குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 30, 2019

தலைப்பு இல்லை

கூத்தனூர் சரஸ்வதி ஒட்டக்கூத்தருக்கும், கம்பனுக்கும் அருள்புரிந்த சரஸ்வதி! 

மகள் அம்ருதவர்ஷினியிற்கு அக்ஷராப்பியாசம் செய்விக்க போயிருந்தோம்! 

அப்படிச் சென்றபோது வரகவியான எனது தம்பி Thava Sajitharan பாடி தேவிக்கு காணிக்கையாக இட்ட பாடல்! 

காணிக்கைப் பெட்டியில் போடுவதற்கு முன்னர் படம் எடுத்துக்கொண்டேன்! இருப்பதைக் கொடுப்பதுதானே காணிக்கை! இருப்பதோ தமிழறிவு, அதைத்தானே காணிக்கையாக்க முடியும்! 

ஓதலும் உன்னி உணர்தலும் உள்ளன்பால் உன்மத்தராய் ஆதலும் நின்றன் அடியவர்க் கென்றான ஆகமங்கள்பூதலம் யாவும் புரந்தருள் நல்கும்மென் பூங்கொடியேகாதலில் நின்னிரு காலடி பற்றல் கடன் எனக்கே

எனக்கேயென் றேதும் இரவேன் நினைத்தினம் எண்ணியெண்ணிக்கனக்காத நெஞ்சைக் கருதேன்யான் இந்தக் கணத்தினிலேமனக்கூடு அடையும் நினைவுப் பறவைதன் வண்ணமெல்லாம்நினக்காதல் கண்டு நெகிழ்ந்தேன் ஒளிசூடும் நித்தியையே!


சரஸ்வதி தியானம் - 02

நவராத்திரியென்றாலே பள்ளி நாட்களில் சரஸ்வதி பூசை தொடங்குகிறது என்று தானே சொல்லப்படுகிறது. 

பாடசாலை ஞாபகத்தில் இருப்பது சகலகலாவல்லி மாலை! இதைப் படித்திருப்போம், பொருளுணர்ந்து சிந்திக்க ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு!

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் 

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் 

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் 

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

பதம் பிரித்தால், 

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் 

தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து 

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ என்றால் வெள்ளைத் தாமரையில் பாதங்களை வைத்திருப்பவளே உனது பாதங்களை எனது வெள்ளை உள்ளத்தில் இருத்தினால் அதன் ஆற்றலால் எனது உள்ளம் குளிர்ச்சியுள்ள தண் தாமரையாக மாற அருள் புரியமாட்டாயா? என்பதே பொருள். 

தாமரை என்பது யோகத்தில் எமது உடலில் உள்ள சக்கரங்களைக் குறிப்பது. இந்த சக்கரங்களில் எமது உடலிற்கு பிரபஞ்ச சக்தி இறங்கும் சக்கரம் சஹஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ் சக்கரம், ஸ்தூலத்தில் இது மூளையைக் குறிக்கும். இங்கு வெண்தாமரை என்பது தூய எண்ணங்கள் நிறைந்த மூளை என்று பொருள் கொள்ளலாம். எப்படி மூளை தூய எண்ணங்களால் நிறையும்? உனது பாதம் அந்த வெண்தாமரையாகிய எனது மூளையில் அருட்கிரணங்களைப் பாய்ச்சினால் எனது மூளையில் எழும் எண்ணங்கள் தூய்மையாகி, வெள்ளை உள்ளம் வாய்க்கும். இப்படி உன் பாதங்கள் எனது மூளையில் அருள் கிரணங்களைப் பாய்ச்சினால் அந்த வெண்தாமரை தண் தாமரையாகும். 

தண் என்றால் குளிர்ச்சியாகும், மூளை குளிர்ச்சியடைந்தால் சிந்திக்கும் திறன் பெருகும். மனம் ஒருமையடையும், எல்லாக்கலைகளையும் கற்றும் ஆற்றல் இலகுவாகப் பெருகும். மூளையில் எண்ணங்கள் ஒழுங்கில்லாமல் கொதித்துக்கொண்டிருந்தால் மனதை ஒருமுகப்படுத்த முடியாது. ஆகவே மூளை குளிர்ச்சியடைதல் என்பது மூளையின் சம நிலை குலையாத சிந்தனை செய்யும் ஆற்றல், இந்த ஆற்றலே சரஸ்வதி. 

ஆக எமது சஹஸ்ராரத்தில் தேவியை குருவாக அவள் பாதத்தை அந்த வெண்தாமரையில் வைத்து தியானிக்க எமது மூளை குளிர்ந்து தண்தாமரையாகும். 

அடுத்து சக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் என்ற வரியில் சகம் ஏழையு அளித்தவன் பிரம்மா, அதை உண்டு ஆலிழைமேல் உறங்கிக் காப்பவன் விஷ்ணு

பித்தாக அழிப்பவன் சிவன்!

ஏழு உலகையும் படைப்பதற்கு நுண்மையான அறிவு தேவை, அந்த அறிவு நீ!

காப்பவன் ஓய்வாக அமைதியாக இருக்கவேண்டும்! அப்படி அமைதியாக இருப்பவனால் மட்டுமே அனைத்தையும் பொறுமையாகக் காக்க முடியும். அதனால்தான் விஷ்ணு யோக நித்திரையில் இருக்கிறார் என்று சுட்டினார்கள். அமைதியாக நடப்பதைப் பார்த்துக்கொண்டு குளிர்மையாக, பொறுமையாக இருப்பவனால் மட்டுமே மற்றவர்களைக் காக்க முடியும். அதனால் உண்டான் உறங்க என்று விஷ்ணுவைக் குறிப்பிட்டார். இப்படி விஷ்ணு சலனப்படாமல் அமைதியாக பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்து செயல்கொள்ள மூலமாக இருக்கின்ற அறிவு நீ! இந்த அறிவு சக்தி இருப்பதால் தான் விஷ்ணு எந்த சலனமும் இன்றி அமைதியாக யோக நித்திரையில் இருந்து தனது காத்தல் தொழிலைச் செய்கிறார். 

ஒழித்தான் பித்தாக என்றால் அழித்தலைச் செய்யும் ருத்திரன் அழிப்பதற்கு ஆக்ரோஷமாக பித்தாக இருக்க வேண்டும். இந்த அழித்தலை செய்வதற்கும் தகுந்த அறிவு வேண்டும். அழித்தலும் ஒரு ஒழுங்கில் சம நிலை கெடாமல் இருக்க வேண்டும். இப்படி ருத்திரன் பித்தாக அழிக்கும் போதும் அதை சரியான ஒழுங்கில் செய்வதற்குரிய அறிவினைத் தருபவளும் நீயே! 

பிரம்மா, விஷ்ணு ருத்திரன் மூவருக்கும் அவர்கள் தொழிலைச் செய்ய அறிவுசக்தியாக இருக்கும் உன்னை கண்டு கொண்டவன் பிரம்மா! அவனுக்கு நீ சுவை கொள்ளும் கரும்பாக, இனிமையாக இருக்கிறாய் சகல கலைகளிலும் வல்லமையுள்ள சகலகலா வல்லியே! 

இதன் யோக நுட்ப பொருள்: சரஸ்வதி என்பது மனதின் எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் சக்தி, ஒழுங்கு! Order and perfection is Saraswathi! இதை ஒருவன் தன்னில் இருத்த அவன் மனம் ஒழுங்காக செயற்பட்டு அவனது மூளையை குளிமைப்படுத்தி மனதினைத் தூய்மைப்படுத்தி வெள்ளை உள்ளத்தினைத் தரும். இந்த அறிவு சக்தியே படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றிற்குரிய ஒழுங்கினை ஏற்படுத்துகிறது. இதை ஒருவன் மனதில் பெறுவதன் மூலம் எல்லாக்கலைகளிலும் வல்லவனாகிறான். இதுவே சரஸ்வதி உபாசனையின் அடிப்படை!


