குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 14, 2015

எனது பாட்டனாரிடம் இருந்த சித்த வைத்திய நூல்களின் தொகுப்பு

எனது பாட்டனார் வேதாரண்யத்தில் வாழ்ந்த ஸ்ரீ சோமாஸ்கந்த குருக்களிடம் முறைப்படி தனது பதினாறாவது வயதிலிருந்து வைத்தியம் கற்றவர். மேலும் தாய் வழி மௌனகுரு சித்தரின் வைத்திய முறைகளை  கற்றவர். இந்த நூற்கள் வேதாரண்யத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் சேகரித்திருக்கலாம். நாட்டுச் சூழ்நிலை காரணமாக மாதகல் கிராமத்தில் இருந்து அனைவரும் வெளியேறிய  போதும், தனது  ஊரினை விட்டு வெளிவர மாட்டேன் என்று இறுதிக்காலம் வரை அங்கேயே வாழ்ந்து மறைந்தார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் ஊர் இருக்கும்போது இந்த நூல்களை சுவடிகளை காப்பாற்றுவதற்கு நெற் பெட்டகத்தில் அடியில் வைத்து பாதுகாத்து பின்னர் சுமுக நிலையில்  எனது அத்தையாரிடன் கொடுத்து எனது கைகளுக்கு இறுதியாக வந்து சேர்ந்தது. 

தொகுப்பின் படி  நூற்றி பதினைந்து நூற்கள் அதில் முதல் நாற்பத்து ஐந்து நூற்கள் காணாமல் போய்விட்டது.  ஆக மொத்தம் இந்த தொகுப்பில் எழுபத்து ஏழு நூற்கள் கையிருப்பில் உள்ளன. 

இவற்றில் சிலது தாமரை நூலக பதிப்பில் வந்திருக்கின்றன. அப்படி வெளிவராதவற்றை எனது பாட்டனாரின் வைத்திய சேவை நினைவாக பதிப்பிக்கலாம் என்று இருக்கிறேன். குருவருளும் திருவருளும் கூட வேண்டும்! 

