குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 04, 2019

தாவோவின் தங்க மலர் இரகசியம் - 01 {The Secret of the Golden Flower}



Related image

{சிவாஜிகணேசனின் தங்கமலை இரகசியம் இல்லை}

லாவோட்ஸு கூறுகிறார், எதன் மூலம் இந்த இருப்புகள் இருக்கின்றனவோ அதற்கான வழி தாவோ எனப்படுகிறது. தாவோவிற்கு வடிவமோ, பெயரோ இல்லை, அது அனைத்தினதும் ஆதியாக இருப்பதன் சாரம் (essence), வாழ்வின் மூலமான சாரத்தை காணமுடியாது.

இது உயர்தளத்திற்கான ஒளியைக் கொண்டுள்ளது. இந்த உயர்தள ஒளியை காணமுடியாது, ஆனால் அது இரண்டு கண்களில் நிலை கொண்டுள்ளது. இன்று நான் உனக்கு தங்க மலரை அடைவதற்கான வழியினை காட்டி அடைவதற்குரிய உதவியை செய்கிறேன், இனி இதுபற்றி விபரமாக விளக்குகிறேன் கேள்;

உயர்ந்தது என்பதன் விளக்கம் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பதாகும். இதை ஸ்ரீ வித்தையிலும் காயத்ரி வித்தையிலும் அனுத்தர ஆம்னயம் என்று கூறுவார்கள்.
வாழ்க்கையின் இரகசியம் என்பது இயக்கத்தினூடாக இயக்கமற்ற சலனமற்ற நிலையை அடைவதில் உள்ளது என்பதை புரிந்து கொள்வாய்.
ஒருவன் எதையும் நேரடியாக அடைவதற்கு முயற்சிக்க கூடாது, அதாவது பிரபஞ்ச மகாசக்தியை நேர தான் அடையவேண்டும் என்று எண்ணக்கூடாது என்கிறார் லாவோட்ஸு. இதன் பொருள் பிரபஞ்ச மகா சக்தியைப்பற்றி அறிய அதன் உண்மைத் தன்மையான பேரண்டமான பிரபஞ்சத்தில் உண்மைத்தன்மையை அறிய முற்பட்டால் அது கிடைக்காது.
ஆனால் அதன் மாதிரிவடிவமான மனித உடலில் (ஹசிங் என்று சீனமொழியில் கூறப்படுகிறது) இதைப்பற்றி அறிய முயற்சிக்கலாம்.

இதையே சட்டமுனிச் சித்தர்

அண்டத்திலுள்ள்தே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிணமுமொன்றே
அறிந்துதான் பாக்கும் போதே என்பார்.

லாவோட்ஸு கூறுகிறார் தங்கமலரை அடைவதில் ஒருவன் கவனமாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும், தவறான பாதையில் சென்று விடக்கூடாது. இந்த வரிகள் ஒரு சாதகன் தான் உயர்ந்த நிலை அடையவேண்டும் என்ற உத்வேகத்தில் தவறாக எதையும் செய்து உடலைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை குறிக்கிறது.

தங்கமலரானது ஒளியின் ஒரு குறியீட்டு வடிவம், இந்த ஒளி என்ன நிறம் என்பதை குறிக்க பயன்படும் குறியீட்டு வடிவம். இதுவே உயர்சக்தி.

ஆகவே அக இரசவாததின் மூலம் பிரபஞ்ச மூல ஒளியான தங்க நிற ஒளியை தனது உடலில் பாய்ச்சி பிரபஞ்ச மூலசக்தியை ஈர்க்க வேண்டும்.

தொடரும்....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...