Saturday, September 28, 2019

சரஸ்வதி தியானம் - 01

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
இது சரஸ்வதி தேவியை துதிக்கப் பாவிக்கப்படும் எளிய மந்திர சுலோகம் இது! 
தேவி சரஸ்வதி! உனக்கு வணக்கம், வரம் தருபவளே, ஆசைகளின் வடிவானவளே கற்க ஆரம்பிக்கிறேன் எனக்கு இந்த வித்தையை சித்திக்கச் செய் என்பது இதன் பொருள்! 
சரஸ் என்பதை சாரையாக வெளிப்படும் நதி என்று வேதங்களை மொழிபெயர்த்தவர்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏற்றாற்போல் சரஸ்வதி என்ற நதியும் இருந்திருக்கிறது என்ற அடிப்படையில் கூறப்பட்டதாக இருக்கும். 
ஆனால் சரஸ்வதி என்பதன் உண்மை பொருள் தடங்கலற்று சாரையாகப் பாயும் எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றலைக் குறிக்கும். எவருக்கு தடங்கலற்ற, சீரான சீரிய ஏகாக்கிரம் இருக்கிறதோ அவருக்கு சரஸ்வதியின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். 
ஆகவே சரஸ்வதி நமஸ்துப்யம் என்றால் சீரான எண்ணத்தை உண்டுபண்ணும் ஆற்றலுக்கு அதிபதியே உனக்கு வணக்கம் என்று பொருள்! 
அடுத்த சொல் வரதே காமரூபிணி, சரஸ்வதி காமரூபிணி! இச்சை இல்லாமல் ஒரு செயல் நடைபெற முடியாது. ஆகவே வித்தையை கற்க விரும்புவனுக்கு வித்தை மேல் இச்சையை உண்டுபண்ணும் காமரூபிணி அவள்! வித்தை மேல் காமம் இருந்தால்தான் கற்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டும்! 
ஆகவே ஒருவன் தனது மனத்தில் எண்ண ஓட்டத்தை சீராக்கிக்கொண்டு, கற்கவேண்டும் என்ற இச்சையுடன் வித்தைய கற்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை இந்த சுலோகம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இப்படிக் கற்கப்படும் வித்தை சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தால் வாய்க்கிறது! 
சரஸ்வதி எனும் ஆற்றல் ஒரு விஷயத்தை தெளிவாக, சிறப்பாக, ஆழமாக கற்பதற்குரிய மனதின் ஆற்றல்! இந்த ஆற்றலுடன் அவன் கற்பதற்குரிய இச்சையை வளர்த்துக் கொண்டாலே அவனுக்கு அந்த வித்தை சித்திக்கும்!

தலைப்பு இல்லை

Ending Mahalayapaksham and Starting Navaratri with blessings of Nageshwari! Nagapooshani Amman, Devi is Nageshwari, Queen of Naga's  

Ancient name is Manipallavam/Nagathveepam, believe to be Sakthi peetam, where Devi's ankle chain was fallen. (As per temple wall paintings)


Monday, September 23, 2019

தலைப்பு இல்லை

இந்த நூல் Dr. BM Hegde இன் உரையில் கேள்விப்பட்டது.

மருத்துவர்களால் குணமாக்க முடியாது என்றும் சில மாதங்களில் இறந்து போகப் போகிறார் என்றும் கூறப்பட்ட ஒருவர்    தனது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு மீண்டு வந்ததைப் பற்றி அழகாக எழுதியுள்ளார். 

இப்படியான சில சந்தர்ப்பங்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். 

உடல் முழுவது குணப்படுத்தபட முடியாத புண்கள் உடைய ஒரு பெண் ஒரு அறையில் தனியே ம்ருத்யுஞ்ஜெய மந்திரத்தை மாத்திரம் கேட்டுக்கொண்டு இரண்டு மாதங்களில் பரிபூரண குணமடைந்திருக்கிறார். 

எமக்கு உள்ளே இருக்கும் மருத்துவரை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது கீழைத்தேய {சித்த, ஆயுர், சீன) தான் சொல்லித்தர முடியும்.


Sunday, September 22, 2019

ஒரு செயலைச் செய்தலும் ஸ்ரீ அன்னையின் நான்கு ஆற்றலும்!

ஸ்ரீ அரவிந்தர் பிரபஞ்ச மகாசக்தி நான்காக இயக்கத்தை நடத்துகிறது என்று விளக்குகிறார். 

ஒரு செயலை சரியாகச் செய்யத் தேவையான ஒருங்கிணைப்பு அறிவு ஆற்றல் சரஸ்வதி!

செயல் சரியாக திட்டமிட்டபடி நடக்க ஒத்திசைவு அவசியம், இந்த ஒத்திசைவை அடைவிக்கும் ஆற்றல் மகாலக்ஷ்மி

ஒத்திசைவு அடைந்த பின்னர் வேகமாக தடைகளை உடைத்து உயர வேண்டும், இதற்கு தடைகளை உடைக்கும் ஆற்றல் மகாகாளி

தடைகள் உடைந்து உயரம் எட்டியபின்னர் அகன்று விரியவேண்டும். இதற்கு பூரண ஞானம் வேண்டும். இந்த ஆற்றல் மகேஸ்வரி என்கிறார். 

இந்த நான்கு சக்திகளும் ஒருவன் ஒரு செயலைத்தொடங்கி, அதில் ஒத்திசைவை ஏற்படுத்தி, தடைகளை உடைத்து மேலேறி அகன்று விரிய உதவும் பிரபஞ்ச அறிவு சக்திகள்! 

இது ஸ்ரீ அன்னையின் குறியீட்டில் உள்ள உள் நான்கு இதழ்களையும் குறிக்கிறது! 

யோகத்தில் ஒருவன் பேருணர்வு நிலை அடைவதற்கு முன்னர் இந்த நான்கு பிரபஞ்ச மகாசக்திகளின் ஆற்றலையும் பெறுகிறான்.


சங்கத்தமிழனும் இலங்கை வரலாற்றுத் தொடர்பும்!

இன்று காலை தமிழ் நாட்டு தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொல்லியல் அறிக்கை நண்பர் கிருஷ்ணா மூலம் கிடைத்தது. 

படுவேகமாக படித்ததில் கிடைத்த சுவாரசியமான, தொடர்புபடுத்தக் கூடிய விஷயம் சங்ககால நாகரீகமும் இலங்கையும் மிகத் தொடர்புபட்டிருக்கிறது என்பதே! 

அதிலும் தற்போது தமிழர் பிரதேசங்கள் என்று கூறப்படும் இடங்கள் தாண்டியும் இந்தத் தொடர்புகள் இருக்கின்றது என்பது. 

கீழடி ஆய்வறிக்கையின் ஏழாம் பக்கம், பானைகளில் காணப்படும் குறியீடுகளைப் பற்றிய தகவலில் பெறப்பட்ட குறியீடுகள் கந்தரோடை, மாந்தை, திசமகாராமை, ரிதியாகம பகுதிகளில் பெறப்பட்ட குறியீடுகளுடன் ஒத்துவருவதாகக் குறிப்பிடுகிறது. (கீழடி, வைகை நதிக்கரை சங்ககால நாகரீகம், தொல்லியல்த் துறை, பக்கம் - 07) 

இந்தக் குறியீடுகள் தமிழகத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆதிச்ச நல்லூர், கொற்கை, அழகன் குளம், கொடுமணல், கரூர், தெரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ளது. 

ஆக இலங்கை நிலப்பரப்பும் சங்கத்தமிழனும் தொடர்புபட்டிருந்திருக்கிறான் என்பது உறுதியாகிறது.

