குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 30, 2013

ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் அன்பர்களுக்கான வேண்டுகோள்

அன்புள்ள நண்பர்களே,

நீங்கள் ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் தபாலின் இடது மூலையில் உங்கள் முகவரியினையும், படிவத்தின் பின்புறம் உங்கள் ஈமெயில் முகவரியினையும் குறிக்கவும். இயலுமாயின் படிவத்தினை ஸ்கான் செய்து அனுப்பிவைத்தல் நலம். 

ஏற்கனவே அனுப்பிவிட்டவர்கள் இமெயிலின் மூலம் எமது மின்னஞ்சலிற்கு (sithhavidya@gmail.com) அறியத்தரவும்.  

படிவம் எமக்கு கிடைத்தவுடன் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்துவோம். 

Monday, November 25, 2013

சித்தர்களின் தொடர்பு பெற்று சித்த வித்யா பயிற்சிப்பதற்கான வழிகாட்டல்

எமது வலைத்தளம் இதுவரை நாம் குருநாதரிடம் கற்றவற்றை பகிரும் தளமாக மட்டுமே இருந்து வந்தது, ஆனால் கடந்த நவராத்திரியிலிருந்து குருநாதர் அறிவுறுத்தியபடி ஆர்வம் உள்ளவர்களுக்கும், சிரத்தை உள்ளவர்களுக்கு தகவல்களை மட்டும் வழங்கினால் போதாது, அவர்களை சரியான முறையில் சாதனை செய்வதற்குரிய வழிமுறையினையும் செய்யவேண்டும் எனப்பணித்தார்கள்! இது எமது தளத்தினை பார்வையிட்டு எப்படி பயிற்சிகளை கற்றுக்கொள்வது என்று கேட்டு வருபவர்களது பிரார்த்தனையின் பலனாக இருக்கும் என நம்புகிறோம்!

அதன் பிரகாரம் எமது தினசரி தியான  சாதனை மூலம் எமது தளத்திற்கு வருகைதந்து பார்வையிடுபவர்களுக்கு குருமண்டலத்தில் அருள் காந்த சக்தி கிடைக்கும் வண்ணம் சில தியான முறைகள் மூலம் வழி செய்துள்ளோம். அவற்றை எமது வலைத்தளத்தின் தலைப்பு பகுதியில் தந்துள்ளோம், அதனை சில முறை வாசிப்பதாலும்,  தரப்பட்ட குருநாமங்களை சிலதடவைகள் மனதில் உச்சரிப்பதாலும் உங்களது மனதில் தெய்வ காந்த சக்தி பாய்ச்சப்படும். இங்கு அந்த பகுதியை வாசிப்பது மட்டுமே உங்கள் முயற்சி! மற்றைய அனைத்து செய்முறைகளும் உங்களுக்காக குருமண்டலத்தில் இருக்கும் குருமார்கள் செய்துகொள்வார்கள்! இது எப்படி நடக்கிறது என அறிய நினைப்பவர்கள் எமது முந்தைய பதிவுகளையும், மனம், சித்தம் எப்படி செயற்படுகிறது என்பதனையும் அறிந்து கொண்டால் விளங்கிகொள்ளலாம். இந்த பயிற்சி மிக முக்கியமானது! இதன்முலமே நீங்கள் குருமண்டலத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்!

பொதுவாக ஆன்மீகம் என்றவுடன் இன்றைய காலப்பகுதியில் சாஸ்திரங்களில் குருவின் முக்கியத்துவம் விபரிக்கப்பட்டுள்ள விதத்தினை சாதகமாக ஆக்கிக்கொண்டு ஆஸ்ரமம் இருந்தால்தான் குரு, பௌதீகமாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய இடமாக, வியாபார ஸ்தலமாக, ஆன்மீகம் சந்தைப்படுத்தப்படுகிறது. இவற்றில் எதுவித உண்மையும் இல்லை என்பதனை எமது வாசகர்கள் உணர வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது எமக்கு உள்ளே எம்மில் நடைபெறும் செய்முறை, இதனை ஆரம்பிப்பதற்கும் முடிப்பதற்கும் மட்டுமே குரு தேவை! மற்றைய பகுதி எமது பொறுப்பு! எமது குருநாதர் இதனை இப்படிக்கூறுவார் “ஒருவனது தெய்வ சாதனை வெற்றி 90% ஒருவனுடைய சுயமுயற்சி, 10% குருவினுடைய பங்கு! அந்த பத்து சதவீதத்தில்  5% ஆராம்பிப்பதற்கு  5% கடைசிப்படியில் இறைவனுடன் இரண்டற கலப்பதற்கும்! எனினும் குரு என்பவர் தவிர்க்கமுடியாதவர்” ஆக ஆரம்பிப்பதற்கும் முடிப்பதற்கும் மட்டுமே குருவின் உதவி தேவை! மற்றையவை எமது பணி! ஆனால் இன்றைய காலத்தில் குருமார்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை தன்னம்பிக்கை அற்ற, தம்மை சார்ந்து இருக்க வைக்கும் உத்தியுடன் குருபக்தி என்ற உத்தியினை பயன்படுத்துகின்றனர். உண்மையில் குரு என்பவர் எம்மை நாம் யார் என அறிய உதவி செய்பவர்! அதனை தானும் உணர்ந்தவர்! இது உண்மையில் ஒருவித மனித பிம்பமோ! தனிமனித வணக்கமோ கிடையாது! மனம் ஆன்மா போன்ற சக்திகளின் இணைவு! அதாவது உயர்ந்த சக்தி ஒன்றுடன் நம்மை இணைத்து நாமும் சக்தி பெற்று அந்த சக்தியினையும் வளர்க்கும் முறை! இதையே சித்தர்கள் செய்து வைத்துப்போனார்கள்!

இந்த அடிப்படையில் எமது வலைத்தளத்தை வாசித்து உண்மையில் தெய்வ சாதனை செய்துகொண்டு தமது உலகவாழ்க்கையினையும், ஆன்ம வாழ்வினையும் பிரகாசப்படுத்த நினைப்பவர்கள் இங்கு கூறப்பட்ட விடயங்களை தாராளமாக முயற்சிக்கலாம்.