  1. அகத்தியர் ஊத்துமுறை - ௨௫ (பதினெட்டாவது பாடலில் இருந்து) 
  2. அகத்திய மாமுனிவர் கருணை வாகடம் 
  3. அகத்திய மாமுனிவர் சித்தாதியெண்ணெய்
  4. அகத்திய மாமுனிவர் தைலச்சுருக்கம் 
  5. அகத்திய மாமுனிவர் செந்தூரம் முந்நூறுக்கும் சூத்திரம் 
  6. அகத்திய மாமுனிவர் முப்பு கெந்தக தைலம் 
  7. அகத்திய மாமுனிவர் காவிய சுருக்கம் 
  8. அகத்திய மாமுனிவர் முப்பு தீக்ஷை சூத்திரம் 
  9. அகத்திய மாமுனிவர் வகாரச் சூத்திரம் 
  10. அகத்திய மாமுனிவர் ஞான உபதேசம் 
  11. அகத்திய மாமுனிவர் பாலவாகடம் 
  12. அகத்திய மாமுனிவர் ஞானம் 
  13. அகத்திய மாமுனிவர் கேசரி குருநூல்
  14. அகத்திய மாமுனிவர் வைத்திய சூத்திரம் 
  15. அகத்திய மாமுனிவர் சுத்தஞானம் 
  16. அகத்திய மாமுனிவர் ஞானம் .
  17. அகத்திய மாமுனிவர் அடுக்கு நிலை போதம் 
  18. அகத்திய மாமுனிவர் வாதச் சுருக்கம் 
  19. அகத்திய மாமுனிவர் வழலை சுருக்கம் 
  20. அகத்திய மாமுனிவர் ஞானச் சுருக்கம் 
  21. அகத்திய மாமுனிவர் காரண சூத்திரம் 
  22. அகத்திய மாமுனிவர் ரசக்குளிகை 
  23. போக நாயனார் அருளிய பூசா விதி 
  24. போக நாயனார் சுடலை சூத்திரம் 
  25. போக நாயனார் முக்கோண சக்கர மகிமை 
  26. போகமுனிவர் பரங்கி பாஷாண வைப்பு 
  27. போகமுனிவர் காத்தாடி வித்தை 
  28.  போகமுனிவர் நேத்திர ரோக தைலம் 
  29. போகமுனிவர் பொம்மை காகித ஓட்டம் 
  30. போகமுனிவர் சூதமுனி நாடி 
  31. சூதமாமுனிவர் ராஜாங்க நாடி 
  32. சுந்தரானந்தர் பூசா விதி 
  33. சுப்பிரமணியர் ஞானம் 
  34. மச்ச முனி சூத்திரம் 
  35. மச்ச முனி சன்னிக் கியாழம் 
  36. திருமூலர் கிரந்திஎண்ணை
  37. திருமூலர் நாதாந்தக் குறிப்பு 
  38. கொங்கனவர் முக்காண்ட சூத்திரம் 
  39. கொங்கணவர் பூசா விதி 
  40. கொங்கணவர் முக்காண்ட திருமந்திரம் 
  41. கொங்கணவர் கருக்குளிகை 
  42. நந்தீசர் குளிகை 
  43. பதஞ்சலியார் வாத சூத்திரம் 
  44. கொங்கணவர் முப்பு 
  45. கைலாச சட்டமுனி நாயனார் அருளிச் செய்த சூத்திரம் 
  46. சட்டமுனி கற்பவிதி 
  47. உரோமரிஷி சூத்திரம் 
  48. உரோமரிஷி கருமானச் சூத்திரம் 
  49. உரோமரிஷி முப்பு சூத்திரம் 
  50. உரோமரிஷி வகார சூத்திரம் 
  51. கவுபால சித்தர் அருளிய ஆணிக்கோர்வை
  52. திருவள்ளுவர் நாதாந்த திறவுகோல் 
  53. கருவூரார் பூஜா விதி 
  54. இராமதேவர் பூஜா விதி 
  55. நந்தீசர் வைத்தியம் 
  56. நந்தீசர் முப்பு பிரணவ சூத்திரம் 
  57. நந்தீசர் குளிகை 
  58. நந்தீசர் பூஜா விதி 
  59. நந்தீசர் பூர்வ முப்பு சூத்திரம் 
  60. நந்தீசர் ஞானம் 
  61. நந்தீசர் திராவகம் 
  62. தட்சிணாமூர்த்தி பட்சணி
  63. தேரையர் வைத்தியம் 
  64. ஜனகர் பிரம்மா தண்டி எண்ணெய் .
  65. குதம்பைச் சித்தர் சந்திரோதயக் குளிகை 
  66. கண்ணானந்தார் கருடங் கிழங்கு எண்ணெய் 
  67. பாம்பாட்டிச் சித்தர் பூபதி மாத்திரை 
  68. பதஞ்சலியார் வஜ்ர கண்டி மாத்திரை 
  69. சூதமாமுனிவர் மேக நாதக் குளிகை 
  70. வேதமுனிவர் சூடாமணி மாத்திரை 
  71. காசிப நாதர் கறியநாதக் குழம்பு 
  72. யூகிமாமுனிவர் சிலோதரி மாத்திரை 
  73. கல்லுளி சித்தர் ஜெயராசா கற்பூர மாத்திரை 
  74. புலிப்பாணி சித்தர் கற்பக முத்தொளி பற்பம் 
  75. வேதாந்த சித்தர் நாக பற்பம் 
  76. கஞ்ச மலை சித்தர் இரச பதங்கம் 




Friday, November 13, 2015

அகஸ்திய மகரிஷியின் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா - மனோன்மணி பூசை அகவல்

கடந்த 2014 December மாதத்தில் மனோன்மணி பூசை அகவல் என்று ஒரு பதிவு இட்டிருந்தோம்.  பதிவு இங்கே,  இந்த மனோன்மணி பூசை அகவல் தொடர்பான பின்னணித் தகவலும் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி அடுத்து வெளிவர உள்ள நூல் பற்றிய விபரங்கள் இங்கு குருவின் ஆணைக்கு அமைய பகிர்கின்றோம்.

