குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 04, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 03



அனேக சைவ ஆகமங்கள் சிவனும் ஸக்தியும் அல்லது பைரவரும் பைரவியும் உரையாடுவது போன்ற வடிவிலேயே இருக்கும்.
விஞ்ஞான பைரவ தாந்திரம் ருத்திரயாமளத்தின் ஒரு பகுதி. இன்று ருத்திரயாமளம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த ருத்திரயாமளம் ஸக்தி சிவனிடம் கேட்டது.

ஆக இந்த தந்திரம் சிவஸக்தி ஐக்கிய ரூபமாக மிளிர்ந்தது எனப்படுகிறது. இது திரிகபேதம் என காஷ்மீர சைவத்தில் கூறப்படுகிறது. இத்தகைய தந்திரம் எல்லா தந்திரங்களின் சாரம் போன்றது.
ஆக விஞ்ஞான பைரவ தாந்திரம் எல்லா தந்திர நூற்களினாலும் அடையப்படும் உயர்ந்த நிலையை தெளிவாக காட்டுகிறது.
இதன் முதல் உரையாசிரியர் க்ஷேமராஜா என்பவர் முதலாவது சுலோக உரையில் இப்படிக்கூறுகிறார்:
சைவ தத்துவங்கள் வேதங்களை விட சிறந்தது
வாம தந்திரம் சைவத்தைவிட சிறந்தது
தக்ஷிண தந்திரம் வாமத்தை விட சிறந்தது
கௌல தந்திரம் தக்ஷிணத்தை விட சிறந்தது
திரிக தந்திரம் கௌலத்தை விட சிறந்தது.
திரிகம் என்றால் மூன்று என்று அர்த்தம், சிவம், ஸக்தி, நர (மனிதன்) என்ற மும்மைகள் குறிக்கப்படும்.
சிவத்தின் சக்திகள் பரா, பராபரா, அபரா ஆக மூன்று,
நரனாகிய மனிதன் தனது உண்மை நிலையான சிவம் என்பதை தன்னையறிவதன் மூலம் சிவமாகலாம் என்பதே திரிக தத்துவம்.
சிவத்தின் இந்த மும்மை சக்திகளில் பரா என்பது சிவத்தின் அகச்சக்தி, இதனால் சிவம் எல்லையற்ற பரம்பொருளாக திகழ்கிறது,
பராபரா என்பது சிவம் அறியும் அல்லது செயலாற்றும் சக்தி, இது இடை நிலை சக்தியாக இருக்கிறது.
அபரா என்பது சிவத்தின் புறச்சக்தியும் கீழ் நிலைச் சக்தியுமாக கூறப்படுகிறது.
ஆகவே திரிக தத்துவம் மனிதன் சிவத்தின் அபரா ரூபமாக இருக்கிறான், அவன் பரா நிலையை பராபரா சக்தியின் உதவி கொண்டு அடையலாம்.
இதன் படி பரா நிலையை அடையும் அல்லது பயிற்சிக்கும் சாதகன் சம்பவோபாய என்றும், பராபரா சக்தியை சாதனை செய்பவன் சாக்தோபாய என்றும் அபரா நிலை சாதகன் அன்வோபாய என்றும் அழைக்கப்படுவான்.
இதில் சம்பவோபாய நிலை அதிஉன்னத நிலையாக திரிக சைவத்தில் கூறப்படுகிறது. இதன் படி ஒருவன் தனது மனதை எண்ணங்கள் அற்ற நிர்விகல்ப நிலையிற்கு கொண்டு வந்தால் அவன் தான் சிவம் என்று உணரும் நிலை.
இதை பயிற்சிப்பதற்கான 112 உத்திகளை கூறுவதே விஞ்ஞான பைரவ தாந்திரம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...