குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 23, 2019

மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

மனதைக் கட்டுப்படுத்த முடியுமா? மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?
மனம் ஒரு ஆற்றல், ஆற்றலைக் கட்டுப்படுத்தினால் பலனுண்டு! ஆபத்தும் உண்டு! அணைகட்டும் நீர் மின்சாரமாவது போல் எண்ணத்தைக் கட்டும் மனம் மகாசக்தியாகும்! அணையில் கட்டிய நீர் உடைந்தால் பெருஞ் சேதமாவது போல் ஏகாக்ரமடைந்த மனம் பக்குவமில்லா உடலை சேதமாக்கும்!
மனதைக் கட்டுப்படுத்துவது என்ற முயற்சி சற்றே அபத்தமானது! ஆனால் மனதை ஒழுங்குபடுத்தல் என்பது அவசியமானது.
இதை யோக மொழியில் சீரிய ஏகாக்கிரமென்பர். ஏகாக்கிரம் என்றால் மனஒருமை என்று பெயர். ஏகாக்கிரம் என்பது மனதைக் கட்டுப்படுத்தல் அல்ல, மனதில் தோன்று எண்ணங்களை ஒழுங்குபடுத்தல்.
சீரிய ஏகாக்கிரம் என்றால் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை ஒரு logical order - தர்க்கப்படிமுறையில் சரியாக சிந்தித்தல்.
இந்தப்படிமுறையில் தர்க்க மனது ஏற்றுக்கொள்ளும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதில் இருக்கவேண்டும். தர்க்க மனம் திருபதியுறாமல் ஆழ்மனம் திறக்காது. ஆழ்மனம் திறக்காமல் மனமது அடங்காது!
ஒரு காரியத்தில் ஏன் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் காரியத்தில் இறங்கினால் தர்க்க மனமும் ஆழ்மனமும் சண்டையிட்டே காலம் போய்விடும்.
மனதைக் கட்டுப்படுத்த முதல் வழி தர்க்க மனதின் கேள்விகளுக்கு திருப்தியான பதிலைச் சொல்லி சமாதானப்படுத்தல்,
இதற்குரிய எளிய வழி கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டு அந்தக் கேள்விக்கான பதில் திருப்தி என்றால் மட்டும் நாம் செய்ய நினைக்கும் காரியத்தை செய்தல்.
1) இந்தக்காரியத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்?
2) நாம் செய்யும் இந்தக்காரியத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் எவை?
3) காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
இந்த மூன்று கேள்விக்களுக்கும் திருப்தியான பதில் இருந்தால் மட்டும் காரியத்தில் இறங்க வேண்டும். பலர் இந்தக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு உத்வேகத்தில் காரியத்தில் இறங்கி மனம் கட்டுப்படவில்லை, காரியம் சரியாகவில்லை என்று புலம்புவார்கள்.
ஆக மனதைக்கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அறிவைச் செம்மைப்படுத்த வேண்டும். அறிவைச் செம்மைப்படுத்த சரியான கேள்வியும், அதற்குரிய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத சரியான பதில்களும் தெரியவேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...