1894ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட மனோன்மணி பூசை அகவல் நூல், எனது பாட்டனாரின் சேகரிப்பில் இருந்து 


1894ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட மனோன்மணி பூசை அகவல் நூல்


இந்த அகவல் என்னைப் பொறுத்த வரையில் மிகவும் அதிமுக்கியமான மந்திர பாராயணம்.  எனது தந்தையின் உபதேசப்படி சிறுவயதில்  அகத்திய மகரிஷியை குருவாக எண்ணி வணங்கும் போது, எனது தந்தையார் கந்தர்சஷ்டி கவசம் படிப்பார், தாய் விநாயாகர் கவசம் படிப்பார், இவர்கள் படிக்காத வழக்கில் இல்லாத அகத்தியர் பாடிய தோத்திரம் ஒன்றை நானும் பாடவேண்டும் என்று  எண்ணிய காலத்தில் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்த அற்புத தோத்திரம் இது.  இந்த தோத்திரத்தை  எனது காயத்ரி தீட்சை கிட்டும்வரை பல வருடங்கள் அனுதினமும் படித்து வந்தேன். இதன் பொருள் அக்காலத்தில் அறியும் பக்குவம் இருக்கவில்லை. பின்னர் காயத்ரி உபாசனையில் செல்லும்போது இதனை படிப்பது நின்று விட்டது. 

பல்லாண்டுகளின் பின்னர் ஸ்ரீ வித்யா உபாசனை தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் குருநாதர் ஆணைக்கு அமைய அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எழுதத் தொடங்கிய காலத்தில் மீண்டும் இந்த அகவல் நினைவுக்கு வர அதனை எழுதி கடந்த டிசம்பர் எட்டாம் திகதி 2014 இல் பதிவித்தோம். அப்போதும் இதன் பொருள் பற்றி சிந்திக்கவில்லை. ஞாபகத்தில் இருந்ததை எங்காவது பதிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவித்தோம். 

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் எழுதி முடித்து எமது குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதரிடம் அவர் உடலை உகுக்கும் முன்னர் ஆசி வினாவிய போது சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி தியான சாதனை மூலம் பொருள் அறிந்து ஆர்வம் உள்ள சாதகர்களுக்கு பயன்படும் படி நூல்கள் ஆக்கும் படி ஆசி கூறினார்கள். அவரது ஆசியை ஏற்றுக்கொண்டு எங்கு, எப்படி சித்த மார்க்க ஸ்ரீ வித்யா பற்றி எழுத தொடங்குவது என்று பிரார்த்திக்க ஏற்கனவே "நீ அனுதினமும் படித்த அகவலில் இருந்து தொடங்கு" என்று மானசீக ஆணை வர பல நாட்கள் சிந்தனையின் பின்னர் கடந்த தீபாவளி அமாவாசையின் பின்னர் நாம் சிறுவயதில் பாராயணம் பண்ணிய இந்த அகவல் ஞாபகத்திற்கு வந்தது. 

இந்த அகவலை படிக்க படிக்க விரிந்த தியான சாதனை அனுபவம் இதன் விளக்கவுரையாக வெளிவர உள்ளது. மேலும் இந்த அகவலை தற்போது படிக்கும் போது இரண்டு இடங்களில் அமுத வர்ஷினி (அம்ருத வர்ஷினி) என்ற பெயர் வரும்போது எனக்கு மிகுந்த ஆச்சரியமும் பூரிப்பும் உண்டாகியது. ஏனெனில் எனது மகள் பிறந்து அவளை கைகளில் தூக்கியபோது எமது மனதில் உதித்த நாமம் அம்ருதவர்ஷினி, இந்த பெயரை எனது குருநாதரின் ஆசியிற்கு அனுப்பிய போது மிகுந்த மகிழ்வுடன் அதனையே சூட்டும்படி ஆசி தந்தார்கள். இந்த அகவலில் அம்ருதவர்ஷினி என்ற பெயர் இருப்பது இந்த அகவல் எனது தனிப்பட்ட அன்புக்கும் விருப்பத்திற்கும் உரியதாக இருப்பதற்கு ஒரு காரணம். 

மேலும் நான் சிறுவயதில் இந்த அகவலில் பொருள் தெரியாமல் வேண்டி பிரார்த்தித்த ஸ்ரீ வித்யா சார்ந்த உபதேசங்கள் எல்லாம் உருவடிவாய் எனது குருநாதர் அம்ருதானந்த நாதரால் பிற்காலத்தில் உபதேசிக்கப்பட்டது, இந்த பிரபஞ்சத்தில் அகஸ்தியர் முதலான ஆதி குருநாதர்களது ஞானம் குருபரம்பரையாய் வேண்டுபவர்களுக்கு தரப்படுகிறது என்பதற்கு ஒரு அனுபவ சாட்சி! 

