குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 27, 2023

காலபைரவ தியானம் – 26

 

இந்தப் பாடல் பைரவ உபாசனைக்கு உரிய தகுதியைக் கூறுகிறது. வேட்டையாடுபவன் தனது இரையைக் கண்டவுடன் அதன் பின்னால் எந்த சிந்தனையும் இல்லாமல் ஒடி அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதுதான் எண்ணம்! இப்படித்தான் தெய்வ உபாஸனை என்றால் நாம் விரும்பியதையெல்லாம் கடவுளிடம் கேட்டுவிடலாம் என்ற பேராசையே கடவுளிடம் வரம் கேட்பவர்களது நிலைமை!

ஆனால் பைரவரை இப்படி அதியாசைகளை வைத்துக்கொண்டிருக்கும் வேடனின் நிலையில் இருந்து உபாசிக்க முடியாது! பைரவர் ஆணவ சம்ஹாரம் செய்பவர். ஆகவே அவரிடம் வரம் பெற விரும்புவர்கள் விழிப்புணர்வுடன் தாம் செயல்களின் கருத்தையும் உண்மையையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்! இப்படி பைரவ உபாசனைக்குரிய பண்பினைக் கூறுகிறது இந்தப்பாடல்!

அடுத்து பைரவர் கண்களுக்குத் தெரியாத அதிதெய்வீக சக்திகளான வேதாள, பூத கணங்களையும் கட்டுப்படுத்துபவர் என்ற வல்லமையும் சொல்லப்படுகிறது.!

அரம்பிடிக்குங் கண்ணினாராசை மேற்கொண்டலைவதெல்லாம்

வரம்பிடிக்குங் கருத்துண்மை

கண்டார்க்கில்லை வந்தருள்கூர

உரம்பிடிக் குந்துட்ட வேதாள பூதத்தை

யோட்டி வெட்டித்

தரம் பிடிக்கும் வடுகா

காழி யாபத்துத் தாரணனே

அரத்தைப் பிடித்து தமது அம்பு வேல் இவற்றைத் தீட்டிக்கொண்டு வேட்டையாடுபவர்கள் தாம் ஆசைப்பட்ட இரை கிடைப்பதற்கு அலைவது போலவே உம்மை வரம் கேட்பவர்கள் தமது இச்சைகள் தர்மத்திற்குட்பட்டதா என்ற கருத்து, உண்மையைக் காண்பதில்லை! ஏனென்றால் அவர்களுக்கு உமது வல்லமை தெரிவதில்லை!

நீர் கண்களுக்குத் தெரியாத அதிதெய்வீக சக்திகளாக பிரபஞ்சத்தில் துன்பத்தை விளைவிக்கும் உரம் வாய்ந்த வேதாளங்கள், பூதங்களை வெட்டியோட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடுக பைரவரே,

சீர்காழிப்பதியில் உறையும் ஆபத்துத் தாரணரே

உம்மை நான் தியானிக்கிறேன்!

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 13}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...