குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 19, 2023

ஆன்மீக முன்னேற்றம்

 

நான் ஒரு ஆன்மீகர் என்றவுடன் பலரும் வாருங்கள் சித்தர்கள் இருக்கும் அந்த மலைக்குப் போவோம், இந்த மலைக்குப் போவோம், காட்டிற்குள் சென்று யாகம் செய்வோம் என்று அழைப்பினை ஏற்படுத்துவது உண்டு!

ஒரு சூழலியலாளனாக உண்மையான ஆன்ம முன்னேற்றத்தை விரும்புவனாக நான் இவற்றை ஆமோதிப்பதில்லை! ஆன்மீகத்திற்கும் மலைகள், காடுகளில் சுற்றுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை! நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்றால் ஒரு இடத்தில் இருந்து மனதை, புலன்களை அடக்கி சாதனை உங்கள் அகத்திற்குள் செய்யப்பழக வேண்டும்! இது மிகவும் கஷ்டமானது! மன அழுத்தத்தை ஏற்படுத்தும்! இதைத் தாண்டி மனதை வெல்வது கடினமானது!

எமது பாரம்பரியம் ஆரண்யம் என்ற ஒரு மரபைக் கொண்டிருந்தது; உப நிஷதங்கள் ஆரண்ய மரபினை அண்டியவை; சித்தர் மரபுகளும் ஆரண்ய மரபினைக் கொண்டவை! இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் உலகச் சுழலில் உழலும் மனம் குருவிடம் உபதேசம் பெற்றுக்கொண்டு மனதில் பயம் இன்றி காட்டில் தனியாகச் சென்று ஒரு சில காலம் வாழ்ந்து எல்லாப்பயங்களையும் வென்று மனவுறுதியுடன் மீண்டு வருவது! இங்கு நாம் காட்டில் சென்று காட்டின் தன்மையைக் குழப்பாமல் விலங்குகளுடன் ஒத்திசைந்து, இயற்கையை எமது இஷ்டப்படி மாற்றாமல் அதேவேளை எமது மனதினை உறுதி செய்யும் சாதனையைச் செய்ய வேண்டும்!

ஆனால் இன்று சதுரகிரிபோகிறோம், சபரிமலை போகிறோம், கதிர்காமம் போகிறோம் என்று காட்டின் இயற்கைத் தன்மையை மாற்றி வன்புணர்வு செய்கிறார்கள். காட்டிற்குள் சென்றால் நாம் விடும் ஒரு சிறு பாதச் சுவடுகூட இயற்கையின் சம நிலையைக் குலைக்கும். பல விலங்குகள் தமது வழமையான பயணத்திசையை மாற்றி அவற்றின் வாழ்வுச் சம நிலை குலையும்!

காடு தன்முனைப்பற்ற ஆன்ம முன்னேற்றம் மாத்திரம் விளையும் சிந்தனை உடைய தனித்திருக்க கூடிய ஆன்ம சாதகனுக்கு மாத்திரம் உடையது! ஆன்மீக பிக்னிக் செல்பவர்களுக்குரியதல்ல!

காடும் மனிதனும் தாயும் சேயும் போல எப்படி தாய் இரத்தைத்தைப் பாலாக்கித் தருகிறாளோ அதுபோல் காடுகள் பொழியும் மழையை பஞ்சுபோல் உறிஞ்சி நதியாகிய நாடிகளூடாக எமக்குத் தருகிறாள்! அந்தக் காடுகளை ஆன்மீகம், வர்த்தகம், எமது வாழ்க்கையின் குறுகிய நோக்கம் என்று சூறையாடுபவர்களுக்கு இயற்கை தன் சம நிலை இயக்கத்தின் விதி என்ன என்று காலத்திற்கு காலம் பெருமழையை ஏற்படுத்தி புரியவைக்கும்.

தனியே குளங்கள் மாத்திரம் வரும் பெருமழையைத் தேக்கி வைக்க முடியாது. பெருமழையின் வேகத்தைக் குறைக்கும் செயலை பெரும் விதானங்கள் கொண்ட பெரும் காடுகளால் தான் சமாளிக்க முடியும்! இது ஒரு சிஸ்டம்!

பெருமழையின் வேகத்தினை முற்றாக முடக்கி, தன்னுள் அடக்குவது பெருங்காடு! இப்படி காட்டிற்குள் அடங்கிய நீரை மெதுவாகப் பொசிய விடுவதையே ஆறு என்கிறோம்! மலைகளில் இருக்கும் காடுகளை மழைக்காடுகளாக இயங்குவது இப்படித்தான்! கட்டிடம் கட்ட மலைக்காட்டை அழித்து ரோடு போட்டால் காடு செய்யும் இந்தத் தொழில் இல்லாமல் போகும்! பெரு வெள்ளம் அடித்துச் செல்லும்!

காடு - ஏரி - குளம் - ஆறு இவை எல்லாம் இயற்கையின் சம நிலையில் இருக்க வேண்டிய தன்மையில் இருந்தால்தான் மனிதனுக்கு இயற்கை நண்பன்! அல்லது யமன்! இதையே திருவள்ளுவர் பாதுகாப்புடைய நாடு என்பது

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.

என்ற குறளால் சொல்லி வைத்தார்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...