வெகுவிரைவில் இன்னும் பல விபரங்களுடன் அகத்திய மகரிஷியின் சித்த மார்க்க ஸ்ரீ வித்யா நூலுப்பெற குருமண்டலத்தை பிரார்த்திப்போம். 

பேரன்புடன்

ஸ்ரீ ஸக்தி சுமனன் 


அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு கூட்டுதியானம் - 01


நேற்றைய (12 Nov 2015) காயத்ரி - ம்ருத்யுஜெய பூஜை ஹோமத்தின் பின்னர் நடைபெற்ற கூட்டுப்பிராத்தனையில் பிரார்த்தனைக்கு விண்ணப்பித்த அன்பர்களது பெயர்கள் ஒவ்வொன்றாக  வாசிக்கப்பட்டு கீழ்வருமாறு  பிரார்த்திக்கப்பட்டது. 

எமது பூஜையில், தியானத்தில் பங்கேற்ற அனைவரது  குடும்பத்தில், இல்லத்தில் அகத்திய மகரிஷியின் அருளாசியும், சித்த வித்யா குருமண்டல குருமார்களின் அருளாசியும் அருளாற்றலும், துருவ நட்சத்திரத்தின் அருள் ஆற்றலும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும், ஆதிபராபட்டாரிகையின் அருளாற்றலும் பரவி அவர்கள் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவரது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா! அவர்கள் அனைவரும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும், பொருள் நலம், பொறுமை, ஈகை பொருந்தி ஆயுள், ஆரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தி, அன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி பெற்றிட வேண்டும்! 

பேரன்புடன்  

ஸ்ரீ ஸக்தி சுமனன் 

Wednesday, November 11, 2015

நீங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்கப்படுகிறது!



அன்பர்களே,

எமது வலைத்தளத்தை வாசிக்கும் நீங்கள் இங்கு கூறப்பட்டுள்ள யோக ஞான விளக்கங்களை புரிந்து, அதுபடி நின்று, குருவருள் பெற்று, உலகவாழ்விலும், ஆன்ம வாழ்விலும் முன்னேற, தெய்வ குணத்தை பெற்று தெய்வ சக்தி பெற்றிட உங்கள் அனைவருக்கும் ஆக வேண்டி தினமும் பிரார்த்திக்கும் படி குருநாதர் கூறிய வாக்குக்கு அமைய இதுவரை ஸ்ரீ ஜோதி சாதனைக்கு பதிந்தவர்களதும், காயத்ரி சாதனைக்கு பதிந்தவர்களது பெயரும் ஏற்கனவே எமது தினசரி வாரந்திர தியான சாதனையில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. 

மேற்கூறிய சாதனையில்  இணையாமல் உங்கள் பெயரை பிரார்த்தனையில் இணைத்து  தெய்வ சக்தியின், குருமண்டலத்தின் அருளை பெற விரும்புபவர்கள் கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றவும், 

  1. கீழ்வரும் பிரார்த்தனை வாக்கியத்தை நிரப்பி sithhavidya@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்
  2. நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிடவும் உ+ம்: (தஞ்சாவூரில்) பிறந்த, ஜென்ம நட்சத்திரம் (உ+ம்: பூர) நட்சத்திரத்தில் உதித்த, உங்கள் தாயின் பெயர் (உ+ம்: ஸ்ரீமதி லக்ஷ்மியின்) மகன்/ மகள் உங்கள் பெயர் உ+ம்: ஹரிஹரன்

    உதாரண வாக்கியம் வருமாறு:  தஞ்சாவூரில் பிறந்த, பூர நட்சத்திரத்தில் உதித்த ஸ்ரீமதி லக்ஷ்மியின் மகன் சிவஹரிஹரன்
உங்கள் கோரிக்கைகள், குறைகள் எவற்றையும் குறிப்பிடக் கூடாது, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டிய விருப்பங்கள் எதுவும் இருப்பின் அவற்றை நாம் கீழே சொல்லிய படி தினசரி உங்கள் வீட்டில் இருந்து பிரார்த்தித்து வரவேண்டும். 