அடுத்து எம்மை தொடர்புகொள்ளும் அன்பர்கள் பலரிடம் இருந்து நாம் உணர்ந்துகொண்ட ஒருவிடயம்; பலர் குழப்ப நிலையில் உள்ளார்கள் என்பது! ஆன்மீகம், பௌதிக வாழ்க்கை என்ற இரண்டு வாழ்க்கை உள்ளதாகவும் ஒன்றினை அடைவதானால் மற்ற ஒன்றை தியாகம் செய்யவேண்டும் எனவும், இறைவனை வழிபட பல கட்டுப்பாடுகள் உண்டு, தினசரி வேலைகளுடன் எம்மால் செய்ய முடியாது, வயதான காலத்தில்தான் இறை சாதனை! மனதில் காம எண்ணங்கள் அதிகமாக உள்ளன! இப்படி பல பிரச்சனையினை மனதில் சுமந்த வண்ணம் தம்மையே தாழ்வாக எண்ணி தமது ஆன்ம பலத்தினை சிதைத்துக் கொள்கின்றனர். மேற்குறிய எந்தவித எண்ணமோ வேறு எந்த கட்டுப்பாடோ இறை சாதனைக்கு தடை என்று எண்ணினால் அது முற்றிலும் பிழையான கருத்து! இருக்க வேண்டிய ஒரே தகுதி நாம் அடைய வேண்டிய  நிலையினை அடைவதற்குரிய தகுதியை விடாமுயற்சியுடன் வளர்த்துக்கொள்ள விரும்பும் தளராத மனம்! இத்தகைய பண்பு ஒன்று மட்டும் இருக்குமானால் உங்களால் எக்காரியத்தையும் இலகுவாக செய்யமுடியும்!

நாம் உலகத்தில் தான் இருக்கிறோம், அதலால் உலகவாழ்க்கையினை தவிர்க்க முடியாது, உலக வாழ்க்கையினை தவிர்த்தால் நாம் உண்மைத்தன்மையினை தவிர்த்து விட்டு கற்பனை வாதத்தில் வாழ்பவர்களாகி விடுவோம்! தெய்வ சக்தி என்பது தனியாக எங்கோ பரலோகத்தில் இருக்கும் ஒரு வஸ்து அல்ல! எம்மிலே, எமக்கு உள்ளேயே இரண்டற கலந்து எல்லாமுமாய் இருப்பது! அதனை உணர்வதே ஞானம்! அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தால் அது சித்தி! இதற்காக எதையும் விட்டுவிட்டு ஓடத்தேவையில்லை! போகமும் மோட்சமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது! அதை பிரித்தறியும் சக்தியே ஞானம்! இதனை பெறுவதற்கே தெய்வ சாதனைகள்! இதை விடுத்து அதனை விட்டுவிட்டு தூர ஓடுவதால் எதனையும் பெறமுடியாது! கிணற்று தவளை போல் இதுதான் உலகம் என்று நம்பிக்கொண்டு வாழ்வோம்!
இவற்றை எப்படி அனுபவத்திற்கு கொண்டு வருவது என்பதுதான் அனைவரது கேள்வியும்! அதற்கான வழிமுறையினையே இந்த பதிவில் சொல்லப்போகிறோம்!

  1. முதலில் எம்மில் உறுதியினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்த உறுதியினை வெறும் உதடுகளும், வாயும் சொல்லும் மேலோட்டமானதாக இல்லாமல் ஆழ்மனதில் பதிந்து உள்ள ஒரு பண்பாக மாறவேண்டும். இதனை செய்வதற்கு சித்த சாதனை உதவி புரியும், எமது வலைத்தளத்திற்கு இறை சாதனை பற்றி அறிந்து அதனை பெற்று உலக இன்பங்களும், மோஷ சாதனையும் பெற என்ற எண்ணத்துடன் வருகை தந்திருப்பீர்களேயானால்  இந்த பதிவில் உள்ள சித்த சாதனையுடன் உங்கள் சாதனையினை தொடங்குங்கள்! உங்கள் வாழ்வில் அற்புதமான இன்பமயமான, மாற்றத்தினை காண்பீர்கள்! தெய்வ சக்தி உங்களுக்கு எப்போதும் உதவிக்கொண்டிருப்பதை உணர்வீர்கள்! இந்த சாதனை உங்களை அடிப்படையில் தயார் செய்வதற்கு!
  2. இரண்டாவது படி எம்மைவிட எமக்கு உதவக்கூடிய உயர்ந்த சக்தியுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது! எமது வலைத்தளத்தினை பார்வையிட வரும் அனைத்து ஆன்மாக்களுக்கும் எமது குருமண்டலத்தின் குருமார்கள் அனைவரும் உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்! ஆகவே அவர்களது உதவியினை பெறுவதற்கு தினமும் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம், ஆகவே கீழ்வரும் குரு நாமங்களை தினமும் கூறி எம்மை சரியான பாதையில் வழி நடத்தும் படி வேண்டிக்கொள்ளவேண்டும். மீண்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், அவர்களது பணி உங்களுக்கு காரியத்தினை நடாத்தும் சக்தியினை தந்து உதவுவதே! காரியத்தை ஆற்ற வேண்டியது நீங்கள்! கீழ்வரும் பத்து குருமார்களும் எமது சித்த வித்யா மண்டலத்தினை வழி நடாத்தும், சக்தியளிக்கும் குருமார்கள்! இவர்களை தினமும் நினைப்பது அவசியம்!
  3. சித்த வித்யா குருமண்டலம் :
1.     ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குரவே போற்றி!
2.  ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குரவே போற்றி!
3.     ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குரவே போற்றி !
4.     ஓம் ஸ்ரீ போக நாத குரவே போற்றி!
5.     ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குரவே போற்றி!
6.     ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குரவே போற்றி!
7.     ஓம் பரம் தத்வாய நாராயண குரவே போற்றி!
8.    ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குரவே போற்றி!
9. ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குரவே போற்றி!
10.ஓம் ஸ்ரீ ஸோமானந்த நாத ஆத்ம குரவே போற்றி!
இந்த குரு நாமங்களை தினசரி கூறிவர உங்கள் மனம், சித்தம் அவர்களுடன் தொடர்புகொள்ள தொடங்கும். இதனால் உங்கள்  ஞானம் அதிகரித்து சரியான பாதையில் முன்னேறிச் செல்வீர்கள்!