முழு அறிக்கை இங்கே: https://archive.org/details/20190921_20190921_2102/page/n17


Saturday, September 21, 2019

தலைப்பு இல்லை

கீழடி ஆய்வுத் தகவல்கள் வெளி வந்திருக்கும் நேரத்தில் எனது அதியார்வமான துறையாக இருபது வருடங்களுக்கு முன்னிருந்த வரலாற்றுத் தொல்லியல் வாசிப்புகளின் நினைவுகள் மீண்டது. 

நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவபண்டாரத்தார் போன்றோரது நூற்கள் சேமிப்பில் இருந்தது. அந்த வரிசையில் Stuart Piggott என்ற ஆங்கிலேயேர் எழுதிய வரலாற்று முன்னர் இந்தியா என்ற நூலின் தமிழாக்கம் இலங்கை கல்வி அமைச்சு 1970 இல் வெளியிட்டிருந்தது. 

இது மொகஞ்சதாரோ, ஹரப்பா பற்றிய தகவல்களை விளக்குகிறது! 

சில படங்கள்!


தலைப்பு இல்லை

நாம் மண்ணையும், புவியையும் மாசுபடுத்தாத மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்வாழ்க்கை வாழும் உணவு உற்பத்தி முறைக்கு எமது முயற்சியை, நேரத்தை அர்ப்பணித்துள்ளோம்! 

அதை ஊக்கப்படுத்துவது என்பதன் உண்மையான அர்த்தம் விளைவிப்பவற்றை பணம் உள்ளவர்கள், வசதி உள்ளவர்கள் வாங்கி விளைவிப்பவனை மேலும் விளைவிக்க ஊக்கப்படுத்தி உதவ வேண்டும் என்பதாகவே இருக்கும்! 

இல்லாதவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும் நம்மிடமுள்ளவற்றை பகிர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக ஆரோக்கியமான உணவுண்ண நாம் சிறு கருவியாக இருக்கிறோம் என்று மகிழ வேண்டும்!

எமது பண்ணையின் விளைச்சலில் ஒரு சிறு பகுதி எமது சமூகத்தில் உணவுத் தேவை உதவி தேவைப்படுபவர்களுக்கு தரப்படுகிறது! 

எமது திட்டம் வெற்றிபெற வாடிக்கையாளராக உதவும் ஒவ்வொருவரும் இந்தப் பணியின் பங்காளர்களே! 

இது எமது திட்டத்தின், இயற்கை வேளாண்மைத் திட்டத்தின் அடிப்படைப் தத்துவகளில் ஒன்று!


Wednesday, September 18, 2019

தலைப்பு இல்லை

Finally Completed the long pending Task! 
ஹர..ஹர.. மாஹதேவ்! 
அவனருளால் அவன் தாள் வணங்கி... 
Coming Soon.........

Monday, September 16, 2019

தலைப்பு இல்லை

நேற்று நண்பர் ஒருவர் புத்தகத்தின் அட்டைப்படத்தை தனது பதிவில் பதிவிட்டிருந்தார். 
அது ஜப்பானியர்களின் நீண்ட ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணம் பற்றிய இரகசியத்தை உரையாடுவதாக கூறப்பட்டிருந்தது. 
ஐகி-காய் - ikigai (生き甲斐) என்பது அதன் பெயர்! இதில் ஐகி என்பது பிராணன் எனும் உயிர்சக்தியைக் குறிக்கும் சொல். ஐகி காய் என்ற சொல்லின் அர்த்தம் தமிழில் சரியாக இப்படி மொழிபெயர்க்கலாம் என்று எண்ணுகிறேன். 
பிராணனின் பயன் அல்லது உயிர்சக்தியின் பயன்
பிராணனின் விளைவு அல்லது உயிர்சக்தியின் விளைவு
ஜப்பானியர்களின் போர்க்கலையான ஐகிடோவும் இந்த உயிர்சக்தியை உபயோகித்து தற்பாதுகாப்பினை ஏற்படுத்தும் உத்திதான்! 
ஜப்பானியர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையின் அர்த்தம் என்பது காலை கண்விழித்தவுடன் தனது உயிர்சக்தியை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதாக இருக்கிறது. 
இவை எமக்குப் புதியது போல் தோன்றினாலும் நித்திய கர்மம் என்று வைதிகத்திலும், சைவமரபிலும், ஆயுர்வேதத்திலும், சித்த வைத்தியத்திலும் வரையறுக்கப்பட்டிருந்த ஒன்று தான்! இந்த மரபுகள் தற்போது சடங்காகவும், புனிதப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் கருதப்படுவதால் உயிர்சக்தியை எப்படி பயன்படுத்துவது என்ற அடிப்படை இல்லாமல் வெறும் சடங்காகப்போய் பலன் தரவில்லை என்று கூறலாம்! 
அறம், அல்லது தர்மம் என்பது இப்படி எமது உயிர் சக்தியை எப்படி எமது உடல் மன மேம்பாட்டிற்கு பயன்படுத்தி கூட்டு முயற்சியாக சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது என்ற கோட்பாடுகள்தான்! 
ஐகி-காய் தத்துவத்தினூடாக ஒருவன் தினசரி தனது உயர்சக்தியை மனதினூடாகவும், உடலினூடாகவும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஓர் ஒழுங்குமுறையை ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும், நீண்டகாலம் வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இந்த ஐகி-காய் தத்துவத்தின் அடிப்படை.

தலைப்பு இல்லை

எவர் பிரம்மா, சங்கரன், சுக தேவர், நாரதர், பீஷ்மர் முதலிய மகானுபாவர்களுக்கும் எளிதாக பிரத்யக்ஷமாக கண்களுக்குப் புலப்படுவதில்லையோ அந்த பரம புருஷனான ஸ்ரீ கிருஷ்ணனை உடனேயே வசீகரிக்கும் சாமர்த்தியமுள்ள நறுமணமான, அனந்த ஸக்தி ஸ்வரூபிணியான ஸ்ரீ ராதாவின் திருவடிகளை எப்போதும் சிந்திக்கிறேன்!

Saturday, September 14, 2019

தலைப்பு இல்லை

அனுபந்த சதுஷ்டயம் என்பது முற்காலத்தில் ரிஷிகள் ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அறிவியல் முறை. 

அனுபந்தம் என்றால் தொடர்புபட்ட என்று பொருள், ஒரு விஷயத்தை தொடர்புபடுத்தி ஆராய்ந்து அறிவைப்பெற நான்கு விஷயங்கள் முக்கியமானவை. 

1) அதிகாரி - ஆய்வினைச் செய்பவனது தகுதி

2) விஷயம் - ஆய்விற்குரிய விஷயம் எது?

3) ஸம்பந்தம் - ஆய்வுத் தலைப்பிற்கும் விளக்கத்திற்குமான தொடர்பு என்ன?

4) ப்ரயோஜனம் - ஆய்வின் பயன் என்ன என்பது பற்றிய விளக்கம். 

அதிகாரியின் தகுதி ஆய்வில் ஏகாக்ரமாக மனதை ஒருமைப்படுத்தியவனாக இருத்தல், மனத்தூய்மையுடையவனாகவும் தேவையற்ற கவலைகளும் குழப்பங்களும் அற்றவனாக இருக்க வேண்டும். 

இப்படி ஒரு விஷயத்தைக் கற்பவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!

முன்துணிபுடன் கேள்வி கேட்பவர்கள், மன அமைதியில்லாமல் அறிவைப்பெற ஆர்வமில்லாமல் குதர்க்கத்திற்கு கேள்வி கேட்பவர்கள் கேள்விக்கு தரும் பதில்கள் மாணவனுக்கோ, பதில் தரும் ஆசிரியனுக்கோ எந்தப்பலனையும் தருவதில்லை! 

