குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 13, 2019

01. சூழலியல் தத்துவம் – Environmental Philosophy



இருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மைப் பிரச்சனைகளாக சூழலியல் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன. புவியின் வரலாற்றில் மனிதன் இனம் சூழல் மாசுபடலுடன் சண்டையிட வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்தபின்னர் இந்த நூற்றாண்டு உயிர்பல்வகைமை அழிவுகளின் உயர்ந்த காலப்பகுதியாக அறியப்பட்டுள்ளது. வில்சன் என்பார் தனது ஆய்வறிக்கையில் (“Threats to Biodiversity,” Scientific American, 1989) தினசரி 100 உயிர்ப்பல்வகைமை இனங்கள் அழிவுற்றுவருவதாக கணக்கிட்டு அடுத்துவரும் பத்தாண்டுகளின் இந்த விகிதம் இரண்டு அல்லது மூன்று மடங்காகலாம் எனக் கணக்கிட்டுள்ளார்.

இயற்கை வளங்களான நீர், நிலம், காடுகள், வளி என்பன தமது இயல்புத்தன்மையினை இழந்து, மாசடைந்து, குறைந்து வருகிறது. 1804ம் ஆண்டில் ஒரு பில்லியன் சனத்தொகை அடுத்த இரு நூறு ஆண்டுகளில் ஏழுமடங்காகி 2018ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 7.7 பில்லியன் ஆகியுள்ளது. கணிப்பீட்டின் படி அடுத்த 15 வருடங்களில் இன்னும் ஒரு பில்லியன் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனத்தொகை அதிகரிப்புடன் வளங்கள் குறைவடைதலும், சூழல் மாசடைதலும் அதிகரிக்கப்போகிறது. சனத்தொகை அதிகரிப்பு வளங்களின் தேவையை அதிகரிப்பது என்பதை விட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று உருவாக்கப்படும் மாயைகள் அதிகமாக உயிர்த்தொகுதியின் வளத்தினை சுரண்டுகிறது. உதாரணமாக இன்றைய ஆடம்பர வாழ்க்கையின் நட்சத்திர ஹோட்டல்களின் நீர் மற்றும் வளங்களின் பயன்பாட்டினால் ஒரு விருந்தினருக்கு தரும் உபசரிப்பிற்கு செலவாகும் வளத்தை சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு மனிதனது பயன்பாட்டில் நூறு நபர்களுக்கு பயன்படுத்தக்கூடியதான ஆடம்பர வாழ்க்கை முறையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

அபயகரமான விஷக்கழிவுகளும், அணு இரசாயனக் கழிவுகளும் அதிகரிக்கின்றது. இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இன்றி சூழலைப்பாதிக்கக் கூடியவை.

வளிமாசடைதலினால் ஏற்படக்கூடிய பச்சைவீட்டு விளைவு வாயுக்களின் அதிகரிப்பால் புவி வெப்பமாதல் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்.

இந்தப் பிரச்சனைகளின் தீர்விற்காக உலக அரங்கில் அனைத்து நாட்டு அரசுகளும் தீர்வுத்திட்டத்தை தமது அரசியலில் ஒருபாகமாக முன்னெடுத்து வருகின்றன.

45 ஆண்டுகளுக்கு முன்னர் ரிபப்ளிகன் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்ஸனினால் சூழல் மாசடைதல் தொடர்பான மூன்று முக்கிய சட்டங்களை அமுல்படுத்தியதிலிருந்து சூழல் மாசடைதல் தொடர்பான சட்ட நெறிமுறைகள் உலக அரங்கில் முன்னெடுக்கப்பட்டுத் தொடங்கியது.

இன்றைய காலகட்டத்தின் சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்களை பொல்லாதவர்களாக கற்பிக்கும் மனம் இதன் பாதகங்களை அறிந்தபின்னர் அனைவருக்கும் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் கடந்தகாலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவர்களளவில் நன்மையானதாக அவர்களது அறிவின் எல்லைக்குள் நம்பியே எடுத்திருக்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் சடுதியான சனத்தொகைப்பெருக்கம் மனிதகுலத்தை உணவு, நீர், மின்சாரம், நோய்த்தாக்கத்திலிருந்து விடுபட்டு நீண்டகாலம் வாழுதல் போன்றவற்றின் தேவையை மட்டும் அடிப்படையாக வைத்துகொண்டு அபிவிருத்திக்கொள்கைகளையும், அறிவியலையும் முன்னெடுக்கத்தொடங்கியது. எனினும் சூழலியலில் சிக்கற்தன்மையினையும் விளைவுகளையும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இன்னொரு முறையாகச் சொன்னால் ஒரு முடிவு எடுக்கமுன்னர் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கணக்கிடக்கூடிய தீர்மானிக்கும் பொறிமுறை இருக்கவில்லை.

இங்குதான் சூழலியலிற்கு ஒரு தத்துவ அடிப்படை இருக்க வேண்டிய தேவை உண்டாகிறது. மனிதன் தனக்கு நன்மை தரும் என்று தீர்மானிக்கு அனைத்தும் இயற்கையால் நன்மையான விளைவாக தரப்படுமா? அதன் பாதகங்கள் என்ன? குறுகியகாலத்தில் நன்மை எனக்கருதப்படுவது நீண்டகாலத்தில் தீமையாகலாமா? இப்படி ஒரு சுய உணர்வுடன் நிதானமாக சிந்தித்து தீர்மானிக்கும் தன்மையைத் தரும் ஒரு தத்துவ அடிப்படையினை அனைத்து முடிவுகளும் கொண்டிருக்க வேண்டிய தேவையிருக்கிறது.

தொடரும்….


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...