குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 29, 2019

தலைப்பு இல்லை

இன்றைய வீரகேசரி சங்கமம் இதழில்! 

அணு விஞ்ஞானியான ஒரு தேவி உபாசகரின் ஆன்மஞான சிந்தனைகளைத் தமிழில் தரும் முயற்சி!

குருவருளால் எட்டு வாரம் இலங்கையின் முன்னப் பத்திரிகையில் வந்துக் கொண்டுள்ளது! 

மக்களுக்கு நல்ல விடயம் சேர வேண்டும் என்றும், தனது சமூகத்தின் மீது அக்கறையுடன் பணியாற்றி வரும் பத்திரிகை உலகில் தனியிடம் உள்ள பெண் ஊடக ஆளுமை ஜீவா சதாசிவம் இதழாசிரியராக இருக்கும் சங்கமம் இதழில் தேவிஉபாசனையின் மகிமை வந்துக் கொண்டிருப்பது சிறப்பு! அவரிற்கு நன்றிகள்!


தலைப்பு இல்லை

வெள்ளவத்தை கிரியா பாபாஜி ஆரண்யம் ஆறுமுகம் ஐயா அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது, யோகாசனம் கற்பிப்பதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கற்பித்த ஒரு ஆசான். இன்று உலகம் முழுவதும் இருக்கும் அனேக இலங்கை யோகாசன ஆசிரியர்கள் ஆறுமுகம் ஐயா அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்! அவரின் இரண்டு மாணவர்கள் நவரத்தினம் முரளீதரனும், கந்தப்பு இறைவன் (Kanthappu Eraivan) அவர்களும் யோக வாழ்வு என்று கனடா கிரியாபாபாஜி அன்பகம் என்ற அமைப்பின் மூலம் வெளியிட்டுள்ளார்கள். 

இந்த இதழில் எமது பிரணாயாமம் ஓர் அறிமுகம் என்ற கட்டுரை வந்துள்ளது!


Friday, June 28, 2019

மண்புழுவும் மண்ணுக்கு உயிருட்டலும்

மண்புழுவிற்கும் எமக்குமான கலாச்சாரத் தொடர்பு பல நூற்றாண்டுக்கானது. 
திருவாசகத்தில் மாணிக்க வாசகர் "எறும்பிடை நாங்கூழெனப்புலனா லரிப்புண்டு" என்கிறார். 
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் மண்புழுவின் பெருமையை இப்படிக்கூறுகிறார். 
"ஓகோ நாங்கூழ்ப் புழுவே யுன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்
உழைப்போ ருழைபி ழுலுவோர் தொழின்மிகும்
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ
எம்மண்ணாயினும் நன் மண்ணாக்குபவை
விடுத்தனை யிதற்கா, எடுத்தவுன் யாக்கை
உழுதுழுது உண்டு மண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந்தும் புகழ் வேண்டார் போல்.
என்கிறார்! மண்புழு என்றே எங்கள் முன்னோர் சொல்லவில்லை, நாங்கூழ்ப் புழு என்றார்கள். நன்கு உழும் புழு என்பதன் மருவலாகத் தான் இது இருக்க வேண்டும்! 
இது மண்ணை உழுதால் உழுவோர்க்கு தொழில் மிகும், பெருகும் என்கிறார் பாடலில்! உழுவோருக்கு எல்லாம் அரசனாக அவர்களின் உழுதலையெல்லாம் பயன் பெறச் செய்யும் அரசன் நாங்கூழ்ப் புழு! 
எந்த மண்ணிலும் இந்த மண்புழு இருந்தாலும் அந்த மண்ணை நல்ல மண்ணாக்கும் ஆற்றல் உள்ளவை! 
இந்தப் பாடலில் கடைசி வரிகளில் எவ்வளவு கஷ்டப்பட்டு மண்ணைப் பண்படுத்தி உழைத்தாலும் அதன் உழைப்பு கண்களிற்குத் தெரிவதில்லை! அதனால் மண்புழுவிற்கு எந்தப் புகழும் கிடைப்பதில்லை!
இன்று விவசாயம் மண்புழுவை மறந்ததால் மண் இறந்து விட்டது! மண் இறந்தால் பயிர் விளையாது!
மண்ணிற்கு உயிர் கிடைப்பது என்பது அதில் மண்புழு இருப்பது! மண்புழு இருக்கும் மண் நலமான மண்! வளமான மண் என்று இன்று நவீன விவசாயம் சொல்வது மணிச் சத்து, சாம்பல் சத்து, தழைச் சத்து எல்லாம் இருந்தால் தாவரம் வளர்ந்து விடும் என்று போதிக்கிறது. தாவரம் வளர்ந்தாலும் நலமாக இருக்குமா என்றால் இல்லை! நோயுள்ள சொத்தைத் தாவரமாக மருந்து குடிக்கும் நோயாளி போல் நஞ்சான பூச்சிமருந்து அடித்துக் காப்பாற்ற வேண்டிய தாவரமாகவே இருக்கும்! 
நலமான நஞ்சில்லாத விவசாயம் வளர வேண்டுமென்றால் மண்ணில் மண்புழு சுதந்திரமாக உழுது வாழ வேண்டும்!

மகாராஷ்டிரா ஜால்கோன் வாழை பயிர்ச்செய்கை அனுபவங்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்ர மானிலத்தின் ஜால்கோன் மாவட்டத்தின் தலை நகரிற்கு வாழைச் செய்கை பற்றிய ஒரு ஆய்வுக் கற்கைக்காக சென்றிருந்தோம். ஜால்கோன் மாவட்டம் மகாராஷ்ர மானிலத்தில் 2/3 வாழைப்பழ உற்பத்தியைக் கொண்டிருந்தது. 
மும்பயிலிருந்து வாகனத்தின் மூலம் ஜால்கோனிற்கு பயணித்தோம். ஜால்கோனின் காலநிலையில் வாழைச் செய்கை செய்கிறார்கள் என்பதை நாம் நேரில்காணும் வரை நம்பவில்லை!
நாம் சென்றது மே மாதத்தில், வெப்ப நிலை 42c, இந்த வெப்ப நிலையில் எப்படி வாழை பயிரிட முடியும் என்று நினைத்துக் கொண்டு செல்கையில் அடுத்த ஆச்சரியமான தகவல் வருடத்திற்கு 750mm இற்கு அதிகமாக மழை கிடைக்காது என்று! அதிக பட்ச மழை ஜூலையில் 250mm, இதற்கு சற்றுக் குறைவாக ஜூன் தொடங்கி செப்டெம்பர் வரை மழை! 
இலங்கையில் அதி உலர் வலயம் என்று சொல்லப்படும் 500 - 1000mm மழை வீழ்ச்சியைப் போன்ற ஒரு இடத்தில் வாழைச்செய்கை அதுவும் வர்த்தக வாழைச் செய்கை நடைபெறுகிறது என்பதை நம்பமுடியவில்லை! 
அனால் அங்கு சென்ற பின்னர் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! ஒவ்வொரு குலையும் 45kg சராசரி நிறையைக் கொண்டிருந்தது! 
உயர் வெப்பம் உள்ள கால நிலையில், மழைவீழ்ச்சி அதிகுறைவான ஒரு பிரதேசம் ஒரு மாநிலத்தின் 2/3 வாழைப்பழ உற்பத்தியைக் கொண்டிருந்தது! 
சரியான அறிவியல் ஆய்வும், நீர் மேலாண்மையும், நிர்வாகத்திறனுமே இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது.

தலைப்பு இல்லை

வாழைத்தோட்டத்து கள ஆய்வு!

Sunday, June 23, 2019

ஸ்ரீ அரவிந்தரின் துர்க்கா ஸ்துதி

ஸ்ரீ அரவிந்தர் இந்திய தேசத்தை பண்டைக் காலத்தில் உபநிஷத்துகளும், வேதங்களும் காட்டிய வாழ்வின் உயர் இலட்சியங்களை அடைய விரும்பும் ஒரு இலட்சிய ஆன்ம பூமியாக இருந்த நிலையை மீண்டும் பெறவேண்டும் என்று சங்கல்பித்திருந்தார்!

ஏன் இந்தியா ஆன்மீக இலட்சியத்தில் பண்டைக் காலத்தில் அடைந்திருந்த உயர் நிலை மீண்டும் பெறவேண்டும் என்பதற்கு அவரது இலக்கு தனது நாடு என்ற சுயநல எண்ணம் காரணமல்ல. ஒரு வலுப் பெற்ற தேசம் உலகில் அமையும் போது அதன் கலாச்சாரம் மனித குலத்திற்கு அடிப்படையாக அமையும்! அறிவியலை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்தேய நாடுகள் வலுவாக அமைந்ததால் உலகம் மேற்கத்தேய கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் மோகம் கொண்டது. இது மனித குலத்தை துன்பத்தில் ஆழ்த்தும் இருளையே அதிகரித்தது. ஆன்ம உயர்வை வழிகாட்டும் இந்திய கலாச்சாரம் உலகின் கலாச்சாரமானால் உலகம் இன்ப மயமாகும் என்பது அவரது எண்ணம்!

இதற்காக அவர் துர்க்கை சக்தியை இளைஞர்களில் ஆவாஹனம் செய்தார்! துர்க்கை என்றால் துன்பத்தை எதிர்க் கொண்டு வெற்றி பெறுபவள் என்று அர்த்தம்! 

இன்று பலருக்கு துன்பத்தை எதிர்க் கொள்ளும் ஆற்றல் விழிப்படைவதில்லை! சிறு துயரம் வந்தவுடன் துவண்டு மன விரக்தி அடையும் சமூகத்திலேயே நாம் வாழ்கிறோம். 

துர்க்கா என்றால் தாக்கப்பட முடியாதவள் என்று அர்த்தம், எந்த துன்பத்தாலும் தாக்கப்பட முடியாதவள் என்று பொருள்.

துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் போராடி வெற்றி காணும் இத்தகைய சக்தி ஒவ்வொரு இளைஞர்களிலும் உருவாக வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் பாவனை செய்தார்! 

இந்தப் பாடல் பெங்காலி மொழியில் எழுதப்பட்டது! 

முதலாவது பாடல், 

துர்க்கை அன்னையே! சிம்மவாகினி, ஆற்றல் அனைத்தும் அளிப்பவளே! அன்னையே! சிவனின் அன்பிற்குரியவளே! உன் சக்திக் கூறுகளிலிருந்து பிறந்த இந்திய இளைஞர்களகிய நாங்கள் இங்கு உன் கோயிலில் அமர்ந்து வேண்டுகிறோம்! எங்களைச் செவிமடுபாயாக! இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப்படுத்துவயாக! 


