குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 10, 2019

ஆன்மீகமும் லௌகீகமும்

இன்று பலர் தம்மை ஆன்மீகத்தில் இருப்பதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்! இப்படி தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உண்மையில் நான் குழப்பமாகி விடுகிறேன்!
ஒருமுறை ஒரு அன்பர் தன்னை உங்களைப்போன்று நானும் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு நான் சிரித்துக்கொண்டு நான் ஆன்மீகத்தில் இல்லை! என்றேன். அவருக்கு திகைப்பாகிவிட்டது! அது எப்படி நீங்கள் ஆன்மீகத்தைப்பற்றித்தானே எழுதுகிறீர்கள்! பிறகெப்படி ஆன்மீகவாதி இல்லை எனலாம் என்றார்! எனது பதில் நான் ஆன்மீகம் எழுதவில்லை, எனக்கு மிகப்பிடித்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன், நீங்கள் அதை ஆன்மீகமாகப் பார்கிறீர்கள் என்றேன்!
பலர் ஆன்மீகம், லௌகீகம் என்று தம்மை வேறுபடுத்தி உயர்வாக காட்டினால்தான் தாம் உயர்கிறோம் என்று நினைப்பது மனதின் ஒரு மாயை!
மனதை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பொறிமுறையையே ஆன்மீகம், மனதை உயர்ந்த சிந்தனைக்கு செலுத்தாத எதையும் ஆன்மீகம் என்று சொல்ல முடியாது! ஆக ஆன்மீகத்தின் எளிய விளக்கம் உணர்வாகிய ஆன்மாவை எதுவெல்லாம் உயர்ந்த நிலையில் வைக்கிறதோ அதுவெல்லாம் ஆன்மீகம்.
மனம் தனது புலன்களின் வழி புற உலக இன்பத்தை அனுபவிக்கும் நிலையையே லௌகீகம் என்கிறோம். இந்த அனுபவம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை!
லௌகீகம் மண் என்றால் ஆன்மீகம் செடி!
மண் இல்லாமல் செடி முளைக்காது, ஆனால்
மண் செடியை அழிக்காத தன்மையுள்ளதாக, வளர்க்கும் வழியாக இருக்க வேண்டும்.
செடி வளரவேண்டும் என்றால் மண்ணைத்தான் சரியாக பதப்படுத்த வேண்டும். ஆக ஒருவன் தனது உலக வாழ்வாகிய மண்ணை சரியாக பண்படுத்த மனம் செம்மையாகி உணர்வு உயரும்.
பலர் ஆன்மீகம் என்று தமது உலக வாழ்க்கையாகிய மண்ணை பாலைவனமாக்கி வளமற்றதாக்கிவிடுவதையே இன்று நாம் காண்கிறோம்! இப்படி ஆகியபின்னர் அதில் எந்த விதையையும் விதைக்க முடியாது!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...