4. மேற்கூறிய இரண்டு படிகளையும் ஒழுங்காக தினசரி செய்தபின்னர் ஆதி பராசக்தியினை நெருங்கும் சாதனையினை செய்யத்தொடங்க வேண்டும். இதுவே பரிணாமத்தினை உயர்த்தும் வழியாகும். எமது வலைத்தளத்தினை வாசித்து இவ்வழியில் முன்னேற விரும்புபவர்களுக்கு இருவகையான பராசக்தி உபாசனையினை குருமண்டல குருமார்கள் பரிந்துரைத்துள்ளனர்.
  1. காயத்ரி உபாசனை : இதுபற்றிய விரிவாக எழுதியுள்ளோம், பதிவுகளின் தொகுப்பை எமது வலைத்தளத்தின் உள் காணலாம். காயத்ரி சாதனை ஒருவனது அறிவினை தூண்டி இறைவழியில் சரியாக நடாத்தி வைக்கும்.
  2. ஸ்ரீ ஜோதி – ஸ்ரீ வித்யா: இது போகம் மோஷம் ஆகிய இரண்டையும் வாழ்வில் தரக்கூடியது. இதுபற்றிய மேலதிக விபரங்களை தகுந்த இணைப்புகளில் காண்க,

நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு கடைப்பிடிக்க இலகுவான மனதிற்கு பிடித்த ஒரு வழியினை தேர்ந்து எடுத்து அதனை பயிற்சிப்பது. இதற்கு தீட்சை வேண்டும் என்பது பொது விதி! அதற்கு நீங்கள் ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08.00 – 08.40 மணி அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி  ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை மெதுவாக பலனளிக்க தொடங்கும். 

தற்கால நிலவரத்திற்கேற்ப, வாழ்க்கை முறைக்கு ஏற்ப சித்தர்களதும், ரிஷிகளதும் தெய்வ சாதனை முறைகளை அனைவரும் காடு மேடு என்று அலைந்து கஷ்டப்படாமல் அவரவர் இடத்திலேயே இருந்து கொண்டு செய்தவண்ணம் உயர்ந்த ஞானத்தினையும், தெய்வ சக்தியினையும் பெறும் எளிய வழிமுறையினை இங்கு வெளிப்படுத்தியுள்ளோம். இதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணம் உங்கள் ஆர்வமும், சிரத்தையும், அன்பும் மட்டுமே! இதில் கூறியுள்ளபடி கடைப்பிடிக்க உங்கள் இன்பமயமானதாய் மாறும் என்பதனை உறுதி கூறுகிறோம்!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே


என்ற திருமூலரின் வாக்கிற்கு அமைய இதனை வெளிப்படுத்தியுள்ளோம். தேவையானவர் முயற்சித்து பயன் பெறுக!

Thursday, November 21, 2013

தெய்வ சக்தியை துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை (Subconscious mind Practice to awaken the divinity in Us!)


இந்த பதிவினை PDF கோப்பாக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 


எந்த காரியத்தை செய்வதற்கும் தகுந்த பக்குவம் அவசியம், அந்த பக்குவம் பெறாமல் செய்யும் எந்த காரியமும் முறையான பலனினை தராது என்பது பிரபஞ்ச நியதிகளுள் ஒன்றாகும்!
இந்த பிரார்த்தனை எமது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ அமிர்தானந்த நாதரால் வகுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த முறையாகும். இதனை உறுதியுடன் கடைப்பிடிப்பவர்கள் பயிற்சிக்க தொடங்கிய சில நாட்களிலேயே தமது வாழ்க்கை இன்பமாக, தெய்வ சக்தியால் வழி நடாத்தப்படுவதை உணர்வார்கள்!
அந்த வகையில் ஸ்ரீ ஜோதி மூலம் ஸ்ரீ வித்யா சாதனை செய்ய விரும்புபவர்கள் குறித்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும், அந்த பண்புகளும் தன்மைகளும் அவர்களது ஆழ்மனமான சித்தத்தில் பதிந்து இருக்க வேண்டும், அப்படியிருப்பினும் மட்டுமே அவர்களது உபாசனை சிறப்பாக வேலை செய்யும். ஆகவே ஸ்ரீ ஜோதியில் பலன் பெற விரும்புபவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையினை நாற்பது நாட்கள் விடாமல் தினசரி மூன்று வேளை, மூன்று தடவைகள் வாசித்து அமைதியாக மனதில் கிரகித்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஸ்ரீ ஜோதியில் பங்கு பற்றி பலன் பெறுவதை விட இதனை செய்து கொண்டு எந்த தெய்வ சாதனை செய்வீர்களானாலும் அதன் பலன் பல நூறு மடங்குகள் அதிகரிக்கும் என்பதனை உறுதி கூறுகிறோம்!

சித்த சாதனை – Sub-conscious mind practice
நான் எனது குருவினதும் தேவியினதும் ஆசியினை வேண்டுகிறேன், அவை இப்போதும் எப்போதும் என்னுடன் இருக்கின்றன.

  1. தேவி, எனது முகமூடிகளான கோபம், சந்தேகம், வெட்கம்,  வெறுப்பு, நான் எனது குடும்பம் மட்டும் என்ற சுயநலம், எனது இனம் ஜாதி என்ற சிறுமை மனப்பான்மை, எனது செயல்களுக்கு பலன் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டேன்.
  2. எனது இருதயத்தில் உன்னை வரவேற்க, நிரந்தரமாக குடியிருக்கக் மலர்ந்த மென்மையான தாமரையினை வைத்திருக்கிறேன்,
  3. உன்னை பணிந்து வேண்டிக்கொள்கிறேன், என்னுள் வருவாயாக! உனது குளிர்ந்த, மென்மையான, பொன்னிற கிரணங்களை என்னுள் செலுத்துவாயாக!
  4. எனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உனது இயல்பான அன்பு, இன்பம், ஞானம் ஒளி, சங்கீதம், நாட்டியம், கவித்துவம், இரக்கம் என்பவற்றை நிரப்புவாயாக!
  5. இந்த குணங்களின் இயல்புகளை அலை அலையாக என்னுள் மோதச் செய்து என்னை இன்பத்தில் மூழ்க வைப்பாயாக!
  6.  அனைத்து தீமையிலிருந்தும் காப்பாயாக!
  7. நீ என்னுள்ளும் வெளியிலும் இருந்து காட்டும் வழியினை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்குடன் இருக்கிறேன். எனக்கு தூய தெளிந்த குரலினையும்  இனிமையான வார்த்தைகளையும் தருவாயாக, உன்னுடைய தெய்வீக காட்சியினை அனுதினமும் உணரக்கூட்டிய தெளிந்த மனத்தினை தருவாயாக! நேருக்கு நேர் கண்டு உணரக்கூடிய ஆற்றலினை தருவாயாக!’
  8. ஒரு கணமும் என்னிடமிருந்து பிரியாதிருப்பாயாக!
  9. நீயில்லாமல் எனது வாழ்க்கை இல்லை! எனது கடமைகள் முடிந்து நேரம் வரும்போது என்னை உனது இருதயத்தினுள் எடுத்துக்கொள்!
  10. உனது அழகினையும் அன்பினையும் உலகத்திற்கு பகிர்ந்தளிக்க கூடியவனாகவும், பயனுள்ளவனாகவும் என்னை செயல்பட வை! இதுவே எனது நிரந்தர பிரார்த்தனையும், ஆசை, மற்றும் வாழ்வின் இலட்சியம்!
இந்த பிரார்த்தனையின் முக்கியத்துவமும் செயல்முறையும் வருமாறு;