இரண்டாவது பாடல்,

துர்க்கை அன்னையே, யுகம் யுகமாக ஒவ்வொரு பிறப்பிலும் மனித உடல் எடுத்து உன் பணி ஆற்றி, ஆனந்தத்தின் உறைவிடத்துக்குத் திரும்புகிறோம். இப் பிறப்பிலும் உன் பணி ஆற்றவே உறுதி கொள்கிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக, அன்னையே, புவியில் தோன்றி எங்களுக்கு உதவுவாயாக!


மூன்றாவது பாடல், 

சிம்மவாகனமு உடையவளே, திரிசூலம் ஏந்தியவளே! கவசம்பூண்டவளே, அழகிய உடலைக் கொண்டவளே! தாயே வெற்றி தருபவளே! இந்தியா உனக்காக காத்திருக்கிறது, உன் மங்கள உருவத்தைக் காண ஆவலாய் இருக்கிறது, செவிமடுப்பாயாக! இவ் இந்தியமண்ணில் உன்னை வெளிப்படுத்துவாயாக!


Saturday, June 22, 2019

தலைப்பு இல்லை

பலராலும் வாழ்க்கையை இன்பமாக வாழ முடியாமலும், வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணம் தமது மனச் சட்டத்தை (Mental frame) இனை தமக்கு வசதியாக அமைத்துக் கொண்டு அதையே நம்பிக் கொண்டிருப்பது. 
உதாரணமாக கல்வியை எடுத்துக் கொண்டால் B.A பட்டம் வாங்கிக் கொள்கிறோம். அதன் பின்னர் எமது வாழ்க்கை பூரணமாகிவிட்டது என்று மனப் பிராந்தியை உருவாக்கிக் கொண்டு B.A இற்கு வேலை கிடைக்கும் என்று தொழில் தேட ஆரம்பிக்கிறோம். ஆனால் தொழில் விவசாயத்தில் நிரம்பிக்கிடக்கும் எமக்கு விவசாயத்தில் பட்டமில்லை என்று சோர்ந்து புலம்பி விடுகிறோம்! 
ஆனால் விவசாயத்தில் வெற்றி பெற விவசாயப் பட்டம் தேவையில்லை! உண்மையில் பல்கலைக்கழகத்தில் படித்த விவசாயி அதிமேதாவியாகத் தான் இருப்பானேயொழிய உண்மையான உற்பத்தியைச் செய்யக் கூடியவனாக இருக்க மாட்டான் என்பது அனுபவ உண்மை! 
படிப்பு என்பது மனதினை ஒழுங்குபடுத்தும் பயிற்சி! நாம் படிப்பதன் மூலம் மனதினை ஒழுங்குபடுத்தி, கவனத்தைச் செலுத்தி மனம் முறையாக ஆராயும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டால் அதை வைத்துக் கொண்டு எந்தத் துறையிலும் ஈடுபடலாம், வெற்றி பெறலாம்! 
ஆகவே மனதினை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதற்குத் தான் கல்விப் பயிற்சி தேவையேயொழிய விஷயங்களை சேர்த்து வைத்து ஒப்பிக்க அல்ல!

Friday, June 21, 2019

தலைப்பு இல்லை

மிக நீண்ட நாள் இன்று....Long day!

காலையிலிருந்து எட்டு மணித்தியாலம் 500 Km இற்கு மேல் A/C இல்லாமல் Driving...

நான்கு மணித்தியால இயற்கை வேளாண்மை பண்ணைக்கான ஆய்வு மேம்பாட்டுக் கலந்துரையாடல்! 

New Vision! New Goals! New Team for Future of Food!


Sunday, June 16, 2019

தந்தையர் தின சிந்தனை

தாயையும் தந்தையையும் வணங்காமல் ஒரு நாளுமில்லை என்பதால் தாய் தந்தை தினம் நமக்கில்லை! 

தந்தையிற்கு நன்றி சொல்லுவது வாழ்த்துச் சொல்லுவதும் சரியல்ல! இவை வெறும் வாய்ஜால ஏமாற்றுகள்! 

தந்தையில் கடமை; 

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல், 

தன் மகன் பூமியில் வாழ்வதற்கு தேவையான அறிவையும், ஆற்றலையும் புகட்டி அவையில் முந்தி இருக்கச் செய்வது. 

இந்த வகையில் சிறு பிள்ளையாக இருந்த போது கண்டது கேட்பதை எல்லாம் கற்று அறிவை வளர்க்க வேண்டும் என்று சிறு சிறு புத்தகங்களாக அறிவியல், ஆன்மீகம், தத்துவம் என்று வாங்கித் தந்து வாசித்து உலகின் பார்வையை விசாலமாக்கும் ஆர்வத்தைப் புகட்டி, கற்றலையே போதையாக்கி சரியான வயதில் மகாகுரு அகத்தியரைக் காட்டித் தந்தது தன்னை விட தன் பிள்ளைகள் உயரவேண்டும் என்று “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” எனும் தந்தையைப் பெற்றவன் என்ற வகையில் நான் பாக்கியசாலி! 

இப்படி தந்தை தனது கடமையைச் செய்தால் மகன் செய்ய வேண்டிய கடன் என்னவென்பதையும் வள்ளுவனார் கூறுகிறார், 

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

ஆகா! “இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய உயர்ந்த கைமாறு!

இப்படிக் கடனைச் செலுத்தினால் மட்டும்தான் உண்மையான தந்தையர் தின வாழ்த்தாகும் என்பதே எனது எண்ணம்!


Saturday, June 15, 2019

சிங்காரச் சென்னையும் தண்ணீர் தட்டுப்பாடும்

சென்னை, தண்ணீர் பிரச்சனையின் உச்சத்தில் இருக்கிறது. பலர் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள்! மழைப் பெய்தாலும் பிரச்சனை தீராது என்பது தான் சூழலியல் அறிவியல் உண்மை!

இன்னும் சிலர் மோடியின் சதி என்றும், இலுமினாட்டிகளின் வேலை என்றும் இரண்டொரு நாட்களில் அறிக்கை விடக் கூடும்!    

ஆனால் உண்மை நிலை, 

நிலத்திற்கு வரும் மழை நிலத்திற்குள் செல்லுமாறு மண்ணின் அமைப்பு இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்!! 

அப்படி இல்லாமல் மண் இறுகியோ, தாவரங்கள் இல்லாமலோ, கொங்கிரீட்டால் நிரப்பப் பட்டிருந்தால் மழை நீர் நிலத்திற்குள் செல்லாமல் வெள்ளம் ஏற்படும். 

ஒரு நகரத்தின் நீர்வளம் அதிலிருக்கும் ஈர நிலங்களின் (wetland) அளவிலும், நிலத்தை மூடியிருக்கும் தாவரத்தின் அளவிலும் தங்கியிருக்கிறது. இந்த இரண்டும் சென்னையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ அற்றுப் போய் விட்டது என்பதே உண்மை! 

இனிச் சென்னையில் நிலப் பாவனை பற்றிய  ஆய்வுத் தகவல் ஒன்றினை மட்டும் பார்ப்போம். 

(Vidhya Lakshmi & Thomas,MAPPING OF LAND USE AND LAND COVER CHANGES IN CHENNAI USING GIS AND REMOTE SENSING, International Journal of Pure and Applied Mathematics, Volume 119 No. 17 2018, 11-21)

2000 - 2017ம் ஆண்டிற்குட்பட்ட 17 வருடங்களில் மாத்திரம்; 

89.64% ஆழ் நீர் நிலைகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப்பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

52% மேற்பரப்பு நீர் நிலைகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப்பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

41.4% ஏரிகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

13.5% விவசாய நிலங்கள் கட்டிமாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

40% கடற்கரை நிலம் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

59% அடர்வனம் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் மொத்தமாக சென்னை 73% கட்டிடங்கள் அல்லது கொங்கிரீட் வனமாக 2000 - 17க்கு உட்பட்ட 17 வருடங்களில் நிலப் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இப்படி கொங்கிரீட் வனமாக உள்ள ஒரு நிலப் பகுதியில் நிலத்தடி நீர் சேகரிப்பு நடக்காது! மழை பெய்தால் சீரான வடிகாலமைப்பு இல்லை என்றால் பெருவெள்ளம் ஏற்படும் நிலம் தான் இருக்கும்! 

இனி அருகிலிருக்கும் கடல் நீரை சுத்திகரித்து பாவனைக்கு எடுத்தாலே அன்றி நிலத்தடி நீர் சென்னைக்கு கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது!


Friday, June 14, 2019

இந்திய பொருள் முதன்மை வாதம்

பல காலமாக பொருள் முதன்மை வாதம் பற்றி படிக்க வேண்டும் என்று ஆவல்! எனினும் மேற்கத்தேய சிந்தனையிலிருந்து கற்றல் என்பதை நான் எப்போது அன்னியமாக உணர்வதால் இந்த ஆர்வம் தடை போடப்பட்டுக் கொண்டிருந்தது!
எனது சிறு வயது ஆர்வம் சித்தர் தத்துவம்! சித்தர் தத்துவம் என்பது என்னைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் உள்வாங்கிய தத்துவ மரபு!
இந்திய தத்துவ மரபில் பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம், சாங்கியம், யோகா, வைசேடிகம், நியாயம் என்ற ஆறு தத்துவமரபில் யோக தத்துவ மரபில் பரீட்சயம் இருக்கிறது! 
சித்தர் தத்துவத்தில் மனிதன் உடல் அடிப்படையாக இருப்பதாலும், உடல் நலம் ஓம்பி உயிர் வளர்க்க வேண்டும் என்பதாலும் சித்தர் தத்துவம் பொருள் முதன்மை வாதத்தை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அது அறுதியானது என்று கூறாமல் மனதினது நுண்மைக்கு பயிற்சியளித்து முன்னேற வழி கூறுகிறது.
இந்தியப் பொருள் முதன்மை வாத தத்துவம் சார்வாகரின் லோகாயதம், இதை தொகுத்து அருமையாக இந்திய மார்க்சிய வாதியான தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்கள் Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற ஆங்கில நூலாக வெளியிட்டிருந்தார். இதன் முழுமையும் தமிழில் வெளியிட்டுள்ளார்கள். 
இன்று கொழும்பில் இரண்டு புத்தக கடைகளுக்கு விஜயம், முதலாவது ஆங்கிலப் புத்தகம் Philosophy of Lokayatha இதை ஆர்வமுடன் வாங்கிக் கொண்டு பூபாலசிங்கம் புத்தகச்சாலைக்குச் சென்றால் தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்களில் தமிழ் மொழிப் பெயர்ப்பு!
இரண்டும் வாங்கியாயிற்று! தமிழ் நூல் ஆர்வத்துடன் அறிமுகம் வரை படித்தால் மிகச் சுவாரசியமாக லோகாயத தத்துவம், தாந்திரீகமாக வளர்ச்சி பெற்றும் சாங்கியமாக மாறும் ஒழுங்குகளை கோர்த்துள்ளார். இந்திய பண்டை நூற்களில் காணப்படும் லோகாயதக் கருத்துக்களை ஆராய்ந்திருக்கிறார். 
கார்ல்மார்க்ஸின் பொருள் முதன்மை வாதம் படிக்கவில்லை! ஆனால் எமது பாரம்பரிய சிந்தனை மரபில் இருக்கும் லோகாயத தத்துவ மரபு எமக்கு மிக நெருக்கமானது! 
ஆர்வமுள்ளவர்களுக்கு, தத்துவ சிந்தனை உள்ளவர்களுக்கு நல்ல நூல்!

