்க முயலக்கூடாது,விவேகானந்தர் போன்றோர் பல பிறப்புகளில் எடுத்த முயற்சி, நீண்ட தியான சாதனையே அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவந்தது என்று உணர்ந்து சரியான வழியில் முயற்சிக்கவேண்டும். அதேவேளை மனிதனின் செயற்பாட்டில் உடலுறவில்தான் அதிக சக்தி வெளியாகிறது என்பதாலேயே அதன் முக்கியத்துவத்தினை  வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்படி ஆன்மீகத்தில் எதுவும் விருப்பமில்லை என்றால் அதீத உணர்ச்சிக்கு அடிமையாகி (obsession), உள்ளீட்டினை (Input) விட அதிக வெளியீடு(output) செய்யாமல் மிதமாக(balanced) காமத்தினை அனுபவிக்க வேண்டும்.

3 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...