தற்காலத்தில் ஆய்வு மாணவனுக்குரிய அதிகாரம் அவன் பூர்த்திசெய்துள்ள பட்டங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறதேவொழிய, அவன் ஏகாக்ர மனம் உடையவனா, சித்த சுத்தி உடையவனா, மனம் அமைதியானவனா என்பதைப் பற்றி எந்தக் கவனமும் எடுத்துக்கொள்வதில்லை! ஆகவே ஆய்வுகள் எதுவும் அவனிற்கோ சமூகத்திற்கோ பலனளிப்பதில்லை! வெறுமனே ஆகாயத்தில் பறக்கும் பட்டங்கள் போல் பெயரிற்கு பின்னால் தொங்கிக்கொண்டு இருக்கின்றன.


Friday, September 13, 2019

தலைப்பு இல்லை

இன்று ஒரு சாதகருக்கு காயத்ரி சாதனை என்றால் என்ன என்று விளக்கிய படம். 

எமது ரிஷிகள் உணர்ந்த படி ஆரம்பத்தில் பிரபஞ்சம் ஒரு புள்ளியைப்போன்று பிந்து அல்லது விந்தாக இருந்து பின்னர் அக்னியின் ஆற்றலால் இரண்டு அதிர்வாக பிளந்தது. இந்த அதிர்வினை ஸ்பந்தம் என்பார்கள் ரிஷிகள். இந்த அக்னியே படைப்புக் கடவுளான பிரம்மா. 

இந்த ஸ்பந்தத்தின் ஒரு புறம் ஜடப்பிரபஞ்சத்தை ஐம்பூதங்களாக உருவாக்கியது. 

மற்றொரு அதிர்வு - ஸ்பந்தம் சைதன்யம் அல்லது உயிர்ப்பினை உண்டாக்கியது. அந்த உயிர்ப்பு மேலும் பிளவுபடக்கூடிய் ஆற்றலுள்ள அறிவாக பிரபஞ்சத்தின் ஜடசக்தியான பஞ்சபூதங்களை மேலும் அதிர்வுகளை உருவாக்கி பிரபஞ்சத்தை விரிவித்துக்கொண்டு செல்கிறது. இப்படி பிரபஞ்ச அறிவு சக்தி ஜடப்பிரபஞ்சத்தை பிளந்து விரிவிக்க அக்னித்தன்மை தேவை. ஆகவே அந்த அக்னியை மணம் முடித்துக்கொண்டது. இதுவே பிரம்மா ஸாவித்ரியைப் படைத்து அவரே மணம் முடித்துக்கொண்டார் என்பதன் அர்த்தம். 

இந்த பிரபஞ்ச அறிவு சக்தியின் பெயர் ஸாவித்ரி! இந்த ஆற்றலை மனிதன் கவரக்கூடிய வகையில் சொற்கட்டுக்குள் கொண்டு வந்தவர் விஸ்வாமித்ர ரிஷி! 

பின்னர் இந்த அறிவு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் ஒரு சுழற்சியாக செய்து கொண்டு இந்த பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறது. 

இந்த உயிர்ப்பு சக்திக்கு மூன்று குணம் உள்ளது;

1) ஆசை அல்லது காமம்

2) விழிப்புணர்வு

3) தன்முனைப்பு 

இந்த மூன்றுமே அறிவு செயற்படுவதற்கான, உயிர்த்தன்மை இருப்பதற்கான அறிகுறிகள். சைதன்யம் அல்லது உயிர்த்தன்மையால் பிராணமய கோசம் உருவாகிறது. மேற்கூறிய ஆசை, விழிப்புணர்வு, தன்முனைப்பு மூன்றாலும் பிராணன் அசைவுறும். இந்த அசைவால் மனம் தோற்றம் பெறுகிறது. 

மனம் என்பது எண்ணம், சங்கல்பம், விகல்பம் என்ற மூன்று நிலைகளில் இயங்கும். எண்ணமாக இருக்கும் போது செயலற்று வெறுமனே சோம்பியிருக்கும். இதனால் தாமச குணம் உருவாகும். 

விகல்பத்தால் அதிக எண்ணங்கள் சங்கிலிக் கோர்வையாக ஏற்படுத்த அது ராஜஸ குணமாக மாறும். 

சங்கல்பத்தில் ஒரு இலக்கில் சீராக மனம் பாய சத்துவம் குணம் உண்டாகும். 

இப்படி மனிதன் ஜடப் பிரக்ருதியான ஸ்தூல உடலையும், சைதன்ய சக்தியான சூக்ஷம உடலையும், பரம்பொருளின் அமிசமான அக்னிமய காரணசரீரத்தையும் பெறுகிறான். 

ஸ்தூல சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரீரம் சென்று காரண சரீரம் அடைதலே யோகத்தின் முதல் இலக்கு!

இந்த ஒளி பெருகி மகாகாரண சரீர நிலை அடைந்தவர்களையே நாம் பிரபஞ்சத்தில் நிலையாக இருந்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மெய்ஞான குருவாகக் கொள்கிறோம். 

இதைச் சாதிக்க படைப்பின் ஆரம்பத்திலிருந்து அந்த ஸவிதாவின் பேரொளியான பிரபஞ்ச அறிவுடன் எமது அறிவினை இணைக்க வேண்டும். 

இதற்கு துணைபுரிவதே காயத்ரி சாதனை! 

இதை விளக்கும் படமே இங்கு இணைக்கப்பட்டுள்ளது!

இதற்குமேல் உள்ள விஷயங்கள் ஆர்வமுள்ளவர்களின் தகுந்த கேள்வி பதிலூடாக உரையாடலாம்!


தலைப்பு இல்லை

எனது வாழ்க்கையின் முக்கியமான அகத் தூண்டலை ஏற்படுத்திய ஒரு புத்தகம் பற்றிய பதிவு இது! 

இந்தப் புத்தகம் சிறுவயதில் நான் ஒரு விவாதப் போட்டியில் பங்குபற்றி வென்றதற்காக கிடைத்த பரிசு! பலக்காலமாக எனது புத்தக அலுமாரிக்குள் தேடிக் கொண்டிருந்தேன், நேற்றுத் தான் கிடைத்தது!

கல்வி - ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? என்பதற்கான உறுதியான வழிகாட்டல் சுவாமி விவேகானந்தரிடமிருந்து தான் கிடைத்தது. 

இந்த உபதேசம் எனக்கான அகத்தேடலிற்குரிய பாதையைத் திறந்தது. சுவாமி விவேகானந்தர் கூறிய கல்வி என்பது மனதைப் பற்றி அறிதல், மனதைப் பண்படுத்துதல், மனதின் ஆற்றலை ஒழுங்குபடுத்தல் என்பதைத் தவிர எதுவுமில்லை. 

மனம் என்றால் என்ன? மனதை எப்படிப் பயன்படுத்துவது? மனதின் ஆற்றல் எவை? இவையே எனது கற்றலின் ஆர்வமானது. இந்த தேடலுக்குரிய சரியான பதிலை வழங்கியவர்களே எனக்கு குருவாகவும் வாய்த்தனர்! அல்லது என்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்!

மனதைச் செம்மையாக்கி ஞானம் அடையும் வழி ஸ்ரீ அகத்திய மகரிஷியின் குருபரம்பரைக்குரியது. மற்றைய சித்தர்கள் பலர் வாசி, பிராண தத்துவங்களைக் கொண்டு முன்னேறும் வழிகளைக் கூற அகத்திய மகரிஷியின் வழி ஞானத்தில் முன்னேற மனமதை செம்மையாக்க வேண்டும் என்பது. 

இதற்கு ஏற்றால் போல் எனது பெயரையும் தந்தை இட்டிருந்தார். 

சுமனேந்திரன் - சு+ மன+ இந்திரன் 

இந்திரன் என்றால் ஒளியும் சக்தியும் மிகுந்தவன் என்று பொருள்!