Dance of fire!

அக்னியின் நடனம்!

Wednesday, June 12, 2019

குருவும் சிஷ்யனும்

எவரையும் நாம் குரு என்று அழைப்பதால் அவர் குருவாகி விட முடியாது. 

எல்லோரும் எம்மை குரு என்று அழைப்பதாலும் நாமும் குருவாகி விட முடியாது!

மனிதருக்கு மனிதர் மாற்றி மாற்றி பட்டம் சூட்டிக் கொள்வதால் எவரும் குருவாகி விடமுடியாது! 

குரு என்பது தத்துவம்! அஞ்ஞானம் எனும் இருளை நீக்கும் தத்துவம் குரு! 

எவரது வழிகாட்டல் எமது மனதிலுள்ள இருளை நீக்கி ஒளியைக் காட்டுகிறதோ அவரை நாம் குரு என்று அழைக்கிறோம். 

ஆனால் அவருள் இருந்து வழிகாட்டுவதும் அந்தப் புத்தியை தூண்டும் பேரொளி தான்! அதுவே இலக்கு என்பதில் கவனம் வேண்டும். 

பலர் அந்த இலக்கை அடையும் பயணமாகிய தமது தினசரி சாதனையை விட்டு விட்டு இலக்கை காட்டுபவரைப் புகழ் பாடி, தாஜா பண்ணி முன்னேறலாம் என்ற தமது பயணத்தைக் குழப்பிக் கொள்பவர்கள் அதிகமானோர்!

குருவின் மீது நல்ல பாவத்தை - உணர்ச்சியை வளர்த்தால் அவரிடமிருந்து வரும் தூண்டலை பெறுவது இலகுவாக இருக்கும் என்பதற்காக குரு பக்தி கட்டாயமாக்கப்பட்டது! ஆனால் குருவைத் துதி பாடிக் கொண்டு தமது தர்மத்தை, சாதனையைக் கடைப் பிடிக்காதவர் எவரும் முன்னேற்றம் பெறுவது குதிரைக் கொம்பு! பயணம் செக்குச் சுற்றும் மாடு போலாகிவிடும்! 

புத்தியை தூண்டி எம்மை நல்வழியில் நடாத்தும் எல்லா inspirations - தூண்டல்களும் குரு தத்துவத்தை வெளிப்படுத்தும்!

ஆகவே குருதத்துவம் வெளிப்படுபவை எல்லாம் எமது புத்தியைத் தூண்டி நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்கும்!

குரு என்பது நிரந்தர பதவியும் அல்ல! ஞானத்தை ஒளிர்வது, தருவது குரு, பெறுவது, வளர்ப்பது சிஷ்யன்!


Tuesday, June 11, 2019

தலைப்பு இல்லை

எண்ணங்கள், சிந்தனைகள் காப்புரிமை செய்யப்பட முடியாதவை. பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்து இருக்கும் அலைகள் எவருக்கு ஏற்பு நிலை இருக்கிறதோ அவரது மனதில் பிரதிபலிக்கும்!

எமது மனம் சந்தோஷப்பட நாம் எமது சிந்தனை என்று எதையாவது கொண்டாடலாம்! ஆனால் இன்னொரு மூலையில் நாம் சிந்தித்தது போல் எவராவது சிந்தித்துக் கொண்டிருப்பார் என்பது தான் உண்மை! 

நாம் ஒவ்வொருவரும் மிக நுண்மையான தளத்தில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணரும் போது எமக்குள் இருக்கும் வேற்றுமைகளை, பிரச்சனைகளை கருணையுடனும், அமைதியாகவும் அணுகுவோம். இந்த நுண்மை தெரியாத போது நான் பெரியவனா! நீ பெரியவனா என்ற பிரச்சனைக்குள் செல்ல ஆரம்பிப்போம்!


ஸாவித்ரி யோக காவிய உரையாடல் - 05

ஆதி காண்டம்

முதற்சர்க்கம்

சங்கேத வைகறை 

கீழ்வரும் ஸாவித்ரியின் வரிகள் அருமையானவை, எனக்கு மிகவும் பிடித்தமானவை. நாம் ஒரு செயலை எப்படிச் செய்கிறோம்? துன்பங்களில் இருக்கும் போது திடீரென ஏதாவது ஒரு எண்ணம் தோன்றி அந்த துன்பத்திலிருந்து விழித்தெழுந்து செயல்பட்டு நன்மை செய்ய எது துணைபுரிகிறது இவற்றையெல்லாம் விளக்கி நிற்கிறது. 

அசையாப் பொருளாய் இறுகி நிற்க

அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்

இருட்குகை தன்னில் ஏதோ வொன்று 

உயிர்த்தது; பெயரிலா இயக்கமாய், எண்ணாக் 

கருத்தாய், விடாப்பிடியாய்த் திருப்தியு 

மின்றி யாதோர் இலக்கு மின்றி 

எதோ வொன்று இச்சையுற்றது – எனினும் 

அதன்படி நிற்க வகையறியாமல்

அஞ் ஞானத்தின் துயிலினைக் கலைத்திட

அசேத னத்தினைத் தீண்டியதாமே 

நாம் இருளில், எந்த முயற்சியும் இல்லாமல் துன்பமுறும் போது திடீரனெ ஒரு சலனம், உயிர்ப்புத் தோன்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு திருப்தியற்ற நிலை மனதில் ஏற்பட்டு எமது முயற்சியை ஆரம்பிக்கிறோம். இப்படியான ரஜோ குணத்துடன் கூடிய முயற்சியே அஞ்ஞானத் துயிலினைக் கலைக்கும் சக்தி! 

இந்த வரிகள் துன்பமுற்று இருளில் நிற்கும் போது எமக்குள் ஏற்படும் அகத் தூண்டலை ஏற்று செயல்புரியவேண்டும் என்ற நுண்மையையும் கூறி நிற்கிறது. அதுவே எமது படைப்புக்கு மூலம் என்பதை விளக்குகிறது. 

வாழ்வின் இருளான நேரம் எமது ஒளி மிகுந்த வாழ்க்கைக்கு முன்னரான வைகறைப் பொழுது என்ற உண்மையையும் இந்த வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் கூறி நிற்கிறார். 

நாம் துன்பமுற்றுக் கலங்கி நிற்கிறோம், எங்கிருந்தோ ஒருவர் வருகிறார், எம்முடன் உரையாடுகிறார், நாம் எமது துன்பத்தைக் கூறுகிறோம், அதற்கு அவர் வழிகாட்டுகிறார். அந்த வழிகாட்டல் இறை சக்தி எம்மக்கு ஏற்படுத்தும் உயிர்ப்பு! 

"அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்

இருட்குகை தன்னில் ஏதோ வொன்று 

உயிர்த்தது;" என்ற வரிகளின் சந்தர்ப்பம்!

அதை பிடித்துக் கொண்டு எமது செயலை தீவிரமாக செய்ய ஆரம்பிக்க ஆரம்ப நிலை இலக்கு அற்றதாகவும், ஆனால் எமது இச்சையினால் அந்த செயல் நடைபெறுவதாகவும் இருக்கும்!

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது பலரும் அதை எதிர்க்கத்தொடங்குவர், தூற்றுவர்! மனதை நோகடிப்பார்கள்! இவை எல்லாம் எமது செயலுக்கு நல்ல உரமாக்கக் கூடிய இருளின் வலிமைகள்! அவற்றை தூண்டலாக எடுத்துக் கொண்டு முன்னேறுவதே இறைவனின் தூண்டலை நம்மில் செயல்படுத்தும் வழி!


Sunday, June 09, 2019

யோக சாதனையில் தர்க்கமும் சித்தமும் Logical argument and Subconscious mind in Yoga Sadhana

தர்க்கம் என்பது எமது முன் மனத்தில் பெறுவது எல்லாம் சித்தமாகிய ஆழ்மனத்திற்கு சென்றுவிடாமல் இருப்பதற்கான புத்தியின் பாதுகாப்பு ஏற்பாடு! ஆகவே தர்க்கம் எமது சித்தத்தை தவறான நம்பிக்கையிலிருந்து பாதுகாப்பதற்காக புத்தியினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடு! தர்க்கத்தினால் அறிவு வளர்வதாக பலர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மை அதுவல்ல, தர்க்கத்தின் பயனாக புத்தி ஏற்றுக் கொண்டு எது எமது சித்தத்தினுள் பதிகிறதோ அதுவே எமது உண்மையான அறிவு! தர்க்கத்தை மட்டும் நம்புவர்கள் மனதின் பூரண ஆற்றலை அனுபவிப்பதில்லை. சித்தத்தை பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டுமே உண்மையில் யோகத்தில் முன்னேற முடியும். இதனால்தால் எமது பயிற்சியில் காயத்ரி சித்த சாதனை ஒரு அதி முக்கியமான பயிற்சி!

