குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 23, 2019

Sir John Woodroffe



Sir John Woodroffe, இவரால்தான் மேற்கு உலகம் "தந்திரா" "குண்டலினி" என்ற வார்த்தைகளை தெரிந்துகொண்டது. இவர் பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வங்காள தேச கல்கத்தாவில் பணியாற்றியார். நீதிமன்றத்தில் பணியாற்றிய A. B. Ghose என்பாரினால் தந்திர மார்க்கத்தில் ஆர்வமேற்பட்டு அவருடன் சேர்ந்து ஆர்தர் ஆவலோன் என்ற பெயரில் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தந்திர சாஸ்திர நூற்களை வெளியிட்டார்.
ஸ்ரீ அவலானந்தா என்ற தீக்ஷா நாமம் உடையவர்.
இவர் ஆங்கிலேயராக இருந்தாலும் இவரது நூற்களில் கருத்துக்கள் பாரம்பரியம் மாறாத குருபரம்பரைக்குரிய விஷயங்களே கூறப்பட்டிருக்கும். இதற்கு காரணம் இந்த நூற்களை உண்மையில் முதல் வரைபு வரைந்தவராக A. B. Ghose கருதப்படுகிறார். இவர்கள் வெளியிட்ட நூற்களில் உள்ள ஆர்தர் ஆவலோன் எனும் பெயரில் ஆர்தர் என்பது A. B. Ghose இனையும் ஆவலோன் என்பது ohn Woodroffe இனையும் குறிப்பதாக கருதுகிறர்கள்.
இவர் எழுதிய நூற்களில் Serpent power என்ற நூல் பிரபலமானது. யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் இவரது நூலை அவரது மாணவராகிய செல்லத்துரை சாமிகளுக்கு கொடுத்து நன்கு படிக்கச் சொல்லி பின்னர் குண்டலினி சாதனை சொல்லிக்கொடுத்ததாக செல்லத்துரை சாமிகளுடன் 2003ம் ஆண்டளவில் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள சிவதொண்டன் நிலையத்தில் உரையாடும் காலத்தில் கூறியுள்ளார். யோகர் சுவாமிகளின் ஆணைக்கமைய செல்லத்துரை சாமி அவர்கள் இந்த நூலை மொழிபெயர்த்து சிவதொண்டனில் வெளியிட்டு பின்னர் குண்டலினி சக்தி என்ற நூலாக தொகுத்திருந்தார்.
அதன் ஒரு பிரதி தந்து சாதனைக்கு உதவும் என்று என்னையும் படிக்கச்சொல்லியிருந்தார்.
Sir John Woodroffe, Tantra and Bengal என்ற இந்த நூல் SOAS University of London வெளியிட்டிருக்கிறது. JW இன் வாழ்க்கை வரலாற்றை ஆராய்கிறது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...