சுமன - என்றால் மேன்மையான மனம் என்று பொருள் கொள்ளலாம். 

ஆக, எனது பெயரின் பொருள் 

ஒளியும் சக்தியும் மிகுந்த நல்ல மனமுடைய இந்திரன் - சுமனஇந்திரன் என்றாகிறது. 

எனது குருநாதர் இதைச் சுருக்கி சுமனன் என்று மற்றவர்களுடன் உரையாடும் போது பயன்படுத்துவார்! அதையே எனது எழுத்துக்கான பெயராக வைத்துக்கொண்டேன். திருமணமான பின்னர் ஸ்ரீயும் ஸக்தியும் சேர்ந்துகொண்டது. ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆனேன்! 

எனது குருநாதர் கூறுவார் தீக்ஷா நாமம் என்பது ஒருவர் தமது ஆன்ம சாதனையின் இலக்கினைக் ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக தரப்படுவது என்று! 

எனக்கு எனது பெற்றோர் இட்ட பெயரே எனது அகத்தேடலுக்குரிய வழியாக ஆகிவிட்டது. 

மனம் பற்றிய தேடல்! மனதை எப்படி மேன்மைப்படுத்துவது! மனதை எப்படி ஒளிமிகுந்ததாக்குவது! இது ஒருவன் கற்கவேண்டிய கல்வியின் இலட்சியம்!


Thursday, September 12, 2019

தலைப்பு இல்லை

What is Basic superpower in this Earth?

Atomic energy?

Money?

Petroleum? 

No...

Food!

Because you must have a food to survive and do all other works! 

Food is the basic super power! 

That's why we are into Agriculture     

World's most super power business!


Wednesday, September 11, 2019

தலைப்பு இல்லை

அம்ருதவர்ஷினியின் ஆசிரியர் இன்று பாடசாலையில் ஔவைப் பாட்டியும் முருகனும் சுட்ட பழம் சுடாத பழம் காட்சி நடித்துக்காட்டச் சொல்லி நடித்ததை வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் special evening show நடத்திக் காட்ட பதிவு செய்யப்பட்ட காட்சி! 

முருகன்: அம்ருதவர்ஷினி 

ஔவைப் பாட்டியின் குரல்: அப்பா

ஒளிப்பதிவு: சித்தப்பா

பார்வையாளர்கள்: அம்மாவும், அப்பம்மாவும்


தலைப்பு இல்லை

சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம்! சிறுவயது முதல் பாரதியாரைத் தெரியும்! எனது தம்பியின் (Thava Sajitharan) கவிகளுக்கு ஒரு ஆதர்ச நாயகன் என்பதால்! 
அதற்கு பிறகு எனக்கு யோகசாதனையில் ஆதர்சமாக விளங்கும் ஸ்ரீ அரவிந்தரின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும், அவருடன் 10 வருடங்கள் நெருங்கிய நட்புப் பாராட்டிய ஒரு தோழர் என்பதும் பிற்காலத்தில் பாண்டிச்சேரி சென்ற போது தெரிய வந்தவை! ஒரு முறை பாண்டிச் சேரி சென்றபோது பாரதியார் இருந்த வீட்டினை சென்று பார்வையிட்டேன். 
சிறுவயதில் மாத்தளை முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழாக்காலங்களில் நடைபெறும் சமயச் சொற்பொழிவுகளை கேட்கச் சென்ற போது ஒருமுறை கேட்ட பாரதியின் கவிதை இன்னும் நினைவில் இருப்பது; 
தேடிச் சோறுநிதந் தின்று — பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் 
வாடித் துன்பமிக உழன்று — பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து — நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் 
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல 
வேடிக்கை மனிதரைப் போலே — நான் 
வீழ்வே னன்றுநினைத் தாயோ? 
இந்தப்பாடல் யோகசித்தி வேண்டிப் பாடியது என்பது பிற்காலத்தில் தெரிந்து கொண்ட ஒரு விஷயம்!

தலைப்பு இல்லை

சங்கத்தமிழன் திருநாளாக இருந்து, 
சேர நாட்டுத் தமிழன் திருநாளாகி, 
திராவிடத்தமிழன் மறந்து போன, 
இன்றும் சங்கத்தமிழன் பண்பாடு காக்கும் 
கேரள நண்பர்களுக்கு
திருவோணத் திருநாள் 
வாழ்த்துக்கள்! 
சங்கத்தமிழ் தொகுப்பு நூலாகிய மதுரைக் காஞ்சி (கி.மு 400 ) அடிகள் 590 முதல் 599 வரை ஓணத்திரு நாள் பற்றிக்குறிப்பிடுகிறது. 
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் 
மாயோன் மேய ஓண நன் நாள் 
கோணம் தின்ற வடு வாழ் முகத்த 
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை 
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் 
மாறாது உற்ற வடு படு நெற்றி 
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் 
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட 
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப 
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" -
பெரியாழ்வார் - 09ம் நூற்றாண்டு,
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் 
ஏழ்படி கால்தொடங்கி 
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழாவில் 
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை 
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6
06ம் நூற்றாண்டு தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபாலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் 
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் 
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2

Tuesday, September 10, 2019

தலைப்பு இல்லை

My Dear Friend Anand Ramalingam and Team are doing a noble work to release school anthem! 

I got my life motto "Aim high and strive" from my school emblem. 

This profile picture is to support the initiative!

