குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 11, 2019

மு. தளையசிங்கம் அவர்களின் மெய்யுள் கூறும் பூரண இலக்கியக் கோட்பாடு

ஈழத்தின் தலைச் சிறந்த சிந்தனாவாதியும், தனது காலத்தை தாண்டிய இலக்கிய வடிவத்திற்கான கருதுகோளை முன்வைத்தவரும், சுந்தரராமசாமியினால் பாரதியின் கருத்துலகை விட முழுமையான கருத்துலகை முன்வைத்த சிந்தனையாளர் என குறிப்பிடப்பட்டவருமான மு. த எனப்படும் மு. தளையசிங்கம் அவர்களின் இலக்கியக் கோட்பாட்டிற்கான ஒரு முன்மொழிவு தான் மெய்யுள். 
இதைப் படிக்க நேர்ந்தது மிகவும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பம் என்றாலும் எனது சிந்தனைப் போக்கிற்கு பிடித்த ஒன்றாக இருந்ததால் மெய்யுள் எனும் அவரது நூலை படிக்கத் தொடங்கினேன். 
அந்த நூலின் முதல் அத்தியாயம் பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் என்ற தலைப்புடன் தொடங்குகிறது. இதில் தற்போதுள்ள பொழுதுபோக்கு இலக்கியம் என்ற வரையறையுடன் கூடிய இலக்கியங்கள் மனிதகுலத்தின் ஆற்றலை எப்படி வீணடிக்கிறது என்பதையும் இலக்கியத்தினதும் கலையினது உண்மை நோக்கத்தினையும் நிறுவுகிறது. 
பொழுதுபோக்கு என்ற ஒன்று இல்லை என்பதை நானும் நம்புகிறேன். உண்மையில் நாம் எல்லோரும் இந்த உடலுக்குள் ஒரு நிறுத்தற் கடிகாரத்தில் நேரத்தை குறித்து வைத்து விட்டு ஒவ்வொரு சுவாசம் கழியும் போதும் எமது உடலை விட்டு நீங்குவதற்குரிய பிராணனை செலவழிக்கிறோம் என்ற உண்மையை அறியத்தவறியவர்களாக காலத்தை பலரும் வீணாக்குகிறார்கள். 
ஆக மு.த முன்வைக்கும் முதல் கேள்வி, இலக்கியம் எதற்காக தேவைப்படுகிறது? இலக்கியம் நிச்சயமாக பொழுதுபோக்கிற்கு அல்ல, தரமான இலக்கியம் மனிதனின் அகத்தேவையான அமைதிக்கும், ஓய்விற்கும், பரவசத்திற்குமானது என்று நிறுவுகிறார். இத்தகைய இலக்கியங்கள் தான் வாழ்க்கைப்பிரச்சனைக்கு தீர்வினையும், தெளிவினையும் கொடுக்கக்கூடியது என்கிறார். 
இந்தக் கருத்தை படிக்கும் போது எனக்குள் மிகுந்த ஆச்சரியம் உண்டானது. ஏனெனில் பண்டிட். ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா அவர்கள் இதே கருத்தை முன்வைத்தே தனது இலக்கியங்களைப் படைத்தார். பண்டிட் ராம்சர்மா ஆச்சாரியா என்பவர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய காயத்ரி சாதகர்! அவரது எழுத்துக்கள் இந்தியில் எழுதப்பட்டு தற்போது மொழி பெயர்ப்பாகி கிடைக்கின்றது. இந்த இலக்கிய வடிவத்தின் ஆரம்பம் ஸ்ரீ அரவிந்தருடன் தற்கால மனித குலத்திற்கு கிடைக்கிறது. ஆனால் ரிஷிகளும், பண்டைய சித்தர்களும் இந்த வகை இலக்கியங்களே படைத்தார்கள். 
இடைக் காலத்தில் மன்னர்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக படைக்கப்பட்ட மன்னன் புகழ்கூறும் இலக்கியங்கள் மக்களின் மனதை மயங்கச் செய்து போலி இலக்கியங்களை படைக்க ஆரம்பிக்கிறது. 
ஆக இலக்கியம் கலை என்பது மனதிற்கு அமைதியையும், ஆனந்தத்தினையும் தந்து பூரணத்தை நோக்கி செலுத்தும் பண்புள்ளதாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். மற்ற பொழுதுபோக்கு இலக்கியம் கலை என்பவை போலி இலக்கியம் என்கிறார். அப்படி படைக்கப்படுபவை மக்களை மயக்கத்தில், கனவில் ஆழ்த்தி தமது காரியங்களை சாதித்துக்கொள்ளும் என்கிறார். 
இலக்கியம் என்பது மனிதனின் பூரணமின்மை என்ற நோயைப்போக்கும் மருந்தாக இருக்க வேண்டும் என்பதை நிறுவுகிறார். 
இந்தப் பார்வை தற்காலத்தைய தமிழ் சமூகத்தின் பொழுதுபோக்குகளான சினிமா, நாவல் போன்றவற்றின் இரசனையையும் அது சமூகத்தின் மன நிலைக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் சிந்திப்பதற்கான ஒரு அடிப்படையைத் தருகிறது. 
உதாரணமாக சினிமா என்பது மனித மனத்தின் மகிழ்ச்சி, ஆனந்தம், அமைதி என்பவற்றை தருவதற்கான ஒரு கலைப்படைப்பாக இருக்கிறதா, அல்லது பகை, குரோதம், பழிவாங்கல், சண்டை சச்சரவுகளை தூண்டுவதற்கான வழிகோலிகளாக இருக்கிறதா என்பதை நிதானிக்க, சிந்திக்க இந்த மெய்யுள் கோட்பாடு உதவுகிறது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...