குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 06, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 09

தாந்திர மார்க்கம் பற்றி பலரும் பலவாறாக கற்பனை செய்ய முடியும், அதைப் பற்றிய சிறிது புரிதலுடன் விஞ்ஞான பைரவ தாந்திரத்தை அணுகுதல் பலன் தரும். 
தாந்திர மார்க்கம் என்பதை இன்று பலரும் ஏதோ தவறான மார்க்கம் என்பது போலவும் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகவும் எண்ணுகிறார்கள். 
இது பல மேலைத்தேய அரைவேக்காடுகள் இந்தச் சொல்லை தவறாக விளம்பரப்படுத்தி கூகுள் பூராகவும் இதைத் தேடினால் காமம் சார்ந்த விளக்கமாக வர வைத்திருப்பதிலிருந்து உருவான அபிப்பிராயமாக இருக்கிறது.  
தாந்திரம் அல்லது தந்திரா என்பது உத்தி (technique) என்று பொருள். எதற்கான உத்தி அறிவினை, விழிப்புணர்வினைப் பெறுவதற்கான உத்தி {விஞ்ஞான பைரவ தாந்திரத்தின் படி}! 
மனிதன் தனது புலன் வழி சென்று தான் யார் என்ற உண்மை உணர்வை இழந்து துன்பப்படுகிறான். அவன் அத்தகைய நிலையில் அவனது உண்மை நிலை என்ன என்பதைக் கூறினால் குழப்பமும் பயமும் அடைவான், அதாவது சதா காமத்திலும், உலக இன்பங்களிலும் மூழ்கி துன்பத்தை இன்பம் என்று எண்ணியிருக்கும் ஒருவனிற்கு " நீதான் பிரம்மம்" நீ விழிப்புணர்வு அடைந்தால் உன்னில் இருக்கும் இந்த உலகைப் படைத்த மூலசக்தியை அறியலாம் என்றால் "அட போடா, உலகைப்படைத்த மூலசக்தியாவது மண்ணாங்கட்டியாவது" என்று கூறிவிட்டு மீண்டும் தான் செய்வதை செய்து கொண்டு தான் இருக்கப் போகிறான். 
ஆக தந்திரா ஒருவனது இயல்பிற்கு தகுந்து அந்த நிலையில் அவன் செய்யும் செயலை விழிப்புணர்வுடன் செய்துவரும் படி உத்திகளை போதிக்கிறது. 
ஒரு மனிதனுக்கு தெரிந்த புலன்களால் உண்மை என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய யதார்த்தம் அவனது உடல், ஆகவே தந்திராவின் உத்திகள் உடல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அறுதியான விழிப்புணர்வை பெற வைப்பதே தாந்திரீகத்தின் நோக்கம். 

அடுத்த நிலையில் மனதும் உணர்ச்சிகளும் மனிதனது சிக்கல்களை உருவாக்குகிறது. ஆக அதை தூய்மைப்படுத்தும் நடைமுறைகளை தாந்திரம் போதிக்கிறது! 
உத்திகளைப் போதிக்கும் முறை என்ற அடிப்படையில் இந்த வழியில் self style approach இல்லை! குறித்த உத்திகளில் சித்தியடைந்த வழிகாட்டி - குரு இல்லாமல் பயணிக்க முடியாது. குருவுடன் பயணிப்பதற்கு குறித்த மனப்பாங்கு அவசியம்! அந்த மனப்பாங்கு இல்லாமல் உத்திகள் புரியாது. ஆகவே தாந்திரத்தில் மனப்பாங்கு அல்லது பாவம் (Bhava) என்பது முக்கிய பங்களிக்கிறது. 
ஆக சரியான பாவம் - மனப்பாங்கு இல்லாமல் தாந்திர வழிகள் சித்தியைத் தராது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...