குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 15, 2023

கால பைரவ தியானம் - 14

எமது ஆழ்மனதிற்கு சில சக்திகளைப் பெற குறித்த தெய்வ உருவங்களை மனதில் இருத்திப் பழக மெதுவாக அந்த சக்திகள் எம்மில் விழித்தெழுந்து எம் மனம், உடலிற்கூடாக பயன் தரும் என்பதே உருவ வழிபாட்டின் இரகசியமாகும்!

இந்த வகையில் காலபைரவரின் ஆபதோத்தாரண மூர்த்தி ரூபம் நாம் தியானித்து வந்தால் ஆபத்துக் காலங்களில் எமது மனம் துரிதமாக விழிப்புணர்வுடன் செயற்பட்டு நாம் கஷ்டங்களில் இருந்து வெளிவருவோம்! அந்தக் காலபைரவரின் ஆற்றல் எமது மனம், பிராணன், உடல் ஆகியவற்றிற்கூடாக செயற்பட்டு எம்மை ஆபத்துச் சூழல்களில் இருந்து காப்பாற்றி அற்புதங்கள் புரியும்.

அத்தகைய ஆபத்தோத்தாரண மூர்த்தியின் தியானம் பற்றி இனிவரும் நாட்களில் பார்ப்போம்! இந்த ரூபத்தின் பொதுவடிவம் சாதாரண் மனிதவடிவம்; இரண்டு கரங்கள்; ஒருகரத்தில் கபாலமும், மறுகரத்தில் தண்டமும் வைத்திருப்பார். ஆயுதங்கள் மாறும்; இது ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் வெளியேறுவதற்கு எமக்குத் தேவையான நுண்ணறிவின் குறியீடு! இந்த ரூபத்தின் அர்த்தம் என்னவென்றால் இந்த வடிவத்தில் ஆபத்துதாரண மூர்த்தியைத் தியானம் செய்தால் எமக்கருகில் இருக்கும் மனிதர்களுக்குள் எமக்கு உதவி செய்யும் எண்ணத்தை காலபைரவர் புகுத்தி எமக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருவார் என்பதாகும்.

ஆபத்தோத்தாரண என்பதன் பொருள்:

ஆபத்தோ: ஓர் இடைச்சொல். "ஆபத்து" என்ற சொல்லின் இறுதி எழுத்து "து" நீங்கியது.

த்தாரண: ஓர் இடைச்சொல். "தருணம்" என்ற சொல்லின் இறுதி எழுத்து "ம்" நீங்கியது.

இரண்டு இடைச்சொல்களும் சேர்ந்து "ஆபத்தோத்தாரண" என்று ஆகிறது. இந்த இடைச்சொல்லை "ஆபத்தோ தருணம்" என்று பிரிக்கலாம்.

இதன் பொருள்: ஆபத்து நேரும் தருணம்.

ஆபதோத்தாரண பைரவர் என்றால் ஆபத்து நேரும் தருணத்தில் விழிப்புணர்வினைத் தருபவர் என்று அர்த்தம்! இன்றைய நவீன உளவியல் பாஷையில் சொல்வதானால் "presence of mind during the danger situation" - இது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அதியுயர் நுண்ணறிவு!

சீர்காழி ஆபதோத்தாரண பைரவ ஸ்தலம்; இங்குள்ள் சட்டை நாதப் பெருமானே ஆபதோத்தாரண பைரவர். இவர் மேல் தருமைச் சிவ ஞான தேசிகர் கலித்துறையாக ஆபதோத்தாரணர் மாலை என 30 பாடல்கள் எழுதியுள்ளார். இவை அர்த்தம் புரிந்து பாராயணம் செய்வது எமக்கு ஆபத்தான இக்கட்டான நிலையில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கச் செய்யும்!

முதலாவது ஆப்தோத்தாரண தியானம்:

சீர்கொண்ட செம்பொற் றிருமேனி யும்

செம் முகமலருங் கார்கொண்ட சட்டையுந் தண்டாயுதமுங் கணங்களெட்டுங்

கூர்கொண்ட மூவிலைச் சூலமுங் கொண்டருள்

கூர்ந்த கொன்றைத் தார்கொண்ட வேணிய னே

காழி யாபதுத் தாரணனே

சீரான பொன்னிறத் தேக திருமேனி

மலர்ந்த செம்மையான முகம்

கறுத்த தோலைப் ஆடையாகப் போர்த்தி,

ஒரு கரத்தில் தண்டாயுதமும்,

மறுகரத்தில் திரிசூலமும்

கொன்றை மலர் மாலை சூடி,

சீர்காழிப்பதியில் இருக்கும்

ஆபத்துக்களை நிறுத்தும் (வேணியன் - நிறுத்துபவன்)

ஆபத்தோத்தாரணனே உம்மை நான் தியானிக்கிறேன்!

இதைக் காணும் அனைவருக்கும் ஆபதோத்தாரண மூர்த்தியின் அருட்கடாக்ஷமும், காசி காலபைர்வரின் அருளாசியும் கிட்டட்டும்!

இன்றைய காசி காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரின் தரிசனத்திற்காக!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...