குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 30, 2013

மந்திர சாஸ்திர விளக்கங்கள் 01:மந்திரங்களை புரிந்து கொள்ளுதல்!

மந்திரங்கள் என்பவை தெய்வ சக்திகளை விழிப்பிக்க கூடிய ஒலி அலைகளை தரும் எழுத்துக்களின் கோர்வை. இவை தெய்வீக தன்மை உடையவையாக காணப்படுகிறது. ஏனெனில் இவற்றின் செயன்முறை சாதாரண மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாது உள்ளன. மந்திரங்களை பொதுவாக இரண்டு வகையாக பகுக்கலாம். முதலாவது தனி எழுத்துக்களால் ஆனவை, இரண்டாவது வகை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களால் ஆனவ. உதாரணமாக “சிவ”  என்ற மந்திர சொல்லை எடுத்தால் (இது காரண பஞ்சாட்சரம் எனும் அதியுயர்ந்த மந்திரம்) சி + வ என இரண்டு எழுத்துக்கள் உள்ளதாக கொள்ளப்படும். இதனை இன்னும் பகுத்தால், சி = ச+இ என மேலும் இரண்டு எழுத்துக்களாக விரிந்து சிவ என்ற மந்திரத்தில் மூன்று அட்சரங்கள் உள்ளதாக முடியும். சிவ என்ற சொல்லிற்கு பொருள் கொள்ள முடியும், தனிப்பட்ட அட்சரத்திற்கு எதுவித பொருளும் கூறமுடியாது. இந்த அட்சரங்கள் சூஷ்ம உடலில் அதிர்வினை ஏற்படுத்தி தெய்வ சக்தியினை கவரும் தன்மை உடையவை.

பீஜ அட்சரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அட்சரன்களால் ஆனவை. இவை ஒவ்வொன்றும் பிரபஞ் சத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வ சக்தியினை கவரும். உதாரணமாக “ரம்” என்பது “ர” என்ற அட்சரமும் “ம + குற்று” என்ற பிந்துவும் சேர்ந்து உருவான அக்னி பீஜம் ஆகும். மெய்யெழுத்தில் இருக்கும் குற்று பிந்து எனப்படும்.  இந்த பிந்துவே எல்லா அட்சரங்களுக்கும் சக்தியினை கொடுப்பது, இது சிவ அமிசம் உடையது, அட்சரத்துடன் பிந்து சேரும் போது மட்டுமே அது குறித்த தெய்வ சக்தியினை பிரபஞ்ச்சத்தில் தாக்கி சூஷ்ம உடலில் கவரும் தன்மையுடையதாகிறது. இந்த பிந்து சப்தம் இல்லாமல் அட்சரத்திற்கு விரியம் வருவதில்லை. இந்த பிந்து சப்தத்தினை “அனுஸ்வரம்” என்பார்கள். இது எந்த அட்சரத்திற்கும் நாசி சப்தத்தினை தருவது. அட்சரத்தினை மந்திரம் ஆக்கும் பொது அது “ம” வுடன் சேர்ந்து “ம்” ஆகி விரியத்தினை தருகிறது. பிந்து தனியாகவும் வேலை செய்யாது. ம இல்லாமல் பிந்து வேலை செய்யாது. “ம” உம் “பிந்து”வும் சேரும்போதுதான் உதடுகள் இணைந்து உடலில் அதிர்வினை ஏற்படுத்தும். அப்போதுதான் உடலிற்கும் பிரபஞ்சத்திற்கும் சக்தி பரிவு நிகழ முடியும். “ம்” என்ற அட்சரத்தினை ஜெபிப்பதனாலேயே குண்டலியினை அசைவித்து உயர் சக்கரங்களுக்கு எழுப்ப முடியும். குறிப்பாக ஆக்ஞா மற்றும் சகஸ்ரார சக்கரங்களுக்கு! “ம” வினை சந்திர பிந்து என்பர். இது சமஸ்கிருதத்தில் பிறைச்சந்திரன் மேல் புள்ளி இட்டு குறிக்கப்படும். இந்த சந்திர பிந்து ஒலி பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இந்த “ம்” சப்தத்தினை அட்சரத்துடன் சேர்ப்பதனால் அந்த அட்சரத்துக்குண்டான தெய்வ சக்தியுடன் பஞ்ச பூத கலப்பு சம நிலை அடைந்து சாதகன் ஸ்துல சூஷ்ம உடலில் சம நிலையினை ஏற்படுத்துகிறது. இதனாலேயே மந்திர தீட்சையில் குருவானவர் சீடனின் சூஷ்ம உடலின் அதிர்வினை அறிந்து அதற்கு சமப்படகூடிய அட்சரங்களை அறிந்து தகுந்த பீஜ மந்திரத்தினை அளிப்பார். 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...