யோகசாதனையும் சூரிய சந்திர இயக்கமும்

குறிப்பு: இந்தப் பதிவு ஜோதிடப் பதிவு அல்ல, யோகத்தில் எப்படி பிரபஞ்ச இயக்கத்தின் துணை பெறுவது என்பதற்கான ஒரு சிறு பரிந்துரை
**************************************************
ஒரு யோக சாதகரின் கேள்வி, 
அமாவாசை, பௌர்ணமி தினங்கள் விடுமுறை தினங்களாக சில யோகா நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதற்கான காரணம் பௌர்ணமி மூச்சின் நிறைவு என்றும் அமாவாசை மூச்சற்ற நிலை என்றும் கூறுகிறார்கள், ஆனால் சம்பிரதாயப் பூர்வமாக அமாவாசை பௌர்ணமி தினங்கள் பொதுவாக சடங்கு ரீதியாக திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது, ஆகவே இந்தத் தினங்களில் என்ன யோகப் பயிற்சிகளை செய்யலாம்? 
பொதுவாக எமது கலாச்சாரத்தில் நாம் இரண்டு வகை பிரபஞ்ச இயக்கங்களை நாட்காட்டியாக பயன்படுத்துகிறோம்.
1) சூரிய நாட்காட்டி : தமிழ் மாதப்பிறப்பு, சூரியன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு செல்வது
2) சந்திர நாட்காட்டி: அமாவாசை தொடங்கி அடுத்த அமாவாசை வரை, அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வது, அதாவது 0 பாகையில் இருக்கும் நிலை. 
இனி இந்த சூரிய சந்திரனாகிய இரண்டு கிரகங்களும் மனித உடலில் உயிரினதும், மனதினதும் பிரபஞ்ச கூறுகள். அதாவது எது எமது சூரிய மண்டலத்தில் மையமாக சூரியனாக இருக்கிறதோ அது மனித உடலில் உயிராகவும், எது பிரபஞ்ச சக்தியை பூமிக்கு கொண்டு வரும் regulator ஆக பிரபஞ்சத்தில் சந்திரனாக இருக்கிறதோ அது மனித உடலில் மனமாக இருக்கிறது என்பதையும் எமது ரிஷிகளும் சித்தர்களும் தமது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். இவை இரண்டினது இயக்கம் மனிதனைப் பதிப்பதில் முதன்மையானது. 
ஆகவே எமது செயலை பிரபஞ்ச இயக்கத்திற்கு ஒத்திசைவாக (harmony with solar system) அமைத்துக் கொண்டால் நாம் அதிகமாக பிரபஞ்ச சக்தியை கவர்ந்து பயன் பெறலாம் என்று சாத்திர சாங்கியங்களை வகுத்தார்கள். 
இது எப்படி என்றால் நாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகிறோம், அதற்கு அரசாங்கத்தின் இரயில் சேவை இருக்கிறது, அது நேரத்திற்கு செல்கிறது, அது செல்லும் நேரத்திற்கு எமது பயணத்தை ஒத்திசைய வைத்தால் எமக்கு செலவும் குறைவு, பயணமும் இலகுவாக இருக்கும்! இரயிலில் போவது சாலையில் போவதை விட பாதுகாப்பாகவும் இருக்கும். 
இப்படி ஒத்திசையாமல் எமது மனம் போன போக்கில் பயணம் செல்வதானால் செலவும் அதிகம், சிலவேளை விபத்தும் நடக்கலாம்! ஆனால் பணக்காரனும், திறமையானவனுக்கும் இந்த பயணம் இலகுவாகவும், வசதியானதாகவும் இருக்கும். 
இனி கேள்விக்கு வருவோம், 
சூரியன் - உயிர்
சந்திரன் - மனம்
பூமி - உடல் 
யோகம் என்பது உடலை ஒழுங்குபடுத்தி, மனதை ஒழுங்குபடுத்தி, பிராணணை (உயிரை) ஒழுங்குபடுத்தி ஒரு நேர்கோட்டில் இணைப்பது. 
இந்த இணைப்பு பிரபஞ்சத்தில் ஓரளவு அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், கிரகணகாலத்தில் மிகச்சரியாகவும் நடக்கிறது. ஆகவே ஒரு யோக சாதகன், குறிப்பாக ஆரம்ப நிலை சாதகன் பிரபஞ்ச இயக்கத்தை தந்து முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். 
அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் , பூமியும் ஓரளவு நேர்கோட்டில் வரும், இது கிரகணகாலத்தில் மிகச் சரியாக நேராக வரும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நிற்கும். இதை உடலில் ஒப்பிட்டுப் பார்ப்பதானால் இந்த நாட்களில் உடல், மனம் , உயிர் என்பவை ஒருவித சம நிலை அடையும். அமாவாசையில் உடலிற்கும் உயிரிற்கும் நடுவில் மனம் சிக்கிக் கொள்ளும்! உண்மையில் ஆன்ம சாதனைக்கு மிக உகந்த நாள்! மனம் ஒடுங்கக் கூடிய வாய்ப்புக்கு பிரபஞ்சம் ஒத்துழைக்கும் நாள்! இந்த நாட்களில் மனதினூடாக செய்யும் காரியங்களுக்கு பூரண மனச் சக்தி இருக்காது. ஆகையால் மனதை ஒடுக்கும் பிரத்தியாகாரம் போன்ற பயிற்சிகளுக்கு உகந்த நாள்! எனினும் மனம் ஏற்கனவே தான் பெற்ற பதிவுகளால் உயிரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகுவதால் ஏற்கனவே சித்தத்தில் பதிந்த பதிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் கொந்தளிக்கச் செய்யும்! ஆகவே ஏற்கனவே உங்கள் சித்ததில் என்ன பதிப்பித்தீர்களோ அவை உயிரின் கட்டுப்பாடு சற்றுத் தளர்வதால் அறிவு தளர்ந்து மனம் கொந்தளிக்கும். 
பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனுக்கு 180 பாகை எதிரில் நின்று பூமிக்கு சக்தியை வீசும், இந்த நாளில் மனம் அதிக பலம் பெற்றிருக்கும், மனதிற்கு உயிரின் ஆற்றல் பூரணமாக கிடைக்கும். எனினும் மனதில் உள்ள எண்ணங்களை ஒழுங்குபடுத்தி தாரணை, ஏகாக்கிரம் பயில உகந்த நாள்.
இந்த அடிப்படையில் மற்றவற்றைச் சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள். ஆசனப்பயிற்சி என்பவை உடலுடன் தொடர்புடையவை, பூமி தினசரி சுற்றுகிறது, ஆகவே தினசரி ஒரு ஒழுங்கில் ஆசனப் பயிற்சி செய்வது சரியானது! 
ஆனால் மன, பிராணப் பயிற்சிகள் சந்திர சூரிய சுற்றுடன் தொடர்புடையவை! மனம் சுத்தியான நிலையில் உள்ளவர்கள் இந்த சூரிய சந்திர சுற்றினால் பாதிக்கப்படுவதில்லை! இதனால் தான் பதஞ்சலியும், திருமூலரும் இயம நியமத்தைப் பின்பற்றச் சொன்னார்கள். இயம நியமம் பின்பற்றி மனச்சுத்தி உள்ள எவரும் இந்த விஷயங்களை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை! 
ஆகவே இயம நியமப் பயிற்சியில் முறையாக யோகம் பயிலும் எவரும் இவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டு குழம்பத் தேவையில்லை! 
எமது அனுபவத்தில் சாதனையின் ஆரம்ப காலத்தில் பயிற்சியை இலகுவாக்க இந்த விதிகளைப் பயன்படுத்தலாம்! உயிரின் ஆற்றல் இவை எல்லாவற்றையும் supersede செய்யும். 
எந்த சாதனையாக இருந்தாலும் மூன்று மண்டலங்கள் (45x3= 135) நாட்கள் விடாமல் பயிற்சிக்க இந்த சுற்றின் தாக்கத்திலிருந்து வெளிவந்து குறித்த சாதனை எமது இயல்பாக மாறும்! இது ஒரு பொதுவிதி. தமது ஆழ்மனமாகிய சித்தத்தை அளவிற்கு மீறிக் கெடுத்து வைத்திருப்பவர்கள் இதற்கு மேலும் சிலகாலம் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்
ஆகவே இந்த விதிகள் ஆரம்ப சாதகர்களுக்கு பொருத்தி, தொடர்ச்சியாக மூன்று மண்டலங்கள் செய்வித்து, அவர்கள் முன்னேற்றத்தை ஆராய்ந்து ஒருவர் யோக சாதனை தனது இயல்பாகி முன்னேறுவார்கள்!

Saturday, June 08, 2019

தலைப்பு இல்லை

இலங்கையின் முன்னணி நாளிதழ் வீரகேசரியின் சங்கமம் சிறப்பிதழில் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரம் தேவிபுரம் கட்டுரை! 
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் என்று திரு மூலர் சொல்லிவிட்டார்! 
எப்படி உடலை ஆலயமாக்குவது என்பதனைத் தொட்டுக் காட்டுவது ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வித்தை!
இந்த நூற்றாண்டிலில் ஜாதி, மதம், இனம் என்று பேதம் பாராமல் தன்னை நாடி வருபவர்களுக்கு உபதேசித்த, ஒரு அணுப் பௌதீகவியலாலராக (Atomic Physicist) இருந்து தனது அகவிழிப்பால் ஸ்ரீ வித்தை உபாசித்து உபதேசித்த ஒரு ஞானியின் உபதேசங்கள் தமிழில் தரும் முயற்சி இந்தக் கட்டுரைத் தொடர்! 
ஒரு அறிவியலாளரின் ஆன்மீகம்!
ஆர்வமுள்ளவர்களுடன் பகிருங்கள்!

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 04

ஆதி காண்டம்

முதற்சர்க்கம்

சங்கேத வைகறை - முதல் 23 - 35 வரிகள்

கீழ்வரும் வரிகள் படைப்பின் முதல் சலனத்தின் இயல்பு பற்றிக்குறிப்பிடுகிறார். இதில் தற்போதைய நவீன இயற்பியலின் Chaos Theory இன் கூறுகள் காணப்படுகிறது. 

Athwart the vain enormous trance of Space, 

Its formless stupor without mind or life, 

A shadow spinning through a soulless Void, 

Thrown back once more into unthinking dreams, 

Earth wheeled abandoned in the hollow gulfs 

Forgetful of her spirit and her fate. 

The impassive skies were neutral, empty, still. 

Then something in the inscrutable darkness stirred; 

A nameless movement, an unthought Idea 

Insistent, dissatisfied, without an aim, 

Something that wished but knew not how to be, 

Teased the Inconscient to wake Ignorance. 

(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)

பிராணனு மில்லா மனது மில்லா

வடிவமற்ற மயக்க முடைய

விண்வெளி யதனின் பயனிலா அகண்ட

சமாதியதினில், உயிரிலாச் சூனிய

வெளியில் ஒருநிழ லாகத் தன்னைத் 

தானே சுற்றிய வண்ணம் மீண்டும்

ஒருமுறை நினைத்தல் இல்லாக் கனவுகளில் 

எறியப் பட்டு, கைவிடப்பட்டு 

நிலமாம் அன்னை அதலக் குழியில் 

தன் விதி தனையும் தன்னிலை யதனையும்

முற்றும் மறந்து வலம்வந் தனளாம்.