பிரார்த்தனைக்கான உங்கள் விண்ணப்பம் கிட்டியவுடன் அவற்றை எமது தினசரி வாராந்த பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்வோம். உங்களுக்கான பிரார்த்தனை கீழ்வருமாறு இருக்கும். 

எமது பூஜையில், தியானத்தில் பங்கேற்ற 
தஞ்சாவூரில் பிறந்த, சதய நட்சத்திரத்தில் உதித்த ஸ்ரீமதி லக்ஷ்மியின் மகன் ஹரிஹரன்
 குடும்பத்தில், இல்லத்தில் அகத்திய மகரிஷியின் அருளாசியும், சித்த வித்யா குருமண்டல குருமார்களின் அருளாசியும் அருளாற்றலும், துருவ நட்சத்திரத்தின் அருள் ஆற்றலும், நவகோள்களின் அருளாற்றலும், இருபத்தியேழு நட்சத்திரங்களின் அருளாற்றலும், ஆதிபராபட்டாரிகையின் அருளாற்றலும் பரவி அவர்கள் அறியாமல் சேர்த்த விஷத்தன்மை அகன்று, தெய்வ குணம் பரவி, அவரது குடும்பத்தவரகள் அனைவரும் தெய்வ குணம் பெற்று தெய்வ சக்தி பெறவேண்டும் குருதேவா! அவர்கள் அனைவரும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும், பொருள் நலம், பொறுமை, ஈகை பொருந்தி ஆயுள், ஆரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தி, அன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி பெற்றிட வேண்டும்! 

இப்படி  நாம் பிரார்த்திப்பதை ஏற்றுக்கொள்ள தினசரி உங்கள் பூஜை அறையில் உங்களுக்கு வசதியான நேரத்தில் அமர்ந்து விளக்கேற்றி, சித்த வித்யா குருமண்டல நாமாவளியை ஒன்பது முறை சொல்லி, உங்கள் மனவிருப்பங்களை நாம் கீழே கூறியுள்ள முறையில் சங்கல்பித்து எமது பிரார்த்தனையில் உருவாகும் அருள்காந்த சக்தியை ஏற்றுக்கொண்டு  அவை குருமண்டலத்தின் அருளாசியால் நிறைவேறுவதாக சிறிதுநேரம் பாவித்து வரவேண்டும். 

பிரார்த்தனையில் ஒருபோதும் குறைகளை சொல்லி கவலைப்படக்கூடாது. அந்த நிலை மாறுவதற்குரிய நிலையினை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். உதாரணம்:  உங்களது நிலை ஐந்து இலட்சம் கடன் என்றால் " கடவுளே எனது ஐந்து லட்சம் கடன் தீரவேண்டும்" என்று ஒருபோதும் பிரார்த்திக்க கூடாது. சரியான முறை " சித்த வித்யா குருமண்டல அருளாசியால் அருளாற்றலால் குறித்த தினத்திற்குள் ஐந்து இலட்சம் பணம் கிடைத்து எனது வியாபாரம் செழிக்கும்" என்று உறுதியான வாக்கியமாக இருக்கவேண்டும். இப்படி உறுதியாக எண்ணும்போது மட்டுமே தெய்வ சக்தி எமது மனதில் புகுந்து அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உண்டு பண்ணி காரிய சித்தியை ஏற்படுத்தும். 

அன்பர்களே, இதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் தெய்வ உதவியினை பெறுவீர்கள் என்பதனை உறுதிகூறுகிறோம்! 

எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கு மானசீகமாக உதவுவதில் நாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்! ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் இணைந்து பலன் காண்க! 

தெய்வ குணத்தை வளர்த்து தெய்வ சக்தியை பெற்றிடுவோம்! 

என்றும் பேரன்புடன்  

ஸ்ரீ ஸக்தி சுமனன் 

தமிழ்நாட்டில் தரிசித்த தலங்கள்.

