குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 17, 2023

மற்றவர்களுக்கு உதவி செய்தல்

 

மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு இரகசியம் உள்ளது!

உதவி என்பது ஒருவன் தனது சமூக, பொருளாதார, மன நிலைகளில் தாழ்ந்து போய் துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் போது அதிலிருந்து மீண்டுவருவதற்கு நாம் செய்யும் செயல்கள் உதவி எனப்படுகிறது.

இந்த உதவியினை சுவாமி விவேகானந்தர் மூன்று நிலைகளில் பிரிக்கிறார்.

1. பிரச்சனை தீர்வதற்கான உடலாலும், பொருளாலும் செய்யப்படும் உதவி

2. பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை தெளிந்து அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதைச் சொல்லிக்கொடுக்கும் அறிவு உதவி.

3. இனிமேல் பிரச்சனை வராமல் இருப்பதற்குரிய வலிமையை உருவாக்குவது. இதை ஆன்ம பலம் என்று சொல்லுவார்கள்.

நாம் எப்போதும் முதலாவதையே - பொருள் ரீதியாக உதவுவதையே உதவி என்று நினைக்கிறோம். ஆனால் இது நிரந்தரமாக எவருக்கும் மாற்றத்தைத் தருவதில்லை!

கோயிலைக் கட்டினால் சமூகம் திருந்தி விடும் என்று நம்பி பல கோயில்களை ஆரம்பரமாகக் கட்டி ம் எந்த முன்னேற்றத்தையும் ஆன்மீகமாகப் பெறவில்லை என்று சமயப் பிரசங்கிகள் பிரஸ்தாபிப்பதைப் பார்க்கிறோம்.

பாடசாலைக்கு கட்டிடம் வந்தால் பாடசாலை முன்னேறிவிடும் என்று நம்பி பௌதீக வளங்களை உருவாக்கிவிட்டுப் பார்த்தால் பாடசாலையில் கல்விப் பெறுபேறுகள் எதுவும் சிறப்பாக இல்லை என்று வருந்துகிறோம்.

நண்பன் ஒருவனுக்கு பணம் தேவைப்படுகிறது என்று அவசரமாக கேட்பதைக் நம்பி அவனுக்கு உதவுகிறோம் என்று பணத்தை உடனடியாகக் கொடுத்து பின்னர் அவன் தராமல் ஏமாற்றும் போதுதான் தெரிகிறது அவன் என்னை விட சம்பாதித்து ஊதாரித்தனமாக குடியும் கூத்துமாக அழித்திருக்கிறான்; உதவி என்று தவறினைச் செய்துவிட்டோம் என்பதை அறிகிறோம்.

இப்படி பௌதீக உதவிகள் பெரும்பாலும் எந்தச் சிறப்பினையும் தருவதில்லை! உண்மையில் உதவித்திட்டங்கள், மற்றவருக்கு உதவுவது என்பது அவருக்கு எதையும் நாம் கொடுத்து அவர்களைச் சோம்பேறியாக்கி நம்மை பெரிய பணக்காரர் என்று எண்ண வைக்காமல் அவனது மனம், எண்ணம், பழக்கம் , குணம் இவற்றில் இருக்கும் பலவீனத்தாலேயே அவனுக்கு பிரச்சனை வருகிறது என்பதை அறியும் அறிவையும் கொடுத்து, அதிலிருந்து மீண்டுவரக்கூடியா ஆன்ம வலுத்தரும் ஆற்றலை உண்ணு செய்யும் பயிற்சியும் கொடுக்க வேண்டும்!

இதுவே உண்மையான உதவி!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...