சலனமற்ற வான வெளியும் 

வெறுமை பூண்டு நடு நிலை கொண்டு

அசையாப் பொருளாய் இறுகி நிற்க

அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்

இருட்குகை தன்னில் ஏதோ வொன்று 

உயிர்த்தது; பெயரிலா இயக்கமாய், எண்ணாக் 

கருத்தாய், விடாப்பிடியாய்த் திருப்தியு 

மின்றி யாதோர் இலக்கு மின்றி 

எதோ வொன்று இச்சையுற்றது – எனினும் 

அதன்படி நிற்க வகையறியாமல்

அஞ் ஞானத்தின் துயிலினைக் கலைத்திட

அசேதனத்தினைத் தீண்டியதாமே

படைப்புக்கும் முந்திய நிலை “Its formless stupor without mind or life”, மனமோ, பிராணனோ, வடிவமோ இல்லாத ஒரு சமாதி நிலையில் ஆகாய பூதம் இருக்கிறது. இன்னும் படைப்பு நிகழவில்லை! 

அன்னை பராசக்தி ஸாவித்ரியாக மனிதகுலத்தின் நன்மை வேண்டி கீழிறங்கி வரவேண்டும். ஆனால் இன்னும் படைப்பு நிகழ்வதற்குரிய முதல் சலனங்களான மனமும், பிராணனும் செயற்படவில்லை. ஆழ்ந்த சலனமற்ற சூன்ய நிலை ஒன்றே இருக்கிறது. இந்த உயிரில்லாச் சூனிய நிலையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கரு நிழலாக அன்னை இருக்கிறாள், தன்னையும், தனது ஆற்றலையும் வெளிப்படுத்தும் படி இந்த பிரபஞ்சம் பக்குவப்படவில்லை! ஆகவே அன்னை ஒரு கருங்குழியாக Forgetful of her spirit and her fate என்ற நிலையில் தனது ஆற்றல் அனைத்தையும் மறந்து உறை நிலையில் இருக்கிறாள். அவள் வரவேண்டிய பூமியோ கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நிலத்தை வளப்படுத்தும் வானவெளியோ சலனமற்று இறுகி நிற்கிறது. எந்த இயக்கமும் நடக்கவில்லை. இப்படி இருக்கும்போது ஒரு கணத்தில் மர்மமான ஒரு இருள் நிறைந்த குகையில் திடீரெனெ ஏதோ ஒரு உயிர்ப்பு நிகழ்கிறது. இதற்கு என்ன காரணம் என்று எவருக்கும் தெரியாது, இந்த சலனம் பற்றி Sri Aurobindo ஐந்து இயல்புகளைக் குறிப்பிடுகிறார்

1. nameless movement – பெயரில்லா இயக்கம்

2. an unthought Idea – எண்ணமில்லாக் கருத்து

3. Insistent - விடாப்படியான

4. dissatisfied - திருப்தியற்ற

5. without an aim – இலக்கற்ற

அதாவது படைப்பின் முதல் சலனத்தின் இலக்கணம் இந்த ஐந்து இயல்புகளைக் கொண்டிருக்கும். அந்த முதல் இயக்கம் இது தான் என்று எம்மால் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகவே பெயரில்லா இயக்கம் – nameless movement, அந்த இயக்கம் இப்படித் தான் இருந்தது என்று கருத்தோ எண்ணமோ சொல்ல முடியாது ஆகவே எண்ணமில்லாக் கருத்து – unthoouth idea, ஆனால் அந்த இயக்கம் தொடங்கியது முதல் இன்றுவரை நிற்காமல் விடாப்பிடியாக இருக்கிறது. இந்த இயக்கம் நிற்காது ஏனெனில் அதற்கு தனது படைப்பில் எப்போதும் திருப்தி இருப்பதில்லை! அது திருப்தியற்று இருப்பதாலேயே விடாப்பிடியாகவும், எண்ணமில்லாக் கருத்தாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கடைசியாக இந்த இயக்கத்திற்கு எந்த இலக்கும் இருக்கவில்லை! இப்படித் தான் பிரபஞ்ச இயக்கம் ஆரம்பமாகியது. 

ஸ்ரீ அரவிந்தர் இந்த வரிகளில் அழகாக Chaos Theory இனை விளங்கப்படுத்துகிறார். சலனமற்று இருக்கும் ஒரு தொகுதி திடீரென என்ன இலக்கு எது என்று தெரியாமல் அதிர ஆரம்பிக்கிறது, அந்த அதிர்வு தொடர்ச்சியாக விடாப்பிடியாக இருக்க அந்த தொகுதி சிக்கல் தன்மை பெறுகிறது. இந்தக் கோட்பாடு 1961 இல் வானியல் இயற்பியலில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் தனது ஸாவித்ரி காவியத்தில் பிரபஞ்ச தோற்றத்தில் இதைப்பற்றிக் கூறுகிறார். 

இப்படி சலனித்த அந்தச் சலனம் நிற்க முடியாது. அதனால் அசேதனமாகத் தீண்டியது. அப்படித் தீண்டியதால் அசேதனத்தின் அஞ்ஞானம் அகலவேண்டி வந்தது. 

இந்த வரிகள் அருமையானவை. உயிர்ப் பற்ற இருளிற்குள் ஒரு சலனமாக அன்னை பராசக்தி – ஸாவித்ரி இருக்கிறாள். அது சலனிக்க ஆரம்பிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை, இலக்கும் இல்லை, இந்த சலனத்தை நிறுத்தவும் முடியாது, அதனால் வேறு வழியில்லாமல் அசேதனம் என்ற உயிர்ப்பற்ற பொருளைத் தீண்டுகிறது என்று கூறுகிறார். 

ஞானம் பெறுதல், ஒளியை நோக்கி நடத்தல் என்பதன் விதியை அழகாகச் சொல்கிறார். இன்று நான் ஞானம் பெறப் போகிறேன் என்று இலக்கு வைத்துக் கொண்டு பெரும்பாலானோர் யோகம் செய்கிறார்கள், அவை வெறும் ஜட முயற்சி! ஆனால் உண்மையில் அனைத்தும் அந்த மூல சலனம் எம்மைத் தீண்டுவதால் தான் ஞான விழிப்பு வருகிறது என்பதை நாம் அறிகிறோம் இல்லை! அது எம்மைத் தீண்டுவதற்கு எந்த இலக்கோ, விரும்பமோ, எண்ணமோ இருப்பதில்லை! தற்செயலான ஒன்றுதான்! அந்த தீண்டுதல் நிகழந்தால் உயிர் ஞானத்தில் வழியில் செல்லத் தொடங்குகிறது. 

குறிப்பு:

ஸாவித்ரி மகா காவியம் ஸ்ரீ அரவிந்தரின் பரந்த ஆழ்ந்த யோகானுபவ விளக்கம். இதற்கு ஒருவர் முழுமையாக விளக்கம் அளிக்க ஸ்ரீ அரவிந்தர் பெற்ற அனுபவம் சாத்தியமாக வேண்டும். இங்கு நாம் எடுத்திருக்கும் முயற்சி இந்த யோககாவியத்தை ஒரு யோகமாணவனாக, சாதகனாக கற்றல், ஆகவே இங்கு நாம் கூறும் விளக்கம் ஒரு முதல் முயற்சி, காலமாற்றத்தில் எமது அனுபவத்தில் நாம் கண்ட பொருளில் ஏதும் தவறு இருப்பின் திருத்தம் ஏற்படும். ஆகவே இது சரி, இது பிழை, இது தான் அறுதி உண்மை போன்ற கடின மனத்துடன் (rigid mindset) உடன் அணுகாதீர்கள்.


Friday, June 07, 2019

தலைப்பு இல்லை

ஒரு அன்பர் கீழ்வரும் கேள்வியை கேட்டிருந்தார்.
"ஏன் மாயையில் சிக்கி உழன்று மீண்டும் ஏன் பூரணநிலை அடைய பல பிறப்புகளின் வழி முயற்சி செய்து கொண்டே இருக்கிறது என்ன அமைப்பு...பரமாத்மா என்ற ப்ரமம் விருப்பப்பட்டு மாயையில் சிக்கி பிரபஞ்சத்தை படைத்தது...ஆனால் ஜூவாத்மாவின் அனைத்து பிறப்பின் நோக்கம் மாயையை கலைவதே?? ஏன் இவ்வாறு?"
இந்தக் கேள்விக்கும் காயத்ரி சாதனைக்கும் தொடர்பு இருக்கிறது. உலகின் படைப்பு காரிருளில் இருந்து தொடங்குகிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர், ஆனால் இந்த இருளுக்குள் பரம்பொருள் ஒளியாக மறைந்திருக்கிறது. இந்த ஒளிதான் ஆன்மாவின் இலட்சியம். இதை குரு நாதர் அகத்திய மாமகரிஷி "புருவமையத்தொளி கண்டாலதுவே போதும்" என்று அகத்தியர் யோக ஞானத்திறவுகோலில் கூறுகிறார். 
இந்த ஒளியை நோக்கி இருக்கும் பயணம் தான் உண்மையான பயணம். மற்றவை மாயை எனும் இருளில் சிக்கிய பயணம். இருளை விலக்க ஒளியை இலக்காகக் கொள்ள வேண்டும். இப்படி ஒளியை அடையும் இலக்கை நிர்ணயித்துக் கொண்ட ஆன்மாவின் செயல்கள் யாவும் சரியான செயல்களாக (Righteous action) இருக்கும். 
இப்படி சரியான செயல்களைச் செய்வதற்கு அந்த பரம்பொருளின் ஒளியை எமது மனதில் இருத்த வேண்டும். அப்படி அந்த ஒளி மனதில் இருத்தப்பட்டால் மனம் சரியான செயலில் செலுத்தப்படும்! 
ஒரு நடுக்கடலில் இருக்கும் கப்பல் எங்கு செல்வது என்று தெரியாது. அதன் இலக்கு கரை, அந்த கரையைக் காட்டுவது வெளிச்ச வீடு. அது போல் மாயை எனும் கடலில் சுழலும் ஆன்மா பரம்பொருளின் ஒளியைக் கண்டு விட்டால் தனது சுக்கானை அதை நோக்கித் திருப்பி விடும். 
இதற்காகத் தான் காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்பட்டது. காயத்ரி மந்திரத்தின் பொருள் புத்தியை தூண்டும் பேரோளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக! 
காயத்ரி சாதனை மூன்று செயல்களை சாதகனில் செய்விக்கிறது. 
1. கடலில் தத்தளிக்கும் கப்பலிற்கு வெளிச்சவீட்டை காட்டுவது போல் மாயையில் சிக்கி தவிக்கும் மனதிற்கு ஒளியைக் காட்டுகிறது. 
2. அந்த ஒளி எது சரி எது பிழை என்று பகுத்தறியும் புத்தியைத் தூண்ட வேண்டும் என்று மனதிற்கு ஆணையிட்டு மனதை புத்தியின் ஆணைக்கு கீழ் கொண்டு வருகிறது. 
3. அந்த பரம்பொருளின் ஒளியை எம்மில் இருத்தி அதுவாகச் செய்கிறது (தியானிப்போமாக - தீமஹி)
ஆகவே காயத்ரி சாதனை செய்யும் ஒருவன் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுக்கானாகிய மனத்தை அந்தப் பரம்பொருளின் ஒளியை நோக்கித் திருப்பி விட்டு, மனதை புத்தியின் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறது.
எனவே குரு முகமாக காயத்ரி சாதனை தொடங்கும் எவரும் சில நாட்களில் தமது மனப் பண்புகளில் நல்ல மாற்றம் காண்பார்கள்!
எனவே தான் உலக மாயையில் சிக்கி தமது பயணத்தின் இலக்கினை தவறவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக காயத்ரி மந்திரம் உண்மையை அறிய விரும்பும் எல்லோருக்கும் நித்திய கடமையாக்கப்பட்டது. 
ஆகவே ஜீவான்மாவின் கடமை மாயைக் கலைவது அல்ல, மாயை ஒரு கடல் என்றால் அந்த கடலில் உடல் எனும் காயக் கப்பல் ஏறி மனம் எனும் சுக்கான் பிடித்து, புத்தி எனும் திசை காட்டியின் உதவியுடன் கலங்கரை விளக்கு எனும் ஒளியை அடைதல். 
இதைச் செய்வது தான் குரு காயத்ரி சாதனை.
காயத்ரி சாதனை செய்யச் செய்ய மனம் நல்ல எண்ணத்தினை பெறுவதற்கான தூண்டலைப் பெறும்!