  1. முதலாவது பிரார்த்தனையினால் எமது முகமுடிகளை கலைத்து விட்டு உண்மையான தன்மையுடன் இருக்க முனைகிறோம்!
  2. இரண்டாவது பிரார்த்தனையினால் தெய்வீக தன்மையினை இருத்துவதற்கான இடத்தினை எம்மில் உருவாக்குகிறோம்.
  3. மூன்றாவது பிரார்த்தனை மூலம் தெய்வ காந்த சக்தியினை எம்முள் ஈர்த்து எம்மை ஒளிப்படுத்துகிறோம்!
  4. நான்காவது பிரார்த்தனையில் எமது ஒவ்வொரு அணுவும், மூலையும் தெய்வீக தன்மையினால் நிரம்பும்.
  5. ஐந்தாவது பிரார்த்தனையினால் எமது உடலிலும் மனதிலும் தெய்வ காந்த சக்தியினை அலை அலையாக பெற்று எம்மில் சக்தியினை வலுப்படுத்துகிறோம்.
  6. ஆறாவது பிரார்த்தனையில் எம்மை நேர்மையற்ற வழியில் செலுத்தி ஆற்றலை வீணாக்கும் தீய சக்திகளில் இருந்து காக்கும் கவசத்தினை உண்டாக்குகிறோம்!
  7. ஏழாவது பிரார்த்தனையில் எம்மை சரணாகதி அடையவைத்து எம்முள் தோன்றி தெய்வ சக்தி இருந்து வழி நடத்தும் தன்மையினை உருவாக்குகிறோம்!
  8. தெய்வீக தன்மை இன்றி வாழ மாட்டோம் என்ற உறுதியினை எம்மில் உருவாக்குகிறோம்!
  9. எல்லையற்ற பரம்பொருளுடன் இரண்டற கலக்கும் நிலைக்கு எம்மை தயாற்படுத்துகிறோம்.
  10. மற்றவர்களுக்கு உதவி வாழ்வதே உண்மை இயல்பு ஆதலால் தெய்வ சக்தி பெற்று மற்றவர்களுக்கும் உதவும் தன்மை உடையவர்களாகிடுங்கள்!

Sunday, November 17, 2013

ஸ்ரீ வித்யா - ஸ்ரீ ஜோதியில் எமது வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் முறை


வாசகர்கள் அனைவரும் கட்டாயம் இந்த முதல் பதிவினை வாசித்து விட்டு இதனை வாசிக்கவும்.

இந்த  பதிவினை PDF ஆக இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளலாம். 

இது செயற்படும் முறை:
முதலில் நீங்கள் உங்கள் பூஜை அறை அல்லது வசதியான இடத்தில் கீழே அறிவுறுத்தப்பட்ட படி ஒரு ஸ்ரீ சக்கரமும், எண்ணை விளக்கும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் இங்கு தரப்பட்ட எளிய யோகப்பயிற்சியினை சில வட்டங்கள் செய்து அமைதியான நிலையில் இருந்து கொண்டு உங்கள் பிரார்த்தனையினை செய்து வர வேண்டும்.
மறுமுனையில் எமது குருமண்டலத்தில் உள்ள குருமார்களால் வாராந்திரம் (ஒவ்வொரு ஞாயிறும்) நீங்கள் தியானிக்கும் போது ஸ்ரீ சக்கரத்தில் செலுத்தும் ஆன்ம சக்தியிற்கு ஸ்ரீ வித்யா மந்திரங்களால் சக்தி ஏற்றப்படும்.
இந்த செயல்முறையினை நீங்கள் விட்டிற்கு மின்சாரம் பெறும் முறையுடன் ஒப்பிட்டு மேலும் விளங்கி கொள்ளலாம். அதாவது பெரும் அணைக்கட்டில்/உலையில் உற்பத்தி செய்யப்படும் பல்லாயிரம் கிலோ வோட் மின்சாரம், குறித்த வாரியத்தின் மூலம் நீங்கள் உங்களுக்கு வேண்டும் என விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் ஏற்று தகுந்த இணைப்பினை கொடுத்து உங்களுக்கான மின்சாரத்தினை பெறுவது போன்றது. மின்சாரம் இணைப்பு கொடுத்தாலும் அதனை பாவித்து பலன் பெறுவதற்கான ஸ்விட்ச் உங்கள் கையில் இருப்பது போல இதில் பரிபூரண பலன் பெற உங்களது சிறு முயற்சியும் அவசியம்!
இதை நீங்கள் சரியாக செய்துவர உங்கள் வாழ்வில் ஸ்ரீ தத்தும் எனும் போகமும் மோக்ஷமும் பெறும் பாதையில் முன்னேற ஆரம்பிப்பிர்கள்.

இந்த ஸ்ரீ ஜோதியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முன் ஆயுத்தங்கள் கீழே பகுதி ௦1  இல் தரப்பட்டுள்ளது. 

பகுதி ௦1

  1. ஸ்ரீ சக்கரம் படம் ஒன்று (வர்ண படம் சென்னையில் ஆத்மா ஞான யோக சபாவில் கிடைக்கும், தொடர்பு கொண்டால் தபாலில் அனுப்பி வைப்பார்கள். முடியாதவர்கள் இந்த இணைப்பில் உள்ள  படத்தினை போட்டோ பிரிண்டு போட்டு லேமினேட் செய்து பிரேம் செய்து கொள்ளவும்.
  2. எண்ணை விளக்கு : நெய் விளக்கு உத்தமம், அல்லாவிடில் தேங்காய் எண்ணை விளக்கு வைத்துக் கொள்ளலாம்.
  3. இடம்: பூஜை அறை அல்லது வசதியான சுத்தமான இடத்தில் ஒரு சிறிய மேசையில் கிழ்வரும் அமைப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
  4. இந்த இணைப்பில் உள்ள படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி எமக்கு தபாலில் அனுப்பி வைக்கவும். நீங்கள் ஸ்ரீ ஜோதி படிவம் அனுப்பும் தபாலின் இடது மூலையில் உங்கள் முகவரியினையும், படிவத்தின் பின்புறம் உங்கள் ஈமெயில் முகவரியினையும் குறிக்கவும். இயலுமாயின் படிவத்தினை ஸ்கான் செய்து அனுப்பிவைத்தல் நலம். ஏற்கனவே அனுப்பிவிட்டவர்கள் இமெயிலின் மூலம் எமது மின்னஞ்சலிற்கு (sithhavidya@gmail.com) அறியத்தரவும். படிவம் எமக்கு கிடைத்தவுடன் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்துவோம்.

