குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, February 05, 2019

விஞ்ஞான பைரவ தாந்திரம் - 08


சிவத்தின் மறைப்பும் வெளிப்பாடும் பற்றிய விளக்கத்தைப்பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

அனைத்தும் சிவமாக இருக்க, ஏன் சிவம் புறவய உலகத்தை உருவாக்கவேண்டும் என்ற கேள்வி முதலாவதாக எழுகிறது அல்லவா? 

இதற்கு திரிக தத்துவம் கூறும் விளக்கம் ஒரே ஒரு காரணம் மட்டுமே.

தனது உண்மை ஸ்வரூபத்தை அறிவதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த உலகத்தை சிவம் படைக்கிறது என்பதுதான். 

அபி நவகுப்தரே காஷ்மீர சைவத்தின் மிகப்பெரிய ஆசான். அவர் சிவம் ஒன்றாக இருக்கும்போது, படைப்பிற்கு முன்னர் முழுமையான ஒரே பிரக்ஞையாக சிவம் இருந்தது. ஆனால் தனது அந்த நிலையை ஏற்பதற்கு என்று எதுவும் இல்லாததால் தனது இயல்பை பரிமாற படைப்பை உருவாக்கியது. 

இப்படி தனது இயல்பை இன்னொருவர் உணர்வதது சிவத்திற்கு பேரின்பத்தைத் தருவதால் ஸக்தியை தன்னில் இருந்து வெளிப்படுத்தி இந்த பிரபஞ்சத்தை படைக்கத்தொடங்கினான். 

இப்படி தன்னை மறைத்து மீண்டும் கண்டுபிடிக்கும் விளையாட்டால் வரும் இன்பத்தை பெறுவதற்காக மனிதனில் சிவத்தன்மை மறைக்கப்பட்டு தன து உண்மை இயல்பை மறைக்கக்கூடியவாறு ஸக்தியை உருவாக்கி இந்த இன்பத்தைப் பெறுகிறான். 

அடிப்படையில் இந்த விளக்கம் மிக எளிமையாக பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதனது இயல்புகளையும் இயற்கையான ஒன்றாக எடுத்துக்கொள்வதையே விஞ் ஞான பைரவ தந்திரம் வலியுறுத்துகிறது. ஒருவன் தனது இயல்பை சரியாக புரிந்துகொள்வதற்கு இந்த தத்துவம் எந்தவித நம்பிக்கையையும், ஒழுக்கங்களையும் போதிக்காமல் உலகம், மனிதனது குணங்கள் எல்லாம் இயற்கையான ஒன்று என்று தனது இயல்பாக ஏற்றுக்கொண்டு, தனக்குள் மறைந்துள்ள சிவமாகிய உயர்ந்த விழிப்புணர்வினை அறிந்துணர் முயற்சிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்குகிறது.

இது தந்திர மார்க்கத்தில் உள்ள சிறப்பியல்பு, இந்த ஒழுக்கங்களை பின்பற்றினால் தான் இது என்ற நிபந்தனையை ஆரம்ப சாதகனுக்கு விதிக்காது! சாதகனது இயல்பிலிருந்து படிப்படையாக முன்னேறிச் செல்லும் வழியைக் காட்டும். 

அதனாலேயே இந்த நூலில் 112 உத்திகள் தரப்பட்டுள்ளது. இந்த 112 உத்திகளில் கட்டாயம் ஒரு உத்தியாவது சாதகனுக்கு தனது உண்மை நிலையான பைரவ நிலையை அடைய கட்டாயம் உதவும் என்பது இந்த தந்திரத்தின் சிறப்பு! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...