Matale Hindu College    


Sunday, September 08, 2019

தலைப்பு இல்லை

இது நல்ல சுவாரசியமான ஒரு கருத்துரையாடலுக்கான வாய்ப்பு! 
இன்றைய பதிவில் நான் நண்பர் JaiGanesh S Nadar ஐ நாடாரே என்று விளிக்க தம்பி Mynthan Shiva "நாடார்’களையும் ‘மேனன்’களையும் தேவர்களையும் கவுண்டர்களையும் ஹலைட் பண்ணிக்காம இருக்கலாம்ல.  பெயர் எதுக்கு இருக்கு" என்று கேட்க, 
அது எனது சிந்தனையைத் தூண்ட, சில நாட்களுக்கு முன்னர் அண்ணன் அமைச்சர் Mano Ganesan ஜாதி சங்க மண்டபத்தைத் திறக்கச் சென்று நெட்டிசங்களின் கண்டத்திற்காக "எவ்வளவு நல்லது செய்தாலும் எமது மக்களிற்கு குறையே தெரிகிறது" என்று நொந்து கொள்ள, 
இது பற்றி என் கருத்து என்ன என்பதே இந்தப்பதிவு! 
அண்மையில் வாசித்த யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் நூல் இது பற்றி விரிவாக உரையடுகிறது. 
அறிவுள்ள மனிதனின் (Homo sapiens) இனது பலமே ஒற்றுமை! 
எப்படி உடல் வலிமை குறைந்த விலங்கான மனிதன் வலிமையான விலங்குகளை எல்லாம் கட்டி இந்த பூமியை ஆள்கிறான் என்றால் மனிதன் தனது சிக்கலான மூளையினை கூட்டாகச் சேர்ந்து பயன்படுத்தத் தெரிந்திருப்பதால், வலிமையானவன் என்பதை அவன் அறிந்திருப்பதால்! மனிதன் தனியொருவனாக எதையும் சாதிக்க முடியாதவன்! 
சந்திரயான்- 2 திட்டத்தை நடைமுறைப்படுத்த 16500 மனிதர்களின் அறிவு தேவைப்படுகிறது. நாம் இந்த Facebook தளத்தைப் பயன்படுத்த 35,587 மனிதர்கள் தமது உழைப்பைச் செலவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
ஆகவே மனிதனின் பலம் ஒற்றுமை! பல மூளைகளும், மனமும் ஒருங்கிணைத்து ஒரு இலக்கில் செலுத்தப்பட வேண்டும்! 
அந்த பலத்திற்காக ஏற்பட்டவை தான் சமூகக் குழுக்கள்! ஒரு பொது அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு அனைவருமாக குறித்த இலக்கிற்குப் பாடுபட்டால் இந்த உலகில் பலமுடையவர்களாக இருக்கலாம் என்பதே குழு நடத்தையின் (Group Behavior) அடிப்படை! அரசியல் கட்சிகள், ஜாதிக்கூட்டங்கள், மதக்கூட்டங்கள் எல்லாம் இப்படி கூட்டமாக பலமாக இருப்பது எப்படி என்ற தந்திரோபாயத்திற்காகவே உருவாக்கப்படுகிறது. 
இப்படி தமது உணவுத்தேவைக்கும், பாதுகாப்பிற்கும் கற்காலத்தில் உருவாகிய மனிதக் குழுக்கள், படிப்படியாக பூமியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபின்னர், வேறு வேலை இல்லாமல் (   ) காலப்போக்கில் தமக்குள்ளேயே யார் பலமானவை என்ற போட்டிக்குள் இறங்கியதால், மற்றவிலங்குகளுடன் போட்டி போடுவதை விட்டு விட்டு தமக்குள்ளேயே போட்டி போடத் தொடங்கியது! இதன் வடிவங்கள்தான் ஜாதிச் சண்டைகள், மதம், இனம், கறுப்பு வெள்ளை, அதிகார, அரசுச் சண்டைகள்! 
ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட இன, மத, ஜாதி அடையாளங்கள் மனிதனின் மனதிற்குள் இருக்கும் ஆணவம் - Ego செயற்பட, புத்தி நிலை குலைய பிளவிற்கான காரணிகளாயின! வர்க்க பேதங்கள் உண்டாயிற்று! மனித குழுக்களுக்கிடையிலான மோதல் வளங்களுக்கான போட்டியால் உருவான ஒன்று என்று கூறப்படுவது என்னைப் பொறுத்த வரையில் தவறானது! மனிதனது அடிப்படைத் தேவைகள் சொற்பமானவை! தானாக உருவாக்கிக்கொண்ட ஆசைகள், பேராசைகள் அதிகமானவை. ஆகவே அவனது சிக்கலான மூளையும், சலனிக்கும் மனமும் ஏற்படுத்தும் சிக்கல்களே இந்த உலகின் பெரும் பிரச்சனைகள்! மனிதன் அடிப்படைத் தேவைகளை விட கற்பனைத்தேவைகளுக்கு அதிகமாக உழைப்பவன்! 
ஆக குழுக்களின் அடையாளங்களை களைவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை! மனப்பாங்கு செம்மையாகவேண்டும்! அனைத்து மனிதரும் ஒற்றுமையாகச் செயற்பட்டாலே நாம் பலமாக வாழலாம் என்ற அறிவியல் உண்மை தெளிவிக்கப்பட வேண்டும். 
ஆக எல்லோரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவி, வாழ எந்தவொரு அடையாளமும் துணைபுரியுமானால் அது நல்லதே! 
மனிதரைப் பிரித்து கூட்டு வலிமையைக் குன்றச் செய்யும் எதுவும் தவிர்க்கப்பட வேண்டியவை! 
ஆகவே ஜாதி, மதம் போன்ற வெளி அடையாளத்தினைத் தூக்கி எறிவதால் நன்மை உருவாகும் என்று மேலோட்டமாக எண்ணுவதைவிட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைய என்ன மனப்பாங்கினை உருவாக்க வேண்டும் என்பதே நாம் உரையாட வேண்டும் என்றே நினைக்கிறேன்! 
ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் ஒற்றுமையையும் ஒத்திசைவையும் (Harmony) நோக்கியே அசைகிறது, அதற்கு எதிரானவை எல்லாம் வலிமை இழக்கச் செய்யப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்!

தலைப்பு இல்லை

இன்று நண்பர் ஒருவருடன் உரையாடும் போது நான் நேற்றுப் பதிவிட்ட "கடமைக்காகச் செய்தல்" என்ற பதிவு தன்னை சுட்டிக் காட்டுவதும், சுட்டுக் காட்டுவதும் போல இருந்தது என்று கூறினார்! 

அந்தப் பதிவு எவரையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது அல்ல! கடந்த காலத்தில் ஒரு நிர்வாகியாக பணியாற்றிய காலத்திலும், சாதகர்களை வழி நடாத்தி சில திட்டங்களைச் செய்விக்கும் போதும் ஏற்பட்ட அனுபவங்களதும், மேலும் நான் என்னை எப்படி செயலாற்றுவதற்கு செம்மைப்படுத்துகிறேன் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. 

என்னை ஆன்மீகவாதி என்று கருதி பலரும் தமது மனதிற்குத் தெரிந்த வகையில் வரையறுத்துக் கொள்வது உண்டு! 

நான் பின்பற்றும் ஆன்மீகம் என்பது மனதினைச் செம்மைப்படுத்துவதும், உற்சாகமாக, உத்வேகமாக செயல் புரியும் ஆற்றலைத் தருவதையும், எதையும் வெறுத்து ஓடாமல், விரும்பி மயங்காமல் நானும், என்னைச் சார்ந்தவர்களும், நாம் வாழும் உலகமும் இன்பமாக வாழ ஏற்ற செயலைச் செய்வது! 

ஆகவே செயலை யோகமாக்க இருக்கும் தடைகளைப் பற்றியதே நேற்றைய பதிவின் நோக்கமன்றி எவரையும் சுட்டிக்காட்டுவதல்ல!


Saturday, September 07, 2019

கடமைக்காக செயலாற்றுதல்

பலர் ஒரு செயலைச் செய்வதற்கு தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும், அதனால் ஏதாவது பயன் கிடைக்க வேண்டும் என்று காட்டும் ஆர்வம் செயலினை சிரத்தையாக செம்மையாகப் பூர்த்தி செய்வதில் காட்டுவதில்லை! 

ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டால் தமது மனதையும் மூளையையும் அந்தப் பொறுப்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த சிந்தனையும் செலவு செய்யாமல் சொன்னபடி செய்யும் சுப்பன் போன்று செயலாற்றுபவர்கள் தமது ஆற்றலையும் வீணாக்கி, மற்றவர் ஆற்றலையும் வீணாக்குபவர்கள். 

இன்னும் சிலர் செயலுக்கு முன்னர் கூறும் வாய்ஜாலமும், ஆலாபனைகளும் செயலை செம்மையாகச் செய்து சரியான விளைவினை முடிவில் பெறுவதில் காட்டுவதில்லை! 

இன்னும் சிலர் நுட்பமாக மரியாதை செலுத்துவதாக நடித்து செயலைச் செய்யாமல் ஏமாற்றுபவர்கள்! 

இன்னும் சிலர் குருவையும், தெய்வத்தையும் மதித்து பக்தி காட்டுவதால் குருவும் தெய்வமும் தமது மனத்தவிப்பினை நிறைவேற்ற வந்த வேலைக்காரர்கள் என்ற நினைப்பில் தமது கடமைச் செய்யாமல் தம்மை ஏமாற்றும் முட்டாள்கள். 

இன்னும் சிலர் தமது சொந்தச் செயலிற்கும் மற்றவர்கள் உதவி என்று கேட்பதற்கு செய்வதற்கும் பாரபட்சம் காட்டி, இலாப நட்டம் பார்க்கும் கணக்கர்கள்! 

இவர்கள் அனைவரும் தம்மைத் தாமே ஏமாற்றுபவர்கள்!