Wednesday, June 05, 2019

அன்பும் ஒளியும் - தலைவிதியை மாற்றுதலும்

{ஏழு வருடங்களுக்கு முன்னர் குரு நாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்ததன் தமிழ் வடிவம்}

நீங்கள் கடந்த காலத்தில் வாழமுடியாது, கடந்த காலத்தை அறியலாம். ஆனால் மாற்ற முடியாது!

நீங்கள் எதிர்கால (க் கற்பனையில்) வாழலாம், அறியமுடியாது, ஆனால் உருவாக்கலாம், 

ஆகவே உங்களிடமிருக்கும் எல்லா வளங்களையும் பாவித்து உங்கள் தலைவிதியை நீங்கள் விரும்பியவாறு மாற்றி எழுதுவதற்கு செயற்படுங்கள்!

உதவியற்றவர்களாக நாம் உணர்வதற்கு காரணம் எமது வளங்களை சரியாக பாவிக்காமல் இருப்பதே. நாம் எமக்குத் தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் (பேஸ்புக், கூகுள்) எமது வளங்கள் இருக்கின்றது என்பதை அறிவோம். அவற்றைப் பயன்படுத்துவோம். நீங்கள் எப்போதும் உதவியற்றவர் இல்லை, எப்படி உதவியைக் கேட்கவில்லை, நான் என்று தனியாக எதையும் செய்ய முடியாது, நாம் ஆக எல்லோரும் செய்யலாம்; இப்படி ஒன்றிணைந்து மேன்மையான உலகை உருவாக்குவோம். 

ஒத்த மனதுடைய மனிதர்கள், ஒன்றிணைந்து செயற்பட்டு எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக அடுத்த நூறு தலைமுறைகளுக்கு நல்லதொரு உலகத்தை உருவாக்குவோம். 

என்ன விதமான உலகம் அவர்களுக்கு தேவையானது? அவர்களுக்கு நாம் என்ன விதமான உலகத்தைக் கொடுக்கப் போகிறோம்? 

நான் பார்க்க விரும்பும் உலகம் தேவைகளை அதிகரித்துக் கொண்டு அதன் பின்னால் செல்லாத, வன்முறையற்ற, சுரண்டல் அற்ற அன்பினால் நிறைந்த ஒளி நிறைந்த, ஆக்கத்திறன் கொழிக்கும் உலகத்தை!

உலகில் இருந்து எதையும் எடுக்காமல் உலகிற்கு எதையாவது வழங்கக் கூடியவர்களை, உற்பத்தி அதிகரித்த உலகத்தை! பணமில்லாத ஆனால் மக்களிடன் ஆற்றல் நிறைந்த சமூகத்தை! 

என்னைப் பொறுத்த வரையில் தேவதை என்பது இந்த சூழலில், அகத்தின், புறத்தின் உயிர்சக்தி! எனக்கு நல்ல தேவதை அருள் புரிய வேண்டும் என்பது நல்ல தரமான வாழ்க்கை இந்த நிலத்தில், நீரில், வானில் வாழும் அனைவருக்கும் அமைய வேண்டும் என்பது. தனிப்பட ஒருவரது நலனுக்கு உரிமை கொண்டாடும் காப்புரிமை இருக்கக் கூடாது. கடவுள் காற்றிற்கு காப்புரிமையை நடைமுறைப்படுத்தினால் எமக்கு சுவாசிக்க காற்று இருக்காது.

நான் ஏற்கனவே கூறியது போல், ஒரே இலக்குடன் ஒன்றுபட்டு வேலை செய்வதன் மூலம் எண்ணிலடங்காத மக்களின் வாழ்க்கையின் விதியை மீள் எழுத முடியும். உங்களில் ஒவ்வொருவரும் சிறந்த தலைவிதியை எழுத 70000 நபர்களுடன் இணைந்து 70,000x70,000 = 5 billion மக்களின் தலைவிதியை சிறந்ததாக்க முடியும்!

இந்த யோசனை முயற்சிப்பதற்கு உகந்தது என நினைக்கிறேன்?


தலைப்பு இல்லை

நான் தெரிவிக்கும் கருத்துகளில் அதிருப்தி ஏற்பட்டு block செய்யுமளவுக்கு எவரையும் தாக்கி கருத்திடவில்லையே? 
என்ன காரணமாக இருக்கும்! 
நண்பர்களே எமது பதிவுகள் பற்றி உங்கள் மனம் திறந்த கருத்துக்களைப் பற்றி கீழே பதியுங்கள்! 
குற்றம் குறைகள் தெரிவிப்பதை அதிகம் விரும்புகிறேன்!   
நான் எழுதும் தொனி எவரையாவது உறுத்தும் வகையில், தாக்கிக் குறைசொல்லும் பாணியில் இருக்கிறதா? என்பதை உங்கள் பார்வையில் இருந்து அறிய விரும்புகிறேன்.

இன்று உலக சுற்றுசூழல் தினமும் காரை நகரின் நிலத்தடி நீர்பிரச்சனையும்

சுற்றுச் சூழல் தினம்  வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்குரிய தினமல்ல! சிந்தனை செய்வதற்குரிய தினம்! 

ஒரு சூழலியல் விஞ்ஞானம் பயின்ற சிந்தனையாளன் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வது கட்டாயமாகிறது!

இன்று சூழலைப் பாதுகாக்க மரம் நடவேண்டும், அரசிற்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்பது trend ஆக இருக்கும் காலத்தில் எது சூழலியல் பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. 

நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனம் போதை ஏற்றப்பட்டிருக்கும் வரை உண்மையான சூழலியல் பிரச்சனைகள் தீர்க்கப்படமாட்டாது என்பது தான் உண்மை! 

மனிதன் தனது அடிப்படைத் தேவைகள் என்பதைத் தாண்டி சுகபோகத் தேவைகள் என்னும் நிலைக்கும் உற்பத்தியை பெருக்க விளையும் போது இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது அவசியமாகிறது. 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் காரை நகரிற்கு சென்றிருந்தேன். அங்கு எமக்கு வேண்டப்பட்ட ஒரு பெரியவர் முன்னர் மண்ணியல் விஞ்ஞானியாக (Soil Scientist) ஆக இருந்த அறிவியலாளர். அவருடன் காரைநகரின் மண்ணியல் அமைப்பைப் பற்றி உரையாடினோம். காரைநகர் கடல் சூழ்ந்த மணல் பாங்கான மண்ணை உடையது. இந்த வகை மண்ணில் மழை நீர் உடனடியாக கீழே சென்று நன்னீர் தேக்கத்தை உருவாக்கி ஒரு அழுத்தத்தை கடல் நீரிற்கு எதிராக உருவாக்கி கடல் நீர் உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருக்கும், (படம் பார்க்க) 

இந்த அழுத்தத்தை சரியாக வைத்திருந்தால் மட்டும் தான் அந்த இடத்தின் நன்னீர் வளம் சரியாக இருக்கும். 

ஆனால் ஊரிலுள்ள எல்லோருக்கும் சொந்தமாக கிணறு வேண்டும் என்றும், நிலத்தடி நீரின் நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஊரினதும் நீர்வளம் போய்விடும்! நீர்வளம் போவது மட்டுமல்ல, தொடர்ச்சியாக தாவரங்கள் அழிந்து பாலைவனமாகும் நிலைக்கு சூழல் தள்ளப்படும். 

ஆகவே சூழலியலில் செயலிற்கு முன்னர் புரிதல் அவசியம்! இப்படியான கடற்கரையோரங்களில் மக்களை முன்னேற்றுகிறோம் என்று வீட்டிற்கு ஒரு கிணறு கொடுக்க வேண்டும் என்ற திட்டம் தவறானது. கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டங்கள் பொருத்தமானவை! 

ஆகவே சூழலியல் பிரச்சனைகள் சிக்கலும் ஆழமான பார்வையும் கொண்டு அணுகப்பட வேண்டியவை.

தலைப்பு இல்லை

ஒரு மனிதன் மூன்று தளங்களில் வசிக்கிறான். நான் என்ற சொந்த சுய நலத்தளம், நானும் எனது குடும்பமும் என்ற சற்று விரிந்த நான், மூன்றாவது நாம் என்ற சமூக தளம். 

உண்மையான முன்னேற்றம் இந்த மூன்று தளங்களையும் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலமே உருவாகிறது. 

