குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, February 05, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 07


விஞ்ஞான பைரவ தந்திரத்தை புரிந்துகொள்வதில் காஷ்மீர சைவத்தின் பிரபஞ்ச தோற்றவியல் கோட்பாட்டினை அறிந்து கொள்வது அவசியம்.
காஷ்மீர சைவத்தின் படி ஒரே வஸ்துவானம் சிவமே இந்தப் பிரபஞ்சம். இதை பைரவம் என்று அழைக்கிறோம். இந்த பைரவமே இயற்கை, இது அனைத்திலும் வியாபகமாகியுள்ளது. இது எல்லையற்ற பிரகாசத்தினை தன்னுள் கொண்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்தபிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பைரவ பிரகாசத்தினை தன்னுள்ளே கொண்டுள்ளது. இந்த ஒளியே பிரக்ஞையாக ஒவ்வொரு உயிரிலும் உயிரற்றதிலும் வெளிப்படுகிறது.
சிவம் தனது புற இயற்கையை தன்னிலிருந்து தனியாக தான் அனுபவிப்பதற்காக பிரித்து வைத்துக்கொண்டுள்ளது. இப்படிப் பிரிந்த கூறு ஸக்தி எனப்படுகிறது. இதுவே ஸக்தி எனப்படுகிறது.
பலரும் ஸக்தி சிவத்திலிருந்து பிரிந்து தனித்து இயங்கும் ஒன்றாக கற்பனை செய்வார்கள், அப்படியல்ல், சிவத்தின் புறவயப்பட்ட ஸக்தி இந்த புற உலகத்தையும், மன தையும், புரிதல்களையும், பொருட்களையும் தோற்றுவித்துகொண்டு தன்னை வெளிப்படுத்துகிறது. ஆனால் எப்போதும் சிவத்தின் ஒருபாகமாகவே இயங்குகிறது. சிவத்திலிருந்து பிரிந்த நிலை என்பது எப்போதும் இல்லை.
சிவம் சக்தியை கொண்டிருப்பவர் - ஸக்திமான்
புற உலகம் அவரது - ஸக்தி

ஸக்தியை கொண்டிருப்பவரும் ஸக்தியும் வேறானது அல்ல, அது பேதங்களற்றது, இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது.
சிவமும் சக்தியும் நெருப்பும் வெப்பமும் போல் ஒன்றிணைந்திருக்கிறது.
இப்படி இருமையற்ற ஒன்றாக சிவமும் ஸக்தியும் ஒன்றாக இருந்தால் எப்படி பிரிக்கப்பட்ட இந்த உலகம் தோற்றம் பெறமுடியும் என்ற கேள்விக்கு காஷ்மீர சைவம் ப்ரதிபிம்பபாவனா என்ற கோட்பாட்டினைக் கூறுகிறது.
இதனை பிரதிபலிப்புக் கோட்பாடு (theory of reflection) என்று கூறலாம். இது பிரபஞ்சமானது சிவத்தின் பிரக்ஞையின் பிரதிபலிப்பு (Reflection) என்று கூறுகிறது.
சிவத்தினுடையை பிரக்ஞையைத் தாண்டி எதுவும் இருக்க முடியாது. ஆகவே இந்தப்பிரபஞ்சமே சிவத்தின் பிரதிபலிப்பு மட்டுமே. ஆகவே நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சம், உலகம் வாழ்க்கை என்பவை சிவத்தின் பிரக் ஞையின் பிரதிபலிப்பு மட்டுமே!
ஏன் இந்த பிரதிபலிப்பு ஏற்பட வேண்டும் என்ற கேள்விக்கு திரிக தத்துவம் கூறும் பதில் ஸ்வாதந்ரய, அறுதியான சிவத்தின் இச்சா சக்தி (absalute independent will)! அது அவனுடைய சுதந்திரம் என்பதுதான்!
சுருக்கமாக, சிவம் இந்த புற உலகத்தை தனது வெளிப்பாடான ஸக்தியினால் உருவாக்கினார், இந்த ஸக்தி அவரிலிருந்து வேறுபட்ட பிரிந்த ஒன்றல்ல, இதன் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது; இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் அவனது எல்லையற்ற இச்சாசக்தியின் சுயவிருப்பில் நடைபெறுகிறது, கண்ணாடியில் காணும் பிம்பம் போல், அவனது சொந்த இச்சாசக்தியின் பிரதிபலிப்புகளே இந்தப்பிரபஞ்சம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...