செயலாற்றுவது என்பது ஒரு யோகம், யோகம் என்றால் இணைப்பு, ஒரு செயலைச் செய்ய அந்தச் செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஏகாக்கிரமாக சிந்திக்க வேண்டும், இப்படிச் சீராக சிந்தித்து பின்னர் அந்தச் செயலை செய்யும் போது மனம் சீராகும்! மனம் சீராகினால் திருப்தி உண்டாகும், திருப்தி உண்டானால் மனம் மகிழ்வடையும்! மனம் மகிழ்ச்சியாக இருந்தால் மனச் சலனம் குறையும், மனச் சலனம் குறைந்தால் யோகம் சித்திக்கும். 

இப்படி எடுத்த செயல்கள் அனைத்தையும் ஒரே மனப் பண்புடன் முடிக்கும் பண்பு பெற்றவனே உண்மையான மனிதன்! மற்றவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றும் ஏமாளிகள்!


Friday, September 06, 2019

இன்று ராதாஷ்டமி

ராதை ஸ்ரீ கிருஷ்ணனின் ஹ்லாதினி - அன்பு சக்தி! ராதையின் இந்த அன்பு சக்தி கிருஷ்ணனில் நிரப்பப்பட்டுள்ளதாலேயே கிருஷ்ணன் எல்லோராலும் விரும்பப்படுபவன் ஆகிறான். 
ராதை இல்லாவிட்டால் நான் வெறும் கிருஷ்ணனாக இருக்கிறேன், ராதாவின் சங்கம் கிடைத்ததுமே சோபை பெற்று ஸ்ரீயோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிவிடுகிறேன். ராதா இல்லையென்றால் நான் செயலற்ற சக்தியற்ற சலனமற்றவனாகிறேன், ஆனால் ராதாவின் சங்கம் கிடைத்ததுமே அது என்னைச் செயலில் ஈடுபட்டவனாக, பரம குறும்புக்காரனாக அளவற்ற புத்திசாலியாக அமைத்துவிடுகிறது. ராதா எனது பரம ஆத்மா என் ஜீவன் - என் உயிரில் தோன்றியவள். ராதாவிடம் பிரமையை பெற்று அந்தப் பிரேமையையே நான் என்னுடைய ஜனங்களுக்கு அளிக்கிறேன். உண்மையில் நான் தான் ராதா, ராதா நானாகும். ராதா நாமத்தைச் சொல்லி என்னை விலைக்கு வாங்கலாம்! 
- ஸ்ரீ கிருஷ்ணன்-

Thursday, September 05, 2019

தலைப்பு இல்லை

நாம் பூமியிற்கு வந்திருப்பதோ சிறு விஜயம், ஆகவே நேரத்தை விரயம் செய்யாமல் எம்மையும் எம்மைச் சூழ உள்ளவர்களையும், சூழலையும் இருப்பதை விட மேம்படுத்தப் பாடுபட்டு விட்டு மீளச் செல்வோம்!
Let us strive to make this earth a better place by living in alignment with nature, improving us and empowering those who around us – We visited earth for short time, we'd be gone when the time is ripe so let's not squander even a single minute

Wednesday, September 04, 2019

நானும் இயற்கை வேளாண்மையும்

2014 தொடக்கம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அகத்தியர் ஞானம் முப்பது, காயத்ரி சாதனை, யக்ஞம் பற்றி உரையாடல் வாராந்தம் கொழும்பில் நடைபெற்று வந்தது. 

சிறிய ஆர்வமுள்ள சாதகர்கள் குழுவுடன் உற்சாகமாக சென்று கொண்டிருந்தது. 

கடந்த ஆகஸ்ட் நான் இயற்கை வேளாண்மைத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்து வந்துவிட்டேன்! 

அதன் பின்னர் பல சாதகர்கள் இது தடைப்பட்டுப் போய்விட்டதாக மனம் வருந்தினார்கள்! 

இன்றும் ஒரு அம்மையார் எமது அறிவுப்பகிர்வு தடைபட்டுப் போய்விட்டதாக கூறினார். 

அதற்கு நாம் கூறிய பதில்; 

அப்போது அறிவுப் பசிக்கு விருந்திட்டுக் கொண்டிருந்தோம்! 

இப்போது உடல் ஆரோக்கியம் தரும் உணவு உற்பத்திக்கு நேரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்றேன்! 

இறைவன் அருளாலும், எமது குழுவின் அயராத முயற்சியாலும் முதல் படியை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறோம்! 

எந்த செயற்கை உரமும், பீடைகொல்லியும் வாங்காமல் பசுவின் சாணமும், கோசலமும், சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளும் கொண்டு கத்தரிச் சாகுபடி வெற்றியாகியுள்ளது! 

படிப்படியாக மற்றைய மரக்கறிகளும் வரும்! 

எம்முடன் சேர்ந்து எமது முறையில் செய்யக் கூடிய ஆர்வமுள்ள இளைஞர்கள் சிலரும் இணைந்துள்ளார்கள்! அவர்களது உற்பத்தியும் எமது தரக் கண்காணிப்புடன் உள்வாங்கப்படும்! 

விவசாயத்தின் வெற்றி உற்பத்தியை வாங்குபவர்களது கைகளில் உள்ளது! தொடர்ச்சியான ஊக்கம் வாடிக்கையாளர்கள் தரத்தரவே இந்தத் திட்டம் வெற்றி பெறும்!


தலைப்பு இல்லை

பலருக்கும் வேதங்களை, புராணங்களைப் படிக்க வேண்டும், ஆனால் என்ன காரணத்திற்காக என்பதில் தெளிவு இருப்பதில்லை! அதை பற்றிய ஒரு உரையாடலுக்காக இந்தப் பதிவு! 
ப்ரமேயம்
பிரமாணம்
விருத்தி ஞானம்
ப்ரமதா
இந்த நான்கு சொற்களும் எமக்கு எப்படி அறிவு உருவாகிறது என்பதை விளக்கும் சொற்கள். 
அறியப்பட்ட சரியான அறிவு ப்ரமேயம்!
அறிவதற்கான சரியான முறை பிரமாணம்!
அறிவதற்கு மனதில் எழுப்பப்படும் சரியான கேள்விகள் விருத்தி ஞானம்! 
அறிபவரின் மனதில் தோன்றும் விருத்திகள் ப்ரமதா!
இங்கு சரியான அறிவு என்பது பற்றிய வரைவிலக்கணம் அவசியம்! 
ஒரு செயலின் இறுதி இலட்சியம் என்ன என்பது பற்றித் தெரியாமல் அதைப்பற்றி அறிய முயல்வதில் எந்தப் பயனும் கிடைப்பதில்லை! அது மன ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தும் முறை.
சிலர் curiosity எனப்படும் அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக எப்போதும் எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக் கொண்டு இருப்பார்கள், இது மூளையின் சக்தியை வீணாக்கும் செயல்! ஏனென்றால் உடலில் பெரும்பகுதி ஆற்றலை உறிஞ்சுவது மூளை, அந்த மூளையினை இலக்கும், நோக்கமும் அற்ற விஷயங்களுக்காக பயன்படுத்துவது ஒருவித துஷ்பிரயோகம்! 
ஆகவே கேள்வி மட்டும் கேட்பது சரியான முறை அல்ல! இலக்குடன், நோக்கத்துடன் கூடிய கேள்வியே சரியான முறை! 
அடுத்து எது சரியான இலக்கு என்பது பற்றித் தெரியாமல் நாம் கற்பனை செய்யும் இலக்கினாலும் எமது அறிவைப் பெறும் செயல் வீணாகலாம்! இதற்கு எமக்கு முன்னிருந்த ஆப்தர்கள் - உண்மையை அனுபவப் பூர்வமாக அறிந்தவர்களின் வார்த்தைகளை துணை கொள்ள வேண்டும். இது ஆப்த வாக்கியம் என்று கூறுவார்கள். 
எமக்கு முன்னிருந்த அனுபவம் வாய்ந்த உண்மையை அனுபவித்த பெரியோர்கள் வாழ்க்கையின் இலக்கினை நான்காக வகுத்திருக்கிறார்கள். 
அறம்
பொருள்
இன்பம் 
வீடு
அறம் என்பது எது எம்மை இந்த பூமியுடன், வாழ்க்கையுடன் பிணைத்து வைத்திருப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விதிகள்! 
பொருள் என்பது எமது வாழ்க்கையினை வாழ்வதற்கு அறத்தைப் பின்பற்றி சேர்க்கப்படுபவை! 
இன்பம் என்பது எமது மனம் சார்ந்த அகவாழ்க்கையையும், உடல் சார்ந்த புறவாழ்க்கையையும் சரியாக திருப்தியாக வாழ்வதற்கு தேவையானவற்றைச் செய்வது!
இந்த மூன்று படிகளையும் சரியாக செய்தால் கிடைப்பது வீடுபேறு அல்லது மோக்ஷம், மோக்ஷத்திற்கு முயற்சிப்பவன் அறத்தின் வழி நின்று பொருளீட்டி, தானும் தன்னைச் சார்ந்தவர்களும், இந்த உலகமும் இன்பமாக வாழ வழிசெய்தால் வாய்ப்பது! ஆகவே மனிதர்கள் செய்யவேண்டியது அறம், பொருள், இன்பம், இவற்றைச் சரியாகச் செய்தால் கிடைப்பது வீடு பேறு! 
வாழ்வின் இந்த நான்கு இலக்குகளையும் சரியாகப் புரிந்துகொண்டு அதனைப் பெறும் இலக்குடன் கேட்கும் கேள்வியே சரியான அறிவைத் தரும்! அப்படிப்பெறும் அறிவினால் மட்டுமே தெளிவு வரும்! அது பயன் கிடைக்கும்! 
இப்படி வேதங்களும், புராணங்களும் எதற்காக கூறப்பட்டது என்ற இலக்கு இல்லாமல் படிக்கத்தொடங்கினால் ஏற்கனவே எமது மனதிலுள்ள வக்கிரங்களையும், காழ்ப்புணர்ச்சிகளும், ஆபாசங்களும் அதன் அர்த்தங்களாக வெளிப்பட்டு எம்மைக் குழப்பும்!

