குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, February 05, 2019

நான் ஏன் எழுதுகிறேன்? - 03

அடிப்படையில் எழுதுவதற்குரிய உத்வேகம் எமது அகத்திலும் புறத்திலும் நடைபெறும் விஷயங்கள் சார்ந்து எமது மனதை சிந்திக்க தூண்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறது!

எமது சிந்தனைகள், கேள்விகளுக்கான, தேடல்களுக்கான முதல் படி எம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் உரையாடுவதில், கேள்வி கேட்பதில் ஆரம்பமாகிறது. இதில் திருப்தியான பதில் கிடைக்காமல் மேலும் தேடல் அதிகரிக்க, ஆழமான புரிதலைப் பெற வாசிப்பிலும், நூல்களைப் படிப்பதிலுமாக முன்னேறுகிறது. 

மிகச் சிறிய வயது முதல் நூற்களால் நிரம்பிய வீட்டில் வாழ்ந்த ஞாபகம் என்னுள் தாக்கம் செலுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு அறை நிறைய மாமாவின் சோவியத் ரஷ்ய நூற்களும், மார்க்சிச நூற்களும் நிரம்பி மார்க்ஸ் - எங்கல்ஸ், மாக்சிம் கார்க்கி போன்ற பெயர்களை பார்த்த ஞாபகம்! இன்னொருபுறம் அம்மாவின் சித்த மருத்துவப் புத்தகங்கள். 

எனது சிறுவயது வாசிப்பு கேள்வி, தேடல் ஆர்வம் சித்தர் பாடல்களிலும், மருத்துவத்திலும், சரித்திர நூற்கள், புராணக்கதைகள், அறிவியற் கோட்பாடுகளை வாசிப்பதிலும் ஆரம்பமாகியது. இந்த சிறுவயது வாசிப்பு ஆர்வத்தில் சரித்திரம் படிக்கும் ஆர்வம் மட்டும் குறித்த காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விட்டது! ஏனென்றால் சரித்திரம் என்று எழுதப்படுவது உண்மைச் சரித்திரத்தில் எள்ளளவும் தொடர்பில்லாமல், ஒரு சாராரின் கதையைச் சொல்லும் பெருமை கூறல்களுமாகவும், அதிகாரத்தையும், ஆணவத்தையும் நிறுவும் ஒன்றாகவுமே எனக்குப் பட்டது. ஆனால் ஒரு சமூகத்தின் அறிவியலுக்கான, அறிவிற்கான கூறு சரித்திரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் என்பது மறுப்பதற்கில்லை! 

ஒரு விஷயத்தின் மேலோட்டமான புரிதலை என்னால் எப்போதும் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை! உதாரணமாக ஒரு விஷயத்திற்கு இது தான் ஒரே காரணம் என்ற ஒன்று ஒரே வரியில் இருப்பதாக ஒரு போதும் நான் நம்பியதில்லை! சிறுவயது முதல் ஒரு விஷயத்தை எடுத்தால் அதன் முழுமையான புரிதலையும் பெறவேண்டும் என்ற முயற்சி ஆழமாக இருந்தது. அதற்கான விடாப்பிடியான முயற்சியும் மன ஒருமையும், ஞாபக சக்தியும் வாய்த்திருந்தது. 

உலகமும், எண்ணங்களும், பல் பரிணாமத்தில் இயங்குபவை என்பதையும் ஒன்றுடன் ஒன்று இடைத் தொடர்படைந்து கொண்டிருப்பவை என்பதையும் எப்போதும் உளமார நம்பினேன். அதற்குரிய தேடல்களாக அறிவியலையும், மறையியலையும் படிக்க பெரிதும் ஆர்வம் காட்டினேன்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...