பகுதி - ௦2
இந்த பகுதியில் மேலே கூறிய ஒவ்வொன்றினதும் அவசியமும் முக்கியத்துவமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரம்
இதுவே அனைவரையும் இணைக்கும் சிம் காட் (Sim card), ஸ்ரீ சக்கரத்திலுள்ள கேத்திர கணித அமைப்புகள் பிரபஞ்ச சக்திகளை சரியான விகிதத்தில் ஆகர்ஷித்து குவிக்கும் செயலை செய்விக்கும். அத்துடன் குரு மண்டலத்தில் இருந்து அனுப்பும் சக்தியினை சேர்த்து நீங்கள் பிரார்த்திக்கும் வேளையில் உங்களிற்கு தரும்.
விளக்கு
இது அக்னி, பிரபஞ்சத்தில் எந்த சக்தியினையும் இணைப்பது அக்னி, இதனாலேயே அனைத்து விடயங்களிலும் அக்நியிற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. தற்கால நடைமுறையில் கூறுவதானால் செல்போனிற்கு பற்றரி மாதிரி!
இடம்
குறித்த ஒரு இடம் இந்த சக்தி பரிமாற்றத்திற்கு ஒதுக்குவதால் அந்த இடத்தில் சக்தி தேங்கி உங்கள் பிரார்த்தனை, மனவிருப்பங்கள் நிறைவேறும்.  
படிவம்
இதுவே மூல சக்தியுடன் உங்களை இணைக்கும் இணைப்பு, இந்த படிவத்தினை உங்கள் கைகளால் நிரப்பி அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஐந்து பேர் இதனால் பலன் பெற வேண்டுமெனில் அவர்கள் ஐந்து பெரும் தனித்தனி படிவம் நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த படிவங்கள் நவாவரண பூஜை நடக்கும் மகா மேருவிற்கு கீழே வைக்கப்படுவதால் அந்த நபர்களுக்கு ஸ்ரீ யந்திரத்தின்  சக்தி எப்போதும் செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்.


 பகுதி ௦3
தியான முறை
நீங்கள் அனுப்பிய படிவம் எம்மை அடைந்தவுடன் அதன் முலம் உங்களது ஆத்மா சக்தியிற்கு சித்தர்களின் சில இரகசிய முறைகள் முலம் குரு மந்திரமான “ஓம்” கார தீட்சையும், தேவியின் மூல மந்திரமான “ஹ்ரீம்” கார மந்திரமும் உங்கள் சூஷ்ம உடலில் பதிவிக்கப்படும். இதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரத்தின் முன்னாள் அமர்ந்து தியானிக்க தொடங்கும் போது மூல சக்தியுடன் தொடர்பினை பெறுவீர்கள்!
தினசரி குறித்த நேரத்தில் குரு மந்திரமான “ஓம்” தேவியின் மந்திரமான “ஹ்ரீம்” இரண்டையும் கீழே கூறப்பட்ட முறைப்படி அப்பியாசித்து தரப்பட்ட பிரார்த்தனையினை செய்யவும்.

  1. முதலில் விளக்கை ஏற்றி சற்று நேரம் ஆழமாக மூச்சினை எடுத்து மனதினை அமைதிப்படுத்தவும். ின்னர் உள்முச்சு எடுக்கும் போது “ஓம்” எனும் மந்திரத்தினை ஓம் ம் ம் என்று “ம்” சப்தம் முன்று தடவை வரும் அளவிற்கு உச்சரிக்கவும். வெளிமுச்சுடன் “ஹ்ரீம்” என்ற மந்திரத்தினை உச்சரிக்கவும். இப்படி இயலுமான அளவு மூன்று தொடக்கம் ஐந்து நிமிடம் செய்யவும். இதன் போது உங்கள் உடல், மனம் என்பன சக்தியினை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் உரிய வகையில் அமைதியடையும்.
  2. உங்கள் தாய், தந்தை, குருவினை, குலதெய்வம், கிராம தெய்வத்தினை வணங்கவும். பின்னர் மூலாதாரத்தில் இருக்கும் கணபதியினை மனதில் வணங்கவும். பின்பு கீழ்வரும் சித்தவித்யா குருமண்டல ஆவாஹனம்:  
    ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குரவே போற்றி !
    ஓம் ஸ்ரீ போக நாத குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குரவே போற்றி!
    ஓம் பரம் தத்வாய நாராயண குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குரவே போற்றி!
    ஓம் ஸ்ரீ ஸோமானந்த நாத ஆத்ம குரவே போற்றி!           இந்த பத்து நாமங்களையும் கூறி இந்த தியானத்தினை செய்வதற்கு மானசீகமாக வழிகாட்டும் படி பிரார்த்தித்து கொள்ளவும். 
  3. பின்பு அமைதியாக கண்ணை திறந்து எரியும் விளக்கின் ஜோதி யினை சில வினாடிகள் பார்த்துவிட்டு அத்தகைய ஜோதி உங்களது மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கண் வரை பயணித்து வெளிவந்து உங்கள் முன்னாள் இருக்கும் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருக்கும் “புள்ளி” “பிந்து” வில் வந்து இணைவதாக பாவிக்கவும். இந்த பாவனையின் நடுவில் மனதில், அல்லது வாயினை அசைத்த வண்ணம் “ஓம் ஹ்ரீம் ஓம்” என்ற மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் இருக்க வேண்டும்.
  4. பின்னர் சில வினாடிகள் ஸ்ரீ சக்கரத்த்தின் பிந்துவினை கண்களால் உற்றுப்பார்த்து “ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரத்தினை உச்சரித்தவண்ணம் பிந்துவிலிருந்து ஜோதி வந்து உங்கள் உடலில் சேர்வதாக பாவிக்கவும். இந்த ஜோதி நீங்கள் முதலில் செலுத்திய ஜோதியிலும் பார்க்க பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஏனெனில் முதலில் செலுத்திய ஜோதியில் உங்கள் ஆத்ம சக்தி மாத்திரம் இருந்தது, இப்போது நீங்கள் பெறும் ஜோதியில் இந்த வட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து ஆன்மாக்களது சக்தியும், குருமண்டல சக்தியும் சேர்ந்து வரும். இதனை பெற்றவுடன் உங்களால் உங்கள் இன்ப வாழ்க்கைக்கு தேவையான வற்றை பெறும் சக்தி பெற்றவர்கள் ஆவீர்கள்.
  5. பின்னர் இந்த பிரார்த்தனையினை மனதில் மூன்று முறை உச்சரித்து அமைதியாக தியானிக்கவும்.
a. அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திட செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
ஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்
கழிந்தன வினைகள் எல்லாம் காய்ந்தன பாப்பம் எல்லாம்
இன்பமும் சுகமும் பெறும் இருந்திடும் பாக்கியங்கள்
நன்மையையும் செல்வம் கீர்த்தி நல்கிடும் அருளும் ஞானம் நாடிய பொருள் கைகூடும் நலிவெல்லாம் அகன்று ஓடும்
தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

