குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 23, 2019

லம்போதராய நமஹ - யோக விளக்கம்

லம் - போதராய , இதைப் பொதுவாக பெருத்த வயிறு உடையவன் என்று பொருள் கொள்வார்கள். ஆனால் யோக விளக்கம் லம் ( लं laṃ) என்ற மந்திர அட்சர அதிர்வால் போதம் எனும் ஞானத்தைத் தருபவன் என்று பொருள்.
இதையே ஔவைப்பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலாலெழுப்பும் கருத்தறிவித்து என்று பாடுகிறார்.
மூலாதாரத்தை लं laṃ என்ற மந்திர வித்தெழுத்தால் பேதிக்க பிராணனை மூண்டெழுந்து கனலாகி குண்டலினியாகி சிரசைத் தாக்கி அமிர்தம் பொழிவிக்கும் வல்லமை உள்ளவன் லம்போதரன்!
இனி ஔவையாரும் அகத்தியரும் கூறியதை சேர்த்துப்பார்ப்போம். சாதாரணமாக பிராணன் மூலாதராத்திலிருந்து எழுந்து சிரசைத்தாக்கி நாசியில் வரும் பிராணனில் சேர்ந்து உடலில் புகுகிறது. இதை அகத்தியர் பெருமானார் தனது பாடலில் விளக்குகிறார். இது சாதாரண உடலில் நடைபெறும் செய்கை.
இது எப்படி கனலாகி, குண்டலினியாகி அமிர்தத்தை விளைவிக்கிறது என்பதை ஔவையார்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
என்கிறார்.
விண்டெழு மந்திரம் என்பதன் பொருள் லம் என்ற பீஜம். இந்த பீஜ மந்திரத்தால் பிராணனைக் கனலான அக்னித்தன்மை உடையதாக்கினால்
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠
புரியும் என்கிறார்.
இதற்கு லம் அட்சர ஒலி தேவை. இதுவே கணபதி உபாசனையின் விளக்கமும் கூட. ஸ்ரீ வித்யாவில் கணபதி இல்லாமல் செல்லக்கூடாது எனபதும் இந்தக்காரணம் கருதியே, கணபதியின் லம் பீஜ சக்தி விழிப்புறாமல் பிராணன் யோகக்கனலாக மாறாது.
{ யோக ஆர்வக்கோளாறுகளுக்கு ஒரு குறிப்பு: இங்கு பகிரப்படும் அனைத்தும் அறிவுப்பகிர்வு மட்டுமே, எதையும் முயற்சித்துப்பார்ப்பது என்பது குருவின் அனுமதியுடன் மட்டுமே, இல்லாது தானாக குண்டலினி எழுப்புகிறேன், சுண்டெலி எழுப்புகிறேன் என முயற்சித்து மன, உடல் உபாதைக்களுக்கு உள்ளாகக்கூடாது,}

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...