ஒருவன் முதலில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். தன்னை முன்னேற்றுவது என்பது தனது மனம், அறிவு, உடல் நலம், பொருளாதாரம் என்ற எல்லாத் தளங்களிலும், இப்படி தன்னை முன்னேற்றிய ஒருவன் தனது முன்னேற்றத்தை குடும்பத்துடன் பகிர்ந்து தனது குடும்பத்தவர்கள் முன்னேறுவதற்கு உதவ வேண்டும். இறுதியாக அது சமூகத்திற்கான பங்களிப்பாக மாறவேண்டும். 

இது பற்றி குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறிய கருத்து அடுத்து வரும் வாரங்களில் விரிவாக எழுதுவோம்!


Tuesday, June 04, 2019

தலைப்பு இல்லை

இன்று பலருக்கு கேள்வி கேட்கும் அளவிற்கு பதிலைத் தேட உரையாட பொறுமையும் சிரத்தையும் இல்லை!
மேலும் தாம் நினைப்பது பதிலாக கிடைக்கவில்லை என்றவுடன் தாம் மட்டும் தான் அறிவாளி மற்றவர்கள் எல்லாம் முட்டாள் என்ற போக்கில் அதிருப்தியைக் காட்டுவதன் மூலம் சுய திருப்தி அடையக் கூடாது. 
கேள்வி கேட்டால் அறிவு வளரும் என்று சொல்லிக் கொடுக்கக் கூடாது. கேள்வியைக் கேட்டு சிரத்தையாக அதற்குரிய பதிலைப் பெற விடாது முயற்சித்து, திருப்தியான பதிலைப் பெற்று பின்னர் தானும் ஆராய்ந்து தனது அனுபவத்திற்கு சரியாக வரும் வரை முயற்சிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 
மற்றவர்களிடம் கேள்வி கேட்டு கிடைக்கும் பதிலைக் கொண்டு திருப்தியடைவதை விட அது தொடர்பான நூற்களை ஆழமாக கற்று புரிவதற்கு முயற்சிக்க வேண்டும். 
தமிழில் கற்றல் என்பது கல்லுதல் என்ற சொல்லிலிருந்து வந்தது, கல்லுதல் என்றால் தோண்டுதல்! அறிவினைத் பெற மனதைத் தோண்ட வேண்டும். தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

Monday, June 03, 2019

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 03

ஆதி காண்டம்
முதற்சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 10 - 22 வரிகள்
A power of fallen boundless self awake 
Between the first and the last Nothingness, 
Recalling the tenebrous womb from which it came, 
Turned from the insoluble mystery of birth 
And the tardy process of mortality 
And longed to reach its end in vacant Nought. 
As in a dark beginning of all things, 
A mute featureless semblance of the Unknown 
Repeating for ever the unconscious act, 
Prolonging for ever the unseeing will, 
Cradled the cosmic drowse of ignorant Force 
Whose moved creative slumber kindles the suns 
And carries our lives in its somnambulist whirl. 
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
வீழ்ந்திருந்த வரம்பிலா ஜீவனின்
ஆற்ற லொன்று இன்மையின் ஆதி
யந்த மிரண்டின் இடையே விழித்தது
தானு தித்த அந்த காரக்
கருவறை தன்னை நினைவு கூர்ந்து,
மரணந்தன் நெடிய மந்த கதியைனையும்
பிறவியின் அவிழ்க்க வொண்ணாப் புதிரினையும்
ஏற்க விருப்பமின்றி சூனிய வெளியில் 
தன்முடி வினையே மிக்க விழைந்தது
அனைத்துப் பொருள்களின் இருண்ட துவக்கத்
தினிலே போல புலன்களுக் கெட்டா
அறியாப் பொருளின் அவயவ மில்லா
ஓர் ஊமைச் சாயல் உணர்விலா கருமந்
தன்னைத் திரும்பத் திரும்பச் செய்து
கண்மூடிய இச்சை யதனை நீடித்த
வாறே பிரபஞ்சத் துயில்மயக் கத்தின்
சக்தி தன்னை ஏந்தி யணைத்தது
ஆக்கும் திறனுடை அந் நித்திரை தானே
சூரியர் தமையும் ஒளிரச் செய்து
நம்முடைய வாழ்வனைத்தையுமே தன்னுடை
துயில் நடைச் சுழலினில் தாங்கிச் செல்லும்.
ஜீவன் அல்லது ஆத்மன் எல்லையற்ற பரம்பொருளின் கருவறையிலிருந்து வந்து மனிதப் பிறவி எடுத்திருக்கிறது. அந்த ஜீவனின் ஆற்றல் வரம்பில்லாதது. தற்போது ஆத்மன் இருக்கும் நிலை தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையில் இருக்கும் ஒரு இடை நிலை. இதை பகவான் தனது ஒருங்கிணைந்த யோகத்திலும், மனிதனை தெய்வமாக வல்ல ஆற்றலுள்ள ஒரு இடை நிலை ஆற்றலாகவே குறிப்பிடுகிறார். தான் எங்கிருந்து வந்தோம் என்ற நினைவு ஆத்மனிற்கு ஆழத்தில் இருக்கிறது. காயத்ரிதேவியின் "ஆயாது வரதே தேவி பிரம்ம வாதினி காயத்ரீம் ஸந்தஸாம் மாதா பிரம்ம யோனிர் நமோஸ்துதே" என்ற ஆவாகன ஸ்லோகத்தில் வரும் பிரம்ம யோனி என்ற சொல்லின் பொருளை இந்த "Recalling the tenebrous womb from which it came" இந்த வரிகளில் குறிப்பிடுகிறார். Tenebrous womb என்பது இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெற்ற ஒரு கருப்பை. இதுவே பிரம்ம யோனி! இங்கிருந்துதான் பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெறுகிறது.
இந்தக் கருப்பையிலிருந்து நாம் வந்தோம் என்ற நினைவு ஆத்மனுக்கு ஆழமாக இருக்கிறது. தான் வந்த இடத்தினை மீண்டும் அடைவதற்கு அவன் அமரத்துவம் பெற வேண்டும். ஆனால் இறப்பும் பிறப்பும் என்று அவன் பயணம் தாமதமாகிக் கொண்டு இருக்கிறது.  இப்படி பிறந்து இறந்து கொண்டிருப்பதால் vacant Nought என்ற மூல சூன்யத்தை அடைவதற்கு தாமதமாகிக் கொண்டு இருக்கிறான். 
எல்லாவற்றிற்கும் மூலமான அந்த காரிருள் கருங்குழி dark beginning of all things, புலன்களுக்குப் புலப்படாத வெறுமையான அந்த மௌனத் தோற்றம், விழிப்புணர்வு இல்லாமல் தனது கர்மத்தினை மீண்டும் மீண்டும் செய்து பிரபஞ்சத்தின் அந்த துயில் மயக்கத்தில் ஈடுபடுகிறது. விழிப்புணர்வு இல்லாமையால் எதையும் அறியமுடியா குருட்டு நிலையில் மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்ச துயில் மயக்கத்தில் தனது இச்சையை ஏற்படுத்திக் கொண்டு, அனைத்தையும் படைக்கும் அந்த சக்தி பிரபஞ்ச மயக்கம் எனும் அறியாமை சக்தியின் தொட்டிலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அந்த சக்தி படைப்புத் தீயாக வெளிப்படாமல் தூக்கத்தில் இருந்து கொண்டு சூரியப் பிரகாசமாக எமது மயக்கம் நிறியந்த இந்த வாழ்க்கைச் சுழலை இயக்குகிறது. 
ஸாவித்ரியின் இந்த வரிகள் சாதகர்களுக்கு கூறும் ஆன்ம உண்மைகள்:
மனித ஆன்மாவும் பிரபஞ்சமும் ஒரு மூல கருப்பையில் இருந்து வந்து முடிவினை அடைவதற்காக தமது பரிணாமத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றன. 
இந்த கருப்பையினை ஸ்ரீ அரவிந்தர் "Tenebrous womb" என்கிறார். இதை வேதம் பிரம்ம யோனி என்கிறது. 
மனிதன் பூரணமடையாத ஆனால் பூரணம் அடைய முயன்று கொண்டு இருக்கும் ஒரு இடை நிலைப் பொருள். 
மனிதன் விழிப்புணர்வு இன்மையால் இந்த பிரபஞ்ச மயக்கத்தில் சிக்கிக் கொள்கிறான். 
இந்த பிரபஞ்ச மாயசக்தி நுணுக்கமாக உறங்கு நிலையில் இருந்து கொண்டு விழிப்புணர்வு இல்லாதவர்களை பிறப்பு இறப்பில் ஆழ்த்திக் கொண்டும் விழிப்புணர்வு அடைந்தவனுக்கு ஆன்ம ஒளிதரும் சூரியனாகவும், படைப்புத் திறனாகவும் வெளிப்படுகிறது. 
தொடரும்... 
குறிப்பு: 
இந்த உரை எனது ஸாவித்ரியின் மீதான சுயகற்கையும் ஸாதனா அனுபவத்தின் மூலமும் எழுதப்படுவது. கால ஓட்டத்தில் திருத்தி புரிதல் மேம்படுத்தப்படலாம்.

பாராயணமும் அனுபவ பொருளும்

ஏன் பாராயணம் அவசியம்? வேதங்கள், தேவாரங்கள், திருவாசகம், சித்தர் பாடல்கள் இவற்றை தொடர்ச்சியாக படிக்க வேண்டிய தேவை என்ன? 

இவை அவரவர் பெற்ற அனுபவங்களின் அதிர்வினை குறித்த சந்தத்தில் ஏற்றிப்பாடியிருப்பார்கள். நாமும் தொடர்ச்சியாகப் பாராயணம் செய்யும் போது அந்த அதிர்வினைப் பெறும் வாய்ப்பினைப் பெறுவோம். அப்படி அந்த அதிர்வு நமக்குக் கிடைத்தால் நாமும் அவர்கள் பெற்ற அனுபவத்தைப் பெறுவோம். 

ஆனால் பாராயணத்தின் மூலம் அனுபவத்தைப் பெற மனம் ஒன்றுமில்லா, முன் துணிபில்லா நிலையில் இருக்க வேண்டும். அறிவைப் பாவித்து பொருள் காண விளையும் அறிவாளிகள் அனுபவத்தைத் தவற விடுவர். அவர்கள் தம்முள் ஏற்கனவே ஏற்றிய குப்பையினை வைத்துக் கொண்டு குழப்பமுறுவர். 

ஆகவே எவர் எந்த முன் துணிபு இல்லாமல் பாராயணம் செய்து, பின்னர் மெதுவாக ஒவ்வொரு சொல்லினதும் பொருள் என்ன என்று ஊன்றிக் கவனித்து ஆராய்ந்து வர அவற்றின் பொருள் ஆழ்மனத்திற்கு புலப்படும். பின்பு அதுவே அவரவர் ஆன்ம அனுபவத்திற்கு பாதையாகும்.