இதன் பின்னர் ஸ்ரீ சக்கரத்தினை பார்த்த வண்ணம் உங்களால் இயன்ற அளவு “ஓம் ஹ்ரீம் ஓம்’ மந்திரம் ஜெபம் செய்யவும். 

Sunday, November 03, 2013

ஸ்ரீ வித்யா - ஸ்ரீ தந்திரம் - ஸ்ரீ ஜோதி - அனைத்து ஆன்மாக்களும் ஒளி பெறும் சாதனை

ஸ்ரீ தந்திரம் என்பது ஸ்ரீ வித்யா மார்க்கத்தினை சேர்ந்தது. ஸ்ரீ வித்யா என்பது மந்திரம், ஸ்ரீ சக்கரம் என்பது யந்திரம், ஸ்ரீ கல்பம் என்பது தந்திரம். இந்த மூன்றும் இணைந்து செய்யப்படும் சாதனை போகம் எனும் உலக இன்பங்கள் அனைத்தையும் தருவதுடன் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கும் மோக்ஷத்தினையும் தரும்.

ஸ்ரீ வித்யா உபாசகர் போகத்தினையும் மோக்ஷத்தினையும் ஒரே பொருளின் இரு வேறு முனைகளாக கருதி எதனையும் வெறுத்து ஒதுக்காமல் ஞானத்துடன் வாழ்ந்து பேரின்பத்தினை பெறுவர. உலக வாழ்க்கை என்பதும் ஆன்ம வாழ்க்கையின் ஒரு பாகமாகும். இறைவன் இறைவி என்ற இரண்டும் சக்திகளும் எப்போதும் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்தே காணப்படுகிறது. ஒருவருடைய தனி வாழ்க்கை என்பதில் இந்த பிரபஞ்ச்சத்தின் வாழ்க்கையும் இணைந்தே உள்ளது. இந்த பிரபஞ்ச்சத்தின் சிறுபகுதியும் அதன் முழு ஆற்றலையும் கொண்டுள்ளது. இதையே பிண்டத்தில் உள்ளதெல்லாம் அண்டத்தில் உண்டு என்றார்கள். தாந்திரிகம் இந்த அடிப்படையினை கொண்டு மனிதனது ஸ்தூல, சூக்ஷ்ம அமைப்பினை அறிந்து அதனை சரியாக தட்டி எழுப்புவதன் மூலம் பிரபஞ்ச சக்திகளை வசப்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டார்கள். இப்படியாக பல தாந்திரிக முறைகள் உருவாயின, எந்த ஒரு தந்திரத்திற்கும் மேலே குறிப்பிட்ட மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற மூன்றும் இணைந்திருக்கும். இப்படியானவையே இன்று உருவ வழிபாடுகளாக, கோயில்களாக உருப்பெற்று உள்ளன. இன்று இவை வெறும் சின்னங்களாக மட்டுமே உள்ளன. உண்மை ஞானம் வெளிப்படையாக மறைந்து குரு பரம்பரையினூடாக மாத்திரம் பரிமாறப்பட்டு வந்துள்ளது. இந்த வழியில் எமது தளம் குரு பரம்பரையின் அனுமதி பெற்று உலகம் இன்பப் பாதையில் ஆக்க வழியில் செல்லக்கூடிய ஸ்ரீ தந்திரம் பற்றியும், காலம் வரும் போது காயத்ரி தந்திரம் பற்றியும் கூறுவோம். 

இனி ஸ்ரீ தந்திரத்தின் மூல அடிப்படையான ஸ்ரீ சக்கரம் பற்றி பார்ப்போம். ஸ்ரீ சக்கரம் என்பது இந்த பிரபஞ்சத்தின் மூல அமைப்பு. பிரபஞ்சத்தின் மூல அமைப்பு  எது? 1) இடம் (space) 2) காலம் (time), 3) உயிர் சக்தி (life-energy) இந்த மூன்றின் ஊடாக மட்டுமே இந்த வாழ்வு நகர்கிறது. இந்த மூன்றின் இணைவுமே இந்த பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் உணடு பண்ணுகின்றன. இதையே சிவ சக்தி, ராதா கிருஷ்ணன், சரஸ்வதி பிரம்மா என்று குறித்தனர். ஒவ்வொரு மனிதருமே பரிபூரணமான தெய்வங்கள். ஒவோருவரிலும் உயிர்சக்தியான தெய்வம் நிறைந்திருக்கிறது. ஸ்ரீ சக்கரம் என்பது முழுமையான பிரபஞ்ச சக்திகள் இணைந்த நிலையினை குறிக்கும் குறியீடு. அதாவது தனியாக சிவமோ, சக்தியோ இன்றி இரண்டும் வேறு இல்லை என்று இணைந்த நிலை! இதையே லலிதா சஹஸ்ர நாமம் 999 நாமம் சிவசக்தி ஐக்கிய ரூபிணி எனக்குறிக்கிறது. ஆக ஸ்ரீ வித்தையின் மூல நோக்கம் பிரிந்திருக்கும் சக்திகளை ஒன்றாக இணைத்து ஒரே மூல சக்தியாக ஆக்குவது. 