இந்த வருட தமிழ்நாட்டு பயணத்தில் தரிசித்த தலங்கள்.
  1. திருபரங்குன்றம் 
  2. மதுரை மீனாட்சி
  3. கள்ளழகர்
  4. பழமுதிர்சோலை
  5. அழகர் - இராக்காயி அம்மன் சுனை 
  6. எட்டயபுரம் வெக்காளியம்மன் சித்தர் பீடம் 
  7. திருச்செந்தூர் 
  8. இராமேஸ்வரம் 
  9. பிள்ளையார் பட்டி 
  10. தேவிப்பட்டணம் 
  11. தாயுமானார் 
  12. உச்சிப்பிள்ளையார் கோவில்
  13. ஈஸ்வராய தபோவனம் 
  14. பண்ணாரி அம்மன் 
  15. பவானி சங்கமேஸ்வரர்
  16. திருச்செங்கோடு 
  17. நாமக்கல் ஆஞ்சநேயர்
  18. குணசீலம் 
  19. ஸ்ரீ ரங்கம் 
  20. திருவானைக்கா 
  21. தஞ்சை பிருகதீச்வ்ரம் 
  22. சரஸ்வதி மகால் 
  23. திருக்கருக்காவூர் 
  24. திருவாலங்குடி
  25. திருநாகேஸ்வரம்
  26. உப்பிலி அப்பன்
  27. ஐவர் வாடி பிரத்தியங்கிரா 
  28. தாரசூரம் ஐராவதேஸ்வரர் 
  29. பட்டீஸ்வரம் 
  30. சுவாமிமலை 
  31. வைத்தீஸ்வரன் கோவில் 
  32. சிதம்பரம் 
  33. தில்லைக்காளி 
  34. வடலூர் வள்ளலார் 
  35. வேலூர் பொற்கோவில்  
  36. காஞ்சி காமாட்சி 
  37. காஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் 
  38. திருத்தணி 
  39. வடபழனி 


Sunday, November 08, 2015

மகாலக்ஷ்மி சாதனா - வித்யாரண்ய சம்புடித ஸ்ரீ சூக்தம்

இந்த மந்திர சாதனையினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 

தேவிபுரம் குருஜி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் விசாகப்பட்டினம்,ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்த நாத சரஸ்வதி அவர்களால் அவருடைய மாணவர்களுக்கு உபதேசிக்கப்பட்டது. கீழ்வரும் தமிழாக்கம் அவருடைய பூர்ணாபிஷேக தீக்ஷா சீடர் ஸ்ரீ ஸக்தி சுமனன்  அவர்களால் செய்யப்பட்டது. 

யார் அளவற்ற செல்வத்துடன் நிறைவாக வாழ விரும்புகிறார்களோ அவர்கள் கீழ்வரும் கீழ்வரும் மந்திர ஸம்புடித ஸ்ரீ சூக்தத்தை காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் தினசரி தொடர்ச்சியாக 44 நாட்கள் ஜெபித்து வர சித்தியாகும்.

வித்யாரண்யா மிகச்சிறந்த ஸ்ரீ வித்யா உபாசகர். ஸ்ருங்கேரி பீடத்தை மீளஸ்தாபித்தவர். விஜய நகர பேரரசை உருவாக்கியவர். கீழ்வரும் மந்திரத்தை தினசரி தனது நாட்டின் வளத்திற்காக ஜெபித்து வந்தார்..

கீழ்வரும் மந்திரங்கள் வித்யாரண்ய சம்புடிக ஸ்ரீ சூக்தத்தில் மகாலக்ஷ்மியை ஆவாஹிர்ப்பதற்கு அமைக்கபட்டுள்ளது.
1.    கமாலத்மிகா மந்திரம் : { ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ}
2.    துர்க்கா சப்த ஸ்லோகி ஸ்லோகம் { துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாய சதார்த்த சித்த }
3.    ஸ்ரீ சூக்தத்தின் பதினாறு பாடல்கள் :
4.    ஸௌபாக்ய பஞ்சதசி { ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்}
5.    திரிசக்தி சோடஷி : { ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வதவத வாக்வாதிநி ஐம் ஸௌஹு ஹம்ஸ ஆம் ஹ்ரீம் க்ரோம் க்லீம் ஸ்ரீம் ஹும் ஸ்வாஹா}

இந்த மந்திரத்தின் அமைப்பு கீழ்வருமாறு;
  • கமலா மந்திரம்
  • சப்த ஸ்லோகி ஸ்லோகத்தின் முதல் பகுதி
  • திரிசக்தி சோடஷியின் ஒரு பீஜாட்ச்சரம் + ஸ்ரீ சூக்தத்தின் ஒரு பாடல் + அதே பீஜாட்ச்சரம்
  • சப்த ஸ்லோகி ஸ்லோகத்தின் இறுதி பகுதி
  • கமலா மந்த்ரம்
இதனை பயிற்சிப்பதற்கான அறிவுரைகள்

