குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, February 22, 2019

தலைப்பு இல்லை

நண்பர் ஆசிரியர் Ramesh Sivagnanam அவர்கள் இன்றைய பாடசாலை மாணவர்களின் நிலை பற்றிய பதிவு கீழே. 

சுருக்கமாக வாழ்க்கையில் இலட்சியம் எதுவும் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற சிந்தனையற்ற சமூகம் ஒன்று உருவாகி வருகிறது என்பதே செய்தி! 

நாம் எங்கு பிழைவிடுகிறோம்? தனிமனித முன்னேற்றம் என்று எதைப் பிள்ளைகள் மனதில் பதிவிக்கிறோம்? 

ஒருவன் தான் செய்வது தனக்கு இன்பம் பயக்கிறது என்ற மாயையினாலேயே தவறு செய்கிறான். எது இன்பம் என்பது பற்றிய தவறான புரிதல்! 

பெற்றோர்களது சிந்தனையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் அவசியம் தேவை! 
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் திரைப்படம் ஒன்று வந்திருந்தது. பெயர் ஞாபகம் இல்லை, அந்தப் படத்தின் கதை சுருக்கமாக நான்கு இளைஞர்கள், அவர்களின் பெற்றோர்கள் குடிகாரர்கள், பொறுப்பற்றவர்கள், பிள்ளைகளைக் கவனிப்பதில்லை! அவர்கள் வாழும் சூழல் கொள்ளையும், போதைப் பொருள் பாவனையும் நிறைந்திருக்க இறுதியில் இவர்களும் கொள்ளையர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களானவர்களாவும், கிரிமினல்களாக மாறி இறப்பது தான் கதை! 

மனித மனத்திற்கு வலிமையாக கடிவாளம் ஒன்று இருக்க வேண்டும். அது பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்து வருவதே பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனதைக் கட்டமைக்கும், அப்படி இல்லாவிட்டால் அவர்கள் வாழும் சமூகம் பெற்றோராக மாறி மனதின் விழுமியத்தை உருவாக்கும்! 
ஆசிரியர் ரமேஷ் அவர்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளில் பெற்றோர்களின் ஆற்றலின்மை, அறிவின்மை, நேரமின்மை என்பவை பெரும் பங்கு வகிக்கிறது. 

போதைப் பொருள் ஒழிக்கிறோம் என்று போதைப் பொருளைப் பற்றிய மேலதிக தகவல்களை பிள்ளைகளுக்கு கற்பிக்கும் NGO வகையறா விழிப்புணர்வுகளிலும் பார்க்க பிள்ளைகளின் மனதின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்கலைகள், விளையாட்டுக்களில் பங்குபெற மிகுந்த ஊக்கத்துடன் சமூக நிகழ்வுகள் ஒழுங்குபடுத்த வேண்டும். 

போதைப் பொருளை தடுக்கிறோம் என்று துஷ்டர்களுடன் வம்பிழுப்பதை விட மனவலிமையும், துஷ்டர்கள் நெருங்காத மனதை உடைய வலிமையான பிள்ளைகளை உருவாக்குவதற்கு எல்லோரும் பாடுபடவேண்டும். வியாபாரம் இருப்பது பொருள் வாங்குபவன் இருப்பதால் வியாபாரியை விரட்டி அடிக்க வேண்டும் என்று எண்ணுவதை விட அந்தப் பொருள் தேவையில்லாத வாழ்க்கை முறையை உருவாக்குவதன் மூலமே போதைப்பொருளை இல்லாதாக்க முடியும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...