ஸ்ரீ தந்திரம் உயிர் சக்தியினை இணைக்கும் செயன் முறையினை கூறுகிறது. ஆகவே மனித உடலே இந்த பிரபஞ்ச்சத்தில் இருக்கும் மிகச்சிறந்த யந்திரம், ஆக்வே மனித உடலை ஸ்ரீ யந்திரமாக பூஜிப்பதே மிக உயர்ந்த சாதனை! 

பூஜை என்பது குறித்த தெய்வங்களுக்குரிய குணங்களை பாவித்து  மந்திரங்களை உச்சரித்து பிரபஞ்ச தெய்வ சக்திகளை உடல் மனச்சக்தியில் விழிப்பிக்க செய்யும் செயல் முறை! இதனால் உடல் மனம் இருளிலிருந்து ஒளி  நிலையினை அடைந்து விழிப்புணர்வில் இருக்க  ஆரம்பிக்கும். 

குருவே "நான்" என்ற சிறிய  தனி ஆன்மா நிலையில் இருந்து முழுமையான  பிரபஞ்ச ஒளி  நிலைக்கு செல்வதற்குரிய பாதை! குருவுடன் சரணாகதி அடைவது என்பதே இந்த ஒளிக்கலப்பிற்கு பாதை! இப்படிக் கலந்த பின்னர் குரு வேறு சீடன் வேறு என்ற நிலை அற்றுப்போகிறது! இருவரும் ஆன்ம நிலையில் ஒரே கடவுளாகின்றனர்! ஆனால் உலக நாடகத்தில் தமது பாத்திரத்தினை செவ்வனே செய்வதற்கு தனித்து தமது கடமைகளை செய்கின்றனர்! இப்படியான பாதையில் பயணிப்பதால் குரு சீடன் ஆகிய இருவரும் ஆன்ம பலம் பெற்று தெய்வ நிலை அடைகின்றனர். 

மேலே கூறிய நிலையினை எப்படி அடைவது என்று இப்போது உங்களுக்கு கேள்வி வந்திருக்கும். பொதுவாக ஸ்ரீ வித்தை என்றவுடன் பலர் மணிக்கணக்கான நேர பூஜை என்று கருதுகின்றனர். இதில் உண்மை இருந்தாலும், சில சுருக்கமான அதேவேளை சக்தியில் எதுவித குறையும் இல்லாத தந்திரீக முறைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு முறைதான் எமது குருநாதரால் உபதேசிக்கப்பட்ட "ஸ்ரீ ஜோதி" எனும் பூஜை முறை. 

இதுபற்றி அவர் கூறிய விளக்கங்களை அப்படியே உங்களுக்கு தருகிறோம். இவற்றை விளங்கிக் கொண்ட பின்னர் எமக்கு தனிப்பட மின்னஞ்சலிற்கு உங்கள் விருப்பத்தினை அறியத்தரவும். உங்களுக்கும் இந்த பூஜையின் பலன் கிடைக்கச் செய்யும் வழி முறையினை அறியத்தருகிறோம் .

