குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 10, 2019

தலைப்பு இல்லை

எந்த ஒரு அறிவும், ஞானமும் தூய்மையானதும், ஆரோக்கியமானதும், அனைவருக்கும் நலனைத் தரும் ஆற்றலுள்ளதாகவுமே உண்மை இயல்பில் இருக்கிறது. 

இதை சூழ்ச்சியுள்ள மனம் உடைய மனிதர்கள் தமது அறியாமையால் அதிகாரப்பசிக்காக வளைக்கும் போதும் போலியான மனமாயைகளால் பார்க்கும் போதும் அவை கெட்டுப் போய் விடுகிறது.

முற்காலத்தில் வைத்தியன், வித்தை சொல்லும் ஆசிரியன் எல்லோருக்கும் சமூகத்திற்கு களங்கமற்ற மனதுடன் சேவை செய்ய அரசனால் தேவையான அளவு மானிய நிலம் வழங்கப்பட்டிருந்தது. இந்த மானிய நிலத்தின் விளைச்சலின் வருமானமே அவருக்குரிய செல்வத்தை ஈட்டுமே அன்றி வைத்தியமோ, கல்வியோ வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கவில்லை. ஆசிரியனுக்கும் வைத்தியனுக்கும் தான் செய்யும் சேவையால் இலாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் அந்த சேவையில் நோக்கம் கெட்டுப்போய் விடும் என்ற உண்மை அறிந்ததால் இந்த ஏற்பாடுகள்!

இன்று கல்வியும், மருத்துவமும் வருமானம் ஈட்டும் தொழிலாகிவிட்டதால் கல்வியில் இலாபம் சம்பாதிக்க புதுப்புது உத்திகள், புதுப்புது பட்டங்கள் எல்லாம் உருவாக்கி சிந்தனைத் திறனை மழுங்கடித்து மந்தைக் கூட்டத்தை உருவாக்கும் உலகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. 

மருத்துவத்தில் sales representative என்ற தொழிலே விந்தையானது, நோய் தீர மருத்துவம் என்றால் ஏன் மருந்துகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும். மருந்துகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் நோய் கூட வேண்டுமல்லவா? 

வைத்தியோ நாராயணோ ஹரி - வைத்தியன் நாராயண அம்சமான ஹரி என்ற நிலை மாறி இன்றைய வைத்தியனுக்கு நோயாளி இலாபம் சம்பாதிக்கும் கறவை மாடாகிவிட்டான்! 

குரு ப்ரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வரஹ என்ற நிலையில் முற்காலத்தில் குருவே ஒருவனின் முன்னுதாரணம். ஆசிரியனே மாணவனின் தாயும் தந்தையும்! இந்தப் பண்பும் உணர்வும் மாறி நான் காசு கொடுக்கிறேன், நீ படிப்புக் கொடுக்கிறாய், வகுப்பு முடிந்தால் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணம் மாணவனுக்கும், ஆசிரியருக்கோ தனது கை நிரப்பினால் போதும் என்ற மனதையும் உருவாக்கியுள்ளது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...