இப்படித் தான் வேதங்கள், தேவார திருவாசகம், சித்தர் பாடல்கள், திருப்புகழ், அபிராமி அந்தாதி, விநாயகர் அகவல், போன்ற நூற்கள் தொடர்ச்சியாக படிக்கப்பட வேண்டும்.


ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 02

ஸ்ரீ அரவிந்தர் தனது ஸாவித்ரி காவிய முன்னுரையில் கீழ்வருமாறு அந்தக் காவியத்தின் ஆசிரியர் குறிப்பாக கூறுவதை கீழே தந்துள்ளோம். 

ஸத்தியவான் ஸாவித்ரி கதை என்பது மகாபாரதத்தில் திருமணக் காதல் மரணத்தை வெல்கிறது என்ற கதையாக இருக்கிறது. ஆனால் இந்தப் புராணம் மனிதனின் பல சிறப்பமிசங்களைக் கூறுகிறது, வேத பரிணாம சுழற்சியின் பல குறீயீட்டு இரகசியங்களைக் கூறுகிறது. 

ஸத்யவான் தெய்வீக உண்மைகளைத் தன்னுள்ளே தாங்கிய ஆத்மன், ஆனால் மரணத்தினதும் அறியாமையினதும் பிடிக்குள் சிக்கியவன். ஸாவித்ரி என்பது தெய்வீகச் சொல், சூரியதேவனின் மகள், எல்லையற்ற உண்மைப் பொருளான பெண் தெய்வம், மேலிருந்து கீழிறங்கி ஸத்யவானை காக்க பிறப்பெடுக்கிறது; அஸ்வபதி ஸாவித்ரியின் மனித தந்தை, தபஸின் அதிபதி, இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கு முயற்சிக்கும் ஏகாக்கிரமடைந்த ஆன்ம சக்தி, தியுமசேனன் தெய்வீக மனம், ஆனால் குருடாகிவிட்டது, தனது தெய்வீக இராச்சியத்திற்கான பார்வையை இழந்து விட்டது. அதனால் தனது இராச்சியத்தின் பெருமையை இழந்து விட்டவன். இந்த கதையில் வரும் அனைத்தும் வெறும் கற்பனைகள் அல்ல, கதையில் உள்ள பாத்திரங்கள் குணங்களை மட்டும் காட்டுகிற ஆளுமைகளில்லை, ஆனால் ஆழமாக நாம் தொட்டுணரக் கூடிய உயிர்சக்தி அல்லது உணர்வுச் சக்தியின் அவதாரங்கள், அவை மனித உடல் எடுத்து மனிதனிற்கு உதவி அவனது மரணத்தைத் தழுவும் வாழ்விலிருந்து மரணமற்ற தெய்வ உணர்வு வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை. 

ஒரு மனிதன் தனது ஆன்ம உயர்வினை அடைய ஸாவித்ரி என்ற பேரொளி அறிவுசக்தி எப்படி கீழிறங்கி வந்து அன்பு செலுத்தி உயர்த்துகிறது என்ற அற்புதக் கதை!


Sunday, June 02, 2019

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 01

ஆதி காண்டம்
முதற் சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 09 வரிகள்
It was the hour before the Gods awake. 
Across the path of the divine Event 
The huge foreboding mind of Night, alone 
In her unlit temple of eternity, 
Lay stretched immobile upon Silence' marge. 
Almost one felt, opaque, impenetrable, 
In the sombre symbol of her eyeless muse 
The abysm of the unbodied Infinite; 
A fathomless zero occupied the world. 
கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது
திவ்விய நிகழ்ச்சியின் பாதை நடுவே
நிமித்தம் காணும் நிசியின் மாமனம்
தீபமேற்றா திருண்டதன் நித்திய கோயிலில் 
தனியே தன்னை விரித்து நீட்டி
மௌனத் திருவின் விளிம்பினை யடுத்து
அசையாது குறுக்கே கிடந்த தாமே. 
அவள்தன் கண்ணிலாச் சிந்தனையின் மங்கிய
சின்னந் தன்னில் வடிவிலா அனந்தமதன்
ஒளிபுகா அடர்ந்த அதலக் குழியினை
உணரலாகும்: ஆழங்காணா வொரு 
சூன்யம் அவனி தன்னைப் பற்றியது.
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
ஸாவித்ரி யோக காவியம் சாதகனின் மரணமில்லாப் பெரு வாழ்வினைப் பற்றிய பாதையை ஸ்ரீ அரவிந்தர் தனது அனுபவத்தை மகாபாரதத்தில் உள்ள சத்தியவான் ஸாவித்ரி கதையை காவியமாக்கியுள்ளார். 
யோக சித்தியை நெருங்கும் சாதகனின் அனுபவத்தை சங்கேத வைகறை எனும் முதல் சர்க்கத்தில் குறிப்பிடுகிறார். 
முதல் இரண்டு வரிகளும் "கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது திவ்விய நிகழ்ச்சியின் பாதை நடுவே" இன்னும் தெய்வ சக்தி அவனில் முழுமையாக விழிப்படையவில்லை, அதுவே கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது; சாதகன் அந்த விழிப்பிற்கான திவ்விய நிகழ்ச்சியின் பாதையின் நடுவில் இருக்கிறான். தெய்வ 
சக்தியை தன்னில் விழிப்பிக்கும் முயற்சியில் உள்ள சாதகன் அதை அடையும் பாதையில் நடுவில் இருந்தாலும் தான் அடையப்போகும் நிலையிற்கான நிமித்தக் குறிகளை காண ஆரம்பிக்கிறான். என்றாலும் அந்த மாமனம் நிசியின் இருள் சூழ்ந்து தான் இருக்கிறது. நாம் சாதனையில் பூர்த்தி செய்து சித்தி செய்துவிடுவோமா இல்லை தவறாகிவிடுமா என்ற சிந்தனையுடன் கூடிய மனம் (foreboding mind)
தெய்வ சாதனையின் நடுவில் இன்னும் தான் அடைய வேண்டிய நிலையை அடையாத அந்த சாதனை செய்யும் மாமனம் அவளது இந்த எல்லையற்ற அண்டம் எனும் கோயிலில் தெய்வ ஞானம் எனும் விளக்கை ஏற்றவில்லை. {In her unlit temple of eternity,}
மாமனம் அந்த மௌனம் நிறைந்த திருவின் விழிப்பினை காண்பதற்கு அசையாமல் தெய்வ சக்தியின் உதயத்தைக் காணக் காத்திருக்கிறது. மனம் ஏகாக்கிர சித்தமாக தெய்வ சக்தியின் உதயத்தைக் காண காத்திருக்கிறது. 
இந்த நிலையில் சாதகன் ஒளி துளைக்க முடியா இருளையும், தனது மனதில் வீணான கற்பனைகளையும் பெறுவான் {Almost one felt, opaque, impenetrable, In the sombre symbol of her eyeless muse }
இந்த நிலை ஒரு ஆழம் காண முடியாக் காரிருளில் இருக்கும் சூன்ய நிலை!
இது யோக சாதனையில் ஒருவன் தனது கண்களை மூடி சாதனைக்கு அமர காரிருள் சூழ்ந்த நிலை வரும், மனம் ஏகாக்கிரமடைய அடைய அந்த இருள் இன்னும் அதிகமாகும். ஒரு நிலையில் இருளில் மூழ்கி இருக்க மனம் நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்று குழம்பும்! அதே வேளை சின்னஞ் சிறு ஒளிக் கீற்றுகளாக சாதனையின் சித்தியும் தெரியும். சாதகன் தன்னில் தெய்வ சக்தி விழிப்பு நடைபெறும் என்ற எண்ணமும் வரும், அதே வேளை தியானசாதனையில் ஒளி கிடைக்காமல் காரிருள் சூழ்ந்து குழப்பவும் செய்யும். இந்த நிலையையே முதல் ஒன்பது வரிகளில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 
தொடரும்.... 
Disclaimer: இது எனது தனிப்பட்ட ஸாவித்ரி படிப்பின் மீதான புரிதல்.

தலைப்பு இல்லை

இன்று இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த நாள், அவருக்கு அன்புப் பரிசாக நாம் எழுதிய "அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்" வழங்கப்பட்டுள்ளது! 

கட்டாயம் படிப்பதாக சொல்லியிருக்கிறார்! 

கருவியாக இருந்து எழுதிவிட்டோம் எவர் எவர் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது என்பதை குருநாதர் அகத்திய மகரிஷி பார்த்துக் கொள்கிறார் என்பதை எண்ணும் போது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

ஒரு எழுத்தாளனாக கிடைக்கக் கூடிய பெரும் மகிழ்ச்சி அவனது எழுத்துக்கள் மற்றவர்களுக்கு சென்றடைகிறது என்பது! 

அறிந்த நல்லவற்றை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த மனம் உள்ளவர் கிருஷ்ணா! இதைச் செய்யப் போகிறோம் என்று சொல்லாமல் செய்து விட்டு பூரிப்புத் தருவார்! சென்ற முறை திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் புத்தகத்தை கொடுத்திருந்தார். 

இந்த மகிழ்ச்சி தரும் செயலைச் செய்த அவரிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!


Saturday, June 01, 2019

தலைப்பு இல்லை

இன்றைய வீரகேசரியின் சங்கமம் பகுதியில் தேவிபுரம் தொடர் 04வது வாரம்.

மனித உடலும் சக்தியின் வெளிப்பாடும்

“சக்தி என்பது எல்லாவற்றிலும் நிறைந்தது; எல்லாவற்றிலும் இருக்கும் சக்தி ஒன்றே, கழிவங்கங்களில் பயமாக வெளிப்படும்; இனப் பெருக்க உறுப்புகளில் காமமாக, நாபியில் அதிகார சக்தியாக , இதயத்தில் அன்பாக, தொண்டையில் நீண்ட தூரம் தொடர்பு கொள்ளக் கூடிய வாக்கு சக்தியாக, கண்களில் பலவித நேர மண்டலங்களை இணைக்கும் தொடர்பாடலாக, தலையுச்சியில் அற்புத சக்திகளில் அத்திவாரமாகவும், பேரானந்தத்தைத் தரும் ஆன்ம சக்தியாகவும் வெளிப்படும். ஒரு வாத்தியக் கோஷ்டி பலவித இசை தருவதுப் போல் இந்த பலவித உணர்ச்சிகளில் வாழ்க்கையின் விளையாட்டு நடக்கிறது ”
- அம்ருதானந்த நாதா , தேவிபுரம் -

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...