எமது குரு அத்வைத அமிர்தானந்த பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்யா திகம்பர அவதூத அதிவர்ணாமி 108 ஸ்ரீலஸ்ரீ மகா மண்டலேஸ்வரர் அருளிய ஸ்ரீ ஜோதி பூஜா விதானம்;
ஸ்ரீ ஜோதி என்றால் அன்பும் அரவணைப்பும் நிறைந்த எல்லையற்ற ஒளி என்று பொருள், அதேவேளை எல்லையற்ற ஒளியினை தரக்கூடியது என்றும் பொருள் படும். இந்த சிறிய பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரது இருதய கமலத்திலும் 05 பில்லியன் ஒளிக்கற்றைகள் உள்ளன.    தேவியானவள் தனது பெருந்திட்டத்தில் வானத்தை பில்லியன் கணக்கான அண்டங்க்களாலும், ட்ரில்லியன் கணக்கான நட்சத்திரங்களாலும் ஒளிரச் செய்கிறாள். இந்த பெருந்திட்டத்தின்  ஒரு பகுதியாக அனைத்து ஆன்மாக்களும் தன்னிலை உயர்ந்து உயர் நிலை பெற்றிடும் தெய்வீக திட்டம்தான் இந்த ஸ்ரீ ஜோதி!
எளிய பிரணாயாமத்தினால் உடலில் உள்ள நஞ்சினையும்,  தியானத்தினால் மனதின் குழப்பங்களையும் அகற்ற முடியும். எமது வாழ்க்கையின் தரத்தினை சாதாரண நிலையிலும் பார்க்க  உயர்ந்த நிலைக்கு உயர்த்த முடியும். ஆன்மீகம் உங்களை தெய்வத்தன்மை உடையவர் ஆக்குகிறது. எதைக் கொடுக்கிறீர்களோ அதனைப் பெறுவீர்கள். அன்பைக் கொடுத்தால் அன்பு கிட்டும். நீங்கள் மற்றவரை ஆதரித்தால் நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்! உங்களுக்கு எவ்வளவு நபர்களை அல்லது எவ்வளவு தெரியும் என்பது சிறிய எல்லைக்கு உட்பட்டது. தெரியாத நபர்களும் விடயங்களும் எல்லை அற்றவை. எல்லையற்று பரந்து நிறைந்திருக்கும் இயற்கையின் அதீத சக்திகளை பெறும் முறையினை தெரிந்து கொண்டால் அவை நாம் உதவி கேட்பதற்கு முன்னரே எமது தேவைகளை தெரிந்து கொண்டு நடாத்தி வைக்கும். ஆனால் இயற்கையின் ஒரு நியதி "அறுவடை செய்யமுன்னர் விதைக்க  வேண்டும்" என்பது ஆகும். எமது உடலானது இந்த இயற்கை அதீத சக்திகளை ஈர்க்க கூடிய கேந்திரங்களை  கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட சக்தி வாய்ந்த அடிப்படைகளை கொண்டு நான் சிறிய பூஜை முறை ஒன்றினை வகுத்துள்ளேன். அது உங்களது அன்பு சக்தியை ஒளியாக்கி அந்த ஒளியை அதீத சக்தியாக மாற்றும் தன்மை வாய்ந்தது. 
 எம்மில் அனேகர் வாழ்க்கை என்பது போராட்டம், 90 % மனசஞ்சலம் 10 % இன்பம், நாம் அனைவரும் எப்போது ஏதாவது ஒரு பிரச்சனையிலேயே இருக்கிறோம். அவை எம்மாலோ அல்லது நாம் வாழும் சமூகத்தாலோ உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். சமூகம் தனது விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும். அவற்றை கடைப்பிடிக்க தவறினால் தண்டிக்கப்படுவோம். இத்தகைய நிலையில்  எமது பிரச்சனைகள் அனைத்தையும் எம்மால் தீர்க்க முடியாது.  அந்த நிலையில் எமக்கு உதவி தேவைப்படுகிறது. முதலில் நாம் எமக்கு தெரிந்த நபர்களிடம் உதவி கேட்போம். ஆனால் எமக்கு தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம். மொத்த மக்கள் எண்ணிக்கையில் ஆயிரம் நபர்களே எமக்கு தெரிந்தவர்களாக இருக்கும். தற்போதைய நிலையில் இன்டர் நெட்டில் தேடிப்பார்ப்போம். இயற்கை அழிவுகளில் அதுவும் உதவாது. இயற்கை பூகம்பம், புயற்காற்று, எரிமலை, சுனாமி என்பவற்றில் பயங்கரமான விளைவுகளை கொடுக்கும். இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றிருந்தோமானால் அது மிகவும் இனைமையானது. இயற்கையினை கட்டுப்படுத்த முடியுமாயின் எல்லையற்ற சக்தியினையும் நிறைவினையும் பெற முடியும். கண்ணுக்கு புலப்படாது இயற்கையினை கட்டுப்படுத்தும் சக்திகளையே நாம் தேவ தேவியர் என அழைக்கிறோம். இயற்கையிடமிருந்து உதவியினை பெறவேண்டுமாயின் முதலில் அதன் விதிகளை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். அறுவடை செய்யும் முன்னர் விதைக்க வேண்டும். அதாவது இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் தேவதைகளது உதவியை பெறுவதற்கு முன்னர் நாம் அவற்றிற்கு தாவேண்டும். இயற்கை சக்திகளில் இருந்து பெறும் உதவியானது நாம் எமது பிரச்சனைகளை தீர்த்து அமைதியான முறையில் ஆனந்தமாக எமது வாழ்க்கையினை களிப்பதற்கு ஆகும். இதற்கு ஒருவர் தனது "நான்" என்ற சுய நல வட்டத்தில் இருந்து "நாம்" என்ற ஒரே நான் ஆக வேண்டும். இதை அனைவரும் சேர்ந்து குழுவாக சேர்ந்து ஒரு நோக்கத்திற்காக  செய்ய வேண்டும். அந்த பொதுவான ஒரே நோக்கம் " நாம் அனைவரும் தெய்வ ஆற்றல் உள்ளவர்களாக மாறுவதுடன் எமது குழுவில் உள்ள அனைவரையும் தெய்வ சக்தி உடையவர்களாக மாற்றுவது" என்பதாகும். 
இது செயல்படும் முறை கீழ்வருமாறு; நாம் அனைவரும் எமது உயிர் சக்தியை வரையப்பட்ட சக்தி வாய்ந்த ஸ்ரீ யந்திரத்தின் மத்தியில் உள்ள ஒளியில் செலுத்தி அந்த யந்திரத்தை மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் அலங்கரித்து அக்னி, சூரியன், சந்திரன், காலம்  முதலான பிரபஞ்ச சக்திகளை ஆவஹித்தல் வேண்டும். இப்படி செய்யும் போது பிரபஞ்சத்தில் உள்ள ஆண் (yang ) பெண் (yin) சக்திகள் இணைந்து பிரபஞ்ச பேரானந்தம் ஊற்றெடுக்க தொடங்கும். இந்த அமிர்த பெருக்கினை எமது கண்களை, வாக்கு, இதயம், குஹ்யஸ்தானம் என்பவற்றில் நிலைப்பிக்கச்  செய்து பெற்ற சக்தியினை அனைவரிடமும் பகிர்ந்து எமது தேவைகளை தெய்வ சக்தியின் உதவி கொண்டு பெற்றுக்கொள்ளலாம். மதம் என்ற பெயரால் தேவையற்ற சுமைகளை சுமந்து எம்மை நாமே தண்டித்து கொண்டு துன்புறும் நிலையில் இருந்து வெளிப்பட்டு வெண்ணிற ஒளியில் இருந்து வானவில் வெளிப்பட்டு அழகு தோன்றுவது போல் எமது அன்பினை பலவித வண்ணத்தில் ஒளிரச் செய்யலாம். இது கற்றுக்கொள்வதற்கும் இலகுவானது.  
இந்த அரிய ஞானம் ஸ்ரீ வித்யா மார்க்கத்திலிருந்து வெளிக்கொண்டரப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கு கொண்டு தேவியின் ஒளியை பெற்று  தமது ஆன்மாவினை ஒளி நிலைப்படுத்துவதுடன் அனைவரும் ஒளி பெற உதவிட வேண்டும்! 
 நீங்கள் தெரிய வேண்டியது: உங்களது முக்கியத்துவம்  உடலின் அமைப்பும் அது எப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு பட்டுள்ளது என்பதனை உணர்ந்து அறிதல்!
நீங்கள் உணர வேண்டியது: உங்களில் அன்பு சக்தி எவ்வளவு விழிப்படைந்துள்ளது , உங்களைச் சூழ இருக்கும் அனைத்துமே உங்களது வாழ்க்கைக்கு அர்த்தத்தினை தருவது என்பது!
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது: ஏன் தெய்வ சக்தியினை நாம் பெறுவதனை விட அனைவருக்கும் கொடுப்பது முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
நீங்கள் மாற வேண்டியது: நீங்கள் யார்? எமது வாழ்வு எத்தகையது? இந்த உலகம் எப்படி? என்பதனை அன்பினூடாகவும் எமது மனதினூடாகவும் புரிந்து கொள்ளுதல்! 
எமது ஸத்குரு தேவரது ஆசியுடனும், குரு மண்டல ஆசீர்வாதத்துடனும்  எமது வலை தளத்தினை படிக்கும் அனைவரையும் இந்த ஸ்ரீ ஜோதியில் இணைத்து தெய்வ சக்தியினை பெறும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.

அடுத்த பதிவில் எப்படி நீங்கள் அனைவரும்  ஸ்ரீ ஜோதியில் இணைந்து கொள்வது என்ற வழிமுறையினை கூறுகிறோம்!

தீபத்திரு நாளில் அனைவரது ஆன்மாவிலும் ஸ்ரீ ஜோதி பெருகட்டும்!

ஸத்குரு பாதம் போற்றி!

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...