ஸ்ரீ வித்யா தீக்ஷை பெற்று உபாசனை புரிபவர்கள் எதுவித மனத்தடங்கலும் இன்றி அவரவர் குரு பாதுகா மந்திரத்துடன் தொடங்கலாம்.
எமது வலைத்தளத்தின் சாதனா அறிவுரைகளை பின்பற்றும் அன்பர்கள் கீழ்வரும் படிமுறையினை பின்பற்றவும்.
1.    சிவப்பு தாமரை மலர்கள்
2.    தாமரை நூல் திரி கொண்ட நெய் விளக்கு
3.    ஸ்ரீ யந்திரம்
இவற்றை தயார் படுத்திக்கொண்டு தீபாவளி (எந்த மகாலக்ஷ்மி சாதனைக்கும் உகந்த நாள்) அல்லது வசதியான ஒரு அமாவாசை அன்று கீழ்வரும் ஒழுங்கில் தொடங்கவும்.
1.    முதலில் சித்த வித்யா குருமண்டல நாமாவளி ஒன்பது சுற்றுக்கள் செய்து பிரார்த்தித்துக் கொள்ளவும்.
2.    பின்னர் உங்கள் சங்கல்பம் ஒன்று – ஆன்மீக வளம், பணவரவு, செல்வம் சேருதல் ஏதாவது ஒன்று
3.    முதல் ஒரு மண்டலம் (45 நாட்கள்) கீழ்வரும் ஒழுங்கில் மந்திர ஜெபத்தினை தொடங்கவும். இதனை பயிற்சி நிலை ஒன்று என்று குறிப்பிடலாம். தினசரி :
                                               i.    108 தடவை  மகாலக்ஷ்மி மந்திரம் { ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ}
                                              ii.    108 தடவை துர்க்கா சப்த ஸ்லோகி ஸ்லோகம் { துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா }
                                             iii.    108 தடவை  ஸௌபாக்ய பஞ்சதசி{ ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்}
                                            iv.    108 தடவை  திரிசக்தி சோடஷி : { ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வதவத வாக்வாதின்யை ஐம் ஸௌஹு ஹம்ஸ ஆம் ஹ்ரீம் க்ரோம் க்லீம் ஸ்ரீம் ஹும் ஸ்வாஹா}
                                              v.    ஒரு தடவை ஸ்ரீ சூக்தத்தின் பதினாறு பாடல்கள் : ஸ்ரீ சூக்தத்தின் உச்சரிப்பை கற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்வையிடவும் 
4.    இப்படி ஒரு மண்டலம் பயிற்சி நிலை ஒன்றை செய்த பின்னர் கீழ்வரும் சம்புடீக மந்திரத்தை ஆரம்பிக்கவும்.
5.    சம்புடீக மந்திரத்தில் உருவாகும் ஆற்றலை ஏற்பதற்கு மனமும் பிராண உடலும் பக்குவமாவதற்காக வேண்டியே பயிற்சி நிலை ஒன்று தரப்பட்டுள்ளது.

இனி சம்புடிக ஸ்லோகத்தின் அமைப்பு வருமாறு;

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஐம்
ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஸுவர்ண ரஜத ஸ்ரஜாம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் |ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஜாதவேதோ ம ஆவ||
ஐம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 01

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹ்ரீம் 
தாம் ம ஆவஹ ஜாதவேதோ |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
லக்ஷ்மீமனபகாமினீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
யஸ்யாம் ஹிரண்யம் விம்தேயம் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
காமஶ்வம் புருஷானஹம் ||||
ஐம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||  02

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸ்ரீம்
அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஹச்திநாத ப்ரபோதிநீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸ்ரியம் தேவீ முபாஹ்வையே | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||||
ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||  03

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் க்லீம் 
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராம்|ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஆர்த்ராம் ஜ்வலம்தீம் த்ருப்தாம் தர்பயம்தீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
பத்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
தாமிஹோபஹ்வயே ஶ்ரியம் |
க்லீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 04

