இது பாரத ரிஷிகளின் கேள்விக்கான, தர்க்கத்திற்கான அறிவியல், விஞ்ஞானம். ஆரம்பத்தில் சமூகம் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மட்டுமே வாழ்க்கை என்று இருந்த போது ஆன்விக்ஷிகி என்ற புத்தியின் ஆற்றல் ஆன்ம ஞானத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வேதாங்கமான உபநிஷத்துக்கள் ரிஷிகளின் ஆன்விக்ஷிகி ஆற்றல்கள் பிறந்த ஞானம். கட உபநிஷத்தில் நசிகேதனின் கேள்வி கேட்கும் ஆற்றல் ஆன்விக்ஷிக்கான உதாரணம்.
ஆன்விக்ஷிகி இரண்டு விடயத்துடன் தொடர்புபடுகிறது. ஒன்று ஆன்மாவை அறிதல், மற்றது காரியங்களுக்கான காரணத்தை அறிதல்.
கௌடில்யர் அரசன் அல்லது தலைமை நிர்வாகி. ஆன்மாவை அறிந்த ஞானியாகவும், சரியான தர்க்க ரீதியாக கேள்வி கேட்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் அறிய வேண்டிய வித்தைகளில் ஆன்விக்ஷிகி முதன்மை வித்தையாக குறிப்பிடுகிறார்.
ஆன்விக்ஷிகி என்பது தர்க்க ரீதியாக கேள்வி கேட்டு ஒரு விஷயத்திற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல்.
ஒரு விஷயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும்போது மட்டுமே அதனது தர்க்கத்தை அறிய முடியும். தர்க்கத்தை அறிந்தால் மட்டுமே புத்தி ஏற்றுக் கொள்ளும். புத்தி ஏற்றுக் கொண்டால் மட்டுமே மனம் உள்வாங்கும். மனம் உள்வாங்கினால் மட்டுமே செயல் சிறப்பாக நடைபெறும்.
ஆகவே ஒருவன் தனது ஆன்விக்ஷிகி ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமல் எந்த சாஸ்திரப் படிப்பையும் முழுமையாக புரிந்து பயன் பெறமுடியாது. நிர்வாகத்திலும் இருக்க முடியாது!
இன்று வேதங்கள், சாஸ்திரங்கள் மூட நம்பிக்கையானதற்கு சமூகம் ஆன்விக்ஷிகி ஆற்றலை இழந்தது தான் காரணம்.
ஒருவன் ஆன்விக்ஷிகியில் சிறந்தால் உண்மையை மயக்கம் இன்றி தெளிந்துக் கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே முற்காலத்தில் மனதை, புத்தியை பயன்படுத்துபவர்களுக்கு புத்தியை ஒளியூட்டும் காயத்ரி சாதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.