Tuesday, September 03, 2019

கணேச இரகசியம் – 01

இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய அதியுயர் உண்மை அணுத் தன்மை சார்ந்தது. அணுக்கள் கூட்டாகச் சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டுள்ளது. சமஸ்க்ருதத்தில் கண - gaṇa என்பது கூட்டம் அல்லது தொகுப்பு என்று பொருள்படும். கணங்கள் என்றால் ஒருவகைப்படுத்தலின் தொகுப்பு, பொதுவாக ஜோதிடத்தில் மனிச கணம், தேவ கணம், ரக்ஷச கணம் என்று சொல்லுவார்கள். இதன் பொருள் பூமியில் பிறக்கும் மனித ஆத்மாக்கள் பூமிக்கும் வரும் வழியை அவற்றின் சத்துவ, ரஜோ, தமோ குணத்தின் அடிப்படையில் நக்ஷத்திரத்தினூடாக தேர்ந்தெடுக்கும். ஆகவே மனித உடலில் உள்ள உயிரின் அடிப்படையில் மூன்று வகுப்பாக – கணங்களாக பிறந்த நக்ஷத்திர அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. இப்படி மனிதர்களைப் பகுப்பது போல் உலகில் எதைப்பகுத்தாலும் அதை வகைப்படுத்த கணங்கள் தேவைப்படுகிறது. 

இவற்றை ஆழம் வரை ஆராய்ந்து சென்றால் இறுதியில் அணுவும், அணுவிற்குள் இருக்கும் துணிக்கைகளும் மிஞ்சும். 

இவற்றை எல்லாம் வகைப்படுத்தி, செயற்படுத்தும் மூல சக்தியை பராசக்தி என்று குறிப்பிடுவோம். இவற்றை மனிதர்கள் வணங்குவதற்கு இலகுவாக பல பெயர்களை இட்டு கூறிவருகிறார்கள். இந்த மூலசக்தியிலிருந்தே எல்லாவித பாகுபாடான பிரபஞ்சப் பொருட்களும் உருவாகிறது. 

இப்படி உருவாகிய பிரபஞ்சப்பொருட்கள் எல்லாம் குழம்பிய நிலையில் (Chaotic state) இலிருந்து ஒத்திசைவாக (Harmonically) நடக்க ஒரு தலைவன் தேவை. அவனே கண+அதிபதி = கணபதி, 

மூலசக்தியிலிருந்து கதிர்த்த பிரபஞ்சப் பொருட்களை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த அந்த சக்தியின் அமிசத்திலிருந்து ஒன்றாலேயே அதைச் செய்ய முடியும். இதனால் தான் பார்வதியின் உடலிலிருந்து வழித்தெடுத்த மஞ்சளில் இருந்து கணபதி உருவாகினார் என்று புராணத்தில் சொல்லி வைத்தார்கள்.


Monday, September 02, 2019

தலைப்பு இல்லை

இன்று எமது தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சாகம்பரா கணபதிக்கு சதுர்த்தி பூஜை சதுராவர்த்தி தர்ப்பணத்துடன்!

Sunday, September 01, 2019

கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் படி தியானம்;

வலது புறத்தில் உள்ள தந்தமும், நான்கு கைகளும், (வலது மேல் கையில்) பாசக்கயிறும் (இடது மேல் கையில்) அங்குசமும், ஒடிந்த கொம்பும், வரம் தந்து ஆசி வழங்குகின்ற (கீழ்) வலதுகையும், மூஞ்சூறுக் கொடியும், சிவப்பு நிறமும், பெரிய வயிறும், முறம் போன்ற காதுகளும், சிவப்பு ஆடையும், சிவப்பு மலர்களால் ஆன மாலை அணிந்தவரும், சிவப்பு சந்தனப்பூச்சும், எல்லோராலும் வழிபடப்படுபவரும், தனது பக்தர்களை என்றும் நழுவ விடாதவரும், சுயம் பிரகாசமானவரும், உலகிற்கு முழுமுதற் காரணமானவரும், படைப்பின் தொடக்கத்தில் இருந்தவரும், பிரக்ருதியிற்கும் புருஷனுக்கும் அப்பாற்பட்டவருமான இந்த கணபதியை எவர் எப்பொழுதும் தியானிக்கிராரோ அவர் யோகிகளிலேயே மிகச்சிறந்த யோகியவார்!
கணபதி அதர்வசீர்ஷம் - 13

தலைப்பு இல்லை

பலருக்கு வாழ்க்கை துன்பமாக இருப்பதற்குக் காரணம் எதிர்பார்ப்புகளும், மற்றவர்கள் எமக்கு எல்லாம் தரவேண்டும், உதவ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் தான்! 

கல்வி கற்ற பலருக்கு தான் எதிர்பார்க்கும் தொழில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு!

வேலை செய்யும் இடத்தில் நாம் கூறும்படி எல்லோரும் நமக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பு!

ஆனால் உண்மை மறுபுறம், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவனே எல்லோருக்கும் வேண்டியவனாக இருக்கிறான். 

நெப்போலியன் ஹில் வாழ்க்கையில் வெற்றியடையத் தேவையான மூலதனங்கள் என்று மூன்று விஷயங்களைத் கூறுகிறார். 

1) தெளிந்த மனம்

2) ஆரோக்கியமான உடல்

3) பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம். 

இந்த மூன்றும் இருப்பவன் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுவதில்லை, காத்திருப்பதில்லை! அவனே முதலடியை வைக்கிறான்! அவனைத் தேடி எல்லா வாய்ப்புகளும் வருகிறது!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...