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் வதவத  
சந்த்ராம் ப்ரபாஸாம் யஶஸா ஜ்வலம்தீம்| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஶ்ரியம்லோகே தேவஜுஷ்தாமுதாராம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
தாம் பத்மினீமீம் ஶரணமஹம் ப்ரபத்யே‌ | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
லக்ஷ்மீர்மேனஶ்யதாம் த்வாம் வ்றுணே |
வதவத ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 05

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் வாக்வாதின்யை 
ஆதித்யவர்ணே தபஸோ‌உதிஜாதோ| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
வனஸ்பதிஸ்தவவ்றுக்ஷோ‌உத பில்வஃ| | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
தஸ்ய பலானி தபஸானுதம்து|‌ ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
மாயாம்தராயாஶ்சபாஹ்யா அலக்ஷ்மீஃ||
வாக்வாதின்யை ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 06

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஐம் 
உபைது மாம் தேவஸகஃ|ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
கீர்திஶ்ச மணினா ஸஹ || | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ப்ராதுர்பூதோ‌உஸ்மிராஷ்ட்ரே‌ஸ்மின் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
கீர்திம்றுத்திம் ததாதுமே||
ஐம் ஓம் ||
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 07

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸௌஹு
க்ஷுத்பிபாஸாமலாம் ஜ்யேஷ்டாம் |ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
அலக்ஷீம் னாஶயாம்யஹம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
அபூதிமஸம்றுத்திம் ச  ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸர்வாம் னிர்ணுத மே  க்றுஹாத் ||
ஸௌஹு ஓம் ||   
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 08

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹம்ஸ|
கந்தத்வாராம் துராதர்ஷாம்| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
நித்யபுஷ்டாம் கரீஷிணீம்| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஈஶ்வரீக்ம்ஸர்வபூதானாம் ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
தாமிஹோபஹ்வயே ஶ்ரியம் ||
ஹம்ஸ ஓம் ||      
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 09

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஆம்|
மனஸஃ காமமாகூதிம் | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
வாசஃ ஸத்யமஶீமஹி| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
பஶூனாம் ரூபமன்யஸ்ய| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
மயி ஶ்ரீஃ ஶ்ரயதாம் யஶஃ’ ||
ஆம் ஓம் ||         
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 10

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹ்ரீம்|
கர்தமேன ப்ரஜாபூதா | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
மயி ஸம்பவ கர்தம | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஶ்ரியம்வாஸயமே குலே| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
மாதரம்பத்மமாலினீம் ||
ஹ்ரீம் ஓம் ||       
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 11

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் க்ரோம் |
ஆபஹ: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
சிக்லீத வஸ மே க்ருஹே| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
நி-சதேவீம் மாதர | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸ்ரியம் வாஸய மே-குலே ||
க்ரோம் ஓம் ||      
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 12

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் க்லீம் |
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம்| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
பிங்கலாம் பத்மமாலினீம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஜாதவேதோ ம ஆவஹ ||
க்லீம் ஓம் ||        
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 13

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸ்ரீம் |
ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம்| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஸுவர்ணாம் ஹேமமாலினீம்| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஜாதவேதோ ஆவஹ ||
ஸ்ரீம் ஓம் ||         
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 14

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஹும் |
தாம் ம ஆவஹ ஜாதவேதஹ| ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
லக்ஷ்மீ-மனபகாமினீம்| க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம்| ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஹம்ஸ்வம் புருஷானஹம்||
ஹும் ஓம் ||        
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 15


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ ||
ஓம் ஸ்ரீம்| துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதீமசேஷா ஜந்தோ| ஸ்வஸ்தைஹ ஸ்ம்ருதா மதிமதீவா ஸுபம் ததாசி | ஸ்ரீம் ஓம்||
ஓம் ஸ்வாஹா |
ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா | ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம்
ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம் | க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸ்ரிய பஞ்சதஸர்சம் ச  | ஸௌஹு ஸ க ல ஹ்ரீம்
ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்||
ஸ்வாஹா ஓம் ||   
ஓம் ஸ்ரீம்| தாரித்ர்ய துக்கஹ பய ஹாரிணி கா த்வதன்யா | சர்வோபகாரகரநாயா சத்ஹார்த்ரார்சித்தா  | ஸ்ரீம் ஓம் ||
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்மியை நமஹ || 16


-    ஓம் ஸ்ரீம் ஓம் - 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...